August 24, 2008

தம்பி....



படித்ததில் மனதில் பதிந்த கதை, என் கற்பனை கலந்து, சில மாற்றங்களுடன் இங்கு என் எழுத்துருவில் பதிவாக........ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் என் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்.......!!!




St.Joseph's International School, ஹாஸ்டலில் தன் படுக்கைக்கு அருகில் இருந்த அலாரம் காலை 6 மணிக்கு அடிக்க விழித்துக்கொண்ட பன்னிரண்டு வயது டெய்ஸி, காலை கடன்களை முடித்துவிட்டு, அவசரம் அவசரமாக ஹார்லிக்ஸ் மட்டும் அருந்திவிட்டு, ஆண்கள் விடுதி நோக்கி நடந்தாள் தன் தம்பி டேனியலை சந்திக்க,

வழியில் ஸ்கூல் சேப்பலில் ஜெபம் செய்ய செல்கையில், ஜூலியா மிஸ்சை சந்தித்தாள்.
இவளது ஹாஸ்டல் வார்டனாக இருந்தவர் மிஸ் ஜூலியா.அவர் மேல் டெய்ஸிக்கு அலாதி ப்ரியமும் , மரியாதையும்.

பெண்கள் விடுதியின் வார்டனாக இருந்த ஜுலியா மிஸ், புனித மேரி இல்லத்திற்கு வார்டனாக போனதும், டெய்ஸி மிகவும் ஏங்கிப் போனாள்.
புனித மேரி இல்லமும் டெய்ஸி படிக்கும் ஸ்தாபனம் நடத்துவதுதான், ஆனால் அது அனாதை குழந்தைகள் படிக்கும் விடுதி.
ஜூலியா மிஸ்சும் ஒரு அனாததான் என்பதும், அதுவே அவர்கள் அவ்வில்லத்திற்கு வார்டனாக சென்றதிற்கான காரணம் என்றும் இவளது தோழிகள் மூலம் அறிந்துக்கொண்டாள் டெய்ஸி.


டெய்ஸிக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் ஜூலியா மிஸ்சாகப் பிறக்க வேண்டும் என்று தோன்றும்.
ஜூலியா மிஸ் அன்போடும் அரவனைப்போடும் டெய்ஸியையும் அவளது தம்பியையும் கவனித்துக்கொள்ளும் போது, இவர்கள் எங்களின் அம்மாவாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொள்வாள் டெய்ஸி,
ஆனால்....ஜூலியா மிஸ் கன்னியாஸ்திரி, கல்யாணமே செய்து கொள்ள போவதில்லை என்பதும் அவளுக்கு புரிந்தது.

ஆண்கள் விடுதியை அடைந்தாள் டெய்ஸி, அங்கு அழுவதற்கு தயாராக இருந்தான் டேனியல், சில்வியா ஆயா அவனை சமாதனப்படுத்தி, "இதோ உங்கக்கா வந்தாச்சு பாரு" என்று டெய்ஸியிடம் அவனை ஒப்படைத்தாள்.
அப்படியே அவனைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் டெய்ஸி.

"டேனி.....இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்ல இருந்து கார் வந்திடும்,நாம வீட்டுக்கு போறோம் டா.....செல்லம், கார் வரைக்கும் நானே உன்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போறேன், சரியா"

"ஓ......சரிக்கா" என்றான் உற்சாகமாய்.

டெய்ஸி-டேனியலின் அம்மா ஒரு முன்னனி கைனக்காலிஜிஸ்ட், இரவிலும் ஹாஸ்பிடல் கால் வந்து டியூட்டி பார்க்க சென்றுவிடுவார்.
அப்பா கோயம்பத்தூர் விவசாயக்கல்லூரியில் தாவிர இயல் விஞ்ஞானி. எப்போதும் செடி கொடிகளுடன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்.

அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்கிறார்கள், அதனால்தான் பிள்ளைகள் ரெஸ்டென்ஷியல் ஸ்கூலில்.

சிறிது நேரத்தில் இவர்கள் இருவரையும் அழைத்துச்செல்ல வழக்கமாக வரும் ட்ரைவர் காருடன் வர, வார்டன் இருவரையும் கார் வரை வந்து அமர்த்திவிட்டு, கையசைத்து வழியனுப்பினார்.

கோயம்பத்தூரில் தாங்கள் சந்திக்க இருக்கும் அதிர்ச்சியை அறியாமல் இரு பிஞ்சு உள்ளங்களும் குதூகலத்தோடு பிரயாணப்பட்டன.

வீட்டிற்கு போனபோது அங்கு ஹாலில் அம்மாவோடு டாக்டர் தனபாலன் அங்கிளும் இருந்தார். அம்மாவுடன் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக படித்தவர், இப்போது அம்மாவுடன் ஒன்றாக வேலை செய்பவர் என்ற அளவில் மட்டுமே டெய்ஸிக்கு அவரை தெரியும்.
ஆனால்.....இன்று ஹாலில் தன் அம்மாவின் மிக அருகில் நெருக்கமாக அவர் அமர்ந்திருப்பது 12 வயது டெய்ஸிக்கு ஏனோ, அருவருப்பாக தோன்றியது.

ஏற்கெனவே அப்பாவும் அம்மாவும் கடந்த 1 வருடமாக பிரிந்து வாழ்வதும், இருவரும் டைவர்ஸ் ஆகி பிரிந்தே வாழ போகவதாகவும், வீட்டில் வேலை செய்யும் ஆயா சொல்லி அறிந்திருந்தாள் டெய்ஸி.

தனபால் அங்கிள் கொடுத்து காட்ப்ரீஸை கண்டதும் டேனியல் அவரின் அருகில் அமர்ந்துக்கொண்டான், டெய்ஸி தர்மச்சங்கடத்தோடு அங்கு நிற்க, அவளது அம்மா அவளை தனியே அழைத்துச்சென்று இன்று குடும்ப நல கோர்ட்டில் அவளது அப்பா-அம்மா வின் விவாகரத்து வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படுவதாகவும், அதற்காகவே ஹாஸ்டலில் இருந்து இவர்கள் இருவரையும் அழைத்ததாகவும் கூறினாள்.

சிறிது நேரத்தில், தனபால் அங்கிள் காரிலேயே கோர்டிற்கு சென்றனர்,
அங்கு வாயிலில் அப்பாவை கண்டதும் , "அப்பா" என்ற அலறலுடன் இரு குழந்தைகளும் அருகில் ஓட,
அப்பாவிற்கு பின்னாலிருந்து , அவரிடம் டாக்ட்ரேடிற்காக பயிற்சி எடுத்துக்கொள்ளும் நித்யா ஆண்டி, "ஹாய் குட்டீஸ்' என்றார்.
அவளது அப்பாவின் கரத்தோடு நித்யா ஆண்டி கை கோர்த்திருந்த விதம்.......டெய்ஸிக்கு அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருந்தது.
தன் தலையை வருடம் அப்பாவின் ஸ்பரிசம் முதல் முறையாக,கம்பிளி பூச்சு ஊறுவது போன்று தோன்றியது.

கோர்ட்டில் தீர்ப்பு வழங்கினார்கள்,
டெய்ஸியின் அப்பா அம்மாவிற்கு விவாகரத்து கொடுத்துவிட்டு, டெய்ஸி அவளது அப்பாவின் பாதுகாப்பிலும்,
தம்பி டேனியல் அம்மாவின் பாதுகாப்பிலும் வளர்வது என்று தீர்ப்பானது.

வீட்டிற்கு வரும் வழியில்தான் , அம்மாவும் தனபால் அங்கிளும் பேசிக்கொண்டதில், அவளது அம்மாவும் தனபால் அங்கிளும் லண்டனுக்கு செல்ல போவதாகவும், தம்பியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வதும் டெய்ஸிக்கு புரிந்தது.
இவள் ஹாஸ்டலிலோ, அப்பாவுடன் 'Tamil Nadu Agricultural University' கேம்பஸில் அப்பாவின் குவார்டஸிலோ இருக்கப்போகிறாள்.

யாரைக் கேட்டு முடிவு செய்தார்கள்?
இது வரையில் என்றாவது ஒரு நாள் இவர்கள் இருவரும் எங்களோடு சிரித்துப் பேசி விளையாடியதுண்டா?
அம்மாவுக்கு அப்பா தேவையில்லாமல் இருக்கலாம்,
அப்பாவுக்கு அம்மா தேவையில்லாமல் இருக்கலாம்,
இருவருக்கும் சேர்ந்து நாங்கள் தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆனால்..........எனக்கு.........என் தம்பி வேண்டும்!!

என்னை விட்டு ஒருகணம் கூட இருக்க மாட்டானே என் தம்பி.......அவனை வெளிநாடு அனுப்பி விட்டு நான் மட்டும் எப்படி இங்கிருக்க முடியும்?

டெய்ஸியின் மனதில் ஆயிரம் கேள்விகள்,
உதடு துடிக்க, கண்ணீர் பொங்கி வர, வீட்டிற்குள் வந்ததும் வேகமாக தன் அறைக்குள் சென்று , கட்டிலில் குப்புறப்ப்டுத்து குலுங்கி அழுதாள்.

இவள் பின்னாலேயே மாடி ஏறி வந்த அவள் அம்மா," டெய்ஸி.......ஒன்னும் அவசரமில்லைமா, உன்னை தயார்படுத்திக்கோ,.......இரண்டு நாள் கழிச்சு கூட நீ உன் அப்பாகிட்ட போகலாம், டேக் யுவர் டைம்" என்று சமாதனப்படுத்தி விட்டுப் போனாள்.

இரவு முழுவதும் அழுது அழுது முகம் வீங்கிக் கிடந்தது டெய்ஸிக்கு. இவள் எதையோ நினைத்து நினைத்து அழுவதைப் பார்த்து டேனியலும் அழுதான்.

இவனை எப்படி பிரிய முடியும்.......தம்பியின் முகத்தை கையில் ஏந்தி தேம்பினாள் டெய்ஸி.

லண்டனுக்கு கூட்டிட்டு போய் கூட அம்மாவா இவனை கவனிக்க போகிறாள், அங்கயும் ஆயாவிடம் தான் விடப்போகிறாள்.
"அக்கா"ன்னு இவன் அழுதா எனக்கு இங்கே கேட்குமா??? முடியாது.......
இவனை இந்த ராட்சஸர்களிடம் விடவே மாட்டேன்.......எனக்கு அம்மாவோ, அப்பாவோ வேண்டாம், என் தம்பிதான் வேண்டும்.

கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள், மணி காலை ஐந்து, வீட்டில் அம்மா அயர்ந்த தூக்கத்தில் அவளது அறையில்,
அவசரமாக எழுந்தாள் டெய்ஸி,
தம்பியை தூக்கி தோளில் போட்டுக்கொண்டாள்,
செலவிற்காக அப்பா கொடுத்திருந்த 300 ரூபாய் பணம் இவளது கைப்பையிலிருந்தது, அதனையும் எடுத்துக்கொண்டாள்,

வீட்டைவிட்டு கவனமாக எவருக்கும் தெரியாமல் வெளியேறினாள், கோவை மத்திய பஸ் நிலையம் இவளது வீட்டிலிருந்து 3 கீலோ மீட்டர் தூரம், பாதி தூரத்திற்கு மேல் நடக்க மாட்டேன் என அடம்பிடித்த தம்பியை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து பஸ் நிலையம் சென்றாள், ஊட்டி பஸ் பார்த்து ஏறிக்கொண்டாள்.

மூன்று மணி நேரத்தில் பஸ் ஊட்டியை சென்று அடைந்தது.

ஒருவாரம் விடுமுறைக்காக போன ஆறாம் வகுப்பு டெய்ஸி, தம்பியோடு தன் அறையில் அடுத்த நாள் காலையிலேயே வந்து நிற்பதைக் கண்டு திகைத்தார் ஃபாதர் ஜோசஃப்.

அந்த சிறு பெண்ணின் உருண்ட விழிகள் அழுது சிவந்து, இரட்டை ஜடையில் ஒன்றில் மட்டும் ரிப்பன், காலில் ஷு இல்லை, ரப்பர் செருப்புடன்.....தம்பி டேனியலின் சட்டையெல்லாம் புழுதி, கலைந்த தலைமுடி......அந்த சிறுவனும் புரியாமல் அழுதுகொண்டே இருந்தான்.

பணக்கார களையோட இத்தனை நாட்கள் பார்த்திருந்த ஃபாதருக்கு, குழந்தைகளின் இந்நிலை மனதை கணமாக்கியது,

"என்னமா டெய்ஸி.......என்னாச்சு??" என்று படபடப்பாகக் கேட்டார்.

"ஃபா .........ஃபாதர்"

"அப்பா.........அம்மா கூட வரலியா.....உங்க கார்ல வரலியா?"

"ஃபாதர்........எங்களுக்கு அப்பா அம்மா இல்லை......நாங்க அனாதை.....ப்ளீஸ் எங்களை புனித மேரி இல்லத்தில சேர்த்துகோங்க ஃபாதர்"

ஃபாதரின் கண்ணில் நீர் பூத்தது.
குழந்தைகளை குளிப்பாட்டி உணவு கொடுக்க சொல்லி சிஸ்டர் ஜூலியாவிடம் ஒப்படைத்துவிட்டு, ஃபாதர் ஜோசஃப் டெய்ஸியின் பெற்றோரை வரவழைத்தார்.

அவர்களிடமும் டெய்ஸி பிடிவாதமாக தாங்கள் இருவரும் இல்லத்திலேயே இருக்க விரும்புவதாக கூற......பெற்றோரும் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல், தங்கள் வழி திரும்பிச் சென்றனர்.

தன் தம்பியின் மேல் பாசத்தை கொட்டி பார்த்துக்கொண்டாள் டெய்ஸி, ஆங்கில மொழியில் பி.ஏ பட்டபடிப்பும், ஆசிரியர் பயிற்சியும் புனித மேரி இல்லத்தின் உதவியோடே படித்து முடித்து, அங்கே அவளும் டீச்சராக பதிவியேற்றாள்.......கன்னியாஸ்திரி டீச்சராக.


டேனியல் படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியாக வளர்ந்தான் அக்காவின் அரவணைப்பில், இன்று அமெரிக்காவில் தனது உயர் படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்புகிறான்..........அதுவும் அவனது பிறந்தநாளான இன்று அவன் இந்தியா வருவது இரட்டிப்பு சந்தோஷம் சிஸ்டர் டெய்ஸிக்கு!!

விமான நிலையத்தின் வரவேற்பு வாயிலில் , பழைய நினைவுகளை அசைப்போட்டபடி......தம்பியின் வரவிற்காக காத்திருந்த சிஸ்டர் டெய்ஸியின் சிந்தனையை,

"அக்கா"

என்ற குரல் கலைக்க, திரும்பிய டெய்ஸி சிஸ்டர்.......சேயைக் கண்ட தாயாய் உவகையுடன் தன் தம்பியை நோக்க, கண்ணில் ஆனந்த கண்ணீர்,

"அக்கா" என்று குதூகலத்துடன் டேனியல் அவரை நோக்கி தன் கரங்களை அகல விரிக்க........

"த......ம்.........பி......."

உண்மையான நேசத்தின் தேவையும்
நெஞ்சம் தேடும்
பாசத்தின் தவிப்பும்
உன்னாலும் என்னாலும் மட்டுமே
உண்மையாய் உணர முடியும்!

ம்…!
உன் தலை சாய்த்துக் கொள்ள
தக்க தருணங்களில்
அன்புத் தாயாய் நான்
என் சேயாய் நீ!

என் உயிரின் கடைசித் துளி
என்னை விட்டுப் பிரியும் வரை…
உன் அன்புத் தோழியாய் நான்
என் அன்புத் தோழனாய் நீ!

"போடா" என்று சொல்லி
பொய்ச் சண்டை போட்டு
மறு நிமிடம்
“மன்னிப்பு” என்னும் பூ தூவி
உயிரின் தீபமேற்றி
உன் உயிரோடு கலக்கும்
உன் அக்காவாய் நான்
என் தம்பியாய் நீ!

ஒற்றை விரல் கோர்த்து
பற்றிப் படர்ந்து
எனக்காக நீயும்
உனக்காக நானும்
நிறைவான அன்பினில்…


நீளும் உன் கரங்கள்
நிஜமென நம்பி…
தம்பி...

இரு சிறகுகளிலும்
இருந்த பாரங்களை
இறக்கி வைத்த
சின்னப் பட்டாம் பூச்சியாய் நான்..






இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி!!

100 comments:

said...

firsta!!???

said...

nice post..i always wished i had an akka..en friends elarukum akka irukanga :( they got married and settled abroad..avanga varachaylam chocolate giftslam vangituvarungala..cha namakum oru akka irunthu avangalum foreignlam poiruntha inthamarilam gift vangituvanthrupangallanu oru alpaasa :) nice post divs..aana enamo usuala irukara divs touch missagara mari iruku..ennu therila...title chinnatha irukarathalayo?? ila oray partla mudinjithalaya?? :D :D hehee

said...

கதை...கவிதை இரண்டும் அருமை ;)

தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ;))

\\என் உயிரின் கடைசித் துளி
என்னை விட்டுப் பிரியும் வரை…
உன் அன்புத் தோழியாய் நான்
என் அன்புத் தோழனாய் நீ!

"போடா" என்று சொல்லி
பொய்ச் சண்டை போட்டு
மறு நிமிடம்
“மன்னிப்பு” என்னும் பூ தூவி
உயிரின் தீபமேற்றி
உன் உயிரோடு கலக்கும்
உன் அக்காவாய் நான்
என் தம்பியாய் நீ!
\\

உண்மை...அழகான வரிகள்.

said...

கவிதையில் வாழ்த்துக்கள் சொல்வது ஒரு வகை. ஆனால் கதையும், கவிதையும் கலந்து வாழ்த்துச் சொல்கின்றீர்கள். உங்கள் தம்பிக்கு எனது வாழ்த்தையும் தெரிவியுங்கள்.

said...

மிக உருக்கமான கதை...
---
பிறந்த நாள் கொண்டாடும் திவ்யாவின் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

Anonymous said...

Nalla eruku Divya...Unga thambi ennoda pirantha naal valtukal solldunga - Venkat

said...

சான்ஸே இல்லை..
என்ன சொல்றதுனே தெரியல..

ரொம்ப பீலிங்க்ஸா போச்சு..

said...

உங்க தம்பிக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
:)

said...

கதை எழுதறதுக்குன்னு ஏதேனும் கோர்ஸ், ட்ரைனிங், எடுத்துருக்கீங்களா??

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி..கதை மிக நன்றாக இருந்தது.. எத்தனை அக்காக்கள் இப்படி தம்பிகளுக்காகவும், தங்கைகளுக்காகவும் தங்கள் வாழ்க்கையை மாத்திருக்காங்க..

said...

சான்சே இல்ல திவ்யா, கலக்கிட்டீங்க
உங்க தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

said...

:)))

உங்க தம்பிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க :)))

said...

இனிய...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி...!

said...

தம்பிக்கு பெயரென்ன அக்கா...:)

said...

/போடா" என்று சொல்லி
பொய்ச் சண்டை போட்டு
மறு நிமிடம்
“மன்னிப்பு” என்னும் பூ தூவி
உயிரின் தீபமேற்றி
உன் உயிரோடு கலக்கும்
உன் அக்காவாய் நான்
என் தம்பியாய் நீ!//


அருமை !

உங்களின் & எங்களின் தம்பிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் :)

said...

My wishes to thambi.... many many returns of the day

said...

Happy Birthday en sarbagavum sollidunga Divya!

said...

அருமை திவ்யா உங்கள் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

நமக்கு எப்பவுமே Siblings இருக்கறது நல்லாவே இருக்கும்..அவங்களோட சண்டையெல்லாம் போட்டாலும் பின்னாடி அந்த பாசம் விவரிக்க முடியாதது..

said...

அக்காவின் செல்லத்தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.

நானும் அக்காவின் அரவணைப்பில் வாழ்ந்தால், அக்காவின் பாசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மீண்டும் நல்ல கதை

said...

அருமையான பதிவு திவ்யா!!!!

தம்பி என்ற உறவில் தான் நாம் பாசத்தையும் நேசத்தையும் கற்றுக்கொள்கிறேம் நமக்கும் சில பொறுப்புகள் இருப்பதை உண்ர்ந்துக்கொள்கிறேம்....

கலக்கல் பதிவு திவ்யா

said...

தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

said...

too good...மிக உருக்கமான கதை திவ்யா..உங்க தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...எனக்கும் எங்க அக்கா ஞாபகம் வந்துடுச்சு :’( ரொம்ப feelings ஆ இருக்கு :-(

said...

ஆகா ..என்ன அருமையான கதை ...உண்மையில் அசத்தல் ..மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை தொட்ட கதை ..அதும் தம்பியின் பிறந்த நாள் பரிசாக ..

மிக அருமை ...

(எனக்கும் அதே சந்தேகம் ...கதை எழுத ஏதாவது ட்ரைனிங் எடுத்திருக்கீங்களா?..)

எனது வாழ்த்துக்களையும்
தம்பிக்கு தெரிவிக்கவும் ..

அன்புடன்
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ..

said...

உங்க‌ள் த‌ம்பிக்கு என்னுடைய‌ பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்!


சூப்ப‌ரான‌ வ‌ழி வாழ்த்துக்க‌ளை தெரிவிப்ப‌த‌ற்கு. :)

said...

தங்கள் தம்பிக்கு "இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்"... ஒருவர் தன்னருகே இல்லாத போது எழுகின்ற துயரமே பாசமாகும்.... பிரிவே அன்பை கூட்டுகிறது .....

Anonymous said...

தம்பிக்கு என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

//நீளும் உன் கரங்கள்
நிஜமென நம்பி…
தம்பி...

இரு சிறகுகளிலும்
இருந்த பாரங்களை
இறக்கி வைத்த
சின்னப் பட்டாம் பூச்சியாய் நான்..//

தம்பி என்றாலே தனிப்பாசம்தான் இல்லையா? உங்கள் பாசத்தின் வெளிச்சம் இந்த வரிகளில் காண்கிறேன் :-)

said...

அக்கா என்னோட வாழ்த்தையும் சொல்லிடுங்க..!! :))

said...

உங்கள் தம்பிக்கு பிலேடட் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
விவாகரத்த்டு என்பது கணவன் மனைவியைப் பிரிக்கலாம். ஆனால் குழந்தகளிடம் அது எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்துகிரது என்பதற்கு இந்தக்கதை ஒரு சூப்பர் உதாரணம். ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.

said...

தம்பிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்!:)

said...

By the way, ஃபோட்டோவில் இருப்பது நீங்களும் உங்க தம்பியும் தானே??

said...

விஜய்..
எந்த ஃபோட்டோன்னு சொன்ன நல்லா இருக்கும்..
;)

said...

தம்பிக்கு பிலேடட் பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

said...

அப்படியே பாசத்த கொட்டிட்டீங்க...கதை கவிதை ரெண்டும் சூப்பர் :-)

said...

\\
gils said...
firsta!!???\\

Yes...:))

said...

\\ gils said...
nice post..i always wished i had an akka..en friends elarukum akka irukanga :( they got married and settled abroad..avanga varachaylam chocolate giftslam vangituvarungala..cha namakum oru akka irunthu avangalum foreignlam poiruntha inthamarilam gift vangituvanthrupangallanu oru alpaasa :) \\


ungaluku akka venuma??
foreign chocolate & gits venuma??
theliva solunga gils:))


\\nice post divs..aana enamo usuala irukara divs touch missagara mari iruku..ennu therila...title chinnatha irukarathalayo?? ila oray partla mudinjithalaya?? :D :D hehee\\

alo ....enna nakkala??
wait karo gilsu......seekiram 20 partsoda oru thodar kathai podurein,
kathai ku title ley oru para vaikirein parunga:))

said...

\\ கோபிநாத் said...
கதை...கவிதை இரண்டும் அருமை ;)

தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ;))

\\என் உயிரின் கடைசித் துளி
என்னை விட்டுப் பிரியும் வரை…
உன் அன்புத் தோழியாய் நான்
என் அன்புத் தோழனாய் நீ!

"போடா" என்று சொல்லி
பொய்ச் சண்டை போட்டு
மறு நிமிடம்
“மன்னிப்பு” என்னும் பூ தூவி
உயிரின் தீபமேற்றி
உன் உயிரோடு கலக்கும்
உன் அக்காவாய் நான்
என் தம்பியாய் நீ!
\\

உண்மை...அழகான வரிகள்.\\


வாங்க கோபிநாத்,

நீண்ட நாட்களுக்கு பின் என் வலைதளம் வந்திருக்கிறீங்க...மகிழ்ச்சி!!

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கோபி!!

மீண்டும் வருக:))

said...

\\ ஜோசப் பால்ராஜ் said...
கவிதையில் வாழ்த்துக்கள் சொல்வது ஒரு வகை. ஆனால் கதையும், கவிதையும் கலந்து வாழ்த்துச் சொல்கின்றீர்கள். உங்கள் தம்பிக்கு எனது வாழ்த்தையும் தெரிவியுங்கள்.\\

வாங்க ஜோசஃப்!!

நிச்சயம் உங்க வாழ்த்து என் தம்பியை போய் சேரும், நன்றி!!

said...

\\ நிமல்/NiMaL said...
மிக உருக்கமான கதை...
---
பிறந்த நாள் கொண்டாடும் திவ்யாவின் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!\

கதையை ரசித்திற்கும் ,வாழ்த்துக்களுக்கும் நன்றி நிமல்!!

said...

\ Anonymous said...
Nalla eruku Divya...Unga thambi ennoda pirantha naal valtukal solldunga - Venkat\\


வாங்க வெங்கட்!!

உங்கள் வாழ்த்துக்களை நிச்சயம் சொல்றேன் என் தம்பிகிட்ட,

நன்றி வெங்கட்!!

said...

\\ M.Saravana Kumar said...
சான்ஸே இல்லை..
என்ன சொல்றதுனே தெரியல..

ரொம்ப பீலிங்க்ஸா போச்சு..
\\


ரொம்ப ஃபீல் பண்ணிட்டீங்களோ கவிஞரே!!

said...

\ M.Saravana Kumar said...
உங்க தம்பிக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
:)\\



வாழ்த்துக்களுக்கு நன்றி!!

said...

\\ M.Saravana Kumar said...
கதை எழுதறதுக்குன்னு ஏதேனும் கோர்ஸ், ட்ரைனிங், எடுத்துருக்கீங்களா??\\


ஆமாங்க....'harvard university' ல ட்ரெனிங் எடுத்துக்கிட்டேன்:)))

said...

\\ Raghav said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி..கதை மிக நன்றாக இருந்தது.. எத்தனை அக்காக்கள் இப்படி தம்பிகளுக்காகவும், தங்கைகளுக்காகவும் தங்கள் வாழ்க்கையை மாத்திருக்காங்க..\\

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ராகவ்!!

said...

\\ முகுந்தன் said...
சான்சே இல்ல திவ்யா, கலக்கிட்டீங்க
உங்க தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)\\

வாங்க முகுந்தன்!!

நீங்க இந்தியா திரும்பியதும்....படு குஷியா இருக்கிறாப்ல இருக்கு, பின்னூட்டமே ரொம்ப உற்சாகமா இருக்கு, என்ன விஷேசம்??

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி முகுந்தன்!!

said...

\\ கப்பி | Kappi said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!\\

நன்றி கப்பி!!

said...

\ ஜி said...
:)))

உங்க தம்பிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க :)))\\

உங்க வாழ்த்துக்களை சொல்லிடுறேன் ஜி!!
நன்றி!!

said...

\\ தமிழன்... said...
இனிய...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி...!\\

நன்றி அண்ணா...

said...

\ தமிழன்... said...
தம்பிக்கு பெயரென்ன அக்கா...:)\\

கதையிலேயே பெயர் இருக்கு தம்பி:))

said...

\\ ஆயில்யன் said...
/போடா" என்று சொல்லி
பொய்ச் சண்டை போட்டு
மறு நிமிடம்
“மன்னிப்பு” என்னும் பூ தூவி
உயிரின் தீபமேற்றி
உன் உயிரோடு கலக்கும்
உன் அக்காவாய் நான்
என் தம்பியாய் நீ!//


அருமை !

உங்களின் & எங்களின் தம்பிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் :)\\


வாங்க ஆயில்யன்,

நீண்ட இடைவெளிக்கு பின் என் வலைதளம் வந்திருக்கிறீங்க....மகிழ்ச்சி!!

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!!

said...

\\ நெல்லை காந்த் said...
My wishes to thambi.... many many returns of the day
\\

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி விஜய்!!

said...

\\ நிவிஷா..... said...
Happy Birthday en sarbagavum sollidunga Divya!
\\

உங்க சார்பா வாழ்த்துக்களை கண்டிப்பா சொல்றேன் நிவிஷா,
நன்றி!!

said...

\\ Ramya Ramani said...
அருமை திவ்யா உங்கள் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)\\

நன்றி ரம்யா உங்கள் வாழ்த்துக்களுக்கு!!



\\நமக்கு எப்பவுமே Siblings இருக்கறது நல்லாவே இருக்கும்..அவங்களோட சண்டையெல்லாம் போட்டாலும் பின்னாடி அந்த பாசம் விவரிக்க முடியாதது..\\




ஆமாம் ரம்யா......அந்த சண்டைகள் எல்லாம் ரொம்பவே நல்லா இருக்கும்:))

இப்போ ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் தம்பியுடனான அந்த செல்ல சண்டைகளை:(

தம்பி கூட அடிச்சாலும் புடிச்சாலும்......அடுத்த நிமிஷமே ஒன்னு சேர்ந்துக்கிற அந்த பாசத்தை விவரிக்க வார்த்தைகள் போறாது:))

said...

\\ sathish said...
அக்காவின் செல்லத்தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)\\

என் செல்ல தம்பிக்கு நீங்க அளித்த வாழ்த்துக்களுக்கு நன்றி சதீஷ்!!

said...

\\ ராஜா முஹம்மது said...
என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.\\

சொல்லிடுறேன் ராஜா!! நன்றி!!!



\\நானும் அக்காவின் அரவணைப்பில் வாழ்ந்தால், அக்காவின் பாசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மீண்டும் நல்ல கதை\\

ஓஹோ...உங்களுக்கும் ஒரு பாசமுள்ள அக்கா இருக்காங்களா?? மகிழ்ச்சி!!

பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி ராஜா,
மீண்டும் வருக!!

said...

\\ எழில்பாரதி said...
அருமையான பதிவு திவ்யா!!!!

தம்பி என்ற உறவில் தான் நாம் பாசத்தையும் நேசத்தையும் கற்றுக்கொள்கிறேம் நமக்கும் சில பொறுப்புகள் இருப்பதை உண்ர்ந்துக்கொள்கிறேம்....

கலக்கல் பதிவு திவ்யா\\


வாங்க எழில்!!

'அக்கா'வின் பாசத்தையும் பொறுப்புணர்வையும் உங்கள் பின்னூட்டத்தில் உணர முடிந்தது!!

நன்றி எழில்!!

said...

\\ எழில்பாரதி said...
தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!\\

வாழ்த்துக்களுக்கு நன்றி எழில் பாரதி!!

said...

\\ Divyapriya said...
too good...மிக உருக்கமான கதை திவ்யா..உங்க தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...எனக்கும் எங்க அக்கா ஞாபகம் வந்துடுச்சு :’( ரொம்ப feelings ஆ இருக்கு :-(\\

வாங்க திவ்யப்ரியா!!

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!

அக்கா ஞாபகம் வந்துடுச்சா??

அக்கா மேல இதே பாசமுள்ள ஃபீலிங்க்ஸ்.......கனவு காண்றப்போவும், கனவுல நாய் கடிக்கிறப்போவும் இருக்கனுங்க அம்மனி:))

said...

\\ Vishnu... said...
ஆகா ..என்ன அருமையான கதை ...உண்மையில் அசத்தல் ..மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை தொட்ட கதை ..அதும் தம்பியின் பிறந்த நாள் பரிசாக ..

மிக அருமை ...

(எனக்கும் அதே சந்தேகம் ...கதை எழுத ஏதாவது ட்ரைனிங் எடுத்திருக்கீங்களா?..)

எனது வாழ்த்துக்களையும்
தம்பிக்கு தெரிவிக்கவும் ..

அன்புடன்
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ..\\


வாங்க விஷ்ணு,

உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி!!

கதையை ரசித்துணர்ந்ததிற்கு நன்றி!!

கதை எழுத.....ட்ரெயினிங் எல்லாம் எதும் எடுத்துகலங்க,

'harvard university' ல ட்ரெயிங் எடுத்துக்கிறேன்னு சரவணகுமாருக்கு கிண்டலா பின்னூட பதில் போட்டதை பார்த்து பயந்துடாதீங்க:))

said...

\\ Murugs said...
உங்க‌ள் த‌ம்பிக்கு என்னுடைய‌ பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்!


சூப்ப‌ரான‌ வ‌ழி வாழ்த்துக்க‌ளை தெரிவிப்ப‌த‌ற்கு. :)\\


வாழ்த்து சொல்றதுக்கு சூப்பரா ஐடியா கண்டுபிடிச்சு....தம்பி ய அசத்திபுட்டோம்ல:))

வாழ்த்துக்களுக்கு நன்றி murugs!

said...

\ ShadowLord said...
தங்கள் தம்பிக்கு "இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்"...\\

வாங்க ShadowLord,

உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி!!

\\ஒருவர் தன்னருகே இல்லாத போது எழுகின்ற துயரமே பாசமாகும்.... பிரிவே அன்பை கூட்டுகிறது .....\\

மிக சரியா சொல்லியிருக்கிறீங்க...பிரிவில் பாசம் ஜாஸ்தி ஆவது உண்மை:))

said...

\\ இனியவள் புனிதா said...
தம்பிக்கு என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

//நீளும் உன் கரங்கள்
நிஜமென நம்பி…
தம்பி...

இரு சிறகுகளிலும்
இருந்த பாரங்களை
இறக்கி வைத்த
சின்னப் பட்டாம் பூச்சியாய் நான்..//

தம்பி என்றாலே தனிப்பாசம்தான் இல்லையா? உங்கள் பாசத்தின் வெளிச்சம் இந்த வரிகளில் காண்கிறேன் :-)\\

வாங்க புனிதா,

ஆமாம்.....என் தம்பி மேல் எனக்கு ஒரு தனி பாசம்:))

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி புனிதா!!

said...

\ Sri said...
அக்கா என்னோட வாழ்த்தையும் சொல்லிடுங்க..!! :))\\

கண்டிப்பா சொல்லிடுறேன் ஸ்ரீ! நன்றி!!

said...

\\ விஜய் said...
உங்கள் தம்பிக்கு பிலேடட் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
விவாகரத்த்டு என்பது கணவன் மனைவியைப் பிரிக்கலாம். ஆனால் குழந்தகளிடம் அது எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்துகிரது என்பதற்கு இந்தக்கதை ஒரு சூப்பர் உதாரணம். ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.\\

வாங்க விஜய்!!

கதையை நெகிழ்ச்சியுடன் படித்து, கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி விஜய்!!

said...

\\ Thamizhmaangani said...
தம்பிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்!:)
\

வாழ்த்துக்களுக்கு நன்றி காய்த்ரி!!

said...

\\ விஜய் said...
By the way, ஃபோட்டோவில் இருப்பது நீங்களும் உங்க தம்பியும் தானே??\\

ஃபோட்டோவில் இருப்பது, தம்பியும் அவன் அக்காவும்:))

said...

\\ Syam said...
தம்பிக்கு பிலேடட் பிறந்த நாள் வாழ்த்துகள்!!!\\

ரொம்ப நாளிக்கு அப்புறமா நாட்டாமையின் பின்னூட்டம்...நன்றி, நன்றி!!

said...

\\ Syam said...
அப்படியே பாசத்த கொட்டிட்டீங்க...கதை கவிதை ரெண்டும் சூப்பர் :-)\\

நன்றி ஷ்யாம்:))

said...

//\\nice post divs..aana enamo usuala irukara divs touch missagara mari iruku..ennu therila...title chinnatha irukarathalayo?? ila oray partla mudinjithalaya?? :D :D hehee\\

alo ....enna nakkala??
wait karo gilsu......seekiram 20 partsoda oru thodar kathai podurein,
kathai ku title ley oru para vaikirein parunga:))//
ஹி.. ஹி.. ஹி..
எப்படியோ.. அடுத்து ஒரு இருபது தொடர்கள் கொண்ட கதை வரபோகுது..



//ஆமாங்க....'harvard university' ல ட்ரெனிங் எடுத்துக்கிட்டேன்:)))//
அப்படீங்களா..



//அக்கா மேல இதே பாசமுள்ள ஃபீலிங்க்ஸ்.......கனவு காண்றப்போவும், கனவுல நாய் கடிக்கிறப்போவும் இருக்கனுங்க அம்மனி:))//
ஹா.. ஹா..ஹா.
இதுக்கு நான் ஒரு பத்து "ரிப்பீட்டு" போடலாம்.. ;)


//'harvard university' ல ட்ரெயிங் எடுத்துக்கிறேன்னு சரவணகுமாருக்கு கிண்டலா பின்னூட பதில் போட்டதை பார்த்து பயந்துடாதீங்க:))//
கிண்டல்.. இருக்கட்டும்.. இருக்கட்டும்..

said...

//நீங்க இந்தியா திரும்பியதும்....படு குஷியா இருக்கிறாப்ல இருக்கு, பின்னூட்டமே ரொம்ப உற்சாகமா இருக்கு, என்ன விஷேசம்??//

நம்ம ஊருக்கு திரும்பி வந்தா எப்போவுமே ஜாலி தானே :-)

said...

ஹ ஹா ஹா .... ஏனிந்த ஆனந்தமா? "திண்ணை" பற்றி தொடர்ந்து எழுத தங்களை மாடி விட்டுள்ளேன் :)

said...

Divya said...

(எனக்கும் அதே சந்தேகம் ...கதை எழுத ஏதாவது ட்ரைனிங் எடுத்திருக்கீங்களா?..)


வாங்க விஷ்ணு,

உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி!!

கதையை ரசித்துணர்ந்ததிற்கு நன்றி!!

கதை எழுத.....ட்ரெயினிங் எல்லாம் எதும் எடுத்துகலங்க,

'harvard university' ல ட்ரெயிங் எடுத்துக்கிறேன்னு சரவணகுமாருக்கு கிண்டலா பின்னூட பதில் போட்டதை பார்த்து பயந்துடாதீங்க:))

சான்ஸே இல்ல ...
நீங்க ட்ரைனிங் எடுத்த மாதிரி தான் இருக்குதுங்கோ !!!!

ஹ! ஹ!! ஹா!!! ஹா !!!!

said...

"திண்ணை" ச‌ங்கிலியை தொட‌ர‌ உங்க‌ளை அழைத்திருக்கிறேன்.

said...

@Saravanakumar

\\//அக்கா மேல இதே பாசமுள்ள ஃபீலிங்க்ஸ்.......கனவு காண்றப்போவும், கனவுல நாய் கடிக்கிறப்போவும் இருக்கனுங்க அம்மனி:))//
ஹா.. ஹா..ஹா.
இதுக்கு நான் ஒரு பத்து "ரிப்பீட்டு" போடலாம்.. ;)\\

அட.....கவிஞர் சந்தோஷமா சிரிக்கிறார்:))

இதே சிரிப்போடு......படிக்கிறவங்க முகத்தில் புன்னகை பரவுற மாதிரி ஒரு சந்தோஷமான கவிதை எழுதுங்க கவிஞரே!!!

said...

\\ முகுந்தன் said...
//நீங்க இந்தியா திரும்பியதும்....படு குஷியா இருக்கிறாப்ல இருக்கு, பின்னூட்டமே ரொம்ப உற்சாகமா இருக்கு, என்ன விஷேசம்??//

நம்ம ஊருக்கு திரும்பி வந்தா எப்போவுமே ஜாலி தானே :-)\\


ஆமாம் முகுந்தன்...ஊருக்கு போனா ஒரு தனி ஜாலி தான்:))
அது உங்க எழுத்திலேயே தெரியுது, மகிழ்ச்சி!!!

said...

\\ ShadowLord said...
ஹ ஹா ஹா .... ஏனிந்த ஆனந்தமா? "திண்ணை" பற்றி தொடர்ந்து எழுத தங்களை மாடி விட்டுள்ளேன் :)\\


பார்த்தேன் ....இரண்டு பேர் இதே தலைப்பு tag post க்கு மாட்டி விட்டிருக்கிறீங்க:(

said...

@விஷ்ணு
\\சான்ஸே இல்ல ...
நீங்க ட்ரைனிங் எடுத்த மாதிரி தான் இருக்குதுங்கோ !!!!

ஹ! ஹ!! ஹா!!! ஹா !!!!\\


ட்ரெனிங் எடுத்துக்கலன்னு சொன்னா நம்பனுங்கோ:))

said...

\\ Murugs said...
"திண்ணை" ச‌ங்கிலியை தொட‌ர‌ உங்க‌ளை அழைத்திருக்கிறேன்.\\


பார்த்தேன் murugs:(

said...

Belated Birthday wishes to Thambi...
வழக்கம் போல நச்சென்ற கதை, நறுக்கென்ற கவிதை....

said...

Very Good Touching story ..
Belated b’day Wishes to your Brother

said...

\\ இசக்கிமுத்து said...
Belated Birthday wishes to Thambi...
வழக்கம் போல நச்சென்ற கதை, நறுக்கென்ற கவிதை....\\



வாங்க இசக்கிமுத்து,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!!

உங்கள் தொடர் வருகைக்கும், உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி!!

said...

\\ Prabakar Samiyappan said...
Very Good Touching story ..
Belated b’day Wishes to your Brother\\


உங்கள் பாராட்டிற்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி ப்ரபாஹர்!!

said...

நல்ல அக்கா!!

தங்கள் தம்பி நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்!!

said...

சூப்பர்ப்...!
:)

said...

\\ஃபாதர்........எங்களுக்கு அப்பா அம்மா இல்லை......நாங்க அனாதை.....ப்ளீஸ் எங்களை புனித மேரி இல்லத்தில சேர்த்துகோங்க ஃபாதர்"

ஃபாதரின் கண்ணில் நீர் பூத்தது.
\\
படிக்கும் எங்கள் விழிகளிலும் நீர் பூக்கின்றது.

கவிதை அருமை

தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...

said...

Wow...
kalakeeteenga ponga :)

said...

//அட.....கவிஞர் சந்தோஷமா சிரிக்கிறார்:))

இதே சிரிப்போடு......படிக்கிறவங்க முகத்தில் புன்னகை பரவுற மாதிரி ஒரு சந்தோஷமான கவிதை எழுதுங்க கவிஞரே!!!//

சரிங்க..
ஆனால் ஒரு சோகமில்லாத கவிதை போஸ்ட் பண்ணியிருக்கேன்.. எப்படி இருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க "கவி கதாசிரியர்"..

ஆமா.. நீங்க எப்போ அடுத்த பதிவு போடுவீங்க??

said...

\ Mathi... said...
நல்ல அக்கா!!

தங்கள் தம்பி நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்!!\\


Thanks a lot Mathi!!!

said...

\\ Karthik said...
சூப்பர்ப்...!
:)\\

Thank you so much Karthik!!

said...

\\ புகழன் said...
\\ஃபாதர்........எங்களுக்கு அப்பா அம்மா இல்லை......நாங்க அனாதை.....ப்ளீஸ் எங்களை புனித மேரி இல்லத்தில சேர்த்துகோங்க ஃபாதர்"

ஃபாதரின் கண்ணில் நீர் பூத்தது.
\\
படிக்கும் எங்கள் விழிகளிலும் நீர் பூக்கின்றது.

கவிதை அருமை

தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\\


வாங்க புகழன்,
ரொம்ப நாளா ஆளே காணோம், நலமா??

வாழ்த்துக்களுக்கு நன்றி!!

said...

\\ Ramya Ramani said...
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...\\

ரம்யா நீங்க தந்த இன்ப அதிர்ச்சியில் ......அசந்து அதிர்ந்து போய்ட்டேன்!! நன்றி!!!

said...

\\ Harish said...
Wow...
kalakeeteenga ponga :)\\

நன்றி ஹரிஷ் உங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும்!!

மீண்டும் வருக!!

said...

\\ Saravana Kumar MSK said...
//அட.....கவிஞர் சந்தோஷமா சிரிக்கிறார்:))

இதே சிரிப்போடு......படிக்கிறவங்க முகத்தில் புன்னகை பரவுற மாதிரி ஒரு சந்தோஷமான கவிதை எழுதுங்க கவிஞரே!!!//

சரிங்க..
ஆனால் ஒரு சோகமில்லாத கவிதை போஸ்ட் பண்ணியிருக்கேன்.. எப்படி இருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க "கவி கதாசிரியர்"..

ஆமா.. நீங்க எப்போ அடுத்த பதிவு போடுவீங்க??\\


உங்க சோகமில்லா கவிதை அருமை சரவணகுமார், தொடர்ந்து சோகமில்லா கவிதைகளை படைப்பீர்கள் என நம்புகிறேன்!!

said...

அருமையா பாசமா இருக்கிற அக்காக்கள் வாழ்க.
அதை இப்படிக் கதையா எழுதின உங்களுக்கு எவ்வளவு வாழ்த்துகள் சொன்னாலும் போறாது திவ்யா.
உங்கள் தம்பிக்கு என் வாழ்த்துகள் .அவன் என்னிக்கும் உங்கள்ட்ட ரொம்பப் பாசத்தோட இருக்கணும்.

said...

\\ வல்லிசிம்ஹன் said...
அருமையா பாசமா இருக்கிற அக்காக்கள் வாழ்க.
அதை இப்படிக் கதையா எழுதின உங்களுக்கு எவ்வளவு வாழ்த்துகள் சொன்னாலும் போறாது திவ்யா.
உங்கள் தம்பிக்கு என் வாழ்த்துகள் .அவன் என்னிக்கும் உங்கள்ட்ட ரொம்பப் பாசத்தோட இருக்கணும்.\\



வாங்க வல்லிமா,

என் வலைதளம் வந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!!

உங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் கிட்டியதில் மட்டில்லா மகிழ்ச்சி!!!

said...

HI,

vry nice posting, it was tooooooooo touchy!!!! & belated wishes to ur brother....lucky him to get an sister like u :)

anndha kavidhai rombbaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa nalla irrundhudhuuuu :)

said...

Ms.Vidya,
I accidentally ran into your Blog while surfing and started reading your stories. Well, I ended up reading all of them!! You have an uncanny knack of getting the reader's attention with your simple but impeccable style.
"Then tamizhin thithikkum varigalile
Manathil thOndrum uyariya unarvugalai
Pinni pinaithu kathai ezhuthum Divya
Ungal aatral valarga, vazhga valamudan"
Saraswathan

said...

// கார் வரைக்கும் நானே உன்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போறேன், சரியா //

//அந்த சிறு பெண்ணின் உருண்ட விழிகள் அழுது சிவந்து, இரட்டை ஜடையில் ஒன்றில் மட்டும் ரிப்பன்//

//இரு சிறகுகளிலும்
இருந்த பாரங்களை
இறக்கி வைத்த
சின்னப் பட்டாம் பூச்சியாய் நான்.. //

சிறந்த வர்ணனை.. வாழ்த்துக்கள்...