December 19, 2008

காதலில் விழாமல் தப்பிப்பது எப்படி???




காதல் எப்படி?..... எங்கே?..... ஏன்?? வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது.


கண்டதும் காதல் வரலாம்.
கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம்.
கண்ணடிச்சா காதல் வரலாம்.
கன்னத்துல அடிச்சா கூட காதல் வரலாம்.
இப்படி தொறந்த வீட்டுல..ஸாரி.............., தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்.


பசிக்கும், ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது.
தூக்கம் வரும், ஆனா கொட்டாவி வராது.
நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும்.
ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும்.
அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும்.
எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்.
கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும்.
தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்.



*காய்ஞ்சு கருவாடாப் போன ரோசாப்பூ,
*எப்பவோ எச்சில் பண்ணுன எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர்,
*கிழிஞ்சு போன பஸ் டிக்கெட்,
*லேசா செம்பட்டையான ஒரு முடி,
*குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள்,
*காது போன குட்டிக் கரடி பொம்மை,
*ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன மூணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற ஃபீலிங் கிடைக்கும்.


இப்படி மருந்தே கண்டுபிடிக்க முடியாத உயிர்க்கொல்லி நோயான காதல்ல "ஸ்ஸரக்'குன்னு வழுக்கி விழுற இடங்கள் எதுன்னு ஒரு ஜொள்ளு+லொள்ளு ஆராய்ச்சிதான் இது.


* 23சி பஸ்ஸுக்காக 24 நிமிஷங்களாகக் காத்திருப்பீங்க. 25 வயசுள்ள ஒரு பையன் பஸ் வரலையேன்னு டென்ஷனோட 26 வது தடவையா நகத்தைக் கடிப்பான். 27 வது நிமிஷம் பஸ் வர, 28 பேர் முந்தி அடிச்சு ஏறுவோம். நீங்க முன்வாசல். அவன் பின்வாசல். நீங்க கொடுக்குற ரெண்டு ரூபா, 29 பேரைக் கடந்து முப்பதாவது ஆளா அவன் கைக்குப் போகும். அப்புறம் அவன் டிக்கெட் எடுத்துக் கொடுக்குறது தினமும் நடக்கும். அதுக்கு தாங்க்ஸ் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவனுக்கு ரொமாண்டிக் லுக்கா தெரியலாம். டிக்கெட்ல "டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். பி கேர் ஃபுல்!




* தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வர்ற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும். அடுத்த செகண்ட்ல நாலு உதடுகளும் துடிதுடிச்சு "ஸாரி'ன்னு சொல்லும். விலகி நடக்கறப்போ உசிரை எடுத்து வெளியே போட்டுட்டு நடக்குற மாதிரி தோணும். போறப்பவே ரெண்டு பேரும் ஒரே நேரத்துல திரும்பிப் பார்ப்பீங்க. வெட்கமெல்லாம் வேற வர்ற மாதிரி சிரிப்பு ஒண்ணு சிரிப்பீங்க.

அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி நீங்க சொல்லிட்டுப் போக, அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லணுமாக்கும்.



* நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒருத்தன் உங்க பின்னாலேயே வருவான். சந்நிதி முன்னால நின்னுட்டு , கண்களை மூடி வேகவேகமாக ஏதோ சொல்லுவான். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு!

திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்ன?"ன்னு கேட்பான். இப்படி ஒரு வாசகமா ஆரம்பிக்கிறது திருவாசகமாப் பெருகி காதல் வெள்ளத்துல அடிச்சுட்டுப் போக அம்புட்டு சான்ஸ் இருக்கு. ஜாக்கிரதை!!



* "எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டவுட்".
"அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா டவுட் கேட்க ஆரம்பிப்பாங்க.
"எனக்கு நேத்து சுண்டுவிரல் சுளுக்கிட்டதால கிளாஸ்ல நோட்ஸ எழுத முடியலடா. உன் நோட்ஸ் தாடா. ப்ளீஸ்டா'ன்னு உரிமை ஊஞ்சலாட கேப்பாங்க. நோட்ஸ் திரும்ப வர்றப்போ, ஏகப்பட்ட பின்குறிப்புகளோட லவ்வையும் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க.


கால்குலேட்டரைக் கடனாக் கேப்பாங்க. திருப்பித் தர்றப்போ"143' ன்னு அதுல நம்பர் சிரிக்கும்.
அடிஸ்கேலை அன்பா வாங்கிட்டுப் போவாங்க. திருப்பித் தர்றப்போ, ஸ்கேலோட அடிப்பாகத்துல ஹார்ட்ல அம்பு விட்டுத் தருவாங்க. ஸ்கூலுக்கு ஸ்கூல் மன்மதன்ஸ், ரதிஸ் காதல் மார்க்கோட அலைஞ்சுக்கிட்டே இருக்காங்க. எச்சரிக்கை!!



* "ஹலோ சுசீலா இருக்காங்களா? இல்லையா...ராங் நம்பரா..நீங்க யாரு? ஓ.. நீங்க சுப்புலட்சுமியா! பரவாயில்லை நீங்களே பேசுங்க. நீங்களும் நல்லாத்தான் பேசுறீங்க! ஸ்வீட் வாய்ஸ்!'ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்."

ஆக்சுவலி, யு.எஸ்.போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெஸேஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும்.



* "மூணு சுழி "ண' க்கு எத்தனை சுழி வரும்.' "ம்' - முக்கு புள்ளி வைக்கணுமா' இந்த ரேஞ்சுல தமிழ் தெரிஞ்ச பசங்க ,லவ்வை ஜிவ்வுன்னு சொல்லுறாப்ல. நாலு வார்த்தைகளைக் கவ்வி, கிரீட்டிங் கார்டுல தெளிச்சு ,"உன்னப் பத்தி ஒரு கவித எழுதுனேன். பாரு'ன்னு நீட்டுவாங்க .

"பூக்கலுக்கு பல்கள் உண்டா?

உன் - ஐப் பாத்ததும்

டெட்டானது காட்று!'


- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும்.


ரெண்டே வரியில் நச்சுன்னு காதல் கவிதை எழுதுறவுகளும் கவிதை அம்புகளை அனுப்புவாக, அதை படிச்சுப்புட்டு,
"நம்ம பேரு என்ன இவ்வளவு கவித்துவமாவா இருக்கு??"
"நாம என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்'னு வார்த்தைகளில் வழுக்கி விழுந்தோட்டோம்னா அவ்ளோதான். எழுந்திரிக்கவே முடியாது. ஜாக்கிரதை!!!



* "இன்னிக்கு என் ஆளு கூட மூவி போறேன்டினு' பந்தாவா ஒருத்தி முள்ளைத் தூவிட்டுப் போவா.
"இந்த சுடி என் லவ்வர் வாங்கித் தந்தான்டி. அவனுக்கு பஞ்சு முட்டாய்க் கலர்தான் பிடிக்கும். எப்படி இருக்குடி?'ன்னு தோழி ஒருத்தி தோரணம் கட்டி தூபம் போட்டுட்டுப் போவா.
"அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறா. நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும்.
"அவளை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து மூளையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். ஜாக்கிரதை!!!




* அடுத்த டேஞ்சரான நாள் பிப்ரவரி மாசம் வந்து பல்லைக் காட்டும். காதலர்களுக்கிடையில கீரிட்டிங் கார்ட்ஸ் கிரிக்கெட் ஆடும். காந்தி ஜெயந்தி என்னிக்குன்னு தெரியாதவங்ககூட காதலர் தினத்தை கடமையுணர்வோட கொண்டாடுவாங்க. "அட, எல்லாரும் கையில ஹார்ட்டைத் தூக்கிட்டு அலையறாங்களே, ஏன் நமக்குன்னு ஒரு லவ் இல்ல'ன்னு ஏக்கம் சுனாமியா வந்து நம்மள மூழ்கடிக்கும். வேணாம் ராசாத்தி வேணாம்.


பட்டாசு வெடிச்சாத்தான் தீவாளி,
கேக்குத் தின்னாத்தான் கிறிஸ்மஸ்,
ப்ரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான்,
அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!

(பின் குறிப்பு: ஈ-மெயிலில் வந்த கட்டுரையை, சில மாற்றங்களுடன் இப்பதிவில் பதிவிட்டிருக்கிறேன்!!!இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே.)

December 10, 2008

உயிரே!....உறவாகவா??? - 4



உயிரே!....உறவாகவா??? - 1

உயிரே!....உறவாகவா??? - 2

உயிரே!....உறவாகவா??? - 3



பானுவின் பிறந்தநாளான அன்று மட்டுமாவது இளமாறனிடம் பேசும்படி ரமேஷும் , பெற்றொரும் வற்புறுத்தவே பானுவும் சம்மதித்தாள்.

அவளது வீட்டினரின் சம்மதத்துடன் பானுவை வெளியில் அழைத்துச் சென்றான் இளமாறன்.

நீண்ட நாட்களுக்குப் பின் பானுவும் , இளாவும் அவனது காரில் சென்றனர்.

சாரல் மழையும்...
மெல்லத் தீண்டும் தென்றலும்...
மேனியை வருடிச் செல்ல…
அதுவே அன்றைய பொழுதில் ஒரு இனிய சுகத்தைக் கொடுத்தது.

அந்த சுகத்தை அனுபவித்தவாறு…
இருவரும் ...பயணத்தைத் தொடர்ந்தார்கள்.


நீண்ட நாட்களுக்கு பின்......அன்றைய கால நிலையும், சூழ்நிலையும் சேர்ந்து...
இளாவின் மனதுக்குள் புது வித ராகம் பாட…

அவளுடன் பயணிக்கும் ஒவ்வொரு கண நேரத்திலும்...
அவன் முகத்திலும், அகத்திலும்...
ஆயிரமாயிரம் உணர்ச்சி வெள்ளம்...
இன்பமாக பொங்கி எழத் தொடங்கின.


மழை சாரல்!
மாலை நேரம்!
அருகில் தேவதையாய் அவள்!

அந்தத் தேவதைக்குப் பக்கத்தில் இருந்ததால்…
இதுவரை அவனுள் புதைந்திருந்த காதல் தீ...
பட்டெனப் பற்றிக் கொண்டு...
சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.

சாரலாகவோ
நிரம்பவோ
எப்பொழுதும் நான்
ரசிக்கும் மழை நீ...
எப்போது மீண்டும்
திரண்டு வந்து
மழையாய்
பொழிவாய் உன்
காதலை....
நனையக் காத்திருக்கிறேனடி...!!!


எதிர்புறம் இருந்து வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்திலும்…
தாண்டிச் செல்லும் மின் கம்பங்களில் இருந்து ஒளித்த...
மின் குமிழ்களின் வெளிச்சத்திலும்...

அவள் முகம் மறைந்து மறைந்து...
மீண்டும் தெரிந்தது,
மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!!


அந்த இருட்டான வாகனத்தில் வெளிச்சம் வந்து போகும் போது...
அவனுக்கு அவனது தேவதை தெரிந்தாள்.

அவனது இதயத்தின் அறைகளில் எல்லாம்...
மெல்லிய பூவாசம் அடித்தால் போல்...
சுகந்தமாய் வாசம் வீசத் தொடங்கியது!!

அமைதியாக யோசனையில் மூழ்கிய படி காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பானுவை பார்க்கையில்........இளாவிற்கு அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இளாவின் பிறந்தநாளை இருவரும் சேர்ந்து கொண்டாடியது நினைவிற்கு வந்தது......!!



இளாவின் பிறந்தநாள் அன்று அவனது விருப்பப்படி, அவனுக்கு மிகவும் பிடித்த கலரில் புடவை உடுத்தி வந்தாள் பானு.
இருவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு, காரில் வந்தமர்ந்ததும்......,

பானு அவனுக்கு அன்பளிப்புடன் ஒரு வாழ்த்து அட்டையும் கொடுத்தாள்.
வாழ்த்து அட்டையை பிரித்த இளா.......அதனுள் பானு எழுதியிருந்த கவிதையை படித்து அதிசயத்துப் போனான்.

"செல்லம்.......நீ கவிதை கூட எழுதுவியா?? சொல்லவே இல்ல....சூப்பரா இருக்குடி குட்டிமா"

"நன்றி.......நன்றி........"

"ஒவ்வொரு வரியும் செம கியூட்டா இருக்கு.......உன்ன மாதிரியே"

"போதும் போதும்.......ஜொள்ளு வலியுது,தொடச்சுக்கோங்க"

"ஹே.......நிஜம்மா தாண்டா சொல்றேன்.....ரொம்ப பிடிச்சிருக்கு உன்னையும், உன் கவிதையையும்"

"ஹும்........"

"என்ன.........ஹும் னு சலிச்சுக்கிறே"

"ம்ம்.......வெறும் விமர்சனம் மட்டும்தானா என் கவிதைக்கு??"

"ச்ச.....ச்ச........இவ்வளவு அழகா கவிதை எழுதின என் செல்லத்துக்கு பரிசு கொடுக்காம இருப்பேனா"

கண்சிமிட்டலுடன்.......அவளது கரங்களை எடுத்து, உள்ளங்கையில் அழுத்தமான முத்தமிட்டான் இளா!

"கவிதை எழுதிய கைகளுக்கு பரிசாக முத்தம்......போதுமாடி செல்லம்??"


"அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,

ஒரு நிமிடம் அவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாத இளா........சற்று யோசித்து விட்டு, பின்....

"என் குறும்புகார வெல்லக்கட்டி........நீ பாட்டு பாடாமலே அந்த பரிசு தர நான் ரெடி..............நீ???" என்று கேட்டபடி அவள் முகத்தின் அருகில் செல்ல, பானுவின் முகம் நாணத்தால் சிவந்தது!!!

"ச்சீ........போடா"

"என்னது......போ 'டா' வா????????"


கோபப்படுவதுபோல் முகபாவத்தை மாற்றியபடி இளா இன்னும் அவளை நெருங்கி, அவள் காதில்.......


உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!!


பழைய நினைவுகளை சுவைத்தபடி,
அவர்கள் வழக்கமாக செல்லும் பீச்சிற்கே காரைச் செலுத்தினான் இளா.
அவர்கள் பீச்சை சென்றடையும் போது மழை நின்றிருந்தது.

இருவருமே எதுவும் பேசிக்கொள்ளாமல் ஒர் இடத்தில் அமர்ந்தனர்.
அவன் பக்கம் திரும்பாமல் தூரத்தில் தெரிந்த அலைகளில் பார்வையை பதித்திருந்தாள் பானு.

"பாவி.. பக்கத்தில் உனது பார்வைக்கு ஏங்கும் ஜீவனை விட்டுட்டு.. அலைகளை பார்த்து கொண்டிருக்கிறாயே..?" என்று மனதுக்குள் செல்லமாய் பானுவை திட்டியவன்,கொஞ்சம் அசைந்தால் அவளை ஸ்பரிசிக்கலாம் என்ற அளவுக்கு இடைவெளி விட்டு அவளது அருகே அமர்ந்தான்.

பானு அவனை திரும்பி பார்த்தாள்.
பானுவின் முகத்தில் முன்பிருந்த பளபளப்பு இல்லை, இளமை இல்லை.
அவனது கண்களைக் கண்டதும் அவள் தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள இயலாமல் ஓசைப்படுத்தாமல் அழுதாள்.

அவன் எதுவுமே சொல்லாமல் அவள் கைகளைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு வெகு நேரம் உட்கார்ந்திருந்தான்.

மனசில் பொங்கிய உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறான் என்று சிவந்து போன அவன் முகத்திலிருந்து தெரிந்தது.
குனிந்திருந்த இளம் முகத்தைப் பார்க்க அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.


பால் போலக் கபடமற்ற முகம்.
தாமரை மலர் போல அழகான அமைப்பு.
இப்போது வேதனையால் மொட்டுப் போலக் கூம்பி விட்டதைக் காண அவனுக்கு சகிக்கவில்லை.
மெதுவாக அவளது இடது கை விரல்களை தடவியபடியே பேச்சை அரம்பித்தான்.

"பானு...."

"ம்ம்.."

"பானு.......மதிமாறன் மறுபடியும் கதை எழுதனும்"

வியப்புடன் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள் பானு.

"ஆமாம் பானு.........நீ தொடர்ந்து எழுதனும்........நிறைய எழுதனும், உனக்குள்ள இவ்வளவு பெரிய எழுத்து திறமை வைச்சுட்டு நீ இப்படி இடிஞ்சு போய்ட கூடாதுமா செல்லம்"

" இளா.......நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சு தான் சொல்றீங்களா.........எனக்கு தான்.........வலது கை......."

தனது வலது கரத்தை அவள் முன் நீட்டினான் இளா......

"இந்த கை எழுதும்.........பானு எழுத நினைக்கிற எண்ணங்களை மதிமாறனின் எழுத்துக்களாக்கும் இளமாறனின் இந்த வலதுகை"

"........"

பேச வார்த்தைகளின்றி.....விளித்தாள் பானு!!!

எனக்கு தெரியும் நீ
ஒரு ரோஷக்காரி என...
கை இல்லாவிட்டால்
என்னடி..
உன் தாயாக மட்டுமல்ல
உன் கையாகவும் இருப்பேன்
நான்...
நம்பிக்கை கொள்ளடி..
என் செல்லமே..


".........."

"என்னமா நம்ப மாட்டியா என்னை......."

"இல்ல...............எனக்கு.....என்ன சொல்றதுன்னு......"

"என்னடா இது இதுக்கெல்லாம் கண்கலங்கிக்கிட்டு.......கண் துடைச்சுக்கோ , "

"......."

"நான் ரசிச்சு பிரமிச்சுப்போன எழுத்துக்களுக்கு சொந்தகாரி நீன்னு தெரிஞ்சுப்போ.........சந்தோஷத்துல திக்கு முக்காடிட்டேன்டா பானு"

".........."

" என் செல்லதுக்குள்ளே இப்படி ஒரு எழுத்து திறமையான்னு மலைச்சுப்போய்ட்டேன் தெரியுமா??.........ஆனா கள்ளிடா நீ, வேணும்னே மதிமாறனோட எழுத்தை எவ்வளவு மட்டம் தட்டிருக்க என்கிட்ட"

செல்லமாய் அவள் கன்னங்களில் கிள்ளினான் இளமாறன்.

முன்பெல்லாம் இப்படி செல்லமாய் கிள்ளினால் கூட, உடனே பானு
செல்ல கோபத்தில்.. அழகாய் விழிகள் விரிய, அவளது உணர்ச்சிகளின் வெளிப்பாடாய், அவனது மார்பிலும்.. வயிற்றிலும்.. சரமாரியாய் அடிகளை குத்துகளை வாரிவழங்கி.. ஓய்ந்துபோய்.. கண்கள் கலங்க.. அவனது மார்பில் பானு சாய்ந்து கொள்வாள்…

இளா அவளை தனக்குள்ளே புதைத்து கொள்ளும் வேகத்தில்.. இறுக்கி அணைத்து.. அப்புறம்.. அப்புறம்.. முத்த மழை பொழிவான்!!!

ஆனால் இன்றோ வெறுமையான ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

"என்னமா பானு........ஏன் ஒரு மாதிரி இருக்கிறே?"

"உங்கள் கைகள் மதிமாறனோட கதைகள் மட்டும் எழுதினா போதும்"

" நீ என்ன சொல்ல வர்ரேன்னு புரியல......"

" கை ஒடைஞ்சு போன உங்க ஆத்மார்த்த எழுத்தாளராய் மட்டும் என்னை பாருங்கன்னு சொல்றேன்"

"பானு........பானுமா........."

விருட்டென்று எழுந்தவள் தன் கண்ணீரை மறைக்க முடியாதவளாய், சிறிது தூரம் நடந்துச் சென்று கடல் அலைகளில் கால் நினைத்தபடி நின்றாள் பானு.


சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்த இளா........அவள் தன்னைவிட்டு விலகி விலகி செல்வதும் அவள் தன் மீது வைத்திருக்கும் 'காதலால்' தான் என்பதை உணர்ந்தவனாய், அவளுக்கு தன் மீதுள்ள காதலை எண்ணி பிரமித்தான்!!

இப்போதிற்க்கு அவளது அருகாமையே போதும்..........அவளது எழுத்தாற்றல் மறைந்து போக கூடாது, என் பானுவிற்காக பொறுமையாக காத்திருப்பேன் என்ற தீர்மானத்துடன் அவளுக்கு அருகில் நின்று அலைகளில் கால் பதித்தான்.

"பானுமா........நீ இப்போ ரொம்ப குழம்பி போய் இருக்கிற......இப்போ எந்த முடிவிற்கும் வரவேண்டாம்.....இப்போதிற்க்கு கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்து, நீ எழுத நினைக்கிறதை என்கிட்ட சொல்லு........நான் எழுதுறேன்......மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் , சரியா???"

"ஹும்........"

" பெரிய எழுத்தாளர் மதிமாறனின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க என் கைகள் கொடுத்து வைச்சிருக்கனும் "என்று கண் சிமிட்டினான்,


அவள் கட்டாயமாக புன்னகையை வரவழைக்க முயற்சித்தாள்.
அம்முயற்சி கூட அவன் கண்களுக்கு அழகாகவே தெரிந்தது.

சீறி வந்த அலை அவளது இடுப்பு வரையில் நனைத்து விட்டு ஓட....ஒரு கணம் தடுமாறி விழப்போனவளை கெட்டியாய் பிடித்துக்கொண்டான் இளமாறன்..
இதைச் சற்றும் எதிர்பாராத பானு, தன்னை உதறிக்கொள்ள முயற்சிக்க..அடுத்த அலையினால் தாக்கப் பட்டவளாய் மீண்டும் அவன் மீதே சாய்ந்தாள்.

நிமிர்ந்து விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள். அவ்வளவுதான் .....அந்தக்கண்களில் ஏதோ ஒரு காந்தவிசையீர்ப்பு அவள் இதயத்துள் ஏதேதோ பேசியது...

உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!



அந்தப்பார்வை அவளுக்குள் ஓர் மின்னலை ஏற்படுத்தியதும் ........மறுகணம் அவனது வலிய கரங்களின் அணைப்பில் அவள் சங்கமம் ஆகியிருந்தாள்.


அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.

முற்றும்.

November 23, 2008

உயிரே!....உறவாக வா??? - 3

உயிரே!....உறவாக வா??? - 1


உயிரே!....உறவாக வா??? - 2


கண்ணீர் மல்க ஆம்புலன்ஸில் பானுமதியின் படுக்கைக்கு அருகில் அமர்ந்தபடி சென்ற இளமாறன், பானு கண் விழித்ததும் அருகில் அமர்ந்திருந்த நர்ஸிடம் சொல்வத்ற்குள் பானு மீண்டும் மயக்கமானாள்.

விரைந்து சென்று ஆஸ்பத்திரியை சேர்ந்தபோது அங்கு டாக்டரின் முடிவு அதிர்ச்சியளித்தது.

ஆழமாக வெட்டப்பட்டிருந்த பானுவின் வலது கரம் முழங்கைக்கு கீழாக முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதுடன், உடனடியாக பானு ஆபிரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டாள்.

சொந்த ஊருக்கு சென்றிருந்த தன் பெற்றோருக்கு ஃபோன் மூலம் தகவல் கூறினான் ரமேஷ்.

ஆபிரேஷன் தியேட்டருக்கு வெளியில் கனமான மனதுடன் நண்பர்கள் இருவரும் நிற்கையில் , இளா ரமேஷிடம்....

" ரமேஷ்........நானும்.....பானுவும்....."

எனக்கு எல்லாம் புரிந்தது என்பதுபோல் கண்களால் பதிலளித்து விட்டு, இளாவின் தோளில் தோழமையுடன் தட்டிக் கொடுத்தான் ரமேஷ்.

மயக்கம் தெளிந்து கண் விழித்த பானுவிற்கு , தன் தாயாரின் விசும்பல் மிக அருகில் கேட்டது.

"பொம்பள புள்ள இப்படி கதை எழுதாட்டி என்ன......இப்ப கையை ஒடைச்சுட்டு போய்ட்டானே படுபாவி.......இனிமே இவளை வைச்சுட்டு......."

அம்மாவின் புலம்பல் கேட்டதும் தன் வலது கரத்தை தேடினாள் பானு..........அழுகை பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு.

தன் வலது கரம் துண்டிக்கப்பட்டிருப்பதை காண பொறுக்காமல் தன் கண்களை அழுந்த மூடிக்கொண்டவளின் தலையை ஆதரவாக ஒரு கரம் தடவியது.
கண்திறந்து பார்த்தாள் பானு.......ஊமையாய் தனக்குள்ளே அழுதபடி பாசமுள்ள அப்பா!!!

"அ....ப்......பா" என்ற பானுவின் குரல் உடைந்து போயிருந்தது.

அந்தக் குரலைக் கேட்டதும்...
அத்தனை கண்களும் ஆச்சரியத்தில்....

சட்டென்று அவள் கைகளைப்பற்றிக் கொண்டு
கண்களில் நீர் நிறைந்து வழிந்தோட..
வார்த்தைகள் தட்டுத்தடுமாறிட...

தாய்மையின் கனிவோடு தழுவி
அணைத்துக்கொண்டது அந்தத் தந்தை உள்ளம்!

பானுவை தான் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்து தன் பெற்றோரை வற்புறுத்தி ஹாஸ்பிட்டல் கேன்டினிற்கு உணவருந்த அனுப்பி வைத்தான் ரமேஷ்.

அவர்கள் அறையிலிருந்து வெளியேறியதும், ரமேஷ் பானுவின் அருகில் குனிந்து.......

"இளா வெளியில வெயிட் பண்றான்........உள்ளே அனுப்புறேன்" என்றான் குறும்பு புன்னகையுடன்

"அண்ணா.........!"

"எனக்கு எல்லாம் தெரியும்மா......." கண் சிமிட்டினான் ரமேஷ்.

அவன் வெளியேற கதவின் அருகில் செல்ல, பானு.....

"அண்ணா......"

"என்னமா?.......?"

"அவரை......நான் பார்க்க விரும்பலண்ணா"

"என்ன.......என்னடா சொல்ற?????"

"ஆமாம்ணா.......அவரை இனிமே என்னை பார்க்க வர வேண்டாம்னு சொல்லிடு"

"உணர்ச்சிவசப்படாதே பானுமா........அவன் உன்மேல...."

"தெரியும்ணா.......அதுனாலத்தான் சொல்றேன்.....ஒரு கை இல்லாத இந்த பானு அவருக்கு வேணாம்ணா.....போகச்சொல்லிடுண்ணா......"
விசும்பலுடன் வார்த்தைகள் வெளிவந்தன பானுவிடமிருந்து.

ரமேஷ் தன் கைகளினால் அறையின் கதவை சிறிது திறந்தபடி பானுவிடம் பேசிக்கொண்டிருந்ததால் , அறையின் வெளியில் இருந்த இளா, பானு தன் அண்ணனிடம் கூறியது அனைத்தையும் கேட்டான்.

விழியோரம் துளிர்த்த கண்ணீரை தன் விரலால் சுண்டி விட்டபடி அவ்விடம் விட்டு அவன் நகர......ரமேஷ் அவனை நிறுத்தினான்.


"மனதளவில் உடைந்து, குழம்பி போயிருக்கிற இந்நேரத்தில் பானுவிடம் எது பேசினாலும் அவள் தன் பிடிவாதத்தை தளர்த்த போறதில்லை, மாறாக அவளது இறுக்கம் தான் அதிகரிக்கும்.........சுயபட்சாதபத்தில் இருந்து அவள் வெளிவற சிலகாலம் ஆகும் இப்போ அவளுக்கு தேவை மன அமைதி , எவ்வளவு நாள் ஆனாலும் அவளுக்காக நான் காத்திட்டிருப்பேன் ரமேஷ்." நா தழுதழுத்தது இளாவிற்கு.





நீ என்னை வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்
இறந்து இறந்து பிழைக்கிறேன்!

எனக்கு தெரியும் நீ
ஒரு ரோஷக்காரி என...
உன்பக்கமிருந்து உன்னை
வேதனை படுத்துவதை விட
உன்னை பிரிந்து நான் வேதனையடைந்தாலும்
பரவாயில்லை என்று உன்னை
சிறிது பிரிகிறேன் கண்ணே…

என் செல்லமே..
கொஞ்ச நாள் பொறுத்துக்
கொள்கிறேன்..
உன்னைக்
கொஞ்சும் நாள் தூரத்தில்
இல்லையென்ற
நம்பிக்கையுடன்...

போகுமுன் எந்தன்
காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!



பானுவின் உடல்நிலை தேறியதும் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
பாணுமதி ....கெட்டிகாரப் பெண், கோபமும் அன்பும் சற்றென்று வரும்.
'அவளது பெயருக்கு தகுந்தபடி.........
பாணு என்றால் சூரியன், சூரியனைப் போலக் கோபச் சூடு;
மதி என்றால் நிலவு, நிலவைப்போல குளிர்ச்சியான அன்பு;

ஆனால் இன்றோ......யாரிடமும் பேசாமல் மெளனம் காத்தாள்.
கண்களில் எப்போதும் ஒருவித மிரட்சி.

தன் அறையின் பால்கனியில் அமர்ந்து நீல வானத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள் பானு. நட்சத்திரங்களின் சிமிட்டலையோ, நிலவின் ஒளி வீச்சையோ இப்போது அவளால் ரசிக்க முடியவில்லை. அவளது பீரிட்ட சோகம் அவள் கண்களில் நீரை பொழிந்தது.
இளாவின் நினைவுகள் மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தியது.....

இளாவை சந்தித்த நாட்களும், காதலை வெளிப்படுத்திய வேளையும் பானுவிற்கு கண்முன் காட்சியாய் விரிந்தது.......!!!

பானு தஞ்சாவூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை கிடைத்து அண்ணாவுடனே தனியாக வீடு எடுத்து தங்க ஆரம்பித்து சில மாதங்களுக்கு பின் அவளது பெற்றோரும் சென்னைக்கே குடிபெயர்ந்தனர்.

தன் அண்ணாவின் நண்பனாக இளா பானுமதிக்கு அறிமுகம் ஆனான். அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம், கவிதை என்று எந்த தலைப்பில் பேசினாலும், ஈடு கொடுத்து சுவாரஸ்யமாக பேசும் பானுவின் பேச்சு, அவள் முகத்துல் இருந்த ஒரு விதமானக் குழந்தைத்தனம்...என அனைத்தும் இளாவை கொள்ளையிட்டது.

ஒரு நாள் மாலையில், இளாவும் பானுவும் பேசிக்கொண்டிருக்கையில், இளா பானுவிடம்......




"உன்னை பர்ஸ்ட்டு எங்கே பார்த்தேன்னு ஞாபகம் இருக்கா?"

"இருக்கு......ஆட்டோல நான் வீட்டுக்கு வந்து இறங்கினப்போ, ஆட்டோக்காரருக்கு கொடுக்க சில்லறை இல்லாம தேடிட்டு இருந்தேன் , அப்போ என் அண்ணாவை பார்க்க வீட்டுக்கு வந்த நீங்க சில்லறை கொடுத்தீங்க............... அதை நான் இன்னும் திருப்பிக் கொடுக்கவே இல்லை.......ஹி ஹி ஹி"

"ஹும். ....!"

"ம்ம்... விளையாட்டா ஆறுமாசம் ஓடிட்டுச்ச இல்ல??"

"உனக்கு விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா?"

"ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டிருக்கீங்க?"

"ம்ம்ம்.. கொஞ்சம் கன்ஃப்யூஷன்லே இருக்கேன்!"

"என்ன கன்ஃப்யூஷன்"

"எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"

"யாருகிட்டே எதை எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"

"உன்கிட்டே தான்"

"என்கிட்டவா??........சரி சொல்லுங்க"

"சொன்னா நீ என்னை தப்பா நினைச்சுக்க மாட்டியா?"

"பரவாயில்லை. சொல்லுங்க.........நான், தப்பா நெனைச்சிக்க மாட்டேன்"

"ப்ராமிஸ்........."

"காட் ப்ராமிஸ்"

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"

" ............................."

"உனக்கு இஷ்டம் இல்லியா பானு?"

" கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?......"



"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......இதுல நீ இப்படி அமைதியா இருந்தா.....நான் என்னன்னு நினைக்கிறது??? நம்மளையும் ஒருத்தன் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்குறானேன்னு .....நீ சந்தோஷப்படுவேன்னு பார்த்தா, இப்படி உம்னு உக்காந்துட்டு பந்தா காட்டுறே??"

தனது பேச்சு.... அவளுக்கு கோபத்தை வரவழைக்கிறது என்பதை அவளது முகசிவப்பும்.. மூக்கு விடைப்பும்.. இதழின் நடுக்கமும், வேக மூச்சில் ஏறி இறங்கிய நெஞ்சும் உணர்த்தியதும்,

"என்னடா செல்லகுட்டி.......கோபமா??"

" ஹலோ உடனே 'செல்ல்குட்டி'ன்னு கொஞ்சினா......கூல் ஆகிடுவேன்னு நினைப்பா??"

"அப்போ என்ன பண்ணினா.......கூல் ஆவா என் பானு??"என்றபடி........


கோபத்தில் இருப்பவளின் பின்னால் சென்று...செவிமடலை இதழால் மென்மையாய் உரசி... அதில் சிலிர்த்து அவள் எழுவதற்குள்...அப்படியே அணைத்து....நெற்றியில் இதழ் பதித்தான்!!

அந்த முதல் முத்தத்தை இப்போது நினைக்கையிலும் உடல் சிலிர்த்தது பானுவிற்கு!


என்னவனே!
உன்னை காதலிக்க ஆரம்பித்த
நிமிடம் முதல் - என்னை சுற்றி
சகலமும் நீயாக இருக்கவேண்டும்
என்று எண்ணினேன்.. எந்தன்
உயிராகவும் கூடத்தான்..!
அந்த உயிர் பிரியும் வலியை விட
நீ என்னை விட்டு பிரியவேண்டும்
என்ற நினைவே கொடுமையாக உள்ளதடா!
மரணத்தை கூட தைரியமாக எதிர்கொள்ளும்
எந்தன் இதயம்.. உந்தன் பிரிவை
தாங்கமாட்டாமல் தவிக்கிறது!



துணிச்சலுடன் திகில் தொடர் எழுதிய 'மதிமாறன்' அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக் கொண்டிருந்தார்.

இரண்டு மாதங்களில் பானுவிற்கு செயற்கை கை பொறுத்தப்பட்டது. இளமாறன் தான் இதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டான் என்பதை பின்னொரு நாளில் அவளது அம்மா சொல்ல அறிந்துக்கொண்டாள் பானு.

நாட்களும் உருண்டோடின.......பானுவின் பிறந்தநாள் வந்தது..........அன்று பானு........

[தொடரும்]


உயிரே!......உறவாக வா??? - 4

November 17, 2008

உயிரே!......உறவாக வா??? - 2

உயிரே!......உறவாக வா??? - 1

"யார் ......நீங்க" என்று பானு கேட்கவும்,

அவ்வுருவம் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து அவளை நெருங்கியது.

"நீ...ங்க.........யாரு?.....உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டபடி அவ்விருட்டில் அவனது முகம் தேடினாள் பானு.

" எழுத்தாளர் மதிமாறன்.....இருக்காரா? .....நான் அவரைப் பார்க்கனும்" என்றான் கணீர் என்ற குரலில்.


அதற்குள் எழுத்தாளர் மதிமாறன் அட்ரஸ் இந்தாளுக்கு எப்படி கிடைச்சது? என்று வியந்தவளாய்....

"என்ன.......விஷயமா அவரைப் பார்க்கனும்?"

" இது அவரு வீடுதானே.......நான் அவரோட ரசிகன், அவரை பார்க்கனும்" மீண்டும் கரகரப்புடன் குரல் தெரித்தது அவனிடமிருந்து.

"அது.....நான் தான்" என்றாள் பானு அடிக்குரலில்.

"நீ..........நீயா???????'

"ஆமாம்"

"எழுத்தாளர் மதிமாறன் ஒரு பொம்பளையா?????" அவனது குரலில் தெரிந்த இளக்காரம் அவளை சுதாரிக்கச் செய்தது.


"எதுவானாலும்.......காலையில் வந்து என்னை பாருங்க சார்" என்றவளாய் வாசல் கதவை மூட எத்தனிக்க, அவனது வலுமையான கரம் கதவை முட்டி திறந்துக் கொண்டு அவன் வீட்டிற்குள் வந்தான்.

"ஹலோ......எதுவானாலும் காலையில் வாங்கன்னு சொன்னேன்ல.........முதல்ல வெளியில போங்க சார்" என்றாள் ஆக்ரோஷமாக.

" அட நிறுத்துடி.......மதிமாறன்ற பேர்ல விறுவிறுப்பா என்னைய வைச்சு தொடர்கதை எழுதினது ஒரு பொட்டச்சிங்கிற அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல........அதுக்குள்ள என்னமோ பெருசா கத்துற?.......இன்னும் உன்கிட்ட தீர்த்துக்க வேண்டிய கணக்கு எவ்வளவோ இருக்கு....உன் நாவலை பப்ளீஷ் பண்ணின பப்ளீஷரை மிரட்டி உன் அட்ரஸ் வாங்கினப்போ கூட அவன் நீ ஒரு பொம்பளை ....அதுவும் கொஞ்ச வயசு பொண்ணுன்னு சொல்லாம மறைச்சுட்டானே?"

கோபக்கணைகளுடன் அவனிடமிருந்து ஒருமையில் வார்த்தைகள் வந்து விழுந்தன.

'அடப்பாவமே!!! அண்ணனோட கேஸ் ஹிஸ்ட்ரி ஃபைலில் இருந்து தகவல் எடுத்து, கற்பனை கலந்து நான் எழுதிய தொடர்கதையின் வில்லனா இவன்??????
அப்போ..........அப்போ.......இவன் தான் போலீஸ் தீவிரமா தேடிட்டு இருக்கிற கஜேந்திரனா??
'

'இப்போ இவனிடமிருந்து எப்படி தப்பிக்கிறது?', என்று யோசித்தவளாய், தன் குரலை தாழ்த்தி.........

"நீங்க .......என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல....." என்றாள் பவ்யமாக.

'மனசுக்குள் , "கடவுளே, கடவுளே!! என் அண்ணா இப்போ டியூட்டி முடிஞ்சு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்திடனும்' என்று படபடப்புடன் வேண்டிக்கொண்டாள் பானு.

அவளது பவ்யமான பேச்செல்லாம் அவனிடம் எடுபடுவதாக தெரியவில்லை........மாறாக.....

"உனக்கு புரியாதுடி......புரியாது.......புரியாமத்தான என்னைய பத்தி உன் தொடர் கதைல புட்டு புட்டு வைச்சு என் கூட்டாளிங்க எல்லாரையும் போலீஸ் கண்டுபிடிக்க துப்பு கொடுத்த நீ"

"அச்சோ........அது முழுக்க முழுக்க என் கற்பனை கதை சார்........நம்புங்க"

" கற்பனைன்னு என்கிட்டவே புளுகிறியா??.........சொல்லுடி எப்படி என்னை பத்தின விபரங்கள் எல்லாம் உனக்குத் தெரியும்?..........ம்ம் சொல்லுடி....." என்று அவளை நெருங்கி வந்து அவளது கழுத்தில் கை வைத்து அழுத்தினான்.

"ப்ளீஸ்..........ப்.....ளீஸ்.........என்னை.....ஒன்னும் பண்ணிடாதீங்க......."

"அடச்சீ........நீ நினைக்கிற மாதிரி எதுவும் உன்னை பண்ணமாட்டேன்.....மதிமாறன் ஒரு பொட்டச்சின்னு தெரியாமலே .......அந்தாளுக்கு என்ன தண்டனை கொடுக்கனும்னு வந்தேனோ.......அதேதான் உனக்கும்"

அது என்ன தண்டனை என்று அவள் சிந்தித்த அதே நொடியில்..........அவளது கரத்தை அழுத்தியிருந்த அவனது வலது கரம் பிடி தளர்ந்து, அவனது சட்டையின் பின்னாலிருந்து ஒரு நீண்ட கத்தியை உருவியது.
மெழுகுவர்த்தியின் ஒளியில் கத்தி மின்னியது,
பானுமதியின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது,
அடுத்த கணம்.........அவளது வலது கரத்தை அழுத்தி பிடித்த அவன்,

" இந்தக் கை தானே என்னை பற்றி தொடர் கதை எழுதி போலீஸ்க்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிச்சது.........இனிமே.........இந்த கை கதையே எழுத கூடாது......"

மறுவிநாடி, அந்த கத்தி பானுவின் வலது கையினை ரத்தம் தெறிக்க வெட்டியது!!!!!!

பீறிட்ட ரத்தமும், வலியும்.........எதிர்பாரா தாக்குதலும் பானுமதியை நிலை கொலையச் செய்ய,
"அம்ம்ம்மா........." என்ற அலறலுடன் மயங்கி கிழே சரிந்தாள்.

' வந்த காரியம் முடிந்தது, மின் இணைப்பு மீண்டும் வரும்முன், அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் ' என்ற பரபரப்புடன் வெளியேறிய கஜேந்திரன், மாடிபடிகளில் வேகமாக திரும்புகையில் எதிரில் மாடிபடி ஏறிவந்த பானுவின் அண்ணன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மீது எதிர்பாராவிதமாக மோதிவிட,

தங்கையின் "அம்மா' என்ற அலறலை ஜீப்பிலிருந்து வீட்டின் முன் இறங்கும்போது கேட்டதினால், இருட்டில் ஏதாவது பூச்சு பார்த்து பயந்திருப்பாள் பானு என்று கலக்கத்துடன் மாடிபடிகளில் ஏறிய ரமேஷ், தன் மீது மோதிய உருவம் யார் என்று கூர்ந்து கவனிக்க,
அந்நேரம் வீட்டின் முன் வந்து நின்ற இளமாறனின் கார் வெளிச்சத்தில் அவ்வுருவத்தின் முகம் தெளிவாக தெரிந்தது, ரமேஷிற்கு.

நொடியில் போலீஸ் மூளை சுதாரித்தது, தன் மீது மோதியவன் யாரென்று அடையாளம் கண்டுகொண்டவன், கஜேந்திரன் மீது சட்டென்று பாய்ந்து அவனை பிடிக்க ரமேஷ் எத்தனிக்க,
வெளிச்சத்தில், ரமேஷின் காக்கிச்சட்டையை கண்ட கஜேந்திரன், மாடிபடிகளிலிருந்து தாவி கீழே குதிக்க முயற்சித்தான்,
அதே கணம் ரமேஷ் அவன் மீது பாய்ந்து அவனை அமுக்க,
மின் இணைப்பு அந்நேரம் உயிர் பெற்றது.

தன் பிடியிருலிருந்து தப்பி ஓட முயன்ற கஜேந்திரனின் முழங்காலை குறிப்பார்த்து தன் கைத்துப்பாக்கியினால் ரமேஷ் சுட்டுவிட, கஜேந்திரன் சுருண்டு விழுந்தான். கீழே விழுந்தவனை இருகப்பற்றி, தன் கரங்களை முறுக்கி ரமேஷ் விட்ட குத்தில், கஜேந்திரன் நிலைகொலைந்தான்.

பானுமதி தனக்கு அன்பளிப்பாக கொடுத்த 'மதிமாறனின்' முதல் நாவலை பார்க்கும் ஆவலில், அவளை அவளது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு தன் வீட்டிற்கு போகும் வழியில் தன் காரை ஒரமாக நிறுத்தி , அன்பளிப்பை பார்த்த இளமாறனுக்கு, அன்பளிப்பிற்குள் இன்ப அதிர்ச்சியாக........

தன் பெயரான இளமாறனில் உள்ள 'மாறனை'யும் அவளது பெயரில் உள்ள 'மதி'யையும் இணைத்து மதிமாறன் என்ற புனைப்பெயரில் தொடர் கதை எழுதியதும், இப்போது நாவல் எழுதியதும் , தன் அன்பு காதலி பானுமதி தான் என்றும் அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்த இளமாறன்,

உடனே த்ன் காரை திருப்பிக்கொண்டு பானுமதியின் வீட்டிற்கு வந்திருந்தான்.......

வந்த இடத்தில் அவன் கண்முன், ரமேஷ் ஒருவனை துப்பாக்கியால் சுடுவதும்........உடனே தன் டிபார்ட்மெண்டுக்கு ஃபோன் செய்ததையும், அதிர்ச்சியுடன் கண்கொட்டாமல் பார்த்தபடி நின்றான் இளமாறன்.

சில நிமிடங்களுக்கு முன் 'அம்மா' என்று அலறிய தஙகையின் நினைவும், மாடியிலுள்ள தன் வீட்டிலிருந்து கஜேந்திரன் இறங்கி வந்ததும் ரமேஷிற்கு பளிச்சிட........தன் நண்பன் இளமாறன் கையில் ஒரு புத்தகத்துடன் இந்நேரத்தில் வீட்டிற்கு எதற்கு வந்திருக்கிறான் என்றெல்லாம் யோசிக்க அவகாசமில்லாமல்,

"பானு.....பானு" என்று அலறியபடி ரமேஷ் மாடிபடிகளில் வேகமாக ஏறினான்.
இளமாறனும் அவனை பின் தொடர்ந்தான்.

வீட்டினுள் நுழைந்த இருவரும், அதிர்ச்சியில் உறைந்தனர்........

"பானு......பானுமா...........என் செல்லமே" என்ற கதறலுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பானுவை தன் மடிமீது போட்டு இளமாறன் அழுகையுடன் அரற்றினான்.

சீண்டிப்பார்ப்பதில்
குழந்தையாய் விளையாடி
கள்ளமற்ற சிரிப்பில்
உள்ளம் களவாடி
என்னுள் பூத்திருந்த செல்லமே
நான் விரும்பும் கதா
நீதானென அறிந்தகணம்
அள்ளிக்கொஞ்சிட
ஓடிவந்தேன்
உன்னை இப்படிக்காணவா

தேடிவந்தேன்...


திகைப்பிலிருந்தாலும், உடனே ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்த ரமேஷின் கடைக்கண் பார்வையில்......

தன் நண்பன் இளா..........தன் தங்கை பானுமதியின் வெட்டப்பட்ட கைகளை பார்த்து கதறுவதை கவனித்தான்.

அவர்களுக்கு நடுவில் கலந்தோடும் ஆழமான காதல் ரமேஷிற்கு திட்டமாக புரிந்தது!!

இரண்டே நிமிடத்தில் ரமேஷை வீட்டில் இறக்கிவிட்டு சென்றிருந்த போலீஸ் ஜீப் வீட்டின் முன் வந்து நிற்க, கான்ஸ்டபிள் இருவர் கஜேந்திரனை ஜீப்பில் ஏற்றினார்கள்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, பானுமதியை ஆஸ்பத்திரிக்கு அதில் கொண்டு சென்றனர்.

கண்களில் நீர் மல்க இளமாறன் பானுமதியின் படுக்கைக்கு அருகில் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி செல்கையில்...........மயக்கத்திலிருந்த பானு கண்திறந்து ......அவனிடம் ஏதோ சொல்ல முனைந்தாள்.......அப்போது....

[தொடரும்]

உயிரெ!.....உறவாக வா?? - 3

உயிரே!....உறவாக வா?? - 4

November 10, 2008

உயிரே!......உறவாக வா??? - 1

'ஆறு மணிக்கு புக் ஃபேர் போகனும், சீக்கிரம் காஃபி ஷாப் வந்திடு, அங்கிருந்து இரண்டு பேரும் சேர்ந்து புக் ஃபேர் போலாம்' என்று தன் காதல் தேவதை பானுவிற்க்கு ஃபோனில் கட்டளையிட்டுவிட்டு அவளுக்காக காஃபி ஷாப்பில் காத்திருந்தான் இளா.

அவள் வர தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், பொறுமையிழந்தவனாய் தனது பற்களுக்கும் நகத்திற்கும் போர் தொடுத்தான்.

"ஹாய்" என்று கையசைத்துக் கொண்டே அவள் வர...........தூரத்தில் அவள் வருவதைப்
பார்த்த நொடியே அவனது கோபப்புயல் வலுவிழந்து கரையைக் கடந்தது.



அவனது தேவதை அவனை நெருங்கினாள்....!!!

என்ன அபாரமான அழகு! புதிதாய் பூத்த ரோஜாவைப்போல!!
தலையை பின்னுக்கு தள்ளி அவள் சிரித்தபோது..
அவனுக்குள் பூகம்பங்கள் வெடித்தன;
பெரிய கட்டான கண்கள்,
சற்றே அண்ணாந்த அழகமைப்பான நாசி,
கதகதப்பான உதடுகள்........!!

"ஸாரிங்க.......கொஞ்சம் லேட்டாயிடுச்சு........ஒரே டிராஃபிக்.........ரொம்ப ஸாரி"

"........."

"ம்ம்.........கோபமா???" கெஞ்சலுடன் அவள் அவனது முகத்தருகே குனிந்து காதில் சினுங்க,

காஃபி ஷாப் பொது இடம் என்பதையும் மறந்து, அவளது கன்னத்தில் 'இச்' சென்று முத்தம் பதித்தான்.

உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..

முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான்
உன் உதட்டில்
ஒரு மச்சம்!!


எதிர்பாரா முத்தத்தில் அவளது மூக்கு நுனி, காது மடல் எல்லாம் சிவந்தது.

செல்ல சிணுங்களுடன் அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.


ஆறடிக்கு குறையாத உயரமும் அதற்கேற்ற கட்டான உடலும் முகத்தில் படிப்பின் தீட்சண்யமும்.. அலை அலையாய் படர்ந்த கேசமும்.. அளவான மீசையுமாய் … .. கூரிய கண்களுடன் உதட்டில் வளைந்த சிரிப்புடன் தன்னை பார்த்தவனை ஒரு கணம் நன்றாக உற்று பார்த்தாள் பானு.
தன் அண்ணனின் நண்பன், தன் வருங்கால கணவன் இளாவின் குறும்பு பார்வையை அதற்கு மேல் சந்திக்க இயலாதவளாய் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

அவளது வெட்கி சிவந்த முகத்தைப் பார்த்தபோது, அவனது காத்திருப்பின் அவஸ்தை காணாமலேயே போனது!!

நீ தாமதமாய் வந்தால் கூட
என்னால் கோபப்பட முடியவில்லை...
திட்டுவதைபோல நடிக்கத்தான் முடிகிறது...
அப்போது தானே என்னை விதம்
விதமாக கொஞ்சி சமாதனப்படுத்துவாய்...


சிறிது நேர மெளனமான இம்சைக்குப் பின், அவளே பேச்சை ஆரம்பித்தாள். அன்றைய நாள் இருவருக்கும் எப்படி சென்றது என்று பேசி இயல்பு நிலைக்கு வந்து, காஃபி அருந்திய பின்பு , புக்ஃபேர் போகலாம் என அவசரப்படுத்தினான்.

"டைம் ஆச்சு ....ஆல்ரெடி நீ வந்தது லேட்.....வா புக்ஃபேர் போலாம்"

"கண்டிப்பா போய்தான் ஆகனுமா??.............டயர்டா இருக்குது..........இன்னொருநாள் போலாமே......ப்ளீஸ்"

"என்ன விளையாடுறியா????..........புக் ஃபேர் ஒப்பன் பண்ணின இன்னிக்கே ஏன் நான் போக ஆசைப்படுறேன்னு ஃபோன்ல சொன்னதை மறந்துட்டியா??"

"ஆங்........மறக்கல,மறக்கல...........அந்த எழுத்தாளர் மதிமாறனோட முதல் நாவல் இந்த புக்ஃபேர்ல பப்ளிஷ் ஆகுது.........அதுக்காகத்தானே?"

"தெரிதில்ல.......அப்புறம் என்ன........சரி வா போகலாம்"
என்று கூறிக்கொண்டே தன் இருக்கையிலிருந்து எழுந்திருக்க முற்பட்டான்.

"நாளைக்கு போனா அந்த நாவல் கிடைக்காதா??.......இன்னும் 3 நாள் புக் ஃபேர் இருக்குதே.......ஸோ நாளைக்கு போகலாம் ..ப்ளீஸ்"

" என்னை டென்ஷன் ஆக்காதே சொல்லிட்டேன்.........எனக்கு மதிமாறனோட எழுத்து எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும், உனக்கு எப்பவுமே அவரோட எழுத்துனா பிடிக்கிறதே இல்ல, அதான் இப்ப......வேணும்னே நாளைக்கு போலாம், அப்புறமா போலாம்னு வம்பு பண்றே"

"ஹே..........கூல் டவுண்பா.......அந்த ஆளு பெரிய எழுத்தாராம் , அவர் எழுத்து மேல இவருக்கு ஒரே கிரேஸாம்.............முதநாவல் பப்ளிஷ் பண்ணினதும் உடனே வாங்கிடனுமாம்........ரொம்பதான் குதிக்கிறாரு"

"மறுபடியும் என் கோபத்தை கிளறாதே.....இன்னொரு தடவை அவரோட எழுத்து பத்தி கிண்டலா பேசாதே, அவர் வாரபத்திரிக்கைல எழுதின தொடர்கதையை நீ படிச்சுப் பார்த்திருக்கனும், .........என்னா ஒரு த்ரில், திருப்பம்.......சான்ஸே இல்ல, பெரிய டிடக்டிவா இருக்க வேண்டியவரு அவரு தெரிஞ்சுக்கோ"

"ஆமா நானும் தான் படிச்சேன் அந்தாள் எழுதின தொடர் கதை,கொள்ளைக்கார கும்பலோட சூழ்ச்சி, தந்திரம், கொலை எல்லாம் வெளிப்படையா எழுதிருந்தார் வன்முறையோட.........அது உங்களுக்கு த்ரில்லா??? அந்த கொலைக்காரனோட சூட்சமம் எல்லாம் எப்படி அப்படியே நேர்ல பார்த்த மாதிரி எழுதுறார்........கற்பனை கதை மாதிரியே தோணல, இந்தாளே ஒரு கொள்ளைக் கூட்ட தலைவனா இருந்திருபபாராயிருக்கும்,அதான் இப்படி பரபரப்பு ஏற்படுத்துற மாதிரி தொடர்கதை எழுதுறார்"

" உனக்கு அவரோட எழுத்து பிடிக்கலைன்ன கம்முனு இரு .....இப்படி விமர்சனம் பண்ணாதே அவரோட எழுத்தை, எவ்வளவு பெரிய புத்திசாலியா இருக்கனும் அவரு இப்படி ஒரு விறுவிறுப்பான தொடரை எழுத..........நீ ஒரு மக்கு, டீவி சீரியல் பார்த்துட்டு , மூக்கு சீந்தி அழுகுற சாதாரன தமிழ் பொண்ணு, ஞானசூன்யம் நீ.........உனக்கெங்கே புரியும் இதெல்லாம்....."

"இப்ப எதுக்கு என்னை ஞானசூன்யம்னு சொல்றீங்க?? என்னை விட உங்களுக்கு அந்த மதிமாறன் பெருசா போய்ட்டாரா??"

கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.

சமாதானமானவளாக....குறும்பு பார்வை பார்த்தாள் பானு!!


விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோபப்பட
விடுவதாயில்லை

உன் விளையாட்டுத்தனம்!



"நானும் சும்மாதான் சீண்டி பார்த்தேன் உங்களை.......எனக்கு மதிமாறனோட எழுத்தில் அதிக ஈடுபாடு இல்லினாலும் உங்களுக்கு பிடிக்கும்னு ...புக் ஃபேர் போய், அவரோட நாவல் வாங்கிட்டுத்தான் இங்கே வந்தேன்........அதான் நான் வர்ரதுக்கு லேட்"

என்று கிஃப்ட் ராப் செய்யப்பட்ட நாவலை அவனிடம் கண்சிமிட்டியபடியே கொடுத்தாள்.

ஆச்சரியத்தில் விழித்தான்...!!!

"தாங்க்ஸ்டா........செல்லம்" என கூவிக்கொண்டே அவளிடமிருந்து கிஃப்ட்டை வாங்கி ஆசையாக பிரிக்கப்போனான்.

" நோ.......நோ......." என்று கீச்சிட்டாள் அவள்.

அவன் பதறிப்போய் அவளை நோக்க...

"பொறுமை சார்.........இந்த கிஃப்ட்டை இப்போ பிரிக்க கூடாது நீங்க. உங்களுக்கு பிடிச்ச நாவல் மட்டும் இந்த கிஃப்ட் பேக்கில் இல்ல.........அதுகூடவே இன்னொரு கிஃப்ட்டும் நான் வைச்சிருக்கிறேன்.........ஸோ இரண்டு கிஃப்ட்டையும் நீங்க வீட்ல போய்தான் பார்க்கனும்"


" ப்ளீஸ்....ப்ளீஸ்டா கண்ணம்மா............இப்பவே..........ஓபன் பண்றேன்டா" என அவன் கெஞ்சி கூத்தாடியும் அவள் சம்மதிக்கவில்லை.

நாவலை பார்க்கும் ஆவலில் அவன் உடனே வீட்டிற்கு போகலாம் என துரிதப்படுத்தினான்.

இருவரும் அவனது காரில் சென்றனர்.

அவளது வீட்டின் முன் காரை நிறுத்தவும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டித்தது.

"என்னடா கரெண்ட் போய்டுச்சு......கீழ் போர்ஷனில் வீட்டு ஓனர்ஸும் இல்ல, உங்க அப்பா அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்கன்னு சொன்ன.......எப்படி நீ தனியா......"

"அதெல்லாம் ஒன்னும் ப்ரச்சனை இல்லை.........நாங்களெல்லாம் இருட்டை பார்த்து பயப்படுற பரம்பரையா??...போலீஸ்காரன் தங்கச்சியாக்கும் நான்"

" இருந்தாலும்..........ராத்திரி...........தனியா............ஒரு வயசுப் பொண்ணு........அதுவும் அழகான பொண்ணு.........தனியா வீட்ல.......நான் வேணா துணைக்கு...."

"அய்யே.......ஆசைய பாரு! ஒன்னும் வேணாம், அதெல்லாம் நாங்க பயப்படாம இருந்துப்போம். என் அண்ணாவும் டியூட்டி முடிஞ்சு வர்ர நேரம் தான்.......ஸோ நோ ப்ராப்ளம், நீங்க புறப்படுங்க"

"ஹும்......சரிடா.......டேக் கேர்...குட் நைட்!!!"

உன்னை நாளையும்
சந்திக்கலாம்
என்ற சந்தோஷத்தைவிட
இன்றும்
பிரிவதே கொடியதடி.....


தனது மொபைல்லிருந்த டார்ச் வெளிச்சத்தில் மாடிப்படி ஏறி தன் வீட்டிற்குள் அவள் செல்வதை பார்த்தபின் , அவனும் காரில் தன் வீடு நோக்கி புறப்பட்டான்.

வீட்டினுள் வந்தவள் எமர்ஜென்ஸி லைட்டை ஆன் செய்தாள்.....அதிலும் சார்ஜ் போதுமான அளவு இல்லாததால் மெழுகுவர்த்தியும் ஏற்றினாள், முகம் கழுவி விட்டு முன் அறைக்கு வந்தாள்.

தங்கள் காதலை தன் அண்ணனிடம் சொல்லிவிட இளா எவ்வளவோ வற்புறுத்தியும், பானு விஷயத்தை அண்ணனிடம் சொல்ல அருமையான சந்தர்ப்பம் தேடி கொண்டிருந்தாள். தன் நண்பனின் தங்கையையே காதலித்துக் கொண்டு, அதனை நண்பனிடம் மறைக்க ஏனோ இளாவிற்கு விருப்பமில்லை.
இன்று இளாவிற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த மாதிரி அண்ணாவிற்கும் காதல் விஷயத்தை இன்னிக்கு சொல்லிடனும், அம்மா அப்பா ஊரில் இல்லாத இந்த நேரத்தில் அண்ணனிடம் பக்குவமா விஷ்யத்தை சொல்றது நல்லது , என்று மனதிற்குள் நினைத்தவளாய் சோஃபாவில் தலை சாய்த்தாள் பானு.

சிறிது நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டது.

'பாவி!!! சஸ்பென்ஸ் தாங்காம........பாதி வழியிலேயே காரை ஓரங்கட்டிட்டு நான் கொடுத்த கிஃப்ட் பேக்கை ஓபன் பண்ணியிருப்பாங்க.......அதான் உடனே யூ டர்ன் போட்டு வந்திருப்பாங்க,
அச்சோ, .......என் ஸ்பெஷல் கிஃப்ட் பார்த்து .என்ன கலாட்டா பண்ண போறாங்களோ?
எப்படி சமாளிக்கப் போறேனோ தெரிலீயே!!
வெட்கம் பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு,
ரத்த நாளங்கள் துடித்தன!!

அவள் கதவினருகே செல்வதற்குள் மீண்டும் கதவு படபடப்புடன் தட்டப்பட்டது.

"ஒரு வேளை அண்ணா டியூட்டி முடிஞ்சு வந்துட்டாரோ.......இருட்டிலே தன் கிட்ட இருக்கிற வீட்டு சாவி எடுத்து திறக்க சோம்பல் பட்டு கதவு தட்டுறார் போலிருக்கு, என் நினைத்துக்கொண்டே கதவை திறந்தாள்.

அங்கு இருட்டில்..........அவள் இதுவரை கண்டிராத ஒரு உருவம்!
இருட்டில் அந்த கம்பீரமான கட்டுமஸ்தான உருவத்தோற்றம் திகிலை ஏற்படுத்தியது அவளுக்கு.



"யா......யாரது" என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

பதலளிக்காமல் அவ்வுருவம் இரண்டடி எடுத்து வைத்து ,
அவளை நெருங்கியது!!

"யா........ர்.......நீங்......." என்று அவள் முடிப்பதற்குள்.......!!

[தொடரும்]

உயிரே!...உறவாக வா?? - 2


உயிரே!....உறவாக வா?? - 3


உயிரெ!....உறவாக வா??? - 4

September 30, 2008

மாமனாருக்கு மரியாதை....!!!



அப்பா-மகன் உறவுக்கு நடுவில் ஒரு விதமான இடைவெளி அந்த மகன் டீன் ஏஜ் பருவம் அடையும் போது ஏற்படுவது சகஜம்.
தன் தேவைகளை அம்மாவின் மூலமாகவே அப்பாவிடம் தெரிவிக்க ஆரம்பிப்பான் பையன் அந்த பருவத்தில், நாளடைவில் இந்த இடைவெளி அதிகமாகி, பேசிக்கொள்ளும் வார்த்தைகளும் அளவுடன் அமைந்துபோகும்.

அப்பாவின் மேல் மரியாதையும் பாசமும் இருந்தாலும் , 'சற்று' தள்ளியிருந்து உறவுகாக்கும் இந்த பையன், தனக்கு திருமணமாகும் போது, தன் மாமனாரோடு எப்படி பழகுவான்???

புது 'மாப்பிள்ளை' அந்தஸ்து , கவுரவம் எல்லாம் வேறு அவனுக்கு ஒரு புது கெத்து கொடுத்திருக்கும்போது, தகப்பன் வயதிலிருக்கும் தன் மாமனார் கொடுக்கும் மரியாதையை எப்படி கையாள வேண்டும்??

இதோ சில டிப்ஸ்.......

* தன் மகன் வயதில் இருக்கும் உங்களுக்கு உங்கள் மாமனார் தரும் மரியாதையை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல், திருப்பி செலுத்த தவற வேண்டாம்.

*உங்கள் மாமனாரோடு தொடர்ச்சியாக 5 நிமிடத்திற்கு மேல் பேச பொதுவானவை ஏதும் இல்லை என யோசிக்கிறீர்களா???......உங்கள் மனைவியிடம், அவளின் அப்பாவின் ரசனை, விருப்பு , வெறுப்புகள் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
அந்த வயதில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு பற்றி பேச விரும்புவர்.

*எப்படி உங்கள் தாயாருடன் உங்கள் மனைவி ஒத்துப் போய் பேசி பழகுவது உங்களுக்கு ஒரு சந்தோஷத்தை, மன்நிறைவை கொடுக்குமோ,அதேபோன்ற எதிர்பார்ப்பு உங்கள் மனைவியின் மனதில்............... உங்களுக்கும் தன் தகப்பனுக்கு நடுவில் நல்லுறவு இருக்க வேண்டுமென இருக்குமில்லையா??......இதை நினைவில் கொண்டு உங்கள் மாமனாரோடு பழகுங்கள்!!

*உங்கள் மனைவியை பற்றி ஏதும் புகார் தெரிவிக்க விரும்பினால், அதனை உங்கள் மனைவியின் தாயாரிடம் கூறுவது மேல்.
தன் மகளை பற்றி தன்னிடமே தன் மருமகன் குறை கூறினால், அதை தாங்கிக்கொள்வதும், கையாளுவதும் எந்த தகப்பனுக்கும் கஷ்டமான காரியம்.
[உங்களால் சரி செய்துக்கொள்ள முடியாத பட்சத்தில் மட்டுமே புகார் துறை வரைக்கும் செல்வது சிறந்தது.......திருமண பந்தத்திற்கு உகந்ததும் கூட]

*நீங்கள் மாமனார் வீட்டிற்கு போகும்போதெல்லாம் கிடைக்கும் மாப்பிள்ளை கவனிப்பை பயன்படுத்தி 'ஒவரு' பந்தா பண்ணாதீங்க.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மனமுவந்து உங்கள் மாமனார் கொடுக்கும் வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்,
இளப்பமாக எண்ணி ஏற்க மறுப்பது,
அதிகமாக எதிர்பார்த்து டிமாண்ட்
செய்வதையும் தவிருங்கள்.

*எந்த தகப்பனுக்கும் செல்ல மகளை தன் மருமகன் நன்றாக கவனித்துக்கொள்கிறாரா?? என அறிந்துக்கொள்ள ஒரு ஆர்வமும் ஆசையும் இருக்கும், அதனால்.....
மாமனாருக்கு முன் உங்கள் மனைவியிடம் நெருக்கமாக நடந்துக்கொள்ளாவிட்டாலும்,

"என்னமா சாப்பாடு ரெடியா?"

"மாமாவுக்கு காஃபி கொண்டுவாமா"

"நீ சாப்பிட்டியாமா?"

இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...

பெத்தவரின் மனம் குளிர்ந்து போகும்!!!

பொத்தி பொத்தி வளர்த்த மகளை
பத்திரமாக பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...
என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு
தயக்கமின்றி அத்தருணத்தை
தருவதில் தவறொன்றுமில்லையே???

September 09, 2008

தேடி வந்த காதல்......!!!

அலுவலக விஷயமாக Noida சென்றுவிட்டு அன்று தன் பெங்களூர் அலுவலகம் திரும்பிய ரமேஷ், வேலைகளை தொடங்கும் முன் வழக்கம்போல் தன் அலுவலக இமெயில்களை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தான்,

இவன் ப்ராஜக்ட் லீடாக பணிபுரியும் குழுவிற்கு புதிதாக 'Verification Engineer' பதவிக்கு ஒர் பெண் பணியில் சேர்ந்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் தனது அலுவல்கள் பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள அவனை சந்திப்பாள் என்ற அறிவிப்பு ப்ராஜக்ட் மனேஜரிடமிருந்த வந்திருந்தது.

அவன் மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் கொள்ளாமலே மேலோட்டமாக மெயிலை படித்திருந்தான்.
அவனது 26 வயதிற்கே உரிய ஆர்வ கோளாரில் பெண்ணின் பெயரை பார்ப்பதற்காக ஈ-மெயிலை மறுமுறை படிக்க தொடங்க..........அதே வேளையில் ,


"எஸ்கூஸ் மீ" என்று அவன் பின்னாலிருந்து மெல்லிசை போன்ற குரல் கேட்டு திரும்பியவன், ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தான்.

அவளும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது கண்களில் சிறிது கணம் தோன்றிய ஆச்சரிய பார்வை உணர்த்தியது.
அதனை மறைத்தவளாய் தன்னை அறிமுகப்படுத்த துவங்கினாள்,

"ஐ அம் சந்தியா, ஐ ஹேவ் ஜாயிண்ட் அஸ் அ வெரிஃபிக்கேஷன் இஞ்சினியர் இன் யுவர் டீம்"

"யெஸ் ஐ டு நோ..........வெல்கம் டூ அவர் டீம்........சந்........சந்தியா"

"தேங்கியூ"

பின் தனது வேலைக்கான பொறுப்புகள் பற்றின விபரங்களை ரமேஷிடம் மிக மிக இயல்பான தொனியில் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.

கல்லூரி படிப்பை முடித்து இத்தனை வருடங்கள் களித்து தனது டீமில் ஒருத்தியாக சந்தியாவை சந்தித்த அதிர்விலிருந்து மீளமுடியாமல் ரமேஷ் சற்று திணறிப்போனான்.

தனக்கு தேவையான விளக்கங்களை பெற்றுக் கொண்டவள் ரமேஷிற்கு நன்றி கூறிவிட்டு அவனது அறையை விட்டு வெளியேறுகையில்...

"சந்தியா......."

"........"

" உங்க........உன் .......கிட்ட.....கொஞ்சம் பேசனும்"

என்னவென்பது போல் அவனைப் பார்த்தாள் சந்தியா,

"உன்னை..........இங்க......நான் எதிர்பார்க்கவேயில்லை சந்தியா"

"நானும் தான்...."

"ஸோ.....ஸாரி ......சந்தியா.."

"எதுக்கு?.."

"நீ.........அன்னிக்கு.......காலேஜ்ல.......என்கிட்ட...."

இதற்குமேல் பேச வேண்டாம் என்பது போல் தன் கையை உயர்த்தி சைகை காட்டிவிட்டு, பேச ஆரம்பித்தாள் சந்தியா.....


"ரமேஷ், நான் உங்களை விரும்பினதை உங்க கிட்ட வெளிப்படுத்த எனக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதே அளவு உரிமை அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறதுக்கு உங்களுக்கும் இருக்கு. ஒருத்தரை விரும்புறதும் விரும்பாததும் தனிப்பட்ட இஷடம். நான் உங்களை விரும்பினேன்ற ஒரே காரணத்துக்காக நீங்களும் என்னை காதலிக்கனும்னு அவசியம் இல்லையே......."

"இருந்தாலும்...........ஐ.......அம்......ஸோ......"

"ரமேஷ் ப்ளீஸ்.........டோண்ட் ஆஸ்க் எனிமோர் ஸாரி அண்ட் எம்பிராஸ் மீ"

"........."

" நான் பழசெல்லாம் மறந்தாச்சு........நீங்களும் மறந்திடுங்க,,,,ப்ளீஸ்"

தங்குதடையின்றி தெளிவாக பேசிவிட்டு தன் அறையை விட்டு வெளியேறிய சந்தியாவை வியப்புடன் பார்த்தான் ரமேஷ்.

கல்லூரியில் தனக்கு இரண்டு வருடம் ஜூனியராக படித்த சந்தியாவா இவள்?

இரண்டு வார்த்தை சேர்ந்தார்போல் பேசுவதற்கே மிகவும் யோசிக்கும் சந்தியா..........இத்தனை வெளிப்படையாக தன் மனதில் உள்ளதை பேசுகிறாள், வியந்தான் ரமேஷ்!!

கல்லூரியில் ரமேஷின் வகுப்பில் படித்த சரவணனின் தூரத்து உறவுக்கார பெண்தான் சந்தியா.அதே கல்லூரியில் முதல் வருடப் படிப்பில் சந்தியா சேர்ந்த போது அவளது அப்பா சரவணனிடம்,

"தம்பி நம்ம சந்தியாவ இதே காலேஜ்லதான் ஹாஸ்டல சேர்த்திருக்கிறோம்பா.........புள்ளைய பத்திரமா பார்த்துக்க"

என்று ஒரு அப்பாவிற்கே உரித்தான கவலையான அக்கறையுடன் அவனிடம் கூறினார்.
பக்கத்தில் கும்பலாக நின்றுக் கொண்டிருந்த சரவணின் நண்பர்களையும் ஓரக்கண்ணால் மிரண்டு போய் பார்த்தபடியே தான் பேசினார்.

'நம்ம பொண்ணை இந்த பயலுக கிண்டலும் கேலியும் செய்வானுங்களோ' அப்படின்ற பயமும் அவரது பார்வையில்.

"நீங்க பயப்படாம ஊருக்கு போங்க சித்தப்பா, அவளை நான் பாத்துக்கிறேன்........" என்று அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பினான் சரவணன்.

அதன்பின் சரவணனிடம் ஏதாவது உதவி கேட்டு சந்தியா வருவதும், உடனிருக்கும் ரமேஷிடமும் நட்பான அறிமுகத்துடன் பேசவும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. சரவணன் இல்லையென்றால் ரமேஷிடமே தன்க்கு தேவையான உதவிகளை கேட்கும் அளவிற்கு அவர்கள் நட்பு வளர்ந்தது.

தன் நண்பனின் உறவுக்காரபெண், ஹாஸ்டலில் வேற இருக்கிறா என்ற அக்கறையில் ரமேஷும் உதவிகளை செய்தான்.
ரமேஷ் நூறு வார்த்தை பேசினால், பதிலுக்கு ஒரு வார்த்தை பேசவே சந்தியா மிகவும் தடுமாறுவாள்.

இந்நிலையில் ரமேஷ் இறுதியாண்டு இறுதி தேர்விற்கு முந்தின நாள், சந்தியா தன் காதலை கவிதையாக எழுதி ரமேஷிடம் கொடுத்தாள்.


ரமேஷ்...
உன் மேல் காதல் வந்தும்
அதைச் சொல்லாமல் மறைத்திருந்தேன்
உன்னிடம் சொல்வதற்கு ஏனோ முடியவில்லை
பெண்மையின் நாணம் என்னை வென்றது

என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன்

என்னைத் தென்றல் தீண்டினாலும்
உன் நினைவால் சிலிர்க்கின்றேன்
என்னை வெப்பம் தீண்டினாலும்
உன் அருகாமையை உணர்கின்றேன்

என் கண்கள் காணும் காட்சி எல்லாம்
நீயே ஆகி விட்டாய்
நான் பேசும் வார்த்தை எல்லாம்
உன் பெயரையே சொன்னது

என்னையறியாமல் என் கண்கள்
நீ வரும் வழி பார்த்துத் தேடியது
என் கால்களோ வெட்கத்தால்
தரையில் கோலம் போட்டது

இத்தனை ஆசை உன்மேல் இருந்தும்
ஏனோ சொல்லத் தெரியவில்லை
என்றாவது என்னை நீ அறிவாய்
என்றே இந்நாள்வரை காத்திருந்தேன்.....

உனக்காகவே நான் வாழ்கின்றேன்!!

அமைதியும் சாந்தமுமாக வலம் வரும் சந்தியாவின் இதயத்தையும் காதல் தட்டியிருந்தது ரமேஷின் உருவில்!

இதனை சற்றும் எதிர்பாராத ரமேஷ் , தன் மனதில் அவள் மேல் அவ்விதமான எந்த எண்ணமும் இல்லை எனவும், இப்படி பட்ட எண்ணங்கள் கல்லூரி கால வயதில் சகஜம், அதையெல்லாம் விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறும் அறிவுரை கூறினான்.



கண்களில் ஏமாற்றமும், கவலையும் கலந்த ஓர் அவமான உணர்விலும் கலங்கிய கண்களுடனும் சந்தியா வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அதுவே அவன் சந்தியாவை கடைசியாக சந்தித்தது.
சரவணன் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட, ரமேஷ் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட, இருவருக்குமான தொடர்பும் மெது மெதுவாக குறைந்திருந்தது.
ரமேஷ் சந்தியாவை பற்றிய எதுவுமே சரவணனிடம் விசாரிக்கவில்லை இத்தனை வருடங்களில்.

அவன் சந்தியாவை பற்றி கேட்காததிற்கும், அவளது காதலை மறுத்ததிற்கும் காரணம் இருந்தது.........அப்போது
அவன் மனதில் குடியிருந்த எதிர்வீட்டு தேவதை 'மேனகா' தான் அது!!

மேனகா ரமேஷ் வீட்டின் எதிரில் குடியிருக்கும் அழகு பதுமை.
சிறுவயதிலிருந்தே இரு குடும்பத்திற்கும் நல்ல பழக்கம்,
பதின்ம வயது காதல் ரமேஷை தாக்கியது 'மேனகா'வின் உருவில்.....


மனதில் மேனகா மீது காதல் இருந்தும், ரமேஷ் அதனை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை,
தானும் அவளும் படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்தபின் இருவீட்டாரிடமும் பேசி அவளை திருமணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் ஒருதலையாக அவளை காதலித்துக் கொண்டிருந்தான்.
மேனகாவின் பாசமும் அன்பும் அவனுக்கு சிறுவயதிலிருந்தே நிறைவாக கிடைத்ததால், தன் காதலை தனிப்பட வெளிப்படுத்தி காதலித்து தங்கள் படிப்பு காலத்தை விரயமாக்க வேண்டாம் எனக் கருதி அவன் மனதிலேயே தன் காதலை பத்திரப்படுத்தியிருந்தான்.

விதி வலியது..........இரண்டு வருடங்களுக்கு முன் மேனகா தன் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் , தன்னுடன் படிக்கும் தன் காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க ரமேஷின் உதவியையே அவள் நாடியபோதுதான் ரமேஷ் தன்க்குள் சுக்கு நூறாக உடைந்து போனான்.

மேனகாவின் பாசமும், பரிவான பேச்சும் இவனுக்கு காதலாக தோன்றியிருக்கிறது, ஆனால் அவளுக்கோ அது நட்பாக மட்டுமே இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது.

மனதிற்குள் கோட்டை கட்டி, சிம்மாசனத்தில் அமர்த்தி , பூஜித்த தேவதை தன்னையும், தன் காதலையும் உணராமலே போனதால் அவள் மீது கோபமும் ஆத்திரமும் முட்டிக் கொண்டு வந்தது ரமேஷிற்கு.

மேனகா தன் காதலனுடன் திருமணமாகி வெளிநாடு சென்று இரண்டு வருடங்களாகியும் அந்த கோபமும் ஏமாற்றமும் இன்னும் அழியாத ரணமாக அடி மனதில் இருக்கத்தான் செய்தது ரமேஷிற்கு.

இன்று சந்தியாவின் இந்த பக்குவமான பேச்சு ரமேஷை சிந்திக்க வைத்தது.

சாயந்திரம் அலுவலகம் முடிந்து தன் வீட்டிற்கு தனது காரில் ரமேஷ் திரும்பிய போது, அலுவலகத்திற்கு அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றுக்கொண்டிருந்த சந்தியாவை பார்த்ததும் தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளிடம் சென்றான்.

" சந்தியா.........எங்கே போகனும்.......வா நான் ட்ராப் பண்றேன் என் கார்ல"

" நோ......நோ தேங்க்ஸ்"

"எங்கே போகனும்னு மட்டும் சொல்லு.........போற வழில நானே ட்ராப் பண்ணிடுறேன்.....ப்ளீஸ்"

"ப்ரவாயில்லை.........நான் பஸ்லயே போய்க்கிறேன்"


"ஓ.......இன்னும் என் மேல கோபம் குறையலையோ"

"ஹலோ.........எனக்கு யாருமேலயும் கோபம் எல்லாம் ஒன்னுமில்ல"

" அப்போ என் .......கார்ல வா.......நான் ஓத்துக்கிறேன் உனக்கு கோபமில்லைன்னு"

"அய்யோ ரமேஷ்........இப்போ எதுக்கு பஸ் ஸ்டாப்ல வந்து வம்பு பண்றீங்க"

" நீ பேசாம அப்போவே கார்ல வந்து உட்கார்ந்திருந்தா யாரு வம்பு பண்ண போறா "

" சரி..........சரி.......வந்து தொலைக்கிறேன்"

என்று வேகமாக அவனது காரை நோக்கி நடந்தாள்.

காரின் பின் இருக்கைக்கான கதவை சந்தியா திறக்கவும்......

"ஹலோ.....மேடம்..........நான் என்ன உங்களுக்கு கார் ட்ரைவரா? முன்னாடி வந்து ஏறுங்க....."

"எனக்கு அப்படி யாரு கூடவும் கார்ல முன்னாடி கூட உட்கார்ந்து போய் பழக்கமில்லை.........மோர் ஓவர் இட்ஸ் ரிசர்வ்ட் ஃபார் சம் ஒன் ஸ்பெஷல் டு யூ"

"சம் ஓன் ஸ்பெஷலா.......ஹும்.......சரி சரி.......முதல்ல கார்ல பின்னாடியே ஏறும்மா தாயே"

சந்தியாவை எங்கே இறக்கிவிடவேண்டுமென அவளிடம் கேட்காமலே காரை மிதமான வேகத்தில் செலுத்தினான்.

மேனகா ரமேஷின் மனதில் ஏற்படுத்தியிருந்த நிராகரிப்பின் வலி, ஏமாற்றம்..............
அதன்பின் சந்தியாவை ஏதேச்சையாக அலுவலகத்தில் இன்று காலையில் சந்தித்தபோது, அவளது அன்பை உதறித்தள்ளி காயப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு எல்லாம்.....மெது மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது ரமேஷிற்கு.


டிராஃபிக் சிக்னலில் கார் நிற்கையில் தன் முன்பிருந்த கண்ணாடியில் பின்னிருக்கையிலிருந்த சந்தியாவை பார்த்தான் ரமேஷ்.


அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில் அவளைப் பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.
எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.

இத்தனை வருடங்கள் கழித்து சந்தித்தப்பின்பும், என் மேல் எத்தனை நம்பிக்கை இருந்தால்........எங்கு செல்கிறோம் என்று கூட கேட்காமல் ஜன்னல் வழியாக தன் முகத்தில் மோதும் காற்றை ரசித்தபடி, நெற்றி கூந்தலை நளினமாக காதில் சொருகியப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டுவருவாள்??

காரை காஃபி ஷாப் முன் நிறுத்தினான் ரமேஷ்.

" ஏன்.........ஏ.......ன்...........இங்கே நிறுத்தினீங்க?.........நான் எல்லாம்......."

"நான் எல்லாம் யாரு கூடவும் காஃபிஷாப் க்கு தனியா போகமாட்டேன்...........நான் சுடிதார் போட்ட சங்ககால தமிழ்பெண்.....அப்படின்னு லெக்சர் கொடுக்க போறே......அந்த லெக்சரை காஃபி குடிச்சுட்டே பேசலாமே.......ப்ளீஸ்"

ப்ளீஸ் சொல்லும்போது........... 'ஸ்ஸ்ஸ்' ஸில் ஒரு அழுத்தம் கொடுத்து கெஞ்சும் பார்வை பார்த்தான்....ரமேஷ்!!


"எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல உங்க கூட காஃபி குடிக்க.........நீங்க உங்க வீட்டமனிக்கிட்ட அடி வாங்காம இருந்தா சரி..........."

"ஹா......ஹா.......ஹா"

"என்ன இளிப்பு......??"

"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லியான்னு போட்டு பாக்குறியாக்கும்??.........சரி வா........காஃபி குடிச்சுட்டே அது பத்தி பேசலாம்"

கல்லூரியில் சரவணனுடன் கேண்டினுக்கு வந்தால், சந்தியா முட்டை பஃப் ஆர்டர் பண்ணுவாள்.....அது அவளது ஃபேவெரைட் ஐடம்!
ஸோ.....ரமேஷ் காஃபியுடன் முட்டை பஃப்யும் ஆர்டர் செய்தான்.

"ஹும்........என்ன கேட்ட.........வீட்டம்மணியா??'

"ஆமா.........மிஸஸ் மேனகா ரமேஷ்குமார் பத்தி கேட்டேன்......"

இவளுக்கு எப்படி மேனகா மேட்டர் தெரியும் என்று......அதிர்ச்சியுடன்.....புருவம் உயர்த்தி அவளை கூர்ந்து பார்த்தான்.

சிறிது நேர மெளனத்திற்கு பிறகு சந்தியாவே பேச தொடங்கினாள்.....

" காலேஜ்ல அன்னிக்கு..........உங்க கிட்ட......பேசிட்டு நான் ஹாஸ்டலுக்கு போற வழியில சரவணன் அண்ணாவை பார்த்தேன்........என் கண்ணு ஏன் சிவந்திருக்கு, ஏன் அழுதேன்னு அண்ணா துளைச்சு துளைச்சு கேட்டான்.......ஸோ அவன்கிட்ட சொன்னேன்....."

"..........."

" அப்போதான்......நீங்க உங்க பக்கத்துவீட்டு பொண்ணு மேனகாவை ரொம்ப டீப்பா லவ் பண்றீங்கன்னு அண்ணா சொன்னான்........"

"..........."

"சரவணன் அண்ணா கிட்ட அப்புறமா உங்களை பத்தி நான் எதுவுமே கேட்டதில்லை.......அண்ணாவும் எதுவும் சொன்னதில்லை........"


"ஹும்.........."


" நான் ரொம்ப ஃபீல் பண்ணினேன்.......இதெல்லாம் தெரியாம உங்க மேல...........ஸாரி"


"ஹே சந்தியா........ஒய் டு யு ஆஸ்க் மீ ஸாரி.........டோண்ட் ஃபீல் ஸாரி சந்தியா."

நீண்ட பெருமூச்சிற்கு பின் ரமேஷ் பேச தொடங்கினான்,

"நான் லவ் பண்ணினது காலேஜ்ல என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கு தெரியும்............ஆனா...........அந்த லவ் ஒருதலைகாதல் மட்டுமில்ல.......ஏற்றுக்கொள்ளபடாத காதலும்னு யாருக்கும் தெரியாது.........."

"ர....மே......ஷ்......"

"ம்ம்.........ஷி காட் மேரிட் ........."

"ஸோ ஸாரி டு ஹியர் திஸ்......ரமேஷ்"

"லீவ் இட் .......பாஸ்ட் இஸ் பாஸ்ட்......."

சிறிது நேரம் எதுவுமே பேசாமல் இருவரும் காஃபி அருந்தினர்.

"சரி......நான் போட்டு எல்லாம் பார்க்கல...........உன் டீடெய்ல்ஸ் கம்பெனி எம்ப்ளாயி டேடா பேஸில் பார்த்தேன்........ஸ்டில்....மிஸ்.சந்தியா..........ஏன் இன்னும்.........நீ.......கல்யாணம்.........."

"ஹலோ.......நான் உங்களையே நினைச்சுட்டு இன்னும் உருகிட்டு இருக்கிறேன், அதான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கிலைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்...............வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டுதான் இருக்காங்க.........ஆனா எந்த ஜாதகமும் பொருந்தி வரல, என் ஜாதகத்துல தான் ஏதோ ப்ராப்ளம்னு என் அம்மா ஒரே புலம்பல்.........ஜாதகத்தை மாத்தி எழுதி ரீ-ட்ரை பண்ணுங்கம்மா ன்னு சொல்லியிருக்கிறேன் "
என்று படபடவென்று பேசிவிட்டு சிரித்தாள் குழந்தையாய்...........!!

அவளது சிரிப்பை ரசித்தபடி கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்........

"ஹலோ........சார்..........என்ன அப்படி பார்க்கிறீங்க......??"

பதில் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் ரமேஷ்......

"ஐயா சாமி........நான் பேசுறது காதுல விழுதா........ஹலோ......."
அவன் கண்களுக்கு முன் விரல் சொடுக்கி சிரித்தாள் சந்தியா!!

தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த ரமேஷ்.........அவள் கண்களை ஊடுறுவும் ஒரு பார்வையுடன்...........

"அப்பிளிக்கேஷன்.........உன்கிட்ட கொடுக்கனுமா..........உன் அப்பாகிட்ட கொடுக்கனுமா........"

"எ..........என்ன......??."

"என் ஜாதகத்தை உன் கிட்ட கொடுக்கனுமா........உங்க வீட்ல கொடுக்கனுமான்னு கேட்டேன்.........."

குடித்துக்கொண்டிருந்த காஃபி புரை ஏறியது சந்தியாவிற்கு,

மிரண்ட விழிகளில்......இன்ப அதிர்ச்சி!!

"சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்னு டயலாக் எல்லாம் விட மாட்டேன்.......உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்"

"............"

" நாம நேசிக்கிறவங்களைவிட........நம்மளை நேசிக்கிறவங்க கூடத்தான் வாழ்க்கை இனிக்கும்........."

"......."

" வில் யூ மேரி மீ.......சந்தியா?"

"..........."

"என்ன சந்தியா........பதிலேதும் சொல்லாம அமைதியா இருக்கிற??"

"ம்ம்......"

"ம்ம் னா??........"

கரெக்ட்டாக அப்போ பார்த்து வெயிட்டர் பில் கொண்டுவர, பில் பே பண்ணிவிட்டு ரமேஷ் பார்க்கையில்.........சந்தியா அவனது கார் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
தன் கையிலிருந்த ரிமோட் கீ யினால்.......காரை அன்லாக் செய்துவிட்டு.......வேகமாக சந்தியாவை பின் தொடர்ந்தான்.

காருக்கு அருகில் இருவரும் சென்றதும், தவிப்புடன் ரமேஷ் அவளை நோக்க.........

சந்தியா கண்சிமிட்டிவிட்டு காரின் முன் கதவை திறந்தாள்......!!

"சந்தியா..........."

"இனிமே இந்த இடத்தை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்"

சந்தோஷத்தில் ரமேஷிற்கு வார்த்தைகள் வரவில்லை........அங்கு வார்த்தைகளுக்கு அவசியமுமில்லையே!!

ரமேஷ் காரின் ட்ரைவர் இருக்கையில் ஏறினான், அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
அமர்ந்தபோது அவன் தோளில் அவள் தோள் இடித்தது.........
கியரைப் பொருத்தியபோது அவன் கை அவள் முழங்காலில் தொட்டு மீண்டது.......

திடீர் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்க்க.........இனிதே அவர்கள் 'வாழ்க்கை' பயணம் தொடங்கியது!!!!!!!!

முற்றும்.