May 20, 2009

உன்னிடத்தில்.....சரணடைந்தேன்!! - 5

பகுதி - 1 பகுதி - 2 பகுதி - 3 பகுதி - 4

முத்துவின் அந்த சுட்டெரிக்கும் பார்வையை கண்டதும் கார்த்திக்கின் உள் மனதில் ஏதோ உறுத்தியது. இவனை சும்மா விடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான்.

மறுநாள் காலை தீபா ட்யூட்டியில் இருக்கும்போது கார்த்திக்கிடமிருந்து ஃபோன் வந்தது. மிகவும் முக்கியமான விஷயம், அதனால் உடனடியாக தன்னை தனது வீட்டில் வந்து சந்திக்கும்படி அவன் கூறியதும், அரைநாள் லீவிற்கு சொல்லிவிட்டு அவனை சந்திக்க சென்றாள் தீபா.

கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றதும்,ஹாலில் இருந்த கார்த்திக்கின் அம்மா தீபாவிடம்,

"வாம்மா தீபா.....நல்லாயிருக்கிறீயா..........ரொம்ப நாளா வீட்டு பக்கமே வரலியேமா"

"நல்லாயிருக்கிறேன்மா..........நீங்க நல்லாயிருக்கிறீங்களா?.......ஒரு வாரம் மெடிக்கல் கேம்ப்க்கு போயிருந்தேன், அதான் உங்களை வந்து பார்க்க முடியல........கார்த்திக்...இருக்...கா.."

"ஆங்.........கார்த்திக் முன்னாடி ஆஃபீஸ் ரூம்ல உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான், போய் பாருமா.......பேசிட்டு இருங்க நான் காஃபி எடுத்துட்டு வரேன்"

"சரிமா....."

கார்த்திக்கின் அறை கதவினை தட்டிவிட்டு, அனுமதி பெற்று உள்ளே சென்றாள் தீபா,

"வாங்க டாக்டர் மேடம்..........எப்படி இருக்கிறீங்க?"

"ம்ம் நல்லாயிருக்கிறேன்.......சரி எதுக்கு வர சொன்ன கார்த்திக்"

"சொல்றேன் ......சொல்றேன், முதல்ல உட்காரு இந்த சேர்ல"

" ம்........ஒகே....சரி இப்போ சொல்லு......என்ன விஷயம்?"

"நீ நேத்து பெயில்ல ஒருத்தனை கூட்டிட்டு போனியே ...அதான் அந்த சரஸ்வதியோட புருஷன்...முத்து...அவன் செத்துட்டான்"

"வாட்............முத்து செத்துட்டாரா???"

"என்ன தீபா ரொம்ப அதிர்ச்சியா இருக்க........இன்னொன்னு சொல்றேன் கேளு........அவன் சாவு சாதாரண சாவு இல்ல........கொலை....."

"கொ.......கொலையா..........."


"ஆமா.........சரஸ்வதியோட புருஷனை யாரோ கொலை செய்துட்டாங்க........போலீஸ் இன்வஸ்டிகேஷன் நடந்திட்டிருக்கு"

"யாருன்னு கண்டுபிடிச்சுட்டாங்களா??......"

"இன்னும் இல்ல.............ஆனா சில ஆதாரங்கள் போலீஸ் கையில கிடைச்சிருக்கு, அதை வைச்சு கண்டிப்பா குற்றவாளி யாருன்னு சீக்கிரம் கண்டு பிடிச்சிடும் எங்க டிபார்ட்மெண்ட்"

"................"

" இந்த கொலை விஷயமா...........உன்கிட்ட சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கு........"

"எ......என்கிட்ட என்ன கேட்கனும்?"

"இந்த கொலைக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கும்னு ..........நாங்க சந்தேகப்படுறோம்"

"புல்ஷிட்..........என்ன உளர்ற கார்த்திக்"

"ஏன் டென்ஷன் ஆகுற தீபா.............சந்தேகம்னு தானே சொன்னேன்.........இன்னும் இன்வெஸ்டிகேஷன் கேள்விகளே கேட்க ஆரம்பிக்கல அதுக்குள்ள டென்ஷன் ஆனா எப்படி?? கூல் டவுன் டாக்ட்டர் மேடம்"


"சந்தேகம் உன் டிபார்ட்மெண்டுக்கு இல்ல..........உனக்குதான் என் மேல சந்தேகம்.........நீ பொய் கேஸ் போட்டு முத்துவை உள்ள தள்ளினபோ, சரஸ்வதிக்காக நான் அவரை பெயில்ல எடுத்தது உனக்கு பிடிக்கல, என் மேல கோபம் உனக்கு, அதான் இப்படியெல்லாம் பேசுற"

"என்ன தீபா..........ரொம்ப சமார்த்தியமா பேசுறதா நினைப்பா??...............உன் மேல சந்தேகம் மட்டுமில்ல ........நீ தான் கொலை பண்ணினன்றதுக்கு என்கிட்ட ஆதாரமே இருக்கு"

".................."

தன் மேஜைக்கு அடியில் இருந்து ஒரு சிறு பாக்கெட்டை எடுத்து பிரித்து காண்பித்தவன்.........

"இது........என்னன்னு தெரியுதா டாக்டர்........."

"அ......து...........இது......ஸ்ரிஞ்ச்"

"நீ விஷ ஊசி போட பயன்படுத்தின ஸ்ரிஞ்ச்.............."

"கா.......கார்த்திக்........."

தன் இருக்கையில் இருந்து எழுந்து, எதிரில் அமர்ந்திருந்த தீபாவின் இருக்கையின் அருகில் வந்து நின்றான் கார்த்திக், தீபா மெதுவாக எழுந்து நின்று , தன் நெற்றி பொட்டில் பூர்த்திருந்த வேர்வை துளிகளை துடைத்துக்கொண்டாள்.

" ஏன்..........ஏன் தீபா இப்படி பண்ணின...........நீ பண்ணியிருக்கிறது எவ்வளவு பெரிய தப்பான முட்டாள்தனம்னு உனக்கு தெரியுமா??"

"கார்த்தி.........நான்.........."

"உன் மருத்துவ தொழிலுக்கு மிக மிக அவசியமான பொறுமையும், மனிதாபிமானமும் எங்க போச்சு தீபா............."

"கார்த்தி........சரஸ்வதிக்கு அவன் பண்ணின கொடுமையெல்லாம் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல"

"அதான் நான் போலீஸ் கவனிப்பு கவனிச்சுக்கிறேன்னு சொன்னேனே........அப்புறம் என்ன???"

"ஹும்.......ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வைச்சு முட்டிக்கு முட்டி தட்டினா இந்த மாதிரி ஆழுங்க திருந்திடுவாங்கன்னு நினைக்கிறியா??............நோ நாட் அட் ஆல் கார்த்தி"

"டோன்ட் பி எமோஷ்னல் தீபா...............இப்படி தப்பு பண்ற ஒவ்வொருத்தனையா கொலை பண்ணிட்டு இருக்க போறீயா??..........."

"கார்த்தி..........நான்........கோபத்துல...........அப்படி ஒரு காரியம்........."

அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் திக்கியது,
தொண்டை அடைத்தது,
அவளது இதயதுடிப்பு நொண்டி அடித்தபடி இருக்க,
பயத்தில் ஒருவித நடுக்கம் உடலெங்கும் பரவியது தீபாவிற்கு!!

"கார்த்திக்.........."

"ம்ம்....."

"நீ........நீ ......இந்த ஆதாரத்தை வைச்சு என்னை அரெஸ்ட் பண்ண போறீயா??"

"ஆமா.........கைது பண்ணத்தான் போறேன்......"

"கா......ர்த்.......திக்"

"கைதி பண்ணி..............ஆயுள் தண்டனை கொடுக்க போறேன்..........திருமதி தீபா கார்த்திக் குமாரா"

சிறு குறும்பு புன்னகையோட தீபாவிற்கு இன்னும் நெருக்கமாக வந்த கார்த்திக்,

"என்ன டாக்டரம்மா..........ரொம்ப பயந்துட்டீங்களோ??.........ஹா ஹா........விஷ ஊசி போடுற அளவுக்கு தைரியம் இருக்கு, அப்புறம் தடயத்தோடு மாட்டினதும் பேந்த பேந்த முழிச்சா எப்படி??"

"................"

"சரி........கூல் டவுன்.........சரஸ்வதி புருஷன் முத்து சாகல"

"நீ....நீ என்ன சொல்ற கார்த்திக்?"

"என்ன........நீ போட்ட விஷ ஊசி எப்படி வேலை செய்யாம போச்சுன்னு பார்க்கிறியா??"

"..............."

" நீ முத்துவுக்கு நேத்து ராத்திரி போட்டது வெறும் சத்து ஊசி............."

".............."

" நீ திடீருன்னு சரஸ்வதி புருஷன் மேல இரக்கப்பட்டு பெயில்ல எடுத்ததுமே எனக்கு ஒரு சின்ன டவுட்.........இப்படி ஏதாச்சும் தத்தக்கா பித்தக்கான்னு பண்ணிடுவியோன்னு நினைச்சேன், மோர் ஓவர்.........நீ முத்துவ பெயில்ல கூடிட்டு போறப்போ......அவன் உன்னையும் என்னையும் நம்பாம கோபமா முறைச்சுட்டே போனான், அவனால உனக்கு ஏதும் ஆபத்து வந்துடக்கூடாதுன்னு அவனை கண்கானிக்க ஒரு கான்ஸ்டபிளை அப்பாயிண்ட் பண்ணினேன், அப்படியே உன்னையும் நான் வாட்ச் பண்ணிட்டு இருந்தேன்"

".............."

"நான் எதிர் பார்த்த மாதிரியே நீ முத்துவை உன் ஃப்ரண்டோட க்ளினிக்ல அட்மிட் பண்ணின...........நைட் நீ நர்ஸ்கிட்ட போட கொடுத்த விஷ ஊசியையும் நான் தான் மாத்தினேன்......"

"கார்த்தி.......நான் தெரியாம.........ரொம்ப எமோஷனலாகி.........இப்படி பண்ணிட்டேன்..........."

"இந்த கோபம்..........தண்டிக்கனும்ன்ற உணர்வெல்லாம் இத்தோட விட்ரு தீபா.......சரஸ்வதியையும் முத்துவையும் எப்படி நல்ல படியா வாழவைக்கிறதுன்னு யோசிப்போம், இனியும் அவன் திருந்தலீனா............விஷ ஊசி எல்லாம் வேணாம்........என்கவுண்ட்ர்ல போட்டு தள்ளிடுறேன்"

" நீங்க போட்டு தள்ளினா மட்டும் ............நியாயமா?? தொழில் தர்மமா??..........இது நல்லா கதையா இருக்குதே"

படபடப்பு குறைந்து, மெல்லிய புன்னகை படர்ந்திருந்தது தீபாவின் முகத்தில்.

"சரி..சரி அதெல்லாம் இருக்கட்டும்......எப்போ அரஸ்ட் வாரண்டோட டாக்டரம்மாவை வந்து பார்க்கட்டும்......."

"..............."

"என்ன தீபா......பதிலே காணோம்"

"அரெஸ்ட் வாரண்ட் எதுக்கு கார்த்திக்...........அதான் நான் உன்கிட்ட சரணடைஞ்சுட்டேனே"

என்னை விழிகளால்
கைது செய்தவளை
நான் விலங்கினால்
கைது செய்ய முடியுமா??

என்னிதய சிறைக்குள்
குடியிருப்பவளை -இனி
எந்த சிறைக்குள்
சென்றடைக்க முடியும்???

கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!

உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்!



முற்றும்.

May 07, 2009

உன்னிடத்தில்.........சரணடைந்தேன்!!! - 4

பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3


தன்னையும் தீபாவையும் ஹாஸ்பிட்டல் வராண்டாவில் கூர்ந்து கவனிக்கும் அந்த உருவம் யாராக இருக்கலாம் என்று கார்த்திக்கால் சரியாக யூகிக்க முடிந்தது.

"தீபா........சரஸ்வதியை பத்திரமா பார்த்துக்கோ.....அவ வாக்குமூலத்தில உண்மையை சொல்லலியேன்னு கோபப்படாதே, கான்ஸ்டபி்ள்ல இந்த அறைக்கு பாதுகாப்பா விட்டுட்டு போறேன்.."

"கான்ஸ்டபிள் எல்லாம் எதுக்கு கார்த்திக்......."

"அதெல்லாம் அப்புறமா சொல்றேன் தீபா........நான் இப்போ உடனடியா போகனும்" என்று அவளது பதிலுக்கு கூட காத்திராமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான் கார்த்திக்.

அவனது சீற்றமான முக மாறுதலும், பரப்பரப்பான நடையையும் சிறிது நேரம் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டுருந்த தீபா, மீண்டும் சரஸ்வதியின் அறையினுள் வந்தாள்.

தீபாவை கண்டதும், சரஸ்வதியின் கண்கள் தானாக வழிந்தன.

"டாக்டரம்மா......என்னை மன்னிச்சிடுங்க........நீங்க வந்துட்டு போன கொஞ்ச நேரத்துல என் புருஷன் வந்தாருமா........நடந்த உண்மையெல்லாம் உங்ககிட்ட சொன்னா, என்னைய மட்டுமில்ல உங்களையும் சேர்த்தே தீர்த்து கட்டிருவேன்னு மிரட்டினாரு.........அதான்........நான் போலீஸ் கிட்ட...அப்படி....என்னை மன்னிச்சிடுங்கமா"

முகம் சிவக்க அவள் தேம்பி தேம்பி அழுவதை கண்டதும் தீபாவின் மனம் இளகியது.


"ஹும் ....நான் மன்னிக்கிறதெல்லாம் இருக்கட்டும், நீ தைரியமா இரு...........உனக்கு இப்போ வேண்டியதெல்லாம் கம்ப்ளீட் ரெஸ்ட், எதையும் போட்டு மனசை குழப்பிக்காம இரு சரஸ்வதி"

தீபா அவளிடம் தான் அவளை தேடி அவளது வீட்டிற்கு சென்றதையும், அவளது மகன் நன்றாக இருக்கிறான் என்பதையும் கூறி அவளை தைரியப்படுத்தினாள்.

பின் ட்யூட்டியில் இருந்த நர்ஸிடமும், கான்ஸ்டபளிடமும் சரஸ்வதியை சந்திக்க யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என எச்சரித்து விட்டு, தனது அறைக்கு சென்றாள்.
ஒரு மணிநேரத்தில் கார்த்திக்கிடமிருந்து தீபாவிற்கு ஃபோன் கால் வந்தது, அதில் அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த தீபா, உடனடியாக அவன் சொன்ன போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தாள்.

அங்கு சென்றதும், கார்த்திக்கும் மற்றுமொரு போலீஸ்காரரும், சரஸ்வதியின் கணவனை அடி பிண்ணிக்கொண்டிருந்ததை கண்டதும்....

"கா..............கார்த்திக்................ஸ்டாப் இட்........."

தீபாவின் குரல் கேட்டு திரும்பிய கார்த்திக், மூச்சிரைக்க.....

"ஹாய் தீபா......வா......."

"வாட் இஸ் ஆல் திஸ் கார்த்தி..........இப்படி போட்டு அடிக்கிற??"


"இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் இப்படி தான் கவனிக்கனும், ........பொண்டாட்டிய மிரட்டி உண்மையை மறைச்சுட்டா?? சும்மா விட்டுருவோமா...........ஏதாவது ஒரு கேஸ் போட்டு உள்ள தள்ளி இப்படி லாடம் கட்டினா தான் இவனுங்க எல்லாம் சரிபட்டு வருவானுங்க......"

சொல்லிக்கொண்டே சரஸ்வதியின் கணவன் மீது தன் பூட்ஸ் காலால் ஓங்கி ஒரு உதை விட்டான் கார்த்திக்.

"இப்படி காட்டுமிராண்டிதனமா போட்டு அடிக்கிறதை முதல்ல நிறுத்து கார்த்தி......."

"என்ன தீபா புரியாம பேசுற..........இது தான் போலீஸ் வே ஆஃப் ட்ரீட்மெண்ட்......."

"அதுக்காக இப்படியா...........பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுர குறுக்கு வழில எல்லாம் கார்த்திக் ஐ.பி.எஸ் போவாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை"

"நீ தானே தீபா...........சரஸ்வதி புருஷன் மேல நடவடிக்கை எடுக்கனும்னு அவகிட்ட வாக்குமூலம் வாங்க கூட்டிட்டு போன.......அவளை மிரட்டி அப்படி வாக்குமூலம் மாத்தி கொடுக்க வைச்சதே இந்த கபோதி தான்.........அதான் இப்படி உள்ள தள்ளி நொறுக்கி எடுக்கிறேன்"

மீண்டும் சரஸ்வதியின் கணவனை கார்த்திக் அடிக்க எத்தனிக்க............தீபா....

"தட்ஸ் இட் கார்த்திக்.............ஜஸ்ட் ஸ்டாப் திஸ் ............நான் சரஸ்வதி புருஷனை பெயில்ல எடுக்க போறேன்"

"தீ.........தீபா.........அர் யூ ஜோக்கிங்??"

"நோ கார்த்திக்.............ஐ அம் நாட்........ஒன் மினிட் வெயிட்" என்று கூறிவிட்டு தன்னுடன் அவள் அழைத்து வந்திருந்த வைக்கீல் ஒருவரை வெளியில் சென்று அழைத்து வந்தாள்.

"அஸிஸ்டண்ட் கமீஷ்னர் சார்......இவர் என்னோட வக்கீல் மிஸ்டர்.நாராயணமூர்த்தி, சரஸ்வதி புருஷன் முத்துவை பெயில்ல ரிலீஸ் பண்ணுங்க"

"தீ.......தீபா..........."

"நான்....முத்துவை பெயில்ல எடுக்க வந்திருக்கிற டாக்டர் தீபா.......புருஞ்சுதா அஸிச்டண்ட் கமிஷ்னர் சார்??"

"ஸா....ஸாரி டாக்டர்........."

பெயில் பேப்பர்ஸில் கையெழுத்து வாங்கிவிட்டு, தன்னருகில் நின்றிருந்த கான்ஸ்டபளிடம் முத்துவை ரிலீஸ் பண்ண சைகை காட்டினான் கார்த்திக்.

போலீஸ் அடியில்........கசக்கி பிழியப்பட்ட நிலையில் இருந்த முத்து, தட்டு தடுமாறி எழுந்து தீபாவுடன் சென்றான்.

"வாங்க முத்து...........பக்கத்துல இருக்கிற என் ஃப்ரண்டோட க்ளீனிக்ல உங்க காயங்களுக்கு மருந்து போட்டுட்டு அப்புறமா உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்" என்று தீபா அவனை போலீஸ் ஸ்டேஷனை விட்டு அழைத்து சென்றாள்.

தீபாவின் செய்கைகள் கார்த்திக்கின் கோபத்தை அதிகரித்தது, அவளுடன் சென்ற முத்துவை அனல் பறக்கும் பார்வை பார்த்தபடி.......

'இந்த தடவை டாக்டரம்மா சரஸ்வதி மேல வைச்சிருக்கிர பாச செண்டிமெண்ட்னால தப்பிச்சுட்ட.........வேற ஒரு கேஸ்ல மாட்டாமலா போய்டுவ........அப்போ வைச்சுக்கிறேன்டா உனக்கு கச்சேரி' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் கார்த்திக்.

வாசல்வரை தீபாவுடன் மெதுவாக நடந்து சென்ற முத்து, கதவருகே நின்று கார்த்திக்கை கோப பார்வையுடன் திரும்பி பார்த்தான்.............

'டேய் போலீஸ்காரா.......நீயும் இந்த பொம்பளை டாக்டரும் சேர்ந்து போடுர ட்ராமா எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?? வேணும்னே என்னை பொய் கேஸ்ல உள்ள போட வைச்சு, அடி பிண்ணி எடுத்துட்டு, இப்போ பெயில்ல எடுக்கிற மாதிரி அவளும் நீயும் சேர்ந்து ட்ராமாவாடா பண்றீங்க.........உங்க இரண்டு பேருக்கும் வைச்சிருக்கிறேன்டா ஆப்பு....."

முத்துவின் அந்த சுட்டெரிக்கும் பார்வையை கண்டதும் கார்த்திக்..........

[தொடரும்]


பகுதி - 5