September 09, 2008

தேடி வந்த காதல்......!!!

அலுவலக விஷயமாக Noida சென்றுவிட்டு அன்று தன் பெங்களூர் அலுவலகம் திரும்பிய ரமேஷ், வேலைகளை தொடங்கும் முன் வழக்கம்போல் தன் அலுவலக இமெயில்களை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தான்,

இவன் ப்ராஜக்ட் லீடாக பணிபுரியும் குழுவிற்கு புதிதாக 'Verification Engineer' பதவிக்கு ஒர் பெண் பணியில் சேர்ந்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் தனது அலுவல்கள் பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள அவனை சந்திப்பாள் என்ற அறிவிப்பு ப்ராஜக்ட் மனேஜரிடமிருந்த வந்திருந்தது.

அவன் மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் கொள்ளாமலே மேலோட்டமாக மெயிலை படித்திருந்தான்.
அவனது 26 வயதிற்கே உரிய ஆர்வ கோளாரில் பெண்ணின் பெயரை பார்ப்பதற்காக ஈ-மெயிலை மறுமுறை படிக்க தொடங்க..........அதே வேளையில் ,


"எஸ்கூஸ் மீ" என்று அவன் பின்னாலிருந்து மெல்லிசை போன்ற குரல் கேட்டு திரும்பியவன், ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தான்.

அவளும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது கண்களில் சிறிது கணம் தோன்றிய ஆச்சரிய பார்வை உணர்த்தியது.
அதனை மறைத்தவளாய் தன்னை அறிமுகப்படுத்த துவங்கினாள்,

"ஐ அம் சந்தியா, ஐ ஹேவ் ஜாயிண்ட் அஸ் அ வெரிஃபிக்கேஷன் இஞ்சினியர் இன் யுவர் டீம்"

"யெஸ் ஐ டு நோ..........வெல்கம் டூ அவர் டீம்........சந்........சந்தியா"

"தேங்கியூ"

பின் தனது வேலைக்கான பொறுப்புகள் பற்றின விபரங்களை ரமேஷிடம் மிக மிக இயல்பான தொனியில் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.

கல்லூரி படிப்பை முடித்து இத்தனை வருடங்கள் களித்து தனது டீமில் ஒருத்தியாக சந்தியாவை சந்தித்த அதிர்விலிருந்து மீளமுடியாமல் ரமேஷ் சற்று திணறிப்போனான்.

தனக்கு தேவையான விளக்கங்களை பெற்றுக் கொண்டவள் ரமேஷிற்கு நன்றி கூறிவிட்டு அவனது அறையை விட்டு வெளியேறுகையில்...

"சந்தியா......."

"........"

" உங்க........உன் .......கிட்ட.....கொஞ்சம் பேசனும்"

என்னவென்பது போல் அவனைப் பார்த்தாள் சந்தியா,

"உன்னை..........இங்க......நான் எதிர்பார்க்கவேயில்லை சந்தியா"

"நானும் தான்...."

"ஸோ.....ஸாரி ......சந்தியா.."

"எதுக்கு?.."

"நீ.........அன்னிக்கு.......காலேஜ்ல.......என்கிட்ட...."

இதற்குமேல் பேச வேண்டாம் என்பது போல் தன் கையை உயர்த்தி சைகை காட்டிவிட்டு, பேச ஆரம்பித்தாள் சந்தியா.....


"ரமேஷ், நான் உங்களை விரும்பினதை உங்க கிட்ட வெளிப்படுத்த எனக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதே அளவு உரிமை அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறதுக்கு உங்களுக்கும் இருக்கு. ஒருத்தரை விரும்புறதும் விரும்பாததும் தனிப்பட்ட இஷடம். நான் உங்களை விரும்பினேன்ற ஒரே காரணத்துக்காக நீங்களும் என்னை காதலிக்கனும்னு அவசியம் இல்லையே......."

"இருந்தாலும்...........ஐ.......அம்......ஸோ......"

"ரமேஷ் ப்ளீஸ்.........டோண்ட் ஆஸ்க் எனிமோர் ஸாரி அண்ட் எம்பிராஸ் மீ"

"........."

" நான் பழசெல்லாம் மறந்தாச்சு........நீங்களும் மறந்திடுங்க,,,,ப்ளீஸ்"

தங்குதடையின்றி தெளிவாக பேசிவிட்டு தன் அறையை விட்டு வெளியேறிய சந்தியாவை வியப்புடன் பார்த்தான் ரமேஷ்.

கல்லூரியில் தனக்கு இரண்டு வருடம் ஜூனியராக படித்த சந்தியாவா இவள்?

இரண்டு வார்த்தை சேர்ந்தார்போல் பேசுவதற்கே மிகவும் யோசிக்கும் சந்தியா..........இத்தனை வெளிப்படையாக தன் மனதில் உள்ளதை பேசுகிறாள், வியந்தான் ரமேஷ்!!

கல்லூரியில் ரமேஷின் வகுப்பில் படித்த சரவணனின் தூரத்து உறவுக்கார பெண்தான் சந்தியா.அதே கல்லூரியில் முதல் வருடப் படிப்பில் சந்தியா சேர்ந்த போது அவளது அப்பா சரவணனிடம்,

"தம்பி நம்ம சந்தியாவ இதே காலேஜ்லதான் ஹாஸ்டல சேர்த்திருக்கிறோம்பா.........புள்ளைய பத்திரமா பார்த்துக்க"

என்று ஒரு அப்பாவிற்கே உரித்தான கவலையான அக்கறையுடன் அவனிடம் கூறினார்.
பக்கத்தில் கும்பலாக நின்றுக் கொண்டிருந்த சரவணின் நண்பர்களையும் ஓரக்கண்ணால் மிரண்டு போய் பார்த்தபடியே தான் பேசினார்.

'நம்ம பொண்ணை இந்த பயலுக கிண்டலும் கேலியும் செய்வானுங்களோ' அப்படின்ற பயமும் அவரது பார்வையில்.

"நீங்க பயப்படாம ஊருக்கு போங்க சித்தப்பா, அவளை நான் பாத்துக்கிறேன்........" என்று அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பினான் சரவணன்.

அதன்பின் சரவணனிடம் ஏதாவது உதவி கேட்டு சந்தியா வருவதும், உடனிருக்கும் ரமேஷிடமும் நட்பான அறிமுகத்துடன் பேசவும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. சரவணன் இல்லையென்றால் ரமேஷிடமே தன்க்கு தேவையான உதவிகளை கேட்கும் அளவிற்கு அவர்கள் நட்பு வளர்ந்தது.

தன் நண்பனின் உறவுக்காரபெண், ஹாஸ்டலில் வேற இருக்கிறா என்ற அக்கறையில் ரமேஷும் உதவிகளை செய்தான்.
ரமேஷ் நூறு வார்த்தை பேசினால், பதிலுக்கு ஒரு வார்த்தை பேசவே சந்தியா மிகவும் தடுமாறுவாள்.

இந்நிலையில் ரமேஷ் இறுதியாண்டு இறுதி தேர்விற்கு முந்தின நாள், சந்தியா தன் காதலை கவிதையாக எழுதி ரமேஷிடம் கொடுத்தாள்.


ரமேஷ்...
உன் மேல் காதல் வந்தும்
அதைச் சொல்லாமல் மறைத்திருந்தேன்
உன்னிடம் சொல்வதற்கு ஏனோ முடியவில்லை
பெண்மையின் நாணம் என்னை வென்றது

என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன்

என்னைத் தென்றல் தீண்டினாலும்
உன் நினைவால் சிலிர்க்கின்றேன்
என்னை வெப்பம் தீண்டினாலும்
உன் அருகாமையை உணர்கின்றேன்

என் கண்கள் காணும் காட்சி எல்லாம்
நீயே ஆகி விட்டாய்
நான் பேசும் வார்த்தை எல்லாம்
உன் பெயரையே சொன்னது

என்னையறியாமல் என் கண்கள்
நீ வரும் வழி பார்த்துத் தேடியது
என் கால்களோ வெட்கத்தால்
தரையில் கோலம் போட்டது

இத்தனை ஆசை உன்மேல் இருந்தும்
ஏனோ சொல்லத் தெரியவில்லை
என்றாவது என்னை நீ அறிவாய்
என்றே இந்நாள்வரை காத்திருந்தேன்.....

உனக்காகவே நான் வாழ்கின்றேன்!!

அமைதியும் சாந்தமுமாக வலம் வரும் சந்தியாவின் இதயத்தையும் காதல் தட்டியிருந்தது ரமேஷின் உருவில்!

இதனை சற்றும் எதிர்பாராத ரமேஷ் , தன் மனதில் அவள் மேல் அவ்விதமான எந்த எண்ணமும் இல்லை எனவும், இப்படி பட்ட எண்ணங்கள் கல்லூரி கால வயதில் சகஜம், அதையெல்லாம் விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறும் அறிவுரை கூறினான்.



கண்களில் ஏமாற்றமும், கவலையும் கலந்த ஓர் அவமான உணர்விலும் கலங்கிய கண்களுடனும் சந்தியா வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அதுவே அவன் சந்தியாவை கடைசியாக சந்தித்தது.
சரவணன் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட, ரமேஷ் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட, இருவருக்குமான தொடர்பும் மெது மெதுவாக குறைந்திருந்தது.
ரமேஷ் சந்தியாவை பற்றிய எதுவுமே சரவணனிடம் விசாரிக்கவில்லை இத்தனை வருடங்களில்.

அவன் சந்தியாவை பற்றி கேட்காததிற்கும், அவளது காதலை மறுத்ததிற்கும் காரணம் இருந்தது.........அப்போது
அவன் மனதில் குடியிருந்த எதிர்வீட்டு தேவதை 'மேனகா' தான் அது!!

மேனகா ரமேஷ் வீட்டின் எதிரில் குடியிருக்கும் அழகு பதுமை.
சிறுவயதிலிருந்தே இரு குடும்பத்திற்கும் நல்ல பழக்கம்,
பதின்ம வயது காதல் ரமேஷை தாக்கியது 'மேனகா'வின் உருவில்.....


மனதில் மேனகா மீது காதல் இருந்தும், ரமேஷ் அதனை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை,
தானும் அவளும் படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்தபின் இருவீட்டாரிடமும் பேசி அவளை திருமணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் ஒருதலையாக அவளை காதலித்துக் கொண்டிருந்தான்.
மேனகாவின் பாசமும் அன்பும் அவனுக்கு சிறுவயதிலிருந்தே நிறைவாக கிடைத்ததால், தன் காதலை தனிப்பட வெளிப்படுத்தி காதலித்து தங்கள் படிப்பு காலத்தை விரயமாக்க வேண்டாம் எனக் கருதி அவன் மனதிலேயே தன் காதலை பத்திரப்படுத்தியிருந்தான்.

விதி வலியது..........இரண்டு வருடங்களுக்கு முன் மேனகா தன் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் , தன்னுடன் படிக்கும் தன் காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க ரமேஷின் உதவியையே அவள் நாடியபோதுதான் ரமேஷ் தன்க்குள் சுக்கு நூறாக உடைந்து போனான்.

மேனகாவின் பாசமும், பரிவான பேச்சும் இவனுக்கு காதலாக தோன்றியிருக்கிறது, ஆனால் அவளுக்கோ அது நட்பாக மட்டுமே இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது.

மனதிற்குள் கோட்டை கட்டி, சிம்மாசனத்தில் அமர்த்தி , பூஜித்த தேவதை தன்னையும், தன் காதலையும் உணராமலே போனதால் அவள் மீது கோபமும் ஆத்திரமும் முட்டிக் கொண்டு வந்தது ரமேஷிற்கு.

மேனகா தன் காதலனுடன் திருமணமாகி வெளிநாடு சென்று இரண்டு வருடங்களாகியும் அந்த கோபமும் ஏமாற்றமும் இன்னும் அழியாத ரணமாக அடி மனதில் இருக்கத்தான் செய்தது ரமேஷிற்கு.

இன்று சந்தியாவின் இந்த பக்குவமான பேச்சு ரமேஷை சிந்திக்க வைத்தது.

சாயந்திரம் அலுவலகம் முடிந்து தன் வீட்டிற்கு தனது காரில் ரமேஷ் திரும்பிய போது, அலுவலகத்திற்கு அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றுக்கொண்டிருந்த சந்தியாவை பார்த்ததும் தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளிடம் சென்றான்.

" சந்தியா.........எங்கே போகனும்.......வா நான் ட்ராப் பண்றேன் என் கார்ல"

" நோ......நோ தேங்க்ஸ்"

"எங்கே போகனும்னு மட்டும் சொல்லு.........போற வழில நானே ட்ராப் பண்ணிடுறேன்.....ப்ளீஸ்"

"ப்ரவாயில்லை.........நான் பஸ்லயே போய்க்கிறேன்"


"ஓ.......இன்னும் என் மேல கோபம் குறையலையோ"

"ஹலோ.........எனக்கு யாருமேலயும் கோபம் எல்லாம் ஒன்னுமில்ல"

" அப்போ என் .......கார்ல வா.......நான் ஓத்துக்கிறேன் உனக்கு கோபமில்லைன்னு"

"அய்யோ ரமேஷ்........இப்போ எதுக்கு பஸ் ஸ்டாப்ல வந்து வம்பு பண்றீங்க"

" நீ பேசாம அப்போவே கார்ல வந்து உட்கார்ந்திருந்தா யாரு வம்பு பண்ண போறா "

" சரி..........சரி.......வந்து தொலைக்கிறேன்"

என்று வேகமாக அவனது காரை நோக்கி நடந்தாள்.

காரின் பின் இருக்கைக்கான கதவை சந்தியா திறக்கவும்......

"ஹலோ.....மேடம்..........நான் என்ன உங்களுக்கு கார் ட்ரைவரா? முன்னாடி வந்து ஏறுங்க....."

"எனக்கு அப்படி யாரு கூடவும் கார்ல முன்னாடி கூட உட்கார்ந்து போய் பழக்கமில்லை.........மோர் ஓவர் இட்ஸ் ரிசர்வ்ட் ஃபார் சம் ஒன் ஸ்பெஷல் டு யூ"

"சம் ஓன் ஸ்பெஷலா.......ஹும்.......சரி சரி.......முதல்ல கார்ல பின்னாடியே ஏறும்மா தாயே"

சந்தியாவை எங்கே இறக்கிவிடவேண்டுமென அவளிடம் கேட்காமலே காரை மிதமான வேகத்தில் செலுத்தினான்.

மேனகா ரமேஷின் மனதில் ஏற்படுத்தியிருந்த நிராகரிப்பின் வலி, ஏமாற்றம்..............
அதன்பின் சந்தியாவை ஏதேச்சையாக அலுவலகத்தில் இன்று காலையில் சந்தித்தபோது, அவளது அன்பை உதறித்தள்ளி காயப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு எல்லாம்.....மெது மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது ரமேஷிற்கு.


டிராஃபிக் சிக்னலில் கார் நிற்கையில் தன் முன்பிருந்த கண்ணாடியில் பின்னிருக்கையிலிருந்த சந்தியாவை பார்த்தான் ரமேஷ்.


அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில் அவளைப் பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.
எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.

இத்தனை வருடங்கள் கழித்து சந்தித்தப்பின்பும், என் மேல் எத்தனை நம்பிக்கை இருந்தால்........எங்கு செல்கிறோம் என்று கூட கேட்காமல் ஜன்னல் வழியாக தன் முகத்தில் மோதும் காற்றை ரசித்தபடி, நெற்றி கூந்தலை நளினமாக காதில் சொருகியப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டுவருவாள்??

காரை காஃபி ஷாப் முன் நிறுத்தினான் ரமேஷ்.

" ஏன்.........ஏ.......ன்...........இங்கே நிறுத்தினீங்க?.........நான் எல்லாம்......."

"நான் எல்லாம் யாரு கூடவும் காஃபிஷாப் க்கு தனியா போகமாட்டேன்...........நான் சுடிதார் போட்ட சங்ககால தமிழ்பெண்.....அப்படின்னு லெக்சர் கொடுக்க போறே......அந்த லெக்சரை காஃபி குடிச்சுட்டே பேசலாமே.......ப்ளீஸ்"

ப்ளீஸ் சொல்லும்போது........... 'ஸ்ஸ்ஸ்' ஸில் ஒரு அழுத்தம் கொடுத்து கெஞ்சும் பார்வை பார்த்தான்....ரமேஷ்!!


"எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல உங்க கூட காஃபி குடிக்க.........நீங்க உங்க வீட்டமனிக்கிட்ட அடி வாங்காம இருந்தா சரி..........."

"ஹா......ஹா.......ஹா"

"என்ன இளிப்பு......??"

"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லியான்னு போட்டு பாக்குறியாக்கும்??.........சரி வா........காஃபி குடிச்சுட்டே அது பத்தி பேசலாம்"

கல்லூரியில் சரவணனுடன் கேண்டினுக்கு வந்தால், சந்தியா முட்டை பஃப் ஆர்டர் பண்ணுவாள்.....அது அவளது ஃபேவெரைட் ஐடம்!
ஸோ.....ரமேஷ் காஃபியுடன் முட்டை பஃப்யும் ஆர்டர் செய்தான்.

"ஹும்........என்ன கேட்ட.........வீட்டம்மணியா??'

"ஆமா.........மிஸஸ் மேனகா ரமேஷ்குமார் பத்தி கேட்டேன்......"

இவளுக்கு எப்படி மேனகா மேட்டர் தெரியும் என்று......அதிர்ச்சியுடன்.....புருவம் உயர்த்தி அவளை கூர்ந்து பார்த்தான்.

சிறிது நேர மெளனத்திற்கு பிறகு சந்தியாவே பேச தொடங்கினாள்.....

" காலேஜ்ல அன்னிக்கு..........உங்க கிட்ட......பேசிட்டு நான் ஹாஸ்டலுக்கு போற வழியில சரவணன் அண்ணாவை பார்த்தேன்........என் கண்ணு ஏன் சிவந்திருக்கு, ஏன் அழுதேன்னு அண்ணா துளைச்சு துளைச்சு கேட்டான்.......ஸோ அவன்கிட்ட சொன்னேன்....."

"..........."

" அப்போதான்......நீங்க உங்க பக்கத்துவீட்டு பொண்ணு மேனகாவை ரொம்ப டீப்பா லவ் பண்றீங்கன்னு அண்ணா சொன்னான்........"

"..........."

"சரவணன் அண்ணா கிட்ட அப்புறமா உங்களை பத்தி நான் எதுவுமே கேட்டதில்லை.......அண்ணாவும் எதுவும் சொன்னதில்லை........"


"ஹும்.........."


" நான் ரொம்ப ஃபீல் பண்ணினேன்.......இதெல்லாம் தெரியாம உங்க மேல...........ஸாரி"


"ஹே சந்தியா........ஒய் டு யு ஆஸ்க் மீ ஸாரி.........டோண்ட் ஃபீல் ஸாரி சந்தியா."

நீண்ட பெருமூச்சிற்கு பின் ரமேஷ் பேச தொடங்கினான்,

"நான் லவ் பண்ணினது காலேஜ்ல என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கு தெரியும்............ஆனா...........அந்த லவ் ஒருதலைகாதல் மட்டுமில்ல.......ஏற்றுக்கொள்ளபடாத காதலும்னு யாருக்கும் தெரியாது.........."

"ர....மே......ஷ்......"

"ம்ம்.........ஷி காட் மேரிட் ........."

"ஸோ ஸாரி டு ஹியர் திஸ்......ரமேஷ்"

"லீவ் இட் .......பாஸ்ட் இஸ் பாஸ்ட்......."

சிறிது நேரம் எதுவுமே பேசாமல் இருவரும் காஃபி அருந்தினர்.

"சரி......நான் போட்டு எல்லாம் பார்க்கல...........உன் டீடெய்ல்ஸ் கம்பெனி எம்ப்ளாயி டேடா பேஸில் பார்த்தேன்........ஸ்டில்....மிஸ்.சந்தியா..........ஏன் இன்னும்.........நீ.......கல்யாணம்.........."

"ஹலோ.......நான் உங்களையே நினைச்சுட்டு இன்னும் உருகிட்டு இருக்கிறேன், அதான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கிலைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்...............வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டுதான் இருக்காங்க.........ஆனா எந்த ஜாதகமும் பொருந்தி வரல, என் ஜாதகத்துல தான் ஏதோ ப்ராப்ளம்னு என் அம்மா ஒரே புலம்பல்.........ஜாதகத்தை மாத்தி எழுதி ரீ-ட்ரை பண்ணுங்கம்மா ன்னு சொல்லியிருக்கிறேன் "
என்று படபடவென்று பேசிவிட்டு சிரித்தாள் குழந்தையாய்...........!!

அவளது சிரிப்பை ரசித்தபடி கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்........

"ஹலோ........சார்..........என்ன அப்படி பார்க்கிறீங்க......??"

பதில் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் ரமேஷ்......

"ஐயா சாமி........நான் பேசுறது காதுல விழுதா........ஹலோ......."
அவன் கண்களுக்கு முன் விரல் சொடுக்கி சிரித்தாள் சந்தியா!!

தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த ரமேஷ்.........அவள் கண்களை ஊடுறுவும் ஒரு பார்வையுடன்...........

"அப்பிளிக்கேஷன்.........உன்கிட்ட கொடுக்கனுமா..........உன் அப்பாகிட்ட கொடுக்கனுமா........"

"எ..........என்ன......??."

"என் ஜாதகத்தை உன் கிட்ட கொடுக்கனுமா........உங்க வீட்ல கொடுக்கனுமான்னு கேட்டேன்.........."

குடித்துக்கொண்டிருந்த காஃபி புரை ஏறியது சந்தியாவிற்கு,

மிரண்ட விழிகளில்......இன்ப அதிர்ச்சி!!

"சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்னு டயலாக் எல்லாம் விட மாட்டேன்.......உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்"

"............"

" நாம நேசிக்கிறவங்களைவிட........நம்மளை நேசிக்கிறவங்க கூடத்தான் வாழ்க்கை இனிக்கும்........."

"......."

" வில் யூ மேரி மீ.......சந்தியா?"

"..........."

"என்ன சந்தியா........பதிலேதும் சொல்லாம அமைதியா இருக்கிற??"

"ம்ம்......"

"ம்ம் னா??........"

கரெக்ட்டாக அப்போ பார்த்து வெயிட்டர் பில் கொண்டுவர, பில் பே பண்ணிவிட்டு ரமேஷ் பார்க்கையில்.........சந்தியா அவனது கார் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
தன் கையிலிருந்த ரிமோட் கீ யினால்.......காரை அன்லாக் செய்துவிட்டு.......வேகமாக சந்தியாவை பின் தொடர்ந்தான்.

காருக்கு அருகில் இருவரும் சென்றதும், தவிப்புடன் ரமேஷ் அவளை நோக்க.........

சந்தியா கண்சிமிட்டிவிட்டு காரின் முன் கதவை திறந்தாள்......!!

"சந்தியா..........."

"இனிமே இந்த இடத்தை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்"

சந்தோஷத்தில் ரமேஷிற்கு வார்த்தைகள் வரவில்லை........அங்கு வார்த்தைகளுக்கு அவசியமுமில்லையே!!

ரமேஷ் காரின் ட்ரைவர் இருக்கையில் ஏறினான், அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
அமர்ந்தபோது அவன் தோளில் அவள் தோள் இடித்தது.........
கியரைப் பொருத்தியபோது அவன் கை அவள் முழங்காலில் தொட்டு மீண்டது.......

திடீர் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்க்க.........இனிதே அவர்கள் 'வாழ்க்கை' பயணம் தொடங்கியது!!!!!!!!

முற்றும்.

191 comments:

said...

திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :)))

said...

//சந்தியா தன் காதலை கவிதையாக
எழுதி ரமேஷிடம் கொடுத்தாள். //

அடடடடடடடா... இந்த காதல் கவிதைக‌
தொல்லை தாங்க முடிலபா...
அதெப்படி திவ்யா உன்னோட‌
ஹீரோயின்க எல்லாம்
ஆ..வூன்னா கவிதை மழை
பொழியறாங்கோ..??? ;)))))

said...

//என் கால்களோ வெட்கத்தால்
தரையில் கோலம் போட்டது //


ஏம்மா இன்னுமா நம்ம
ஹைஹீல்ஸ் பாப்பாக்கள்லாம்
காலிலே கோலம் போடுறவ..??

( கோச்சுக்காதே திவ்யா..
ச்ச்சும்மா லுல்லுல்லாய்..)

கவிதை சூப்பரப்பூ....:))

said...

//மேனகாவின் பாசமும், பரிவான பேச்சும்
இவனுக்கு காதலாக தோன்றியிருக்கிறது,
ஆனால் அவளுக்கோ அது நட்பாக மட்டுமே
இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது. //

பாவம் பையன்... இந்தப் பொண்ணுகளே
இப்படித்தான்...சும்மா இருக்கற பையன்கிட்டே
பரிவா பேசறேன் பாசமா இருக்கறேன்னு
அளவுக்கு மீறி குழைய வேண்டியது...
அப்புறம் நட்புன்னு ஆப்பு வைக்க வேண்டியது...
என்ன திவ்யா சரிதானே..?? ;))))
நட்புனாலும் ஒரு லிமிட்டோட பழக‌
என்னிக்குத்தான் கத்துப்பாகளோ...

( இதுக்கு என்கிட்டே சண்டைக்கு
வருவீயளா அம்மணி..?? )

said...

//அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில்
அவளைப் பார்த்தபோது ரமேஷ்
தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான். //

ஏன் திவ்யா.. ஒருவேளை பயலுக்கு
சாப்ட்ட காபி ஒத்துக்கலையோ
என்னவோ..?? :))))))))

( பாண்டி உனக்கு திவ்யா கிட்டே
இருந்து ' டின்' னு தாண்டி... )

said...

// உதடுகள் முழுவதும் மூடிவிடாமல்
ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது//

அட்றா சக்கை....
அட்றா சக்கை....
அட்றா சக்கை....

நல்லாத்தேன் இருக்கும்... ;))))

said...

ஆனால் மொத்ததில்
ஒரு அழகான காதல் கதையை
தன்னோட அருமையான நடையில்
தந்திருக்கும் திவ்யாவுக்கு
என் வாழ்த்துக்கள் !! :)))

said...

enga..neria part podreengannu oatromntu ipdi ela partaiyum oray postla poata matum utruvoma :D anyway..kathai ponathay terla..semma flow..conversation modela irunthathala..lengthay therila..and morever..enaku meera jasmine pesinathum prasanna atha kekarathumavay picture odicha aluputhatavayla..semma technique divs..pic podarathu..and semma cute writeup again..hey ithey mari themela naan onu yosichitrunthen..saria athaye neengalum potutenga.. :)

said...

//ஜொள்ளுப்பாண்டி said...
திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :)))
//

ம்ம்ம்ம்!

வேற என்ன சொல்றது?

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்தான்:)

Anonymous said...

hi divs!
read the story!!
super dialogue!!!!!!

said...

//எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.//

முதன் முறையாக இப்படி ஒரு வர்ணிப்பினை பார்க்கிறேன் :)))

said...

////உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்////

ரொம்பவே ரசித்தேன்!

இன்னும் வாழ்க்கை இருக்குன்னு சொல்றீங்க ரைட்டு :)))

said...

//நாம நேசிக்கிறவங்களைவிட........நம்மளை நேசிக்கிறவங்க கூடத்தான் வாழ்க்கை இனிக்கும்........."//

அட! ஜூப்பரூ!

said...

அழகான காதல் கதை.
அழகான நடை.
அழகான படங்கள்.
ஒவ்வொரு முறையும் ஆச்சரியம் கொள்ளவைக்கிறீர்கள் திவ்யா..!

said...

கலக்கீடீங்க.. வழக்கம் போல..

said...

//ஜொள்ளுப்பாண்டி said...
திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :)))//

திவ்யா.. எனக்கும்.. எனக்கும்...
:))

said...

//"அப்பிளிக்கேஷன்.........உன்கிட்ட கொடுக்கனுமா..........உன் அப்பாகிட்ட கொடுக்கனுமா........"//

நோட் பண்ணிக்கிட்டேன்.. மைன்டில வச்சிக்கிறேன்..
:))

said...

//காருக்கு அருகில் இருவரும் சென்றதும், தவிப்புடன் ரமேஷ் அவளை நோக்க.........

சந்தியா கண்சிமிட்டிவிட்டு காரின் முன் கதவை திறந்தாள்......!!

"சந்தியா..........."

"இனிமே இந்த இடத்தை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்"

சந்தோஷத்தில் ரமேஷிற்கு வார்த்தைகள் வரவில்லை........அங்கு வார்த்தைகளுக்கு அவசியமுமில்லையே!!//

பின்னீட்டீங்க..

said...

ஒரே நாளின் மாலையிலே இந்த கதை நாயகனுக்கு காதல் கிடைத்து விட்டதே..

கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு.. லைட்டா..

said...

மொத்தத்தில் கதை அருமையோ அருமை..
வாழ்க..

said...

//ஜொள்ளுப்பாண்டி said...

திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :)))//

ரிப்பீட்டே :)

டயலாக்ஸ் எல்லாம் சூப்பர் :)

said...

இய‌ல்பான‌ க‌தை போக்கு. ரொம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌. :)

said...

எப்ப‌டி தான் க‌தை யோசிக்க‌றீங்க‌ளோ? நானும் அடுத்த‌ ப‌குதியை சீக்கிர‌மா வெளியிட‌றேன். :)

said...

வழக்கம் போல நல்ல கதை! ஜாலியான வசனங்கள்! கலக்கல்ஸ்!!

அதுலயும் இந்த கதைக்கு பொருத்தமா தலைவி படங்கள் ஜூப்பரு :))

said...

:)))))))))))))))))))))))

said...

நன்று திவ்யா... Feel Good Love story... கவிகதாசிரியைய பாராட்ட நமக்கெல்லாம் தகுதி இல்ல... ஸோ.... ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுக்குறேன் :))))

said...

திவ்யா கதை ஹீரோயின் எல்லாம் திவ்யா மாதிரி கவிதையா எழுதுறாங்க... ;)

கதையும் கவிதையும் சூப்பர்...
கலக்கிட்டீங்க..!!!

said...

//எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.
//

நல்லா இருக்குங்கோ!

said...

புகைபடங்கள் அருமை ஆனா ஒரே பகுதியா முடித்து மேலும் படங்கள் போடாமல் போவதை கண்டிக்கிறேன் :))))

said...

ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌. :)

said...

ஆஹா காலங்கார்த்தால இப்படியொரு காதல் கதையை படிச்சுட்டு வேலையத் தொடங்க எவ்வளவு நல்ல இருக்கு?
அதிலும் கரெக்டருக்கு ஏற்ற மாதிரி ஃபோடொ செலக்ஷன் சூப்பர். நீங்க எப்படி பாட்டுக்கு மெட்டுக்கு பாடெழுதுவீங்களா அல்லது பட்டுக்கு மெட்டு போடுவீங்களா. ஐ ஆம் சாரி. கதைக்கு படம் தேடுவீங்களா இல்லை, படத்தை வச்சு கதை எழுதுவீங்களா? சரி இதெல்லாம் வியாபார ரகசியம். இருந்துட்டுப் போகட்டும்.

மென்பொருள் நிறுவனம்'னாலே புரோகிராமர்னு தான் எல்லாரும் சொல்லுவாங்க. ரோஜா முதல் 'யாரடி நீ மோஹினி' வரை இதே பதவி தான்.
Verification Engineer என்று சொல்லிருப்பது நல்லா இருக்கு.

\\அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில் அவளைப் பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.
எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.\\


இந்த வரிகளுக்குப் பக்கத்தில் மீரா ஜாஸ்மினின் spotless face. Literally amazing. Not her face. But your presence of mind to put the photo next to these lines :)

said...

திவ்யா!!!!

சூப்பர்....... அருமையோ அருமை!!!!

said...

கதை சூப்பரு...
நல்ல ஒரு காதல கதை..

realy i enjoyed....


Keep Rocking...

said...

திவ்யா... கண்டதும் காதல் பாணியில் இருந்து மாறுபட்ட நல்ல கதை. வாழ்கையில் எதார்த்தமாக நடக்கும் விதமாக அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள்.

said...

அட ஒரே பாகத்தில் கதையை முடித்துவிட்டீர்கள்!! சந்தோஷ கலந்த ஒரு பெருமூச்சு விட்டேன். i still miss divz's long episodes! இருந்தாலும், ஒரே பாகத்தில் முடித்து, என்னை குஷிப்படுத்திவிட்டீர்கள்!

வழக்கம்போல வசனங்கள் சூப்பர்!!

//அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில் அவளைப் பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.
எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.//

டாப்பு டக்கர்!!:))

said...

கதை சூப்பர்.

என்னடா ஹீரோ ப்ராஜெக்ட் லீடர்,காரில போறான்னு ஓவர் பில்டப்பா இருக்கேன்னு பாத்தேன்.கடைசில காரை வச்சு ஒரு
பன்ச் கொடுத்துட்டீங்க.
//"இனிமே இந்த இடத்தை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்"//

கலக்குங்க :)))

said...

உங்க கதை climax படிக்கும் போது மெளனம் சம்மதம் படம் தான் நியாபகம் வந்துச்சு…
கதை நல்லா இருந்தது திவ்யா…என்ன ஒரு பகுதிலயே முடிச்சுட்டீங்க? அடுத்த திவ்யா ஸ்பெஷல் தொடர் கதை எப்போ?

said...

//ரோஜா முதல் 'யாரடி நீ மோஹினி' வரை இதே பதவி தான்.//

விஜய்,
ரோஜால அவர் Cryptologist. அதை தான் அந்த கிராமத்துல கேக்கற பாட்டிக்கும் சொல்லுவார். அந்த தைரியத்துல தான் நான் என் கதைல ஓரளவு டெக்னிக்கல் டெர்ம் வந்தாலும் பரவாயில்லைனு தைரியமா எழுதினேன்...

said...

நல்லாயிருக்கு திவ்யா.. அழகான க(வி)தை, அழகான வர்ணிப்பு..

வழக்கமா உங்க கதையை முதல்ல படிச்சிட்டு தான் நீங்க போட்டிருக்க படங்கள பார்ப்பேன், தனியா..
இதுல தனியா பார்த்தாலும் அழகு, 'மீரா' படங்கள் என்பதால்..

ஹிம், அப்புறம்.. அழகு பதுமை 'மேனகா' யாருனு சொல்லவேயில்ல..? :-D
"எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகமே" இவ்வளவு அழகுன்னா....?? :-)

" நாம நேசிக்கிறவங்களைவிட........நம்மளை நேசிக்கிறவங்க கூடத்தான் வாழ்க்கை இனிக்கும்........."
இது தலைவரோட 'பன்ச்' டயலாக் மாதிரி இருக்கே.. :)

said...

Very nice story and superb dialogues!!!

Anonymous said...

வாவ்! அருமை திவ்யா.. படங்களும் அழகு...மறுபடி படிக்கத் தூண்டும் எழுத்து நடை...மொத்தத்தில் அசத்தல்... பாராட்டுக்கள்...! :-)

said...

திவ்யா,
ஒவ்வொரு வரியும் ரசித்தேன்.

said...

\\\ஜி said...
நன்று திவ்யா... Feel Good Love story... கவிகதாசிரியைய பாராட்ட நமக்கெல்லாம் தகுதி இல்ல... ஸோ.... ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுக்குறேன் :))))
\\

ரைட்டு ;))

அப்புறம் கார் மாதிரியே கதையும் நல்ல ஸ்பீடு ;)

Anonymous said...

கதை இளமைத் துள்ளல்.... எனக்கென்னவோ இது உங்களோட கனவின் சிறுகதை வடிவம்ன்னு தோணுது ;)

said...

முதல்ல உங்களோட எழுத்து நடைக்கு ஒரு சல்யூட் ....

எப்பிடிங்க இப்பிடி எல்லாம் காதல் கதை எழுதுறீங்க ...

மணிரத்னம் சார் சார்ட் பிலிம் எடுத்த மாதிரி இருக்கு....

said...

// "எஸ்கூஸ் மீ" என்று அவன் பின்னாலிருந்து மெல்லிசை போன்ற குரல் கேட்டு திரும்பியவன், ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தான்.

அவளும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது கண்களில் சிறிது கணம் தோன்றிய ஆச்சரிய பார்வை உணர்த்தியது.
அதனை மறைத்தவளாய் தன்னை அறிமுகப்படுத்த துவங்கினாள், //

சூழ்நிலை உருவாக்குறதுல ரமணிச் சந்திரனே உங்க கையில இருக்கிற மாதிரி இருக்கு...

said...

// "ஐ அம் சந்தியா, ஐ ஹேவ் ஜாயிண்ட் அஸ் அ வெரிஃபிக்கேஷன் இஞ்சினியர் இன் யுவர் டீம்"

"யெஸ் ஐ டு நோ..........வெல்கம் டூ அவர் டீம்........சந்........சந்தியா"

"தேங்கியூ" //

//"சந்தியா......."

"........"

" உங்க........உன் .......கிட்ட.....கொஞ்சம் பேசனும்"

என்னவென்பது போல் அவனைப் பார்த்தாள் சந்தியா,

"உன்னை..........இங்க......நான் எதிர்பார்க்கவேயில்லை சந்தியா"

"நானும் தான்...."

"ஸோ.....ஸாரி ......சந்தியா.."

"எதுக்கு?.."

"நீ.........அன்னிக்கு.......காலேஜ்ல.......//


இது மாதிரி நிறைய இடத்துல .... மணிரத்னம் டயலாக் மாதிரி இருக்கு....

said...

கவிதை சொல்லவே வேண்டாம்.... அவ்வளவு அழகு...

// என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன் //

// இத்தனை ஆசை உன்மேல் இருந்தும்
ஏனோ சொல்லத் தெரியவில்லை
என்றாவது என்னை நீ அறிவாய்
என்றே இந்நாள்வரை காத்திருந்தேன்.... //

இரண்டாவது கவிதை ரொம்ப அழகு...

said...

// "சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்னு டயலாக் எல்லாம் விட மாட்டேன்.......உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்" //

எவ்ளோ அழகான டயலாக் ....

மறுபடியும் மறுபடியும் படிக்க தோனுது...

said...

// ரமேஷ் காரின் ட்ரைவர் இருக்கையில் ஏறினான், அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
அமர்ந்தபோது அவன் தோளில் அவள் தோள் இடித்தது.........
கியரைப் பொருத்தியபோது அவன் கை அவள் முழங்காலில் தொட்டு மீண்டது.......

திடீர் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்க்க.........இனிதே அவர்கள் 'வாழ்க்கை' பயணம் தொடங்கியது!!!!!!!! //

கலயாணம் ஆனா பின்னாடி மார்க் போடாம இருந்தா சரி....

said...

// ஜொள்ளுப்பாண்டி said...

திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :))) //

நம்ம ஜொள்ளு சொல்லுறது மாதிரி எங்களுக்கும் கொஞ்ச சொல்லி குடுங்க...

said...

ஆஹா ஆஹா ..மருபடியும் தொடரும் என்று போட்டு விடுவிர்கள் என்று நினத்தேன் நல்ல வேலை தப்பித்தோம் .. மிக அருமைங்க அருமையான் வசனம் மற்றும் படங்கள் ..

வாழ்த்துக்கள்

said...

super divya.........kalakitteenga........eppadi ippadilan????

said...

Feel Good Story!Short Story From Divya master Wow :))

நல்ல கதை,டயலாக்ஸ் எல்லாம் கலக்கல் :))

Anonymous said...

அழகான மெல்லிய காதல் கதை. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இன்னும் இது போல நிறைய எழுத வாழ்த்துக்கள். என் விருப்பமும் கூட.

said...

கடைசியில் காரின் முன் சீட்ட்டில் அமர்ந்து காதலை சொல்வதூ அழகு
தொடருங்க்கள்

said...

மீரா ஜாஸ்மின் படத்தூக்காக உங்களுகு
ஒரு """""ஓ""""" போடலாம்

said...

அச்சச்சோ அக்கா கதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு...!! :))))))))
மத்தபடி எனக்கு சொல்லனும்னு தோணினத எல்லாம் என் அண்ணாஸ் எல்லாரும் சொல்லிட்டாங்க..!! :)) அதுக்கெல்லாம் சேர்த்து பெரிய ரிப்பிட்டே மட்டும் போட்டுக்கறேன்..!! :))

said...

நல்ல காதல் ஒரு கதையை ..
லேட் ஆ வந்து படிச்சிருக்கேன் ...

திவ்யா ...

அருமை..மிக அருமை ...

said...

ஆமா தெரியாம கேட்கிறேன் ..
உண்மையை சொல்லுங்களேன் ...

எங்க போய் ட்ரைனிங் எடுக்குறீங்க ..திவ்யா இத்தனை அழகாக கதை சொல்ல ...

said...

//அவனது 26 வயதிற்கே உரிய ஆர்வ கோளாரில் பெண்ணின் பெயரை பார்ப்பதற்காக ஈ-மெயிலை மறுமுறை படிக்க தொடங்க..//

எதார்த்தமான உண்மை ...
இந்த வரிகள் ...

திவ்யா ...

said...

//ரமேஷ், நான் உங்களை விரும்பினதை உங்க கிட்ட வெளிப்படுத்த எனக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதே அளவு உரிமை அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறதுக்கு உங்களுக்கும் இருக்கு. ஒருத்தரை விரும்புறதும் விரும்பாததும் தனிப்பட்ட இஷடம். நான் உங்களை விரும்பினேன்ற ஒரே காரணத்துக்காக நீங்களும் என்னை காதலிக்கனும்னு அவசியம் இல்லையே......."//



நல்ல வரிகள் ... எதார்த்த வரிகள்...
இது போன்ற வரிகளே ...
இந்த கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது

திவ்யா ...

said...

//என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன்//

கதைக்கு அழகு சேர்க்கும் ...
நல்ல கவிதை ... திவ்யா ...

said...

//எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.//

எப்படி திவ்யா ..இப்படி எல்லாம் ...

கொன்னுட்டீங்க ....Super.....

said...

மொத்தத்தில்... படங்களின் தேர்வும் ...கதையும் ...
மிக மிக அருமை ..
வாழ்த்துக்கள் திவ்யா ...

நல்ல ஒரு கதை படித்த திருப்தியில்.. செல்கிறேன் ...அடுத்த கதை எப்போது என்ற கேள்விகளுடன் ...

said...

Wow...I just loved the story. பாகம் எல்லாம் வைக்காம ஒரே கதைல சுப்பெரா முடிசிட்டிங்க. எனக்கும் கத்து தாங்க எப்பிடி கதை எழுதுறதுன்னு pls!
:) enjoyed it.

said...

\\Blogger ஜொள்ளுப்பாண்டி said...

திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :)))\\

வாங்க ஜொள்ளுப்பாண்டி,

'ஜொள்ளு ஃபார் டம்மிஸ்'னு பதிவெழுதுற உங்களுக்கு, 'காதல்' கதை எழுத கற்றுத்தரும் அளவிற்கு நான் இன்னும் முன்னேறலீங்க பாண்டி:)))

said...

\\Blogger ஜொள்ளுப்பாண்டி said...

//சந்தியா தன் காதலை கவிதையாக
எழுதி ரமேஷிடம் கொடுத்தாள். //

அடடடடடடடா... இந்த காதல் கவிதைக‌
தொல்லை தாங்க முடிலபா...
அதெப்படி திவ்யா உன்னோட‌
ஹீரோயின்க எல்லாம்
ஆ..வூன்னா கவிதை மழை
பொழியறாங்கோ..??? ;)))))\\


ஹீரோயின் மட்டுமில்லையே, நான் எழுதின கதைகளில் ஹீரோவும் கவிதை மழை பொழிஞ்சிருக்காங்களே, நீங்க படிச்சதில்லையா ஜொள்ளுப்பாண்டி??

said...

\\ //சந்தியா தன் காதலை கவிதையாக
எழுதி ரமேஷிடம் கொடுத்தாள். //

அடடடடடடடா... இந்த காதல் கவிதைக‌
தொல்லை தாங்க முடிலபா...
அதெப்படி திவ்யா உன்னோட‌
ஹீரோயின்க எல்லாம்
ஆ..வூன்னா கவிதை மழை
பொழியறாங்கோ..??? ;)))))

9:39 AM
Delete
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

//என் கால்களோ வெட்கத்தால்
தரையில் கோலம் போட்டது //


ஏம்மா இன்னுமா நம்ம
ஹைஹீல்ஸ் பாப்பாக்கள்லாம்
காலிலே கோலம் போடுறவ..??

( கோச்சுக்காதே திவ்யா..
ச்ச்சும்மா லுல்லுல்லாய்..)

கவிதை சூப்பரப்பூ....:))\\


:))

said...

Blogger ஜொள்ளுப்பாண்டி said...

//மேனகாவின் பாசமும், பரிவான பேச்சும்
இவனுக்கு காதலாக தோன்றியிருக்கிறது,
ஆனால் அவளுக்கோ அது நட்பாக மட்டுமே
இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது. //

பாவம் பையன்... இந்தப் பொண்ணுகளே
இப்படித்தான்...சும்மா இருக்கற பையன்கிட்டே
பரிவா பேசறேன் பாசமா இருக்கறேன்னு
அளவுக்கு மீறி குழைய வேண்டியது...
அப்புறம் நட்புன்னு ஆப்பு வைக்க வேண்டியது...
என்ன திவ்யா சரிதானே..?? ;))))
நட்புனாலும் ஒரு லிமிட்டோட பழக‌
என்னிக்குத்தான் கத்துப்பாகளோ...

( இதுக்கு என்கிட்டே சண்டைக்கு
வருவீயளா அம்மணி..?? )\\


நட்பிற்கு லிமிட் ஒவ்வொருத்தர் பார்வையிலும் மாறுபடாலமில்லீங்களா பாண்டி??


நட்பில் பாசம் , அக்கறை, அன்பு இருக்கக்கூடாதா??
அது காதலாக 'மட்டும்' தான் இருக்கவேண்டுமென்பதில்லை ஜொள்ளுப்பாண்டி!


\\அளவுக்கு மீறி குழைய வேண்டியது...\\

பெண் பரிவோடு பேசுவதை , அளவுக்கு மீறி குழைவதுன்னு சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

பாசமா பேசினா எப்படி அதை "பொண்ணு குழையுறா'ன்னு சொல்ல முடியுது உங்களால்????

உங்கள் அளவுகோல் தான் ப்ராப்ளம் சார், குறுகிய நோக்கோடு பார்க்காதீங்க.

உங்க கணிப்பு படி பார்த்தா, ஒரு பெண் எந்த ஆணிடமும் நட்பாக, பாசமாக, பரிவுடன் பேசவே கூடாது என்பது போல் இருக்கிறது.

said...

\\Blogger ஜொள்ளுப்பாண்டி said...

//அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில்
அவளைப் பார்த்தபோது ரமேஷ்
தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான். //

ஏன் திவ்யா.. ஒருவேளை பயலுக்கு
சாப்ட்ட காபி ஒத்துக்கலையோ
என்னவோ..?? :))))))))

( பாண்டி உனக்கு திவ்யா கிட்டே
இருந்து ' டின்' னு தாண்டி... )\\\


டைமிங் கிண்டலுக்கெல்லாம் நான் ஏன் சார் உங்களுக்கு டின் கட்டப்போறேன்:-)))

உங்கள் கிண்டலை ரசித்தேன்!!

said...

\\Blogger ஜொள்ளுப்பாண்டி said...

// உதடுகள் முழுவதும் மூடிவிடாமல்
ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது//

அட்றா சக்கை....
அட்றா சக்கை....
அட்றா சக்கை....

நல்லாத்தேன் இருக்கும்... ;))))\\


:))

said...

\\Blogger ஜொள்ளுப்பாண்டி said...

ஆனால் மொத்ததில்
ஒரு அழகான காதல் கதையை
தன்னோட அருமையான நடையில்
தந்திருக்கும் திவ்யாவுக்கு
என் வாழ்த்துக்கள் !! :)))\\


உங்கள் வாழ்த்துக்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி ஜொள்ளுப்பாண்டி!!!

said...

\\Blogger gils said...

enga..neria part podreengannu oatromntu ipdi ela partaiyum oray postla poata matum utruvoma :D\\


ஆமாம் கில்ஸ், தொடர் கதை எழுதி ரொம்ப கஷ்டப்படுத்துறேன்னு ரொம்ப புகார் வந்துடுச்சு,
அதுனாலதான் , பெருங்கதையா எழுதி எல்லாரையும் பயமுறுத்தலாம், அப்போதான் " அம்மா தாயே நீ, தொடர்கதையே எழுது பார்ட் பார்டா," அப்படின்னு எல்லாரும் வழிக்கு வருவாங்க!!



\\anyway..kathai ponathay terla..semma flow..conversation modela irunthathala..lengthay therila..\\

மிக்க நன்றி!!


\\and morever..enaku meera jasmine pesinathum prasanna atha kekarathumavay picture odicha aluputhatavayla..semma technique divs..pic podarathu..and semma cute writeup again.\\


ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் கில்ஸ்!!


\\.hey ithey mari themela naan onu yosichitrunthen..saria athaye neengalum potutenga.. :)\\

அட.......அப்படியா??
நீங்க யோசிச்சு வைச்சிருந்ததுக்கு காபிரைட் எல்லாம் ஏதும் இல்லையே??

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கில்ஸ்!!!

said...

\\Blogger ஆயில்யன் said...

//ஜொள்ளுப்பாண்டி said...
திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :)))
//

ம்ம்ம்ம்!

வேற என்ன சொல்றது?

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்தான்:)\\


ம்ம்ம்ம்!

வேற என்ன சொல்றது?

ரைட்டேய்ய்ய்ய்ய்ய்தான்:)

said...

\\Anonymous arul malar said...

hi divs!
read the story!!
super dialogue!!!!!!\\



வாங்க அருள் மலர்!!!

கதையை ரசித்ததிற்கு மிக்க நன்றி!!!

டயலாக்ஸ் பிடிச்சிருந்ததா மலருக்கு??

மீண்டும் வருக!!

said...

\\Blogger ஆயில்யன் said...

//எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.//

முதன் முறையாக இப்படி ஒரு வர்ணிப்பினை பார்க்கிறேன் :)))\\


அப்படியா??
இதுக்கு முன் இப்படி வர்ணனை பார்த்ததில்லையா??

said...

\\Blogger ஆயில்யன் said...

////உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்////

ரொம்பவே ரசித்தேன்!

இன்னும் வாழ்க்கை இருக்குன்னு சொல்றீங்க ரைட்டு :)))\\


உங்கள் ரசிப்பினை பகிர்ந்துக்கொண்டதிற்கு மிக்க நன்றி ஆயில்யன்!!!

said...

\\Blogger ஆயில்யன் said...

//நாம நேசிக்கிறவங்களைவிட........நம்மளை நேசிக்கிறவங்க கூடத்தான் வாழ்க்கை இனிக்கும்........."//

அட! ஜூப்பரூ!\\


உங்கள் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி ஆயில்யன்!!

said...

\\Blogger எம்.ரிஷான் ஷெரீப் said...

அழகான காதல் கதை.
அழகான நடை.
அழகான படங்கள்.
ஒவ்வொரு முறையும் ஆச்சரியம் கொள்ளவைக்கிறீர்கள் திவ்யா..!\\


வாங்க ரிஷான்,

உங்கள் தொடர் வருகைக்கும், உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!!!

said...

\\ Saravana Kumar MSK said...
கலக்கீடீங்க.. வழக்கம் போல..
\\


வாங்க சரவணகுமார்:)

நன்றி!

said...

\\ Saravana Kumar MSK said...
//ஜொள்ளுப்பாண்டி said...
திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :)))//

திவ்யா.. எனக்கும்.. எனக்கும்...
:))\\


நீங்களுமா:(

said...

\\ Saravana Kumar MSK said...
//"அப்பிளிக்கேஷன்.........உன்கிட்ட கொடுக்கனுமா..........உன் அப்பாகிட்ட கொடுக்கனுமா........"//

நோட் பண்ணிக்கிட்டேன்.. மைன்டில வச்சிக்கிறேன்..
:))\\


இதெல்லாம் கரெக்ட்டா நோட் பண்ணிப்பீங்களே:))

பயன்பட்டா சரிதான்!!

said...

\ Saravana Kumar MSK said...
//காருக்கு அருகில் இருவரும் சென்றதும், தவிப்புடன் ரமேஷ் அவளை நோக்க.........

சந்தியா கண்சிமிட்டிவிட்டு காரின் முன் கதவை திறந்தாள்......!!

"சந்தியா..........."

"இனிமே இந்த இடத்தை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்"

சந்தோஷத்தில் ரமேஷிற்கு வார்த்தைகள் வரவில்லை........அங்கு வார்த்தைகளுக்கு அவசியமுமில்லையே!!//

பின்னீட்டீங்க..\\



நன்றி!!!

said...

\\ Saravana Kumar MSK said...
ஒரே நாளின் மாலையிலே இந்த கதை நாயகனுக்கு காதல் கிடைத்து விட்டதே..

கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு.. லைட்டா..\\


அடடா.....இப்படி லைட்டா, ஸ்ட்ராங்கா எல்லாம் பொறாமை படக்கூடாது சரவணன்:))

ரமேஷ்காச்சும் ஒரே நாளில் காதல் தேடி வந்துச்சேன்னு சந்தோஷப்பட்டுக்கனும்!

said...

\ Saravana Kumar MSK said...
மொத்தத்தில் கதை அருமையோ அருமை..
வாழ்க..
\\


வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சரவணன்!!

said...

\\ வெட்டிப்பயல் said...
//ஜொள்ளுப்பாண்டி said...

திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :)))//

ரிப்பீட்டே :)\\


குருவே நீங்களுமா??



\\டயலாக்ஸ் எல்லாம் சூப்பர் :)\\

பாராட்டிற்கு நன்றி அண்ணா!!

said...

\ Murugs said...
இய‌ல்பான‌ க‌தை போக்கு. ரொம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌. :)\\


உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி முருக்ஸ்!!!

said...

\ Murugs said...
எப்ப‌டி தான் க‌தை யோசிக்க‌றீங்க‌ளோ? நானும் அடுத்த‌ ப‌குதியை சீக்கிர‌மா வெளியிட‌றேன். :)\\


:))


சீக்கிரம் உங்கள் தொடரின் அடுத்த பகுதியை வெளியிடுங்க முருக்ஸ்!!!

said...

\\ கப்பி | Kappi said...
வழக்கம் போல நல்ல கதை! ஜாலியான வசனங்கள்! கலக்கல்ஸ்!!\\


வாங்க கப்பி!!

உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!!



\\அதுலயும் இந்த கதைக்கு பொருத்தமா தலைவி படங்கள் ஜூப்பரு :))\\


மீரா ஜாஸ்மின் ரசிகர் மன்ற தலைவர் ரேஞ்சுக்கு குரல் கொடுக்கிறீங்க:)))

said...

\ G3 said...
:)))))))))))))))))))))))\\


நீண்ட நாட்களுக்கு பின் என் பதிவிற்கு வந்திருக்கிறீங்க ஜி3, மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன்!!

மிக்க நன்றி, மீண்டும் வருக!!!

said...

\\ நிமல்/NiMaL said...
திவ்யா கதை ஹீரோயின் எல்லாம் திவ்யா மாதிரி கவிதையா எழுதுறாங்க... ;)

கதையும் கவிதையும் சூப்பர்...
கலக்கிட்டீங்க..!!!\\



வாங்க நிமல்,

உங்கள் தொடர் வருகைக்கும்,
மனம்திறந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி நிமல்!!!

said...

\\ sathish said...
//எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.
//

நல்லா இருக்குங்கோ!\\


ரொம்ப நன்றிங்கோ!

said...

\\ sathish said...
புகைபடங்கள் அருமை ஆனா ஒரே பகுதியா முடித்து மேலும் படங்கள் போடாமல் போவதை கண்டிக்கிறேன் :))))\\


உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சதீஷ்!!!

said...

\\ Daksy said...
ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌. :)\\


உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!!

said...

\\ விஜய் said...
ஆஹா காலங்கார்த்தால இப்படியொரு காதல் கதையை படிச்சுட்டு வேலையத் தொடங்க எவ்வளவு நல்ல இருக்கு?
அதிலும் கரெக்டருக்கு ஏற்ற மாதிரி ஃபோடொ செலக்ஷன் சூப்பர். நீங்க எப்படி பாட்டுக்கு மெட்டுக்கு பாடெழுதுவீங்களா அல்லது பட்டுக்கு மெட்டு போடுவீங்களா. ஐ ஆம் சாரி. கதைக்கு படம் தேடுவீங்களா இல்லை, படத்தை வச்சு கதை எழுதுவீங்களா? சரி இதெல்லாம் வியாபார ரகசியம். இருந்துட்டுப் போகட்டும்.\\



வாங்க விஜய்,

சிறுகதைன்ற பேர்ல நான் எழுதின பெருங்கதை முழுவதையுமாய் பொறுமையுடன் படித்ததே பெரிய விஷயம்....அதிலும் நேரம் எடுத்து விரிவான பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க, மனமார்ந்த நன்றி!!


கதை எழுதிட்டுதான் நான் படம் தேடுவேன், பொறுத்தமான படங்கள் அமைவது எனக்கே சில சமயம் ஆச்சரியம் கலந்த சந்தோஷமாக இருக்கும்!!




\\\மென்பொருள் நிறுவனம்'னாலே புரோகிராமர்னு தான் எல்லாரும் சொல்லுவாங்க. ரோஜா முதல் 'யாரடி நீ மோஹினி' வரை இதே பதவி தான்.
Verification Engineer என்று சொல்லிருப்பது நல்லா இருக்கு.\\



குறிப்பிட்டு இதனை பாராட்டியதற்கு நன்றி விஜய்!!





\\அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில் அவளைப் பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.
எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.\\

இந்த வரிகளுக்குப் பக்கத்தில் மீரா ஜாஸ்மினின் spotless face. Literally amazing. Not her face. But your presence of mind to put the photo next to these lines :)\\




உங்கள் மனம்திறந்த பாராட்டு உற்சாகமளித்தது விஜய், மிக்க நன்றி!!

said...

\\ எழில்பாரதி said...
திவ்யா!!!!

சூப்பர்....... அருமையோ அருமை!!!!\\


வாங்க எழில்பாரதி!!

உங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி!!

said...

\\ Sen22 said...
கதை சூப்பரு...
நல்ல ஒரு காதல கதை..

realy i enjoyed....


Keep Rocking...\\



வாங்க செந்தில்,

நீண்ட நாட்களுக்கு பின் வந்திருக்கிறீங்க,
வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி!!


மீண்டும் வருக!!!

said...

\\ priyamanaval said...
திவ்யா... கண்டதும் காதல் பாணியில் இருந்து மாறுபட்ட நல்ல கதை. வாழ்கையில் எதார்த்தமாக நடக்கும் விதமாக அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள்.
\\


வாங்க ப்ரியா,

உங்கள் கருத்தினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ப்ரியா!!

மீண்டும் வருக!!

said...

\\ Thamizhmaangani said...
அட ஒரே பாகத்தில் கதையை முடித்துவிட்டீர்கள்!! சந்தோஷ கலந்த ஒரு பெருமூச்சு விட்டேன்.\\


ஹப்பாட......ஒருவழியா கதை ஒரு பகுதிலயே முடிஞ்சுடுச்சுன்னு பெருமூச்சு விட்டீங்களா காயத்ரி????


\\ i still miss divz's long episodes! இருந்தாலும், ஒரே பாகத்தில் முடித்து, என்னை குஷிப்படுத்திவிட்டீர்கள்!\\


அச்சோ....என் தொடர்கதை படிச்சு ரொம்ப நொந்துபோயிருப்பீங்க போலிருக்குதே??
இப்போ சந்தோஷமா காயத்ரி:))



\\வழக்கம்போல வசனங்கள் சூப்பர்!! \\


நன்றி!! நன்றி!!



//அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில் அவளைப் பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.
எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.//

டாப்பு டக்கர்!!:))\\\\


ரொம்ப நன்றி உற்சாகமளிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு!!

said...

நேர்த்தியான படங்களுடன் அழகான க(வி)தை. வாழ்த்துக்கள் மாஸ்டர்!

said...

வழக்கம்போல் எல்லாம் சூப்பர்!
:)

said...

அம்மா தாயே.. மூச்சி வாங்குது.. கதையை கொஞ்சம் சின்னதா எழுதப் படாதா?.. ரொமாண்டிக்கா கதை சொல்றதுல உன்னை அடிச்சிக்க ஆளே கிடையாது... :)

எப்டிதான் காட்சிக்கு ஏற்ற படங்களை பிடிக்கறையோ.. சூப்பர்ப் ஊர்ஸ்.. :)

said...

காயத்ரி உன் கதைகளை படிக்கிறதாலவோ என்னவோ.. அவளும் ரொமாண்டிக் கதைகள் எழுதும் போது பின்னி எடுக்கிறா.. ஹ்ம்ம்ம்.. என் தங்கச்சின்னா சும்மாவா? :))

said...

திவ்யா...
கதை super..... :)

said...

ஆயில்யன் said...
////உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்////

//ரொம்பவே ரசித்தேன்!

இன்னும் வாழ்க்கை இருக்குன்னு சொல்றீங்க ரைட்டு :)))///

ரிபீட்டேய்.... :)

said...

Ennoda commenta mattum uthaaseena paduthuna Divyavai kanda menikku kanna pinnavaaga kandikkiren...

[Note the point: naan smiley podala... so kovama pottennuthaan eduththukanum... ]

said...

\\ ஜி said...
Ennoda commenta mattum uthaaseena paduthuna Divyavai kanda menikku kanna pinnavaaga kandikkiren...

[Note the point: naan smiley podala... so kovama pottennuthaan eduththukanum... ]\\

ஸோ....ஸோ ஸாரி ஜி:(

தவறுதலாக உங்கள் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க மறந்துவிட்டேன்,
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!!

said...

\\ ஜி said...
நன்று திவ்யா... Feel Good Love story... \\



மிக்க நன்றி ஜி!!



\\கவிகதாசிரியைய பாராட்ட நமக்கெல்லாம் தகுதி இல்ல... ஸோ.... ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுக்குறேன் :))))\\


இதன் பெயர்தான் தன்னடக்கமோ???

said...

//Divya said...

Blogger ஜொள்ளுப்பாண்டி said...

//மேனகாவின் பாசமும், பரிவான பேச்சும்
இவனுக்கு காதலாக தோன்றியிருக்கிறது,
ஆனால் அவளுக்கோ அது நட்பாக மட்டுமே
இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது. //

பாவம் பையன்... இந்தப் பொண்ணுகளே
இப்படித்தான்...சும்மா இருக்கற பையன்கிட்டே
பரிவா பேசறேன் பாசமா இருக்கறேன்னு
அளவுக்கு மீறி குழைய வேண்டியது...
அப்புறம் நட்புன்னு ஆப்பு வைக்க வேண்டியது...
என்ன திவ்யா சரிதானே..?? ;))))
நட்புனாலும் ஒரு லிமிட்டோட பழக‌
என்னிக்குத்தான் கத்துப்பாகளோ...

( இதுக்கு என்கிட்டே சண்டைக்கு
வருவீயளா அம்மணி..?? )\\


நட்பிற்கு லிமிட் ஒவ்வொருத்தர் பார்வையிலும் மாறுபடாலமில்லீங்களா பாண்டி??//

அட்ற சக்கை.. இதுதான் இதுதான் அம்மணி உங்க கிட்டே இருந்து எதிர்பார்க்கறோம்.. :)))


// நட்பில் பாசம் , அக்கறை, அன்பு இருக்கக்கூடாதா??
அது காதலாக 'மட்டும்' தான் இருக்கவேண்டுமென்பதில்லை ஜொள்ளுப்பாண்டி! //

நெம்பத்தெளிவாத்தேன் பேசறீய...
ஆனா உங்களுக்கு இருக்கற 'தெளிவு' நல்லாதான் இருக்கு... கேட்கறதுக்கு.. பாசம் வாங்குறவுகளுக்கு இது இருக்குங்களா அம்மணீ..?? ;)))
நீங்க காட்டறது நட்பு, பாசம், அக்கறைனு 'அல்வா' கொடுகறீயன்னு வாய்நெறையா அல்வா வாங்குன பையனுக பொலம்புறாவளே...



\\அளவுக்கு மீறி குழைய வேண்டியது...\\

பெண் பரிவோடு பேசுவதை , அளவுக்கு மீறி குழைவதுன்னு சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

பாசமா பேசினா எப்படி அதை "பொண்ணு குழையுறா'ன்னு சொல்ல முடியுது உங்களால்???? //

அட பொண்ணு குழையறான்னு நானாமா சொல்லறேன்..? பொண்ணுகிட்டே பேசுனவதானே சொல்லி ஒப்பாறி வக்கிறானுவ..??? ஏன் அப்படி ஆரம்பத்திலே இருந்தே குழையனும், கவுந்த பயலுவளுக்கு பட்டைய குழைச்சு சாத்தணும்..??

// உங்கள் அளவுகோல் தான் ப்ராப்ளம் சார், குறுகிய நோக்கோடு பார்க்காதீங்க. //

ஓஓஓ நீங்க சொல்லறது Broad minded fellow வா இருக்கனும்..? பழகற பொண்ணு ஒரு அளவுகோல் இல்லாம பழகறதால வர்ற பிரச்சனைகளைதான் நான் சொல்றேன்.. எங்க இருந்துங்க அம்மணி 'குறுகிய நோக்கு' ன்னு ஒரு அழகான 'அல்வா' வார்த்தைய கண்டு பிடிச்சீங்க...?? :)))))
இப்படி வார்த்தையிலேயே 'அல்வா'கிண்டி கிண்டி தானே எல்லா பயலுவளும் வாயத் தொறக்க முடியாம அலையறானுவ..?? ;))))

//உங்க கணிப்பு படி பார்த்தா, ஒரு பெண் எந்த ஆணிடமும் நட்பாக, பாசமாக, பரிவுடன் பேசவே கூடாது என்பது போல் இருக்கிறது.//

அட எப்படி மேடம் நான் சொல்ல வந்ததை 'ரொம்ப சரியா ' "தப்பா" புரிஞ்சுக்கறீங்க..?? பேசுங்கம்மா... யாரு வேணாங்கறது...? பாசத்தாலயும் நேசத்தாலயும் புல்லரிக்க வைக்கிறீய அம்மணி... !! :))))

said...

JP potta bathil commentukkellaam naanum oru repeatu pottukuren ;))))

said...

\\ ஆனந்த் குமார் said...
கதை சூப்பர்.

என்னடா ஹீரோ ப்ராஜெக்ட் லீடர்,காரில போறான்னு ஓவர் பில்டப்பா இருக்கேன்னு பாத்தேன்.கடைசில காரை வச்சு ஒரு
பன்ச் கொடுத்துட்டீங்க.
//"இனிமே இந்த இடத்தை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்"//

கலக்குங்க :)))\\


வாங்க ஆனந்த் குமார்,

உங்கள் முதல் வருகைக்கு நன்றி!!

கதையை ரசித்து பாராடியதிற்கு மற்றொமொரு நன்றி!!

மீண்டும் வருக!!!

said...

\\ Divyapriya said...
உங்க கதை climax படிக்கும் போது மெளனம் சம்மதம் படம் தான் நியாபகம் வந்துச்சு…\\

வாங்க திவ்யப்ரியா!!

வருகைக்கு நன்றி:)


\\கதை நல்லா இருந்தது திவ்யா…என்ன ஒரு பகுதிலயே முடிச்சுட்டீங்க?\

ஒரே பகுதியில் ஒரு முழுக்கதையும் எழுதனும்னு ஆசைப்பட்டேன்....அதான் ஒரு பகுதிலயே கதை முடிச்சாச்சு:))



\\அடுத்த திவ்யா ஸ்பெஷல் தொடர் கதை எப்போ?\\

இப்போதிக்கு 'தொடர்' கதை எழுதும் எண்ணமில்லை திவ்யப்ரியா.

said...

\\ நாடோடி said...
நல்லாயிருக்கு திவ்யா.. அழகான க(வி)தை, அழகான வர்ணிப்பு..\\


வாங்க நாடோடி,

உங்கள் தவறாத வருகைக்கும், ஊக்கமளிக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!


\\வழக்கமா உங்க கதையை முதல்ல படிச்சிட்டு தான் நீங்க போட்டிருக்க படங்கள பார்ப்பேன், தனியா..
இதுல தனியா பார்த்தாலும் அழகு, 'மீரா' படங்கள் என்பதால்..\\


:)))


\ஹிம், அப்புறம்.. அழகு பதுமை 'மேனகா' யாருனு சொல்லவேயில்ல..? :-D\\


அந்த கதாபாத்திரத்திற்கு படங்கள் எதுவும் போடவேண்டும் என தோன்றவில்லை :))




\\"எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகமே" இவ்வளவு அழகுன்னா....?? :-)\\


:)))


\\\" நாம நேசிக்கிறவங்களைவிட........நம்மளை நேசிக்கிறவங்க கூடத்தான் வாழ்க்கை இனிக்கும்........."
இது தலைவரோட 'பன்ச்' டயலாக் மாதிரி இருக்கே.. :)\


பன்ச் டயலாக்கா??
யாரூ உங்க தலைவர்???

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நாடோடி!!!

said...

\\ Kumiththa said...
Very nice story and superb dialogues!!!
\\


வாங்க குமித்தா,

நலமா??

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி!!!

said...

\\ இனியவள் புனிதா said...
வாவ்! அருமை திவ்யா.. படங்களும் அழகு...மறுபடி படிக்கத் தூண்டும் எழுத்து நடை...மொத்தத்தில் அசத்தல்... பாராட்டுக்கள்...! :-)\\



வாங்க புனிதா,
உங்கள் மனம்திறந்த பாராட்டுக்கள் உற்சாகமளித்தது, மிக்க நன்றி புனிதா!!!

said...

\\ முகுந்தன் said...
திவ்யா,
ஒவ்வொரு வரியும் ரசித்தேன்.\\


வாங்க முகுந்தன்,

உங்கள் அழகான ரசிப்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்:)))

said...

\\ கோபிநாத் said...
\\\ஜி said...
நன்று திவ்யா... Feel Good Love story... கவிகதாசிரியைய பாராட்ட நமக்கெல்லாம் தகுதி இல்ல... ஸோ.... ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுக்குறேன் :))))
\\

ரைட்டு ;))

அப்புறம் கார் மாதிரியே கதையும் நல்ல ஸ்பீடு ;)\\


வாங்க கோபிநாத்,

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!

said...

\\ சேவியர் said...
கதை இளமைத் துள்ளல்.... எனக்கென்னவோ இது உங்களோட கனவின் சிறுகதை வடிவம்ன்னு தோணுது ;)\\


வாங்க சேவியர்,

இது கனவு சிறுகதை[?] அல்ல......கற்பனை கதை:)))

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

said...

//யாரூ உங்க தலைவர்???//
'பன்ச் டயலாக்'னு சொல்லியும், தலைவர் 'யாரூ'னு கேட்டுக் காயப்படுத்திட்டீங்களே!! :)
தலைவர்னா ஒருத்தர் தாங்க, மத்தவங்களெல்லாம் வெறும் 'தல(ள)' தான் :D

//பன்ச் டயலாக்கா??//
தலைவர் தான் ஒரு படத்துல, "நாம நேசிக்கிறவங்கள கட்டிக்கிறத விட, நம்மளை நேசிக்கிறவங்கள கல்யானம் பண்ணிகிட்டா வாழ்க்கை நல்லாயிருக்கும்"னு சொல்லிருக்காரு..

ஆனா இன்னொரு படத்துல, "நம்மளை நேசிக்கிறவங்கள விட நாம நேசிக்கிறவங்களை கல்யானம் பண்ணிகிட்டா நம்ம வாழ்க்கை நல்லாயிருக்கும்"னு சொல்லிருக்காரு.. :))

மொத்ததுல எத பண்றதுன்னு சொல்லல.. :)

//இப்போதிக்கு 'தொடர்' கதை எழுதும் எண்ணமில்லை திவ்யப்ரியா//
ஏங்க, மறுபடியும் busy ஆகிட்டீங்களா??

Anonymous said...

Imsai arasi........lovable story writer....

ManasukulMaththaapu..... ஏன் திவ்யா உங்களுக்கு கும்மி ஜாஸ்த்தியா இருக்கு டிப்ஸ் ராணி………….divyavuku neraya fans

Rayal ram ----------avaroda name polave writing also so royal……….yarum minjamudiyathu………(ENNODA VOTE RAMKU THAAN)

CVR..the great scientist ……….ivar kitta enna topic kuduthalum ஆராய்ச்சி pannuvar……..simplycvr sollitu English words in his blogspot ellam so standard

Santhoshpakkangal---------------Courageous fellow………..

Kusumban…………..kusumbu iruthalum athil oru அர்த்தம் irukum

Nejama nallavan--------romba nallavarpa……………..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…….(yaru sirikurathu nejama thaan)

Pakkathamilan………..original மொக்கை மன்னன்

G3………….pasamalar ….pasakara pulla

Gops…………..good writeer

Kappi paya………..konjam nakkal…..neriya karuthu

Nammakal sibi…………….HE IS A NAKKAL NAYANDI SIBI

KODUMAI USHA ………..Comedy queen

G…………….different thinking ……his words ………chance illa ivara mathiri yosikurathuku……..veyilil oru mazai ipadi yaravathu yosicheengala

Naveen prakash………..kaathal mannan….avaroda poems sonnenpa

Ragavan……..pakkathaan appavi pulla but eluthula irangitaanganu vainga ……….pls complete pannikonga

Aambi………..good joker

Aabi appa………….all rounder

said...

அருமையான வருணனை. தெளிந்த நிறோடையை போன்ற வாசகம். பிரம்மாதம்.சுஜாதா ஊடைய எழுத்தை வசிப்பது போல் இருதது

said...

Enunga madam.. No updates... ethavathu oru kathaiya podurathu :)))

said...

// ஜி said...
Enunga madam.. No updates... ethavathu oru kathaiya podurathu :)))//

அதானே..
:))

பதிவ போடுங்க.. :)

said...

ஹலோ திவ்யா எங்கெங்க ரொம்ப நாள ஆளை காணவில்லை ...

busy ya :)

said...

Hmmm ..short n sweet !!!!

said...

பல நாட்களுக்கு பிறகு திவ்யாவின் கலர்புல் உரையாடல்களுடன் ஒரு காதல்கதை...

கலக்கல் மாஸ்டர்...!

said...

ஜொள்ளுப்பாண்டி said...
\
திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :)))
\

ரிப்பீட்டு...:)

எனக்கும் சொல்லிக்குடுங்க மாஸ்டர்...

said...

எப்படிங்க இப்படி உரையாடல்களை எழுத முடியுது. நானெல்லாம் தலைகீழா நின்னாலும் வரமாட்டேங்குது... :)

said...

அடக்கப்பட்ட வெளிச்சத்தில் \கைகெட்டும் தூரத்தில் அவளைப்
பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.
எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.

\
சூப்பர்ப்...!!!

ரொம்ப ரசனையான வரிகள்...

திவ்யா...

said...

கலக்கல் ஸடோரி மாஸ்டர்...!

said...

திவ்யா என்னாச்சு புதிய பதிவை காணவில்லையே ??????

எனது வலை தளத்தில் உங்கள் வலைத்தளமுகவரியை இணைத்துள்ளேன் ..

அன்புடன்
விஷ்ணு ...

said...

வழக்கம் போலவே சூப்பர் திவ்யா. அடுத்த கதை எப்ப‌ங்க‌

said...

\\ J J Reegan said...
முதல்ல உங்களோட எழுத்து நடைக்கு ஒரு சல்யூட் ....

எப்பிடிங்க இப்பிடி எல்லாம் காதல் கதை எழுதுறீங்க ...

மணிரத்னம் சார் சார்ட் பிலிம் எடுத்த மாதிரி இருக்கு....\\


வாங்க ரீகன்,

உங்கள் தொடர் வருகையும், மனம்திறந்த பாராட்டும் மகிழ்ச்சியளிக்கிறது, நன்றி ரீகன்!!

said...

\\ J J Reegan said...
// "எஸ்கூஸ் மீ" என்று அவன் பின்னாலிருந்து மெல்லிசை போன்ற குரல் கேட்டு திரும்பியவன், ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தான்.

அவளும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது கண்களில் சிறிது கணம் தோன்றிய ஆச்சரிய பார்வை உணர்த்தியது.
அதனை மறைத்தவளாய் தன்னை அறிமுகப்படுத்த துவங்கினாள், //

சூழ்நிலை உருவாக்குறதுல ரமணிச் சந்திரனே உங்க கையில இருக்கிற மாதிரி இருக்கு...\\


ரமணிச் சந்திரனின் எழுத்துக்களுக்கு நான் ஒரு விசிறி...அவர்களுடன் ஒப்பிட்டுவது மிகையான புகழ்ச்சி:)))
எனினும் மனதுக்கு உற்சாகமளித்தது ரீகன்!!

said...

@ ரீகன்

\இது மாதிரி நிறைய இடத்துல .... மணிரத்னம் டயலாக் மாதிரி இருக்கு....\


ஆஹா......கரெக்ட்டா குறிப்பிட்டு சொல்லியிருக்கிறீங்க:)))

ஓரிரு வார்த்தைகளில் உரையாடலை நகர்த்தி பார்க்கும் என் முயற்சியை துள்ளியமா கண்டுபிடிச்சிருக்கிறீங்க ரீகன்:))

said...

\\ J J Reegan said...
கவிதை சொல்லவே வேண்டாம்.... அவ்வளவு அழகு...

// என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன் //

// இத்தனை ஆசை உன்மேல் இருந்தும்
ஏனோ சொல்லத் தெரியவில்லை
என்றாவது என்னை நீ அறிவாய்
என்றே இந்நாள்வரை காத்திருந்தேன்.... //

இரண்டாவது கவிதை ரொம்ப அழகு...\\



நன்றி ரீகன்!!

said...

\\ J J Reegan said...
// "சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்னு டயலாக் எல்லாம் விட மாட்டேன்.......உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்" //

எவ்ளோ அழகான டயலாக் ....

மறுபடியும் மறுபடியும் படிக்க தோனுது...\\


மறுபடியும் மறுபடியும் படித்து ரசித்த உங்கள் ரசனைக்கு நன்றி!!!

said...

\\ J J Reegan said...
// ரமேஷ் காரின் ட்ரைவர் இருக்கையில் ஏறினான், அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
அமர்ந்தபோது அவன் தோளில் அவள் தோள் இடித்தது.........
கியரைப் பொருத்தியபோது அவன் கை அவள் முழங்காலில் தொட்டு மீண்டது.......

திடீர் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்க்க.........இனிதே அவர்கள் 'வாழ்க்கை' பயணம் தொடங்கியது!!!!!!!! //

கலயாணம் ஆனா பின்னாடி மார்க் போடாம இருந்தா சரி....\\


:)))

said...

\\ J J Reegan said...
// ஜொள்ளுப்பாண்டி said...

திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :))) //

நம்ம ஜொள்ளு சொல்லுறது மாதிரி எங்களுக்கும் கொஞ்ச சொல்லி குடுங்க...\\


கண்டிப்பா:)))

உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி ரீகன்!!

said...

\\ Prabakar Samiyappan said...
ஆஹா ஆஹா ..மருபடியும் தொடரும் என்று போட்டு விடுவிர்கள் என்று நினத்தேன் நல்ல வேலை தப்பித்தோம் .. மிக அருமைங்க அருமையான் வசனம் மற்றும் படங்கள் ..

வாழ்த்துக்கள்\\


வாங்க ப்ரபாஹர்,

தொடர் கதைன்னு நினைச்சு பயந்துட்டே படிச்சீங்களா??

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!!

said...

\ anbudan vaalu said...
super divya.........kalakitteenga........eppadi ippadilan????\

வாங்க anbudan vaalu ,

உங்கள் வருகைக்கும் பின்னூட்ட பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!

said...

\\ Ramya Ramani said...
Feel Good Story!Short Story From Divya master Wow :))

நல்ல கதை,டயலாக்ஸ் எல்லாம் கலக்கல் :))\\


வாங்க ரம்யா,

டயலாக்ஸ் ரசிச்சீங்களா??

உங்கள் பாராட்டிற்கு நன்றி ரம்யா!!

said...

\\ ஸ்ரீ said...
அழகான மெல்லிய காதல் கதை. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இன்னும் இது போல நிறைய எழுத வாழ்த்துக்கள். என் விருப்பமும் கூட.\\


வாங்க ஸ்ரீ,

உங்கள் விருப்பத்தையும் வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தியமைக்கு நன்றி!!

said...

hey divya, sorry romba naal kazhichu varen, yet again a nice story! :) Romance thavira vera edhavadhu kaivasam vachirukeengala? Irundha engaluku konjam tharardhu :D

said...

\\ பிரபு said...
கடைசியில் காரின் முன் சீட்ட்டில் அமர்ந்து காதலை சொல்வதூ அழகு
தொடருங்க்கள்\\


வாங்க பிரபு,

உங்கள் உற்சாகமளிக்கும் பின்னூட்டத்துடன்.....நிச்சயம் தொடருகிறேன்:))

வருகைக்கு நன்றி பிரபு!!

said...

\\ பிரபு said...
மீரா ஜாஸ்மின் படத்தூக்காக உங்களுகு
ஒரு """""ஓ""""" போடலாம்\\


:)))

said...

\\ Sri said...
அச்சச்சோ அக்கா கதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு...!! :))))))))
மத்தபடி எனக்கு சொல்லனும்னு தோணினத எல்லாம் என் அண்ணாஸ் எல்லாரும் சொல்லிட்டாங்க..!! :)) அதுக்கெல்லாம் சேர்த்து பெரிய ரிப்பிட்டே மட்டும் போட்டுக்கறேன்..!! :))\\


வாங்க ஸ்ரீ,

உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கு நன்றி ஸ்ரீ!

மீண்டும் வருக!!!

said...

\\ Vishnu... said...
நல்ல காதல் ஒரு கதையை ..
லேட் ஆ வந்து படிச்சிருக்கேன் ...

திவ்யா ...

அருமை..மிக அருமை ...\\


வாங்க விஷ்னு,

உங்கள் வருகைகும் பாராட்டிற்கும் நன்றி!!

said...

\\ Vishnu... said...
ஆமா தெரியாம கேட்கிறேன் ..
உண்மையை சொல்லுங்களேன் ...

எங்க போய் ட்ரைனிங் எடுக்குறீங்க ..திவ்யா இத்தனை அழகாக கதை சொல்ல ...\\


அச்சோ சொன்னா நம்புங்க விஷ்னு,
நான் ட்ரெயினிங் எல்லாம் எடுத்துக்கலீங்க,
என் கற்பனையில் தோன்றுவதை எழுதுகிறேன்....அவ்வளவுதான்:)

said...

\\ Vishnu... said...
//அவனது 26 வயதிற்கே உரிய ஆர்வ கோளாரில் பெண்ணின் பெயரை பார்ப்பதற்காக ஈ-மெயிலை மறுமுறை படிக்க தொடங்க..//

எதார்த்தமான உண்மை ...
இந்த வரிகள் ...

திவ்யா ...\\


அப்படியா விஷ்னு??
நீங்க சொன்னா சரிதான்:)

said...

\\ Vishnu... said...
//ரமேஷ், நான் உங்களை விரும்பினதை உங்க கிட்ட வெளிப்படுத்த எனக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதே அளவு உரிமை அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறதுக்கு உங்களுக்கும் இருக்கு. ஒருத்தரை விரும்புறதும் விரும்பாததும் தனிப்பட்ட இஷடம். நான் உங்களை விரும்பினேன்ற ஒரே காரணத்துக்காக நீங்களும் என்னை காதலிக்கனும்னு அவசியம் இல்லையே......."//



நல்ல வரிகள் ... எதார்த்த வரிகள்...
இது போன்ற வரிகளே ...
இந்த கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது

திவ்யா ...\\


உங்கள் கருத்திற்கு நன்றி விஷ்னு!!

said...

\\ Vishnu... said...
//என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன்//

கதைக்கு அழகு சேர்க்கும் ...
நல்ல கவிதை ... திவ்யா ...\\


நன்றி விஷ்னு!

said...

\ Vishnu... said...
//எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.//

எப்படி திவ்யா ..இப்படி எல்லாம் ...

கொன்னுட்டீங்க ....Super.....\\


உங்கள் அழகான ரசிப்பிற்கு நன்றி விஷ்னு!

said...

\\ Vishnu... said...
மொத்தத்தில்... படங்களின் தேர்வும் ...கதையும் ...
மிக மிக அருமை ..
வாழ்த்துக்கள் திவ்யா ...

நல்ல ஒரு கதை படித்த திருப்தியில்.. செல்கிறேன் ...அடுத்த கதை எப்போது என்ற கேள்விகளுடன் ...\\


உங்கள் வாழ்த்துக்களுக்கும், பின்னூட்டங்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி விஷ்னு!!

விரைவில் அடுத்த கதை........:))

மீண்டும் வருக!!

said...

\\ Mathu said...
Wow...I just loved the story. பாகம் எல்லாம் வைக்காம ஒரே கதைல சுப்பெரா முடிசிட்டிங்க. எனக்கும் கத்து தாங்க எப்பிடி கதை எழுதுறதுன்னு pls!
:) enjoyed it.\\


வாங்க மது,

தொடர் கதையாக இல்லாம ஒரே பகுதியில் கதை முடிந்ததும் , நிம்மதியா இருந்ததா:))

உங்கள் வருகைக்கும், அழகான ரசிப்பிற்கும் நன்றி மது!!

கதை எழுத உங்களுக்கு சொல்லிதராமலா??
கண்டிப்பா:))

said...

\\ நிஜமா நல்லவன் said...
நேர்த்தியான படங்களுடன் அழகான க(வி)தை. வாழ்த்துக்கள் மாஸ்டர்!\\


வாங்க நல்லவன்........நிஜமா நல்லவன்!!

உங்கள் வருகைகும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!!

said...

\\ Karthik said...
வழக்கம்போல் எல்லாம் சூப்பர்!
:)
\\


நன்றி கார்த்திக்!!

said...

\\ SanJai said...
அம்மா தாயே.. மூச்சி வாங்குது.. கதையை கொஞ்சம் சின்னதா எழுதப் படாதா?.. ரொமாண்டிக்கா கதை சொல்றதுல உன்னை அடிச்சிக்க ஆளே கிடையாது... :)

எப்டிதான் காட்சிக்கு ஏற்ற படங்களை பிடிக்கறையோ.. சூப்பர்ப் ஊர்ஸ்.. :)\\



வாங்க சஞ்சய்!!

ஸாரி......கதை கொஞ்சம் நீண்ட கதையாக போய்டுச்சு:(((

பொறுமையுடன் படித்ததிற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!

said...

u there online now see my latest blog in my blog

said...

\\ SanJai said...
காயத்ரி உன் கதைகளை படிக்கிறதாலவோ என்னவோ.. அவளும் ரொமாண்டிக் கதைகள் எழுதும் போது பின்னி எடுக்கிறா.. ஹ்ம்ம்ம்.. என் தங்கச்சின்னா சும்மாவா? :))\\


:))

said...

\\ naanal said...
திவ்யா...
கதை super..... :)\\


ரொம்ப நன்றி நாணல்!!

said...

\\ naanal said...
ஆயில்யன் said...
////உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்////

//ரொம்பவே ரசித்தேன்!

இன்னும் வாழ்க்கை இருக்குன்னு சொல்றீங்க ரைட்டு :)))///

ரிபீட்டேய்.... :)\\



கரெக்ட்டா ரீப்பிட்டு போட்டுறீங்க நாணல்!!!

said...

\\ Ganesh said...
//யாரூ உங்க தலைவர்???//
'பன்ச் டயலாக்'னு சொல்லியும், தலைவர் 'யாரூ'னு கேட்டுக் காயப்படுத்திட்டீங்களே!! :)
தலைவர்னா ஒருத்தர் தாங்க, மத்தவங்களெல்லாம் வெறும் 'தல(ள)' தான் :D\\


ஒஹோ இப்போ புரிந்தது உங்க 'தல(ள)' யாருன்னு!!

ஒரு சின்ன டவுட்.......நீங்கதான் விநய் என்ற பெயரில் முன்பு எனக்கு பின்னூட்டம் போட்டதா??



\\//இப்போதிக்கு 'தொடர்' கதை எழுதும் எண்ணமில்லை திவ்யப்ரியா//
ஏங்க, மறுபடியும் busy ஆகிட்டீங்களா??\\


ஆமாம் கணேஷ், கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்:(((

said...

//
\\ Ganesh said...
//யாரூ உங்க தலைவர்???//
'பன்ச் டயலாக்'னு சொல்லியும், தலைவர் 'யாரூ'னு கேட்டுக் காயப்படுத்திட்டீங்களே!! :)
தலைவர்னா ஒருத்தர் தாங்க, மத்தவங்களெல்லாம் வெறும் 'தல(ள)' தான் :D\\

ஒஹோ இப்போ புரிந்தது உங்க 'தல(ள)' யாருன்னு!!
//

தலைவர்'னா 'சூப்பர் ஸ்டார்' தாங்க!!
எந்த Confusion'னும் இருக்கக் கூடாதுனு பாருங்க :)

//ஒரு சின்ன டவுட்.......நீங்கதான் விநய் என்ற பெயரில் முன்பு எனக்கு பின்னூட்டம் போட்டதா??//

ஆமாம் திவ்யா.. அது நான் தான்..

said...

\\ முஹம்மது ,ஹாரிஸ் said...
அருமையான வருணனை. தெளிந்த நிறோடையை போன்ற வாசகம். பிரம்மாதம்.சுஜாதா ஊடைய எழுத்தை வசிப்பது போல் இருதது\\


உங்கள் மனம்திறந்த பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது, மிக்க நன்றி!!!

said...

\\ ஜி said...
Enunga madam.. No updates... ethavathu oru kathaiya podurathu :)))\


கொஞ்சம் வொர்க் ஜாஸ்தி ஸோ பதிவேதும் எழுத முடியவில்லை ஜி!!

said...

\\ Saravana Kumar MSK said...
// ஜி said...
Enunga madam.. No updates... ethavathu oru kathaiya podurathu :)))//

அதானே..
:))

பதிவ போடுங்க.. :)\\


ஷ்யூர் சரவணன்...:))

said...

\\ Prabakar Samiyappan said...
ஹலோ திவ்யா எங்கெங்க ரொம்ப நாள ஆளை காணவில்லை ...

busy ya :)\\


ஆமாம் பிரபாஹர் கொஞ்சம் பிஸி:((

said...

\\ kavidhai Piriyan said...
Hmmm ..short n sweet !!!!\\



நன்றி ப்ரவீன்!!

said...

\\ தமிழன்... said...
பல நாட்களுக்கு பிறகு திவ்யாவின் கலர்புல் உரையாடல்களுடன் ஒரு காதல்கதை...

கலக்கல் மாஸ்டர்...!\\


நன்றி தமிழன்!!

said...

\\ தமிழன்... said...
ஜொள்ளுப்பாண்டி said...
\
திவ்யா திவ்யா எனக்கும் காதல்
கதை எழுத கத்துக்கொடேன்...
கதை இப்படி பட்டைய‌
கெளப்புதே.. !!! :)))
\

ரிப்பீட்டு...:)

எனக்கும் சொல்லிக்குடுங்க மாஸ்டர்...\\


:)))

said...

\\ தமிழன்... said...
எப்படிங்க இப்படி உரையாடல்களை எழுத முடியுது. நானெல்லாம் தலைகீழா நின்னாலும் வரமாட்டேங்குது... :)\\


தலைகீழா நின்னா எப்படிங்க கதை எழுத முடியும்??

ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துட்டு , மொட்டை மாடில உட்கார்ந்து யோசிங்க.....கதை எழுத வரும்!!!

said...

\\ தமிழன்... said...
அடக்கப்பட்ட வெளிச்சத்தில் \கைகெட்டும் தூரத்தில் அவளைப்
பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.
எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.

\
சூப்பர்ப்...!!!

ரொம்ப ரசனையான வரிகள்...

திவ்யா...\\




உங்கள் ரசிப்பிற்கு மிக்க நன்றி தமிழன்!!

said...

\\ தமிழன்... said...
கலக்கல் ஸடோரி மாஸ்டர்...!\\


உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி தமிழன்!!

said...

\\ Vishnu... said...
திவ்யா என்னாச்சு புதிய பதிவை காணவில்லையே ??????\\


கொஞ்சம் வொர்க் ஜாஸ்தி விஷ்னு!


\\எனது வலை தளத்தில் உங்கள் வலைத்தளமுகவரியை இணைத்துள்ளேன் ..

அன்புடன்
விஷ்ணு ...\


நன்றி விஷ்னு!

said...

\\ தாரணி பிரியா said...
வழக்கம் போலவே சூப்பர் திவ்யா. அடுத்த கதை எப்ப‌ங்க‌\\


வாங்க தரணி பிரியா!!

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!!

அடுத்த கதை எதுவும் இன்னும் எழுதவில்லை......விரைவில் எழுதுகிறேன் :))

said...

story with pictures and kavithai... azhaga ezhuthi irukeenga!!! Keep it up

Started reading your old post as well... more comments from me expected to your old post soon.. :)

said...

:-)) தேடி வந்த காதலேதான். ;-)

Anonymous said...

\Blogger Rajesh Krishnamoorthy said...

story with pictures and kavithai... azhaga ezhuthi irukeenga!!! Keep it up

Started reading your old post as well... more comments from me expected to your old post soon.. :)\\



Thanks a lot for your first visit Rajash!!

Take ur time to read my old posts:))

Anonymous said...

\\Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

:-)) தேடி வந்த காதலேதான். ;-)\\


After a very longggggggg time you hv visited my page Anu.......thanks a million:)))))

Keep visiting my friend!!!

said...

\\ Usha said...
hey divya, sorry romba naal kazhichu varen, yet again a nice story! :) Romance thavira vera edhavadhu kaivasam vachirukeengala? Irundha engaluku konjam tharardhu :D\\


ஹாய் உஷா,
நல்லா இருக்கிறீங்களா??
என் ப்ளாக் பக்கம் வந்ததிற்கு நன்றி, நன்றி!!


\Romance thavira vera edhavadhu kaivasam vachirukeengala?\

ஆஹா......என்ன உஷா இப்படி சொல்லிட்டீங்க:(((


\\Irundha engaluku konjam tharardhu :D\\

நானே உங்க கிட்ட இருந்து கத்துக்கலாம்னு இருக்கிறேன்.......நீங்க என்கிட்ட கேட்கிறீங்களே உஷா:))))

said...

//அவன் மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் கொள்ளாமலே மேலோட்டமாக மெயிலை படித்திருந்தான்.
அவனது 26 வயதிற்கே உரிய ஆர்வ கோளாரில் பெண்ணின் பெயரை பார்ப்பதற்காக ஈ-மெயிலை மறுமுறை படிக்க தொடங்க..........//

//"நான் எல்லாம் யாரு கூடவும் காஃபிஷாப் க்கு தனியா போகமாட்டேன்...........நான் சுடிதார் போட்ட சங்ககால தமிழ்பெண்.....அப்படின்னு லெக்சர் கொடுக்க போறே......அந்த லெக்சரை காஃபி குடிச்சுட்டே பேசலாமே.......ப்ளீஸ்"

ப்ளீஸ் சொல்லும்போது........... 'ஸ்ஸ்ஸ்' ஸில் ஒரு அழுத்தம் கொடுத்து கெஞ்சும் பார்வை பார்த்தான்....ரமேஷ்!!//

//"அப்பிளிக்கேஷன்.........உன்கிட்ட கொடுக்கனுமா..........உன் அப்பாகிட்ட கொடுக்கனுமா........"

"எ..........என்ன......??."

"என் ஜாதகத்தை உன் கிட்ட கொடுக்கனுமா........உங்க வீட்ல கொடுக்கனுமான்னு கேட்டேன்.........."

குடித்துக்கொண்டிருந்த காஃபி புரை ஏறியது சந்தியாவிற்கு,

மிரண்ட விழிகளில்......இன்ப அதிர்ச்சி!!//

கதையில் நான் மிகவும் ரசித்த வரிகள்

அழகான நடையில் கதை எழுதியிருக்கிறீங்க திவ்யா வாழ்த்துக்கள்

உங்க வலைப் பக்கத்தில் நான் படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு...

said...

@புதியவன்
\\கதையில் நான் மிகவும் ரசித்த வரிகள்

அழகான நடையில் கதை எழுதியிருக்கிறீங்க திவ்யா வாழ்த்துக்கள்

உங்க வலைப் பக்கத்தில் நான் படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு...\\\


உங்கள் ரசிப்பினை பின்னூட்டத்தில் பகிர்ந்த கொண்டதிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி புதியவன்!!

நேரம் கிடைக்கையில் என் மற்றைய பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

said...

:-))

said...

first time.. unga comment kodumai blog la parthen..

unga blog list la ellathayum open pannen.. indha kathaila vandhu ninnen..

aadiputten ! super..
ordinary story, extraordinary details, emotions, words... awesome

said...

\\ கடைசி பக்கம் said...

:-))\\


உங்கள் வருகைக்கு நன்றி கடைசி பக்கம்:))

said...

\\Blogger Quakeboy said...

first time.. unga comment kodumai blog la parthen..

unga blog list la ellathayum open pannen.. indha kathaila vandhu ninnen..

aadiputten ! super..
ordinary story, extraordinary details, emotions, words... awesome\\


ஹாய் Quakeboy,

வருக, வருக!!

உஷா ப்ளாக்ல கமெண்ட் பார்த்து....என் ப்ளாக் பக்கம் வந்தீங்களா? நன்றி நன்றி!!

நேரம் கிடைக்கையில், அவசியம் மற்ற பதிவுகளையும் படிச்சுப் பாருங்க!

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!!

said...

கொண்ணுடிங்க திவ்யா...

இன்னைக்கி ஒன்னும் பிஸி இல்லைகிரதால...
ஆல் மோஸ்ட் எல்லா பதிவுகளையும் படிசின்டிருகேன்... அசத்துறிங்க... பேஷ் பேஷ்.
எனக்கு நாலு வரி தமிழ்ல எழுதவே தேட வேண்டியதா இருக்கு... எப்படி நீங்க இவ்வளவு கதைகள தமிழ்ல எழுத முடிஞ்சது...

ஆல் மோஸ்ட் உங்க எழுத்தின் ரசிகனாகவே மாறிட்டேன்...

காமடி பன்னலிங்க சிரியச்சாவே சொல்றேன்...

இன்னும் நிறைய எழுதனும்னு தோணுதுங்க ஆனா... தமிழ இங்கிலீஷ்ல டைப் அடிகரத்துக் குள்ள தலையே சுத்துதுங்க.

இதுக்கு மேல நம்ம தமிழ நிங்க தாங்க மாட்டிங்க...

அப்புறம் பேசுவோம்.

said...

எதார்த்தமா இருக்கு!!

said...

romba ezhiya nadai... miga azhagaana kadhai..soooper o sooper... hats off....

i was really impressed :)