December 18, 2006

மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!




'பெண்களை கவர்வது எப்படி' என்ற பதிவிட எனக்கு தெரிந்த பெண்களிடம் கருத்துக்கள் சேகரிக்க இலகுவாகயிருந்தது [ சொந்த கருத்துக்களையும் ஆங்காங்கே கலந்துவிடவும் வசதியாக இருந்தது!!] ஆனால் ' மனைவியை கவர்வது எப்படி' என்ற பதிவிட மணமான பெண்களிடம் கருத்துக்கள் கேட்டு விஷயத்தை வாங்க கொஞ்சம் சிரமமாகயிருந்தது. நான் துலாவி துலாவி கேள்வி கேட்டால் ' என்ன கல்யாண ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.


அதனால் நைசாக பேசி, நாசூக்காக நான் கேட்டு தெரிந்துக் கொண்ட கருத்துக்களின் அடிப்படையில், மனைவியை கவர சில டிப்ஸ்................

டிப்ஸ் -1:
ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,
அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:


தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.


மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
வேலைக்கு செல்லும் மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:
பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.




[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:
மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன், நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:
பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.



தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:
உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.



மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது ,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான் என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின் பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும் நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல் போகுமா???

உங்கள் மணவாழ்வு இனிக்க என் வாழ்த்துக்கள்!!!!

156 comments:

Anonymous said...

ஆரம்பிச்சுட்டாங்கயா! ஆரம்பிச்சுட்டாங்க...

Anonymous said...

அடேங்கப்பா. உங்களுக்கு ஒரு PhD கொடுத்துடலாம் from சர்வே-சன் University.

Anonymous said...

உண்மையாவே இது அவசியமான பதிவு.முந்தைய பெண்களை கவருவது எப்படி யை கணவரை படிக்க சொன்னால் எனக்கு ஆபத்து ..இந்த பதிவை படிக்க சொல்கிறேன்.
நன்றி திவ்யா..
[கல்யாணம் ஆன பெண்களின் சார்பில்.]

Anonymous said...

போட்டோ'ஸ் எல்லாம் ஸுப்பரா இருக்குங்க.:) போன பதிவில எல்லோரும் போட்டோ நல்லா இருக்குன்னு சொன்ன மாதிரி தான் இதுவும். வேறெதும் நினைச்சிக்காதிங்க.
:))

said...

திவ்யா போட்டோ இருக்கு. முதல் வருகை என்னுது. அப்படியே ரசிக கண்மணிகள் வந்து மொய்ப்பாங்க பாருங்க.

ஒன்னுக்கே வழியக் காணோம், இதுல எனக்கு சம்பந்தம் இல்லாத இடத்துல நான் எதுக்கு கமெண்ட் போடறேன்?

said...

மங்கயர் மலர் மாதிரி super aa இருக்கு

எல்லாம் very valid point.. u had done enough survey to capture this..

மங்கயர் திலகத்திர்கு N வாழ்துக்கள்

Anonymous said...

kalakareenga divya...nalla niraya tips thareenga, nethu than parthen adhukulla adutha post..sema fast ma..

eppadiyo pengal n aangal iruvarukkum thevaiyana pala vishayangala thandha ungalukku oru "O" podaren..

said...

\"Collapse comments


ஜி said...
ஆரம்பிச்சுட்டாங்கயா! ஆரம்பிச்சுட்டாங்க... \"

வாங்க ஜி,
ஆரம்பிச்சாசுங்க !
ஆரம்பிச்சாச்சு....

said...

\" SurveySan said...
அடேங்கப்பா. உங்களுக்கு ஒரு PhD கொடுத்துடலாம் from சர்வே-சன் University\"

ஆஹா, சர்வேசன்.....உங்கள் University யின் PhD பட்டதிற்கு நன்றி, நன்றி!!

said...

\"லட்சுமி said...
உண்மையாவே இது அவசியமான பதிவு.முந்தைய பெண்களை கவருவது எப்படி யை கணவரை படிக்க சொன்னால் எனக்கு ஆபத்து ..இந்த பதிவை படிக்க சொல்கிறேன்.
நன்றி திவ்யா..
[கல்யாணம் ஆன பெண்களின் சார்பில்.] \"

லட்சுமி, ரொம்ப உஷாராகத்தான் இருக்கிறீங்க....இந்த பதிவை உங்கள் கணவரிடம் காட்டுங்கள், உங்கள் மணவாழ்வு இனிக்கட்டும்!! வருகைக்கு நன்றி லட்சுமி!!

said...

\"Anonymous said...
போட்டோ'ஸ் எல்லாம் ஸுப்பரா இருக்குங்க.:) போன பதிவில எல்லோரும் போட்டோ நல்லா இருக்குன்னு சொன்ன மாதிரி தான் இதுவும். வேறெதும் நினைச்சிக்காதிங்க.
:)) \"

அனானி, உங்கள் வருகைக்கு நன்றி, போட்டோவை பாராட்டியமைக்கு மிக்க நன்றி, [ நிச்சயமா வேறெதும் தப்பாவே நினைக்கலீங்க]

said...

என்னாங்க திவ்யா
நல்லாதேன் சொல்லி இருக்கீங்க ;)))

உங்க ரவுசு தாங்கலையே !! ம்ம்ம் ஆம்பிளைகளுக்கு ஒரே teachingaa இருக்கு !! இதுக்கு ஏதாச்சும் பண்ணனுமே :))))

Anonymous said...

இதத்தான் அடிபிறழாம பத்து வருசமா செஞ்சி...இப்ப வீட்ல சுத்தி சுத்தி வந்தீக...ன்னு பாடாத கொறயா லவ்வோ லவ்வுன்னு வாழ்ந்துட்டு இருக்கேன்....

ஹி..ஹி...மக்களே புரிஞ்சிக்குங்க...ஒரே வாய்ப்பு...ஒரே வாழ்க்கை....சந்தோஷம் உங்களிடம்தான் இருக்கிறது..... வெளியே தேடாதீர்கள்....

said...

\" Udhayakumar said...
திவ்யா போட்டோ இருக்கு. முதல் வருகை என்னுது. அப்படியே ரசிக கண்மணிகள் வந்து மொய்ப்பாங்க பாருங்க.

ஒன்னுக்கே வழியக் காணோம், இதுல எனக்கு சம்பந்தம் இல்லாத இடத்துல நான் எதுக்கு கமெண்ட் போடறேன்? \"

உதய் உங்கள் வருகைக்கு நன்றி!
சம்மந்தமில்லாமலா பதிவு படிச்சீங்க.....சும்மா வெட்கபடாம சொல்லுங்க உதய், எதிர்காலத்தில் உதவும்னு தானே ஆர்வமா படீச்சீங்க????

said...

\"Adiya said...
மங்கயர் மலர் மாதிரி super aa இருக்கு

எல்லாம் very valid point.. u had done enough survey to capture this..

மங்கயர் திலகத்திர்கு N வாழ்துக்கள் \"

Adiya, நீங்க மங்கையர் மலர் வாசகரா???
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி Adiya.
[ yea Adiya did an enough survey to post this]

said...

\"one among u said...
kalakareenga divya...nalla niraya tips thareenga, nethu than parthen adhukulla adutha post..sema fast ma..

eppadiyo pengal n aangal iruvarukkum thevaiyana pala vishayangala thandha ungalukku oru "O" podaren..\"

one among u, உங்கள் வருகைக்கும் , பாராட்டுக்களுக்கும் நன்றி!

சீக்கரம் இந்த பதிவு போட சொல்லி நண்பர்கள் விருப்பியதால் உடனே இந்த பதிவை போட்டேன் one among u!!

Anonymous said...

wow!! diva , its a excellent work!!u have given the true feelings and needs of all women!!
i feel this is the perfect answer for the most difficult question
"what women want"!!

said...

//உதய், எதிர்காலத்தில் உதவும்னு தானே ஆர்வமா படீச்சீங்க???? //

திவ்யா, இப்படியெல்ல்லாம் சபையில மானத்தை வாங்க கூடாது. நான் இந்த பதிவை படிக்கவே இல்லை. போட்டோ மட்டுந்தான் பார்த்தேன். ஒரு போட்டோ ஆய்ரம் வார்த்தைகளுக்கு சமம் , இல்லையா?

said...

ஹாய் திவி,
முக்கியமான ஒண்ணு விட்டுடீங்களே....
அதாவது, கணவன் கூட பிறந்தவங்க தன் மனைவிய பலமான வார்த்தைகளால் தாக்கறத அனுமதிக்கக் கூடாது.

Anonymous said...

கலாசறீங்க..திவ்யா!!
படங்களும் சூப்பர்!

said...

ஹாய் திவ்யா!!!
நல்ல போஸ்ட்... என்ன எல்லா ஆம்பளைங்களும் உங்களோட ப்ளாக திரும்பி பார்க்க வைக்கர்துனு முடிவு பண்ணிட்டீங்க.. கலக்குங்க...
இதே மாதிரி ஆம்பிளைங்களுக்கு பிடித்தது என்ன!! எப்படி கவருவதுனு எழுதுங்க...
நான் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பேன்

said...

என்னது இது வர்ற போறவருக்குக் கொடுக்குற எச்சரிக்கை மாதிரி இல்ல தெரியுது?!!!!:)))

said...

\"aparnaa said...
wow!! diva , its a excellent work!!u have given the true feelings and needs of all women!!
i feel this is the perfect answer for the most difficult question
"what women want"!! \"

aparnaa, உங்கள் பாராட்டுக்கள் எனக்கு உற்ச்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது, நன்றி!

I agree with you Aparnaa, its a very difficult question ' what women want'........

said...

\" ஜொள்ளுப்பாண்டி said...
என்னாங்க திவ்யா
நல்லாதேன் சொல்லி இருக்கீங்க ;)))

உங்க ரவுசு தாங்கலையே !! ம்ம்ம் ஆம்பிளைகளுக்கு ஒரே teachingaa இருக்கு !! இதுக்கு ஏதாச்சும் பண்ணனுமே :))))
\"

வருக்கைக்கு நன்றி ஜொள்ளுப்பாண்டி,

பதிலுக்கு நீங்க ஏதும் ரவுசு விட போறீங்களா??

said...

\" பங்காளி... said...
இதத்தான் அடிபிறழாம பத்து வருசமா செஞ்சி...இப்ப வீட்ல சுத்தி சுத்தி வந்தீக...ன்னு பாடாத கொறயா லவ்வோ லவ்வுன்னு வாழ்ந்துட்டு இருக்கேன்....

ஹி..ஹி...மக்களே புரிஞ்சிக்குங்க...ஒரே வாய்ப்பு...ஒரே வாழ்க்கை....சந்தோஷம் உங்களிடம்தான் இருக்கிறது..... வெளியே தேடாதீர்கள்....\"

பங்காளி உங்கள் இனிமையான மணவாழ்வு இனிதே தொடர வாழ்த்துக்கள்!

உங்கள் அனுபவபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி!!

said...

\" Udhayakumar said...
//உதய், எதிர்காலத்தில் உதவும்னு தானே ஆர்வமா படீச்சீங்க???? //

திவ்யா, இப்படியெல்ல்லாம் சபையில மானத்தை வாங்க கூடாது. நான் இந்த பதிவை படிக்கவே இல்லை. போட்டோ மட்டுந்தான் பார்த்தேன். ஒரு போட்டோ ஆய்ரம் வார்த்தைகளுக்கு சமம் , இல்லையா?\"

பதிவில் போட்டோ மட்டும் தான் பார்த்தீங்களா.........அப்படியே நம்பிட்டோம் உதய்!!

said...

\"sumathi said...
ஹாய் திவி,
முக்கியமான ஒண்ணு விட்டுடீங்களே....
அதாவது, கணவன் கூட பிறந்தவங்க தன் மனைவிய பலமான வார்த்தைகளால் தாக்கறத அனுமதிக்கக் கூடாது.\"

ஆஹா சுமதி, அனுபவ கருத்தா??
இந்த கருத்தை நான் கேட்டவங்க யாருமே சொல்லலீங்க, இப்போ உங்க பின்னூட்டம் மூலமா தெரியவருகிறது,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சுமதி!!

said...

\"சந்தனமுல்லை said...
கலாசறீங்க..திவ்யா!!
படங்களும் சூப்பர்!
\"

சந்தனமுல்லை, உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி!!

[படங்களை குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறீர்கள்.....உற்சாகமளிக்கிறது உங்கள் பாராட்டு! நன்றி]

said...

இதெல்லாம் படித்துவிட்டு குடும்பம் நடத்த ஆரம்பித்தால் அவ்வளவு தான்.என்ன மேட்டருக்கு என்ன பேசுனும் என்று எழுதிவைத்து பேசினால் பெண்கள் வெகு சீக்கிரம் கண்டுபிடித்துவிடுவார்கள்.அப்புறம் எங்கிருந்து படித்தது என்று உங்கள் வலைப்பூவைத்தான் காட்டவேண்டும்.ஜாக்கிரதை!!:-))
அவரவர்கள் தங்கள் குணம் படி நடந்தால் தான் அவர்களின் உண்மையான குணம் வெளிப்படும்.
இது எனது மணவாழ்கையில் கண்டுகொண்ட அனுபவம்.

said...

\" dubukudisciple said...
ஹாய் திவ்யா!!!
நல்ல போஸ்ட்... என்ன எல்லா ஆம்பளைங்களும் உங்களோட ப்ளாக திரும்பி பார்க்க வைக்கர்துனு முடிவு பண்ணிட்டீங்க.. கலக்குங்க...
இதே மாதிரி ஆம்பிளைங்களுக்கு பிடித்தது என்ன!! எப்படி கவருவதுனு எழுதுங்க...
நான் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பேன் \"

வாங்க டுபுக்கிடிஸைப்பிள், வருகைக்கு நன்றி!

ஆண்களை என் பதிவிற்கு வரவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவை நான் எழுதவில்லை டுபுக்கு டிஸைப்பிள்.

ஆண்களுக்கு பெண்களிடம் என்ன பிடிக்கும் என பதிவிட முயற்ச்சிக்கிறேன் .

said...

\" தேவ் | Dev said...
என்னது இது வர்ற போறவருக்குக் கொடுக்குற எச்சரிக்கை மாதிரி இல்ல தெரியுது?!!!!:)))
\"

அண்ணா டபகென்று பாயிண்டை பிடித்து விட்டீர்களே!!!!!!!

வருகைக்கு நன்றி தேவ்!

said...

\" வடுவூர் குமார் said...
இதெல்லாம் படித்துவிட்டு குடும்பம் நடத்த ஆரம்பித்தால் அவ்வளவு தான்.என்ன மேட்டருக்கு என்ன பேசுனும் என்று எழுதிவைத்து பேசினால் பெண்கள் வெகு சீக்கிரம் கண்டுபிடித்துவிடுவார்கள்.அப்புறம் எங்கிருந்து படித்தது என்று உங்கள் வலைப்பூவைத்தான் காட்டவேண்டும்.ஜாக்கிரதை!!:-))
அவரவர்கள் தங்கள் குணம் படி நடந்தால் தான் அவர்களின் உண்மையான குணம் வெளிப்படும்.
இது எனது மணவாழ்கையில் கண்டுகொண்ட அனுபவம்\"

வடுவூர் குமார், தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

உங்கள் தனித்துவத்தை மாற்றிக்கொள்ளவோ, இழந்துவிடவோ தேவையில்லை, இந்த பதிவில் உள்ள கருத்துக்களை மனதில் கொண்டு , அதன் அடிப்படையில் , அவரவர் குணத்தின் படி, வாழ்க்கை முறையின்படி திருமணவாழ்வை நடத்தி செல்வது மணவாழ்க்கையை இனிமையானதாக ஆக்கும்.

Anonymous said...

உங்களை மாதிரி அறிவுரை சொல்ல ஆட்கள் இருந்தால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாகும்.

அறிவுரையை அள்ளித் தந்த திவ்யாவிற்கு நன்றிகள் பல.

Anonymous said...

திவ்யா! கலக்குறீங்க.. ஒவ்வொன்றும் அருமையான டிப்ஸ்.. வாழ்த்துக்கள்!!!

said...

கொஞ்சம் வெவரமா தலைப்பை போட வேண்டுயது தானே!!! நான் குழம்பி விட்டேன்...

"(உங்கள்) மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!"

Anonymous said...

ரொம்ப நன்றி திவ்யா. நல்லா எழுதியிருக்கீங்க. நான் பதிவை மட்டும் தான் படிச்சேன். நீங்கள் போட்ட சினேகா,பூமிகா,நயன் தாரா, ரீமாசென்,ஸ்ரெயா படம் எல்லாம் நான் பார்க்கவேயில்லை. இந்த வயசிலேயே விவரமாத்தான் இருக்கீங்க. ம்ம்ம். எனக்கு 16 கழுத வயசாகியும் இன்னும் இந்த டெக்னிக் எல்லாம் தெரியாமத்தான் போச்சு. சரி இந்த முறை உங்க அட்வைஸ் படி நடந்து என்ன பலன் கிடச்சுது அப்படின்னு ஊருக்கு போய் வந்து சொல்றேன்.

said...

இவ்வளவு செய்யணுமா?
ரெம்ப கஷ்டம்டா சாமி..
இருங்க இருங்க எங்க பக்கத்துலேந்து பதிலடி வராமலா போயிடும்..

:)

said...

ஆஹா.. திவ்யா.. இப்படி எல்லாம் போட்டு பசங்க மனசை கரைச்சி 200 பின்னூட்டமாவது வாங்கிடலாம்னு முடிவு பண்ணியாச்சோ..

இன்னும் படிக்கல..படிச்சிட்டு இன்னொரு பின்னூட்டம்ங்க

said...

என்ன திவ்யா இப்படி ஆண்களுக்கு social service லாம் பண்றிங்க.
எல்லாமே சூப்பரோ சூப்பர்ங்க.
வீட்டு வேலைல உதவி பண்றது, முக்கியமான நாட்களை ஞாபகம் வச்சி பரிசு குடுக்கறது - இதெல்லாம் போன ஜெனரேஷன்ல நிறைய ஆண்கள் பண்ண மாட்டாங்க.. இப்ப கொஞ்சம் மாறி இருக்காங்கனு நினைக்கறேன்..

(ஆமா, நீங்க யாருக்கோ சொல்லனும்னு நினைச்சி, நேர சொல்லாம இப்படி போஸ்ட்ல போட்டு தாக்கறிங்களோ?)

said...

அட அடா.. சூப்பர் :)
தீபா போட்டோவ போட்டு புண்ணியம் தேடிக்கிட்டீங்க :)

உங்க டிப்ஸ எதிர்காலத்துல யூஸ் பண்ணிக்கிறேன் :)

said...

ஆகா ஆகா ஆகா கண்ணுக்கு குளிர்ச்சியா போஸ்ட் போட்டு இருக்கீங்க...நானும் 5 times பார்த்துட்டேன்...படிக்கவே முடியல...சரி இன்னும் கொஞ்ச நேரம் பிகருங்கள ரசிச்சிட்டு அப்புறமா படிக்கறேன்...:-)

said...

அதிலும் நயன் தாரா போட்டோ போட்ட திவ்யாக்கு ஒரு ஓ போட்டுக்கறேன் :-)

said...

\"ஸயீத் said...
உங்களை மாதிரி அறிவுரை சொல்ல ஆட்கள் இருந்தால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாகும்.

அறிவுரையை அள்ளித் தந்த திவ்யாவிற்கு நன்றிகள் பல.\''

ஸயீத், தங்கள் வருகைக்கும் , பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி!!

உங்கள் மணவாழ்க்கை இனிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

said...

\"கத்துக்குட்டி said...
திவ்யா! கலக்குறீங்க.. ஒவ்வொன்றும் அருமையான டிப்ஸ்.. வாழ்த்துக்கள்!!! \"

கத்துக்குட்டி, தங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி!!

Anonymous said...

நல்ல பயன்படும் பதிவு.வாழ்த்துக்கள்.ஆண்க்ள் மிகவும் பயன்படுத்த வேண்டிய வார்த்தை "சரி".முதலில் சரி சொல்லிவிட்டுப் பின்னர் அதில் என்ன சரியில்லை என்றுகூடச் சொல்லலாம்.உண்மையான மரியாதை அவசியம்.கோபம் வந்தால் முதலில் செய்யவேண்டியது வாயை இருக்கி மூடுவதுதான்.

said...

\" சீனு said...
கொஞ்சம் வெவரமா தலைப்பை போட வேண்டுயது தானே!!! நான் குழம்பி விட்டேன்...

"(உங்கள்) மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!" \"

ஆனாலும் நீங்க ரொம்ப ரொம்ப வெவரம்தான் சீனு!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!!

said...

\"padippavan said...
ரொம்ப நன்றி திவ்யா. நல்லா எழுதியிருக்கீங்க. நான் பதிவை மட்டும் தான் படிச்சேன். நீங்கள் போட்ட சினேகா,பூமிகா,நயன் தாரா, ரீமாசென்,ஸ்ரெயா படம் எல்லாம் நான் பார்க்கவேயில்லை. இந்த வயசிலேயே விவரமாத்தான் இருக்கீங்க. ம்ம்ம். எனக்கு 16 கழுத வயசாகியும் இன்னும் இந்த டெக்னிக் எல்லாம் தெரியாமத்தான் போச்சு. சரி இந்த முறை உங்க அட்வைஸ் படி நடந்து என்ன பலன் கிடச்சுது அப்படின்னு ஊருக்கு போய் வந்து சொல்றேன்.\"

படிப்பவன், நீங்க ஊருக்கு போவதற்கு முன் இந்த பதிவை எழுத வேண்டும் என்று முயற்ச்சித்து எழுதினேன்.
உங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை ஆனந்தமாக அனுபவியுங்கள்.
உங்கள் மணவாழ்வு தித்திக்க என் வாழ்த்துக்கள்!!!

said...

\" சிறில் அலெக்ஸ் said...
இவ்வளவு செய்யணுமா?
ரெம்ப கஷ்டம்டா சாமி..
இருங்க இருங்க எங்க பக்கத்துலேந்து பதிலடி வராமலா போயிடும்..

:) \"

சிறில் அலெக்ஸ்,
இதுவே கஷ்டம்னா எப்படி??

பதிலடியா??? பார்க்கலாம் யாரு பதிலடி கொடுக்கிறாங்கன்னு.

வருகைக்கு நன்றி அலெக்ஸ்!!

said...

\" மு.கார்த்திகேயன் said...
ஆஹா.. திவ்யா.. இப்படி எல்லாம் போட்டு பசங்க மனசை கரைச்சி 200 பின்னூட்டமாவது வாங்கிடலாம்னு முடிவு பண்ணியாச்சோ..

இன்னும் படிக்கல..படிச்சிட்டு இன்னொரு பின்னூட்டம்ங்க \"

என்னங்க கார்த்திக் பின்னூட்டம் வாங்க தான் இப்படி பதிவு போட்டேன்னு சொல்லிடீங்க?
எவ்வளவு சிரத்தை எடுத்து இந்த தகவல்களை சேகரித்து பதிவு போட்டேன்......இப்படி சொல்லிடீங்களே கார்த்திக்!

said...

\" Priya said...
என்ன திவ்யா இப்படி ஆண்களுக்கு social service லாம் பண்றிங்க.
எல்லாமே சூப்பரோ சூப்பர்ங்க.
வீட்டு வேலைல உதவி பண்றது, முக்கியமான நாட்களை ஞாபகம் வச்சி பரிசு குடுக்கறது - இதெல்லாம் போன ஜெனரேஷன்ல நிறைய ஆண்கள் பண்ண மாட்டாங்க.. இப்ப கொஞ்சம் மாறி இருக்காங்கனு நினைக்கறேன்..\"

ப்ரியா உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
இந்த பதிவு ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறு உதவி என் பதிவினை படிக்கும் நண்பர்களுக்கு!

இப்ப உள்ள ஜெனரேஷனில் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள் என்று தான் நானும் நினைக்கிறேன் ப்ரியா, இருந்தாலும் கோடு போட்டு சொல்லி கொடுத்திடுறது நல்லதில்லையா??

\"
'(ஆமா, நீங்க யாருக்கோ சொல்லனும்னு நினைச்சி, நேர சொல்லாம இப்படி போஸ்ட்ல போட்டு தாக்கறிங்களோ?) \"

ஆஹா, ஆஹா.....ப்ரியா இப்படி சபையில போட்டு ஒடைச்சுட்டீங்களே!
நேர சொல்றதுக்கெல்லாம் யாரும் இல்ல ப்ரியா, அப்படி சொல்ல வேண்டிய காலம் வரும் போது.....இந்த பதிவை வாசிக்க வைக்க வேண்டியது தான், எப்படி ஐடியா????

said...

\"Arunkumar said...
அட அடா.. சூப்பர் :)
தீபா போட்டோவ போட்டு புண்ணியம் தேடிக்கிட்டீங்க :)

உங்க டிப்ஸ எதிர்காலத்துல யூஸ் பண்ணிக்கிறேன் :) \"

அருண்குமார், உங்கள் வருகைக்கு நன்றி.
எதிர்காலத்தில் இந்த பதிவில் உள்ள டிப்ஸை மனதில் கொண்டு உங்கள் மனைவியின் மனதை கவர்ந்துவிட என் வாழ்த்துக்கள்!!

said...

\"Syam said...
ஆகா ஆகா ஆகா கண்ணுக்கு குளிர்ச்சியா போஸ்ட் போட்டு இருக்கீங்க...நானும் 5 times பார்த்துட்டேன்...படிக்கவே முடியல...சரி இன்னும் கொஞ்ச நேரம் பிகருங்கள ரசிச்சிட்டு அப்புறமா படிக்கறேன்...:-)\"

ஷ்யாம், வருக்கைக்கு நன்றி!
இன்னுமா ரசிச்சு முடிக்கல???

said...

\"Syam said...
அதிலும் நயன் தாரா போட்டோ போட்ட திவ்யாக்கு ஒரு ஓ போட்டுக்கறேன் :-) \"

ஓ போட்ட நாட்டாமைக்கு நன்றி! நன்றி!!

[ஷ்யாம்! ISF க்கு போட்டோ போட முடியல இந்த பதிவில்........உங்கள் 'I' யின் குடும்பபாங்கான படங்களே இல்லை, தேடி தேடி வெறுத்து போச்சு]

said...

\"Thamizhan said...
நல்ல பயன்படும் பதிவு.வாழ்த்துக்கள்.ஆண்க்ள் மிகவும் பயன்படுத்த வேண்டிய வார்த்தை "சரி".முதலில் சரி சொல்லிவிட்டுப் பின்னர் அதில் என்ன சரியில்லை என்றுகூடச் சொல்லலாம்.உண்மையான மரியாதை அவசியம்.கோபம் வந்தால் முதலில் செய்யவேண்டியது வாயை இருக்கி மூடுவதுதான்\"

தமிழன், தங்கள் வருகைக்கும், அனுபவபூர்வமான தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!!

மனைவிக்கு மரியாதை,
கோபத்தை கட்டுபடுத்துதல்
போன்றவற்றை அழகாக பின்னூட்டத்தில் சுட்டி காட்டியிருக்கிறீர்கள், நன்றி!!

said...

//உங்கள் 'I' யின் குடும்பபாங்கான படங்களே இல்லை, தேடி தேடி வெறுத்து போச்சு//

ஹி ஹி... "I" குடும்ப பாங்கா போஸ் குடுத்தா ISF கலைக்கபடும்னு எங்க தலைவி கிட்ட சொல்லி இருக்கோம் அதுனால தான் :-)

said...

சூப்பரா சொல்லி இருக்கீங்க திவ்யா...அதுவும் நிறைய homework பண்ணி இருப்பீங்க போல இந்த போஸ்ட் போட...really amazing work...

said...

இது எல்லாம் வேலை செய்யலனா...வீட்டுக்குள்ள போய் கதவ சாத்தி கவுண்டர் ஸ்டைல்ல மனைவிய நாலு சாத்து சாத்தினா சரியா போய்டும்.. (அதுதாங்க கால்ல விழுந்து ரெண்டு அடி வாங்கிட்டு வரது)
:-)

said...

//ஷ்யாம், வருக்கைக்கு நன்றி!//

என்னாது இது நான் என்ன புதுசாவா வரேன்...இல்ல இது விருந்தோம்பலா...ஒரு ஒரு தடவையும் வருக வருக சொல்றது... :-)

said...

கலக்குறீங்க போங்க...நல்லா எழுதியிருக்கீங்க..
ஹீ ஹீ அதோட..போட்டோவெல்லாம் சூப்பரா இருக்கு

said...

நாம பட்டு தெரிஞ்சிக்ன மேட்டர இப்பிடி அசால்டா குட்துக்னீங்களே..

மின்னாடியே இந்த மாறி யாராச்சும் நமக்கு சொல்லி குட்து இருந்தா.. ம்ம்...

டிஸ்கி: சமய சந்தர்ப்பம் பாத்து இந்த டிப்ஸ்களை பயன்படுத்தவும். பேக் ஃபயர் ஆயிடுச்சி அவ்ளோதான்... சொல்லிட்டேன்..


கூஜா தூக்கி நீயும்
தாஜா பண்ணா... தண்ணே தண்ணான்னே..
ராஜாவா ஆயிடுவே.... தண்ணே தண்ணான்னே..

said...

இலியானா, ஜெனிலியா, அனிஷ்கா, தாமண்ணா போட்டோக்களை போட்டு அடுத்த பதிவை பதியவும்...

இதெல்லாம் பார்த்து போர் அடிச்சி போச்சி ;)

(ஷ்ரியா போட்டோ இன்னும் அழகா எடுத்து போட்டிருக்கலாம்)

பதிவ பத்தி ஒண்ணுமே சொல்லலைனு கேக்கறீங்களா??? அதெல்லாம் நமக்கு இப்போ தேவையில்லை ;)

said...

\"Syam said...
//உங்கள் 'I' யின் குடும்பபாங்கான படங்களே இல்லை, தேடி தேடி வெறுத்து போச்சு//

ஹி ஹி... "I" குடும்ப பாங்கா போஸ் குடுத்தா ISF கலைக்கபடும்னு எங்க தலைவி கிட்ட சொல்லி இருக்கோம் அதுனால தான் :-)\
"

ISF காகதான் 'I' அப்படி போஸ் கொடுக்கிறாங்களா??
நல்ல தலைவி....!!!!

said...

\"Syam said...
சூப்பரா சொல்லி இருக்கீங்க திவ்யா...அதுவும் நிறைய homework பண்ணி இருப்பீங்க போல இந்த போஸ்ட் போட...really amazing work... \"

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ஷ்யாம்!!
நிறைய homework பண்ணியிருக்கிறேன்னு கரக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்க,last weekend இது தான் என் வேலை!!

உங்க தங்கமணி ஈமெயில் ID இருந்திருந்தா இன்னும் நிறைய டிப்ஸ் கலக்ட் பண்ணியிருப்பேன்!!!

said...

\"Dubukku said...
கலக்குறீங்க போங்க...நல்லா எழுதியிருக்கீங்க..
ஹீ ஹீ அதோட..போட்டோவெல்லாம் சூப்பரா இருக்கு \"

Dubukku முதல் முறையாக என் பதிவிற்கு வந்திருக்கிறீர்கள், நன்றி!

பாராட்டி பின்னூட்டம் போட்டதற்கு இன்னுமொரு நன்றி!!!

Dubukku, நான் முதன் முதலில் படித்த தமிழ் ப்ளாக் உங்க ப்ளாக் தான்,
Your blog is my first impression to start a blog on my own!!!

Anonymous said...

photo laam nalla irukku. intha maathiri wife vanthaa naan unga suggestiona kandippa follow panren!!

- Ananth

Anonymous said...

இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பது என்ன வென்றால் திவ்யாவே சொல்லிடுச்சு, நான் ஊருக்கு போவதால் எனக்கே எனக்காக அவசரமா போட்டதுன்னுட்டு. எதோ ஊருக்கு போக பாக்கி வேலையெல்லாம் முடிச்சி வெச்சுட்டு கொஞ்சம் லேட்டா எட்டி பார்த்தா அதுக்குள்ள இவ்வளவூ பேரு ஆட்டம் காட்டிட்டு போய்டானுக.

சும்மா ஆளாளுக்கு கலாய்ச்சீங்கன்னா அப்புறம் நான் ஆட்டோ அனுப்பிசுடுவேன். திவ்யாவோட ஃபோட்டா பாருங்கப்பூ. இந்த பச்ச புள்ளையை போய் இப்படி பேசாதாங்கப்பூ.

திவ்யாவுக்கு பதிலடி கொடுக்கிறேன் சொன்னவனுகளுக்கெல்லாம் 35 வயசுல தான் கல்யாணம் ஆகும். கல்யாணத்துக்கப்புறம் 2 மாசத்துல , அவிக மனைவிமாரு திருவிழாவில காணம போயிடுவாங்க.ஆமாம் சொல்லிப்புட்டேன்.

திவ்யா சீக்கிரமே ஒரு குட் பாய் ஃப்ரெண்டு ப்ராப்திரஸ்து

said...

\" அரை பிளேடு said...
நாம பட்டு தெரிஞ்சிக்ன மேட்டர இப்பிடி அசால்டா குட்துக்னீங்களே..

மின்னாடியே இந்த மாறி யாராச்சும் நமக்கு சொல்லி குட்து இருந்தா.. ம்ம்...

டிஸ்கி: சமய சந்தர்ப்பம் பாத்து இந்த டிப்ஸ்களை பயன்படுத்தவும். பேக் ஃபயர் ஆயிடுச்சி அவ்ளோதான்... சொல்லிட்டேன்..


கூஜா தூக்கி நீயும்
தாஜா பண்ணா... தண்ணே தண்ணான்னே..
ராஜாவா ஆயிடுவே.... தண்ணே தண்ணான்னே.. \"

அரை பிளேடு, உங்கள் வருகைக்கு நன்றி!

உங்கள் பேக்ஃபயர் அனுபவங்களினால் நீங்கள் கொடுத்துருக்கிற எச்சரிக்கைக்கு நன்றி பிளேடு

said...

\" வெட்டிப்பயல் said...
இலியானா, ஜெனிலியா, அனிஷ்கா, தாமண்ணா போட்டோக்களை போட்டு அடுத்த பதிவை பதியவும்...

இதெல்லாம் பார்த்து போர் அடிச்சி போச்சி ;)

(ஷ்ரியா போட்டோ இன்னும் அழகா எடுத்து போட்டிருக்கலாம்)

பதிவ பத்தி ஒண்ணுமே சொல்லலைனு கேக்கறீங்களா??? அதெல்லாம் நமக்கு இப்போ தேவையில்லை ;) \"


மடை திறந்த வெள்ளம் போல் தெலுங்கு பட கதாநாயகிகள் பெயரா அடிச்சு விடுறீங்க வெட்டி!!
ஷ்ரியா போட்டோ இந்த பதிவிற்கு போட பொருத்தமாக எனக்கு கிடைக்கவில்லை வெட்டி!

உங்களுக்கு 'தேவையான ' நேரத்தில் இந்த பதிவின் டிப்ஸை நினைவில் கொள்க!!

வருகைக்கு நன்றி வெட்டி!

said...

\"padippavan said...
இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பது என்ன வென்றால் திவ்யாவே சொல்லிடுச்சு, நான் ஊருக்கு போவதால் எனக்கே எனக்காக அவசரமா போட்டதுன்னுட்டு. எதோ ஊருக்கு போக பாக்கி வேலையெல்லாம் முடிச்சி வெச்சுட்டு கொஞ்சம் லேட்டா எட்டி பார்த்தா அதுக்குள்ள இவ்வளவூ பேரு ஆட்டம் காட்டிட்டு போய்டானுக.

சும்மா ஆளாளுக்கு கலாய்ச்சீங்கன்னா அப்புறம் நான் ஆட்டோ அனுப்பிசுடுவேன். திவ்யாவோட ஃபோட்டா பாருங்கப்பூ. இந்த பச்ச புள்ளையை போய் இப்படி பேசாதாங்கப்பூ.

திவ்யாவுக்கு பதிலடி கொடுக்கிறேன் சொன்னவனுகளுக்கெல்லாம் 35 வயசுல தான் கல்யாணம் ஆகும். கல்யாணத்துக்கப்புறம் 2 மாசத்துல , அவிக மனைவிமாரு திருவிழாவில காணம போயிடுவாங்க.ஆமாம் சொல்லிப்புட்டேன்.

திவ்யா சீக்கிரமே ஒரு குட் பாய் ஃப்ரெண்டு ப்ராப்திரஸ்து \"

அஹா! படிப்பவன் உங்கள் சப்போர்ட்டுக்கு ரொம்ப ரொமப நன்றிங்க!!

குட் பாய் ஃப்ரண்ட் வேனும்னு வாழ்த்தாதீங்க படிப்பவன், குட் 'கணவன் ' கிடைக்கட்டும் னு வாழ்த்துங்க, ஏன்னா....பாய் ஃப்ரண்டா இருக்கிறபோ எல்லாரும் 'குட்' ஆக தான் இருக்கிறாங்க.....அப்புறமாதானே சுயரூபமே தெரிகிறது!!!

Anonymous said...

சரி சரி. இந்த பதிவுல இருக்கிறதே அப்படியே அடி பிறழாம ஃபாலோ பண்ற குட் கணவன் சீக்கிரம் ஃப்ராப்திரஸ்து.

said...

//மடை திறந்த வெள்ளம் போல் தெலுங்கு பட கதாநாயகிகள் பெயரா அடிச்சு விடுறீங்க வெட்டி!!//

நான் சொன்னதெல்லாம் தமிழ் பட ஹீரோயின்ஸ் பேர்தான் :-)

இலியானா,தமண்ணா - கேடி
அனுஷ்கா - ரெண்டு
ஜெனி - பாய்ஸ், சச்சின், சென்னை காதல்

(தெலுகுலையும் நடிச்சிருக்காங்க ;))

Anonymous said...

பாய் ஃப்ரண்டா இருக்கிறபோ எல்லாரும் 'குட்' ஆக தான் இருக்கிறாங்க.....அப்புறமாதானே சுயரூபமே தெரிகிறது!!!

ஆகா! அடுத்தபதிவுக்கு தலைப்பு ரெடி

said...

\"padippavan said...
சரி சரி. இந்த பதிவுல இருக்கிறதே அப்படியே அடி பிறழாம ஃபாலோ பண்ற குட் கணவன் சீக்கிரம் ஃப்ராப்திரஸ்து. \"

இதை....இதைத்தான்.....எதிர்பார்க்கிறேன் நான்!
உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்!
நன்றி படிப்பவன்!!

said...

\" வெட்டிப்பயல் said...
//மடை திறந்த வெள்ளம் போல் தெலுங்கு பட கதாநாயகிகள் பெயரா அடிச்சு விடுறீங்க வெட்டி!!//

நான் சொன்னதெல்லாம் தமிழ் பட ஹீரோயின்ஸ் பேர்தான் :-)

இலியானா,தமண்ணா - கேடி
அனுஷ்கா - ரெண்டு
ஜெனி - பாய்ஸ், சச்சின், சென்னை காதல்

(தெலுகுலையும் நடிச்சிருக்காங்க ;))\"

வெட்டி, க்ளினா உங்க data base எல்லா details யும் இருக்கும் போலிருக்கு.
தெலுங்கு படங்களில் இந்த heroines popular அதனால் அப்படி சொன்னேன் வெட்டி!!

said...

\"padippavan said...
பாய் ஃப்ரண்டா இருக்கிறபோ எல்லாரும் 'குட்' ஆக தான் இருக்கிறாங்க.....அப்புறமாதானே சுயரூபமே தெரிகிறது!!!

ஆகா! அடுத்தபதிவுக்கு தலைப்பு ரெடி \"'
இப்படி கோடு போட்டு காட்டி அடுத்த பதிவு எழுத சுட்டி காட்டுறீங்களா படிப்பவன்???

Anonymous said...

இதை....இதைத்தான்.....எதிர்பார்க்கிறேன் நான்!
உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்

ஊருக்கு போறேன். அப்பா, அம்மா அட்ரஸ் கொடுத்தீங்கன்னா போய் உங்க அவசரத்த எடுத்துச் சொல்லி , கல்யாணத்துக்கு எற்பாடு பண்றேன். பாவம் பொம்பிளைபிள்ளை கல்யாணம் செஞ்சு வையுங்க அப்படின்னு எப்படி அப்பாகிட்ட கேக்கும். ஆம்பிள நானே எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கேன்.

said...

\"padippavan said...
இதை....இதைத்தான்.....எதிர்பார்க்கிறேன் நான்!
உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்

ஊருக்கு போறேன். அப்பா, அம்மா அட்ரஸ் கொடுத்தீங்கன்னா போய் உங்க அவசரத்த எடுத்துச் சொல்லி , கல்யாணத்துக்கு எற்பாடு பண்றேன். பாவம் பொம்பிளைபிள்ளை கல்யாணம் செஞ்சு வையுங்க அப்படின்னு எப்படி அப்பாகிட்ட கேக்கும். ஆம்பிள நானே எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கேன்\"

உங்கள் நல்ல மனசுக்கு தலைவணங்குகிறேன் படிப்பவன்!!

'குட் கணவன்' வர வேண்டும் என்று நான் கூறுவது கல்யாண ஆசையில்,ஆர்வத்தில், அவசரத்தில் அல்ல படிப்பவன்!
நடக்க வேண்டியது நடக்க வேண்டிய காலத்தில் நடக்கட்டும்!

என் அப்பாவிற்கு தெரியாதா என்ன, பொண்ணுக்கு எப்போ மாப்பிள்ளை தேடனும்னு???

[விட்டா ஊருக்கு போய் மாப்பிள்ளையே பார்த்துடுவீங்க போலிருக்குது!]

Anonymous said...

Tips are *COSTLY* and too *HARD* ... is there anything simpler :))))

Anonymous said...

சாரி. அவசரம் அப்படின்னு ஒரு வார்த்தை போட்டு புண்படுத்தியமைக்கு. எப்பவாவது என் உதவி தேவைன்னு நெனச்சா ஒரு ஈ மெயில் அனுப்பிவிடுங்க அம்மணி. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்,

said...

\"padippavan said...
சாரி. அவசரம் அப்படின்னு ஒரு வார்த்தை போட்டு புண்படுத்தியமைக்கு. எப்பவாவது என் உதவி தேவைன்னு நெனச்சா ஒரு ஈ மெயில் அனுப்பிவிடுங்க அம்மணி. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்,\"

என்னங்க படிப்பவன் மன்னிபெல்லாம் கேட்டுகிட்டு!
உதவி கரம் நீட்டிய உங்கள் தோழமைக்கு ரொம்ப நன்றிங்க.


[\"மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்\"

சைட்ல கல்யாண தரகர் வேலை ஏதும் பார்க்கிறீங்களா?? சும்மா கிண்டலுக்குதான் கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க]

said...

என்னோட 2 கமெண்ட்ஸ் மிஸ்ஸிங்...அது எங்கனு பார்த்து பப்ளிஷ் பண்ணுங்க பார்ப்போம் :-)

said...

\"Syam said...
என்னோட 2 கமெண்ட்ஸ் மிஸ்ஸிங்...அது எங்கனு பார்த்து பப்ளிஷ் பண்ணுங்க பார்ப்போம் :-) \"

ஷ்யாம் , உங்க கமண்ட்ஸ் எப்படி மிஸ் ஆச்சுதுன்னே எனக்கு தெரியலீங்க...இப்பதான் கவனிச்சேன், ஸோ....ஸோ ஸாரி ஷ்யாம்.
மொத்தமா கமண்ட்ஸ் வந்துதா....ஸோ எப்படியோ மிஸ் ஆகிடுச்சு.

said...

\"Syam said...
இது எல்லாம் வேலை செய்யலனா...வீட்டுக்குள்ள போய் கதவ சாத்தி கவுண்டர் ஸ்டைல்ல மனைவிய நாலு சாத்து சாத்தினா சரியா போய்டும்.. (அதுதாங்க கால்ல விழுந்து ரெண்டு அடி வாங்கிட்டு வரது)
:-) \"

மனைவிய நாலு சாத்து சாத்துவீங்களா??........இல்லை மனைவியே உங்களை நாலு சாத்து சாத்துவாங்களா??? தெளிவா சொல்லுங்க நாட்டாம!

said...

\"Syam said...
//ஷ்யாம், வருக்கைக்கு நன்றி!//

என்னாது இது நான் என்ன புதுசாவா வரேன்...இல்ல இது விருந்தோம்பலா...ஒரு ஒரு தடவையும் வருக வருக சொல்றது... :-) \"

எத்தனை முறை வந்தாலும் ' வாங்க வாங்க ' ன்னு வரவேற்பு கிடைக்கும் திவ்யாவின் வலைப்பதிவில்!!!

[ கோயம்புத்தூர் விருந்தோம்பல் ஸ்டைலுங்கோவ் இது!!]

said...

/உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள்/

முயற்சியா ?? ஒரு தடவை மறந்து பாருங்கள் .. அப்பு(ஆப்பு)றம் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டீர்கள்..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

said...

//மனைவிய நாலு சாத்து சாத்துவீங்களா//

அப்படினு வெளில சொல்லுவோம் ஆனா உள்ள நடக்கறது ஆப்போசிட்...
:-)

said...

\"Maya said...
/உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள்/

முயற்சியா ?? ஒரு தடவை மறந்து பாருங்கள் .. அப்பு(ஆப்பு)றம் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டீர்கள்..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன் \"

Maya, தங்கள் வருகைக்கு நன்றி!

மறக்க முடியாத 'ஆப்பு' வாங்கியிருக்கிறீர்கள் போலிருக்கிறது!!
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி!!

said...

\"Syam said...
//மனைவிய நாலு சாத்து சாத்துவீங்களா//

அப்படினு வெளில சொல்லுவோம் ஆனா உள்ள நடக்கறது ஆப்போசிட்...
:-) \"

இப்போ தெளிவா......தெள்ளந்தெளிவா புரியுது ஷ்யாம்....!!

Anonymous said...

மனைவியின் மனதை கவர்வது எப்படி? நல்ல குறிப்புகள், நானும் உங்கள் குறிப்புகளை சற்று உல்டா புல்டா செய்து பின்னூட்டம் தரலாமா?
ஆனால் உங்களுடைய "டிப்ஸ்" என்ற வார்த்தைக்கு என்னுடைய அகராதியில் கண்ட அர்த்தத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்.

ஆப்பு 1: ஆமாம்..ஆமாம்...மனைவி என்ன சொன்னாலும் இப்படித்தான் பதில் சொல்லவேண்டும்! உதாரணமாக, வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது என்றால், ஆமாம்..ஆமாம் வெயில் காலம் என்பதால் கூளிங் கிளாஸ் போட்டுகிட்டு பறக்குது என்று சொல்லவேண்டும்!

ஆப்பு 2: மனைவிக்கு பட்டுப்புடவை, நகை இதெல்லாம் வாங்கி கொடுத்தால் தான் அவர்களூடைய மனதை சுலபமாக கொள்ளையடிக்கலாம்! அதேபோல கொள்ளையடிக்க வருபவர்களுக்கும் சுலபமாக இருக்கும்!

ஆப்பு 3: பெண்களை புகழ்வதில் தப்பே இல்லை, ஆனால் வாயார புகழும்போது மனசார இந்த பாடலை நினைத்துக்கொள்ளுங்கள்!
பொய் சொல்லப்போறேன்...
பொய் சொல்லப்போறேன்.....

ஆப்பு4 ; யார் முன்னுக்கும் மனைவியை திட்டுவதை நிறுத்துங்கள் முக்கியமாக குழந்தைகளுக்கு முன்..
ஏனெனில், பெத்த குழந்தைகளுக்கு முன்பே நீங்கள் அடிவாங்குவதை தவிர்க்கலாம்!

ஆப்பு 5 : ஆமாம்...பிறந்த வீட்டை டெவலப் செய்யத்தானே இந்த வீட்டுக்குள்ளேயே புகுந்திருக்கிறாள், அப்புறம் இருக்காதா பின்னே...பிறந்த வீட்டுக்கு பவர் அதிகம் ஜாக்கிரதை!

ஆப்பு 6: ஆமாப்பா...அது போன்ற நல்ல நாட்களை ஞாபகம் வச்சுகுங்க...தவறி போய் மறந்திட்டீங்கன்னா...அப்புறம் வருடத்தில் எல்லா நாட்களுமே கெட்ட நாட்கள்தான் உங்களுக்கு!

இந்த ஆப்பு போதுமா...இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
இனிய ஆப்புகளை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கை ஆப் ஆகாமல் பார்த்துகொள்ளுங்கள்!

என்ன திவ்யா! கல்யாணம் ஆனப் பெண்கள் கதையில் வெறும் திருமண்மாகாத பெண்கள் போட்டாவா போட்டிருக்கீங்க...ஒரு குஷ்பு,ஜோதிகா, லைலா அல்லது சிம்ரன் போட்டா கிடைக்கலையா?!!
உண்மையிலேயே நல்ல பதிவு!

Anonymous said...

[ கோயம்புத்தூர் விருந்தோம்பல் ஸ்டைலுங்கோவ் இது!!]

திவ்யா கோயம்புதூரா நீங்க. நானும் தான் கோயம்புத்தூரு. இவவளவு அறிவோட பதிவு போடும்போதே நினைச்சேன் இது நம்ம ஊரு பொண்ணாதான் இருக்கனும்னு.((ஹி ஹி...)) அப்போ மாப்பிள்ளை பாக்கிற வேலையெல்லாம் கொஞ்சம் சுளுவு தான்.நான் கல்யாண தரகர் வேலையெல்லாம் பார்க்கலைங்க. ஆனா யான் பெற்ற இன்பம் இவ்வய்யகம் பெற அப்படின்னு ஒரு நல்லெண்ணம் தான்.

said...

\" பிரியமுடன் பிரேம் said...
மனைவியின் மனதை கவர்வது எப்படி? நல்ல குறிப்புகள், நானும் உங்கள் குறிப்புகளை சற்று உல்டா புல்டா செய்து பின்னூட்டம் தரலாமா?
ஆனால் உங்களுடைய "டிப்ஸ்" என்ற வார்த்தைக்கு என்னுடைய அகராதியில் கண்ட அர்த்தத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்.

ஆப்பு 1: ஆமாம்..ஆமாம்...மனைவி என்ன சொன்னாலும் இப்படித்தான் பதில் சொல்லவேண்டும்! உதாரணமாக, வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது என்றால், ஆமாம்..ஆமாம் வெயில் காலம் என்பதால் கூளிங் கிளாஸ் போட்டுகிட்டு பறக்குது என்று சொல்லவேண்டும்!

ஆப்பு 2: மனைவிக்கு பட்டுப்புடவை, நகை இதெல்லாம் வாங்கி கொடுத்தால் தான் அவர்களூடைய மனதை சுலபமாக கொள்ளையடிக்கலாம்! அதேபோல கொள்ளையடிக்க வருபவர்களுக்கும் சுலபமாக இருக்கும்!

ஆப்பு 3: பெண்களை புகழ்வதில் தப்பே இல்லை, ஆனால் வாயார புகழும்போது மனசார இந்த பாடலை நினைத்துக்கொள்ளுங்கள்!
பொய் சொல்லப்போறேன்...
பொய் சொல்லப்போறேன்.....

ஆப்பு4 ; யார் முன்னுக்கும் மனைவியை திட்டுவதை நிறுத்துங்கள் முக்கியமாக குழந்தைகளுக்கு முன்..
ஏனெனில், பெத்த குழந்தைகளுக்கு முன்பே நீங்கள் அடிவாங்குவதை தவிர்க்கலாம்!

ஆப்பு 5 : ஆமாம்...பிறந்த வீட்டை டெவலப் செய்யத்தானே இந்த வீட்டுக்குள்ளேயே புகுந்திருக்கிறாள், அப்புறம் இருக்காதா பின்னே...பிறந்த வீட்டுக்கு பவர் அதிகம் ஜாக்கிரதை!

ஆப்பு 6: ஆமாப்பா...அது போன்ற நல்ல நாட்களை ஞாபகம் வச்சுகுங்க...தவறி போய் மறந்திட்டீங்கன்னா...அப்புறம் வருடத்தில் எல்லா நாட்களுமே கெட்ட நாட்கள்தான் உங்களுக்கு!

இந்த ஆப்பு போதுமா...இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
இனிய ஆப்புகளை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கை ஆப் ஆகாமல் பார்த்துகொள்ளுங்கள்!

என்ன திவ்யா! கல்யாணம் ஆனப் பெண்கள் கதையில் வெறும் திருமண்மாகாத பெண்கள் போட்டாவா போட்டிருக்கீங்க...ஒரு குஷ்பு,ஜோதிகா, லைலா அல்லது சிம்ரன் போட்டா கிடைக்கலையா?!!
உண்மையிலேயே நல்ல பதிவு!
\"

பிரேம், என் பதிவிற்கு ஒரு ஆப்பு பதில் கொடுத்து கலாய்ச்சிட்டீங்க, சூப்பர்!!

போட்டோவில் இருக்கும் நடிகைகளுக்கும் திருமணம் ஆகும் பிரேம், கவலைபடாதீங்க, அப்போ இந்த பதிவிற்கு அவங்க போட்டோ பொருத்தமாகிடும்.

said...

\"padippavan said...
[ கோயம்புத்தூர் விருந்தோம்பல் ஸ்டைலுங்கோவ் இது!!]

திவ்யா கோயம்புதூரா நீங்க. நானும் தான் கோயம்புத்தூரு. இவவளவு அறிவோட பதிவு போடும்போதே நினைச்சேன் இது நம்ம ஊரு பொண்ணாதான் இருக்கனும்னு.((ஹி ஹி...)) அப்போ மாப்பிள்ளை பாக்கிற வேலையெல்லாம் கொஞ்சம் சுளுவு தான்.நான் கல்யாண தரகர் வேலையெல்லாம் பார்க்கலைங்க. ஆனா யான் பெற்ற இன்பம் இவ்வய்யகம் பெற அப்படின்னு ஒரு நல்லெண்ணம் தான்.\"

படிப்பவன், நீங்களும் கோயம்முத்தூர்காரரா??

தோழமையுடன் உதவி கரம் நீட்டிய போதே தெரியுதே, நீங்க கோயம்புத்தூர்காரர்ன்னு!!

கோயம்புத்தூரில் உங்கள் விடுமுறையை உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக அனுபவியுங்கள்!!

Anonymous said...

ஏதோ என்னால முடிஞ்ச டிப்ஸ் உங்களுக்கு. கணவனை கவர்வது எப்படி.

1. ஆஃபிஸ்லருந்து அவன் வந்ததும் வராததுமா காலையில் இருந்து சேர்த்து வைச்ச விஷயத்தை எல்லாம் கொட்டிப் புடக்கூடாது. நெகடிவ் ரியேக்ஸன் தான் கிடைக்கும். அவனை வீட்டுல கொஞ்சம் நேரம் நிம்மதியா உலாவ விட்டுட்டு, அப்புறமா, தனியே காதுல கிசுகிசுத்தான் எல்லாமே சக்ஸஸ் தான்.

2.அப்புறமா அம்மா வீட்டு சமையல் முறைதான் உலகத்துலேயே சிறந்தது அப்படின்னு நினைக்காம,கொஞ்சம் புகுந்த வீட்டு டெக்னிக்கும் கத்துக்கீட்டீங்கன்னா, எல்லார்கிட்டயும் நல்ல பேர் எடுத்துடலாம்.

3. புடவை நகை எல்லாம் இன்டரஸ்ட் இல்லாததுபோலவும், சிக்கனமா செலவு பண்ற மாதிரி கொஞ்ச நாளைக்கு நடிக்கனும். பாவம் அவன் உங்களை அப்படியே நம்பி, வரவு, செலவு பொருப்பு, சம்பளம் எல்லாத்தையும் ஒப்படிச்சுடுவான். அப்புறம் தூள் தான். ஸ்டெப், பை ஸ்டெப் மெதுவா ஆட்சியை கைப்ப்ற்றனும்.அவசரப்படக்கூடாது.

சரி சரி இது பின்னூட்டம் தானே பதிவு இல்லேயே! அதனால நிறுத்திக்கிறேன். மத்த நண்பர்களும் தொடர்வார்கள் என நம்புகிறேன்

said...

ROTFL @ பிரேம்...ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க...நானும் சொல்லலாம்னு நினைச்சேன்...சொன்னா பைத்தியம்பாங்க அதுனால தான் விட்டுட்டேன் :-)

Anonymous said...

Romba sariyaa sonneenga Divya..

Idhula innum moonu mukkiyamaana pointa vittu teenga.

1) One should make his wife feel comfortable at his home. Avanga pudhusaa nulayum podhu, oru nervousness irukkum. Yaaru, yaaru eppadi pattavangannu (edhu pidikum, edhu pidikaadhu) onnumae theriyaadhu. So, husband avangallukku firste solli vekkiradhu nalladhu.

In-laws a eppadi handle pannanum garadhula adhu romba helpful aa irukkum.

2) EGO - Idhu Husband-wifekkula varavaee koodaadhu. Edhavadhu wife mela manasthaapam irundhaa, appovae kettu thelivu paduthikannum. Manasila pugaya vittaa, marriage life ambo thaan.

3) Sila per idam-porul-eval theriyaaama konjuvaanga. Like when wife has got a headache, illana seriousaa padichitu irukkum podhu.

Eppadi, husband seriousaa work pannitu irukkum podhu, wife disturb panna koodaadho, adhe maadhri husbandum idha konjam gnabagathula vechukanum.

said...

@padippavan, கலக்கிட்டீங்க...இத படிச்சாவது மனைவிகள் கொஞ்சம் மாறா மாட்டாங்களா... (ஆண்டவ இந்த கமெண்ட்ட என்னோட வூட்டுகாரி பாக்காம பாத்துக்கப்பா) :-)

Anonymous said...

danks. romba sandhoshama irukkunga...
neenga nalla ezhuthareenga...thodarndhu ezhuthunga...

said...

ROTFL @ prem and padippavan's comments :)
kalaasuraanga :)

Anonymous said...

எங்க வீட்டில் முக்கிய்மான முடிவுகள் அதாவது அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல், செனட் தேர்தல், ஈராக், வட கொரியா, இலங்கைப் பிரச்சனை, பெரியார், தமிழ் நாட்டு அரசியல் போன்ற பிரச்சனைகளில் என்னுடைய முடிவு தான் பைனல் என் மனைவி அப்படியே நடப்பாள். மற்ற சிறிய முடிவுகள் - நகை நட்டு, உடை, கார் வாங்குவது, வீட்டுச் சாமன்கள் வாங்குவது, உறவினர்கள் வீட்டுக்குப் போவது என்று இது மாதிரியான முடிவுகள் என் மனைவி எடுப்பதுதான். அவளின் முடிவில் நான் தலையிட மாட்டேன்.

said...

அது என்னுமோ தெரியல... செஞ்சுரி அடிச்சிக்கிட்டே இருக்கீங்க... சச்சினை முந்திடுவீங்க போல இருக்கு :-))

said...

இது தான் 100னு நினைக்கிறேன் :-)

Anonymous said...

undiyalla podara maari 101 aavadhu comment doi.

hey nee romba azaga irukka, eppadi maa ippadi samacha chanceae illa, kadaikku kootindu pogattumaada chellam, edu senjaalum correctaa yosichu seiva en wife ... idellam solla practise pannindu daan irukkaen :)

but thiruppi anda kurangu budhi daan varudu..enna seyya..muyrachi panraen. lol

Anonymous said...

அட அம்மணி கோயமுத்தூருங்களா ? நானும் தான். அது தான் இப்படி ரவுசு பன்னறீங்க.

ஒரு தடவ என் மனைவி ஏதோ வாங்க ஷாப்பிங் போக என்னை கூப்பிட நான் முடியாது என்று வீரமாக ( ? ) மறுத்து விட்டேன். என் அருகில் இருந்த என் மகள் கூறியது இது

" அப்பா வீணா உங்க வாழ்க்கையைக் கெடுத்துக்காதீங்க" - எப்படி எங்க ஊர் நக்கல்.

வெட்டி,
என்ன வேலை பார்க்கிறீங்களா இல்லை என்ன மாதிரியே ஒபி அடிக்கிறீங்களா டஜன் கணக்கில் பின்னூட்டம் இட்டுக் கொண்டே இருக்கிறீர்களே .. ஹி..ஹி ..ஹி

said...

அடடா நூறு போடலாம்னு வந்தா வெட்டி முந்திட்டாரே :-)

Anonymous said...

தாங்க்ஸ்ங்கோவ்.. சீக்கிரமாவெ நமக்கு use ஆகும்னு நினைக்கிறேன்

//பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!
//

மனைவியின் மனதை கொள்ளையடிக்கனும் னா பேங்க கொள்ளையடிக்கனும் போல இருக்கே..


@சுப்பு:

//ஒரு தடவ என் மனைவி ஏதோ வாங்க ஷாப்பிங் போக என்னை கூப்பிட நான் முடியாது என்று வீரமாக ( ? ) மறுத்து விட்டேன். என் அருகில் இருந்த என் மகள் கூறியது இது

" அப்பா வீணா உங்க வாழ்க்கையைக் கெடுத்துக்காதீங்க" - எப்படி எங்க ஊர் நக்கல்.

//

வி,வி.சி.. இதுதாங்க நக்கல்..

said...

\"padippavan said...
ஏதோ என்னால முடிஞ்ச டிப்ஸ் உங்களுக்கு. கணவனை கவர்வது எப்படி.

1. ஆஃபிஸ்லருந்து அவன் வந்ததும் வராததுமா காலையில் இருந்து சேர்த்து வைச்ச விஷயத்தை எல்லாம் கொட்டிப் புடக்கூடாது. நெகடிவ் ரியேக்ஸன் தான் கிடைக்கும். அவனை வீட்டுல கொஞ்சம் நேரம் நிம்மதியா உலாவ விட்டுட்டு, அப்புறமா, தனியே காதுல கிசுகிசுத்தான் எல்லாமே சக்ஸஸ் தான்.

2.அப்புறமா அம்மா வீட்டு சமையல் முறைதான் உலகத்துலேயே சிறந்தது அப்படின்னு நினைக்காம,கொஞ்சம் புகுந்த வீட்டு டெக்னிக்கும் கத்துக்கீட்டீங்கன்னா, எல்லார்கிட்டயும் நல்ல பேர் எடுத்துடலாம்.

3. புடவை நகை எல்லாம் இன்டரஸ்ட் இல்லாததுபோலவும், சிக்கனமா செலவு பண்ற மாதிரி கொஞ்ச நாளைக்கு நடிக்கனும். பாவம் அவன் உங்களை அப்படியே நம்பி, வரவு, செலவு பொருப்பு, சம்பளம் எல்லாத்தையும் ஒப்படிச்சுடுவான். அப்புறம் தூள் தான். ஸ்டெப், பை ஸ்டெப் மெதுவா ஆட்சியை கைப்ப்ற்றனும்.அவசரப்படக்கூடாது.

சரி சரி இது பின்னூட்டம் தானே பதிவு இல்லேயே! அதனால நிறுத்திக்கிறேன். மத்த நண்பர்களும் தொடர்வார்கள் என நம்புகிறேன் \"

படிப்பவன், கணவனின் மனதை கொள்ளையடிக்க சில வழிகள்ன்னு' நீங்க ஒரு பதிவு போடலாமே??

உங்கள் டிப்ஸ்க்கிற்கு நன்றி படிப்பவன்,
எதிர் காலத்தில் பயன்படுமென நம்புகிறேன்.

\"ஸ்டெப், பை ஸ்டெப் மெதுவா ஆட்சியை கைப்ப்ற்றனும்.அவசரப்படக்கூடாது
\"
Slow and steady wins the race.....!!

said...

\"Bindu said...
Romba sariyaa sonneenga Divya..

Idhula innum moonu mukkiyamaana pointa vittu teenga.

1) One should make his wife feel comfortable at his home. Avanga pudhusaa nulayum podhu, oru nervousness irukkum. Yaaru, yaaru eppadi pattavangannu (edhu pidikum, edhu pidikaadhu) onnumae theriyaadhu. So, husband avangallukku firste solli vekkiradhu nalladhu.

In-laws a eppadi handle pannanum garadhula adhu romba helpful aa irukkum.

2) EGO - Idhu Husband-wifekkula varavaee koodaadhu. Edhavadhu wife mela manasthaapam irundhaa, appovae kettu thelivu paduthikannum. Manasila pugaya vittaa, marriage life ambo thaan.

3) Sila per idam-porul-eval theriyaaama konjuvaanga. Like when wife has got a headache, illana seriousaa padichitu irukkum podhu.

Eppadi, husband seriousaa work pannitu irukkum podhu, wife disturb panna koodaadho, adhe maadhri husbandum idha konjam gnabagathula vechukanum. \"


Wow Bindu!! Super!!

நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறீங்க,
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!

said...

\"
"Dubukku said...
danks. romba sandhoshama irukkunga...
neenga nalla ezhuthareenga...thodarndhu ezhuthunga... \"

டுபுக்கு, என் பதிவிற்கு செகன்ட் விசிட் அடித்ததிற்கும், பின்னூட்டத்தில் ஊக்கமூட்டியமைக்கும் மிக்க நன்றி !!

தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்!!

said...

\"சுப்பு said...
எங்க வீட்டில் முக்கிய்மான முடிவுகள் அதாவது அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல், செனட் தேர்தல், ஈராக், வட கொரியா, இலங்கைப் பிரச்சனை, பெரியார், தமிழ் நாட்டு அரசியல் போன்ற பிரச்சனைகளில் என்னுடைய முடிவு தான் பைனல் என் மனைவி அப்படியே நடப்பாள். மற்ற சிறிய முடிவுகள் - நகை நட்டு, உடை, கார் வாங்குவது, வீட்டுச் சாமன்கள் வாங்குவது, உறவினர்கள் வீட்டுக்குப் போவது என்று இது மாதிரியான முடிவுகள் என் மனைவி எடுப்பதுதான். அவளின் முடிவில் நான் தலையிட மாட்டேன். \"

சுப்பு, உங்கள் மனைவியின் முடிவுகளில் தலையிடாத உங்கள் உயர்ந்த உள்ளத்தை பாராட்டுகிறேன்!!
எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு!! சூப்பர்!!

said...

\" வெட்டிப்பயல் said...
அது என்னுமோ தெரியல... செஞ்சுரி அடிச்சிக்கிட்டே இருக்கீங்க... சச்சினை முந்திடுவீங்க போல இருக்கு :-)) \"

எல்லாம் உங்க தயவும், ஆதரவும் தான் வெட்டி!!

said...

\" வெட்டிப்பயல் said...
இது தான் 100னு நினைக்கிறேன் :-)
\

கரக்ட்டா 100 வது பின்னூட்டம் போட்டு சதமடிக்க உதவிய வெட்டிக்கு ஸ்பெஷல் தாங்கஸ்!!

said...

\"Kittu said...
undiyalla podara maari 101 aavadhu comment doi.

hey nee romba azaga irukka, eppadi maa ippadi samacha chanceae illa, kadaikku kootindu pogattumaada chellam, edu senjaalum correctaa yosichu seiva en wife ... idellam solla practise pannindu daan irukkaen :)

but thiruppi anda kurangu budhi daan varudu..enna seyya..muyrachi panraen. lol\"

கிட்டு, இன்னும் முயற்சி பண்ணுங்கோ,
'முயற்சி திருவினையாக்கும்'!!

[101 மொய் வைச்சிருக்கிறீங்க , நன்றி கிட்டு]

said...

\"சுப்பு said...
அட அம்மணி கோயமுத்தூருங்களா ? நானும் தான். அது தான் இப்படி ரவுசு பன்னறீங்க.

ஒரு தடவ என் மனைவி ஏதோ வாங்க ஷாப்பிங் போக என்னை கூப்பிட நான் முடியாது என்று வீரமாக ( ? ) மறுத்து விட்டேன். என் அருகில் இருந்த என் மகள் கூறியது இது

" அப்பா வீணா உங்க வாழ்க்கையைக் கெடுத்துக்காதீங்க" - எப்படி எங்க ஊர் நக்கல்.

வெட்டி,
என்ன வேலை பார்க்கிறீங்களா இல்லை என்ன மாதிரியே ஒபி அடிக்கிறீங்களா டஜன் கணக்கில் பின்னூட்டம் இட்டுக் கொண்டே இருக்கிறீர்களே .. ஹி..ஹி ..ஹி \'



சுப்பு , நீங்களும் கோயமுத்தூர்காரரா???

உங்க பொண்ணுக்கு'ம்' குசும்பு ஜாஸ்திதான் போலிருக்கு!!

said...

\"Syam said...
அடடா நூறு போடலாம்னு வந்தா வெட்டி முந்திட்டாரே :-)\"

ஷ்யாம், நூறு போடனும்னு ஆர்வமா வந்திருக்கிறீங்க.....உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை எனக்கு.....அசந்துபுட்டேனுங்கோ!!

said...

//
வெட்டி,
என்ன வேலை பார்க்கிறீங்களா இல்லை என்ன மாதிரியே ஒபி அடிக்கிறீங்களா டஜன் கணக்கில் பின்னூட்டம் இட்டுக் கொண்டே இருக்கிறீர்களே .. ஹி..ஹி ..ஹி//

ஒரு பக்கம் டெஸ்ட் ஓடிக்கிட்டு இருக்கு... (டெஸ்ட் மேட்ச் இல்லைங்க :-))

இந்த பக்கம் எல்லாருக்கும் கமெண்ட் போட்டுட்டு இருக்கேன்...

That's the advantage of automated testing :-)

said...

\" மணி ப்ரகாஷ் said...
தாங்க்ஸ்ங்கோவ்.. சீக்கிரமாவெ நமக்கு use ஆகும்னு நினைக்கிறேன்

//பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!
//

மனைவியின் மனதை கொள்ளையடிக்கனும் னா பேங்க கொள்ளையடிக்கனும் போல இருக்கே..\"


மணி ப்ரகாஷ், சீக்கிரமா டிப்ஸ் பயன்பட போகிறதா????? வாழ்த்துக்கள் மணி!!!

said...

படிக்க நல்லா தான் இருக்கு, வாய்க்கனுமே...

:)

said...

\" Srikanth said...
படிக்க நல்லா தான் இருக்கு, வாய்க்கனுமே...

:)\"

கண்டிப்பா வாய்க்கும் ஷ்ரிகாந்த்!! வாழ்த்துக்கள்!

Anonymous said...

ஆஹா...இது எல்லார் மனம் கவர்ந்த பதிவு போல இருக்கே..பின்னூட்டத்தை பார்த்தா!!
கலக்குங்க திவ்யா!!

said...

\"சந்தனமுல்லை said...
ஆஹா...இது எல்லார் மனம் கவர்ந்த பதிவு போல இருக்கே..பின்னூட்டத்தை பார்த்தா!!
கலக்குங்க திவ்யா!! \"

சந்தனமுல்லை தங்கள் வருகைக்கும் , பாராட்டுக்களுக்கும் நன்றி!!

said...

ROTFL @ prem comments :))) நல்ல காமெடி

Anonymous said...

வாழ்த்துகளுக்கு நன்றி திவ்யா..

said...

sari try seythu parpom, thanks for the tips :)

said...

//மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது ,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது//

ROFL... nalla soneenga ponga! ippadi nalla nalla idea kodukara ungalukku kandippa vaalthu sollanum! valga ungal thirupani!
valrga umadhu seyalgal! :P

Anonymous said...

ரொம்ப அனுபவமமுள்ள ஆசா(மா)மி போல தேடி பிடிச்சு தகவல் கொடுத்திருக்கீங்க. நெறைய எழுதுங்க.. வாழ்த்துக்கள்.

said...

சுப்பு சொன்னமாதிரி நடந்துக்கிட்டா பிரச்சினையே வராது. இது ஏன் எல்லாருக்கும் தெரியமாட்டேங்குது? :-) அவர் சொன்னது:

//எங்க வீட்டில் முக்கிய்மான முடிவுகள் அதாவது அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல், செனட் தேர்தல், ஈராக், வட கொரியா, இலங்கைப் பிரச்சனை, பெரியார், தமிழ் நாட்டு அரசியல் போன்ற பிரச்சனைகளில் என்னுடைய முடிவு தான் பைனல் என் மனைவி அப்படியே நடப்பாள். மற்ற சிறிய முடிவுகள் - நகை நட்டு, உடை, கார் வாங்குவது, வீட்டுச் சாமன்கள் வாங்குவது, உறவினர்கள் வீட்டுக்குப் போவது என்று இது மாதிரியான முடிவுகள் என் மனைவி எடுப்பதுதான். அவளின் முடிவில் நான் தலையிட மாட்டேன்.//

Anonymous said...

அட, எப்படிங்க திவ்யா இதெல்லாம். சமூக அக்கறையுடன் நல்ல பதிவுகள்! :) நன்றிகள் பல..

சாரிங்க, ரொம்ப லேட்டா ஒரு பின்னூட்டம். கொஞ்ச நாள் ப்ளாக்ஸ் பக்கம் வர முடியாதுங்க. நேரம் கிடைக்கும் போது வந்து பார்த்துட்டு போறேன். தொடர்ந்து எழுதுங்க.. மொத்தமா படிச்சுக்கறேன்.

Wishing you a Very Happy New Year!!

-விநய்

Anonymous said...

"எப்படி" என்று முடியும் அல்லது
ஆரம்பிக்கும் எல்லா விஷயங்களையும்
கொழுத்த வேண்டும் என்று சுஜாதா சொன்னது நியாபகம் வருகிறது

said...

useful tips...nyabagathula vachukurean...thanks

said...

My first visit here thru' syam's post. Superb and hats off to you.

said...

ரொம்ப நல்ல post திவ்யா...

ஆனா எவ்ளோதான் டிப்ஸ் கொடுத்தாலும் அதிகம் பேர் photosதான் பாத்திருக்காங்க பாருங்க. இதுல இருந்து என்ன முடிவு பண்ணியிருக்கேன்னா என்னோட ரங்கமணிய TV-ய தொட கூட விடக் கூடாதுனு. நீங்க என்ன சொல்றீங்க??

said...

எங்களுக்காக கஷ்டப்பட்டு தகவல்களை திரட்டி தந்த Dr.திவ்யாவுக்கு நன்றி. (டாக்டர் பட்டம் தந்துதாங்கல்ல!!)

said...

Kalakittenga .Nalla irukku analysis.
KCS

said...

hi frnd,
super post, and one more please see "siththargal.blogspot" and tell your suges...
i'm LKG for this Blogs that only i ask this.
(ennnoda english pooruththkkungooo)

Thanks

said...

hi frnd,
super post, and one more please see "siththargal.blogspot" and tell your suges...
i'm LKG for this Blogs that only i ask this.
(ennnoda english pooruththkkungooo)

Thanks

said...

// புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!! //

இது கணவனின் மணிபர்சை கொள்ளையடிக்க முக்கியமான யுக்தி" போல தோனுதே...ஹா..ஹா..

மத்த டிப்ஸ் எல்லாம அருமை.நல்லாயிருக்கு .என்னோட கல்யாணத்துக்கப்பறம் ,எதாவது பிரச்சனைன்னா உங்ககிட்டதான் ஜடியா கேப்பேன்.
அப்பரம் பொருத்தமான படங்களும் நல்லாயிருக்குங்குறத ஒத்துக்கதா வேணும்.

said...

ஆண்களை கவருவது எப்படி என்று இன்னும் யாரும் பதிவு போடவில்லையா? விரைவில் எதிர்பாருங்கள் திருமணமாக தோழிகளே

said...

இந்த பதிவை நல்ல வேளை நான் 'miss' பன்னல :)) அதிலையும் குரிப்பா இந்த வரிகள்,

//
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!
//

பிற்காலத்தில் உதவும்னு நினைகிறேன் :)

நான் முக்கியமா உங்க Blog'க்கு வந்ததுக்கு காரணம்...
அச்.... Sorry'ங்க இந்த ஊர்ல வேர ரொம்ப குளூருது நீங்க வேர எக்கசக்கத்துக்கு வாழ்த்திட்டு போயிட்டீங்க அத சொல்லிடு போலாம்னு தான் வந்தேன் :))

said...

//
' என்ன கல்யாண ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
//

இந்த கேள்விக்கெல்லாம் வெட்கப்படுற ஆளா நாமல்லாம்??

//
உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.
//

கோடியில ஒரு தடவதான் மனைவி பேச்சுல கருத்துனு ஒன்னு இருக்கும் அதுக்கு முக்கியத்துவம் குடுக்காம விட்டுறுவமா??

///
மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
///

இந்த சர்பரைஸ் எல்லாம் எப்படி... ஒரு நாளைக்கு 3 தடவை போதுமா??

///
சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.
///

சிறு சிறு உதவிகள் அப்படீனா... இந்த வாரத்துக்கு 7 நாள் மட்டும் துணி துவைப்பது, மனைவி சீரியல் பார்க்கும் போதுமட்டும் (24x7) வீட்டை துடைத்து சுத்தம் செய்வது... இதைத்தான சொல்லுறீங்க???
அட இதைக்கூட செய்யாட்டி அப்புறம் ஹஸ்பன்டா டூட்டி பாக்குறது எதுக்கு???

///
" சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குது, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள்,
///

இந்த ஐட்டம் கணவர்களை கவர்வது எப்படி-ல இடம்பெற வேண்டிய ஐட்டமாச்சே... ஒரு வேளை தப்பான பதிவை படிச்சிக்கிட்டிருக்கிறேனோ??

குறிப்பு: யாரோ ஒரு பெண் சமைக்கிறது மாதிரி புகைப்படம் இருக்கே இந்த மாதிரி பெண்கள் எந்த கிரகத்தில இருக்காங்க?? இந்த கிரகம் பூமியில இருந்து எத்தனை ஒளியாண்டு தூரம்?? இதை மட்டும் கொஞ்சம் தெளிவா சொல்லிட்டீங்கனா எனக்கு பொண்ணு தேடுறதுக்கு ஈசியா இருக்கும்.

///
பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.
///

நல்ல வேளை நாங்களும் தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணிவச்சிறுக்கோம்... இல்லைனா நீங்க எங்களை வச்சு காமடி பண்ணுற விசயம் தெரியாமலயே போயிருக்கும்.

///
உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.
///

அது ஒரு விலைகுறைந்த (ஒரு கோடி ரூபாய்க்குள்) ஒரு வைர நகையாக கூட இருக்கலாம்... இல்லையா?

Anonymous said...

இன்னாய்யா மனைவியோட மனசை கவரணுமா ?
கவலையே விடுங்க ! இதோ பிடிங்க என்னோட டிப்ஸ்..

காலைலே மனைவிக்கு முன்னாடியே எந்திருச்சு காபி போட்டு,
எடுத்துகிட்டு போயி, காபி ரெடின்னு சொல்லி எழுப்புங்கள்.

என்ன இன்னிக்குன்னு கேட்டா, ஒரு சேஞ்சுக்கு நாந்தான் காபி ஒரு நாளைக்குப்
போடறேனே அப்படின்னு சொல்லுங்க.


குளிச்சுட்டு, சேலை உடுத்திட்டு, தலை வாரிக்கினு, பவுடர் இத்யாதி போட்டுக்கும்போது
டிரஸ்ஸிங்க் ரூம்க்கு ஏதோ வேலையா போறமா மாதிரி போய், சடனா திரும்பி,
இது எப்ப வாங்கின புடவை ? இதுலே நீ ஜோலிக்கறயேன்னு சொல்லுங்க....

ஆபீஸ் லேந்து அட் லீஸ்ட் 2 தரமாவது ஃபோன் பண்ணுங்க...
என்னன்னு கேட்பா....
ஒன்னுமில்லை.. என்னவோ இன்னிக்கு உன் ஞாபகம் வந்துகினே இருக்கு, உன்
புறந்த நாள், வெட்டிங் டே ஏதாவது பக்கத்திலே வருதோன்னு கேளுங்க...

வீட்டுக்குப் போறப்போ இரண்டு பூ மல்லிகை, ஜாதி இல்லைன்னா ரோஸ், முல்லை அப்படினு
வாங்கிக்கிட்டு போங்க... என்ன இரண்டுன்னு கேட்பாங்க.. ஒண்ணு உனக்கு புடிச்சது,
இன்னொன்னு எனக்கு புடிச்சதுன்னு சிரிக்காம சொல்லுங்க...

அப்படி, காத்தாட கொஞ்ச நேரம் பார்க்குக்கு போலாமான்னு கேளுங்க...
பார்க்கிலே பேசிக்கொண்டிருக்கும்போதே ... என்ன உங்க அம்மாவிட்டேயிருந்து
உன் தம்பிட்டே இருந்து போனே வல்லை போலே இருக்கே... நீயாவது போன்
பண்ணி நன்னா இருக்காங்களான்னு விசாரிக்க கூடாதா ந்னு சீரியஸா மூஞ்சியை
வச்சுகிட்டு சொல்லுங்க...

டிபன் சாப்பிடும்போதோ அல்லது நைட் சாப்பிடும்போதோ
என்னதான் இருந்தாலும் உன்ன மாதிரி பீர்க்கங்காய் துவையல் யாரும் செய்யவே முடியாது.
என்ன உங்கம்மா கிட்டேந்து கத்துக்கிட்டயான்னு கேளுங்க...

என்ன இதெல்லாம் நீங்க செய்யிருங்களான்னு கேட்காதீங்க.. செய்யாம சொல்லுவாகளா என்ன ?
ஆனா ஒரு நாளைக்கு எல்லாத்தேயும் செய்யப்போய்,
சம்சாரம் கேட்டுடுத்துங்க..
ஏங்க..உடம்புக்கு எதேனும் சரியில்லையா !
என்னவோ போல பேசறீங்களே ந்னு கேட்டுச்சுங்க..

said...

டிப்ஸ் கொடுப்பது மிக மிக எளிது அம்மணி. உங்களுக்கு கல்யாணம் ஆகட்டும். பிறகு பார்ப்போம்

said...

எனக்கு இது உபயோகப்படும்...
கண்டிப்பாக!!

என் வலைத்தளம் வந்தமைக்கு நன்றி !

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

said...

\\ Anonymous said...
வாழ்த்துகளுக்கு நன்றி திவ்யா..\\

:))

said...

\ smiley said...
sari try seythu parpom, thanks for the tips :)\

ட்ரை பண்ணி பாருங்க:)

வருகைக்கு நன்றி!!

said...

\ priya said...
My first visit here thru' syam's post. Superb and hats off to you.\\


உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ப்ரியா!!

மீண்டும் வருக!

said...

\\ இம்சை அரசி said...
ரொம்ப நல்ல post திவ்யா...

ஆனா எவ்ளோதான் டிப்ஸ் கொடுத்தாலும் அதிகம் பேர் photosதான் பாத்திருக்காங்க பாருங்க. இதுல இருந்து என்ன முடிவு பண்ணியிருக்கேன்னா என்னோட ரங்கமணிய TV-ய தொட கூட விடக் கூடாதுனு. நீங்க என்ன சொல்றீங்க??\\


வாங்க இம்சை,

என் வலைதளம் வந்ததிற்கு மிக்க நன்றி!!

பாவம்ங்க உங்க 'ரங்கமணி'.......உங்க கண்கானிப்பில் டீவி பார்க்க கொஞ்சூண்டு அனுமதி கொடுங்க!!

மீண்டும் வருக!!

said...

\\ இசக்கிமுத்து said...
எங்களுக்காக கஷ்டப்பட்டு தகவல்களை திரட்டி தந்த Dr.திவ்யாவுக்கு நன்றி. (டாக்டர் பட்டம் தந்துதாங்கல்ல!!)\\

டாக்டர் பட்டமெல்லாம் ரொம்ப ஓவருங்க இசக்கிமுத்து:))

பதிவு உங்களுக்கு பயன்பட்டால் , மகிழ்ச்சியே!!

வருகைக்கு நன்றி!!

said...

\\ Sudhakar said...
Kalakittenga .Nalla irukku analysis.
KCS\\


வாங்க சுதாகர்,
உங்கள் ரசிப்பிற்கும், பாராட்டிற்கும் நன்றி!!

said...

\\ thamilan said...
hi frnd,
super post, and one more please see "siththargal.blogspot" and tell your suges...
i'm LKG for this Blogs that only i ask this.
(ennnoda english pooruththkkungooo)

Thanks\\


வருகைக்கு நன்றி,
நிச்சயம் உங்கள் வலைதளம் வருகிறேன்,

மீண்டும் வருக!!

said...

\\ ரசிகன் said...
// புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!! //

இது கணவனின் மணிபர்சை கொள்ளையடிக்க முக்கியமான யுக்தி" போல தோனுதே...ஹா..ஹா..

மத்த டிப்ஸ் எல்லாம அருமை.நல்லாயிருக்கு .என்னோட கல்யாணத்துக்கப்பறம் ,எதாவது பிரச்சனைன்னா உங்ககிட்டதான் ஜடியா கேப்பேன்.
அப்பரம் பொருத்தமான படங்களும் நல்லாயிருக்குங்குறத ஒத்துக்கதா வேணும்.
\\


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரசிகன்!!

said...

\\ முரளி கண்ணன் said...
ஆண்களை கவருவது எப்படி என்று இன்னும் யாரும் பதிவு போடவில்லையா? விரைவில் எதிர்பாருங்கள் திருமணமாக தோழிகளே\\


நல்ல ஐடியா,
அப்படி யாரும் பதிவு போட்டா.....ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்:))

வருகைக்கு நன்றி !!

said...

\\ sathish said...
இந்த பதிவை நல்ல வேளை நான் 'miss' பன்னல :)) அதிலையும் குரிப்பா இந்த வரிகள்,

//
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!
//

பிற்காலத்தில் உதவும்னு நினைகிறேன் :)

நான் முக்கியமா உங்க Blog'க்கு வந்ததுக்கு காரணம்...
அச்.... Sorry'ங்க இந்த ஊர்ல வேர ரொம்ப குளூருது நீங்க வேர எக்கசக்கத்துக்கு வாழ்த்திட்டு போயிட்டீங்க அத சொல்லிடு போலாம்னு தான் வந்தேன் :))\\


நன்றி சதீஷ்!!

said...

\\ கருப்பன்/Karuppan said...
//
' என்ன கல்யாண ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
//

இந்த கேள்விக்கெல்லாம் வெட்கப்படுற ஆளா நாமல்லாம்??

//
உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.
//

கோடியில ஒரு தடவதான் மனைவி பேச்சுல கருத்துனு ஒன்னு இருக்கும் அதுக்கு முக்கியத்துவம் குடுக்காம விட்டுறுவமா??

///
மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
///

இந்த சர்பரைஸ் எல்லாம் எப்படி... ஒரு நாளைக்கு 3 தடவை போதுமா??

///
சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.
///

சிறு சிறு உதவிகள் அப்படீனா... இந்த வாரத்துக்கு 7 நாள் மட்டும் துணி துவைப்பது, மனைவி சீரியல் பார்க்கும் போதுமட்டும் (24x7) வீட்டை துடைத்து சுத்தம் செய்வது... இதைத்தான சொல்லுறீங்க???
அட இதைக்கூட செய்யாட்டி அப்புறம் ஹஸ்பன்டா டூட்டி பாக்குறது எதுக்கு???

///
" சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குது, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள்,
///

இந்த ஐட்டம் கணவர்களை கவர்வது எப்படி-ல இடம்பெற வேண்டிய ஐட்டமாச்சே... ஒரு வேளை தப்பான பதிவை படிச்சிக்கிட்டிருக்கிறேனோ??

குறிப்பு: யாரோ ஒரு பெண் சமைக்கிறது மாதிரி புகைப்படம் இருக்கே இந்த மாதிரி பெண்கள் எந்த கிரகத்தில இருக்காங்க?? இந்த கிரகம் பூமியில இருந்து எத்தனை ஒளியாண்டு தூரம்?? இதை மட்டும் கொஞ்சம் தெளிவா சொல்லிட்டீங்கனா எனக்கு பொண்ணு தேடுறதுக்கு ஈசியா இருக்கும்.

///
பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.
///

நல்ல வேளை நாங்களும் தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணிவச்சிறுக்கோம்... இல்லைனா நீங்க எங்களை வச்சு காமடி பண்ணுற விசயம் தெரியாமலயே போயிருக்கும்.

///
உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.
///

அது ஒரு விலைகுறைந்த (ஒரு கோடி ரூபாய்க்குள்) ஒரு வைர நகையாக கூட இருக்கலாம்... இல்லையா?\\



உங்கள் விரிவான பின்னூட்டம் சூப்பர்:))

மிக்க நன்றி!!

said...

\\ aanazagan said...
டிப்ஸ் கொடுப்பது மிக மிக எளிது அம்மணி. உங்களுக்கு கல்யாணம் ஆகட்டும். பிறகு பார்ப்போம்\\

:)))

said...

\\ Karthikeyan said...
எனக்கு இது உபயோகப்படும்...
கண்டிப்பாக!!

என் வலைத்தளம் வந்தமைக்கு நன்றி !

அன்புடன்
கருணாகார்த்திகேயன்\\


வருகைக்கு நன்றி கார்த்திக்!!

said...

This blog clearly depicts how to respect the womanness and how to handle them with care throughout our life.

Cheers to you...