January 19, 2009

கவிதை ' கண்ணாமூச்சி'...!!


இரகசியமாய்...
உன் கவிகுகையினுள்
வேவுபார்க்க நுழைந்தேன்...!
நான் இதுவரை
ரசித்த வரிகள்
முதன்முறையாக
வெட்க்கப்பட வைத்து
எனைப் பார்த்து சிரித்தது!!!






உன்
கவிகருவில் நானா?
கவி உருவில் நானா??
தெரியவில்லை....
ஆனால் எங்கேனும்
ஒரு வார்த்தையிலாவது
நான் இருப்பதை
உன் எழுத்து
உணர்த்த தவறவில்லை!!







புரிந்தது..
என் வெட்கத்தையும்
படம் பிடிக்கும்
புகைப்பட கருவி
உன் கவிதைகள் என!!!







இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்??







நீ
எழுதும் கவிதையில்
நான் இருப்பதைவிட
உன் 'கவிதை'யாக
இருப்பதையே விரும்புகிறேனென்று
எப்படி தெரிந்துக் கொண்டாய்..??
உன் கவிதையாக எனை
மெது மெதுவாக
செதுக்க ஆரம்பித்துவிட்டாயே!!







உனக்கும்
உன் கவிதைக்கும்
அப்படி என்னதான் கோபம்?
பல நாட்கள்
என்னுடன் பேசாமல்
விரதம் இருந்து
சாதித்து விட்டீர்களே இருவரும்!!!







யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!






கவி எழுத தூண்டிய
உன் கண்கள்
தீண்டியபின் தான்
ஓவ்வொரு கவிதையையும்
பரிமாறுகின்றேன்
அனைவருக்கும்...






நீ
முதன் முதலில் படிப்பதில்
தலைக்கனம்
என் கவிதைகளுக்கு மட்டுமல்ல...
எனக்கும்தான்!!






என்ன மாயம் புரிந்தாய்...
உன் விழி தூண்டலில்
வரிகள் எழுதினால்
உன் விழி தடவிய‌தும்
வரிகளெல்லாம்
கவிதையாகி விடுகிறதே!!!






என் கவிதையை
நீ ரசிக்க
உன் கவிதை கண்டு
நான் வெட்கப்பட
நம் இருவருக்குமான
'கவிதைகளை'
நாம் வாசிக்க ஆரம்பித்ததும்
ஆர்பரித்தது கவிதைகள் மட்டுமா??







சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....!

January 18, 2009

ஹேய்! ..... மனசுல பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்குதே......!!




என் வலைதளத்திற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து பாராட்டிய நண்பர் வித்யா சங்கருக்கும்[Gils], மற்றும் பிரபுவிற்கும்,
எனது 'கவிதை சோலை' வலைதளத்திற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து கெளரவித்த இரவீ க்கும் என் மனமார்ந்த நன்றி.

இவ்விருதினை நான் கொடுக்க விரும்புவது...

1. எழில் பாரதி
பிரபல கவியரசி இவர் என் உள்ளம் கவர்ந்த தோழியுமாவார்.
நளினமான வரிகளுடன்,
எளிமையான நடையில்,
எழிலான கவிதைகள் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே.....!!!

2.ரிஷான்
இவரது அபாரமான எழுத்து நடை கண்டு பிரமிப்புடன் இவரது படைப்புகளை ரசித்து படித்திருக்கிறேன்.
தன்க்கென ஓர் எழுச்சியான எழுத்து திறனுடன் இவர் எழுதும் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதை கவரும்.
பல அருமையான கவிதைகளும் எழுதி படிப்பவரின் மனதை தொட்டு செல்வது இவரது இயல்பு....

3.பாச மலர்
கருத்துள்ள கவிதைகள் மற்றும்
சிந்திக்க வைக்கும் பதிவுகள் நிறைந்த பெட்டகம் இவரது வலைதளம்.
நடைமுறையில் நிகழும் இயல்பான சம்பவங்களை கொண்டு இவர் எழுதும்
சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

4.தமிழன் கறுப்பி
கவிதைகளை பலர் எழுதிப்பார்த்திருக்கிறேன்,
உணர்வுகளை கொண்டு கவிதையை செதுக்குவதை
இவரது கவிதைகளில் கண்டு புருவமுயர்த்தி அசந்திருக்கிறேன்!!
பல புது புது அழகான வார்த்தைகளையும் இவரது கோர்வையான எழுத்துக்களில் காணலாம்.


இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)