March 30, 2009

சந்தித்தவேளை - 2 [பகுதி 1]

கோயமுத்தூர் பொறியியல் கல்லூரியில், ஹாஸ்டலில் தங்கிருந்து தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தபின், .........சுமார் ஐந்து வருடங்கள் கழித்து, தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருந்தான் சத்யா எனும் சத்யப்ரகாஷ்!

சில மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு வேலை மாறுதலாகி வந்திருந்த தனது அண்ணன் ராம்குமார் வீட்டில் தங்கிருந்தான் சத்யா. அவனது அண்ணனுக்கு, மனைவி கிரிஜா மற்றும் நான்கு வயது வருண் என்று ஒரு அழகான அளவான குடும்பம்.

பல வருடங்களுக்கு பின் கோவையின் ஜில்லென்ற காற்றை சுவாதித்தபடி, கல்லூரி நாட்களின் நினைவுகளை அசை போட்டபடி ஆர்.எஸ்.புரம், டி.பி ரோட்டில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட்டில் சந்திப்பதாக சொன்ன தனது நண்பனை சந்திக்க பைக்கில் சென்றான் சத்யா.

ஃபாஸ்ட் ஃபுட் கடையின் கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவன், தன் ஃப்ரண்ட் ரவி எங்கே என்று தேடி கண்களை அலைபாய விட்டான்,

நான்காவது டேபிளில் ஐந்தாரு கல்லூரி பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர், தீடிரென அதில் ஒரு பெண் சதயாவை நோக்கி....

"ஹலோ பேரர்...........எஸ்கூஸ்மீ.......கெட்சப் ப்ளீஸ்" என்று குரல் கொடுத்தாள்.

அவள் தன்னிடம்தான் கூறுகிறாளா? என்று விழித்த சத்யா, தனக்குபின் பேரர் யாரும் நிற்கிறார்களா என்று திரும்பி பார்த்தான், அதற்குள் மீண்டும் அந்த பெண்.......

"பேரர் உங்களைத்தான்.........டோமேட்டோ கெட்சப் வேணும்" என்றாள்.

'அடிப்பாவி, என்னையவா பேரர்ன்னு நினைச்சுட்டா??' கோபத்தில் சத்யாவின் மூக்கு வெடவெடத்தது........அவளது டேபிளுக்கு அருகில் சென்றவன்,

"ஹலோ....என்னைய பார்த்தா பேரர் மாதிரி இருக்கா??" என்றான் எரிச்சலுடன்.

"ஆ..........ஆமா..."

"என்ன ஆமா...நோமா.....பேரர் யாரு கஸ்டமர் யாருன்னு தெரிஞ்சுட்டு பேசனும், புரிஞ்சுதா?"

"சார்....கூல் டவுன் சார், கொஞ்சம் கண்ணை நல்லா திறந்து பாருங்க, இந்த ஃபாஸ்ட் ஃபுட் பேரர்ஸ் போட்டிருக்கிற யூனிஃபார்ம்......மஞ்ச கலர் ஷர்ட், ப்ளு பாண்ட்.......அப்படியே மெதுவா உங்க ட்ரஸ் கலர் என்னன்னு பாருங்க, அப்புறம சொல்லுங்க நான் உங்களை பேரர்ன்னு கூப்பிட்டது தப்பா, சரியான்னு"

அங்கு பணியில் இருந்த மற்றோரு பேரரின் யூனிஃபார்மை அப்போதுதான் கவனித்தான் சத்யா....

"மஞ்ச சட்டை போட்டிருந்தா.......யாருன்னு கூட யோசிக்காம, இப்படி பேரர்ன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்திடறதா??"

"ஹலோ.......ஹலோ..........பேரர்ன்னா என்ன சார் அவ்ளோ கேவலமா??? இப்படி இளக்காரமா பேசுறீங்க.......நீங்க பேரர்ஸ் போட்டிருக்கிற கலர் ட்ரஸ் போட்டுட்டு ஒவ்வொரு டேபிளா கூர்ந்து பார்த்துட்டு இருந்தீங்க, சரி........வேலைக்கு புதுசு போல ன்னு நினைச்சுட்டு.......டோமேட்டோ கெட்சப் கேட்டேன்........"

சத்யா பதில் பேசும்முன் அவனது நண்பன் ரவி அங்கு வந்துவிட,

"டேய் இங்க என்னடா ப்ரச்சனை........" என்றான் பதட்டத்துடன்.

"என்னய பார்த்து பேரர்ன்னு சொல்றாடா இந்த பொண்ணு.........தெரியாம சொல்லிட்டேன் ஸாரி ன்னு ஒரு வார்த்தை சொல்லாம பேசிட்டே போறா....."

"சரி .....சரி விடுடா......வேற முக்கியமான வேலை இருக்குடா, நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் வெயிட்டிங் உனக்காக..........நாம கிளம்பலாம் வா" என்று சத்யாவை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வெளியேறினான் ரவி.

கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு வெளியேறும் போது திரும்பி அவளைப் பார்த்தான் சத்யா......


திருவிழா கூட்டத்தில் கூட பளிச்சென்று தெரியும் அழகு!
துரு துரு கண்களில் உற்சாகம் துள்ளிக்கொண்டிருந்தது,
வெண்ணையில் செய்த கன்னங்கள்,
எளிமையான அலங்காரம்,
ஒரு கணம் அவளது முகத்தை ஆராய்ந்தவன்,
அவள் அவனைப் பார்த்து உதடு சுளித்து நமட்டு சிரிப்பு சிரித்ததும்,
கோபமெல்லாம் மறந்து....சத்யாவின் உள்ளுக்குள் ஒர் உணர்வு தென்றல் வருடிச்சென்று...... மனதிற்குள் புன்னகைக்க வைத்தது!

என் கோபங்களையும்
கொன்று விடுகிறது உன்
கள்ள சிரிப்பு...!!
என் இதய துடிப்பும்
உன் இமைகளின் அசைவில்
அதிர்கிறதே ....!!!

தேவதை திருவிழாக்களில்
தொலைந்து போன தேவதை
நீ தானோ???


அன்றைய நாள் முழுவதும் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு, மறுநாள் நண்பனின் திருமண வரவேற்பில் நண்பர்களை மீட் பண்ணலாம் என்று விடை பெற்றுக்கொண்ட சத்யா, தன் அண்ணன் வீட்டிற்கு திரும்பும் வழியில் பழமுதிர் நிலையத்தை பார்த்ததும், ஜூஸ் குடிப்பதற்காக தன் பைக்கை நிறுத்தினான்.....

பைக்கை ஆஃப் செய்துவிட்டு காலை பின் பக்கமாக தூக்கி நின்றபோது, ஏதோ மென்மையாக படவே திரும்பி பார்த்தான் சத்யா!

அங்கு.....தன் கைகளை கட்டிக்கொண்டு, எரிக்கும் பார்வை பாத்தபடி கோபமாக நின்றிருந்தாள் 'அவள்'!!

'அடடே!! நம்ம பைக்ல இருந்து இறங்குறப்போ எட்டி உதைச்சது 'ஃபாஸ்ட்' ஃபுட் அம்மனி மேலதானா?......இவமேலன்னு தெரிஞ்சிருந்தா, இன்னும் கொஞ்சம் வேகமாக காலை தூக்கி போட்டிருக்கலாமே' என்று நினைத்துக்கொண்டே சத்யா குறும்புடன் அவளை நோக்க.......

"என்ன மிஸ்டர்.......கண்ணு தெரிலையா???" என்றாள் காட்டமாக.

"ஆமா தெரில.....உங்களுக்கு நல்லா கண்ணு தெரிதில்ல, பைக்ல இருந்து இறங்குறானே ஒருத்தன்......கொஞ்சம் விலகி நிப்போம்னு ஒழுங்க நிற்கிருதுக்கென்ன???" என்றான் சத்யா.

"ஹலோ ...பின்னால யாரு இருக்காங்கன்னு பார்த்து இறங்கிறதில்ல.....அப்புறம் பேச்சு மட்டும் பெருசா பேசுறீங்க?"

"இதென்ன சைக்கிள்ளா முன்னாடிலேர்ந்து காலை எடுக்க, இது பைக்மா.....பைக், இப்படித்தான் இறங்குவோம், நீங்கதான் பார்த்து நகர்ந்து நிக்கனும்" என்றான் சத்யாவும் விடாமல்.

"கவனிக்காம .....தெரியாம இடிச்சுட்டேன் ஸாரின்னு சொல்றதை விட்டுட்டு என்ன ஓவரா பேசுறீங்க"

"ஸாரி கேட்கிறதை பத்தி நீங்க பேசாப்பிடாதுங்க மேடம்.......காலையில ஃபாஸ்ட் புட்ல அந்த அமளி பண்ணினீங்க, ஒரு ஸாரி கேட்டீங்களா நீங்க??"

"அது வேற.......இது வேற" கடுகடுப்புடன் பதிலளித்தாள் அவள்.

"சரி ரொம்ப சூடா இருக்கிறீங்க......ரெண்டு பேரும்.ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடிச்சுட்டு, அப்புறம் யாரு முதல்ல ஸாரி கேட்கிறதுன்னு முடிவு பண்ணலாம்"


"ஒன்னும் தேவையில்ல........உங்க ஓசி ஜூஸ் இங்க யாருக்கு வேணும்"

"ஹலோ அம்மனி.......ஜீஸ் குடிக்கலாம்னு தான் சொன்னேன்.....உங்க ஜூஸ்க்கு நானே காசு கொடுக்கிறேன்னு சொன்னேன்னா, இருந்தாலும் உங்களுக்கு ஓசி சாப்பாடுன்னா ரொம்பதாங்க ஆசை.......காலையில் ஓசில பர்கர் ஒரு பிடி பிடிச்சுட்டு இருந்தீங்க ஃபாஸ்ட் ஃபுட்ல.......இப்போ என் கணக்குல ஜூஸ் குடிச்சுடலாம்னு நினைச்சீங்களா??"

கோபத்தில் பதில் ஏதும் சொல்லாமல்.........உதடை சுளித்துவிட்டு, வேக வேகமாக தான் நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டியை நோக்கி சென்றாள் அவள்.

ஸ்கூட்டியில் செல்லும் அவளை பார்த்த சத்யா....
கோயம்புத்தூர் பொண்ணுங்களுக்கு
குசும்பு தான் ஜாஸ்தின்னு நினைச்சா...
கோபமும் நல்லாத்தான் வருது!
என்று சிரித்துக்கொண்டான்.

ஒரு ஆப்பிள் ஜுஸ்க்கு ஆர்டர் செய்துவிட்டு அவன் காத்திருக்கும் போது அவனது பெங்களுர் நண்பன் மொபைல் ஃபோன்க்கு கால் செய்தான், அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு , பின் தன் அண்ணனின் ஃபளாட்டிற்கு சென்றான் சத்யா.

இரண்டாவது தளத்தில் இருக்கும் தன் அண்ணனின் வீட்டிற்கு செல்ல அவன் படிகளில் ஏறும்போது, மீண்டும் அவனது செல்ஃபோன் சினுங்கியது, பேசியது அவன் அண்ணன்......

"டேய், சத்யா நான் ராம் பேசுறேன்........வருணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, அண்ணி அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்கா, நான் ஆஃபீஸ்ல இருந்து நேரா ஹாஸ்பிட்டல் போய் அவங்களை கூட்டிட்டு வரேன், நம்ம வீட்டு சாவி ஃபோர்த் ஃபோளிர்ல ........16 C ஃப்ளாட்ல போய் வாங்கிக்கோ, நாங்க இப்போ கொஞ்ச நேரத்துல வந்துடுறோம்டா"

"சரிண்ணா........"

மொபைலை அணைத்துவிட்டு............ஃபோர்த் ஃப்ளோர்..........16 C....என்று மனதிற்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டே மாடி படிகளில் தாவி தாவி ஏறி ஃபோர்த் ஃப்ளோருக்கு சென்ற சத்யா, 16 C க்கு அருகில் வந்தபோது.....

முன் ஹாலின் ஜன்னல் திறந்து இருந்திருக்க.......அங்கு ஸோஃபாவில் காலை தூக்கிவைத்துக்கொண்டு டி.வி பார்த்துக்கொண்டிருக்கும் உருவம், மிகவும் ப்ரிச்சயமானதாக தெரியவே.....கூர்ந்து கவனித்தான்....


' அட நம்ம...........ஃபாஸ்ட் ஃபுட் மஞ்சக்குருவி!!!......இது இவ வீடுதானா?? அவ்ளோ லொள்ளு பண்ணினா இல்ல.........அவளுக்கு இப்போ ஒரு ஷாக் கொடுக்கலாம் ' என்று நினைத்தபடி......16 C காலிங் பெல்லை அழுத்தினான் சத்யா......!

இந்த 'சந்தித்தவேளை'யை ஒரே பகுதியில் எழுதிட இயலாத காரணத்தால்..........சந்திப்பு அடுத்த பகுதியில் தொடரும்.


பகுதி - 2

March 24, 2009

'அவரிடம்'........சில கேள்விகள்!!!




'பெண் பார்க்க வர்ராங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க'ன்னு சொன்னதுமே, பெண் வீட்டிலுள்ளவர்களுக்கு ஒரு பரபரப்பும்,
பப்ளிக் எக்ஸாம் எழுத போவது போன்ற படபடப்பு பெண்ணிற்கும் ஏற்படுவது இயல்பு.

"அதென்ன பெண் பார்க்க வந்தா, பொண்ணு பட்டு புடவை தான் கட்டிக்கனுமா?? தினமும் பட்டு புடவையிலா குடும்பம் நடத்த போறேன்.....எதுக்கு கல்யாண பெண் மாதிரி அலங்கரிச்சுக்க சொல்றாங்க??"

"உனக்கு சமைக்க தெரியுமான்னு?? பொண்ணுகிட்ட கேட்டா ஒரு அர்த்தம் இருக்கு.........பொண்ணு பையனுக்கு சமைக்குமா? இல்ல பையன் தான் பொண்ணுக்கும் சேர்த்து சமைக்கனுமான்னு தெரிஞ்சுக்கலாம், அதை விட்டுட்டு.....பாட்டு பாடுன்னு கேட்கிறதெல்லாம், சுத்த பேத்தல், .......
'சூப்பர் ஸிங்கர்'க்கு ஆடிஷனா நடத்தறாங்க???"

இப்படி தங்கள் ஆதகங்களை பெண்கள் வெளிப்படுத்த ஆரம்பித்த பிறகு, இயல்பான உடையில், சகஜமான சூழ்நிலையில் பெண்பார்க்கும் சம்பவங்கள் இன்று நடைபெற்றாலும், இந்த டென்ஷன் மட்டும் பெண்ணுக்கும் பெண் வீட்டாருக்கும் குறைந்த பாடில்லை.

பெண் பார்க்கும் வைபவத்தில், "பையனுக்கு பொண்ணுகிட்ட பத்து நிமிஷம் தனியா பேசனுமாம்" என்று மாப்பிள்ளை வீட்டு கூட்டத்தில் இருந்து ஒருவர் குரல் கொடுப்பார், உடனே பெண்ணையும், பையனையும் தனியாக பேச அனுமதிப்பார்கள்.
பையன் தான் பேச நினைத்ததை பேசிவிட்டு......பெண்ணிடம் தான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்பார், பொண்ணும்....
"ஆங்"..."ஆமா"...."இல்லை" என்று ஒரிரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு,
"உங்களுக்கு என்கிட்ட ஏதாவது பேசனுமா.....கேட்கனுமா?"அப்படின்னு மாப்பிள்ளை பையன் பேச சந்தர்ப்பம் கொடுத்தா கூட, பேசாம 'பெப்பே பெப்பே' என்று முழிப்பாள்.

எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ......சேலை நுனியை திருகிக்கிட்டு, தலை குனிஞ்சுட்டு, 'ஆமா'...'இல்லை' ன்னு மண்டைய மண்டைய ஆட்டி ஃபில்ம் காட்டுறது????

பெண்ணும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,பையனிடம் பேசி, சில பல கேள்விகள் கேட்டு பையனை பற்றி தெரிந்துக்கொள்ளலாமே!!!

* பையன் பெண்ணிடம் தனியா பேச விருப்பப்படுறான்னு சொன்னா, அவனுக்கு பெண்ணின் தோற்றம்[appearance]பிடிச்சு போய்டுச்சு, அடுத்து அனுகுமுறை[approach] எப்படின்னு தெரிஞ்சுக்கத்தான் தனியா பேசனும்னு சொல்லுவார்.

ஸோ.....உங்களுக்கு[பெண்ணிற்கு] அவரோட தோற்றம் மனசுக்கு பிடிச்சிருந்தா, அவருடைய பெர்ஸனாலிட்டி/approach எல்லாம் எப்படின்ன்னு தெரிஞ்சுக்க பேசிப் பாருங்க.

* 'எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது?'
'பேசினா தப்பா நினைப்பாறோ??'
அப்படின்னு எல்லாம் தடுமாறாம......இயல்பா இருங்க.
அதான் உங்க appearance test ல பாஸ் ஆகிட்டீங்களே.......ஸோ நோ மோர் டென்ஷன்!!

ஆனா......என்ன பேசுறதுன்னு முன் யோசனை இல்லாம.......

"உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும்"னு அசட்டுத்தனமான கேள்வி எல்லாம் கேட்காம.........கிடைச்ச 5 நிமிஷத்துல உருப்படியா பேசனும்.

* முதல் முதலா கேட்கிற கேள்வி...........அவருடைய வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது இருக்கா?? இருந்தா.........அது என்ன? அப்படின்னு கேட்கலாம்.

தன் வேலையிலோ[career], தொழிலோ சில உயர்வான நிலையை அடைவது அவரது லட்ச்சியமாக அவர் கூறினால், வாழ்க்கையை திட்டமிட்டு , ஒரு குறிக்கோளோடு முன்னேறி செல்பவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.

[ 'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க']

*அடுத்து அவருக்கு, பிடித்தமான பொழுதுபோக்கு[hobby] என்னன்னு கேட்கலாம்.......அந்த ஹாபி விளையாட்டு சம்மந்தமானதாக இருந்தால், உடம்பை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் அக்கறை உள்ளவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.
அப்படியே 'ஜிம்' க்கு போற பழக்கம் இருக்கான்னும் கேட்டுக்கங்க.

*நீங்க வேலைக்கு சென்று கொண்டிருப்பவராக இருந்தால், திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வதில் அவரது விருப்பம் என்ன என்பதை பேசி தெரிந்துக் கொள்வது நலம்.

வேலை பார்க்கும் இடம் காரணமாக இருவரும் வெவ்வேறு ஊரில் பணிபுரிந்தால், இடம் மாறுதல் சாத்தியமா?அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்வது நல்லது.

*அடுத்த முக்கியமான விஷயம், அவரது பழக்க வழக்கங்கள்.

உங்களுக்கு சிகரெட், மது பழக்கங்கள் சுத்தமாக பிடிக்காது என்றால், அவருக்கு அந்த பழக்கம் இருக்கிறதா என்பதை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

"கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை விட ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன்..........கல்யாணத்துக்கு அப்புறமா முழுசா விட்டுறுவேன்" அப்படின்னு டயலாக் விட்டா.......உஷார்!!!

பழக்கத்தை கைவிடனும்னு நினைச்சா..........கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்லையே!
ஸோ.....எந்த காரணத்தை கொண்டும் உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்காதீங்க.

[ஸ்மோக்கிங் & occational drinking .......ஆணின் மேனரிஸமாக நீங்க கருதினா, இந்த கேள்வி உங்களுக்கு முக்கியமானதாக இருக்காது]

* உங்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், லட்சியங்கள் இருந்தால், அதனை அவரிடம் தெளிவாக வெளிப்படுத்துங்கள்.
உதாரணமாக.... பாட்டு, டான்ஸ்.........போன்ற கலைகளில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்குமானால், திருமணத்திற்கு பின்பு உங்கள் கலை ஆர்வத்தை எந்த நிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவு படுத்துவது நல்லது.

* இதுவரை கேட்ட கேள்விகளும், உரையாடலும்.......உங்களுக்கு அவரிடம் ஒருவித மனம் ஒத்துபோன இயல்பான சூழ்நிலையை[comfort zone] ஏற்படுத்தியிருக்குமானால்,
அவரது கடந்த கால காதல் விவகாரம், அல்லது உங்கள் வாழ்க்கையில் அவ்விதம் ஏதும் இருந்தால் அவரிடம் மனம் விட்டு பேசலாம்.

தனியாக பேச கிடைத்த 10 நிமிஷ சந்தர்ப்பத்தில், ஒருவரையொருவர் முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலாவிட்டாலும்,
"இவருடன் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒத்து போகுமா??" போன்ற சில கேள்விகளுக்கு பதிலும், முடிவெடுக்க மனதில் ஒரு தெளிவும் நிச்சயம் வரும்.

கண்டதும் காதல் வரும்போது....
கலந்து பேசி புரிதல் வருவது சாத்தியம்தானே!!


'அவளிடம்'......சில கேள்விகள்!!!



March 16, 2009

சந்தித்தவேளை - 1



கோயம்புத்தூர் நிர்மலா கல்லூரியில் பி.காம் படித்து முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தன் சித்தியின் வீட்டில் தங்கியிருந்து பட்டபடிப்பினை தொடர,அங்குள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.பி.ஏ அட்மிஷனிற்காக தன் பெற்றோருடன் சென்னைக்கு சென்றாள் அபிநயா.

ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து, தூரத்து உறவினர் இல்லத்திருமண விழாவிற்கும் சென்றுவிட்டு, அபியும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்ததும் கோயம்புத்தூர் திருமபலாம் என முடிவு செய்திருந்தனர் அவளது பெற்றோர்.

அபிநயாவின் சித்தி மகள் மாலினி, எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ படித்துக்கொண்டிருக்கும் சுட்டி பெண்.சிறுவயதிலிருந்தே அபியும் மாலினியும் அக்கா தங்கை என்பதற்கும் மேலாக நல்ல தோழிகள்.மாலினியின் தம்பி வருண் பள்ளியில் +1 படித்துக்கொண்டிருந்தான்.

மூவரும் நீண்ட நாட்களுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதால், லூட்டி அடித்துக்கொண்டிருக்க, வீட்டிலுள்ள பெரியவர்கள் மட்டும் உறவினரின் திருமண வரவேற்பிற்கு சென்றனர்.
திருமண விழாவில் தன் பள்ளிகால நண்பரான நடராஜனை சந்தித்தார் அபியின் அப்பா பாலு.
பல வருடங்களுக்கு பின் ஏதேச்சையாக சந்தித்துக்கொண்டதும், நண்பர்கள் இருவரும் உற்சாகமாக அரட்டை அடித்துக்கொண்டனர்.

நடராஜ் தன் மனைவி மற்றும் மகன் கிஷோரை பாலுவின் குடும்பத்திற்கு அறிமுகப் படுத்தினார்.பெரியவர்களுக்கு மரியாதையுடன் வணக்கம் தெரிவித்த கிஷோர், தன் நண்பர்களின் கூட்டத்தோடு மீண்டும் கலந்துவிட்டான்.

தன் மகள் அபிநயா தங்களுடன் வராததால், தனது மணிபர்ஸலிருந்த குடும்ப புகைப்படத்தை நண்பனுக்கும், அவரது மனைவிக்கும் காட்டினார் பாலு.


அபி எனும் அழகு தேவதையை புகைப்படத்தில் கண்டதும், நடராஜும் அவரது மனைவியும் ஒரு அர்த்த புன்னகை உதிர்த்தனர்.
பின், தங்கள் மகன் கிஷோருக்கு 3 மாதத்துக்குள் திருமணம் செய்துவிடுவது அவனது ஜாதகப்படி நல்லது, என கடந்த வாரம் ஜோசியர் தங்களிடம் சொல்லியதை தெரிவித்து, நண்பர்கள் சம்பந்திகளாவது குறித்து பேசினர்.
பாலுவின் குடும்பத்திற்கும் முழு விருப்பமாக இருந்ததால், அபியிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமலே , வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வீட்டுற்கு அழைத்தனர்.

திருமண வைபவம் முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர், பெண் பார்க்க வரும் செய்தியை அபியிடம் சொன்னதும், அவள் முழுவதுமாய் உடைந்து போனாள்.
தனது எம்.பி.ஏ கணவு ஒரு சில மணி நேரத்தில் சிதைக்கபட்டுவிட்டதை உணர்ந்த அபி, தன் அம்மாவிடமும் சித்தியிடமும் அழுது கெஞ்சியும், எதுவும் பலிக்கவில்லை.அவளது அப்பா முடிவு என்று ஒன்று எடுத்துவிட்டால்.....யார் சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டார் என்பது குடும்பத்தில் அனைவரும் அறிந்திருந்தபடியால், அபியின் கெஞ்சுதல் அர்த்தமற்று போனது.

இவ்வளவு நேரம் தங்களுடன் சிரித்து பேசி கும்மாளமடித்து கொண்டிருந்த அபி, இப்படி உடைந்து போய் அழுவது கண்டு, மாலினியும் வருணும் அவளை சமாதனப்படுத்தினர்.

"அபி அக்கா........உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னா......அந்த மாப்பிள்ளை பையன் பொண்ணு பார்க்க வர்ரப்போ, தனியா 10 நிமிஷம் பேசனும்னு கூப்பிட்டு, உனக்கு இஷ்டமில்லன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடு, அப்படியும் மாப்பிள்ளை பையன் கேட்கலைன்னு வை..........என்கிட்ட சொல்லு நான் பாத்துக்கிறேன்" என்று பெரிய மனுஷன் மாதிரி பேசினான் வருண்.



"அப்படி தனியா பேச அப்பா......சம்மதிப்பாரா தெரியல......அதுவும் மாப்பிள்ளை பையன் கேட்காம நான் எப்படிடா தனியா பேசனும்னு சொல்ல முடியும்"என்றாள் அபி பாவமான முகத்துடன். அவள் கண்களில் தன் அப்பாவின் மீது வைத்திருந்த பயம் அப்பட்டமாக தெரிந்தது.

"அபி சொல்றதும் சரிதான்டா வருண்......பெரியப்பாகிட்ட இதெல்லாம் செல்லாது..............ஒரே வழிதான் இருக்கு அபி இதுல இருந்து தப்பிக்க"

"என்னடி அது........."

"நேரா மாப்பிள்ளை பையனையே போய் அபி அக்கா மீட் பண்ணிடுறதுதான்........."

"என்னடி உளர்ற......."

"நான் சொல்றதை கேளு அபி............மாப்பிள்ளை பையன் ஃபோடோ கூட நம்மகிட்ட காட்டல, பட் இட்ஸ் ஒகே.........நான் நைஸா மாப்பிள்ளை பையன் எங்கே வேலை பார்ர்கிறார்ன்னு என் அம்மா கிட்ட கேட்டு தெரிஞ்சுட்டு வரேன், வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வர்றதால.....ப்யூட்டு பார்லர்ல ஃபேஷியல் பண்ணனும்னு சொல்லி உன்னை நான் வெளியில கூட்டிட்டு போறேன், நாம இரண்டு பேரும் போய் அந்த பையனை நேர்ல மீட் பண்ணி, எப்படியாச்சும் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்கன்னு கேட்டுப்பார்க்கலாம்"

"ஹை........இது சூப்பர் ஐடியா மாலு.........உனக்கு கூட அப்பப்போ மூளை வேலை செய்யுதே" என கிண்டலடித்தான் வருண்.

எப்படியாவது இந்த கல்யாணம் நடக்க கூடாது, தன் எம்.பி.ஏ படிப்பும் கெட கூடாது என்ற ஆசையில் அபியும் சம்மதித்து, மாலினியுடன் மறுநாள் சென்றாள்.

சென்னையிலுள்ள ஒரு பிரசித்தமான ஃப்ர்னிச்சர் கடையின் சொந்தக்காரர் தான் திரு.நடராஜ் என்பதையும், ராயப்பேட்டையிலுள்ள கிளையினை அவரது மகன், மாப்பிள்ளை பையன் கிஷோர் பார்த்துக்கொள்வதையும் மாலினி தன் அம்மாவிடம் கேட்டு தெரிந்து வைத்திருந்தாள்.

இருவரும் கடையினை நெருங்கியதும் , அதன் பிரமாண்டத்தை கண்டு ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் மலைத்துபோயினர்.
பின் கடையின் கீழ்தளத்தில் இருந்த கடை பையனிடம் , கடையின் ஓனர் திரு,கிஷோரை பார்க்கவேண்டும் என்று கூறி, மேல் தளத்தில் இருக்கும் அவனது அறையில் இருப்பதை அறிந்துக்கொண்டு அங்கு சென்றனர்.

சிறிது திறந்திருந்த கதவை , லேசாக தட்டிவிட்டு,

" எஸ்கூஸ்மீ......." என்றாள் மாலினி.

"யெஸ்......கம் மின்" என்ற பதிலுக்கு பின் இருவரும் அறையினுள் சென்றனர்.

யார் இந்த இரு பெண்களும்??என்பதுபோல் அவன் புருவமுயர்த்தி யோசிப்பதை பார்த்ததும்,
அட! பையனுக்கும் பொண்ணு ஃபோட்டோ காட்டலியா?
என்று நினைத்துக்கொண்டாள் மாலினி.

"ஹாய் மிஸ்டர் கிஷோர்............ஐ அம் மாலினி, இவ என்னோட அக்கா அபிநயா........இவளைத்தான் நீங்க வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வர்ரீங்க"

'அடடே!!! இது தான் கிஷோர் அப்பா அவனுக்கு பார்த்து வைச்சிருக்கிற பொண்ணா!! இந்த கல்யாணத்தை பெண் பார்க்கும் படலத்துக்கு முன்னமே எப்படியாச்சும் நிறுத்தனும்னு இவ்வளவு நேரம் என்கிட்ட கிஷோர் புலம்பிட்டு, கொஞ்ச நேரம் கடையை பார்த்துக்கோடான்னு சொல்லிட்டு, இப்ப......இப்பத்தான் அவனோட லவ்வரை பார்க்க போனான், அந்நேரம் பார்த்து இந்த பொண்ணுங்க வந்திருக்காங்களே.....!' என்று யோசித்தவன்,

அவன் கிஷோர் இல்லை, அமெரிக்காவிலிருந்து 1 மாத விடுமுறையில் தன் அக்காவின் கல்யாணத்திற்கு இந்தியா வந்திருக்கும் சூர்யா என்பதை சொல்ல வாய்திறக்கும் முன்னே......

"இங்க பாருங்க கிஷோர்........அபிக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்ல, நீங்க பெண் பார்க்க வர்றதுக்கு முன்னமே உங்ககிட்ட சொல்லி, இந்த கல்யாணத்தை நிறுத்த தான் நாங்க இங்க வந்திருக்கிறோம்" என படபடத்தாள் மாலினி.



'அப்படி போடு!!! பொண்ணுக்கும் இஷ்டமில்லையா??? சரி பொண்ணுக்கு ஏன் இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னு தெரிஞ்சுக்கிற வரைக்கும் நான் யார்ன்னு சொல்லாமலே பேச்சு கொடுக்கலாம், டைம் பாஸ் ஆன மாதிரி இருக்கும்!' என்று நினைத்த சூர்யா,

"ஓ.......அப்படியா.......ஏ......ஏன் உங்களுக்கு இந்த கல்யாணதுல இஷ்டமில்லைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மிஸ் அபிநயா?"

"அவளுக்கு எம்.பி.ஏ படிக்க அட்மிஷன் கிடைச்சிருக்கு........அவ படிக்க போறா........ஸோ அவளுக்கு இதுல இஷ்டமில்ல"

"என்ன மாலினி.......வந்ததுல இருந்து நீயே பேசிட்டு இருக்க, உங்க அக்கா பேசமாட்டாங்களா?? ........அவங்க இப்போ பேசாலீனா.....நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றப்போ, பாட்டு பாட சொல்லுவேன்" என்று குறும்பாக சிரித்தான்.

"என்ன ஓவரா கிண்டல் பண்றீங்க........அதான் நான் அவ சார்ப்ல சொல்றேன்ல"

"ஒரு நிமிஷம் இரு மாலு.......நானே பேசுறேன்" என்று அவள் கை பிடித்து நிறுத்தினாள் அபி.

"என்னங்க பேசதானே சொன்னேன்...........பாட்டாவே பாடிட்டீங்க" என்று அவன் கண்சிமிட்ட,

".........." அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் விழித்தாள் அபி.

"என்னங்க அப்படி முழிக்கிறீங்க..........நீங்க ரெண்டு வார்த்தை பேசினதே பாட்டு பாடினா மாதிரி அழகா இருக்குதுங்க, அதைதான் சொன்னேன்......தப்பா நினைச்சுக்காதீங்க, இட்ஸ் ஜஸ்ட் மை காம்பிளிமென்ட்ஸ் டு யுவர் ஸ்வீட் வாய்ஸ்"

அவனது குறுகுறு பார்வையும், நகைச்சுவை பேச்சும் அபிக்கு ஜொள்ளாக தெரியவில்லை.......மாறாக ஏதோ ஒருவித மின் அதிர்வு ஏற்படுத்தியது!!

"சரி........நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லல அபிநயா"

"ஆங்.......எனக்கு மேல படிக்கனும், ஸோ......கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல"

"இதை நீங்க உங்க வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லிருக்கலாமே அபிநயா"

"சொன்னேங்க.........ஆனா கேட்க மாட்டென்றாங்க,அதான்........"

"நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க.........?"

"நீங்.......நீங்க இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்லிட்டா மட்டும் போதும், கல்யாணம் நின்னிடும்....."

"நான் சொல்றது இருக்கட்டும்.........இப்படி உங்களை பொண்ணு பார்க்க வர்ற ஒவ்வொரு மாப்பிள்ளை கிட்டயா போய் சொல்லி, கல்யாணத்தை நிறுத்திட்டு இருக்க போறீங்களா?? "

"இல்லீங்க........எனக்கு மாப்பிள்ளை பார்க்க எங்க வீட்ல ஆரம்பிக்கவே இல்ல.......உங்க வீட்ல ரொம்ப விரும்பி கேட்டதால தான்.......இந்த ஏற்பாடே நடக்குது...இது மட்டும் நிறுத்திட்டா.......நான் என் ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணிடுவேன்........ஸோ........"

"ஜஸ்ட் ஒன் மோர் கொஷ்டியன் அபி.........கல்யாணம் பண்ணிகிட்டா மேல படிக்க முடியாதுன்னு ஏன் நினைக்கிறீங்க??"

"................"இந்த கேள்விக்க்கு தன்னிடம் பதிலிள்ளாமல்.......விழித்தாள் அபி.

"என்ன சார் இது.........அதான் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு பொண்ணே வந்து சொல்றாயில்ல.........பொண்ணு பிடிக்கலன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே...அதை விட்டுட்டு குண்டக்க மண்டக்கான்னு கேள்வி மேல கேள்வி கேட்கிறீங்க" என்று சலித்துக்கொண்டாள் மாலு.

"என்ன........சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொன்னீங்க.........." என்று திருப்பி கேள்வி கேட்டான் மாலினியிடம்.

ஒரு நிமிடம் யோசித்த மாலினி......

"பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லி..........நிறுத்த......சொன்...."

"என்னால அப்படி பொய் எல்லாம் சொல்ல முடியாது..........."

டக்கென்று பதிலளித்த சூர்யாவை நிமிர்ந்து பார்த்த அபி, அவனது பார்வையின் அர்த்தம் புரியாவிட்டாலும், மீண்டும் ஒரு மின் அதிர்வை தனக்குள் உணர்ந்தாள்!!

"என்ன அப்படி பார்க்கிறீங்க.....உங்களை போய் பிடிக்கலன்னு சொன்னா எங்க அம்மா ஏன்டா நீ என்ன குருடா?? அப்படின்னு திட்டமாட்டாங்களா.....????" மீண்டும் அவனிடமிருந்து அதே வசீகரமான சிரிப்பு.

அவனது கிண்டல் பேச்சு மாலினிக்கு மேலும் எரிச்சலூட்டியது, டக்கென்று தன்னிருக்கையிலிருந்து எழுந்துக்கொண்டவள்,

"வா அபி.......இனியும் இவர்கிட்ட பேசி ப்ரயோஜனம் இல்ல.....வேற ஏதாச்சும் ஐடியா பண்ணலாம்"

"ஹலோ........ஹலோ........ஒரு நிமிஷம்......வேற ஐடியாவெல்லாம் பண்ணி உங்க கொஞ்சூண்டு மூளையும் கசக்க வேணாம்..........நீங்க தேடி வந்த மாப்பிள்ளை பையன் நானில்ல....."

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல், திகைப்புடன் விழித்த இருவரிடமும்.......

தான் யார் என்ற விபரமும், தன் நண்பன் கிஷோரின் காதல் விவகாரத்தினால் இந்த திருமணத்தில் அவனுக்கும் விருப்பமில்லததையும் விரிவாக கூறி முடித்தான் சூர்யா.

அபிநயாவிடம் சூர்யா......

"மிஸ் அபிநயா.......உங்க கிட்ட ரெண்டு நிமிஷம் பெர்ஸனலா பேசலாமா??"

"ஓ.......ஓகே...."

"அபி.....நீங்க ரெண்டு பேரும் தேடி வந்தது கிஷோரைத்தான்னு தெரிஞ்சதும், உண்மை சொல்லிட தான் நினைச்சேன், ஏனோ இந்த கல்யாணத்தில உங்க விருப்பமின்மைக்கு காரணம் தெரிஞ்சுக்கனும்னு தோனினதால..........ஒரு விளையாட்டுத்தனத்தோடு உங்ககிட்ட உண்மைய சொல்லாம பேச்சுக்கொடுத்தேன்"

"............."

"ஆனா ஜஸ்ட் லைக் தட் உங்க கிட்ட பேச ஆரம்பிச்சதும்........என்னன்னு தெரிலீங்க அபிநயா....ஏதோ ஒருவித உள்ளுணர்வு.....'ஷீ இஸ் மைன் 'அப்படின்னு ஒரு டப் டப் என் ஹார்ட்குள்ள, இந்த உணர்வு ஏன் வந்துச்சு, எப்படி வந்துச்சுன்னு நீங்க கேட்டா.......கண்டிப்பா எனக்கு சொல்ல தெரில"

"......."

"கண்டதும் காதல்.......பொண்ணு பார்க்க போய் பத்து நிமிஷம் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டே பிடிச்சுப்போறது இதெல்லாம் சுத்த பேத்தல்ன்னு அலப்பறை விட்டவந்தான் நான்........பட்.......நெள ஐ ஃபீல் இட் வித்தின் மீ..........."

"................"

"நீங்க இப்போ உடனே உங்க பதிலை சொல்லனும்னு அவசியமில்ல.......நல்லா யோசிச்சு உங்க பதிலை இன்னும் பத்து நாள்ல நான் யூ.எஸ் போறதுக்கு முன்னாடி சொன்னா போதும், நீங்க விருப்பபட்ட மாதிரியே உங்க ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணுங்க, உங்க கோர்ஸ் முடிஞ்சதும்............நான்.....நாம........."

அதற்கு மேல் பேச வார்த்தைகளின்றி.......ஒரு தவிப்புடன் அபியை பார்த்தான் சூர்யா.


அபியின் மனதில்........
அவனது குறும்பு பார்வை ஒரு அதிர்வை ஏற்படுத்தியதுன்னா......
இந்த தவிப்பு பார்வை வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்துதே!!
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா!!!


அந்நேரத்தில் வெளியில் சென்றிருந்த கிஷோர் அங்கு வந்தான். சுருக்கமாக நடந்ததனைத்தையும் சூர்யாவும் மாலினியும் அவனிடம் சொல்லி முடித்தனர்.

எதுவும் பேசாமல் அமைதியாக ஆழ்ந்த யோசனையில் இருந்த அபியிடம் கிஷோர்,

" நீங்க இங்கே என்னை சந்திக்க வந்தது பற்றி உங்க வீட்ல சொல்லாமலே, இந்த கல்யாண ஏற்பாடை நான் நிறுத்திடுறேன் அபிநயா......டோண்ட் வொர்ரி, ஆனா.......சூர்யாவோட ப்ரோபஸல் பத்தி யோசிச்சு பதில் சொல்லுங்க அபி, நானே உங்க வீட்லயும் இவனோட வீட்லயும் பேசுறேன்"

பதில் சொல்ல தெரியாமல் அபி விழித்தாள்!
அவளது தடுமாற்றத்தை புரிந்துக்கொண்ட சூர்யா..........மேஜையிலிருந்த ஒரு துண்டு காகிதத்தில்,

'என் கை தினம் கட்டித்தழுவும் மெளபைலின் எண் xxxxxxxxxx '
என்று எழுதி அபியிடம் கொடுத்தான்.

வீட்டுக்கு ஆட்டோவில் செல்லும் வழியில் அபி எதுவும் பேசவில்லை மாலினியிடம், அக்கா ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து மாலுவும் எதுவும் நோண்டி நோண்டி கேட்காமல் இருந்தாள்.

வீட்டிற்கு வந்த பின் அபிநயா......அமைதியாக யோசித்துப்பார்த்தாள்.

அப்பா தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை சூர்யாதான் என்று நினைத்து பேசிய போது மனதில் ஏதோ ஒரு மூலையில், 'அப்பா ஸெலக்ஷ்ன் சூப்பர்!!' என்று நினைத்ததை மறுப்பதிற்கில்லை!


அவனது துறு துறு கண்கள்,
குறு குறுக்கும் பார்வை,
வசீகரமான சிரிப்பு மாறா முகம்,
நகைச்சுவையுணர்வு........
எல்லாவற்றிற்கும் மேலாக அவளிடம் மிக மரியாதையுடன் அவளது கண்கள் பார்த்து தெளிவாக பேசியது.......
என அனைத்துமே அவளை கவராமல் இல்லை!!


இதெல்லாம் தன்னை மறுநாள் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை என்ற கோணத்தில் தான் அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட உணர்வு என வைத்துக்கொண்டாலும்.........

தாங்கள் தேடி வந்த மாப்பிள்ளை பையன் அவனில்லை என்று சூர்யா சொன்னதும்..........மனசுக்குள்ள பறந்துக்கொண்டிருந்த ஒவ்வொரு இதய வடிவ பலூனும் பட் பட்டென்று உடைந்தது போன்று ஏமாற்றம் தன்னுள் ஏற்பட்ட உணர்விற்கு என்ன பெயர்??

தனிப்பட்ட முறையில் தான் சூர்வின் மேல் ஈர்க்க பட்டிருப்பதை உணர முடிந்தது அபிநயாவிற்கு!!

தப்பிக்க முயன்றேன்..
உன்
வசீகர புன்னகையால்
வீழ்த்தி விட்டாய்!!

எழ முயன்றேன்...
காந்த பார்வையால்
கட்டி பிடித்து
சிறைவைத்துக் கொண்டாய்!!

இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!!

ஆனால் இந்த ஒரு சந்திப்பை வைத்து முடிவெடுக்க கூடியதா வாழ்க்கை.........??

யோசித்து யோசித்து களைத்துப்போன அபி, சூர்யாவின் தொலைப்பேசிக்கு அழைத்தாள், மனதில் உள்ளதை வெளிப்படையாக தெரிவித்தாள்.
அவள் படித்து முடிக்கும் வரை நட்புடன் பேசி,ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக்கொள்ளலாம் என முடிவு செய்தனர் இருவரும்.



சூர்யா அமெரிக்கா சென்ற பின்பும், கிஷோரின் உதவியோடு, பெற்றோரின் சம்மதத்துடன்........... ஃபோன் , இமெயிலில் தொடர்ந்து, நல்லதொரு புரிதலுடன் வளர்ந்த அவர்களது அன்பு, அபியின் பட்டப்படிப்பிற்கு பின் ,இரு வீட்டாரின் சம்மத்ததுடன் திருமணத்தில் முடிந்தது.

முற்றும்.

சந்தித்தவேளை என்ற தொடரில்.......ஒவ்வொரு பகுதியிலும், ஒரு சுவாரஸியமான சந்திப்பு வெளியிடப்படும்!!!

மீண்டும் அடுத்த சந்தித்த வேளையில் சந்திப்போம்!!!

March 13, 2009

கவிஞருக்கு...... ஒரு கவிமாலை!!!




கவிஞரின் பிறந்த நாளன்று
பரிசுடன் வாழ்த்துவதா?
இல்லை கவிமாலை சூட்டி
வாழ்த்துவதா??

கவிஞருக்கு இல்லாத
கவிதையா??
என எனைப் பார்த்து
கண்சிமிட்டி சிரித்தது
கவிதை!!!

என் இதயமே
எழுதிவிட்டால்....
கவிதையும் பரிசுதானே??



பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூற்றாண்டு
நல்லோர்கள் புடைசூழ
எத்திசையும் உன்
கவிதை மணம் வீசட்டும்!!

மொழியில்லை சொல்லில்லை
என்
நெஞ்சத்தின் வாழ்த்தினை சொல்ல.. .
உள்ளத்தின் உணர்வுகளை
ஒருமுகமாய்க் குவிக்கின்றேன் ...!

நோயற்ற வாழ்வோடும்
நொடிதவறா புன்னகையோடும்
ஓவியமாய்க் காவியமாய்
நல்லதமிழ் மகனாக
வற்றாத புகழோடு
எந்நாளும் வாழ்கவாழ்கவென...
வாழ்த்துகிறேன் கவிஞரே!!!


மனபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவீன் ப்ரகாஷ்!!