August 24, 2008

தம்பி....



படித்ததில் மனதில் பதிந்த கதை, என் கற்பனை கலந்து, சில மாற்றங்களுடன் இங்கு என் எழுத்துருவில் பதிவாக........ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் என் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்.......!!!




St.Joseph's International School, ஹாஸ்டலில் தன் படுக்கைக்கு அருகில் இருந்த அலாரம் காலை 6 மணிக்கு அடிக்க விழித்துக்கொண்ட பன்னிரண்டு வயது டெய்ஸி, காலை கடன்களை முடித்துவிட்டு, அவசரம் அவசரமாக ஹார்லிக்ஸ் மட்டும் அருந்திவிட்டு, ஆண்கள் விடுதி நோக்கி நடந்தாள் தன் தம்பி டேனியலை சந்திக்க,

வழியில் ஸ்கூல் சேப்பலில் ஜெபம் செய்ய செல்கையில், ஜூலியா மிஸ்சை சந்தித்தாள்.
இவளது ஹாஸ்டல் வார்டனாக இருந்தவர் மிஸ் ஜூலியா.அவர் மேல் டெய்ஸிக்கு அலாதி ப்ரியமும் , மரியாதையும்.

பெண்கள் விடுதியின் வார்டனாக இருந்த ஜுலியா மிஸ், புனித மேரி இல்லத்திற்கு வார்டனாக போனதும், டெய்ஸி மிகவும் ஏங்கிப் போனாள்.
புனித மேரி இல்லமும் டெய்ஸி படிக்கும் ஸ்தாபனம் நடத்துவதுதான், ஆனால் அது அனாதை குழந்தைகள் படிக்கும் விடுதி.
ஜூலியா மிஸ்சும் ஒரு அனாததான் என்பதும், அதுவே அவர்கள் அவ்வில்லத்திற்கு வார்டனாக சென்றதிற்கான காரணம் என்றும் இவளது தோழிகள் மூலம் அறிந்துக்கொண்டாள் டெய்ஸி.


டெய்ஸிக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் ஜூலியா மிஸ்சாகப் பிறக்க வேண்டும் என்று தோன்றும்.
ஜூலியா மிஸ் அன்போடும் அரவனைப்போடும் டெய்ஸியையும் அவளது தம்பியையும் கவனித்துக்கொள்ளும் போது, இவர்கள் எங்களின் அம்மாவாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொள்வாள் டெய்ஸி,
ஆனால்....ஜூலியா மிஸ் கன்னியாஸ்திரி, கல்யாணமே செய்து கொள்ள போவதில்லை என்பதும் அவளுக்கு புரிந்தது.

ஆண்கள் விடுதியை அடைந்தாள் டெய்ஸி, அங்கு அழுவதற்கு தயாராக இருந்தான் டேனியல், சில்வியா ஆயா அவனை சமாதனப்படுத்தி, "இதோ உங்கக்கா வந்தாச்சு பாரு" என்று டெய்ஸியிடம் அவனை ஒப்படைத்தாள்.
அப்படியே அவனைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் டெய்ஸி.

"டேனி.....இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்ல இருந்து கார் வந்திடும்,நாம வீட்டுக்கு போறோம் டா.....செல்லம், கார் வரைக்கும் நானே உன்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போறேன், சரியா"

"ஓ......சரிக்கா" என்றான் உற்சாகமாய்.

டெய்ஸி-டேனியலின் அம்மா ஒரு முன்னனி கைனக்காலிஜிஸ்ட், இரவிலும் ஹாஸ்பிடல் கால் வந்து டியூட்டி பார்க்க சென்றுவிடுவார்.
அப்பா கோயம்பத்தூர் விவசாயக்கல்லூரியில் தாவிர இயல் விஞ்ஞானி. எப்போதும் செடி கொடிகளுடன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்.

அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்கிறார்கள், அதனால்தான் பிள்ளைகள் ரெஸ்டென்ஷியல் ஸ்கூலில்.

சிறிது நேரத்தில் இவர்கள் இருவரையும் அழைத்துச்செல்ல வழக்கமாக வரும் ட்ரைவர் காருடன் வர, வார்டன் இருவரையும் கார் வரை வந்து அமர்த்திவிட்டு, கையசைத்து வழியனுப்பினார்.

கோயம்பத்தூரில் தாங்கள் சந்திக்க இருக்கும் அதிர்ச்சியை அறியாமல் இரு பிஞ்சு உள்ளங்களும் குதூகலத்தோடு பிரயாணப்பட்டன.

வீட்டிற்கு போனபோது அங்கு ஹாலில் அம்மாவோடு டாக்டர் தனபாலன் அங்கிளும் இருந்தார். அம்மாவுடன் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக படித்தவர், இப்போது அம்மாவுடன் ஒன்றாக வேலை செய்பவர் என்ற அளவில் மட்டுமே டெய்ஸிக்கு அவரை தெரியும்.
ஆனால்.....இன்று ஹாலில் தன் அம்மாவின் மிக அருகில் நெருக்கமாக அவர் அமர்ந்திருப்பது 12 வயது டெய்ஸிக்கு ஏனோ, அருவருப்பாக தோன்றியது.

ஏற்கெனவே அப்பாவும் அம்மாவும் கடந்த 1 வருடமாக பிரிந்து வாழ்வதும், இருவரும் டைவர்ஸ் ஆகி பிரிந்தே வாழ போகவதாகவும், வீட்டில் வேலை செய்யும் ஆயா சொல்லி அறிந்திருந்தாள் டெய்ஸி.

தனபால் அங்கிள் கொடுத்து காட்ப்ரீஸை கண்டதும் டேனியல் அவரின் அருகில் அமர்ந்துக்கொண்டான், டெய்ஸி தர்மச்சங்கடத்தோடு அங்கு நிற்க, அவளது அம்மா அவளை தனியே அழைத்துச்சென்று இன்று குடும்ப நல கோர்ட்டில் அவளது அப்பா-அம்மா வின் விவாகரத்து வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படுவதாகவும், அதற்காகவே ஹாஸ்டலில் இருந்து இவர்கள் இருவரையும் அழைத்ததாகவும் கூறினாள்.

சிறிது நேரத்தில், தனபால் அங்கிள் காரிலேயே கோர்டிற்கு சென்றனர்,
அங்கு வாயிலில் அப்பாவை கண்டதும் , "அப்பா" என்ற அலறலுடன் இரு குழந்தைகளும் அருகில் ஓட,
அப்பாவிற்கு பின்னாலிருந்து , அவரிடம் டாக்ட்ரேடிற்காக பயிற்சி எடுத்துக்கொள்ளும் நித்யா ஆண்டி, "ஹாய் குட்டீஸ்' என்றார்.
அவளது அப்பாவின் கரத்தோடு நித்யா ஆண்டி கை கோர்த்திருந்த விதம்.......டெய்ஸிக்கு அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருந்தது.
தன் தலையை வருடம் அப்பாவின் ஸ்பரிசம் முதல் முறையாக,கம்பிளி பூச்சு ஊறுவது போன்று தோன்றியது.

கோர்ட்டில் தீர்ப்பு வழங்கினார்கள்,
டெய்ஸியின் அப்பா அம்மாவிற்கு விவாகரத்து கொடுத்துவிட்டு, டெய்ஸி அவளது அப்பாவின் பாதுகாப்பிலும்,
தம்பி டேனியல் அம்மாவின் பாதுகாப்பிலும் வளர்வது என்று தீர்ப்பானது.

வீட்டிற்கு வரும் வழியில்தான் , அம்மாவும் தனபால் அங்கிளும் பேசிக்கொண்டதில், அவளது அம்மாவும் தனபால் அங்கிளும் லண்டனுக்கு செல்ல போவதாகவும், தம்பியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வதும் டெய்ஸிக்கு புரிந்தது.
இவள் ஹாஸ்டலிலோ, அப்பாவுடன் 'Tamil Nadu Agricultural University' கேம்பஸில் அப்பாவின் குவார்டஸிலோ இருக்கப்போகிறாள்.

யாரைக் கேட்டு முடிவு செய்தார்கள்?
இது வரையில் என்றாவது ஒரு நாள் இவர்கள் இருவரும் எங்களோடு சிரித்துப் பேசி விளையாடியதுண்டா?
அம்மாவுக்கு அப்பா தேவையில்லாமல் இருக்கலாம்,
அப்பாவுக்கு அம்மா தேவையில்லாமல் இருக்கலாம்,
இருவருக்கும் சேர்ந்து நாங்கள் தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆனால்..........எனக்கு.........என் தம்பி வேண்டும்!!

என்னை விட்டு ஒருகணம் கூட இருக்க மாட்டானே என் தம்பி.......அவனை வெளிநாடு அனுப்பி விட்டு நான் மட்டும் எப்படி இங்கிருக்க முடியும்?

டெய்ஸியின் மனதில் ஆயிரம் கேள்விகள்,
உதடு துடிக்க, கண்ணீர் பொங்கி வர, வீட்டிற்குள் வந்ததும் வேகமாக தன் அறைக்குள் சென்று , கட்டிலில் குப்புறப்ப்டுத்து குலுங்கி அழுதாள்.

இவள் பின்னாலேயே மாடி ஏறி வந்த அவள் அம்மா," டெய்ஸி.......ஒன்னும் அவசரமில்லைமா, உன்னை தயார்படுத்திக்கோ,.......இரண்டு நாள் கழிச்சு கூட நீ உன் அப்பாகிட்ட போகலாம், டேக் யுவர் டைம்" என்று சமாதனப்படுத்தி விட்டுப் போனாள்.

இரவு முழுவதும் அழுது அழுது முகம் வீங்கிக் கிடந்தது டெய்ஸிக்கு. இவள் எதையோ நினைத்து நினைத்து அழுவதைப் பார்த்து டேனியலும் அழுதான்.

இவனை எப்படி பிரிய முடியும்.......தம்பியின் முகத்தை கையில் ஏந்தி தேம்பினாள் டெய்ஸி.

லண்டனுக்கு கூட்டிட்டு போய் கூட அம்மாவா இவனை கவனிக்க போகிறாள், அங்கயும் ஆயாவிடம் தான் விடப்போகிறாள்.
"அக்கா"ன்னு இவன் அழுதா எனக்கு இங்கே கேட்குமா??? முடியாது.......
இவனை இந்த ராட்சஸர்களிடம் விடவே மாட்டேன்.......எனக்கு அம்மாவோ, அப்பாவோ வேண்டாம், என் தம்பிதான் வேண்டும்.

கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள், மணி காலை ஐந்து, வீட்டில் அம்மா அயர்ந்த தூக்கத்தில் அவளது அறையில்,
அவசரமாக எழுந்தாள் டெய்ஸி,
தம்பியை தூக்கி தோளில் போட்டுக்கொண்டாள்,
செலவிற்காக அப்பா கொடுத்திருந்த 300 ரூபாய் பணம் இவளது கைப்பையிலிருந்தது, அதனையும் எடுத்துக்கொண்டாள்,

வீட்டைவிட்டு கவனமாக எவருக்கும் தெரியாமல் வெளியேறினாள், கோவை மத்திய பஸ் நிலையம் இவளது வீட்டிலிருந்து 3 கீலோ மீட்டர் தூரம், பாதி தூரத்திற்கு மேல் நடக்க மாட்டேன் என அடம்பிடித்த தம்பியை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து பஸ் நிலையம் சென்றாள், ஊட்டி பஸ் பார்த்து ஏறிக்கொண்டாள்.

மூன்று மணி நேரத்தில் பஸ் ஊட்டியை சென்று அடைந்தது.

ஒருவாரம் விடுமுறைக்காக போன ஆறாம் வகுப்பு டெய்ஸி, தம்பியோடு தன் அறையில் அடுத்த நாள் காலையிலேயே வந்து நிற்பதைக் கண்டு திகைத்தார் ஃபாதர் ஜோசஃப்.

அந்த சிறு பெண்ணின் உருண்ட விழிகள் அழுது சிவந்து, இரட்டை ஜடையில் ஒன்றில் மட்டும் ரிப்பன், காலில் ஷு இல்லை, ரப்பர் செருப்புடன்.....தம்பி டேனியலின் சட்டையெல்லாம் புழுதி, கலைந்த தலைமுடி......அந்த சிறுவனும் புரியாமல் அழுதுகொண்டே இருந்தான்.

பணக்கார களையோட இத்தனை நாட்கள் பார்த்திருந்த ஃபாதருக்கு, குழந்தைகளின் இந்நிலை மனதை கணமாக்கியது,

"என்னமா டெய்ஸி.......என்னாச்சு??" என்று படபடப்பாகக் கேட்டார்.

"ஃபா .........ஃபாதர்"

"அப்பா.........அம்மா கூட வரலியா.....உங்க கார்ல வரலியா?"

"ஃபாதர்........எங்களுக்கு அப்பா அம்மா இல்லை......நாங்க அனாதை.....ப்ளீஸ் எங்களை புனித மேரி இல்லத்தில சேர்த்துகோங்க ஃபாதர்"

ஃபாதரின் கண்ணில் நீர் பூத்தது.
குழந்தைகளை குளிப்பாட்டி உணவு கொடுக்க சொல்லி சிஸ்டர் ஜூலியாவிடம் ஒப்படைத்துவிட்டு, ஃபாதர் ஜோசஃப் டெய்ஸியின் பெற்றோரை வரவழைத்தார்.

அவர்களிடமும் டெய்ஸி பிடிவாதமாக தாங்கள் இருவரும் இல்லத்திலேயே இருக்க விரும்புவதாக கூற......பெற்றோரும் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல், தங்கள் வழி திரும்பிச் சென்றனர்.

தன் தம்பியின் மேல் பாசத்தை கொட்டி பார்த்துக்கொண்டாள் டெய்ஸி, ஆங்கில மொழியில் பி.ஏ பட்டபடிப்பும், ஆசிரியர் பயிற்சியும் புனித மேரி இல்லத்தின் உதவியோடே படித்து முடித்து, அங்கே அவளும் டீச்சராக பதிவியேற்றாள்.......கன்னியாஸ்திரி டீச்சராக.


டேனியல் படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியாக வளர்ந்தான் அக்காவின் அரவணைப்பில், இன்று அமெரிக்காவில் தனது உயர் படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்புகிறான்..........அதுவும் அவனது பிறந்தநாளான இன்று அவன் இந்தியா வருவது இரட்டிப்பு சந்தோஷம் சிஸ்டர் டெய்ஸிக்கு!!

விமான நிலையத்தின் வரவேற்பு வாயிலில் , பழைய நினைவுகளை அசைப்போட்டபடி......தம்பியின் வரவிற்காக காத்திருந்த சிஸ்டர் டெய்ஸியின் சிந்தனையை,

"அக்கா"

என்ற குரல் கலைக்க, திரும்பிய டெய்ஸி சிஸ்டர்.......சேயைக் கண்ட தாயாய் உவகையுடன் தன் தம்பியை நோக்க, கண்ணில் ஆனந்த கண்ணீர்,

"அக்கா" என்று குதூகலத்துடன் டேனியல் அவரை நோக்கி தன் கரங்களை அகல விரிக்க........

"த......ம்.........பி......."

உண்மையான நேசத்தின் தேவையும்
நெஞ்சம் தேடும்
பாசத்தின் தவிப்பும்
உன்னாலும் என்னாலும் மட்டுமே
உண்மையாய் உணர முடியும்!

ம்…!
உன் தலை சாய்த்துக் கொள்ள
தக்க தருணங்களில்
அன்புத் தாயாய் நான்
என் சேயாய் நீ!

என் உயிரின் கடைசித் துளி
என்னை விட்டுப் பிரியும் வரை…
உன் அன்புத் தோழியாய் நான்
என் அன்புத் தோழனாய் நீ!

"போடா" என்று சொல்லி
பொய்ச் சண்டை போட்டு
மறு நிமிடம்
“மன்னிப்பு” என்னும் பூ தூவி
உயிரின் தீபமேற்றி
உன் உயிரோடு கலக்கும்
உன் அக்காவாய் நான்
என் தம்பியாய் நீ!

ஒற்றை விரல் கோர்த்து
பற்றிப் படர்ந்து
எனக்காக நீயும்
உனக்காக நானும்
நிறைவான அன்பினில்…


நீளும் உன் கரங்கள்
நிஜமென நம்பி…
தம்பி...

இரு சிறகுகளிலும்
இருந்த பாரங்களை
இறக்கி வைத்த
சின்னப் பட்டாம் பூச்சியாய் நான்..






இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி!!

August 21, 2008

A for Apple....[tag post]




பிரியமானவள் ப்ரியா மற்றும் திவ்யப்ரியா அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவு

A - http://abclocal.go.com/mediakit/index.html - local news பார்க்க

B - http://www.biblegateway.com/passage/?search=1corinthians:1&version=31 - பைபிள் படிக்க


C - http://www.careerbuilder.com/ - For Job search


D - http://dictionary.reference.com/ - ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துக்கொள்ள........


E - http://www.elise.com/ - சிம்பிள் அமெரிக்க உணவுகளின் ரெஸிபீஸ் பார்க்க


F -http://food.sulekha.com/ - இந்திய சமையல் குறிப்புகளுக்கு

G - http://www.geekinterview.com/ - இன்டெர்வியுவிற்கு தயாராக டிப்ஸ் இங்கே....


http://www.hinduonnet.com/ - Hindu News paper



I - http://www.indiacc.org//AM/Template.cfm?Section=Home&WebsiteKey=ce5eddd2-6742-4f8a-a2e4-73bee14b8bcc - இந்திய கம்யூனிட்டி சென்டர்


J - http://job-abroad.blogspot.com/

K - http://www.kumudam.com/

L - http://www.linkedin.com/


M - http://www.mapquest.com/ - ட்ரைவிங் directions பார்க்க


N - http://www.nilacharal.com/


O - http://www.olivegarden.com/default_f.asp - என் favourite Italian Resnt.....


P -http://picasaweb.google.com/


R - https://www.relianceindiacall.com/Web/GlobalHome.aspx - இந்தியாவிற்கு ஃபோன் கால் பண்ண காலிங் கார்ட் வாங்க


S - http://www.sjlibrary.org/ - என் படிப்பிற்குதவிய நூலகம்


T - http://www.thuthifm.com/ - 24 மணி நேர கிறிஸ்துவ பாடல்கள் ஒளிபரப்பும் தளம்.


U -http://www.usertube.com/ - விஜய் டீவி பார்க்க


V - http://www.videojug.com/tag/indian-recipes


W - http://wwwb.way2sms.com//content/index.html? - இந்தியா மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப

http://www.webindia123.com/home.html


Y -http://www.yahoo.com/



நான் விரும்பி அழைக்க விரும்புவது...






Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites.
Tag 3 People.

August 14, 2008

காதல் எனப்படுவது ....யாதெனில்!!




காதல் எனப்படுவது யாதெனில்....என்ற தலைப்பில் தொடர் பதிவோட்டத்தில் என்னை[யும்] இணைத்த பதிவர் 'ஜோசஃப் பால்ராஜ்' க்கு என் நன்றி.

கற்பனை கதைகளில் காதலை மையமாக வைத்து கதாபாத்திரங்களை உருவாக்குவதை விட, 'காதலை' பற்றி தனிப்பதிவு எழுதுவது..........எத்தனை கடினமென்பதை இத்தொடர் ஓட்டத்தில் இணைத்தப்பின் தான் தெரிந்தது:((

காதலை பற்றிய என் கண்ணோட்டத்தை ஒரே வரியில் கூறவேண்டுமானால்,
காதல் எனப்படுவது.........

காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு!!!

காதல் குறித்து யோசித்தால், மனதில் எழும் கேள்விகள்....

உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா?
அல்லது
கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா??

இந்த முதல் கேள்விக்கான பதிலை ஆராய்ந்தால் அது பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' தான் மூலக்காரணமாக இருக்கும்.

சரி.......தீடிரென ஏற்பட்ட இந்த ' வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும்' உணர்வு காதலா?? Infactuation எனப்படும் இனக்கவர்ச்சியா??

வித்தியாசம் தெரிஞ்சுக்கனுமா.........??

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வு இனக்கவர்ச்சியா இருந்தா......

* உங்கள் மனதில் ஒரு தற்காலிக விருப்பத்தை மட்டுமே உருவாக்கும்.
* ஒருவித குற்றயுணர்வும் 'ஈர்ப்புடன்' சேர்ந்தே வரும்.
* அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும்.
* பார்வை பரிமாறுதலில், சந்திப்பில்.........பதற்றமான மனநிலையே அதிகம் இருக்கும்.

ஒ.கே infactuation னா எப்படி இருக்கும்னு தெரிஞ்சாச்சா..........அடுத்து கொஞ்ச நாள் நட்புடன் பழகிய ஒருவர் மீது உண்டாகும் நேசம் .........காதலா??.......அது காதல்னா எவ்விதமாக உணர்வீங்க.......??

*குணநலன்களில் வித்தியாசம் இருந்தாலும் ஒருவித புரிதல் இருவருக்குள்ளும் இருக்கும்.
*காதல், காமம், ஆசை விட..........ஆழமான நட்புணர்வே முதன்மையானதாக மேலோங்கி நிற்கும்.
*உங்களவர் உங்களுக்கே உங்களுக்குதான் என்ற வலிமையான உள் உணர்வு எப்போதும் இருக்கும்.
*பொறுமையாய் காத்திருந்து எதிர்காலத்தை திட்டமிட்டு காதலித்தவரை கைப்பிடிக்க வேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கும்.
*பண்பட்ட நட்புணர்வும், ஒருவர் மேல் இருவருக்கு மரியாதையும் இருக்கும்.
*அதீத மேக்கப், வெளித்தோற்றத்திற்கான முக்கியத்துவம், நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமூடி என எதுவும் இன்றி.......தான் தானாகவே இருப்பதையே மனம் விரும்பும்.
*சந்திக்கும் வேளைகளில் படப்படப்பின்றி......மனதில் ஒருவித இதமான தென்றல் வீசும்.

இப்போ உண்மையான காதல் உணர்வுதான் உங்களது என அறிந்து, இருவரும் காதலை பரிமாறிக்கொண்டு காதலிக்க ஆரம்பித்து விட்டீர்கள் .........இனி........???

காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்ச காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லட்சியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு, அனுசரித்துப் போவது காதல் வெற்றி பெற மிக மிக அசசியம்!

தேடி வந்து
என் இதய
வாசலை தட்டிய
உன்மேலான
என் நேசத்தை
அன்பு, பாசம்.....என்ற
வரையறைக்குள் அடைக்கவா?
நட்பு,காதல்....என்ற
எல்லைக்குள் நிறுத்தவா??
ம்ம்ம்....
இல்லை
இல்லவே இல்லை...
அதற்கும் மேலாய்
பலபடி உயர்வாய்
ஒரு பெயர் இருந்தால்
சொல்லேன்........
உன்பெயரோடு சேர்த்து
அதனையும்
என் இதய சிறையில்
சிறை வைக்க!!


இத்தொடர் ஓட்டத்திற்கு நான் விரும்பி அழைப்பது
என் அன்பு தோழி......
'கவி'இளவரசி தமிழ்மாங்கனி காயத்ரி.

August 12, 2008

நீ வேண்டும்.....நீ வேண்டும்.......என்றென்றும் நீ வேண்டும்!! - 6

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4

பகுதி - 5


நந்தினியின் சித்தப்பாவின் பதற்றம் கார்த்திக்கின் மனதை உலுக்கியது.

கண்கள் இருண்டு........பூமி தன்னை சுற்றி வேகமாக சுற்றுவது போன்றிருந்தது.....



திரும்பும் திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!

சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!

பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!


நந்தினியின் சித்தப்பா பேசி முடிப்பதற்குள் நந்தினியின் அப்பாவிற்கு கார்த்திக்கின் வருகைக்குறித்து வாசலில் இருந்த உறவுக்காரர் தகவல் தர, அவர் வீட்டினுளிருந்து வேகமாக கார்த்திக்கை நோக்கி கலவரமான முகத்தோடு வந்தார்.....அவரது கண்களில் தழும்பிய சோகமும் திகிலும்.........கார்த்திக்கின் மனதில் "பூகம்பம்' வெடிக்கச் செய்தது.

கார்த்திக்கின் அருகில் வந்த நந்தினியின் அப்பா ,கார்த்திக்கின் தலையில் அடிபட்ட இடத்திலிருந்த கட்டைப் பார்த்ததும்,

"மாப்ள ........தலையில....அடிபட்டிருக்கு...என்னாச்சு மாப்ள?"

"அது....ஒன்னுமில்ல........நந்......தினிக்கு.........என்னாச்சு"

"மாப்ள ......நந்தினிக்கு......பிரசவ வலி வந்துடுச்சு........உள்ளூர் ஆஸ்பத்திரில டாக்டரம்மா இல்ல.....வெளியூருக்கும் அவளை கூட்டிட்டு போக முடியாத படி பிரசவத்துல சிக்கல்.........அதான் பட்டணத்துக்கு.......கார் அனுப்பிருக்கோம் டாக்டர கூட்டிட்டு வர"

"........"

" மாப்ள........என்.......புள்ள...........வலியில துடிக்கிறா..........மாப்ள......என் உசிரே நடுங்குது"

பெத்த பிள்ளை செத்து பிழைக்கும் வேதனையை பொறுக்க முடியாமல் பேச்சிற்கு நடுவே பலமுறை உடைந்துப் போனார் அந்த அப்பா.

பிரசவ தேதிக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கையில்........நந்தினிக்கு பிரசவ வலியா??......அதுவும் சிக்கலுடன்..........

நந்தினி .......என் செல்லமே!
நான் இல்லாம
நீ வாழ
உன்னை
தயார் படுத்தின
எனக்கு
ஒரு நொடிக் கூட
நீ இல்லாம
வாழ முடியாதடி தங்கமே!!

நந்தினி..........நீ வேணும்டா..........எனக்கு.............நீ வேணும்.........கடவுளே என் நந்தினியை என்கிட்ட கொடுத்திடு!!

கார்த்திக்கின் சிந்தனையை வீட்டின் முன் வேகமாக வந்து நின்ற காரின் சத்தம் கலைத்தது.

பட்டணத்திலிருந்து பெண் மருத்துவரும் அவரது உதவியாளர்களாக இரண்டு நர்ஸும் வந்திறங்கினர்.

நந்தினி இருந்த அறைக்கு மருத்துவர் வேகமாக செல்ல, கார்த்திக் டாக்டரிடம்...

"டாக்டர்.....நான் நந்தினியோட.......ஹஸ்பெண்ட்......இந்த சமயத்துல அவ பக்கதுல இருக்கனும்னு விருப்பப்படுறேன்...ப்ளீஸ் டாக்டர்......அலோவ் மீ ப்ளீஸ்"

கண்களில் நீர் தழும்ப கைகூப்பி தன்னிடம் வேண்டும் ஒரு கணவனின் அன்பில் ஒரு நிமிடம் அதிசயத்துப் போனார் மருத்துவர்.

"அது........எப்படி......" என்று அவர் தயங்க.

"ப்ளீஸ் டாக்டர்.............ப்ளீஸ் அலோவ் மீ டாக்டர்"

"சரி.....உள்ள வாங்க"

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின் உறவுப்பிணைப்பிற்கு மேலும் வலுச்சேர்கும் என்று கார்த்திக்கின் தாய் தன் மகனை ஆறுதலாக தோளில் தட்டிக்கொடுத்தார்.

மருத்துவருடன் பிரசவ அறைக்குள் ஓர் ஆணா???
வியப்பில் விளித்தது அங்கு குழுமியிருந்த பெண்கள் கூட்டம்!

"என்னாதிது........பட்டணத்து மாப்ள இப்படி சொல்றாரு"
"இது என்ன பழக்கம்"
"அதெப்படி.......ஆம்பள உள்ளே போகலாம்......."

பெண்களின் மத்தியில் சலசலப்பு......

இதை எல்லாம் எதையும் பொருட்படுத்தாமல் டாக்டருடன் கார்த்திக் அறைக்குள் சென்றான்.

வலியில் துடித்துக் கதறும் தன் நந்தினியை கண்டதும் நெஞ்சு விம்மிக் கொண்டு வந்தது கார்த்திக்கிற்கு.

அவனை சற்றும் எதிர்பாராத நந்தினி.......வேதனையின் மத்தியிலும் அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்து புன்முறுவல் பூத்தாள்

அவளருகே சென்று....அவளது கரத்தை அழுத்திப் பிடித்த கார்த்திக்.....

"என்னை மன்னிச்சிருமா.......செல்லம்" என்று குரல் கம்ம கூறினான்.

அவனது அருகாமை........கையில் பதிந்த அழுத்தம், நந்தினிக்கு புத்துயிர் கொடுத்தது.

இவனது தலையிலிருந்த காயத்தை கவனித்தவள்,

சிவந்து கலங்கிய கண்களுடன்....."தலை.....யில் என்......னா....ச்சு" என்று தட்டு தடுமாறிக் கேட்டாள்.

"ஒன்னுமில்லடா............என்......னை......மன்.....னிச்சிடு.......மன்னி.....ச்........சிரு........" என்று மறுபடியும் விசும்பலுடன் அவள் கரத்தில் முகம் புதைத்தான்.

பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்,

"நீங்க....அவங்களுக்கு உறுதுணையா பக்கத்தில் இருப்பீங்கன்னு உள்ளே அலோவ் பண்ணினா..........இப்படி எமோஷனல் ஆகிறீங்க........கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்"

":ஸா.......ரி.......ஸாரி......டாக்டர் ........ஐ வில் கண்ட்ரோல் மைசெல்ஃப்"

'அவர் இருக்கட்டும் டாக்டர்' என்பது போல் சைகையால் டாக்டரிடம் தெரிவித்தாள் நந்தினி.

மருத்துவரின் சிகிச்சை தொடர்ந்தது, அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நர்சும் மும்முரமாக அங்கும் இங்கும் பரபரத்தபடி உதவி செய்தனர்.

நந்தினியின் கண்ணில் இருந்து கண்ணீர் கோடாக இருபக்கமும் இறங்கியிருந்தது.
அவளது வாய் ' வலிக்குதுப்பா' என்று முனுமுனுத்தபடி இருந்தது,
உதடுகள் வறண்டிருந்தன,
கார்த்திக்கிற்கு வேதனையாக இருந்தது.

மனதுக்குள், ' இவளே ஒரு குழந்தை என்று எண்ணுகிறேன்...........இவளோ என் குழந்தைக்காக வலி தாங்கிக் கொண்டிருக்கிறாளே!' என்று வியந்தான்!!!

அவள் கையை ஆறுதலாக பற்றிக்கொண்டான்.

அவர்களின் கண்கள் சந்தித்தபோது, உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன.

வலி குறைய தான் ஏதும் செய்ய முடியுமா? என அப்பாவியாக டாக்டரிடம் கேட்டான் கார்த்திக்.

"பொறுங்க சார்...........இரண்டு உயிரையும் காப்பாத்த போராடிட்டு இருக்கிறோம்........நீங்க வலியை பத்தி கவலைப்படுறீங்க"

மருத்துவர் இப்படி கூறியதும்.........இனம் புரியா ஒரு வித பயம் கார்த்திக்கை தாக்கியது.

இறைவனிடம் நேரிடையாக பேசுவதுபோல் மனதுக்குள் வேண்டிக்கொண்டான்
' ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனின்..........அது மகனாகவே இருக்கட்டும்........என் மனைவி மிஞ்சட்டும்' என்று இறைஞ்சினான் கார்த்திக்.

அறையின் வெளியே அனைவரும் குழந்தையின் அழுகுரல் கேட்க ஆவலாய் காதுகளை தீட்டிவைத்து காத்திருந்தனர்.

பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான் கார்த்திக்.

பிரசவ நேரத்தில் ஏற்பட்ட இக்கட்டான சூழலை திறம்பட கையாண்ட மருத்துவரின் உதவியால் நந்தினி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க மகன்!!

நந்தினி தன் குழந்தையை உச்சி முகர்ந்தாள்.......


அவளது நெற்றியில் பூத்திருந்த முத்து முத்தான வேர்வைத்துளிகளை துடைத்து 'அப்பா'வான பெருமிதத்துடன் பார்த்தான் கார்த்திக்.

தங்கள் குழந்தையின் ஸ்பரிசம் உடலில் சில்லிட......
இருவரின் கண்களிலும்
ஆனந்த கண்ணீர் துளிகள்!
அது வார்த்தைகளால் விவரிக்க
முடியா மணி துளிகள்!!

தன் குடும்பம் தழைத்தோங்க உதித்த 'பேரனை' கண்ணாரக் கண்டு களித்தார் காத்திக்கின் அன்னை......

தன் தாயிடம் குழந்தையை கொடுத்த கார்த்திக்....

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!



இனிதே தொடர்ந்தது கார்த்திக்-நந்தினியின் வாழ்க்கை பயணம்!!


முற்றும்.