December 21, 2006

விரும்பி படிக்கும் வலைதளங்கள்....

பெண்களின் கைவண்ணம்..


G3[காயத்ரி]

அருணா

ஷாலினி

தமிழ்மாங்கனி[காயத்ரி]

எழில் பாரதி

ஸ்வேதா

ரம்யா

திவ்யப்ரியா

பாசமலர்

துர்கா

இம்சை அரசி

கவிதாயினி காயத்ரி

நிவிஷா


கவிஞர்களின் சாம்ராஜ்ஜியம்!!!

நவீன் ப்ரகாஷ்

ஸ்ரீ

தமிழன்

ரிஷான்

சதீஷ்

ஜே.ஜே.ரீகன்

பிரேம் குமார்

சுரேஷ்

சேவியர்

கோகுலன்

ரவிஷ்னா

புனிதா

சஹாரா

ப்ரவீனா

லெக்ஷ்மி சாஹம்ப்ரி


கதாசிரியர்களின் களஞ்சியம்!!!

வெட்டிபயல்

ஜி

ரிஷான்

தேவ்

ஜி.ராகவன்

வினையூக்கி

பானுவாசன்[kay yes]



கதம்பம்[கதை,கவிதை,கட்டுரை,கலாய்த்தல்...கலவையான கலக்கல்ஸ்]


ஜொள்ளு பாண்டி

சச்சின் கோப்ஸ்

நாட்டாமை ஷ்யாம்

கப்பி பய

ராம்

சிவிஆர்

தினேஷ்

அருண் குமார்

கோபிநாத்

நாமக்கல் 'சிபி'

கே.ஆர்.எஸ்

விஜய்

ஆயில்யன்

குசும்பன்

ரசிகன்

சஞ்சய்

நிஜம்மா நல்லவன்

புகழன்

கருணா கார்த்திக்கேயன்

கார்த்திக்

முகுந்தன்

அரைபிளேடு


ரசிக்கும் தங்கிலீஷ்/இங்கிலீஷ் பக்கங்கள்..

உஷா

வித்யா சங்கர்[கில்ஸ்]

மாஸ்க்

செந்தில்

சிவிஆர்

கவிதா


சிந்தனையாளர்களின் செதுக்கல்கள்:

சந்தோஷ்

ஜோசஃப் பால்ராஜ்

எஸ்.பாலபாரதி

சத்யப்ரியன்

December 18, 2006

மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!




'பெண்களை கவர்வது எப்படி' என்ற பதிவிட எனக்கு தெரிந்த பெண்களிடம் கருத்துக்கள் சேகரிக்க இலகுவாகயிருந்தது [ சொந்த கருத்துக்களையும் ஆங்காங்கே கலந்துவிடவும் வசதியாக இருந்தது!!] ஆனால் ' மனைவியை கவர்வது எப்படி' என்ற பதிவிட மணமான பெண்களிடம் கருத்துக்கள் கேட்டு விஷயத்தை வாங்க கொஞ்சம் சிரமமாகயிருந்தது. நான் துலாவி துலாவி கேள்வி கேட்டால் ' என்ன கல்யாண ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.


அதனால் நைசாக பேசி, நாசூக்காக நான் கேட்டு தெரிந்துக் கொண்ட கருத்துக்களின் அடிப்படையில், மனைவியை கவர சில டிப்ஸ்................

டிப்ஸ் -1:
ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,
அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:


தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.


மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
வேலைக்கு செல்லும் மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:
பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.




[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:
மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன், நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:
பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.



தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:
உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.



மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது ,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான் என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின் பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும் நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல் போகுமா???

உங்கள் மணவாழ்வு இனிக்க என் வாழ்த்துக்கள்!!!!

December 14, 2006

பெண்களை கவர்வது எப்படி???

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை பதிவிடுகிறேன், இது என் தனிபட்ட கருத்துக்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க!!!

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ' ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றாக பார்க்கலாம்....

நிறம்:



ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ' fair complexion' உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
அதனால் ' fair lovely' , 'emami men's fairness cream' எல்லாம் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஆண்களுக்கு இல்லை.
[இன்றைய நடிகர்களில், ஷ்ரிகாந்தை விட விஷாலுக்கு தான் பெண் விசிறிகள் அதிகம்!]

முக தோற்றம்:



ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து.

மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை., காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக மெயின்டேன் பண்ண தெரிவதில்லை என்பதுதான்.
சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய்வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.




மேலும் சிலருடைய முக தோற்றதிற்கு மட்டுமே ' french beard' [குறுந்தாடி] பொருத்தமாக இருக்கும். ஃபேஷன் , ஸ்டையில் என்பதற்காக பொருத்தமில்லாமல் ' french beard' வைத்தால் கேலிக்குறியதாகி விடும்.

உடை அலங்காரம்:


பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ' ட்ரெஸ் ஸென்ஸை' [ dress sence] ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள்.



பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல் , தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது , போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இனறைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் - டி ஷர்ட்.
இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் அதிக மார்க் ஸ்கோர் பண்ணிவிடலாம்.

சிகை அலங்காரம்:



லேட்டஸ்ட் ஸ்டைல் படி ஆண்கள் தங்கள் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டாலும் , பெரும்பான்மையான பெண்களுக்கு ஆண்கள் தங்கள் கழுத்துக்கு கீழ் முடி வளர்த்துக் கொள்வது பிடிப்பதில்லை.
அதற்காக உச்சி[ வகிடு] எடுத்து , படிய தலை வாரிக்கொள்ள வேண்டும் என அர்த்தமில்லை. பரட்டை தலையாக, ஒழுங்காக தலைமுடியை பராமரிக்காமல் இருப்பது பெண்களை முகம் சுளிக்க வைக்கும்.

உடல் தோற்றம்;

ஆண்களின் உயரத்தை பொருத்தவரையில் சராசரியான உயரமே [5'8"]போதுமானது. சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை.


மிகவும் மெலிந்த , ஒல்லியான தோற்றம் பெண்களை கவர்வதிலலை, அதற்காக தொந்தி, தொப்பை வைத்துக் கொள்ளகூடாது. உயரத்திற்கேற்ப எடை , கட்டு மஸ்தான உடம்பு இதுதான் அதிக பெண்களை கவரும்.
ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு காரணம் இதுவே.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை[ perosnal details] நோண்டி நோண்டி கேட்க கூடாது.
அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் - அவள் முகத்தை மட்டும்!


முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். [ மீனுக்கு நீச்சல் கற்று தரனுமா என்ன??]

மேற்கூறியவை அனைத்தும் எனக்குத் தெரிந்த பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!

December 12, 2006

கல்லூரி கலாட்டா - 6




கலாட்டா -1
கலாட்டா -2
கலாட்டா -3
கலாட்டா -4
கலாட்டா -5



ரமேஷ் தன்னருகில் விசும்பல் சத்தம் கேட்டு கண்விழித்த போது, அவன் அம்மா அழுதுக் கொண்டிருப்பதை கண்டான்.

ரமேஷின் அம்மாவும், அப்பாவும் அவன் மாமாவோடு வந்திருந்தனர். அதே சமயம் டாக்டருடன் ரம்யாவும் அவள் அப்பாவும் ரமேஷின் ரூமிற்குள் வந்தனர்.

' இந்த பொண்ணுதான் நம்ம ரமேஷோட காலையில ஆஸ்பத்திரிக்கு போனா' என தன் தங்கையின் காதில் கிசு கிசுத்தார் ரமேஷின் மாமா.

தன் அப்பாவிற்கு பின் மறைவாக நின்று கொண்டு கண்விழித்திருந்த ரமேஷை பார்த்தாள் ரம்யா.
அந்த பார்வையில் பரிதாபமோ, பட்சாதாபமோ, இரக்கமோ, கோபமோ, வருத்தமோ ....எந்த ஊணர்வையும் உணர முடியவில்லை ரமேஷிற்கு. எப்படிதான் இப்படி 'ஒண்ணும் தெரியாத குழந்தை' மாதிரி முகத்தை வைச்சிக்கிறாளோ என ஆச்சரியபட்டான் ரமேஷ்.

" இவ பெயர் ரம்யா, இவ தான் உங்க பையன சரியான நேரத்துல இங்க வந்து அட்மிட் பண்ணினா, இவர் அவளோட அப்பா, என்னோட க்ளோஸ் ஃபிரண்ட்" என்று ரம்யாவையும், அவள் அப்பாவையும் ரமேஷ் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார் டாக்டர்.

நன்றியுணர்வும் ஒரு வித பாசமும் கலந்த கண்களுடன் ரமேஷின் அம்மா ரம்யாவின் இரு கரங்களையும் பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறினாள்.

" என்னமா இது கண்கலங்கி கிட்டு, இந்த உதவி கூட செய்யலீனா எப்படிமா? , நீங்க இப்பதான் ஊரிலிருந்து வந்தீங்களா? ஏதும் சாப்பிடீங்களா, நான் வேணா வாங்கிட்டு வரட்டுமா?" என்று ரமேஷின் அம்மாவிடம் அக்கறையுடன் கேட்டாள் ரம்யா.

'ஐயோ! ஐயோ! என்னமா நடிக்கிறா பாரு, அம்மா அவ ராட்சஸி ,நல்லா நடிக்கிறா மா, நம்பாதீங்க' என்று கத்த வேண்டும் போலிருந்தது ரமேஷிற்கு.

ரம்யாவின் அழகும், பணிவும் ரமேஷின் அம்மாவை வெகுவாக கவர்ந்தன.

' பையன் புடிச்சாலும் நல்ல புள்ளையாதான் புடிச்சிருக்கான்' என மனதிற்குள் பூரித்துக் கொண்டாள்.
' ஆனா , இரண்டு பேரும் எதுக்கு ஆஸ்பத்திரிக்கு காலையில போனங்கன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் கண்டிச்சு வைக்கனும், இந்த காலத்து புள்ளைகளுக்கு எல்லாத்துக்கும் அவசரம், முதல்ல இவன் உடம்பு சரியாகட்டும் ' என மனதில் ஒரு திட்டமே தீட்டினாள் ரமேஷின் அம்மா.

இரண்டு நாட்களில் ரமேஷின் உடம்பு நன்கு் தேறியது. காலேஜில் க்ளாஸ் முடிந்து ரமேஷின் ஃப்ரண்ட்ஸ் நேராக ரமேஷை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

" என்னடா மச்சி, ஃபர்ஸ்ட் இயர்ஸ்க்கு க்ளாஸ் ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆகுது, அதுக்குள்ள சூப்பர் ஃபிகருக்கு ப்ராக்கட் போட்டுட்ட, 3 வருஷமா வண்டி வண்டி யா கடலை வறுத்த, ஆனா இப்பதான் ஆளு மாட்டுச்சாக்கும்" என கிண்டல் அடித்தனர் அவன் நண்பர்கள்.

" சே, அதெல்லாம் ஒண்ணுமில்லடா......" என்று ரமேஷ் சமாளிக்க முயல,
" என்ன எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா? அன்னைக்கு கம்பியூட்டர் லேபிற்கு தனியா கூப்பிட்டு பேசியிருக்க, இங்க ஆஸ்பத்திரியில என்னனா அவ விழுந்து விழுந்து உன்ன கவனிச்சுக்கிறா, எங்களுக்கு எல்லாம் புரியுது மாமு" என்று கலாய்த்தார்கள். பின நண்பர்கள் அனைவரும் ஹாஸ்டலுக்கு சென்றுவிட்டனர்.

' அடபாவமே! உண்மையில என்ன நடந்ததுன்னு இவனுங்களுக்கு எப்படி சொல்லி புரியவைக்கிறது, அவ மேல எனக்கு அப்படி எந்த ஈர்ப்பும் ஈடுபாடும் இல்லன்னு சொன்னா புரிஞ்சுக்கவா போறாங்க' என்று மனதிற்குள் ரமேஷ் நினைத்போது, இன்னும் ஒரு நினைப்பும் வந்தது அவனுக்கு.........

' பசங்க சொல்றமாதிரி அவ என்னையும் அம்மாவையும் கவனிச்சிக்கிறது உண்மைதான், அப்படின்னா........ஒருவேளை அவ மனசுல...........என்........மேல.......ஏதும் அப்படி ....ஒரு எண்ணம்............' என்று அவன்
நினைத்து முடிப்பத்ற்குள் சிறிது திறந்திருந்த அவன் ரூமின் கதவு வழியாக வெளியில் பேச்சு குரல் கேட்டது.

முப்பெருந்தேவிகளின் குரல் தான் [ஒட்டு] கேட்டு ரமேஷிற்கு பரிட்சயமாகிவிட்டதே, அதனால் வெளியில் பேசி கொண்டிருப்பது அவர்கள் மூவரும் தான் என தெரிந்து கொண்டான், கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் அவர்கள் உரையாடலை....................

ஷீத்தல்: ஏய் ரம்ஸ் இன்னிக்கோட மூனு நாள் ஆச்சு, டெய்லி காலையில காலேஜ் போறதுக்கு முன்னாடி ஆஸ்பத்திரிக்கு வந்து ரமேஷ பார்க்கிற, உன் அப்பா கிட்ட சொல்லி டாக்டர நல்லா கவனிச்சுக்க சொல்ற, அவன் மாமா வீட்டுல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்கன்னு ராத்திரி ஆனா அவன் அம்மாவுக்கு டிஃபன் பாக்ஸ்ல வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துட்டு வர........என்ன இதெல்லாம்??

பவானி: ஆமா ரம்ஸ் , நானும் கேட்கனும்னு தான் இருந்தேன், ஆர் யு இன் லவ் ???

ரம்யா: ஐயோ , ஐயோ!! உங்க கற்பனை சிறகை அப்படியே தட்டி பறக்க விட்டுடிங்களா,
ரோட்டுல அடிபட்டு கிடந்த ஒருத்தருக்கு உதவி செய்றது, ஆஸ்பத்திரில சேர்க்கிறது இதெல்லாம் மனிதாபிமானம் . அடிபட்டு கிடந்தது அறுபது வயசு ஆளாயிருந்தாலும் இதே ஹெல்ப் தான் பண்ணியிருப்பேன், அதுவும் ரமேஷிற்கு இப்படி ஆனதிற்கு நானும் ஒரு காரணம்,
ரமேஷ் ஹாஸ்டல் ஸ்டுடண்ட்ற முறையில என் வீட்டிலிருந்து அம்மா சாப்பாடு கொடுத்தனுப்புறாங்க.
இதுக்கெல்லாம் பெயர் உங்க அகராதில ' காதல்' னா நான் ஒண்ணும் பண்ண முடியாது.

ஒருத்தர் மேல இரக்கபடுறதினாலயோ, உதவி செய்றதினாலயோ, நன்றியுணர்வு ஏற்படுவதினாலயோ காதல் வரும்னு நான் நினைக்கல.

ஷீத்தல: ஹேய் ரம்ஸ் உனக்கு அவன் மேல லவ்ஸ் இல்ல ஓ.கே, ஒருவேளை அவனுக்கு ' பாவம் பொண்ணு' அடிச்சுட்டோமே , நம்மள ஆஸ்பத்திரியில கொண்டுவந்து வேற சேர்த்திருக்கா, அப்படி ........இப்படின்ன்னு ....ஃபீலிங்ஸ் வந்து , உன் மேல லவ்ஸ் வந்திருக்குமோ???

ரம்யா: சே, சே.........அவன பார்த்தா அப்படி தெரியல.

பவானி: எதை வைச்சு இவ்வளவு உறுதியா சொல்ற??

ரம்யா: அவன் கண்ணுல இன்னும் என் மேல கோபம் இருக்கு, மோர் ஓவர்...........மோதல்னா அப்புறம் காதல்னு
சினிமாத்தனமா அவன் மூளை வேலை செய்யும்னு எனக்கு தோனல.

பவானி: அவன் மூளை வேலையே செய்யாதா, இல்ல அவன் மூளை சினிமாத்தனமா வேலை செய்யாதுன்னு சொல்றியா??

ரம்யா: இது ரொம்ப ஓவர் பவானி..........விட்டா அவனுக்கு மூளைன்னு ஒன்னு இருக்கான்னு கேட்ப போலிருக்கு?

ஷீத்தல்: ஹே, போதும் நம்ம அரட்டை, அப்புறமா பேசலாம், ரமேஷிற்கு ஏற்கனவே பாம்பு காது, இப்போ நாம பேசினது
எல்லாம் கேட்டுட்டு இருந்தாலும் இருந்திருப்பான்.

பவானி: பாவம் ரம்யா, அப்புறம் இதுக்கு வேற இன்னொரு அரை வாங்க போறா ............

இப்படி இவர்கள் பேசி கோண்டிருக்க , ரமேஷின் மாமாவும், அம்மாவும் வந்து விட, மூன்று தேவிகளும் தங்கள் அப்பாவி முகக்களைக்கு வந்தனர்.

அவர்கள் மூவரும் பேசியது அனைத்தையும் கேட்ட ரமேஷ்............

' அதானே பார்த்தேன் ராட்சஸி அவ்வளவு லேசுல மாறுவாளா??? இன்னும் என்ன எல்லாம் டிராமா போட போறாளோ? '
ஆனாலும், என்னமோ ' அழகிய ராட்சஸியின்' வாயாடி தனமும், குறும்பும் நல்லாதான் இருக்கு!

என நினைத்துக் கோண்டான் ரமேஷ்.

கல்லூரியில் மோதல்னா அது காதல்லதான் முடியும்ன்ற சராசரி எண்ணம் ரம்யாவிற்கு இல்லாதது அவனுக்கு பிடித்திருந்தது.


கண்ணும் கண்ணும் நோக்கினால்- காதல் பிறக்கலாம்

உடல் ஸ்பரிசத்தினால்- மோகம் பிறக்கலாம்

வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????

[முற்றும்]

December 10, 2006

கல்லூரி கலாட்டா - 5



கலாட்டா -1
கலாட்டா -2
கலாட்டா -3
கலாட்டா -4

தான் மாடிப்படிகளில் மோதியது , தன் ' தாய் மாமா' மீது என்று கண்டதும், ரமேஷின் முகம் வெளிறிபோனது.

"டேய் ரமேசு, இந்நேரத்துக்கு ஆஸ்பத்திரி வந்திருக்க? உடம்பு கிடம்பு சரியில்லையாப்பா? உடம்புக்கு என்ன?? " என்று அக்கறையுடன் விசாரித்தார் மாமா.

என்ன பதில் சொல்வது என ரமேஷ் யோசித்து கொண்டிருக்கும்போது ,

"அங்க என்ன பண்ணிட்டிருக்கிறீங்க, சீக்கிரம் மேல வாங்க, டாக்டர் கிட்ட போகனும் இல்ல" என்று மேல் படிகளிலிருந்து ரம்யா குரல் கொடுத்தாள்.

' ஒரு பொண்ணு கூட டாக்டர் கிட்ட போறானா??????' என்று திகைத்துப் போன மாமாவின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் பல விதத்தில் அலை மோதிட.......வாய் பிளந்து அவர் நின்ற சமயத்தில் " மாமா ஒரு நிமிஷம் இதோ வந்துடுறேன்" என்று கூறி விட்டு அவசரமாக மாடி படிகளில் ஏறினான் ரமேஷ்.

சிறு காயத்திற்கு மருந்து போட எவ்வளவு நேரம் ஆக போகிறது, சீக்கிரம் டாக்டரிடம் காண்பித்துவிட்டு, மாடி படிகளில் இரண்டு இரண்டு படிகளாக தாவி தாவி இறங்கி , மாமா வை தேடினான் ரமேஷ்.

' எங்க போய்டார் மாமா அதுக்குள்ள' என ரமேஷ் மாமா வை தேடி கொண்டிருக்க,

" மெக்கானிக் ஷாப் வந்து உங்க பைக் சாவி வாங்கிகோங்க" என் கூறினாள் ரம்யா.

அதே சமயம் ரமேஷின் செல் ஃபோன் சிணுங்க, " சரி நீ போ, நான் வந்து வாங்கிக்கிறேன்" என பதலளித்துவிட்டு தன் ஃபோனை ஆன் செய்தான்.

" அடபாவி, இப்படி தலையில கல்ல தூக்கி போட்டுடியே, ஏண்டா படிக்கிற வயசுல உன் புத்தி இப்படி போகுது " என்று ரமேஷின் அம்மா ஃபோனில் அர்ச்சனை செய்தாள் மறுமுனையில்.

" என்னமா சொல்றீங்க , நான் என்ன பண்ணினேன் " என்று ஒன்றும் புரியாமல் ரமேஷ் கேட்க,

"ஒரு பொண்ணை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போற அளவுக்கு தப்பு பண்ணிட்டு என்னன்னா கேட்குற, நீ பொண்ணுங்க கிட்ட சகஜமா பேசுறப்ப எல்லாம் என் பையன் தப்பு பண்ணமாட்டன் , எல்லார்கிட்டவும் ஃபிரண்டிலியா இருக்கிறான்னு நினைச்சேன்டா, இப்படி என் நினைப்புல மண்ண அள்ளி போடுட்டியே" என ரமேஷின் அம்மா கத்தி தீர்தாள் மகனிடம்.

மாமா நல்ல வத்தி வைச்சுட்டார் அதுக்குள்ள என புரிந்தது ரமேஷிற்கு.

" அம்மா, அப்படியெல்லாம் ஒன்னுமேயில்லமா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க" என ரமேஷ் தன் தாயிடம் கெஞ்சி கொண்டிருக்க.......

" ஹலோ! என்ன உங்க பைக் சாவி வேண்டாமா?" என மிக சத்தமாக கேட்டுக் கொண்டே தன் ஸ்கூட்டியை அவனருகில் நிறுத்தினாள் ரம்யா.

ஃபோனை தன் கைகளால் மூடாமலே " ஏன் இப்படி கத்துற , கொஞ்சம் வெயிட் பண்ணு" என இவன் ரம்யாவிடம் சொல்ல,
ஃபோனின் மறுமுனையிலிருந்த ரமேஷின் அம்மாவிற்கு ரம்யாவின் குரல் நன்றாக கேட்டது.

ரமேஷ் அம்மாவின் ப்ரஷர் எகிற ஆரம்பித்தது,
" அடபாவி , உங்க மாமா சொன்னது எல்லாம் நிசம்தான் போலிருக்கு, நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும், உடனே சென்னைக்கு புறப்பட்டு வா" என்று கூறிவிட்டு ஃபோனை துன்டித்தாள்.

" அம்மா, அம்மா..........." என அலறினான் ஃபோனில் ரமேஷ்.

இவன் டென்ஷன் தெரியாமல் ரம்யா " சாவி கொடுக்க எவ்வளவு நேரம் வெயிட் பண்றது, தூக்கி போடுறேன் சாவிய பிடிச்சுக்கோங்க " என கூறி சற்று தூரம் தன் ஸ்கூட்டியில் சென்று விட்டு அங்கிருந்து பைக் சாவியை தூக்கி வீசினாள்.

சாவியை பிடிக்க வேகமாக வந்த ரமேஷ் பின்னால் வந்த காரை கவனிக்கவில்லை, கார் அவன் மீது மோத,
" அம்மா" என்ற அலறலுடன் சுயநினைவை இழந்தான் ரமேஷ்.



கண்விழித்த போது ஆஸ்பத்திரி படுக்கையிலிருப்பதை உணர்ந்தான். அருகில் நண்பர்கள் எப்போது இவன் கண் திறப்பான் என ஏக்கத்துடன் இருந்தனர்.

ரமேஷ் கண் முழிச்சுட்டான்டா என்று ஃப்ரன்ட்ஸ் கூட்டம் உற்சாகமானது.
" டேய் இப்போ எப்படிடா இருக்கிற, ரமேஷ் நாங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டோம்டா,
நம்ம டிபார்ட்மெண்ட் ஃபர்ஸ்ட் இயர் ரம்யா தான் உன்ன இந்த ஆஸ்பத்திரில வந்து சேர்த்திருக்கா. அவளோட அப்பா சிபாரிசால உனக்கு ஸ்பெஷல் ரூம் கொடுத்திருக்காங்கடா"

" உன் அம்மாவிற்கு தகவல் சொல்லிட்டோம், ராத்திரி ட்ரெயினுக்கு வந்திடுவாங்க, இப்போ நீ ரெஸ்ட் எடு" என ஆளுக்கொரு தகவல் தந்தனர்.

" ராட்சஸி பண்றதும் பண்ணிட்டு , ஆஸ்பத்திரில வேற கொண்டு வந்து சேர்த்திருக்காளா' என நினைத்துக் கொண்டான் ரமேஷ். சற்று நேரத்தில் அயர்ந்து உறங்கி போனான்.

மிக அருகில்.........விசும்பல் சத்தம் கேட்டு கண்விழித்த ரமேஷ்..........தன் கரங்களை முகத்தில் பதித்து கொண்டு அழுவது யார்?????? ,என பார்த்த போது.........

கல்லூரி கலாட்டா - 6

December 07, 2006

கல்லூரி கலாட்டா - 4




கலாட்டா -1
கலாட்டா -2
கலாட்டா -3

ரமேஷ் தன் கன்னத்தில் அரைவான் என்று சற்றும் எதிர்பாராத ரம்யா, ஒரு நிமிடம் நிலைகொலைந்தாள்.

" என்ன அரஞ்சிட்ட இல்ல, என்ன பண்றேன் பாரு, நான் சும்மா விட மாட்டேன், என்னை எங்க வீட்டுல அப்பா அம்மா கூட அடிச்சதில்ல , நீ அடிச்சுட்ட இல்ல, எப்படி பதில் அடி கொடுக்கறேன் பாரு" என மூச்சு விடாமல் தொடர்ந்து கத்தினாள்.

" ஹேய் ரம்யா, நான் உன்னை அரையனும்னு எல்லாம் நினைக்கவேயில்ல, ஜஸ்ட் வார்ன் பண்ணி அனுப்பனும்னு தான் வர சொன்னேன், நீ அதிகமா பேசிட்ட, அதான்............டக்குனு...அடிச்சுட்டேன், ...ஐ அம் ......ஸோ....." என்று அவன் முடிப்பதற்குள்,

" நீ ' டி' போட்டு பேசினப்போவே நான் உன்ன அரைஞ்சிருக்கனும், சீனியர்னு கொஞ்சம் மரியாதை கொடுத்தா, நீ கை நீட்டுறியா? எப்படி உன்ன கவனிக்கனும்னு எனக்கும் தெரியும்" என்று கூறிவிட்டு லேபிலிருந்து வேகமாக வெளியேறினாள் ரம்யா.

' சே, பொண்ணுங்ககிட்ட என்னிக்கும் நான் இப்படி நடந்துக்கிட்டதில்லயே, எவ்வளவு ஃப்ரன்டிலியா இருப்பேன், இன்னிக்கு இப்படி அரஞ்சுட்டேனே' என ஃபீல் பண்ணினான் ரமேஷ்.

' இந்த ராட்சஸி வேற ராகிங், ரிப்போர்ட் னு ஏதேதோ சொன்னாளே, என்ன டிராமா போடபோறாளோ, கடவுளே!' என கொஞ்சம் பயமும் தொத்திக்கொண்டது ரமேஷிற்கு.

முதல் வருடத்திலிருந்தே கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்ந்தால் தான் நாலு வருஷம் கல்லூரி படிப்பு முடிக்கும் போது, ஒரு இரண்டு மூனு கம்பியூட்டர் லாங்குவேஜ் தெரியும் என சக மாணவர்களின் அறியுரையின் படி மூன்று தேவிகளும் ' Aptech' ல் கோர்ஸ் சேர்ந்திருந்தார்கள்.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு க்ளாஸ் இருந்தது Aptech ல்,
பவானி மட்டும் தன் வீட்டிலிருந்து நேராக க்ளாஸ்க்கு சென்று விட்டாள்,
ரம்யாவும் ஷீத்தலும் ரம்யாவின் ஸ்கூட்டியில் வீட்டிலிருந்துப் புறப்பட்டனர்.

" ஆல்ரெடி ரொம்ப லேட் ஆச்சு ரம்ஸ், பவானி வெயிட் பண்ணிட்டு இருப்பா, சீக்கிரம் போ" என்று பின்னிருக்கையில் அமர்ந்தபடி ஷீத்தல் அவசரப்படுத்தினாள்.

Aptech சென்டர் இருந்த தெருவின் திருப்பத்தில் வேகமாக ஸ்கூட்டி திரும்ப, எதிரில் வந்த பைக்குடன் மோதி, ஸ்கூட்டி மட்டும் சரிந்து, கீழே விழுந்தனர் இருவரும்.
உடனே பக்கத்திலிருந்த பேக்கரியில் இருந்த அனைவரும் வந்து வண்டியை நேரே நிறுத்த, ரம்யாவும் ஷீத்தலும் எழுந்து பார்த்தால், ' பைக்கில் இருந்தது' ரமேஷ்.

கையில் ஏற்பட்ட சீராய்ப்பில் இருந்து வழிந்த ரத்தத்தின் சிவப்பு நிறத்தை விட ரம்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

" கண்ணு தெரில, இப்படியா ராங் சைட்ல பைக் ஓடிட்டு வர்ரது, உங்களுக்கெல்லாம் யாரு லைசன்ஸ் கொடுத்தா, " என்று கத்த ஆரம்பித்தாள் ரம்யா.

தவறு தன்னுடையது தான் என ரம்யாவிற்கு நன்கு தெரியும், எனினும் அருகில் இருந்த கூட்டத்திடம் " பாருங்க சார், எப்படி வந்து என் வண்டிய இந்த ஆளு இடிச்சுட்டாரு" என சப்போர்டுக்கு ஆள் சேர்த்தாள். ஒரு பொண்ணு கேட்டு சப்போர்டுக்கு வராமல் இருப்பாங்களா?

பொண்ணு சீன் கிரியேட் பண்ணி பழி வாங்குது என சுதாரித்துக் கொண்டான் ரமேஷ்.

" ஹலோ,யாரு ராங் சைட்ல வந்தா? பொண்ணு மாதிரியா வண்டி ஓட்டிடு வந்த நீ, என்னமோ ராக்கெட் ஓட்ர மாதிரி வேகமா வந்து என் பைக்ல இடிச்சுட்டு , இப்போ நீ கத்தினா உன் மேல தப்பிலலைன்னு ஆகிடுமா???" என்று ரமேஷும் பதிலுக்கு கத்த ஆரம்பித்தான்.

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, " பாருங்க சார், இடிக்கிறதும் இடிச்சுட்டு இப்படி பேசுறாரு இந்த ஆளு" என்று தன் சப்போர்ட் கும்பளை ரம்யா நோக்க,

அவர்களும் " வண்டிக்கு அடிபட்டிருக்கு சார், பாவம் பொண்ணுங்க வேற கீழே விழுந்துட்டாங்க, நீங்க இப்படி பேசுறது நல்லா இல்ல" என்று ஆளுக்கு ஒரு பக்கம் பொண்ணுங்களுக்கு வரிந்துக் கட்டி கொண்டு பரிந்து பேச அரம்பித்தனர்.

" இப்போ என்ன , வண்டி சரி பண்ண பணம் நான் தரனும் அவ்வளவு தான, இந்தா நூறு ரூபாய்" என்று தன் பாக்கெட்டிலிருந்து 100 ரூபாய் எடுத்து ரம்யாவின் முகத்திற்கு நேராக நீட்டினான் பைக்கிலிருந்தபடியே.

" யாருக்கு வேணும் உங்க பிச்ச காசு, நீங்களே என் வண்டிய மெக்கானிக் ஷாப் கொண்டு போய் சரி பண்ணி தரனும், அப்படியே எங்க ரெண்டு பேரையும் பக்கத்து நர்ஸிங் ஹோம் கூட்டிட்டு போய் டிரீட்மன்ட் பண்ணனும்" என்று அடுக்கி கொண்டே போனாள் ரம்யா.

" அதுக்கெல்லாம் வேற ஆள பாரு, 100 ரூபாய் பிடி, இல்லைனா ஆள விடு" என்று கூறி தன் பைக்கில் போக எத்தனித்தான் ரமேஷ்.

டக்கென்று அவன் பைக்கின் முன்னிருந்த சாவியை எடுத்துவிட்டாள் ரம்யா. இதை சற்றும் எதிர்பாராத ரமேஷ் , திகைப்புடன் பார்க்க.....

" ஒழுங்கு மரியாதையா என் வண்டிய சரி பண்ணி கொடுங்க, அப்பதான் உங்க பைக் சாவி தருவேன்" என்ரு ரம்யா மிரட்ட, அவளது சப்போர்ட் கூட்டமும் பலமாக ஆமோதித்தது.

கடுப்பாகி போன ரமேஷ்" சரி, உன் வண்டியை தள்ளிட்டு வா, பக்கத்து மெக்கானிக் ஷாப் போகலாம்" என்று தன் பைக்கை தள்ளி கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

மெக்கானிக் ஷாப் சென்றதும், " உன் வண்டிய சரி பண்ண எவ்வளவு பணம் ஆகும்னு கேட்டு மெக்கானிக்கிட்ட கொடுத்துட்டேன், வண்டி சரியானதும் நீ எடுத்துக்க, இப்ப என் பைக் சாவி கொடு" என்று கேட்டான் ரமேஷ்.

" எங்க கைல பட்ட காயத்துக்கு டிரீட்மண்ட் யாரு கொடுப்பா, பேசாம நர்ஸிங் ஹோம் கூட்டிட்டு போங்க" என்றாள் தோரனையுடன்.

'ராட்சஸி, நேத்து விட்ட அரை இவளுக்கு பத்தாது , என்ன மிரட்டு மிரட்டுறா கொஞ்சம் அசந்தா' என்று மனதில் குமறி கொண்டே அவர்கள் பின் நடந்தான் தன் பைக்கையும் மெக்கானிக் ஷாப்பில் விட்டு விட்டு.

மெக்கானிக் ஷாபிலிருந்து இரண்டு பில்டிங் கடந்து ஒரு மாடியில் கிளினிக் இருந்தது. மாடி படிகளில் ரம்யாவும் ஷீத்தலும் முதலில் ஏற, மெதுவாக குனிந்த படி ரமேஷ் பின் தொடர்ந்து ஏறினான்.

மாடிபடி திருப்பத்தில் எதிரில் இறங்கி வந்தவர் மேல் ரமேஷ் இடித்துவிட, " ஸாரி" என்று கூறி தலை நிமிர்ந்த போது தான் அந்த நபர் யார் என கண்டு அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான் ரமேஷ்..............

[தொடரும்]


கல்லூரி கலாட்டா - 5

கல்லூரி கலாட்டா - 6

December 06, 2006

கல்லூரி கலாட்டா - 3



கலாட்டா -1
கலாட்டா -2

மதிய உணவு இடைவேளையின் போது, இரண்டாம் ஆண்டு உமா, மூன்று ரோஜாக்களையும் தேடி வந்தாள்.

"ரம்யா, அடுத்த வாரம் ' தாங்கியூ பார்டி' ய ஃபர்ஸ்ட் இயர்ஸ் ஹோஸ்ட் பண்றது பத்தி உன்கிட்ட பேசனுமாம், அதனால ஃபைனல் இயர் ரமேஷ் உன்ன இன்னிக்கு ஈவினிங் நாலு மணிக்கு கம்பியூட்டர் லேபுக்கு வர சொன்னாங்க" என்று அதிகார தோனியில் சொல்லிவிட்டு சென்றாள்.

"என்னடி இது வம்பாயிருக்கு, இவங்களா ஒரு 'வெல்கம் பார்ட்டி ' கொடுப்பாங்களாம், அப்புறம் நாம இவனுங்களுக்கு ' தாங்கியூ பார்ட்டி' தரணுமாம், யாரு கேட்டா இவனுங்ககிட்ட எங்களையெல்லாம் 'வெல்கம்' பண்ணுங்கன்னு, வேற வேலையே இல்லையா" என்று எரிச்சல் அடைந்தாள் ரம்யா.

" அது வேற ஒன்னுமில்ல ரம்ஸ், நேத்து வெல்கம் பார்ட்டில நீ அப்பிரானியாட்டம் பவ்யிமா ஆ
க்ட்விட்டியா , அது நடிப்புனு தெரியாமல் பாவம் பையன் உன்னை 'தாங்கியூ' பார்ட்டி ஆர்கனைஸ் பண்ண சொல்லப்போறான் போலிருக்கு, என்ன சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிடு நீ செய்வ , நல்ல புள்ளைன்னு தப்பு கணக்கு போட்டுடானோ??" என்று கலாய்த்தாள் ஷீத்தல்.

" சரி, ' கோகுலத்து கண்ணனை' சாயந்திரம் மூனு பேருமா சேர்ந்து போய் பார்த்திடுவோம் , நாம எங்க, என்னைக்கு தனியா போயிருக்கிறோம் " என்றாள் பவானி.

சாயந்திரம் 4 மணிக்கு மூவரும் மெதுவாக கம்பியூட்டர் லேபிற்குச் சென்றார்கள். அங்கு நாலு ஐந்து பேர் ஆளுக்கு ஒரு கம்பியூட்டரில் மானிடரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரிசையில் ஒரு ஓரத்து கம்பியூட்டரில் ரமேஷ் இருப்பதை கண்டு மூவரும் அங்கு சென்றனர்.

மூவரும் அருகில் வந்ததும் நிமிர்ந்துப் பார்த்த ரமேஷ்" உங்க மூனு பேரோட பெயரும் ரம்யாவா?? நான் ரம்யாவை மட்டும் தானே வர சொன்னேன், அதென்ன தொடுக்கு புடிச்சுக்கிட்டு கூட நீங்க ரெண்டு பேரும்?" என்று கடு கடுப்புடன் கூற, ஷீத்தலும் , பவானியும் ரம்யாவிற்க்கு கண்ணசைத்து விட்டு ரோஷத்துடன் வெளியேறினார்கள்.

அவர்கள் இருவரும் சென்று வெகு நேரம் ஆகியும் ரமேஷ் கம்பியூட்டரில் தான் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

'வரச்சொல்லிட்டு, இவன் பாட்டுக்கு கம்பியூட்டர்ல ஏதோ டைப் பண்ணிட்டே இருக்கிறான்' என்று எரிச்சலடைந்த ரம்யா, தொண்டையை செறுமினாள் , தான் காத்திருப்பதை அவனுக்கு உணர்த்த.

நிமிர்ந்து என்ன என்பது போல் பார்த்தான் ரமேஷ்,
" நான்...........வந்து..........ரொம்ப.......நேரமா......"என்று அவள் கூறி முடிக்கும் முன்
" கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினா ஒன்னும் தப்பில்ல, வெயிட் பண்ணு' என்று கூறி விட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

ஆத்திரமும் கோபமும் முட்டி கொண்டு வந்தது ரம்யாவிற்கு, அதனை வெளிகாட்டாமல் முகபாவத்தை வழக்கம் போல் மெயின்டேன் பண்ணினாள்.

' கோகுலத்து கண்ணனுக்கு என்னாச்சு இன்னிக்கு , நேத்து கல கலன்னு பேசிட்டு கடலை போட்டுட்டு இருந்தான் செமினார் ஹால்ல, இன்னைக்கு ஏன் இஞ்சி தின்ன குரங்காட்டம் மூஞ்சி வைச்சிருக்கான், ஒரு வேளை ராதைகள் சுற்றி சூள குழுமியிருந்தா தான் நார்மலா இருப்பானோ??' என யோசித்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

கம்பியூட்டர் லேபிலிருந்து அனைவரும் சென்று விட்டனர் என்று உர்ஜிதம் செய்தபின், மெதுவாக தன் இருக்கையிலிருந்து எழுந்தான் ரமேஷ்.

" அடுத்த வாரம் , ஃபர்ஸ்ட் இயர்ஸ் சீனியர்களுக்கு ' தாங்கியூ பார்ட்டி' கொடுக்கனும், இது நம்ம டிபார்ட்மெண்ட் வழக்கம், ஸோ அதை நீ தான் ஆர்கனைஸ் பண்ண போற" என்றான் ரம்யாவிடம்.

" என்..........னது.............நா...............னா..............,அது.......வந்து........" என்று ரம்யா இழுக்க,

" ஏய், நிறுத்து, அதென்ன வடக்கத்து நடிகை தமிழ்ல பேட்டி கொடுக்கிறாப்ல, தமிழ்ல இந்த இழு இழுக்கிற, தமிழும் சரியா தெரியாதா உனக்கு??" என்றான் ரமேஷ்.

" இல்ல, தமிழ் ..எனக்கு......நல்லா .....தெரியும்" என திக்கி தினறி கூறி முடித்தாள் .

" அப்போ , இங்கிலீஷ் கத்துக்க தான் ' ரெபிடெக்ஸ்' வேணுமாக்கும்" என்றான் டக்கென்று.

" என்னது.............." திகைத்துப் போனாள் ரம்யா.
ரமேஷின் முகதிலிருந்த அசட்டு சிரிப்பு அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது , அவள் பேசியது அனைத்தையும் இவன் தெரிந்துக் கொண்டுவிட்டான் என்று.

இனிமேலும் இவன் கிட்ட அப்பிரானி வேஷம் போட்டா வேலைக்கு ஆகாது என்று முடிவு பண்ணி, முகத்தில் உண்மையான கோபத்துடன் ரமேஷை முறைத்தாள்.

" என்ன முறைக்கிற, எவ்வளவு கொழுப்பிருந்தா என்னையே லூசுன்னு சொல்லுவ நீ" என்று கத்தினான் ரமேஷ்.

" சே, இன்டீசன்ட் ஃபெல்லோ, இப்படி ஒட்டுக் கேட்டுட்டு, அதை பற்றி கேட்க தான் தனியா கூப்பிடீங்களா, அசிங்கமாயில்ல" என்று ரம்யா குரலை உயர்த்தினாள்.

" ஏய், என்ன குரல் கொடுக்கிற, அடிச்சேனா பல்லு கில்லு எல்லாம் பேர்ந்திடும், ஜாக்கிரதை" என்று பதிலுக்கு அவனும் கத்தினான்.

"ஹலோ, உங்க ஆஃபிஷியல் ராகிங் கூட நேத்தே முடிஞ்சுப் போச்சு, இப்போ ரொம்ப கத்தினீங்க, ராகிங் பண்ணினீங்கன்னு ரிபோர்ட் பண்ணிடுவேன், என்ன தண்டனை கிடைக்கும் ராகிங் பண்ணினான்னு தெரியும் இல்ல" என்று எரிமலையாக வெடித்தாள் ரம்யா.

" இந்த பூச்சாண்டி வேலைக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்டி" என்று அவனும் பதிலுக்கு கத்தினான்.

" என்னது ' டி' போட்டு பேசுறீங்க, கண்டிப்பா உங்களை நான் ரிப்போர்ட் பண்ணத்தான் போறேன், சும்மா ராகிங்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன், கம்பியூட்டர் லேபிற்க்கு தனியா வர சொல்லி, என் கை பிடிச்சு இழுத்தான், கால் பிடிச்சு இழுத்தான்னு ரிப்போர்ட் பண்ணுவேன் பாரு" என்று தெளிவான முடிவோடு கூறினாள்.

" அடச்சீ, வெட்கமா இல்ல உனக்கு இப்படி சொல்ல, நீ இப்படி ரிப்போர்ட் பண்ணினா உனக்குத் தான்டி அசிங்கம்" என்றான் ரமேஷ்,

" அதைபத்தி எல்லாம் எனக்கு கவலையில்ல , நீ பொறுக்கின்னு ஊருக்கு தெரிஞ்சிடும், அது போதும்" என்றாள் ரம்யா முகத்தை திருப்பி கொண்டு.

' பொறுக்கி' என்ற வார்த்தையை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் ரமேஷ்.
" என்ன என்னன்னு சொன்ன..........." என்று ரமேஷ் ஆக்ரோஷமாக கேட்க

அவனை நேருக்கு நேராக பார்த்து
" பொறுக்கி" என சத்தமாக கூறினாள் ரம்யா.

பளார் என ஒரு அரைவிட்டான் ரமேஷ், " அம்மா" என்று அலறிய ரம்யா................

[தொடரும்]

கல்லூரி கலாட்டா - 4

கல்லூரி கலாட்டா - 5

கல்லூரி கலாட்டா - 6

December 04, 2006

கல்லூரி கலாட்டா - 2






கலாட்டா-1

செமினார் ஹாலில் அனைவரும் குழுமியிருக்க, இறைவணக்கம் , பேராசிரியரின் உரை, சீனியர் மாணவர்களின் குறு நாடகம், தனிப் பாடல்கள் என நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. முதல் வருட மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொள்ள ஒவ்வொருவராக அட்டைவணைப்படி மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

ஷீத்தலின் முதற் பெயர் பபிதா என்பதால், அவளது பெயரும் , பவானியின் பெயரும் அட்டவணையில் முதல் வரிசையில் இருந்தது. முதல் 20 மாணவர்களின் அறிமுகம் வரை ஆசிரியர்கள் ஹாலில் இருந்தனர், அதனால் அவ்வளவாக கிண்டலும் கேலியும் செய்யாமல் சீனியர்கள் கேள்விகளைத் தொடுத்தனர்.

ரம்யாவின் முறை வந்த போது, கேள்விகனைகள் உச்ச நிலையில் இருந்தது. கொள்கையை கைவிடாமல் அப்பாவி முகத்துடன் தன் பெயர் அறிமுகம் செய்தாள் ரம்யா. பின் அவளிடம் கேள்விகள் கேட்க்கப்பட்டது.
பதில் கூறாமல் பேந்த பேந்த அவள் முழிப்பதை கண்ட ஒரு சீனியர்,

" டூ யூ நோ இங்கிலீஷ்?" என்று கேட்டான்,

'ஆமாம்' என்று தலையசைக்கிறாளா, ' இல்லை' என்று தலையசைக்கிறாளா என்று அவர்களுக்கு புரியாத வகையில் ரம்யா தலையசைக்க,
ஒரு மாணவன் " டேய், இங்கிலீஷ் தெரியாது போலிருக்குடா, தமிழ்ல கேளூங்க" என்றான்.

" நான் கேட்கிறேன் தமிழ்ல கேள்வி" என்று பின்வரிசையில் கடலை போட்டுக்கொண்டிருந்த ரமேஷ் முன் வரிசையில் வந்து அமர்ந்து , கேள்விகளைக் கேட்க அரம்பித்தான்.

மலங்க மலங்க முழிப்பதில் நான் யாருக்கும் சலித்தவள் அல்ல என நிரூபித்துக்கொண்டிருந்தாள் ரம்யா.

கடுப்பாகி போன 'கேள்விகள் குழு' போதும்டா சாமி இவக்கிட்ட கேள்வி கேட்டது என்று முடிவு செய்தது.

" அம்மா தாயே! உனக்கு நடக்கவாவது தெரியுமா?? அப்படியே மெதுவா நடந்து போய் ஒரு ஓரமா உட்காருமா" என்று கேலி செய்தனர்.



'என்னையே கிண்டல் பண்றீங்களா, டுபாக்கூர் பசங்களா' என்று மனதில் திட்டிக்கொண்டே தன் இடத்தில் போய் அமர்ந்தாள் ரம்யா.

ஒருவழியாக ' வெல்கம் பார்ட்டி ' முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்றனர்.

சாயங்காலம் வகுப்புகள் முடிந்து அனைவரும் சென்றுவிட , முப்பெருந்தேவிகள் மூவரும் தங்கள் வகுப்பறைக்கு அருகில் இருக்கும் மாடிபடிகளில் வந்து அமர்ந்தனர். மேல்தளத்தில் இருக்கும் சீனியர் வகுப்புகள் அனைத்தும் சீக்கிரமே முடிவடைந்து விட்டதால் கட்டிடத்தில் யாருமே இல்லை. அதனால் தேவிகள் மூவரும் காலையில் நடந்த வெல்கம் பார்ட்டியை பற்றி உரையாட ஆரம்பித்தனர்...............

ஷீத்தல்: நல்ல வேளை பவானி, நம்ம ரெண்டு பேரோட டர்ன் வரப்போ ஹால்ல டிபார்ட்மெண்ட் ஸ்டாஃப்ஸ் இருந்ததால நிறைய கேள்விகள் கேட்கல, தப்பிச்சோம்.

பவானி: கேட்டா மட்டும் என்ன, பதில் சொல்லிடவா போறோம். ஏன் நம்ம ரம்யாகிட்டவும் தான் நிறைய கேள்விகள் கேட்டாங்க, அசரலேயே நம்ம பொண்ணு, சும்மா அசையாம ஆடாம அப்படியே நின்னுட்டு எஸ்கேப் ஆகிட்டால.

ரம்யா: ஹேய் பவானி, சும்ம பதில் சொல்லாம இருந்திருக்க கூடாதுடி, பதில் சொல்லிருக்கனும் நான்.

ஷீத்தல்: என்ன ரம்யா சொல்ற???

ரம்யா: நான் பதில் சொல்லிருந்தா எப்படி சொல்லிருப்பேன்னு இப்போ பார்க்கலாமா, பவானி நீ அந்த கேள்வி எல்லாம் என்கிட்ட கேளு, நான் எப்படி பதில் சொலிருப்பேன்ன்னு சொல்லிக்காட்டுறேன், ஓ.கே வா??

பவானி: தட்ஸ் இண்டெரஸ்டிங், சரி நான் கேட்கிறேன்..........
ஃப்ர்ஸ்ட் கேள்வி
' டெல் அ யுனிக் வே டூ ப்ரோபோஸ்'

ரம்யா: பல வழில ,............. பல தடவை, .........பல பேர்கிட்ட நீ ப்ரோபோஸ் பண்ணியும் உனக்கு எந்த பொண்ணும் 'யெஸ்' சொல்லவேயில்ல, அப்புறம் என்ன யுனிக் வே இப்போ உனக்கு நான் சொல்லனும், தெரிஞ்சுக்கிட்டு இன்னும் பொண்ணுங்க கிட்ட ப்ரோபோஸ் பண்ண போறியாக்கும். பொண்ணுங்க பாவம் பொழச்சு போட்டும்னு விட்ரு உன் யுனிக் ஐடியா தேடுற வேலையெல்லாம்.

ஷீத்தல்: அப்படி போடும்மா கண்ணு!

பவானி:ஷ்ஷு, குறுக்கே பேசாதே ஷீத்து. ஓ.கே இரண்டாவது கேள்வி.

ஷீத்தல்: ஹேய் பவானி ஒரு நிமிஷம், அந்த கடலை மாஸ்டர் ரமேஷ் கேட்ட தமிழ் கேள்வியெல்லாம் கேளு இப்போ.

பவானி:ஓ.கே. டன். கேட்கறேன்....

'உனக்கு தமிழ் மட்டும் தான் தெரியுமா? இங்கிலீஷ் புரியாதா?'

ரம்யா: இப்ப எனக்கு இங்கிலீஷ் தெரியலன்னு சொன்னா, ' முப்பது நாளில் நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்' ன்னு ரெபிடெக்ஸ் புக் வாங்கி எனக்கு சொல்லித் தரப்போறியா??

பவானி:ஓ! நீ பதில் கேள்வி கேட்டு மடக்கிறீயா கடலை பார்ட்டிய. சரி அடுத்த கேள்வி

'புத்திசாலிக்கும் அதிபுத்திசாலிக்கும் என்ன வித்தியாசம், ஒரு எக்ஸாம்பிளோட சொல்லு.'

ரம்யா: ஏனுங்க சாமி, எனக்கு இதுக்கு வித்தியாசம் தெரியலீங்க, ஆனா லூசுக்கும் அரலூசுக்கும் வித்தியாசம் தெரியும்முங்க. அதுக்கு உதாரணம் சொல்லனும்னா, அது ரெண்டும் கலந்த கலவைதான்ங்க நீங்க, பேசும்போது நீங்க லூசு, பேசாம இருக்கும் போது அரலூசுங்க, அம்புட்டுத்தான்.

பவானி: ஆஹா இது சூப்பர் ரம்ஸ். சரி அடுத்த கேள்வி.......

'அரேஞ்சுடு மரேஜ் , லவ் மரேஜ் எது சிறந்தது?'

ரம்யா: என்ன பட்டிமன்றம் நடத்துறியா? இல்ல கல்யாண புரோக்கரா நீ? இப்படி கேள்வி கேட்க்குற, வேற உருப்படியா எதுன்னா கேளுபா.

ஷீத்தல்: என்ன ரம்யா, எல்லா கேள்விக்கும் நீ பதில் கேள்வி ' கடலை டிபார்ட்மண்ட் H.O.D ரமேஷ்' கிட்ட கேட்டு மடக்குற ,இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்................

அந்த கட்டிடமே அதிரும் படி சிரித்தனர் மூவரும்.

ரொம்ப கும்மாளம் அடிக்கிறோம் யாராவது பார்த்துட்டா முகத்திரை கிழிஞ்சிடும் என முடிவு பண்ணி மெதுவாக இடத்தை காலி பண்ணினார்கள்.

க்ளாஸ் முடிந்து அனைவரும் சென்றபின் தன் க்ளாஸ் ரூமில் அமர்ந்து ரெகார்ட் நோட் எழுதி முடித்துவிட்டு படிகளில் இறங்கப் போன ரமேஷின் காதில் கீழ் படிகளில் யாரோ சத்தமாகா பேசிக்கொண்டிருப்பது கேட்டு எட்டிப்பார்த்தான், உம்னா மூஞ்சி முதல் ஆண்டு மாணவிகள் மூன்று பேரும் சத்தமாக அரட்டை அடிப்பது கண்டு, என்னதான் பேசுதுங்க இந்த மூனும்னு கேட்கலாம் என்று மாடிபடி திருப்பதிலேயே உட்கார்ந்து மேற் கண்ட உரையாடல் முழுவதும் கேட்டுவிட்டான் ரமேஷ்.

' அடிப்பாவிகளா, காலையில இந்தப் பூனையும் பால் குடிக்கும்மான்னு மூஞ்சி வைச்சிருந்தாளுங்க , இப்போ அடிக்கிற லூட்டியப்பார்த்தா பால் என்ன பீரே குடிபாளுங்க போலிருக்குதே. அதிலேயும் அந்த நெட்டச்சி ரம்யாவுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னையே லூசுன்னு சொல்லுவா? ஏதொ பாக்கறதுக்கு 'மழை' ஷ்ரேயா மாதிரி டக்கரா தூக்கலா இருக்காளேன்னு நாலு கேள்வி கேட்டேன் வெல்கம் பார்டில, ஆனா அவ தில்லாலங்கிடியா இருப்பா போலிருக்குது.



இவளை சும்மா விடக்கூடாது, கவனிக்கிற விதத்தில கவனிச்சிட வேண்டியது தான் என்று கங்கனம் கட்ட கொண்டான் ரமேஷ்...............



[கலாட்டா தொடரும்...]

கல்லூரி கலாட்டா - 3



கல்லூரி கலாட்டா - 4

கல்லூரி கலாட்டா - 5

கல்லூரி கலாட்டா - 6

November 30, 2006

கல்லூரி கலாட்டா - 1


கல்லூரியில் முதலாம் ஆண்டு, முதல் நாள், முதல் வகுப்பிற்கு செல்ல போகிறொம் என்று பயம் கலந்த கலக்கத்துடன் கல்லூரிக்குள் நுழைந்தனர் ரம்யா, பவானி, ஷீத்தல் மூவரும்.

மூவரும் பள்ளியிலிருந்தே ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். மூவருக்கும் ஒரே கல்லூரியில், ஒரே பாடப்பிரிவில் இடம் கிடைத்தது அவர்கள் அதிர்ஷடமே.

இவர்களை பற்றின இன்னுமொரு முக்கியமான விஷயம், எப்போதும் பார்க்க அப்பாவிகளாக முகத்தை வைத்துக்கொள்ளும் இவர்கள் மூவரும் , உண்மையில் திமிரு பிடித்த லூட்டி அடிக்கும் வாலு பெண்கள்.

'முப்பெருந்தேவிகள்' , 'பவர் பஃப் கேர்ள்ஸ்'[கார்ட்டூன் கேரக்டர்ஸ்], ' மூன்று முடிச்சு' இப்படி நிறைய பட்ட பெயர்கள் உண்டு இவர்களுக்கு பள்ளியில். எங்கு சென்றாலும் மூவரும் ஒன்றாகவே செல்வார்கள்.

மூவரில் ஒருவர் கூட 'காதல் வலையில்' இதுவரை சிக்காததிற்க்கு காரணம்........

1.' எங்கு சென்றாலும் பின்னாடியே ஃபாளோ பண்றது, திரும்பிப் பார்த்தால் பல்லை இளிக்கிறது' இப்படி பன்ற பையன்களை ' உருப்படியா படிக்கவோ, வேலை பார்க்கவோ வேண்டிய வயதில் இப்படி பின்னாடியே பாடிகார்ட்டாட்டம் வருகிற இவனை நம்பினால் வாழ்க்கை உருப்படாது' என்று உதாசீனப்படுத்தி விடுவார்கள்.

2. ரோட்டோரத்தில் உள்ள டீ கடையில் தம் அடித்துக் கொண்டே போகிற வருகிற பெண்களை 'ஜொள்ளு' ஒழுக பார்க்கிற ''ரோட் சைட் ரோமியோ'வைப் பார்த்தால் பரிதாபப்படுவார்கள்.

3.பார்த்த முதல் நாளே, கையில் ரோஜாவும் ஒரு வாழ்த்து அட்டையுமாக வருபவனைப் பார்த்தால் , கண்டதும் காதல் கொண்ட' காதல் மன்னன்' என்று கிண்டல் அடிப்பார்கள்.

கல்லூரியில் முதல் நாள் வகுப்புகள் அனைத்தும், பெயர் மற்றும் ஊர் அறிமுகம் என இனிதே நடந்துக் கொண்டிருந்தது. மதியம் 3 மணி அளவில் வகுப்பு நடந்துக் கொண்டிருக்கும் போது, " எக்ஸ்க்கூஸ்மீ சார் " என்றான் வாயிலில் நின்றுக் கொண்டிருந்த ஒரு ஒல்லிபிச்சான் சீனியர்.

"வீ லைக் டூ மேக் அன் அனோன்ஸ்மண்ட் சார் " என்றான்.
"ஓ.கே , கோ அஃகேட்" என்றார் லெக்ச்சரர்.

இப்போது ஒல்லிப் பிச்சானைத் தொடர்ந்து மூன்று சீனியர்கள் வகுப்புக்குள் நுழைந்தனர்.

' ஓ இந்த ஒல்லிப்பிச்சான் , சும்மா எடுபிடி தானா ' என்று நினைத்துக் கொண்டனர் முப்பெருந்தேவிகள்.

" டியர் ஃபிரண்ட்ஸ், வீ லைக் டூ ஹோஸ்ட் ' வெல்கம் பார்ட்டி' டூ யூ ஆல் ஆன் பிகாஃப் ஆஃப் அவர் டிபார்ட்மண்ட், சோ கைண்ட்லி கேதர் அட் தி செமினார் ஹால் டுமாரோ அட் 10 எ.எம்" என்று அறிவித்தான் அம்மூவரில் ஒருவன்.

அனுமதி அளித்த ஆசிரியருக்கு ஒரு நன்றியும் தெரிவித்துவிட்டு அவர்கள் இடத்தை காலி பண்ண, வகுப்பறையில் ஒரே சல சலப்பு.

'இது அஃபிஷியல் ராகிங்காம்' எனவும்

'பெயர் அறிமுகம் செய்யனுமாம் ஒவ்வொருவரும் தனியாக முன் சென்று, பின் சீனியர்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமாம்'
என்ன வேண்டுமானலும் கேட்பார்களாம்' என ஆளுக்கொரு கருத்தாக கூறிக் கொண்டார்கள் வகுப்பு மாணவர்கள்.

முப்பெருந்தேவிகள் ஒரு முடிவிற்கு வந்தார்கள்,
'வழக்கம் போல் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொள்வது,
கேள்விக்கு பதில் சொன்னால் மீண்டும் நோண்டி நோண்டி கேள்வி கேட்டு பெண்டெடுத்து விடுவார்கள், எனவே எந்த கேள்வி கேட்டாலும் பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல்' பேக்கு மாதிரி' முழிப்பது'

இந்த முடிவுடன் மறுநாள் 10 மணிக்கு செமினார் ஹாலிற்கு சென்றார்கள்.................

[கலாட்டா தொடரும்........]

கலாட்டா-2

கலாட்டா -3

கலாட்டா -4

கலாட்டா -5

கலாட்டா -6

November 29, 2006

அம்மம்மா பிள்ளைக்கனி, அங்கம்தான் தங்கக்கனி!!!


என்னை அக்கா வென்றழைக்க
எனக்கொரு தங்கை வரப்போகிறாள்
ஏக்கத்துடன் கண்கள் வீட்டின் வாயிலேயே நோக்கின
ஏந்தி வருவாள் அன்னை குழந்தையுடன் - என்று.

பட்டு பாவாடை உடுத்தி
பிஞ்சுக் கரங்களால் என் கரம் கோர்த்து
பாதங்கள் தரையில் தத்தி தத்தி
பவனி வருவாள் என்னுடன் - என்று

கனவுகள் பல கண்டு காத்திருந்த எனக்கு
கண்விழிக்கும் முன்னே உன்னை
கடவுள் 'எனக்கு நீ வேண்டும்' என
களவாடி சென்றுவிட்டான் -என்று

அன்னை கூறி நான் தெரிந்துக்கொண்ட போது
அதை அறிந்து புரிந்துக் கொள்ள ஏனோ
அனுமதிக்காத என் மனம்
அழகு தேவதையாக என் நினைவில் பதித்தது - உன்னை

உதிக்கும்முன்னே உதிர்ந்து போனாலும் -என்
உள்ளம் உருவம் கொடுத்து
உயிர் கொடுத்து என்னுள்ளில்
உலாவவிட்டது -உன்னை

November 28, 2006

நமக்குள்ளே இருக்கட்டும் வைச்சுக்கோ......சொல்லிவிடாதே!!!

ப்ளாக்கில் தினமும் ஒரு பதிவு போடலமா? இல்லை வாரத்திற்கு ஒரு பதிவு போட்டால் போதுமா? மாததிற்கு ஒரு முறை பதிவு போட்டால் மக்கள் நம் ப்ளாக்கை மறந்தே போய் விடுவார்களா? இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் விறகு வெட்டி ஆன்லைனில் வந்தார். அவரிட்மே ஆலோசனை கேட்கலாம் என்று சாட் செய்ய ஆரம்பித்தேன்.........

நான்: என்ன விறகு எப்படி இருக்கிறே? உன் ப்ளாக்கில் ஒருவழியா 100 பதிவு போட்டுடே போலிருக்கு.

விறகு வெட்டி: ஆமாம், 3 மாதம் தான் ஆகிறது நான் ப்ளாக் ஆரம்பித்து , அதற்குள் 100 பதிவு போட்டுடேன் பார்த்தியா.

நான்: அட, அட உன்னை மிஞ்ச ஆள் உண்டா விறகு. தினம் ஒரு பதிவுன்ற விதத்துல பதிவு போடுவியா??

விறகு வெட்டி: இல்லை, இரண்டு நாள் சேர்ந்தாற்போல் 5 அல்லது 6 பதிவு போட்டிடுவேன், அப்புறம் 3 நாள் பின்னூட்டத்திற்க்கு பதில் போடவே சரியா இருக்கும்.

நான்: 3 நாள் பதில் போடுற அளவுக்கு பின்னூட்டம் வருமா??

விறகு வெட்டி: முதல்ல மக்களை என் பதிவு படிக்க வைக்கனும், அப்புறம் பின்னூட்டம் போட வைக்கனும், இதற்க்கு 2 நாள் ஆகும், அப்புறம் பதில் பின்னூட்டம் போட ஒரு நாள்.

நான்: பின்னூட்டம் போட வைப்பியா எப்படி???

விறகு வெட்டி: சும்மா எல்லா ப்ளாக்கிற்க்கும் போய், பதிவு படிக்கிறேனோ இல்லையோ பின்னூட்டம் போட்டிட்டு வந்துடுவேன். அப்போதான் , பாவம் பையன் நம்ம பதிவிற்க்கு பின்னூட்டம் எல்லாம் போட்டிருக்கான், நாமும் போய் இவன் பதிவு பார்க்கலாம்னு வருவங்க என் ப்ளாக்கிற்கு.

நான்: உன் ப்ளாக்கிற்கு வராங்க சரி, பின்னூட்டம் போடுங்கன்னு எப்படி கேட்பே?

" அம்மா , தாயே, சாமி, பின்னூட்டம் போட்டுட்டு போங்க"
" காப்பி , டீ வேனா குடிச்சுட்டு தெம்பா வந்து ஒரு பின்னூட்டம் போடுங்க"
" மதுரையிலிருந்து வந்திருகிறீங்க,...................லண்டனிலிருந்து என் ப்ளாக் எட்டி பார்க்கிறீங்க , கொஞ்சம் பின்னூட்டமும் போட்டுட்டு போயிடுங்கன்னு
"
கேட்பியா???

விறகு வெட்டி: இதென்ன சின்னபுள்ளை தனமா இருக்கு. அப்படி எல்லாம் வெளிப்படையா கேட்க மாட்டேன்.

கலயாண வீட்டிற்க்கு போய் நாம மொய் எழுதினா, பதிலுக்கு நம் வீட்டு விஷேசத்திற்கு அவங்க மொய் எழுதுவாங்க இல்ல அது மாதிரி தான். நீ எவ்வளவு ப்ளாக்கிற்கு போய் பின்னூட்டம் போடுறியோ அவ்வளவு பின்னூட்டம் உனக்கு கிடைக்கும்.

நான்: நீ கில்லாடி தான் விறகு. அஹா! என்ன என்ன வித்தை எல்லாம் கத்து வைச்சிருக்க பின்னூட்டம் வாங்க, சபாஷ் விறகு!!

November 27, 2006

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே!!!

"என்னங்க நம்ம கல்யாண ஆல்பத்தில இந்தப் ஃபோட்டோவைப் பாருங்க, என் கையில் மெகந்தி எவ்வளவு அழகா இருக்கு" என்று ஆவலுடன் குளியலறையிலிருந்து வெளி வந்த தன் கணவனிடம் காண்பித்தாள் ஆர்த்தி.
"ஆங்! நல்லா இருக்கு ஃபோட்டோ" என்றான் ஃபோட்டோவை பார்க்காமலே, " டிஃபன் ரெடியா ஆர்த்தி? நான் சீக்கிரம் ஷோரூம் போகனும், லேட் ஆச்சு" என்று தன் தலை முடியை சீறாக்கிக் கொண்டிருந்தான் ஆனந்த்.

ஏமாற்றத்துடன், தொய்ந்துப் போன மனதுடன் சமையல் அறைக்குச் சென்று , குக்கரிலிருந்து இட்லிகளை எடுத்து வைத்த ஆர்த்தியின் விழிகளின் ஓரத்தில் நீர் எட்டிப் பார்த்தது, ' திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் எப்படி மாறிவிட்டான் ஆனந்த். மூன்று வருடம் உருக உருக காதலித்து கைபிடித்த கணவன் இன்று ஒரு நிமிடம் தான் காட்டும் ஃபோட்டோவை பார்த்து ரசிக்காமல் போனால், எந்தப் பெண்ணுக்குத் தான் கஷ்டமாக இருக்காது என பொறுமினாள் ஆர்த்தி.

காதலித்த நாட்களில், கல்லூரிக்குச் செல்ல 8 மணி பேரூந்திற்க்கு வரும் ஆர்த்திக்காக 7.30 மணிக்கே வந்து காத்திருப்பான் ஆனந்த், அதன் பின் தான் தன்னுடைய டூ வீலர் ஷோரூமிற்க்குச் செல்வான். ஒவ்வொரு வெள்ளிகிழமையும் ஆர்த்திக்கு கல்லூரி முடிந்ததும் இருவருமாக கோவிலுக்குச் சென்று விட்டு, ரெஸ்டாரண்ட் போவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் மணிக்கணக்காக பேசிக் கொண்டேயிருப்பான் ஆனந்த்."ஏன் வார இறுதி வருகிறது, உன்னைப் பார்க்க முடியாமல், சனி ஞாயிறு மேலேயே எனக்கு வெறுப்பு வந்துவிட்டது" எனக் கூறும் ஆனந்தா இப்படி மாறிவிட்டான்?

திருமணமாகி, தனிக் குடித்தனம் வந்த ஒரு வாரம் ஆனந்திடம் எந்த மாறுதலும் காணவில்லை ஆர்த்தி. மாலையில் ஆனந்த்" மல்லிகை............என் மன்னன் மயங்கும்" முனுமுனுத்தபடி, கையில் மல்லிகை சிரிக்கத் திரும்புவான். ஆனால் இப்போ.......ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் னு சொல்றதெல்லாம் உண்மை தானோ???" என்று மனதில் ஆயிரம் எண்ணங்கள் வந்து மோதிக்கொண்டிருக்க ," ஆர்த்தி டிஃபன் ரெடியா??" என்ற கணவனின் குரல் கேட்டு தன் நிலைக்கு வந்தாள்.

மேஜையில் டிஃபன் எடுத்து வைக்கும் போது ஆர்த்தி எதுவுமே பேசாமல் மவுனம் காத்தாள், கோபத்தில் சிவந்திருக்கும் தன் ஆசை மனைவியின் அழகிய முகத்தை ஒரக்கண்ணால் ரசித்தபடியே' இன்று சாயந்திரம் எப்படியும் சீக்கிரம் வீட்டுக்கு வந்து ஆர்த்தியை எங்கேயாவது வெளியில் கூட்டிடுப் போகனும்' என்று நினைத்துக் கொண்டான் ஆனந்த். சாப்பிட்டு முடிக்கும் முன்னே அவன் செல்ஃபோன் சினுங்கியது.

"ஹலோ" என்றான் ஆனந்த், எதிர் முனையில் பேசுவது அவன் நண்பன் கணேஷ் தான் என்று தெரிந்தது , ஆனால் சிக்னல் சரியில்லாததால் , தட்டில் கை கழுவி விட்டு, ஃபோனுடன் பால்கனிக்குச் சென்றான்.

பாதி சாப்பாட்டில் ஆனந்த் எழுந்து போய்விட, ' டிஃபன் ரெடியான்னு கத்த தெரியுது, ஆனா ஒரு இட்லி கூட முழுசா சாபிடல' என்று தனக்குள் முனு முனுத்தபடி மேஜையை ஒழுங்கு செய்ய ஆரம்பித்த ஆர்த்தியின் காதில் பால்கனியில் நண்பனோடு ஃபோனில் உரையாடும் தன் கணவனின் குரல் கேட்டது..........

" டேய் கணேஷ் என்னால இன்னிக்கு ஈவினுங்கல வர முடியாதுடா, நினைச்ச நேரம் உங்க கூட வரதுக்கு இப்போ நான் தனி ஆள் இல்லடா, என்னை நம்பி ஒருத்தி இருக்கிறா, அவளுக்காக நான் சம்பாதிக்கனும், அவளை சந்தோஷமா வைச்சுக்கனும். அதுக்காக தான் டூ வீலர் டீலர்ஷீப் மட்டும் எடுத்திருந்த நான், இப்போ கார் டீலர்ஷீப்பும் எடுத்து என் ஷோரூமை விரிவு படுத்தி இருக்கிறேன். இன்னும் நிறைய உழைக்கனும், ஜெயிக்கனும், தொழிலில் உயரனும், இப்படி நிறைய ஆசை இருக்குடா,

ஃபிரண்ட்ஸோட ஊர் சுத்த , அரட்டை அடிக்க ஒரு காலம், படிக்க ஒரு காலம், உழைக்க ஒரு காலம் இப்படி வாழ்க்கையில் காலங்களும் பொறுப்புகளும் மாறும் போது, நாம தான் அதை புரிஞ்சுக்கனும்டா.
கண்டிப்பா வார இறுதில உன்னை வந்து பார்க்கிறேன், அப்போ வைச்சுக்கலாம் நம்ம கச்சேரியை , ஓகே வா??"
என்று ஆனந்த் தன் நிலையை நண்பனுக்கு விளக்கிக் கொண்டிருக்க ஆர்த்திக்கு ஒரு பெரிய உண்மை விளங்கியது.

"காதிலிக்க ஒரு காலம் உண்டு
காதலிக்க மட்டுமே ஒரு காலம் உண்டு
கெஞ்சி கெஞ்சி கிரங்கடிக்கும் காதலனிடம்
கொஞ்சி கொஞ்சிப் பேச ஒரு காலம் உண்டு

காதலுடன் கடமைகளையும் செய்து முன்னேற
காலம் கட்டளையிடும் போது
கருத்துடன் அதை கடைப்பிடித்து
கண்ணியத்துடன் உயர்வதே
காதலுக்கு அழகு!!!!!"

November 24, 2006

கவிதையே தெரியுமா?

ப்ளாக்கில் கடிதம் எழுதியாச்சு, தொடர் கதையும் எழுதியாச்சு, இன்னும் ஒரு கவிதை எழுதனுமே, எப்படி எழுதுறது அப்படின்னு நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது, என் நண்பர் விறகு வெட்டி ஆன்லைனில் வந்தார். அவரிடம் சாட் செய்தபோது ப்ளாக்கில் கவிதை எழுதுறது எப்படி என நான் கேட்க , அவர் எனக்கு அளித்த பதில்...............கீழ்கானும் எங்கள் உரையாடலை வாசித்தால் புரியும்.

நான்: விறகு , எனக்கு ப்ளாக்கில் கவிதை எழுதனும்னு ஆசை, ஆனா என்ன எழுதுவதுன்னு , எப்படி எழுதுவதுன்னு தான் தெரில, நீ தான் ப்ளாக்கில் தில்லாலங்கடி ஆச்சே கொஞ்சம் ஐடியா கொடேன்

விறகு வெட்டி: கவிதை தானே, அது ரொம்ப சிம்பிள், நான் சொல்லி தரேன் கேளு.

நான் : சரி சொல்லு விறகு.

விறகு வெட்டி: முதல்ல கதை எழுதுகிற மாதிரி ஒரு பாரா வில் 10 அல்லது 15 வரிகள் எழுதிக்கோ, , அதை அப்படியே நாலு நாலு வரியா மடக்கி மடக்கி எழுதினா அது தான் கவிதை.

நான்: அது சரி, கதைக்கு ஒரு கரு இருக்கிற மாதிரி கவிதைக்கு என்ன கரு வைக்கலாம் சொல்லு. அப்போதான் என்னால பாராவை முதல்ல எழுத முடியும்.

விறகு வெட்டி: கவிதைக்கும் கரு வழக்கம் போல காதல் தான். ஒரு காதலன் காதலியை பார்த்து சொல்ற மாதிரி, இல்லைனா ஒரு காதலி காதலனைப் பார்த்து சொல்ற மாதிரி எழுது. சும்மா பின்னூட்டம் பிச்சிட்டு வந்து நிறைய விழுகும் பாரு உன் கவிதை பதிவிற்க்கு.

நான்: ஒரு உதாரணம் சொல்லு விறகு, நான் அப்படியே பாயிண்ட் பிடிச்சுக்கிறேன்........

விறகு வெட்டி: சரி சொல்றேன் கேட்டுக்கோ.......ஒரு காதலன் காதலி பார்த்து சொல்றான் ஓ.கே

நான் உன்னை அப்படி பார்த்தப்போ
நீ ஏன் என்னை இப்படி பார்த்த


நான் உன்னைப் பார்த்து சிரிச்சா
நீ ஏன் முகம் சுழிச்ச


நீ நடந்து வரப்போ
ஏன் மெதுவா வர
நீ ஓடி வரப்போ
ஏன் வேகமா வர.........


இப்படியே திருப்பி திருப்பி எழுது, மொத்தம் 16 வரின்னு வைச்சுக்கோ , நாலு நாலு வரியா போட்டா உனக்கு 4 பாரா கிடைக்கும் , ஒவ்வொரு பாராவுக்க்கும் நடுவுல ஒரு படம் போடு, அப்போதான் பதிவு பெருசா தெரியும், ஆனால் கவிதை வரிகள் சின்னதா இருந்தா மக்கள் கட கட ன்னு வாசிச்சுட்டு டக்கு டக்குனு பின்னூட்டம் போட்டிருவாங்க.

நான்: அந்த படம் போட நான் என்ன பண்றது விறகு??

விறகு வெட்டி: நம்ம கூகிள் எதற்க்கு இருக்கு, அதுல தேடிப் பாரு, உன் கவிதைல வருகிற வரிகளுக்கு பொறுத்தமா இல்லைனாலும் பரவாயில்லை , சின்ன குழந்தைகள் படம் நாலு போட்டு விடு, தத்தக்க பித்தக்க ன்னு நீ கவிதை எழுதியிருந்தாலும் மக்கள் கண்டுக்காமல் பின்னூட்டம் போட்டிடுவாங்க.

நான்: என்ன விறகு எப்பவும் பின்னூட்டத்திலேயே குறியா இருக்கிற??

விறகு வெட்டி: பின்ன பின்னூட்டம்னா சும்மாவா? என் பதிவுகள் எல்லாம் பார்த்தேயில்ல, சும்மா 40 பது, 50 பதுன்னு எகிறுது இல்ல பின்னூட்டம்.

நான்: சரி விறகு, நான் போய் கவிதை எழுதுகிற வழிய பார்க்கிறேன், கவிதை பதிவு போட்டதும் மறக்காமல் வந்து பின்னூட்டம் போட்டிடு விறகு.

விறகு வெட்டி: அதெல்லாம் கரக்கட்டா போட்டிடுவேன், உன் கிட்ட ஒன்னு கேட்கனுமே.......

நான் : என்ன விறகு , எனக்கு வருகிற பின்னூட்டதில பாதி உனக்கு கமிஷன் தருனுமா???.

விறகு வெட்டி: இல்லை, அதெல்லாம் வேண்டாம். ஏன் எப்பவும் நீ என்னோட முதல் பேரை மட்டும் சொல்லி கூப்பிடுற, கடைசி பேரை சொல்லவே மாடேன்ற??

நான்: ஓ ! அதுவா, உன்னோட கடைசி பேருல நிறைய பேரு இருக்காங்க, எதுக்கு வீண் குழப்பம்னு தான் , மத்தபடி வேர ஒன்னும் இல்ல விறகு.

November 22, 2006

ரயில் சிநேகம் - 3




பாகம்- 1
பாகம்-2

"பிரீத்தி" அம்மாவின் குரல் கேட்டு தன் கைப்பைகளுடன் ரயில் நிலையத்திற்க்கு புறப்பட்ட பிரீத்தி நின்றாள், " பிரீத்திமா" அம்மாவின் குரல் இப்போது கண்ணீருடன் உடைந்து வெளி வந்தது, அந்த குரல் பிரீத்தியின் கோபத்தையும் வைராக்கியத்தையும் உடைத்தாலும், அதனை வெளிக்காட்டாமல் திரும்பி அம்மாவை நோக்கினாள் பிரீத்தி.

"பிரீத்திமா, என்னை மன்னிச்சிடு, உன்கிட்ட பொய் சொல்லி வரவழைத்தது என்னோட தப்புதான்மா, உன் ஆசை படி ஒரு வருடம் கழித்தே கல்யாணத்தை வைச்சுக்கலாம். இப்போ அப்பாவோட மரியாதைக்காக வருகிற மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு நமஸ்காரம் மட்டும் பண்ணிடுமா......" என்று கூறி மகளை சமாதனப்படுத்தி வீட்டிற்க்குள் அழைத்துச் சென்றாள் பிரீத்தியின் அம்மா.

"டேய் பிரேம், நாங்க உன் கிட்ட பெண் பார்க்க போற விஷயத்தை கடைசி நேரத்தில சொல்றது தப்புதாண்டா, அதுக்காக இப்படி கோபபட்டு உடனே கிழம்பினா என்ன அர்த்தம். இன்றைக்கு பெண் பார்க்க வருகிறோம்னு அப்பா அந்த பெண் வீட்டிற்க்கு வாக்கு கொடுத்துடாங்க பிரேம், அப்பாவின் மரியாதைக்க்காக சும்மா வந்து பெண்ணை பார்த்துட்டு வந்திடலாம்டா, உன் இஷ்டம்போல ஒரு வருடம் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளலாம்........" என்று ஒருவாறாக பிடிவாதமான தன் மகனை சமாதானப் படுத்தினார் பிரேமின் அம்மா.

அம்மாவின் வற்புறுத்தலினால் பெண் பார்க்க புறப்பட்டான் பிரேம். அவர்கள் சென்ற கார் பாதி வழியிலேயே டயர் பஞ்சர் ஆனது. டிரைவர் டயர் மாற்றிக் கொண்டிருக்கும் போது " அம்மா, பாரும்மா சகுனமே சரியில்லை, டயர் பஞ்சர் ஆகிடுச்சு, [ அம்மாவின் பலவீனம் தெரிந்திருந்தது பிரேமுக்கிற்க்கு] பேசாம பொண்ணு வீட்டிற்க்கு ஃபோன் பண்ணி சொல்லிடலாம்மா நாம வரலீன்னு, இப்படியே திரும்பிப் போய்டலாம்மா" என்று பலவாறு தன் அம்மாவின் மனதை மாற்ற முயன்றான் பிரேம், எதுவும் செயல் படவில்லை. ஒருவழியாக பெண் வீட்டை சென்றடைந்தார்கள்.



பிரீத்திக்கு அவள் அத்தை மகள் ப்ரியா அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள், பிரீத்தியோ எந்தவித ஈடுபாடும் இல்லாமல் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள். வீட்டிற்க்கு வெளியில் கார் நிற்க்கும் சத்தம் கேட்டு ப்ரியா வீட்டின் வாசலுக்கு விரைந்தாள்.

சிறிது நேரத்தில் பிரீத்தியின் அறைக்குள் ஓட்டமாக ஓடி வந்தாள் ப்ரியா " பிரீத்தி மாப்பிள்ளை வந்தாச்சு, பிரீத்தி மாப்பிள்ளை சூப்பரா இருக்காரு, அவர் பார்க்க மா..........." அவள் முடிக்கும் முன் இடைமறித்தாள் பிரீத்தி " போதும் ப்ரியா, ரொம்ப கத்தாதே, போய் உன் வேலையை பாரு" என்று எறிந்து விழுந்தாள் ப்ரீத்தி,
உற்ச்சாகத்துடன் வந்த ப்ரியாவின் முகம் வாடியது" நானும் பார்த்துட்டே இருக்கிறென் நீ இன்றைக்கு சரியே இல்லை, என்னாச்சு உனக்கு, நீ ரொம்ப மாறிட்டே பிரீத்தி" என்று கூறி அறையை விட்டு வெளியேறினாள் ப்ரியா.



பெண் வீட்டிற்க்கு முன் கார் நின்ற பின்பு கூட பிரேமிற்க்கு திரும்பி போய் விடலாமா என்று தோன்றியது, கார் இருக்கையின் பின் தலை சாய்த்து ஒரு நிமிடம் கண் மூடினான், பளிச்சிட்டது ' அந்த முகம்' அவன் மணக்கண்ணில்.
"பிரேம்" என்று அம்மாவின் குரல் கேட்டு தன் நிலைக்கு வந்தான் பிரேம், காரிலிருந்து அனைவரும் இறங்க, " வாங்க, வாங்க " என்று பலத்த உபசரிப்பு பெண் வீட்டாரிடமிருந்து.

யாருக்கும் சரியாக பதில் வணக்கம் கூறவில்லை பிரேம். இறுக்கமான முகத்துடன் பெண் வீட்டிற்க்குள் நுழைந்து அவனிடம் சுட்டிக் காட்டபட்ட இருக்கையில் அமர்ந்தான்.
"நிமிர்ந்து உட்காருடா" என்று அவன் அம்மா காதில் கிசு கிசுக்க தலை நிமிர்ந்தான் பிரேம். அவனுக்கு எதிரில் இருந்த சுவற்றில் பளிச்சிட்டது ' அவள் பிம்பம்'.


ப்ரியா அறையிலிருந்து சென்றுவிட, 'ஏன் எனக்கு இவ்வளவு கோபம் , எறிச்சல் எல்லாம் வருது', "கடவுளே' என்று கண்களை மூடினாள் பிரீத்தி , 'அந்த முகம்' பளிச்சிட்டது பிரீத்தியின் மணக்கண்ணில், " மின்னலே படத்துல வருகிற ரீமா சென் மாதிரி ஆகிட்டேனே" என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் அம்மா அறையினுள் வந்தாள்.
"பிரீத்தி , மாப்பிள்ளைக்கு உன்னிடம் தனியாக பேச வேண்டுமாம், அப்புறமா நீ ஹாலுக்கு வந்து எல்லாருக்கும் நமஸ்காரம் சொன்னா போதும், இப்போ இங்க வருவாரு, பேசிடு..." என்று இவள் பதிலுக்கு கூட காத்திராமல் அறையிலிருந்து வெளியேறினாள் அவள் அம்மா.

' என்ன ஆளு இந்த மாப்பிள்ளை பையன், அதான் கொஞ்ச நேரத்துல பொண்ணை காண்பிக்க போறாங்களே, அப்போ பார்த்துக்கலாம்னு பொறுமையா இருக்கத் தெரில, அவசரக் குடுக்கை ஆட்டம் பார்க்கிறதிற்க்கு முன்னமே தனியா பேசனுமாம், சரியான அலைஞ்சானா இருப்பான் போலிருக்கு' என்று மனதிற்க்குள் பிரீத்தி வசைபாடிக் கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியே வெளியில் நோக்கிக் கொண்டிருந்தாள்.

" எக்ஸ்கூஸ்மீ, ஒரு எக்ஸ்ட்ரா சப்பாத்தி பார்சல் கிடைக்குமா???" ...........

அதே குரல்!!!!!

அடிவயிற்றில் பட்டாம் பூச்சுகள் பறக்க
இதயத் துடிப்பு அதிவேகமாக அடிக்க
கைகால்கள் நடுங்க
உதடுகள் துடிக்க
கண்கள் பட படக்க..........
திரும்பினாள் பிரீத்தி,

அங்கே 'அவன்' வாயிலின் நிலைப்படியில் சாய்ந்துக் கொண்டு இரு கரங்களையும் கட்டிக் கொண்டு நின்றான்.
காண்பது கனவா நினைவா என்று என்று பிரித்தி திகைக்க, மறுபடியும்" சப்பாத்தி பார்சல் கிடைக்குமா??" என்று கண்களைச் சிமிட்டினான்.

காதல் வாகனத்தில்
திருமண பந்தத்தில்
இனிதே தொடர்ந்தது அவர்கள் பயணம்...........

November 18, 2006

ரயில் சிநேகம் - 2



பாகம்-1
"ஐயோ" என்று கொஞ்சம் சத்தமாகவே கூறிவிட்டாள் பிரீத்தி. என்னாச்சுதோ என்று அனைவரும் இவளை பார்க்க " என் ஃபரண்ட் ஷாலினுக்கும் சேர்த்து வாஙகிய சப்பாத்தி பார்சல் என் பையிலேயே இருந்துவிட்டது, அவள் ரூமிற்க்கு போனபோது எடுத்து போக மறந்து விட்டாள்" என்ற பிரீத்தி , " பிரேம் என்கிட்ட இப்போ இரண்டு சப்பாத்தி பார்செல் இருக்கிறது, நீங்க ஒன்று வாங்கிகோங்க" என்றாள்.

" வாங்கிக்கனுமா?.............அப்படின்னா எவ்வளவு விலைங்க உங்க எக்ஸ்ட்ரா சப்பாத்தி பார்சல், ?ஹாஃப் ரேட்னா ஓகே" என்று அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் பிரேம்.
" அச்சோ! அப்படி இல்லீங்க, என்கிட்ட தான் இப்போ இரண்டு பார்சல் இருக்கிறதே, நீங்க ஒன்று சாப்பிடலாமேன்னு சொன்னேன்" என்று விளக்கினாள் பிரீத்தி.
"இப்படி விளக்கமா ' சாப்பிடுங்கன்னு' நீங்க சொல்லியிருக்க்கனும், ' வாங்கிக்கங்கன்னு' நீங்க சொன்னதும் சாப்பாடு பொட்டலம் வியாபாரம் பண்றிங்களோன்னு நான் பயந்துடேங்க" என்று கூறி சிரித்தான் பிரேம்.

அவனது கிண்டலும் கேலியுமான பேச்சு பிரீத்திக்கு பிகவும் பிடித்திருந்தது. பின் இருவருமாக உணவருந்தும் போதும் கிரிக்கட், சினிமா, உலக நடப்பு என்று நிறைய பேசினான், அத்தனையும் பிரீத்தியை கவர்ந்தன.
தன் அம்மாவின் உடல் நிலைக் குறித்து கவலையுடன் கணமாக இருந்த பிரீத்தியின் இதயம் இலகுவானது, ஒருவிதமான பரவசத்துடன் உறங்கிபோனாள் பிரீத்தி.

யாரோ தன் கையைப் பிடித்து " எழும்புங்க பிரீத்தி, கோயம்புத்தூர் வந்தாச்சு" என்று கூறுவது கேட்டு கண் விழித்தாள் பிரீத்தி. அவளுடன் பயணம் செய்துக் கொண்டிருட்ந்த அந்தக் குடும்பத் தலைவி அவளருகே நின்றிருந்தாள். அவசரம் அவசரமாக எழுந்த பிரீத்தியின் கண்கள் ' அவனை' தேடின. எங்கு போனான் அவன், அவனையும் காணோம் அவன் கைப் பைகளையும் காணோமே என்று பதறிப் போன பிரீத்தி, அக்குடும்ப தலைவியிடம் " ஏங்க , நம்ம கூட பிரயாணம் பண்ணினாரே அந்த பிரேம் எங்கேங்க??" என்று கேட்டாள்.

" அவர் வடகோவை ரயில் நிலையத்திலேயே இறங்கிட்டாருங்க, உங்க கிட்ட சொல்லச் சொன்னருங்க, நீங்க ரொம்ப அயர்ந்து தூங்கிட்டு இருந்தீங்களா அதான் எழுப்பி தொந்தரவு செய்ய வேண்டாமேன்னு எங்க கிட்ட சொல்ல சொல்லிட்டு போய்ட்டாருங்க" என்றார் அந்த பெண்.

பிரீத்திக்கு ஏனோ அழுகை அழுகையாக வந்தது. 'அவன்' சொல்லிக்கொள்ளாமல் சென்றது அவளுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது..

ஊர் கதை, உலக கதை எல்லாம் பேசினான், அவனுக்கு எந்த ஊர், எங்கு வேலைப் பார்க்கிறான், அவன் மொபைல் நம்பர் என்ன, எந்த விபரமும் அவன் சொல்லவில்லை, தானும் கேட்ட்காமல் விட்டு விட்டோமே என்று தன்னையும் அவனையும் மனதிற்க்குள் திட்டிக் கொண்டே ஆட்டோவில் தன் வீட்டிற்க்குச் சென்றாள் பிரீத்தி.

'ரயில் சினேகம் ரயில் வரைதான்' போலும் என்று தன்னை தானே சமாதனப் படுத்திக் கொண்டு, அம்மாவை காணும் ஆவலில் வீட்டிற்க்குள் நுழைந்தாள் பிரீத்தி. வாசலருகில் புன்முறுவலுடன் வரவேற்றார் அவள் தாத்தா." வாம்மா பிரீத்தி, பிரயாணம் எல்லம் சவுகரியாமா இருந்துச்சாமா? ரொம்ப களைப்பா தெரியறேயேம்மா" என்று தாத்தா கேட்க, " தாத்தா அம்மா எங்கே, அம்மா வுக்கு உடம்புக்கு என்ன, இப்போ அம்மா உடம்பு எப்படி இருகிறது, டாக்டர் என்ன சொல்கிறார் " என்று வரிசையாக தன் கேள்விகளைத் தொடுத்தாள் பிரீத்தி.

" பொறும்மா, முதல்ல உள்ளே வா, நிதானமா எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன் " என்றார் தாத்தா. தாத்தாவின் முகத்தில் தன் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததுக் குறித்து எந்த வருத்தமும் தெரியவில்லையே, எப்போதும் விட ரொம்ப உற்ச்சாகமாக தெரிகிறாரே என்று குழப்பத்துடன் வீட்டின் முன் அறைக்குச் சென்றாள்.

சனிக்கிழமையானால் காலை 10 மணிவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கும் தன் தம்பி பிரவீன் அன்று அத்தனை சீக்கிரமாக எழுந்து வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருப்பதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தே போனாள் பிரீத்தி.
" பிரவீன் , என்னடா இத்தனை சீக்கிரம் எழுந்துட்ட, இது என் தம்பி பிரவீன் தானா, என் கண்ணால நம்பவே முடியலையே" என்றாள் பிரீத்தி.

" பிரீத்தி, 'கண்ணை நம்பாதீங்க' என்று நடிகர் மாதவன் சன் டீவி யில் வருகிற டிஷ் வாஷிங் லிக்குயிட் விளம்பரத்துல சொல்வாரு பாத்திருகிறியா?? அதே மாதிறி உன் கண்ணை நம்பாதே" என்றான் பிரவீன். ' மாதவன் ' என்ற பெயரை கேட்டதும் பிரீத்தியின் மனதில் ' அந்த முகம்' பளிச்சிட்டது. தன் மனதைக் கட்டுபடுத்திக் கொண்டு " அம்மா எங்கேடா பிரவீன் ?" என்று கேட்டாள் பிரீத்தி,

அதே சமயம் மாடிப் படிகளில் பிரீத்தியின் அம்மா வீட்டின் முன் அறைக்கு இறங்கி வந்துக் கொண்டிருந்தார் . ஃபிரஷாக தலை குளித்து, உயர் ரக புடவை உடுத்தி தன் அம்மா ஒரு அழகு தேவதை போல் மாடி படிகளில் வருவதைக் கண்டதும் அதிர்ச்சியில் உரைந்துப் போனாள் பிரீத்தி.
" அம்மா, உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று அப்பா ஃபோனில்............" என்று அவள் கூறி முடிக்கும் முன் பிரீத்தியின் அப்பா வும் அங்கு வந்தார்,

" அதெல்லாம் சும்மா டூப்பூ, உன்னை வீட்டிற்க்கு வரவழைக்கத் தான் அப்பா அப்படி சொன்னாங்க ஃபோனில்" என்றான் பிரவீன். ஒன்றும் புரியாமல் விழித்த பிரீத்தியிடம் அவள் அப்பா" பிரீத்திமா, நானே ஸ்டேஷனுக்கு வரனும்னு இருந்தேன் , வெளியில கொஞ்சம் வேலை வந்துடுச்சு, பிரீத்தி இன்றைக்கு உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வராங்கடா , உண்மையைச் சொல்லி வீட்டுக்கு வர சொன்னா நீ ஆயிரம் காரணம் சொல்லி வராமல் இருந்துடுவன்னு தான் அம்மா என்னை அப்படி ஃபோனில் சொல்லச் சொன்னாடா" என்றார்.

பிரீத்திக்கு தலை சுற்றியது, கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தன, " ஏம்பா பொய் சொல்லி என்னை வரவழைச்சீங்க? நான் தான் ஒரு வருஷம் கழிச்சு மாப்பிள்ளை பாருங்கன்னு சொன்னேன் இல்ல, அப்புறம் ஏம்பா இப்படி பண்ணினீங்க. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், அம்மா வுக்கு உடம்பு சரியில்லைன்னு நான் எவ்வளவு பதறிப் போயிட்டேன் தெரியுமா?? எல்லாரும் சேர்ந்து பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டீங்க இல்ல, நான் போறேன் சென்னைக்கு, மதியம் இன்டர் ஸிட்டி ரயிலிலேயே நான் கிளம்புறேன், அந்த மாப்பிள்ளை வீட்டிற்க்கு சொல்லிடுங்க என் பொண்ணு சென்னையிலிருந்து வரலைன்னு, நான் இப்போவே கிளம்புகிறேன்" என்று கோபத்தில் வெடிக்கும் பிரீத்தியை எப்படி சமாதனப் படுத்துவது என அனைவரும் யோசிக்க பிரீத்தி ரயில் நிலையத்திற்க்கு புறப்பட்டாள்.



வடகோவை ரயில் நிலையத்தில் பிரேமின் மாமா மகன் சுந்தர் பிரேமை அழைத்துச் செல்ல வந்திருந்தான், " வாடா மாப்பிள்ளை, ட்ரெயின் கரெக்ட் டைம்முக்கு வந்துடுச்சு போலிருக்கு, பிரயாணம் எல்லாம் எப்படிடா வசதியா இருந்துச்சா? சென்னையில் நல்ல மழையாமே? இங்கே கல்யாண வீட்டிற்க்கு வந்திருகிறவர்களுக்கு எல்லாம் ஹோட்டலில் ரூம் போட்டிருகாங்க , எல்லாரும் அங்க தான் இருக்கிறாங்க, போகலாம் வா" என்று பேசிக் கொண்டே நடக்க , பிரேமோ நகர்ந்துச் சென்றுக் கொண்டிருந்த ஃபளு மவுண்டைன் ரயிலை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தான்.

' போகுதே போகுதே என் பைங்கிளி ரயிலிலே' என் அவன் மணம் பாடியது.

ஹோட்டல் ரூமிற்க்கு வந்து குளித்து முடித்து, காலை உணவு அருந்த அவன் தயாரகிக் கொண்டிருந்த போது, அவன் அப்பாவும் அம்மாவும் தயங்கி தயங்கி அவன் அறக்குள் வந்தனர்." பிரேம் " என்று அழைத்தாள் அவன் தாய் ," என்னம்மா, சொல்லுங்க" என்றான் பிரேம். அவன் தாய் தன் கணவனை நோக்க அவர் தொடர்ந்தார், " பிரேம் உனக்கு பெண் பார்க்க போகிறோம் இன்றைக்கு, பெண்ணுக்கு கோயம்புத்தூர், அதான் கல்யாணத்திற்க்கு வந்த இடத்திலேயே பெண் பார்க்க வருவதாக ஏற்பாடு செய்து விட்டோம், புறப்பட்டு தயாராக இரு, 10 மணிக்கு நாம் குடும்பமாக பெண் வீட்டிற்க்கு செல்கிறோம் " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் .

பிரேமிற்க்கு கோபமும் ஆத்திரமும் பொத்துக் கொண்டு வந்தது, " இதற்க்கு தான் தூரத்து உறவு காரங்க கல்யாணத்திற்க்கும் கண்டிப்பா வரனும்னு கட்டாயப் படுத்தினீங்களா?? நான் தான் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் ஒரு வருடம் போகட்டும் என்று சொல்லியிருந்தேனே, அப்புறம் என்ன அவசரம் உங்களுக்கு, யார் கிட்ட கேட்டு இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணினீங்க? என்னை ஏமாத்தி வரவழைச்சுட்டு இங்கே இவ்வளவு ஏற்ப்பாடு பண்ணியிருகிறீங்க இல்ல, நான் போறேன் சென்னைக்கு, அந்த பொண்ணு வீட்டுல சொல்லிடுங்க என் பையன் சென்னையிலிருந்து வரல ன்னு, மதியம் இண்டர் ஸிட்டி ரயிலுக்கே நான் கிளம்புகிறேன் " என்று கோபத்தில் பிரேம் வெடிக்க அவனை எப்படி சமாதானப் படுத்துவது என அவன் பெற்றோர் யொசிக்க ரயில் நிலையத்திற்க்கு புறப்பட்டான் பிரேம்...........



[சினேகம் தொடரும்..]

November 17, 2006

ரயில் சிநேகம் - 1


நேரம் செல்ல செல்ல பிரீத்திக்கு டென்ஷன் அதிகம் ஆனது. 'வேலையை முடித்துவிட்டு, சீக்கிரமாக ஹாஸ்ட்டல் ரூமுக்குப் போய் உடைமாற்றிக் கொண்டு, 8.30 மணி ' ப்ளு மவுண்டைன்' யை பிடிக்கனும், அம்மாவுக்கு இப்போ உடல் நிலை எப்படி இருக்கிறதோ?' என சிந்த்தித்துக் கொண்டே தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த்தாள். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை உடனே புறப்பட்டு வா என்று அப்பா நேற்று போனில் சொன்னதிலிருந்து பிரீத்திக்கு அம்மா ஞாபகமாகவே இருந்தது.

"ஹலோ பிரீத்தி இன்னுமா நீ கம்பியூட்டர்கிட்ட சண்டை போட்டு முடிக்கல? இப்போவே மணி 5.30 ஆச்சு பிரீத்தி, இப்போ நாம ரூமுக்கு போனாத்தான் நீ நைட் ட்ரெயின் பிடிக்க முடியும்" என்று பிரீத்தியின் தோழி ஷாலினி துரிதப்படுத்தினாள்.

"இருடி ஷாலு, 10 நிமிஷத்துல முடிச்சிடுவேன், புறப்பட்டுடலாம்" என்று கூறிக் கொண்டே தன் வேலைகளை முடித்தாள் பிரீத்தி.

" சென்னைக்கு நீ வந்து 3 மாதம் தானே ஆகுது, அதான் உனக்கு இங்குள்ள ட்ராஃபிக் பத்தி தெரில, உங்க கோயம்புத்தூர்ல ஆர்.ஸ் புரத்திலிருந்து 10 நிமிஷத்துல ரெயில்வே ஸ்டேஷன் போற மாதிரி இங்க எல்லாம் போக முடியாதுமா கண்ணு, so சீக்கிரம் புறப்படு" என்று அவசரப் படுத்தினாள் ஷாலினி.

ஒருவாறாக வேலைகளை முடித்துவிட்டு , இருவரும் ஆட்டோவில் ரூமிற்க்கு போய், பிரீத்தியின் கைப்பைகளை எடுத்துக் கொண்டு வெயிட்டிங் லிருந்த ஆட்டோவில் ரெயில்வே ஸ்டெஷன் போய் சேர்ந்தார்கள். சப்பாத்தி பார்சல் ஒன்று வாங்கிக்கொண்டு ப்ளு மவுண்டைன் ட்ரெயின் ல் தன் கோச் எண் சரிபார்த்து ஏறிக்கொண்டாள் பிரீத்தி.

அவள் சிறு வயதிலிருந்தே விரும்பும் ஜன்னல் ஒரத்து இருக்கையே கிடைத்தது.' ஹப்பாட'என்ற பெருமூச்சுடன் பின் தலையை இருக்கையில் சாய்த்துக் கண் மூடிக்கொண்டாள். தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்றிருந்த ஷாலினி, ஜன்னல் கம்பி வழியாக பிரீத்தியை அழைத்தாள்," ஏய் என்னடி ஆச்சு, டல்லா ஆகிட்ட??"என்று கேட்டாள், " ஒன்றும் இல்லை ஷாலு, அம்மா எப்படி இருகிறாங்களோ ன்னு ஒரே ஞாபகமா இருக்குது, அதான்........."
" ஐயோ பிரீத்தி , இன்னும் 8 மணி நேரத்துல அம்மா வை பார்க்க போற, பின்ன என்ன?? அம்மா வுக்கு இப்போ உடம்பு நல்லா ஆகிருக்கும், நீ கவலைபடதே பிரீத்தி, பத்திரமா போய்யிட்டு வா, நான் கிளம்புறேன், சரியா" என்று விடைக் கொடுத்தாள்.

ஷாலினியின் வார்த்தைகள் பிரீத்திக்கு ஆறுதலாக இருந்தது, பிரீத்தியின் இருக்கைகு அருகில் அவளை தவிர மற்ற ஐந்து இடங்களில் , அப்பா அம்மா இரு குழந்தைகள் என ஒரு குடும்பம் இருந்தது, ஐந்தாவது இடத்தை பதிவு செய்தவர் இன்னும் வரவில்லை போலும் என நினைத்துக்கொண்டாள் பிரீத்தி.

ரயில் மெதுவாக நகர அரம்பித்தது, களைத்து போன தன் முகத்தை தண்ணீரினால் கழுவி refresh செய்துக்கொள்ளலாம் எனச் சென்றாள் பிரீத்தி, கதவருகே
சென்றபோது.....யரோ ஒருவர் வாயிலின் கம்பியினைப் பிடித்துக்கொண்டு ரயிலில் ஏற ரயிலுடன் ஓடி வருவதைக் கண்டாள், " அச்சோ பாவம், வண்டி வேற வேகமாக போக அரம்பிக்க போகுதே " என்று நினைத்துக்கொண்டே , அந்த கரத்தை பிடித்து உள்ளே இழுத்து , அவர் உள்ளே ஏறி வர உதவினாள்.

மூச்சு வாங்க " ரொம்ப தாங்க்ஸ்ங்க "என்றான் அவன். ஒரு 25 அல்லது 27 வயது இருக்கும் அவனுக்கு, பார்க்க அசப்பில் நடிகர் மாதவனை ஞாபகபப்படுத்தினான் . வேர்த்துக் கொட்டியது அவனுக்கு, மறுபடியும் " ரொம்ப நன்றிங்க" என்று அவன் சொன்னபோதுதான் சுயநினைவிற்க்கு வந்தாள் பிரீத்தி.
" பரவாயில்லீங்க, ட்ரெயினுக்கு சரியான நேரத்திற்க்கு வந்திருக்க கூடாதா??" என்று கூறினாள். " ஆமாங்க கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கனும், எப்படியோ லேட் ஆச்சுங்க" என்று அவன் பதிலளித்தான்.

அவன் வாசலருகில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள, பிரீத்தி தன் இருக்கைக்குத் திரும்பி சென்றாள். சிறிது நேரத்தில் அவள் பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் ' அவன்'. " what a pleasant surprise ! நீங்க என் பக்கத்து seat ஆ" என்று தன் ஆச்சரியத்தை எந்த தயக்கமுமின்றி வெளிப்படுத்தினான். " By the way , I am Prem, your sweet name please?" என்று தன் பெயர் அறிமுகம் செய்தான். பார்த்து ஐந்து நிமிடங்களே ஆகிருந்தாலும் ஏதொ ஒரு பந்தம் தன்னக்கு அவனோடு இருப்பது போல் உண்ர்ந்ததால் " I am preethy" என்று எதையும் யோசிக்காமல் அறிமுகம் செய்துக்கொண்டாள் பிரீத்தி. தான் கோவைக்கு சொந்தகாரரின் திருமணத்திற்க்குச் செல்வதாக கூறினான் அவன்.

இவர்கள் பெயர் அறிமுகம் செய்வதை கண்ட சக பயணிகளான அந்த குடும்பமும், தங்களையும் இவர்களுக்கு அறிமுகப் படுத்திக்கொண்டனர். அந்தக் குடும்பத்திலிருந்த மூத்த மகனுக்கு 10 வயது , பெயர் ஷிவா , அவன் தங்கைக்கு 8 வயது, பெயர் நந்தினி. மிகவும் மரியாதையுடனும் , அறிவுடனும் பேசிப் பழகினர் அக்குழந்தைகள். அவர்கள் பெற்றோரும் மிகுந்த அன்னியோனியமாகவும் , நல்ல புரிதல் உள்ள தம்பதிகளாகவும் காணப்பட்டனர்.
ஒரே நேரத்தில் " பிள்ளைகளை நல்ல பண்புகளுடன் வளர்த்திருகிறீர்கள் " என்று பரேமும் பிரீத்தியும் கூறினர், இருவரும் ஒரே வார்த்தைகளை ஒரே சமயத்தில் கூறியதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அந்த குடும்பத் தலைவி பெருமிதம் கொண்டார். ஒரு அர்த்தமுள்ள புன்னகையுடன் பரேமும் பிரீத்தியும் நோக்கிக்கொண்டனர்.

சிறிது நேரத்தில் இரவு உணவு சாப்பிட ஆரம்பித்தது அக்குடும்பம். பிரீத்தியையும் பிரேமையும் தங்களுடன் உணவு அருந்துமாறு வற்புருத்தினாள் அக்குடும்பத் தலைவி. " கேட்டதிற்க்கு நன்றிங்க, எனக்கு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க " என்று மறுத்தான் பிரேம். " நான் சப்பாத்தி பார்செல் வைத்திருகிறேன், அதனால் எனக்கும் வேண்டாங்க" என்று மறுத்தாள் பிரீத்தியும்.

தன் சப்பாத்தி பார்சலை எடுத்த போது தான் கவனித்தாள் பிரீத்தி, " ஐயோ............

( சிநேகம் தொடரும்....)

ரயில் சிநேகம் -2
ரயில் சிநேகம் -3

November 14, 2006

புதிய விதிமுறைகள்

Employee Rules and Regulations of 2007 Dress Code

It is advised that you come to work dressed according to your salary. If we see you wearing Prada shoes and carrying a Gucci bag, we assume you are doing well financially and therefore do not need a raise. If you dress poorly, you need to learn to manage your money better, so that you may buy nicer clothes, and therefore do not need a raise. If you dress just right, you are right where you need to be and therefore do not need a raise.

Sick Days We will no longer accept a doctor's statement as proof of sickness. If you are able to go to the doctor, you are able to come to work.

Personal DaysEach employee will receive 104 personal days a year. They are called Saturday and Sunday.

Toilet Use Entirely too much time is being spent in the toilet. There is now a strict three-minute time limit in the stalls. At the end of the three minutes, an alarm will sound, the toilet paper roll will retract, the stall door will open and a picture will be taken. After your second offence, your picture will be posted on the company bulletin board under the "Chronic Offenders category". Anyone caught smiling in the picture will be sectioned under the company's mental health policy! You are allowed to use the rest room only thrice a day and you have to swipe in and out from the toilet doors also.

Lunch Break Skinny people get 30 minutes for lunch as they need to eat more, so that they can look healthy. Normal size people get 15 minutes for lunch to get a balanced meal tomaintain their average figure. Fat people get 5 minutes for lunch, because that's all the time needed to drink a slim fast.

Thank you for your loyalty to our company.

We are here to provide a positive employment experience. Therefore, all questions, comments,concerns, complaints, frustrations, irritations, aggravations,insinuations, allegations, accusations, contemplations, consternation and input should be directed elsewhere.

The Management.

November 13, 2006

கலைப் பாடங்களில் பட்டப்படிப்பு படிக்கலாமே!

சில குடும்பங்களில் +2 முடித்த உடனே பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கமாக உள்ளது. இவர்கள் தன் பெண் பிள்ளைகளை சுலபமான கலைப் பாடங்களை எடுத்து படிக்க வைக்கலாம்.

கஷ்டப்பட்டு காலையிலும் மாலையிலும் உடல் நலம் பாதிக்கும் அளவிற்க்கு ஓடி ஓடி வந்து Practicals செய்து, Record Note தயார் செய்து , படித்துவிட்டு, இதனால் எந்த பயனும் அடையாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீததிற்க்கு மேல் உள்ளனர்.

விஞ்ஞானப் பிரிவில் எதை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தாலும், அந்தப் புத்தகத்தில் படித்தவை ஒன்று கூட வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்க்கு எந்த சந்தர்ப்பத்திலும் உதவியது கிடையாது. எந்தப் பாடத்தை எடுத்துப் படித்தாலும், பட்டம் பெற்று விட்டோம் என்ற ஒரு திருப்திதான் கிடைக்கப் போகிறது.

அதனால் வேளைக்குச் செல்லாமல் , திருமணம் முடித்து குடும்ப பொறுப்புகளை மட்டுமெ செய்ய விரும்பும் பெண்கள், கலைப் பாடங்களை எடுத்து பட்டப் படிப்பு படிக்கலாமே !!!