November 30, 2006

கல்லூரி கலாட்டா - 1


கல்லூரியில் முதலாம் ஆண்டு, முதல் நாள், முதல் வகுப்பிற்கு செல்ல போகிறொம் என்று பயம் கலந்த கலக்கத்துடன் கல்லூரிக்குள் நுழைந்தனர் ரம்யா, பவானி, ஷீத்தல் மூவரும்.

மூவரும் பள்ளியிலிருந்தே ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். மூவருக்கும் ஒரே கல்லூரியில், ஒரே பாடப்பிரிவில் இடம் கிடைத்தது அவர்கள் அதிர்ஷடமே.

இவர்களை பற்றின இன்னுமொரு முக்கியமான விஷயம், எப்போதும் பார்க்க அப்பாவிகளாக முகத்தை வைத்துக்கொள்ளும் இவர்கள் மூவரும் , உண்மையில் திமிரு பிடித்த லூட்டி அடிக்கும் வாலு பெண்கள்.

'முப்பெருந்தேவிகள்' , 'பவர் பஃப் கேர்ள்ஸ்'[கார்ட்டூன் கேரக்டர்ஸ்], ' மூன்று முடிச்சு' இப்படி நிறைய பட்ட பெயர்கள் உண்டு இவர்களுக்கு பள்ளியில். எங்கு சென்றாலும் மூவரும் ஒன்றாகவே செல்வார்கள்.

மூவரில் ஒருவர் கூட 'காதல் வலையில்' இதுவரை சிக்காததிற்க்கு காரணம்........

1.' எங்கு சென்றாலும் பின்னாடியே ஃபாளோ பண்றது, திரும்பிப் பார்த்தால் பல்லை இளிக்கிறது' இப்படி பன்ற பையன்களை ' உருப்படியா படிக்கவோ, வேலை பார்க்கவோ வேண்டிய வயதில் இப்படி பின்னாடியே பாடிகார்ட்டாட்டம் வருகிற இவனை நம்பினால் வாழ்க்கை உருப்படாது' என்று உதாசீனப்படுத்தி விடுவார்கள்.

2. ரோட்டோரத்தில் உள்ள டீ கடையில் தம் அடித்துக் கொண்டே போகிற வருகிற பெண்களை 'ஜொள்ளு' ஒழுக பார்க்கிற ''ரோட் சைட் ரோமியோ'வைப் பார்த்தால் பரிதாபப்படுவார்கள்.

3.பார்த்த முதல் நாளே, கையில் ரோஜாவும் ஒரு வாழ்த்து அட்டையுமாக வருபவனைப் பார்த்தால் , கண்டதும் காதல் கொண்ட' காதல் மன்னன்' என்று கிண்டல் அடிப்பார்கள்.

கல்லூரியில் முதல் நாள் வகுப்புகள் அனைத்தும், பெயர் மற்றும் ஊர் அறிமுகம் என இனிதே நடந்துக் கொண்டிருந்தது. மதியம் 3 மணி அளவில் வகுப்பு நடந்துக் கொண்டிருக்கும் போது, " எக்ஸ்க்கூஸ்மீ சார் " என்றான் வாயிலில் நின்றுக் கொண்டிருந்த ஒரு ஒல்லிபிச்சான் சீனியர்.

"வீ லைக் டூ மேக் அன் அனோன்ஸ்மண்ட் சார் " என்றான்.
"ஓ.கே , கோ அஃகேட்" என்றார் லெக்ச்சரர்.

இப்போது ஒல்லிப் பிச்சானைத் தொடர்ந்து மூன்று சீனியர்கள் வகுப்புக்குள் நுழைந்தனர்.

' ஓ இந்த ஒல்லிப்பிச்சான் , சும்மா எடுபிடி தானா ' என்று நினைத்துக் கொண்டனர் முப்பெருந்தேவிகள்.

" டியர் ஃபிரண்ட்ஸ், வீ லைக் டூ ஹோஸ்ட் ' வெல்கம் பார்ட்டி' டூ யூ ஆல் ஆன் பிகாஃப் ஆஃப் அவர் டிபார்ட்மண்ட், சோ கைண்ட்லி கேதர் அட் தி செமினார் ஹால் டுமாரோ அட் 10 எ.எம்" என்று அறிவித்தான் அம்மூவரில் ஒருவன்.

அனுமதி அளித்த ஆசிரியருக்கு ஒரு நன்றியும் தெரிவித்துவிட்டு அவர்கள் இடத்தை காலி பண்ண, வகுப்பறையில் ஒரே சல சலப்பு.

'இது அஃபிஷியல் ராகிங்காம்' எனவும்

'பெயர் அறிமுகம் செய்யனுமாம் ஒவ்வொருவரும் தனியாக முன் சென்று, பின் சீனியர்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமாம்'
என்ன வேண்டுமானலும் கேட்பார்களாம்' என ஆளுக்கொரு கருத்தாக கூறிக் கொண்டார்கள் வகுப்பு மாணவர்கள்.

முப்பெருந்தேவிகள் ஒரு முடிவிற்கு வந்தார்கள்,
'வழக்கம் போல் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொள்வது,
கேள்விக்கு பதில் சொன்னால் மீண்டும் நோண்டி நோண்டி கேள்வி கேட்டு பெண்டெடுத்து விடுவார்கள், எனவே எந்த கேள்வி கேட்டாலும் பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல்' பேக்கு மாதிரி' முழிப்பது'

இந்த முடிவுடன் மறுநாள் 10 மணிக்கு செமினார் ஹாலிற்கு சென்றார்கள்.................

[கலாட்டா தொடரும்........]

கலாட்டா-2

கலாட்டா -3

கலாட்டா -4

கலாட்டா -5

கலாட்டா -6

66 comments:

நாமக்கல் சிபி said...

இன்னொரு தொடரா! வாழ்த்துக்கள்!

Divya said...

\" நாமக்கல் சிபி @15516963 said...
இன்னொரு தொடரா! வாழ்த்துக்கள்! \"

வாழ்த்துக்களுக்கு நன்றி சிபி,

[முதன் முதலாய் வாழ்த்திய உங்கள் வாழ்த்துடன் என் தொடர் கதை தொடரட்டும்.]

ஆவி அண்ணாச்சி said...

இது போன்ற எண்ணெயில் பொரித்த திண்மண்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்காமல் வேகவைத்த சத்துள்ள காய்கறிகள், பயறுவகைகள், பழங்கள்
என்று கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியம் காக்கப்படுவதோடு தேவையற்ற கொழுப்புச் சத்து உடலில் தங்காமல் இருக்கும்.

ரவி said...

தொடருங்க...ஒரு முடிவோட தான் கலக்க ஆரம்பிக்கிறீங்க போல...

கோபிநாத் said...

முப்பெருந்தேவிகலே... வருக...வருக

"[கலாட்டா தொடரும்........]" ...தொடருங்க..வாழ்த்துக்கள்

Anonymous said...

ungal galatavai aavaludan ethir paarkiren ;)

Anonymous said...

ezhudha theriyadhu enna aarambichu ippadi kalaku kallakunu kalakareenga ponga...

andha moonula neenga endha characternu sollunga...actually ungal kadhapathirathin oru peyar ennudayadhu..so miga aavalai edhirparkiren thodarkadhayai...

Syam said...

நீங்களும் கலக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க...கண்டினியூ..கண்டினியூ..அந்த முப்பெருந்தேவியர்ல ஒருத்தர் யாருன்னு தெரியுது மீதி ரெண்டு பேருதான் தெரியல :-)

Syam said...

ஆவி அண்ணாச்சி ஆல் இண்டியா ரேடியோல வேலை செஞ்சாரா? :-)

மு.கார்த்திகேயன் said...

கலக்கலா ஆரம்பிக்குதே தொடர்..வாழ்த்துக்கள் திவ்யா.. இந்த தொடரை மிஸ் பண்ணாம படிக்கிறேன்

Divya said...

\" ஆவி அண்ணாச்சி said...
இது போன்ற எண்ணெயில் பொரித்த திண்மண்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்காமல் வேகவைத்த சத்துள்ள காய்கறிகள், பயறுவகைகள், பழங்கள்
என்று கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியம் காக்கப்படுவதோடு தேவையற்ற கொழுப்புச் சத்து உடலில் தங்காமல் இருக்கும்.\"

அண்ணாச்சி , நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு நல்லா புரியுதுங்கோ!

Divya said...

\" செந்தழல் ரவி said...
தொடருங்க...ஒரு முடிவோட தான் கலக்க ஆரம்பிக்கிறீங்க போல... \"

ரவி, தொடரை தொடர்ந்து படியுங்கள், உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன்.

Divya said...

\"Gopinath said...
முப்பெருந்தேவிகலே... வருக...வருக

"[கலாட்டா தொடரும்........]" ...தொடருங்க..வாழ்த்துக்கள் \"

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோபிநாத்.

Divya said...

\"
C.M.HANIFF said...
ungal galatavai aavaludan ethir paarkiren \"

வருகைக்கு நன்றி ஹனிஃப்.

Divya said...

\"one among u said...
ezhudha theriyadhu enna aarambichu ippadi kalaku kallakunu kalakareenga ponga...

one among u,இப்போதான் கொஞ்சம் கொஞசமா கத்துக்கிறேன்,


\"andha moonula neenga endha characternu sollunga...actually ungal kadhapathirathin oru peyar ennudayadhu..so miga aavalai edhirparkiren thodarkadhayai...\"

one among u, சத்தியமா நான் அந்த முபெருந்தேவைகளில் ஒன்னு இல்லீங்கோ,
உங்க பெயர் ஒரு கதாபாத்திரத்தின் பெயரா?? எந்த பெயர் ன்னு எனக்கு தனியா சொல்லிடுங்க,சரியா? அந்த கதாபாத்திரத்தை வைச்சு ஒரு கலக்கு கலக்கிடுவோம்

Divya said...

\"Syam said...
நீங்களும் கலக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க...கண்டினியூ..கண்டினியூ..அந்த முப்பெருந்தேவியர்ல ஒருத்தர் யாருன்னு தெரியுது மீதி ரெண்டு பேருதான் தெரியல :-) \"

என்ன நாட்டாம இப்படி போட்டு கொடுக்கிறீங்க!

Divya said...

\"Syam said...
ஆவி அண்ணாச்சி ஆல் இண்டியா ரேடியோல வேலை செஞ்சாரா? :-) \"

ஆவி அண்ணாச்சிக்கு கொலஸ்ட்ரால் ரொம்ப கூடி போச்சாமா, அவருக்கு கொடுக்கபட்ட அறியுரைகளை அவரு பின்னூட்டம் மூலமா எல்லாருக்கும் சொல்றாறாமா, வேற ஒன்னுமில்லீங்க நாட்டாம!

Divya said...

\" மு.கார்த்திகேயன் said...
கலக்கலா ஆரம்பிக்குதே தொடர்..வாழ்த்துக்கள் திவ்யா.. இந்த தொடரை மிஸ் பண்ணாம படிக்கிறேன்\"

கார்த்திக் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, தொடரை மிஸ் பண்ணாமல் தொடர்ந்து படிக்கவும்.

நாமக்கல் சிபி said...

அடுத்த தொடரா?

வாழ்த்துக்கள்!!!

சரி... மீதி ரெண்டு பேர்ட சொல்லிட்டீங்களா?

Divya said...

\" வெட்டிப்பயல் said...
அடுத்த தொடரா?

வாழ்த்துக்கள்!!!

சரி... மீதி ரெண்டு பேர்ட சொல்லிட்டீங்களா? \"

வாழ்த்துக்களுக்கு நன்றி வெட்டி,

மூன்று பேர்டயும் சொல்லிட்டேன் வெட்டி, போட்டு பார்கறீங்களாக்கும்????

Boston Bala said...

தூள்.

நாமக்கல் சிபி said...

//மூன்று பேர்டயும் சொல்லிட்டேன் வெட்டி, போட்டு பார்கறீங்களாக்கும்????//

நான் எதுக்குங்க போட்டு வாங்கனும்? நம்ம நாட்டாமை கொடுத்த க்ளூவை புரிஞ்சிக்கிற அளவுக்கு கூடவா புத்தியில்லை ;)

ஆவி.. நீ ரொம்ப நல்ல ஆவியா இருக்க... வெரி குட் :-)

Santhosh said...

அகா திவ்யா அடுத்த தொடரா கலக்குங்க.. துவக்கமே குறும்பா ஆரம்பிச்சி இருக்கு போக போக என்னவெல்லாம் குறும்பு நீங்க செஞ்சிங்கன்னு பாக்கலாம் :))..

Divya said...

\" Boston Bala said...
தூள்.
\"

முதன் முறையாக என் பதிவிற்க்கு வந்தமைக்கு நன்றி பாலா.

Divya said...

\" வெட்டிப்பயல் said...
//மூன்று பேர்டயும் சொல்லிட்டேன் வெட்டி, போட்டு பார்கறீங்களாக்கும்????//

நான் எதுக்குங்க போட்டு வாங்கனும்? நம்ம நாட்டாமை கொடுத்த க்ளூவை புரிஞ்சிக்கிற அளவுக்கு கூடவா புத்தியில்லை ;)

ஆவி.. நீ ரொம்ப நல்ல ஆவியா இருக்க... வெரி குட் :-)\"

வெட்டி நீங்க 'அதிபுத்திசாலி'

Divya said...

\"சந்தோஷ் said...
அகா திவ்யா அடுத்த தொடரா கலக்குங்க.. துவக்கமே குறும்பா ஆரம்பிச்சி இருக்கு போக போக என்னவெல்லாம் குறும்பு நீங்க செஞ்சிங்கன்னு பாக்கலாம் :))..\"

சந்தோஷ், என்னோட குறும்பு இல்லீங்க, முப்பெருந்தேவிகளின் குறும்பு!! வம்புல மாட்டி விட்டுடாதீங்க.

Anonymous said...

//ஆவி அண்ணாச்சிக்கு கொலஸ்ட்ரால் ரொம்ப கூடி போச்சாமா,//

அது யாருப்பா? ஆவி அண்ணனுக்கு கொயுப்புன்னு சொல்லுறது?

சும்மா பேஜாராகிடும் சொல்லிட்டேன்!
அக்காங்க்!

கண்ணம்மா பேட்டையிலிருந்து
ஆவி அம்மணி!

Anonymous said...

//ஆவி.. நீ ரொம்ப நல்ல ஆவியா இருக்க... வெரி குட் //

அதான பார்த்தேன்! வெட்டிப் பயலார் எங்க ஊர்க்காரங்ககிட்ட தகராறு வெச்சிக்க மாட்டாரே!

Syam said...

//முப்பெருந்தேவிகளின் குறும்பு!! வம்புல மாட்டி விட்டுடாதீங்க. //

சரி எல்லோரும் நம்பிட்டோம் :-)

Anonymous said...

//ரம்யா, பவானி, ஷீத்தல் மூவரும்.
// nalla per selection..moonru perum en college la irundhaaanga!

//எப்போதும் பார்க்க அப்பாவிகளாக முகத்தை வைத்துக்கொள்ளும் இவர்கள் மூவரும் , உண்மையில் திமிரு பிடித்த லூட்டி அடிக்கும் வாலு பெண்கள்//

neenga solratha paartha pasanga ellam nijama appavi ponnunga irukkaanga endru thappa nenaithu kolla pornaga!!


part 2 eppo?

Divya said...

\"Syam said...
//முப்பெருந்தேவிகளின் குறும்பு!! வம்புல மாட்டி விட்டுடாதீங்க. //

சரி எல்லோரும் நம்பிட்டோம் :-) \"

திவ்யாவை நம்பினோர் கைவிடப்படார்!!

Priya said...

கலக்கலா ஆரம்பிச்சிருக்கு திவ்யா.

//மூவரில் ஒருவர் கூட 'காதல் வலையில்' இதுவரை சிக்காததிற்க்கு காரணம்........//
இந்த காரணங்கள் சூப்பர். எல்லா பொண்ணுங்களும் இப்படி விவரமா இருந்தா ப்ரச்சனையே இல்ல.

ஆனா இவங்களும் கவுந்துடுவாங்கனு எழுதிடாடிங்க.

Santhosh said...

//திவ்யாவை நம்பினோர் கைவிடப்படார்!!//
யப்பாஆஆஆஆஆஆஆ...

Divya said...

\" Priya said...
கலக்கலா ஆரம்பிச்சிருக்கு திவ்யா.

//மூவரில் ஒருவர் கூட 'காதல் வலையில்' இதுவரை சிக்காததிற்க்கு காரணம்........//
இந்த காரணங்கள் சூப்பர். எல்லா பொண்ணுங்களும் இப்படி விவரமா இருந்தா ப்ரச்சனையே இல்ல.

ஆனா இவங்களும் கவுந்துடுவாங்கனு எழுதிடாடிங்க. \"

இப்போ எல்லா பொண்ணுங்களும் விவரம் தான் ப்ரியா. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

Divya said...

|"சந்தோஷ் said...
//திவ்யாவை நம்பினோர் கைவிடப்படார்!!//
யப்பாஆஆஆஆஆஆஆ... /"

என்ன சவுண்டெல்லாம் விடுறீங்க சந்தோஷ்!

நாமக்கல் சிபி said...

//ஆவி அம்மணி said...

//ஆவி.. நீ ரொம்ப நல்ல ஆவியா இருக்க... வெரி குட் //

அதான பார்த்தேன்! வெட்டிப் பயலார் எங்க ஊர்க்காரங்ககிட்ட தகராறு வெச்சிக்க மாட்டாரே! //

ஆவி அம்மனி நீ அண்ணாச்சு அளவுக்கு இல்லை. அவர் எவ்வளவி விளக்கமா பின்னூட்டம் மட்டுறுத்தல பத்தி பதிவு போடறாரு... நீ இன்னா பண்ணற???

Divya said...

\" Divya said...
\"சந்தோஷ் said...
அகா திவ்யா அடுத்த தொடரா கலக்குங்க.. துவக்கமே குறும்பா ஆரம்பிச்சி இருக்கு போக போக என்னவெல்லாம் குறும்பு நீங்க செஞ்சிங்கன்னு பாக்கலாம் :))..\"

சந்தோஷ், என்னோட குறும்பு இல்லீங்க, முப்பெருந்தேவிகளின் குறும்பு!! வம்புல மாட்டி விட்டுடாதீங்க.

11:30 AM


ஆவி அம்மணி said...
//ஆவி அண்ணாச்சிக்கு கொலஸ்ட்ரால் ரொம்ப கூடி போச்சாமா,//

அது யாருப்பா? ஆவி அண்ணனுக்கு கொயுப்புன்னு சொல்லுறது?

சும்மா பேஜாராகிடும் சொல்லிட்டேன்!
அக்காங்க்!

கண்ணம்மா பேட்டையிலிருந்து
ஆவி அம்மணி! \"

ஆவி அம்மணி, டென்ஷன் ஆகாதீங்கோ, எதுக்கும் உங்க ரெத்த கொதிப்பை சரி பார்த்துக்கோங்க.

Divya said...

ஆவிகள் அடிக்கிற லூட்டில நமக்கு நிறைய பின்னூட்டம் வருது,
ஹையா ஜாலி!!!

லதா said...

// மூவரும் பள்ளியிலிருந்தே ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். மூவருக்கும் ஒரே கல்லூரியில், ஒரே பாடப்பிரிவில் இடம் கிடைத்தது அவர்கள் அதிர்ஷடமே.
//

காரணம் பள்ளி இறுதித் தேர்வில் மூவரும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து தேர்வு எழுதியதுதான் :-)))

Divya said...

\"லதா said...
// மூவரும் பள்ளியிலிருந்தே ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். மூவருக்கும் ஒரே கல்லூரியில், ஒரே பாடப்பிரிவில் இடம் கிடைத்தது அவர்கள் அதிர்ஷடமே.
//
\
லதா வருகைக்கு நன்றி!

காரணம் பள்ளி இறுதித் தேர்வில் மூவரும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து தேர்வு எழுதியதுதான் :-))) \"

லதா அனுபவம் பேசுகிறதோ????

Anonymous said...

haha semma udaar writing doi
enna daan galaatunnu paarpoomae :-

Anonymous said...

Present Mam...

Anonymous said...

கல்வியா? செல்வமா? வீரமா?
மூன்றும் ஒன்று சேர்ந்திருக்கோ?
அப்பன்னா நீங்க நாரதரா திவ்யா?
தொடர்கதை தூள்!
அடுத்த episode எப்ப?

Anonymous said...

அருமை திவ்யா!

கடந்த கதையைத்தான் டக்குன்னு முடிச்சிட்டீங்க. இந்த கதையாவது ஒரு 7-8 தொடரா வருமா?

உங்களோட முதல் காரணத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனா இங்க பலபேர் அப்படி செஞ்சவங்கதான் ;-)

ஆவி அண்ணாச்சி said...

//ஆவிகள் அடிக்கிற லூட்டில நமக்கு நிறைய பின்னூட்டம் வருது,
ஹையா ஜாலி!!!
//

கமிஷன் கரெக்டா வந்துடணும்! சொல்லிட்டேன்!

Adiya said...

Charlies Angels illa Three Roses maathiri oru thodara.. kalakuinga mm

waiting for the next part :)

jollu ellam illa.. etho kathai padikum arvam thaan..

Divya said...

\" Kittu said...
haha semma udaar writing doi
enna daan galaatunnu paarpoomae :- \"

ஹாய் கிட்டு, பின்னூட்டத்திற்க்கு நன்றி, தொடர்ந்து கலட்டாவை கவனிக்கவும்!

Divya said...

\" பிரியமுடன் பிரேம் said...
கல்வியா? செல்வமா? வீரமா?
மூன்றும் ஒன்று சேர்ந்திருக்கோ?
அப்பன்னா நீங்க நாரதரா திவ்யா?
தொடர்கதை தூள்!
அடுத்த episode எப்ப? \"

ஐயோ நான் நாரதர் எல்லாம் இல்லீங்க பிரேம், அடுத்த episode விரைவில். வருகைக்கு நன்றி பிரேம்.

Divya said...

\"ஜி said...
அருமை திவ்யா!\"

நன்றி ஜி

\"கடந்த கதையைத்தான் டக்குன்னு முடிச்சிட்டீங்க. இந்த கதையாவது ஒரு 7-8 தொடரா வருமா?\"

இந்த கதை அவ்வளவு episode வந்தாலும் வரலாம்.

\"உங்களோட முதல் காரணத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனா இங்க பலபேர் அப்படி செஞ்சவங்கதான் ;-) \"

அது என்னோட முதல் காரணம் இல்லீங்க, கதையில் வரும் முப்பெருந்தேவிகளின் கருத்து.

Divya said...

\" ஆவி அண்ணாச்சி said...
//ஆவிகள் அடிக்கிற லூட்டில நமக்கு நிறைய பின்னூட்டம் வருது,
ஹையா ஜாலி!!!
//

கமிஷன் கரெக்டா வந்துடணும்! சொல்லிட்டேன்! \"

அண்ணாச்சி , கமிஷன் கரெக்டா வந்திடும், கவலையேபடாதீங்க.

Anonymous said...

திவ்யா.
அழகா ஆரம்பித்து இருக்கீங்க, நன்றாக கதையை தொடர வாழ்த்துகள்.

tamizhppiriyan said...

உங்க பதிவுக்கு இது தான் முதல் விசிட்..நல்லா எழுதீறங்க..
தொட்ர்ந்து எழுதவும்.! வாழ்த்துக்கள்

Divya said...

\"அகில் பூங்குன்றன் said...
திவ்யா.
அழகா ஆரம்பித்து இருக்கீங்க, நன்றாக கதையை தொடர வாழ்த்துகள்.\"

வாழ்த்துக்களுக்கு நன்றி அகில்.

Divya said...

\"தமிழ்ப்பிரியன் said...
உங்க பதிவுக்கு இது தான் முதல் விசிட்..நல்லா எழுதீறங்க..
தொட்ர்ந்து எழுதவும்.! வாழ்த்துக்கள் \"

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

வாழ்த்துகள் கூறி ஊக்கபடுத்தியமைக்கு மிக்க நன்றி.

நாமக்கல் சிபி said...

//கமிஷன் கரெக்டா வந்துடணும்! சொல்லிட்டேன்! \"

அண்ணாச்சி , கமிஷன் கரெக்டா வந்திடும், கவலையேபடாதீங்க//

இது வேற நடக்குதா இங்கே?

நாமக்கல் சிபி said...

அடுத்த பகுதி எப்போ?

அப்படியே என்னோட தொடரையும் படிச்சி பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க!

Divya said...

\" நாமக்கல் சிபி said...
அடுத்த பகுதி எப்போ?

அப்படியே என்னோட தொடரையும் படிச்சி பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க! \"

கண்டிப்பா அந்த தொடரை படிச்சுட்டு கருத்து சொல்றேன் சிபி,
[ link அனுப்பியதிற்க்கு நன்றி.]

Divya said...

\" சுந்தர் said...
Present Mam...
\"


வருகைக்கு நன்றி சுந்தர்.

[சுந்தர் லேட் attendence க்கு லேட்டா தான் ரெஸ்பாண்ட் பண்ணுவோம்,

இனிமேல் லேட்டா வந்து attendence கொடுத்தா, கடைசி பெஞ்சில நிக்க வைச்சிட வேண்டியது தான்]

Anonymous said...

Divya.. super aa irukku. Idhu dhaan en first visit.

Indha moonu characterla yaaru neenga? ;)

Divya said...

\"Bindu said...
Divya.. super aa irukku. Idhu dhaan en first visit.

Indha moonu characterla yaaru neenga? ;) \"

Bindu, முதல் முறையாக என் பதிவிற்க்கு விஜயம் செய்திருக்கிறீர்கள், வருக! வருக!! வருக!!

பின்னூட்டமிட்டமைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!

மீண்டுன் என் பதிவிற்கு வருக! வருக!! வருக!!!

[ Bindu, கதையில் வரும் அந்த மூன்று பேருமே என் கற்பனை கதாபாத்திரங்களே!!!]

நாமக்கல் சிபி said...

//Bindu said...
Divya.. super aa irukku. Idhu dhaan en first visit.

Indha moonu characterla yaaru neenga? ;)
//

இது தெரியவில்லையா?

ரம்யாதான்.

:)

(பின் குறிப்பு : வதந்திகளை நம்பாதீர்)

goma said...

teen deviyaa[hn]
aaramgamey asaththal

goma said...

thodarungal naangal ungalaith thodarkiroom

Anonymous said...

அற்புதமான படைப்பு.

வாழ்த்துக்கள் திவ்யா.

Divya said...

\\ goma said...
teen deviyaa[hn]
aaramgamey asaththal\\

வருக்கைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி goma!!

Divya said...

\\ Bala said...
அற்புதமான படைப்பு.

வாழ்த்துக்கள் திவ்யா.\

வாங்க பாலா,
உங்கள் முதல் வருகைக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!

வாழ்த்துக்களுக்கு நன்றி பாலா!!