November 01, 2009

இதழால் 'கவி' எழுது...........!!


யார் யாரோ
என் கவிதையை
பாராட்டிய போதெல்லாம்
சும்மாதான் இருந்தது மனசு
நீ பாராட்டாய் தந்த
முதல் முத்தம் பெறும் வரை!







பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல
உன் முத்தத்திற்கும் தான்
பார் எத்தனை
மெதுவாக உன் உதடுகள்
என்னைவிட்டு
விலகுகிறது!







உனக்காக
ஏதாவது எழுத
ஆரம்பித்தால் மட்டுமே
கவிதை வரைகிறது பேனா...
காதல் 'மை' நிரம்பினால் தானே
கவிதை பிறப்பிக்கும்
என் பேனாவும்!!








உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!







உன்னை எதுவும் கேட்காமலே
உன் கவிதைகளை விரும்ப ஆரம்பித்தேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னையே விரும்புகிறாய்
என்பதை சற்றேனும்
உணராமல்!!!








உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???







உனக்காக எழுதிய
கவிதை எனத்தெரிந்தும்
"எனக்கா??' என
கேட்டு புன்னைக்கும்
உன் சிரிப்பிற்கு முன்
என் கோபம் செயலிழந்து
போகின்றதடா போக்கிரி!








முதன்முறையாக
மிக அருகாமையில் நீ...!
இயங்க இயலவில்லை
என் இதயத்திற்கு,
திணறித்தான் போனேனடா...
என்னை உன் இதழ்கள்
இயக்கும்வரை!!!

October 01, 2009

என் பொம்முக்குட்டி அம்முவுக்கு...... கல்யாணம் !!!

காலையிலிருந்தே ஏதோ ஒருவித மன இறுக்கம், தேவை இல்லாமல் அடிக்கடி கோபம் வந்தது, அலுவல் நேரம் முழுவதும் என்னை தொத்திக்கொண்ட படபடப்பிற்கான காரணம் உணராமலே மாலை வீடு வந்து சேர்ந்தேன்,

வீட்டு வாசலில் குழந்தையுடன் காத்திருந்த என் மனைவி,


"என்னங்க இன்னுமா அதையே நினைச்சுட்டு இருக்கிறீங்க?" என்றாள்.

அட! நான் ஏன் இப்படி இருக்கிறேன்னு எனக்கே புரியலை, இவ எதை சொல்றா???


அவளுக்கு பதலளிக்கமால்,

என்னிடம் தாவி வந்த குழந்தையை முத்தமிட்டு, அள்ளிக்கொண்டு, வீட்டினுள் நுழைந்தேன்.

என் கனத்த அமைதியை பொருட்படுத்தாமல் , கேள்வி கேட்டு துளைக்காமல் காஃபியுடேன் வந்தாள் மனைவி.
வீட்டில் என் அம்மாவும் தங்கையும் இல்லை, வெளியில் சென்றிருக்கிறார்கள் என்று குழந்தை கூற அறிந்துகொண்டேன் ,

சிறிது நேர அமைத்திக்கு பின், என் மனைவி பேச்சை ஆரம்பித்தாள்,


"இதுக்கு போய் இவ்வளவு அப்சட் ஆகலாமா??.......சொன்னது யாரு உங்க செல்ல தங்கச்சி தானே??, அதுவும் அவ ஏதும் தப்பா சொல்லிடலியே, பின்ன எதுக்கு உங்களை நீங்களே குழப்பிகிறீங்க??" என்றாள் என் மனைவி,


"ஹும்...."


"இவ்வளவு நாளும் எது செய்தாலும், உங்க கிட்ட கேட்டு கேட்டு செய்தா, இப்போ அவளை கட்டிக்க போறவர் கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு சொல்றா.........அதுல என்ன உங்களுக்கு அவ்ளோ இகோ???"


"இகோ இல்லமா.........இனிமே அவளுக்கு நான் இரண்டாம் பட்சம் தானே, அதை தான் என்னால தாங்கிக்க முடியல"

" ஹையோ ஹையோ .....என்னங்க இது சின்ன குழந்தை மாதிரி பேசுறீங்க, நீங்க தானே கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோ ன்னு வற்புறுத்தி , நீங்களே மாப்பிள்ளையும் பார்த்து உங்க தங்கை கல்யாணத்தை ஏற்பாடு பண்றீங்க.......இப்போ அவ ஒரு வார்த்தை எதார்த்தமா சொல்லிட்டா, கல்யாண ஏற்பாடு எதுவா இருந்தாலும், அவர் கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுடலாம் அண்ணா ன்னு, அதுக்கு ஏங்க உங்களுக்கு இவ்ளோ கோபம் வருது உங்க தங்கச்சி மேல????"


"ச்சே ச்சே.........அவ மேல எனக்கு எப்பவுமே கோபம் வராது.........ஆனா லேசா மனசு வருத்தமா இருக்கு, இவ்ளோ நாள் அவளுக்கு எல்லாமே நான்தான்னு பெருமிதமும் கர்வமும் இருந்துச்சு, அதெல்லாம் பங்கு போட்டுக்க இனொருத்தர்கு அவ வாழ்கையில இடம் வந்துடுச்சேன்னு நினைக்கிறப்போ......."

"விட்டு கொடுக்க முடியல ............அப்படிதானே???"

"ஹும்..."


"அபியும் நானும் படத்துல வர்ற பிரகாஷ் ராஜ் மாதிரியே ஆகிட்டு வர்றீங்க நீங்க...."


"..........."

"அவராச்சும் மகள் விரும்பிய மாப்பிள்ளை மேல பொறாமை பட்டார், நீங்க........நீங்களே மாப்பிள்ளையும் பார்த்துட்டு, கல்யாணம் கட்டிக்கோன்னு அவளையும் போட்டு பாடா படுத்திட்டு, இப்போ இப்படி பொலம்பறது நல்லாவே இல்லீங்க........"


பதில் ஏதும் சொல்லாமால் அவ்விடம் விட்டு நகர்ந்து, பால்கனிக்கு சென்றேன்.......என் மனைவி சொல்வது மிகவும் சரியே என என் உள் மனம் உறுத்தியது.

கல்யாணம் பண்ணிக்கோன்னு அவளை நச்சரித்து நான் தானே,
நான் பார்க்கிற மாப்பிள்ளை அவளுக்கும் பிடிச்சு போய்டாதான்னு ஆசை பட்டவனும் நான் தானே...........பின் ஏன் இப்போ அவளை விட்டுதர இயலவில்லை எனக்கு, ஹும்ம்.....

இதுக்குதான் பெத்த பொண்ணா இருந்தாலும் சரி, கூட பிறந்த தங்கச்சி, அக்காவா இருந்தாலும் சரி.......பாசமே வைக்க கூடாது, கல்யாணம் கட்டிக்கொடுக்கிறபோ எவ்ளோ மன உளைச்சல் வருது.........கட்டிக்கொடுக்கனுமேன்னு கடமை உணர்வு ஒரு பக்கம் ,விட்டு கொடுக்க முடியாம தடுமாற்றம் மறு பக்கம் , பிரிவின் வலி ஒரு புறம்.... ஹும்.

தளர்வுடன் அங்கிருந்த நாற்காலியில் உட்கார எத்தனித்த போது தான் கவனித்தேன்.......என் தங்கையின் ஐபாட் அந்த இருக்கையில் இருப்பதை, என் தங்கை சற்று நேரத்திற்கு முன்பு வரை வழக்கம் போல் பால்கனியில் அமர்ந்து பாட்டு கேட்டு கொண்டிருந்திருக்கிறாள் என புரிந்துக்கொண்டேன் . இப்போதெல்லாம் அடிக்கடி தனியா பால்கனியில பாட்டு கேட்டுட்டு தனிமையாவே இருக்கிறாளே , அது ஏன்........??

கவனமாக அவளது ஐபாடை எடுத்து அருகில் இருந்த ஸ்டூலில் வைக்கும் போது தான் என் கண்ணில் பட்டது அதன் அடியில் இருந்த வாழ்த்து அட்டை....

Happy Birthday my beloved Brother!!

என்று எழுதிருந்த ஓர் அழகான வாழ்த்து அட்டை,

ஹும்........அடுத்த வாரம் வர இருக்கும் எனது பிறந்த நாளிற்கு இப்போதே வாழ்த்து அட்டை வாங்கி விட்டாள் போலும், அவள் கொடுக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று ஐபாடிற்கு அருகில் வைக்கையில், அதினுள்ளிருந்து ஒரு துண்டு காகிதம் விழுந்தது........

அதில் பொறிக்கப்பட்டிருந்த வரிகள்............

அண்ணனுக்காக.........!!

அண்ணன் எனக்கு எல்லாமாயிருந்தான்...

சிறு பெண்ணாக இருக்கையில்
பட்டு பாவாடை சர சரக்க
"அண்ணா பூ வைச்சு விடுண்ணா"
என்று மல்லி சரம் நீட்டினால்,
"முடி கொஞ்சம் கலைந்திருக்கே ...?" என்று
என் தலை வாரி
பூச்சுட்டுவான் என் அண்ணா !!

பக்கத்து
வீட்டு காயத்ரி
சைக்கிள் ஓட்டுவதை

ஏக்கத்தோடு பார்த்த எனக்கும்

பழகிக் கொடுத்தான்!


மழை ஓய்ந்த பின்

மரக்கிளையினை உலுப்பி

எனைத் தெப்பமாய் நனைத்து...

நான் மயிர்க் கூச்செறிந்து

சிணுங்கி நிற்கும்
அழகை ரசிப்பதில்
அலாதிப் பிரியம் அவனுக்கு!


என்
எச்சில் கையால் - அவனுக்கும்
தின்பண்டம் ஊட்டினால்

சுவைத்து சிரிப்பான்!

கல்லூரியில் படிக்கும் போதும்

கணக்குப் பாடம்
சொல்லித்தர கேட்பேன்,
எப்படிச் சொன்னாலும்

இந்த 'மர மண்டைக்கு' ஏராதாம்
என்று
குட்டு வைப்பான் ....!
நான் அழுது முடிக்கும் வரையில்

என் தலை

அவன் தோழில் சாய்த்துக்கொள்வான்!


அவனுக்கு கல்யாணமான பின்பு

அண்ணியோடு அவன்..

அண்ணன் எனக்கு
அன்னியனாகி
போனது அன்றுதான்.

நானில்லை..

இனி உன் வாழ்வில்
என்று
என்னை நானே விலக்கிக் கொள்ள...
'

உன் அண்ணா'
உனக்கு
அன்று போல்தான் என்றென்றும் என
என் கை பிடித்து

அவன் கையோடு எனை சேர்த்தபோது,

தலை சாய்ந்தேன்.....

அண்ணியின்
தோழில்!!

அண்ணன் என் நண்பன்

அண்ணன் என் எல்லாம்

அப்பாவின் காலத்திற்குப்பின்
அண்ணன்
எனக்கு அப்பாவானான்....!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!!


வரிகளை படித்து முடிக்கையில் ,
நெஞ்சில் மீண்டும் அதே பெருமிதமும்,
என் தங்கையின் திருமணத்திற்கு பின்பும்
அவள் நெஞ்சில்
நான் எப்போதுமே......
'உசத்தி கண்ணா...உசத்தி'
என்ற பெருமையும் துளிர்விட,
கண்ணில் பூத்த நீர் துளிகளை
தடுக்காமல் வழியவிட்டேன்!!!

May 20, 2009

உன்னிடத்தில்.....சரணடைந்தேன்!! - 5

பகுதி - 1 பகுதி - 2 பகுதி - 3 பகுதி - 4

முத்துவின் அந்த சுட்டெரிக்கும் பார்வையை கண்டதும் கார்த்திக்கின் உள் மனதில் ஏதோ உறுத்தியது. இவனை சும்மா விடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான்.

மறுநாள் காலை தீபா ட்யூட்டியில் இருக்கும்போது கார்த்திக்கிடமிருந்து ஃபோன் வந்தது. மிகவும் முக்கியமான விஷயம், அதனால் உடனடியாக தன்னை தனது வீட்டில் வந்து சந்திக்கும்படி அவன் கூறியதும், அரைநாள் லீவிற்கு சொல்லிவிட்டு அவனை சந்திக்க சென்றாள் தீபா.

கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றதும்,ஹாலில் இருந்த கார்த்திக்கின் அம்மா தீபாவிடம்,

"வாம்மா தீபா.....நல்லாயிருக்கிறீயா..........ரொம்ப நாளா வீட்டு பக்கமே வரலியேமா"

"நல்லாயிருக்கிறேன்மா..........நீங்க நல்லாயிருக்கிறீங்களா?.......ஒரு வாரம் மெடிக்கல் கேம்ப்க்கு போயிருந்தேன், அதான் உங்களை வந்து பார்க்க முடியல........கார்த்திக்...இருக்...கா.."

"ஆங்.........கார்த்திக் முன்னாடி ஆஃபீஸ் ரூம்ல உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான், போய் பாருமா.......பேசிட்டு இருங்க நான் காஃபி எடுத்துட்டு வரேன்"

"சரிமா....."

கார்த்திக்கின் அறை கதவினை தட்டிவிட்டு, அனுமதி பெற்று உள்ளே சென்றாள் தீபா,

"வாங்க டாக்டர் மேடம்..........எப்படி இருக்கிறீங்க?"

"ம்ம் நல்லாயிருக்கிறேன்.......சரி எதுக்கு வர சொன்ன கார்த்திக்"

"சொல்றேன் ......சொல்றேன், முதல்ல உட்காரு இந்த சேர்ல"

" ம்........ஒகே....சரி இப்போ சொல்லு......என்ன விஷயம்?"

"நீ நேத்து பெயில்ல ஒருத்தனை கூட்டிட்டு போனியே ...அதான் அந்த சரஸ்வதியோட புருஷன்...முத்து...அவன் செத்துட்டான்"

"வாட்............முத்து செத்துட்டாரா???"

"என்ன தீபா ரொம்ப அதிர்ச்சியா இருக்க........இன்னொன்னு சொல்றேன் கேளு........அவன் சாவு சாதாரண சாவு இல்ல........கொலை....."

"கொ.......கொலையா..........."


"ஆமா.........சரஸ்வதியோட புருஷனை யாரோ கொலை செய்துட்டாங்க........போலீஸ் இன்வஸ்டிகேஷன் நடந்திட்டிருக்கு"

"யாருன்னு கண்டுபிடிச்சுட்டாங்களா??......"

"இன்னும் இல்ல.............ஆனா சில ஆதாரங்கள் போலீஸ் கையில கிடைச்சிருக்கு, அதை வைச்சு கண்டிப்பா குற்றவாளி யாருன்னு சீக்கிரம் கண்டு பிடிச்சிடும் எங்க டிபார்ட்மெண்ட்"

"................"

" இந்த கொலை விஷயமா...........உன்கிட்ட சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கு........"

"எ......என்கிட்ட என்ன கேட்கனும்?"

"இந்த கொலைக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கும்னு ..........நாங்க சந்தேகப்படுறோம்"

"புல்ஷிட்..........என்ன உளர்ற கார்த்திக்"

"ஏன் டென்ஷன் ஆகுற தீபா.............சந்தேகம்னு தானே சொன்னேன்.........இன்னும் இன்வெஸ்டிகேஷன் கேள்விகளே கேட்க ஆரம்பிக்கல அதுக்குள்ள டென்ஷன் ஆனா எப்படி?? கூல் டவுன் டாக்ட்டர் மேடம்"


"சந்தேகம் உன் டிபார்ட்மெண்டுக்கு இல்ல..........உனக்குதான் என் மேல சந்தேகம்.........நீ பொய் கேஸ் போட்டு முத்துவை உள்ள தள்ளினபோ, சரஸ்வதிக்காக நான் அவரை பெயில்ல எடுத்தது உனக்கு பிடிக்கல, என் மேல கோபம் உனக்கு, அதான் இப்படியெல்லாம் பேசுற"

"என்ன தீபா..........ரொம்ப சமார்த்தியமா பேசுறதா நினைப்பா??...............உன் மேல சந்தேகம் மட்டுமில்ல ........நீ தான் கொலை பண்ணினன்றதுக்கு என்கிட்ட ஆதாரமே இருக்கு"

".................."

தன் மேஜைக்கு அடியில் இருந்து ஒரு சிறு பாக்கெட்டை எடுத்து பிரித்து காண்பித்தவன்.........

"இது........என்னன்னு தெரியுதா டாக்டர்........."

"அ......து...........இது......ஸ்ரிஞ்ச்"

"நீ விஷ ஊசி போட பயன்படுத்தின ஸ்ரிஞ்ச்.............."

"கா.......கார்த்திக்........."

தன் இருக்கையில் இருந்து எழுந்து, எதிரில் அமர்ந்திருந்த தீபாவின் இருக்கையின் அருகில் வந்து நின்றான் கார்த்திக், தீபா மெதுவாக எழுந்து நின்று , தன் நெற்றி பொட்டில் பூர்த்திருந்த வேர்வை துளிகளை துடைத்துக்கொண்டாள்.

" ஏன்..........ஏன் தீபா இப்படி பண்ணின...........நீ பண்ணியிருக்கிறது எவ்வளவு பெரிய தப்பான முட்டாள்தனம்னு உனக்கு தெரியுமா??"

"கார்த்தி.........நான்.........."

"உன் மருத்துவ தொழிலுக்கு மிக மிக அவசியமான பொறுமையும், மனிதாபிமானமும் எங்க போச்சு தீபா............."

"கார்த்தி........சரஸ்வதிக்கு அவன் பண்ணின கொடுமையெல்லாம் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல"

"அதான் நான் போலீஸ் கவனிப்பு கவனிச்சுக்கிறேன்னு சொன்னேனே........அப்புறம் என்ன???"

"ஹும்.......ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வைச்சு முட்டிக்கு முட்டி தட்டினா இந்த மாதிரி ஆழுங்க திருந்திடுவாங்கன்னு நினைக்கிறியா??............நோ நாட் அட் ஆல் கார்த்தி"

"டோன்ட் பி எமோஷ்னல் தீபா...............இப்படி தப்பு பண்ற ஒவ்வொருத்தனையா கொலை பண்ணிட்டு இருக்க போறீயா??..........."

"கார்த்தி..........நான்........கோபத்துல...........அப்படி ஒரு காரியம்........."

அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் திக்கியது,
தொண்டை அடைத்தது,
அவளது இதயதுடிப்பு நொண்டி அடித்தபடி இருக்க,
பயத்தில் ஒருவித நடுக்கம் உடலெங்கும் பரவியது தீபாவிற்கு!!

"கார்த்திக்.........."

"ம்ம்....."

"நீ........நீ ......இந்த ஆதாரத்தை வைச்சு என்னை அரெஸ்ட் பண்ண போறீயா??"

"ஆமா.........கைது பண்ணத்தான் போறேன்......"

"கா......ர்த்.......திக்"

"கைதி பண்ணி..............ஆயுள் தண்டனை கொடுக்க போறேன்..........திருமதி தீபா கார்த்திக் குமாரா"

சிறு குறும்பு புன்னகையோட தீபாவிற்கு இன்னும் நெருக்கமாக வந்த கார்த்திக்,

"என்ன டாக்டரம்மா..........ரொம்ப பயந்துட்டீங்களோ??.........ஹா ஹா........விஷ ஊசி போடுற அளவுக்கு தைரியம் இருக்கு, அப்புறம் தடயத்தோடு மாட்டினதும் பேந்த பேந்த முழிச்சா எப்படி??"

"................"

"சரி........கூல் டவுன்.........சரஸ்வதி புருஷன் முத்து சாகல"

"நீ....நீ என்ன சொல்ற கார்த்திக்?"

"என்ன........நீ போட்ட விஷ ஊசி எப்படி வேலை செய்யாம போச்சுன்னு பார்க்கிறியா??"

"..............."

" நீ முத்துவுக்கு நேத்து ராத்திரி போட்டது வெறும் சத்து ஊசி............."

".............."

" நீ திடீருன்னு சரஸ்வதி புருஷன் மேல இரக்கப்பட்டு பெயில்ல எடுத்ததுமே எனக்கு ஒரு சின்ன டவுட்.........இப்படி ஏதாச்சும் தத்தக்கா பித்தக்கான்னு பண்ணிடுவியோன்னு நினைச்சேன், மோர் ஓவர்.........நீ முத்துவ பெயில்ல கூடிட்டு போறப்போ......அவன் உன்னையும் என்னையும் நம்பாம கோபமா முறைச்சுட்டே போனான், அவனால உனக்கு ஏதும் ஆபத்து வந்துடக்கூடாதுன்னு அவனை கண்கானிக்க ஒரு கான்ஸ்டபிளை அப்பாயிண்ட் பண்ணினேன், அப்படியே உன்னையும் நான் வாட்ச் பண்ணிட்டு இருந்தேன்"

".............."

"நான் எதிர் பார்த்த மாதிரியே நீ முத்துவை உன் ஃப்ரண்டோட க்ளினிக்ல அட்மிட் பண்ணின...........நைட் நீ நர்ஸ்கிட்ட போட கொடுத்த விஷ ஊசியையும் நான் தான் மாத்தினேன்......"

"கார்த்தி.......நான் தெரியாம.........ரொம்ப எமோஷனலாகி.........இப்படி பண்ணிட்டேன்..........."

"இந்த கோபம்..........தண்டிக்கனும்ன்ற உணர்வெல்லாம் இத்தோட விட்ரு தீபா.......சரஸ்வதியையும் முத்துவையும் எப்படி நல்ல படியா வாழவைக்கிறதுன்னு யோசிப்போம், இனியும் அவன் திருந்தலீனா............விஷ ஊசி எல்லாம் வேணாம்........என்கவுண்ட்ர்ல போட்டு தள்ளிடுறேன்"

" நீங்க போட்டு தள்ளினா மட்டும் ............நியாயமா?? தொழில் தர்மமா??..........இது நல்லா கதையா இருக்குதே"

படபடப்பு குறைந்து, மெல்லிய புன்னகை படர்ந்திருந்தது தீபாவின் முகத்தில்.

"சரி..சரி அதெல்லாம் இருக்கட்டும்......எப்போ அரஸ்ட் வாரண்டோட டாக்டரம்மாவை வந்து பார்க்கட்டும்......."

"..............."

"என்ன தீபா......பதிலே காணோம்"

"அரெஸ்ட் வாரண்ட் எதுக்கு கார்த்திக்...........அதான் நான் உன்கிட்ட சரணடைஞ்சுட்டேனே"

என்னை விழிகளால்
கைது செய்தவளை
நான் விலங்கினால்
கைது செய்ய முடியுமா??

என்னிதய சிறைக்குள்
குடியிருப்பவளை -இனி
எந்த சிறைக்குள்
சென்றடைக்க முடியும்???

கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!

உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்!



முற்றும்.

May 07, 2009

உன்னிடத்தில்.........சரணடைந்தேன்!!! - 4

பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3


தன்னையும் தீபாவையும் ஹாஸ்பிட்டல் வராண்டாவில் கூர்ந்து கவனிக்கும் அந்த உருவம் யாராக இருக்கலாம் என்று கார்த்திக்கால் சரியாக யூகிக்க முடிந்தது.

"தீபா........சரஸ்வதியை பத்திரமா பார்த்துக்கோ.....அவ வாக்குமூலத்தில உண்மையை சொல்லலியேன்னு கோபப்படாதே, கான்ஸ்டபி்ள்ல இந்த அறைக்கு பாதுகாப்பா விட்டுட்டு போறேன்.."

"கான்ஸ்டபிள் எல்லாம் எதுக்கு கார்த்திக்......."

"அதெல்லாம் அப்புறமா சொல்றேன் தீபா........நான் இப்போ உடனடியா போகனும்" என்று அவளது பதிலுக்கு கூட காத்திராமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான் கார்த்திக்.

அவனது சீற்றமான முக மாறுதலும், பரப்பரப்பான நடையையும் சிறிது நேரம் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டுருந்த தீபா, மீண்டும் சரஸ்வதியின் அறையினுள் வந்தாள்.

தீபாவை கண்டதும், சரஸ்வதியின் கண்கள் தானாக வழிந்தன.

"டாக்டரம்மா......என்னை மன்னிச்சிடுங்க........நீங்க வந்துட்டு போன கொஞ்ச நேரத்துல என் புருஷன் வந்தாருமா........நடந்த உண்மையெல்லாம் உங்ககிட்ட சொன்னா, என்னைய மட்டுமில்ல உங்களையும் சேர்த்தே தீர்த்து கட்டிருவேன்னு மிரட்டினாரு.........அதான்........நான் போலீஸ் கிட்ட...அப்படி....என்னை மன்னிச்சிடுங்கமா"

முகம் சிவக்க அவள் தேம்பி தேம்பி அழுவதை கண்டதும் தீபாவின் மனம் இளகியது.


"ஹும் ....நான் மன்னிக்கிறதெல்லாம் இருக்கட்டும், நீ தைரியமா இரு...........உனக்கு இப்போ வேண்டியதெல்லாம் கம்ப்ளீட் ரெஸ்ட், எதையும் போட்டு மனசை குழப்பிக்காம இரு சரஸ்வதி"

தீபா அவளிடம் தான் அவளை தேடி அவளது வீட்டிற்கு சென்றதையும், அவளது மகன் நன்றாக இருக்கிறான் என்பதையும் கூறி அவளை தைரியப்படுத்தினாள்.

பின் ட்யூட்டியில் இருந்த நர்ஸிடமும், கான்ஸ்டபளிடமும் சரஸ்வதியை சந்திக்க யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என எச்சரித்து விட்டு, தனது அறைக்கு சென்றாள்.
ஒரு மணிநேரத்தில் கார்த்திக்கிடமிருந்து தீபாவிற்கு ஃபோன் கால் வந்தது, அதில் அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த தீபா, உடனடியாக அவன் சொன்ன போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தாள்.

அங்கு சென்றதும், கார்த்திக்கும் மற்றுமொரு போலீஸ்காரரும், சரஸ்வதியின் கணவனை அடி பிண்ணிக்கொண்டிருந்ததை கண்டதும்....

"கா..............கார்த்திக்................ஸ்டாப் இட்........."

தீபாவின் குரல் கேட்டு திரும்பிய கார்த்திக், மூச்சிரைக்க.....

"ஹாய் தீபா......வா......."

"வாட் இஸ் ஆல் திஸ் கார்த்தி..........இப்படி போட்டு அடிக்கிற??"


"இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் இப்படி தான் கவனிக்கனும், ........பொண்டாட்டிய மிரட்டி உண்மையை மறைச்சுட்டா?? சும்மா விட்டுருவோமா...........ஏதாவது ஒரு கேஸ் போட்டு உள்ள தள்ளி இப்படி லாடம் கட்டினா தான் இவனுங்க எல்லாம் சரிபட்டு வருவானுங்க......"

சொல்லிக்கொண்டே சரஸ்வதியின் கணவன் மீது தன் பூட்ஸ் காலால் ஓங்கி ஒரு உதை விட்டான் கார்த்திக்.

"இப்படி காட்டுமிராண்டிதனமா போட்டு அடிக்கிறதை முதல்ல நிறுத்து கார்த்தி......."

"என்ன தீபா புரியாம பேசுற..........இது தான் போலீஸ் வே ஆஃப் ட்ரீட்மெண்ட்......."

"அதுக்காக இப்படியா...........பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுர குறுக்கு வழில எல்லாம் கார்த்திக் ஐ.பி.எஸ் போவாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை"

"நீ தானே தீபா...........சரஸ்வதி புருஷன் மேல நடவடிக்கை எடுக்கனும்னு அவகிட்ட வாக்குமூலம் வாங்க கூட்டிட்டு போன.......அவளை மிரட்டி அப்படி வாக்குமூலம் மாத்தி கொடுக்க வைச்சதே இந்த கபோதி தான்.........அதான் இப்படி உள்ள தள்ளி நொறுக்கி எடுக்கிறேன்"

மீண்டும் சரஸ்வதியின் கணவனை கார்த்திக் அடிக்க எத்தனிக்க............தீபா....

"தட்ஸ் இட் கார்த்திக்.............ஜஸ்ட் ஸ்டாப் திஸ் ............நான் சரஸ்வதி புருஷனை பெயில்ல எடுக்க போறேன்"

"தீ.........தீபா.........அர் யூ ஜோக்கிங்??"

"நோ கார்த்திக்.............ஐ அம் நாட்........ஒன் மினிட் வெயிட்" என்று கூறிவிட்டு தன்னுடன் அவள் அழைத்து வந்திருந்த வைக்கீல் ஒருவரை வெளியில் சென்று அழைத்து வந்தாள்.

"அஸிஸ்டண்ட் கமீஷ்னர் சார்......இவர் என்னோட வக்கீல் மிஸ்டர்.நாராயணமூர்த்தி, சரஸ்வதி புருஷன் முத்துவை பெயில்ல ரிலீஸ் பண்ணுங்க"

"தீ.......தீபா..........."

"நான்....முத்துவை பெயில்ல எடுக்க வந்திருக்கிற டாக்டர் தீபா.......புருஞ்சுதா அஸிச்டண்ட் கமிஷ்னர் சார்??"

"ஸா....ஸாரி டாக்டர்........."

பெயில் பேப்பர்ஸில் கையெழுத்து வாங்கிவிட்டு, தன்னருகில் நின்றிருந்த கான்ஸ்டபளிடம் முத்துவை ரிலீஸ் பண்ண சைகை காட்டினான் கார்த்திக்.

போலீஸ் அடியில்........கசக்கி பிழியப்பட்ட நிலையில் இருந்த முத்து, தட்டு தடுமாறி எழுந்து தீபாவுடன் சென்றான்.

"வாங்க முத்து...........பக்கத்துல இருக்கிற என் ஃப்ரண்டோட க்ளீனிக்ல உங்க காயங்களுக்கு மருந்து போட்டுட்டு அப்புறமா உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்" என்று தீபா அவனை போலீஸ் ஸ்டேஷனை விட்டு அழைத்து சென்றாள்.

தீபாவின் செய்கைகள் கார்த்திக்கின் கோபத்தை அதிகரித்தது, அவளுடன் சென்ற முத்துவை அனல் பறக்கும் பார்வை பார்த்தபடி.......

'இந்த தடவை டாக்டரம்மா சரஸ்வதி மேல வைச்சிருக்கிர பாச செண்டிமெண்ட்னால தப்பிச்சுட்ட.........வேற ஒரு கேஸ்ல மாட்டாமலா போய்டுவ........அப்போ வைச்சுக்கிறேன்டா உனக்கு கச்சேரி' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் கார்த்திக்.

வாசல்வரை தீபாவுடன் மெதுவாக நடந்து சென்ற முத்து, கதவருகே நின்று கார்த்திக்கை கோப பார்வையுடன் திரும்பி பார்த்தான்.............

'டேய் போலீஸ்காரா.......நீயும் இந்த பொம்பளை டாக்டரும் சேர்ந்து போடுர ட்ராமா எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?? வேணும்னே என்னை பொய் கேஸ்ல உள்ள போட வைச்சு, அடி பிண்ணி எடுத்துட்டு, இப்போ பெயில்ல எடுக்கிற மாதிரி அவளும் நீயும் சேர்ந்து ட்ராமாவாடா பண்றீங்க.........உங்க இரண்டு பேருக்கும் வைச்சிருக்கிறேன்டா ஆப்பு....."

முத்துவின் அந்த சுட்டெரிக்கும் பார்வையை கண்டதும் கார்த்திக்..........

[தொடரும்]


பகுதி - 5

April 29, 2009

உன்னிடத்தில்......சரணடைந்தேன்!!! - 3

பகுதி - 1

பகுதி - 2

சரஸ்வதி விஷமருந்திவிட்டாள் என்று அந்த முதியவர் கூறியதும், கண்ணீருடன் ஸ்தம்பித்து நின்ற டாக்டர் தீபா,
தன் கையிலுள்ள பிஸ்கட் பாக்கெட்டையும், தன்னையும் மாறி மாறி பார்த்து புன்னகைக்கும் சரஸ்வதியின் குழந்தையை பார்த்ததும், துக்கம் நெஞ்சை அடைக்க.............அந்த சிறுவனை தன்னிடம் அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்து, தான் வாங்கி வந்திருந்த பிஸ்கெட்டை கொடுத்தாள்.

அந்த வயதான பெண்மனி, தன் கண்களை துடைத்தபடியே உடைந்த குரலில் .......மீண்டும் பேச தொடங்கினாள்,

"அந்த புள்ள சரஸு மருந்து குடிச்சு இரண்டு நாள் ஆச்சுமா, பெரிய ஆஸ்பத்திரில தான்மா சேத்திருக்கு........உசிர காப்பாத்திட்டாக, ஆனா கொத்துயிரும் கொலையுருமா கிடைக்குதுமா ஆஸ்பத்திரில,அதான் அவ பையனை நான் பாத்துக்கிறேன்" என்றார்.

சரஸ்வதி உயிரோடு தான் இருக்கிறாள் என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சினால் தீபாவின் நெஞ்சு ஏறி இறங்கியது. சரஸ்வதியின் பையனை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவரது கைகளில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை திணித்துவிட்டு,

"பையனுக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கி கொடுங்க பாட்டி, நான் சரஸ்வதியை ஹாஸ்பிட்டல்ல போய் பார்க்கிறேன்" என்று கூறி, வேக வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள் தீபா.

அங்கு சரஸ்வதி அனுமதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பிரிவினை கண்டறிந்து,ட்யூட்டில் இருந்த டாக்டரிடம் சரஸ்வதியின் உடல் நிலையினை பற்றி கேட்டறிந்த தீபா, சரஸ்வதி இருந்த அறைக்கு சென்றாள்.

கழுத்துவரை போர்த்தப்பட்டு, தலை கலைந்து, முகம் கறுத்துப்போய்............பரிதாபமாக படுத்திருந்த சரஸ்வதியை பார்த்ததும், தான் ஒரு டாக்டர் என்பதையும் மீறி அழுகை வந்தது தீபாவிற்கு. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், சரஸ்வதியின் படுக்கையின் அருகில் அமைதியாக நின்றிருந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து கண்திறந்த சரஸு, டாக்டர் தீபாவை பார்த்ததும், விசும்பலுடன் அழ துவங்கினாள்.
தீபா படுக்கையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து, சரஸ்வதியின் கைகளை தடவியபடி ஆறுதல் கூறி,சரஸ்வதி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு சென்றதின் காரணம் கேட்டாள்.


தான் மேற்கொண்டு படிப்பதையோ, வேலைக்கு செல்வதையோ விரும்பாத தன் கணவன், தன்னை கடுமையாக தாக்கியது மட்டுமில்லாமல், காப்பியில் விஷத்தை கலந்து குடிக்க வற்புறுத்தி,

மறுத்த சரஸ்வதியிடம் அவளது மூன்று வயது மகனுக்கு அவள் கண் எதிரிலேயே மண்ணென்னைய் ஊற்றி கொளுத்த போவதாக மிரட்டியதும்,குடி போதையில் தன் கணவன் ஏடாகூடாமாக ஏதும் செய்து விட கூடாது என்று, மகனை காப்பாற்றும் எண்ணத்தில் அவனது மிரட்டலுக்கு பணிந்து போனதையும்.......அழுகையின் நடுவில் திக்கி தினறி அடிக்குரலில் சொல்லி முடித்தாள் சரஸ்வதி.

இத்தனை கொடூரகாரனா சரஸ்வதியின் கணவன்???? கோபத்தில் ரத்தம் கொதித்தது தீபாவிற்கு.

அங்கு ட்யூட்டில் இருந்த நர்ஸிடம் , சரஸ்வதியை நன்றாக கவனித்துக்கொள்ளும் படி கூறிவிட்டு, உடனடியாக கார்த்திக்கிற்கு ஃபோன் செய்தாள் தீபா. அவனை நேரில் சந்திக்க முடியுமா என்று கேட்டறிந்து விட்டு, கமீஷ்னர் அலுவலக வளாகத்திலிருந்த கார்த்திக்கின் அலுவலக அறைக்கு சென்றாள் தீபா.

வெளியில் அமர்ந்திருந்த கான்ஸ்டபளிடம் தன் வரவை தெரிவித்து, கார்த்திக்கின் அனுமதி பெற்று , அவனது அறையினுள் பட படப்புடன் நுழைந்தாள் தீபா,

"ஹாய் .....டாக்டர் மேடம் ...வாங்க வாங்க"

"கார்த்திக்............ரொம்ப அர்ஜண்ட்"

"அர்ஜண்ட்டா??.......வராண்டால நேரா போய் லெஃப்ட்ல திரும்பினா லேடீஸ் பாத்ரூம் இருக்கு தீபா"

"ச்சீ விளையாடதே கார்த்திக்...........ஐ அம் டாம்ன் சீரியஸ்"

"ஸாரி ஸாரி.........கூல் டவுன் தீபா........ஏன் இவ்வளவு டென்ஷன்.....இந்தா இந்த தண்ணி கொஞ்சம் குடி"

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தீபா, ஆஸ்பத்திரியில் சரஸ்வதி தன்னிடம் கூறியதை எல்லாம் அவனிடம் விரிவாக சொன்னாள்.

"டாமிட்.........சரியான ஆயோக்கியனா இருப்பான் போலிருக்குதே இந்த சரஸ்வதியோட புருஷன், சரஸ்வதி கொடுக்கிற வாக்குமூலத்தை வைச்சு அவனை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிடலாம்............கம் தீபா..........லெட்ஸ் ஹரி அப்"

இருவரும் விரைந்து , சரஸ்வதியை சந்திக்க ஆஸ்பத்திரி சென்றனர்.

சொட்டு சொட்டாக இறங்கி கொண்டிருந்த சலைன் பாக்கட்டை பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி, கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு திரும்பினாள்.

டாக்டர் தீபாவுடன் போலீஸ் சீருடையில் வந்திருந்த கார்த்திக்கை கண்டதும், ஏதும் புரியாமல் விழித்தாள் சரஸ்வதி.

"சரஸ்வதி......நான் சொன்னேன்ல உன் படிப்புக்காக உதவி பண்ற என்னோட நண்பன்னு......அது இவர்தான், அஸிஸ்டண்ட் கமிஷனர் கார்த்திக், ............என்கிட்ட சொன்னதையெல்லாம் இப்போ......வாக்குமூலமா இவர்கிட்ட சொல்லு, மத்ததை இவர் பார்த்துப்பார்"

"................."

"பயப்படாம......நடந்தது என்னன்னு என்கிட்ட சொல்லுங்கமா" என்று கூறிய கார்த்திக், தன்னுடன் வந்திருந்த கான்ஸ்டபளிடம் வாக்குமூலம் எழுதி கொள்ளுமாறு சைகை காட்டினான்.

மிரண்டு போயிருந்த சரஸ்வதி, தன் நாவை ஈரப்படுத்திக் கொண்டு பேச தொடங்கினாள்,

"எனக்கு..........ரொம்ப நாளாவே வயித்து வலி இருந்துச்சு, தாங்கிக்க முடியாமத்தான்........விஷத்தை குடிச்சுட்டேன்........வயித்துல இருந்த புள்ள செத்துப்போச்சு........என்னைய மட்டும் காப்பாத்திட்டாங்களே" என்று ஓ வென அழுதாள் சரஸ்வதி.

சரஸ்வதியின் இந்த பேச்சு மாற்றம்,..... அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தர, வெறுப்போடு ஒரு பார்வை சரஸ்வதியை பார்த்துவிட்டு, வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் தீபா.

வராண்டா தூணில் சாய்ந்தபடி நின்றிருந்த தீபாவிடம் வந்த கார்த்திக்,

"இது.......இது தான் நம்ம தமிழ் பொண்ணுங்களோட வீக்னெஸ் தீபா..........."

"ச்சே..........எப்படி ........எப்படி கார்த்திக்.....அப்படியே ப்ளேட்டை மாத்தி போட்டுட்டா அந்த பொண்ணு??"

"நோ டென்ஷன் ப்ளீஸ்...........போலீஸ்னதும் சரஸ்வதி பயந்துட்டா......"

"ஏன் இப்படி இருக்காங்க..........."

"பதி பக்தி..........கணவன் தன்னை கொலையே பண்ணினாலும் காட்டிக்கொடுக்காத .......பதிபக்தி"

"என்ன பக்தியோ..........பாவி அவளை இவ்ளோ கொடுமை படுத்துறான், உண்மையை சொல்லாம மறைக்கிறாளே இவ, எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு" கோபத்தில் தீபாவின் உதடுகள் துடித்தன.

"தீபா.........காம் டவுண் ..........இதை வேற மாதிரிதான் டீல் பண்ணனும்......ஸோ டோண்ட் வொர்ரி"

"வேற மாதிரின்னா.............என்ன பண்ணப்போறே கார்த்திக்?"

"பொறுத்திருந்து பாருங்க டாக்டரம்மா......."

அந்த டென்ஷனிலும், கார்த்திக்கின் கண்சிமிட்டல் தீபாவின் முகத்தில் லேசான புன்னகையை படர்வித்தது!

அவளது மெல்லிய புன்னகையை தன் அடிமனதில் படம் பிடித்து பதித்துக் கொண்டிருந்த கார்த்திக்............அவனும் தீபாவும் நின்றிருந்த வராண்டாவின் மறுமுனையில் ஒரு உருவம் தூணின் பின்புறமாக மறைந்திருந்து இவர்களை கவனிப்பதை கண்டு சுதாரித்துக்கொண்டான்,

உடனடியாக கார்த்திக்............

[தொடரும்]

பகுதி - 4

April 23, 2009

உன்னிடத்தில்........சரணடைந்தேன்!!! - 2

உன்னிடத்தில்...சரணடைந்தேன்!!!- 1

ரோட்டில் சரஸ்வதி குழந்தையுடன் ஓடுவதை கண்ட டாக்டர் தீபா காரிலிருந்து இறங்க முற்படுவதை கவனித்த அவளது கார் ட்ரைவர்,

"அம்மா.........நீங்க இறங்காதீங்க........இந்த ஊர்ல இப்படி தெரு சண்டை எல்லாம் சாதாரணம்......அதுவும் இந்த ஏரியா ஒருமாதிரிமா, நீங்க ஒரு டாக்டர்.......தெரு சண்டையை எல்லாம் சமரசம் பண்ண இறங்கனுமாமா......."

ட்ரைவர் இப்படி சொன்னதும், ஒரு நிமிடம் தயங்கினாள் தீபா,காரிலிருந்து அவள் இறங்குமுன், அங்கு ரோட்டில் நின்று கொண்டிருந்த சிலர், சரஸ்வதியின் கணவரை பிடித்து நிறுத்த முயன்று கொண்டிருந்தனர்.அப்போது, அவனை பின் தொடர்ந்து அங்கு வந்த சேர்ந்த அவனது நண்பன், முரண்டுக்கொண்டிருந்த அவனிடம்,

"ஏம்ல உன் புத்தி இப்படி போவுது.........அந்த புள்ள என் தங்கச்சி மாதிரிடா........அத போய் இப்படி அசிங்கமா பேசுதியே......."

இப்போது சரஸ்வதியின் கணவனின் கோபம் முழுவதும், அந்த நண்பனின் மேல் திரும்ப, அவனை தாக்க முற்பட்டான்.உடனே கூடியிருந்த ஆண்கள் சிலர் அவனை தடுத்து, சண்டையை விலக்கி,சரஸ்வதியை அங்கிருந்த பெண்களின் பாதுகாப்பில் வீட்டிற்கு அனுப்பினர்.

அனைத்தையும் காரிலிருந்தபடி கவனித்துக்கொண்டிருந்த தீபா.............வீட்டிற்கு வந்ததும், மனதில் ஏதோ அழுத்துவதாகவே உணர்ந்தாள்.

'என் கண் முன்னாடியே அந்த பொண்ணு தலைதெறிக்க ரோட்ல ஓடினாளே.......அவளை காப்பாத்த நான் ஏன் காரில் இருந்து இறங்கல??........படிச்சவன்ற பெருமையா??.....டாக்டர்ன்ற அந்தஸ்தா?? .........எது தடுத்தது என்னை???'

மனசுக்குள்ளே யோசித்து யோசித்து குற்ற உணர்வோடு புழுங்கிக் கொண்டிருந்தாள் தீபா.

அந்த நேரம் அவளது செல்ஃபோன் அழைக்க..........கார்த்திக்கின் நம்பர் பளிச்சிட்டது,

கார்த்திக்கிடம் ஃபோனில் பேசியபோது, அன்று ரோட்டில் அவள் பார்த்த சம்பவத்தை கூறி, தன் மனநிலையையும் கூறினாள். அவளுக்கு ஆறுதல் கூறிய கார்த்திக், அந்த பெண் சரஸ்வதியின் பத்தாம் வகுப்பு சான்றிதழை தன்னிடம் தந்தால், கல்வி அதிகாரிகளிடன் பேசி, எந்த முறையில் மேற்கொண்டு அவள் படிப்பை தொடரலாம் என்பதை கேட்டறிந்து சொல்வதாக கூறினான்.

கார்த்திக்கிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது, தீபாவிற்கு இதமாக இருந்தது.

அவன் சொன்னதுபோலவே, அவனிடம் சரஸ்வதியின் சான்றிதழ்களை கொடுத்து உதவி கோரினாள் தீபா. அவனும் அதற்கான முயற்சியில் இறங்கினான்.
சரஸ்வதி ஆஸ்பத்ரிக்கு வந்த போது, தனது நண்பன் கார்த்திக், சரஸ்வதியின் படிப்பிற்கு உதவி செய்யவிருப்பதை அவளிடம் தெரிவித்தாள் தீபா.இருவரும் தனது மேற்படிப்பிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்றரிந்த சரஸ்வதி, தன் கணவனின் கொடுமைகளுக்கு நடுவிலும், தைரியமாக , உறுதியுடன் இருந்தாள்.

அன்று ரோட்டில் சரஸ்வதியை அந்த நிலையில் பார்த்தும், தான் உதவி செய்ய முடியாமல் போனதே என்ற குற்ற உணர்வினால்.........தீபா சரஸ்வதியின் எதிர்காலத்திற்கு எப்படியும் ஏதாவது ஒருவகையில் உதவி செய்தே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

நாட்கள் உருண்டோடின.அடிக்கடி ஃபோனிலும், வாரயிறுதிகளில் நேரிலும் , கார்த்திக்கும் தீபாவும் சந்தித்து நிறைய பேசிக்கொண்டார்கள். பள்ளி படிப்பிற்கு பின், கார்த்திக்கின் அப்பாவிற்கு வேலை இடமாற்றமானதால், தாங்கள் சென்னையை விட்டு திருச்சி சென்றுவிட்ட பிறகு, ஸ்கூல் டேய்ஸ் நண்பர்களுடன் தொடர்பே அற்று போனது என்றும் கூறினான் கார்த்திக்.

நீண்ட நாட்களுக்கு பின் , ஒரு நல்ல நட்பு கிடைத்தது போன்ற உணர்வு தீபாவிற்கு உற்சாகமளித்தது.

ஒரு நாள் தீபாவின் வீட்டிற்கு டின்னருக்கு கார்த்திக் வந்திருந்தபோது, பேச்சின் நடுவே, கார்த்திக் தீபாவிடம்.........

"தீபா..........கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதே...........நீ ஸ்கூல் படிக்கிறப்போவே நம்ம காலனில பாப்புளர் ஃபிகர், நான் நீன்னு அவனவன் உனக்கு லெட்டர் கொடுக்கவே போட்டி போட்டுவாங்க..........இன்ஃபாக்ட் நானே உனக்கு லெட்டரெல்லாம் கொடுத்திருக்கிறேன்......ஞாபகமிருக்கா??"

"ம்ம்.........ஞாபகமிருக்கு கார்த்தி......."

"அப்பேர்பட்ட அழகு தேவதை நீ.........அழகு மட்டுமில்ல......அறிவு, அமைதி, அந்தஸ்துன்னு எல்லாமே உனக்கு இருந்தும், ஏன் இன்னும் கல்யாணம் ஆகல............இல்ல கல்யாணம் பண்ணிக்கல??"

"............."

"அச்சோ..........ஸாரி தீபா........உன் பெர்ஸனல் விஷயத்துல தலையிட்டுட்டேன்ல.........ஸாரி......."

"ச்ச ச்ச.......அதெல்லாம் ஒன்னுமில்ல கார்த்தி......."

சிறிது நேர மெளனத்திற்கு பின்.........

மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது தனது ஸீனியரை அவள் காதலித்ததையும், அவனது படிப்பிற்கு பின் இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்து திருமணம் நிச்சயமானதையும், வெளிநாட்டிற்கு அவன் மேற்படிப்பிற்கு சென்று திரும்பியதும் நடக்க இருந்த திருமணம்........வெளிநாட்டு மோகம் மற்றும் அங்குள்ள தோழியோடு ஏற்பட்ட காதல் காரணமாக அவளது காதலனாலயே நிறுத்தப்பட்டதையும், சுருக்கமாக கூறி முடித்து தன் விழியோரம் பூத்த நீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டாள் தீபா.

அவளது மனநிலையை உணர்ந்து கொண்ட கார்த்திக், பேச்சை திசை திருப்பி..........கிண்டலும் கேலியுமாக பேசி அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தான்.

பின் தீபாவின் பாட்டி தயார் செய்திருந்த டின்னரை சிரித்து பேசியபடி சாப்பிட்டு முடித்து, கார்த்திக் தன் வீடு திரும்ப தனது காருக்கு சென்றான், அவனை வாசல் வரை வந்து வழியனுப்ப தீபாவும் வெளியில் வந்தாள்.

கார்த்திக் காரில் ஏறும் முன் தீபாவிடம்..........



"தீபா.............ஒரு விஷயம் சொல்லனும் உன்கிட்ட..........இப்ப சொல்லவா?"

"சொல்லு கார்த்தி........."

"தீபா........ரோட் ஸைட் ரோமியோ போட்ட அப்பளிக்கேஷனை தான் ரிஜக்ட் பண்ணிட்ட.........இந்த கார்த்திக் ஐ.பி.எஸ் கொடுக்கிற அப்பளிக்கேஷனை கன்ஸிடர் பண்ணுவியா??"

"கார்த்தி...........நீ .........."

"யெஸ் தீபா.........ஐ லைக் டூ மேரி யூ.........வில் யூ??"

"............."

"யோசிச்சு பதில் சொல்லு............பதில் எதுவா இருந்தாலும் இந்த நண்பனோட நட்பு மட்டும் மாறாது தீபா"

பதிலளிக்காது வியப்புடன் விழித்துக்கொண்டிருந்த தீபாவிற்கு கையசைத்துவிட்டு,தனது காரில் சென்றான் கார்த்திக்.

அதன்பின் வந்த நாட்களில்,அம்பாசமுத்திரத்தில் நடந்த மெடிக்கல் காம்பிற்கு ஒருவார காலம் சென்றுவிட்டதால் , தீபா மிகவும் பிஸியாக இருந்தாள். மெடிக்கல் காம்ப் முடிந்து தனது அறைக்கு வந்ததும், நர்ஸிடம் தன்னை தேடி சரஸ்வதி வந்தாளா என விசாரித்தாள். அவள் வரவில்லை என அறிந்ததும், தானே சென்று சரஸ்வதியை அவளது வீட்டில் சந்திப்பது என்ற முடிவுடன், நர்ஸிடம் அவளது விலாசத்தை பெற்றுக்கொண்டு சரஸ்வதி குடியிருக்கும் பகுதிக்கு சென்றாள் தீபா.

ட்ரைவரிடம் காரை மெயின் ரோட்டில் நிறுத்த சொல்லிவிட்டு, சரஸ்வதியின் வீடு இருக்கும் குறுகிய சந்துக்குள் நுழைந்த தீபா, சிறிது தூரம் சென்றதும், ஒரு வீட்டின் முன்வாசலில் உட்கார்ந்திருந்த வயதான பாட்டியின் மடியில் சரஸ்வதியின் மகன் உட்கார்ந்திருப்பதை கண்டதும்,

"ஹே குட்டி........எப்படிடா இருக்க??" என்று குழந்தையின் கன்னம் வருடினாள்.

குழந்தை தீபாவை அடையாளம் கண்டுக்கொண்டு , சிரித்தது.

முடமுடக்கும் காட்டன் புடவையில், தீர்க்கமான அழகுடன், இந்த தெருவிற்கு வந்திருக்கும் இளம்பெண் யார்?? என்று தீபாவை பார்த்து வியந்தபடி நெற்றியை சுருக்கிய அந்த பாட்டியிடம் தீபா....


"பாட்டி இது சரஸ்வதி பையன் தானே.........நான் அவளைதான் பார்க்க வந்திருக்கிறேன்.......அவ வீடு எது??"

"ஐயோ.........." என்று கதறிய அந்த மூதாட்டி,

"அந்த புள்ள சரஸ்வதி மருந்து குடிச்சுடுச்சுமா..........இந்த பச்ச புள்ளைய கூட நினைக்காம........பாவி மவ.........இப்படி பண்ணிட்டா......."

அதிர்ச்சியில் முகம் இரத்த சிவப்பானது தீபாவிற்கு,
அடிவயிறு புரட்டி கொண்டு வந்தது,
ஏதோ ஒருவித திகிலும் கலவரமும் ஒருசேர
தீபா பேச்சற்று விக்கித்து நின்றாள்......!

'ஐய்யோ........கடவுளே..........கருவை கலைக்க வந்த பொண்ணுக்கிட்ட , படிக்க வைக்கிறேன்னு ஆசை காட்டி, நானே அவளை கொன்னுட்டேனே'

தீபாவின் கண்களில் நீர் கசிந்தது.......

[தொடரும்]

பகுதி - 3

April 20, 2009

உன்னிடத்தில்.........சரணடைந்தேன்!!! - 1



சென்னையிலுள்ள பிரபல மருத்துவரின் ஒரே மகளான டாக்டர் தீபா, அரசாங்க மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சியாகி, திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவதற்கான அனுமதிப் பெற்றாள்.

தனது க்ளினிக்கில் பணிபுரியாமல், வெளியூரில் சென்று மகள் பணிபுரிய விரும்புவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், மகள் தீபாவிற்கு இந்த இடமாறுதல் மன ஆறுதலை தரும் என்ற நம்பிக்கையில், தீபாவின் அப்பா மகளின் முடிவிற்கு சம்மதித்தார்.

திருநெல்வேலி செல்லும் தீபாவிற்கு துணையாக அவளது பாட்டியும் தாத்தாவும் உடன் வந்திருந்தனர்.

நெல்லை ஹைகிரவுண்ட் ஜி.ஹெச்சில் தன் முதல் நாள் பணியினை தொடங்கினாள் தீபா.

காலை பத்து மணியளவில், மகப்பேறு பிரிவில் அவுட் பேஷண்ட்ஸை ஒவ்வொருவராக அவள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, 20 வயதிற்குள் மதிக்க தக்க ஓர் இளம்பெண் தனது மூன்று வயது மகனுடன் அறையினுள் வந்தாள். தீபா அவளிடம்.......

"சொல்லுங்கம்மா.......உங்க பேர் என்ன?"

"ச....சரஸ்வதி"

"உடம்புக்கு என்ன???"

"எனக்கு.........அபார்ஷன் பண்ணனும் டாக்டர்....."

"எத்தனை மாசம் இப்போ....."

"இரண்டு...."

"ஏன்மா........இந்த குழந்தை வேணாம்னு கலைக்க சொல்ற"

பதில் சொல்லவில்லை சரஸ்வதி, மாறாக சிறு விசும்பலுடன் அழ ஆரம்பித்தாள்.

"ஆழாதேமா.........என்ன காரணம்னு சொல்லு என்கிட்ட"

"டாக்டரம்மா......இந்த குழந்தை வேணாம்......கலைச்சிருங்க....."

"அதான் ஏன்னு கேட்கிறேன்.......உன் முத குழந்தைக்கு ரெண்டு அல்லது மூணு வயசு இருக்குமா இப்போ?......அப்புறம் ஏன் இரண்டாவது குழந்தை வேணாம்னு சொல்ற"

"என்....என் வீட்டுக்காரர் இந்த குழந்தையை அவரோடதில்லைன்னு சந்தேகப்படுறார்"

"சந்தேகப்படுறாரா???...............இது அவர் குழந்தைதானே?"

"அய்யோ......டாக்ட்டரம்மா......சத்தியமா இது அவர் குழந்தைதாம்மா, ஆனா அந்த மனுஷன் தான் என்னையும் அவரோட கூட்டாளியையும் சேர்த்து வைச்சு அசிங்கமா பேசி..........தினத்திக்கும் அடிக்கிறார்மா"

இப்போது சரஸ்வதியின் அழுகை அதிகரித்தது.

அவளை கூர்ந்து நோக்கினாள் தீபா.......நல்ல படித்த , வசதியான குடும்பத்து பெண்ணிற்கு, ஏழை பெண்ணாக மாறுவேஷம் போட்டது போன்று ஒரு தோற்றம் அவளிடம்.

சரஸ்வதியின் முகத்தில் ஒரு வெகுளித்தனம்,
அழகான வட்ட முக அமைப்பு,
மினுமினுப்பான தங்க நிறம்...ஏழ்மையினால் மங்கியிருந்தது,
அவளது நூல் புடவையையும், வெற்று கழுத்தையும் மீறி அவளது அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் வண்ணமிருந்தது.

"உன் புருஷன் அடிக்கிறார்னா........நீ உன் அப்பா அம்மாகிட்ட சொல்லு, அவங்க சொல்லியும் கேட்கலீனா......குழந்தை பிறக்கிற வரைக்கும் உன் அப்பா அம்மா வீட்ல இரு, இப்படி அவசரப்பட்டு கர்பத்தை கலைக்க கூடாதுமா"

டாக்டர் தீபா ............அப்பா, அம்மா என்று வார்த்தைக்கு வார்த்தை கூறவும், "ஓ!!" வென தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் சரஸ்வதி....

பதற்றதுடன் தீபா அவளிடம் என்னவென்று விசாரிக்க, அழுகையினுடனே பேச ஆரம்பித்தாள் சரஸ்வதி.....


"அப்பா அம்மா பேச்சை கேட்காம......பதினொன்னாங் க்ளாஸ் படிக்கிறப்போ, இந்த ஆட்டோகாரரோட ஓடி வந்துட்டேன்......எல்லாம் வயசு கோளாறுமா........என்னைய என் வீட்ல தலைமூழ்கிட்டாங்க......இப்போ நாதி அத்து போய் இந்த குடிகார பயலோட கொச்சையான பேச்சையும்,ஏச்சையும் கேட்டுக்கிட்டு, அடியும் வாங்கிக்கிட்டு..........நான் பெத்த இந்த பையனுக்காக உசிரோட இருக்கேன்"

அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, ஆசுவாசப்படுத்திய தீபா, அவளுக்கு ஆறுதல் கூறியதோடு நிறுத்தாமல், அவளது பத்தாம் வகுப்பு சான்றிதளை தன்னிடம் தந்தால், சரஸ்வதி பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்ச்சை எழுத உதவி செய்வதாகவும்,பின் தட்டச்சு படித்து ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு செல்லலாம், புருஷனுக்கும் உறுதுணையாக இருந்து, இருவரும் நல்ல நிலைமைக்கு வரலாம் என்று அறிவுரை கூறினாள்.

தன் கரம் கூப்பி தீபாவுக்கு நன்றி கூறிய சரஸ்வதி, முகத்தில் ஒரு தெளிவுடன் அவ்வறையைவிட்டு வெளியேறினாள்.

இரண்டு நாள் கழித்து , முகத்திலும் கையிலும் சிறு சிறு காயங்களுடன் தீபாவை சந்திக்க வந்தாள் சரஸ்வதி.

தனது பத்தாம் வகுப்பு சான்றிதழை தேடியபோது, தான் தொடர்ந்து படிக்க போவது அறிந்து, தன்னை தன் கணவன் அடித்ததாகவும், எப்படியோ அவனுக்கு தெரியாமல் பரணிலிருந்த சான்றிதழை எடுத்து வந்ததாகவும் கூறி, தன் சான்றிதழ்களை தீபாவிடம் கொடுத்தாள் சரஸ்வதி.

சரஸ்வதியின் கண்களில் , எப்படியும் மேற்கொண்டு படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், விருப்பமும் இருப்பதை தீபாவால் உணர முடிந்தது.

இனிமேலும் மேற்படிப்பிற்கு சரஸ்வதியின் கணவன் எதிர்ப்பு தெரிவித்தால், அவனை தன்னிடம் அழைத்துவருமாறும், தான் அவருக்கு பெண்களுக்கு படிப்பு எத்தனை முக்கியமென்பதை எடுத்துக் கூறுவதாகவும் அவளுக்கு வாக்களித்து, அவளை அனுப்பி வைத்தாள் தீபா.

அதன்பின் டாக்டர் தீபா, ஆப்ரேஷன் தியேட்டரில் ஒரு பெண்ணிற்கு சிசேரியன் முறையில் டெலிவரி செய்துவிட்டு, தனது அறைக்கு திரும்பியபோது...........எதேச்சையாக வராண்டாவில் தன் எதிரில் வந்த நபர் மீது மோதிக்கொண்டாள்.
தலை நிமிர்ந்த தீபா, தான் மோதியது ஒரு காவல் துறை அதிகாரியின் மேல் என்பதை அவரது சீருடையின் மூலம் அறிந்துக்கொண்டு,

"ஸாரி........ஸாரி சார்" என்றாள்.

"இட்ஸ் ஓகே...." என்று அவர் பதலளித்ததும், தீபா அவரை கடந்து சென்றாள்.

இரண்டு அடிதான் அவள் எடுத்து வைத்திருப்பாள், திடீரென "தீபா........" என்று ஒருமையில் தன் பெயரை யாரோ மிக அருகாமையில் அழைத்ததும், நின்று திரும்பிய தீபா, அவள் மோதிய் அந்த போலீஸ்காரர், தன் போலீஸ் தொப்பியை கழற்றிவிட்டு சிரித்த முகத்துடன் தன்னை நோக்கி வருவதை குழப்பத்துடன் பார்த்தாள்.

"தீபா............என்னை யார்ன்னு தெரியுதா??"

"............"

" தீபா............நான் கார்த்திக்.............கார்த்திக் குமார், +2 படிக்கிறப்போ உன் கூட கெமிஸ்ட்ரி டியூஷன் படிச்சேனே.........ஞாபகமிருக்கா??"

"ஏ..........கார்த்தி............நீ.........நீயா...........சட்டுன்னு இந்த கெட்டப்ல உன்னை அடையாளமே தெரில"

"ஹலோ டாக்டர் மேடம்..........இது என் யூனிஃபார்ம், ........கெட்டப் செட்டப்னு சொல்லிட்டீயே.......இப்போ நான் கார்த்திக் ஐ.பி.எஸ்" என்று காலரை தூக்கிவிட்டு குறும்பு புன்னகை புரிந்தான்.

"ஹையோ.........ஸோ ஸாரி..........ஐ.பி.எஸ் சார்............தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுடுங்க" என்று பதிலுக்கு அவளும் சிரிப்புடன் பதிலளித்தாள்.

"ச்சே.....ச்சே......எதுக்கு ஸாரி எல்லாம் கேட்கிறீங்க டாக்டர் மேடம்" என்று கண்சிமிட்டியவன்,

"நாம மீட் பண்ணி ஒரு 6 அல்லது 7 வருஷம் இருக்குமா??......ஸ்கூல் டேய்ஸ்ல ரோட் ஸைட் ரோமியோ கெட்டப்ல பார்த்த ஒருத்தனை, போலீஸ் யூனிஃபார்மல இப்போ பார்த்தா நிச்சயம் அடையாளம் தெரியாது............"

"ஐ.பி.எஸ்...........படிச்சிருந்தாலும்........இன்னும் உன்னோட அந்த குறும்பு பேச்சும், சிரிப்பும் மாறவே இல்ல கார்த்தி"

பின் இருவரது பேச்சும் தங்கள் தொழில் சம்பந்தமாக சென்றது, ஒரு கொலை கேஸ் விஷயமாக, இன்வெஸ்டிகேஷனுக்காக தான் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக கூறினான் கார்த்திக்.

இருவரும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு விடைபெற்றனர்.

அன்று சாயந்திரம் ஹாஸ்ப்பிட்டல் ட்யூட்டி முடிந்து தனது காரில் டாக்டர் தீபா வீடு திரும்பிக்கொண்டிருக்கையில்..........ஒரு வளைவில் கார் திரும்பும் போது, எதிரில் கையில் சிறு குழந்தையுடன் ஒரு பெண் கதறிக்கொண்டு ரோட்டை வேகமாக க்ராஸ் செய்ய, தீபாவின் கார் ட்ரைவர் சடன் ப்ரேக் போட்டார், தீபா அதிர்ச்சியுடன் அந்த பெண்ணை கூர்ந்து நோக்கினாள்,

'இது........இது.........சரஸ்வதிதானே' இவ ஏன் இப்படி ஓடுறா ரோட்ல............தீபா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவளை துரத்திக்கொண்டு கையில் ஒரு பெரிய கட்டையுடன் ஒரு ஆள் சந்திலிருந்து பின்னால் ஓடி வந்தான், அது அவளது கணவனாக இருக்க வேண்டும் என்று நொடியில் யூகித்துக்கொண்டாள் தீபா.

"ஓ..........மை காட்...!"

சரஸ்வதியை காப்பாற்ற வேண்டும் என்று தீபா தன் காரிலிருந்து இறங்குவதற்குள்...........

[தொடரும்]

பகுதி - 2