December 12, 2006

கல்லூரி கலாட்டா - 6




கலாட்டா -1
கலாட்டா -2
கலாட்டா -3
கலாட்டா -4
கலாட்டா -5



ரமேஷ் தன்னருகில் விசும்பல் சத்தம் கேட்டு கண்விழித்த போது, அவன் அம்மா அழுதுக் கொண்டிருப்பதை கண்டான்.

ரமேஷின் அம்மாவும், அப்பாவும் அவன் மாமாவோடு வந்திருந்தனர். அதே சமயம் டாக்டருடன் ரம்யாவும் அவள் அப்பாவும் ரமேஷின் ரூமிற்குள் வந்தனர்.

' இந்த பொண்ணுதான் நம்ம ரமேஷோட காலையில ஆஸ்பத்திரிக்கு போனா' என தன் தங்கையின் காதில் கிசு கிசுத்தார் ரமேஷின் மாமா.

தன் அப்பாவிற்கு பின் மறைவாக நின்று கொண்டு கண்விழித்திருந்த ரமேஷை பார்த்தாள் ரம்யா.
அந்த பார்வையில் பரிதாபமோ, பட்சாதாபமோ, இரக்கமோ, கோபமோ, வருத்தமோ ....எந்த ஊணர்வையும் உணர முடியவில்லை ரமேஷிற்கு. எப்படிதான் இப்படி 'ஒண்ணும் தெரியாத குழந்தை' மாதிரி முகத்தை வைச்சிக்கிறாளோ என ஆச்சரியபட்டான் ரமேஷ்.

" இவ பெயர் ரம்யா, இவ தான் உங்க பையன சரியான நேரத்துல இங்க வந்து அட்மிட் பண்ணினா, இவர் அவளோட அப்பா, என்னோட க்ளோஸ் ஃபிரண்ட்" என்று ரம்யாவையும், அவள் அப்பாவையும் ரமேஷ் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார் டாக்டர்.

நன்றியுணர்வும் ஒரு வித பாசமும் கலந்த கண்களுடன் ரமேஷின் அம்மா ரம்யாவின் இரு கரங்களையும் பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறினாள்.

" என்னமா இது கண்கலங்கி கிட்டு, இந்த உதவி கூட செய்யலீனா எப்படிமா? , நீங்க இப்பதான் ஊரிலிருந்து வந்தீங்களா? ஏதும் சாப்பிடீங்களா, நான் வேணா வாங்கிட்டு வரட்டுமா?" என்று ரமேஷின் அம்மாவிடம் அக்கறையுடன் கேட்டாள் ரம்யா.

'ஐயோ! ஐயோ! என்னமா நடிக்கிறா பாரு, அம்மா அவ ராட்சஸி ,நல்லா நடிக்கிறா மா, நம்பாதீங்க' என்று கத்த வேண்டும் போலிருந்தது ரமேஷிற்கு.

ரம்யாவின் அழகும், பணிவும் ரமேஷின் அம்மாவை வெகுவாக கவர்ந்தன.

' பையன் புடிச்சாலும் நல்ல புள்ளையாதான் புடிச்சிருக்கான்' என மனதிற்குள் பூரித்துக் கொண்டாள்.
' ஆனா , இரண்டு பேரும் எதுக்கு ஆஸ்பத்திரிக்கு காலையில போனங்கன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் கண்டிச்சு வைக்கனும், இந்த காலத்து புள்ளைகளுக்கு எல்லாத்துக்கும் அவசரம், முதல்ல இவன் உடம்பு சரியாகட்டும் ' என மனதில் ஒரு திட்டமே தீட்டினாள் ரமேஷின் அம்மா.

இரண்டு நாட்களில் ரமேஷின் உடம்பு நன்கு் தேறியது. காலேஜில் க்ளாஸ் முடிந்து ரமேஷின் ஃப்ரண்ட்ஸ் நேராக ரமேஷை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

" என்னடா மச்சி, ஃபர்ஸ்ட் இயர்ஸ்க்கு க்ளாஸ் ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆகுது, அதுக்குள்ள சூப்பர் ஃபிகருக்கு ப்ராக்கட் போட்டுட்ட, 3 வருஷமா வண்டி வண்டி யா கடலை வறுத்த, ஆனா இப்பதான் ஆளு மாட்டுச்சாக்கும்" என கிண்டல் அடித்தனர் அவன் நண்பர்கள்.

" சே, அதெல்லாம் ஒண்ணுமில்லடா......" என்று ரமேஷ் சமாளிக்க முயல,
" என்ன எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா? அன்னைக்கு கம்பியூட்டர் லேபிற்கு தனியா கூப்பிட்டு பேசியிருக்க, இங்க ஆஸ்பத்திரியில என்னனா அவ விழுந்து விழுந்து உன்ன கவனிச்சுக்கிறா, எங்களுக்கு எல்லாம் புரியுது மாமு" என்று கலாய்த்தார்கள். பின நண்பர்கள் அனைவரும் ஹாஸ்டலுக்கு சென்றுவிட்டனர்.

' அடபாவமே! உண்மையில என்ன நடந்ததுன்னு இவனுங்களுக்கு எப்படி சொல்லி புரியவைக்கிறது, அவ மேல எனக்கு அப்படி எந்த ஈர்ப்பும் ஈடுபாடும் இல்லன்னு சொன்னா புரிஞ்சுக்கவா போறாங்க' என்று மனதிற்குள் ரமேஷ் நினைத்போது, இன்னும் ஒரு நினைப்பும் வந்தது அவனுக்கு.........

' பசங்க சொல்றமாதிரி அவ என்னையும் அம்மாவையும் கவனிச்சிக்கிறது உண்மைதான், அப்படின்னா........ஒருவேளை அவ மனசுல...........என்........மேல.......ஏதும் அப்படி ....ஒரு எண்ணம்............' என்று அவன்
நினைத்து முடிப்பத்ற்குள் சிறிது திறந்திருந்த அவன் ரூமின் கதவு வழியாக வெளியில் பேச்சு குரல் கேட்டது.

முப்பெருந்தேவிகளின் குரல் தான் [ஒட்டு] கேட்டு ரமேஷிற்கு பரிட்சயமாகிவிட்டதே, அதனால் வெளியில் பேசி கொண்டிருப்பது அவர்கள் மூவரும் தான் என தெரிந்து கொண்டான், கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் அவர்கள் உரையாடலை....................

ஷீத்தல்: ஏய் ரம்ஸ் இன்னிக்கோட மூனு நாள் ஆச்சு, டெய்லி காலையில காலேஜ் போறதுக்கு முன்னாடி ஆஸ்பத்திரிக்கு வந்து ரமேஷ பார்க்கிற, உன் அப்பா கிட்ட சொல்லி டாக்டர நல்லா கவனிச்சுக்க சொல்ற, அவன் மாமா வீட்டுல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்கன்னு ராத்திரி ஆனா அவன் அம்மாவுக்கு டிஃபன் பாக்ஸ்ல வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துட்டு வர........என்ன இதெல்லாம்??

பவானி: ஆமா ரம்ஸ் , நானும் கேட்கனும்னு தான் இருந்தேன், ஆர் யு இன் லவ் ???

ரம்யா: ஐயோ , ஐயோ!! உங்க கற்பனை சிறகை அப்படியே தட்டி பறக்க விட்டுடிங்களா,
ரோட்டுல அடிபட்டு கிடந்த ஒருத்தருக்கு உதவி செய்றது, ஆஸ்பத்திரில சேர்க்கிறது இதெல்லாம் மனிதாபிமானம் . அடிபட்டு கிடந்தது அறுபது வயசு ஆளாயிருந்தாலும் இதே ஹெல்ப் தான் பண்ணியிருப்பேன், அதுவும் ரமேஷிற்கு இப்படி ஆனதிற்கு நானும் ஒரு காரணம்,
ரமேஷ் ஹாஸ்டல் ஸ்டுடண்ட்ற முறையில என் வீட்டிலிருந்து அம்மா சாப்பாடு கொடுத்தனுப்புறாங்க.
இதுக்கெல்லாம் பெயர் உங்க அகராதில ' காதல்' னா நான் ஒண்ணும் பண்ண முடியாது.

ஒருத்தர் மேல இரக்கபடுறதினாலயோ, உதவி செய்றதினாலயோ, நன்றியுணர்வு ஏற்படுவதினாலயோ காதல் வரும்னு நான் நினைக்கல.

ஷீத்தல: ஹேய் ரம்ஸ் உனக்கு அவன் மேல லவ்ஸ் இல்ல ஓ.கே, ஒருவேளை அவனுக்கு ' பாவம் பொண்ணு' அடிச்சுட்டோமே , நம்மள ஆஸ்பத்திரியில கொண்டுவந்து வேற சேர்த்திருக்கா, அப்படி ........இப்படின்ன்னு ....ஃபீலிங்ஸ் வந்து , உன் மேல லவ்ஸ் வந்திருக்குமோ???

ரம்யா: சே, சே.........அவன பார்த்தா அப்படி தெரியல.

பவானி: எதை வைச்சு இவ்வளவு உறுதியா சொல்ற??

ரம்யா: அவன் கண்ணுல இன்னும் என் மேல கோபம் இருக்கு, மோர் ஓவர்...........மோதல்னா அப்புறம் காதல்னு
சினிமாத்தனமா அவன் மூளை வேலை செய்யும்னு எனக்கு தோனல.

பவானி: அவன் மூளை வேலையே செய்யாதா, இல்ல அவன் மூளை சினிமாத்தனமா வேலை செய்யாதுன்னு சொல்றியா??

ரம்யா: இது ரொம்ப ஓவர் பவானி..........விட்டா அவனுக்கு மூளைன்னு ஒன்னு இருக்கான்னு கேட்ப போலிருக்கு?

ஷீத்தல்: ஹே, போதும் நம்ம அரட்டை, அப்புறமா பேசலாம், ரமேஷிற்கு ஏற்கனவே பாம்பு காது, இப்போ நாம பேசினது
எல்லாம் கேட்டுட்டு இருந்தாலும் இருந்திருப்பான்.

பவானி: பாவம் ரம்யா, அப்புறம் இதுக்கு வேற இன்னொரு அரை வாங்க போறா ............

இப்படி இவர்கள் பேசி கோண்டிருக்க , ரமேஷின் மாமாவும், அம்மாவும் வந்து விட, மூன்று தேவிகளும் தங்கள் அப்பாவி முகக்களைக்கு வந்தனர்.

அவர்கள் மூவரும் பேசியது அனைத்தையும் கேட்ட ரமேஷ்............

' அதானே பார்த்தேன் ராட்சஸி அவ்வளவு லேசுல மாறுவாளா??? இன்னும் என்ன எல்லாம் டிராமா போட போறாளோ? '
ஆனாலும், என்னமோ ' அழகிய ராட்சஸியின்' வாயாடி தனமும், குறும்பும் நல்லாதான் இருக்கு!

என நினைத்துக் கோண்டான் ரமேஷ்.

கல்லூரியில் மோதல்னா அது காதல்லதான் முடியும்ன்ற சராசரி எண்ணம் ரம்யாவிற்கு இல்லாதது அவனுக்கு பிடித்திருந்தது.


கண்ணும் கண்ணும் நோக்கினால்- காதல் பிறக்கலாம்

உடல் ஸ்பரிசத்தினால்- மோகம் பிறக்கலாம்

வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????

[முற்றும்]

169 comments:

said...

//கண்ணும் கண்ணும் நோக்கினால்- காதல் பிறக்கலாம்

உடல் ஸ்பரிசத்தினால்- மோகம் பிறக்கலாம்

வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????//

பிரசவச் செலவுக்குக் காசா பணமாப் பிறந்துட்டுத் தான் போகட்டுமே

said...

ரம்யா!!
கதை நல்லா போகுது... நான் தான் இன்னிக்கி முதல் கமெண்டா??..
பார்க்கலாம் காதலா , நட்பா, மோதலானு...
நல்லா கொண்டு போரீங்க கதைய..
அடுத்த பதிவுக்காக காத்து கொண்டு இருக்கேன்...
அப்ப்டியே நம்ப பதிவ படித்து பாருங்க!!

said...

சீக்கிரமா காப்பிரைட் வாங்கி வச்சுக்குங்க திவ்யா :)) பரயில்லையே இதுதான் வரப்போகுதுன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்குறப்போ ஏன் ஏமாத்தறீங்க ? :))) ஆனா நல்லாத்தேன் இருக்கு முடிவு !!

Anonymous said...

//கல்லூரியில் மோதல்னா அது காதல்லதான் முடியும்ன்ற சராசரி எண்ணம் ரம்யாவிற்கு இல்லாதது அவனுக்கு பிடித்திருந்தது.//

Well said!! ஆனால், இவர்களின் மோதல் பரஸ்பர புரிதலுக்குப் பின் காதலாக மாறும் என நம்புகிறேன்.. சரிதானே? கதை நன்றாக போகிறது.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்!!!

said...

//இரண்டு பேரும் எதுக்கு ஆஸ்பத்திரிக்கு காலையில போனங்கன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் கண்டிச்சு வைக்கனும், இந்த காலத்து புள்ளைகளுக்கு எல்லாத்துக்கும் அவசரம், //

ரொம்ப முற்போக்கு சிந்தனை கொண்ட அம்மாவா இருக்காங்க திவ்யா.. இப்படி எல்லாம் நிஜத்துல பாக்கமுடியுமான்னு தெரில :-)

Anonymous said...

நான் தான் first!!

//வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????//

தாராளமா பிறக்கலாம்!!!
எல்லாரும் காதல்ல முடிக்கறது bore!! for a change நீங்க காதல் கலக்காத துய்மையான நட்புக்காக கதை எழுதுங்களேன்!!

said...

//ரமேஷ் தன்னருகில் விசும்பல் சத்தம் கேட்டு கண்விழித்த போது, அவன் அம்மா அழுதுக் கொண்டிருப்பதை கண்டான்.//
இதுக்கு பேர் தான் அல்வாவா திவ்யா?

கதை நல்லா போகுது. எங்க போகும்னு guess பண்ண முடியல.

முப்பெரும் தேவியர் என்ன எப்ப பாத்தாலும் ரமேஷூக்கு ஒட்டு கேக்க வசதியா பேசராங்க. கொஞ்சம் ஜாக்ரதயா பேச சொல்லுங்க..

Anonymous said...

அருமையாக முடித்திருக்கிறீர்கள், உங்களது கதையை நாங்கள் ஒன்றும் குழப்பிவிடவில்லையே. அடுத்த கதையை சடுதியில் இடவும்.

பிரியமுடன்,
ப்ரியா.

said...

6 epdisode முடிஞ்சாச்சு இன்னும் லவ்ஸ் வரலயே...எனக்கு புரிஞ்சு போச்சு இது மெகா சீரியல்...ஆன interesting story :-)

Anonymous said...

First comment is mine. Whether the story is over or going to continue. Kind of interesting, keep the story moving. It remembers me, my old days for waiting for AnanthaVikatan or Kumudham.

KVB

said...

\" தேவ் | Dev said...
//கண்ணும் கண்ணும் நோக்கினால்- காதல் பிறக்கலாம்

உடல் ஸ்பரிசத்தினால்- மோகம் பிறக்கலாம்

வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????//

பிரசவச் செலவுக்குக் காசா பணமாப் பிறந்துட்டுத் தான் போகட்டுமே \"

வருகைக்கு நன்றி தேவ்!

said...

\" dubukudisciple said...
ரம்யா!!
கதை நல்லா போகுது... நான் தான் இன்னிக்கி முதல் கமெண்டா??..
பார்க்கலாம் காதலா , நட்பா, மோதலானு...
நல்லா கொண்டு போரீங்க கதைய..
அடுத்த பதிவுக்காக காத்து கொண்டு இருக்கேன்...
அப்ப்டியே நம்ப பதிவ படித்து பாருங்க!!\"

டுபுக்கு டிஸைப்பிள் உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!
கதையை இத்தோடு முடிச்சுக்கலாம்னு நினைச்சேன்,ஆனா அடுத்த பகுதிக்காக நீங்க வெயிட் பண்றேன்னு சொல்றீங்க?
உங்கள் பதிவுகள் படித்தேன் டுபுக்கு, பின்னூட்டமிட்டேன் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்!

[ யாரு முதல் கமண்ட் போட்டாங்கன்னு எனக்கு தெரியலீங்க, நான் போஸ்ட் போட்டுட்டு தூங்க போய்ட்டேன், காலையில் எனக்கு வந்திருந்த மெயில் வரிசையில் கமண்ட்ஸ் பப்ளிஷ் பண்ணிட்டேன், ஸோ யாரு கமண்ட் ஃபர்ஸ்ட் ன்னு எனக்கு தெரியலீங்க, எனிவே உங்கள் வருகைக்கு மிக்க நன்றி]

said...

\" ஜொள்ளுப்பாண்டி said...
சீக்கிரமா காப்பிரைட் வாங்கி வச்சுக்குங்க திவ்யா :)) பரயில்லையே இதுதான் வரப்போகுதுன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்குறப்போ ஏன் ஏமாத்தறீங்க ? :))) ஆனா நல்லாத்தேன் இருக்கு முடிவு !! \"

வருகைக்கு நன்றி பாண்டி.

காப்பிரைட் வாங்க சொல்லி கிண்டலா???

said...

திவ்யா அவர்களே,

கதை முடிஞ்சிருச்சா இல்ல தொடருதா..

கீழ ஒரு தொடரும் இல்லாட்டி முற்றும் போட்டா குறைஞ்சா போயிடுவீங்க... :))

நீங்க சஸ்பென்ஸ் எதுவும் வைக்காததால் இது முடிவுன்னு நினைக்கிறேன்.

இதுதான் முடிவுன்னா கைதட்டி வரவேற்கிறேன்..

இது படிக்கற காலத்துல கீற ஈர்ப்பு மட்டுமே..

படிச்சு முடிச்சதுக்கப்புறமும் இந்த ஈர்ப்பு இருந்தா, இவர்கள் இணையட்டும்..

அது வரிக்கும் நட்பு கொடி பறக்கட்டும்...

நல்ல கதை.. பாருங்க புல்லரிச்சு போயி எனக்கே செந்தமிழ்ல வார்த்தையா கொட்டுது...

பாராட்டுக்கள் ஃப்ரம்
அரைபிளேடு.

said...

\"கத்துக்குட்டி said...
//கல்லூரியில் மோதல்னா அது காதல்லதான் முடியும்ன்ற சராசரி எண்ணம் ரம்யாவிற்கு இல்லாதது அவனுக்கு பிடித்திருந்தது.//

Well said!! ஆனால், இவர்களின் மோதல் பரஸ்பர புரிதலுக்குப் பின் காதலாக மாறும் என நம்புகிறேன்.. சரிதானே? கதை நன்றாக போகிறது.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்!!!\"

கத்துக்குட்டி உங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி!

[பரஸ்பர புரிதலுக்கு பின் காதல் மலருவது நல்லது, சாத்தியமும் கூட.....ஆனால் நான் இந்த தொடரை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்]

said...

\" மு.கார்த்திகேயன் said...
//இரண்டு பேரும் எதுக்கு ஆஸ்பத்திரிக்கு காலையில போனங்கன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் கண்டிச்சு வைக்கனும், இந்த காலத்து புள்ளைகளுக்கு எல்லாத்துக்கும் அவசரம், //

ரொம்ப முற்போக்கு சிந்தனை கொண்ட அம்மாவா இருக்காங்க திவ்யா.. இப்படி எல்லாம் நிஜத்துல பாக்கமுடியுமான்னு தெரில :-) \"

கார்த்திக், ரமேஷின் அம்மாவை பாராட்டிய உங்களூக்கு அவங்க சார்ப்ல நன்றி!! [ நிஜத்துல இருப்பாங்களான்னு எனக்கும் தெரியலீங்க, ஆனா என் கதையில வர்ர அம்மா அப்படி முற்போக்கு சிந்தனையுள்ள அம்மாவாக இருப்பது எனக்கு பிடித்திருந்தது]

said...

\"aparnaa said...
நான் தான் first!!

//வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????//

தாராளமா பிறக்கலாம்!!!
எல்லாரும் காதல்ல முடிக்கறது bore!! for a change நீங்க காதல் கலக்காத துய்மையான நட்புக்காக கதை எழுதுங்களேன்!! \"

அபர்ணா, உங்கள் கருத்துகளுக்கும் வருகைக்கும் நன்றி.

நிஜம்மா எனக்கு யாரு முதல் பின்னூட்டம் போட்டாங்கன்னு தெரியலீங்க.......ஸோ உங்களுக்கும் அதே பதில்

[ நான் போஸ்ட் போட்டுட்டு தூங்க போய்ட்டேன், காலையில் எனக்கு வந்திருந்த மெயில் வரிசையில் கமண்ட்ஸ் பப்ளிஷ் பண்ணிட்டேன், ஸோ யாரு கமண்ட் ஃபர்ஸ்ட் ன்னு எனக்கு தெரியலீங்க, எனிவே உங்கள் வருகைக்கு மிக்க நன்றி]

said...

நல்ல முடிவு...

நீங்க நினைக்கிற மாதிரி சண்டை போட்டா படத்துல மட்டும்தான் காதல் வரும்னு கிடையாது. எனக்கு தெரிஞ்சி நிறைய ஃபிரெண்ட்ஸ் முதல்ல சண்டை போட்ட பொண்ணுங்களை தான் காதலிச்சிருக்காங்க.

சரி இந்த கதையை பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்...

said...

\" Priya said...
//ரமேஷ் தன்னருகில் விசும்பல் சத்தம் கேட்டு கண்விழித்த போது, அவன் அம்மா அழுதுக் கொண்டிருப்பதை கண்டான்.//
இதுக்கு பேர் தான் அல்வாவா திவ்யா?

கதை நல்லா போகுது. எங்க போகும்னு guess பண்ண முடியல.

முப்பெரும் தேவியர் என்ன எப்ப பாத்தாலும் ரமேஷூக்கு ஒட்டு கேக்க வசதியா பேசராங்க. கொஞ்சம் ஜாக்ரதயா பேச சொல்லுங்க.. \"

ப்ரியா, அதுக்கு பேரு அல்வா இல்லீங்கோ! யாராவது கரக்ட்டா கண்டுபிடிக்கிறாங்களான்னு பார்த்தேன், விநய் ன்னு ஒருத்தர் மட்டும் சரியா guess பண்ணியிருந்தார்.

முபெருந்தேவியரின் உரையாடலை ரமேஷ் ஒட்டு கேட்பதில் கதையை ஆரம்பித்ததால், அந்த ஒட்டு கேட்கிற விஷயத்துலயே கதையை முடித்தேன்!

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ப்ரியா.

said...

ப்ரியா உங்கள் பாரட்டுகளூக்கு நன்றி.
[ எனது கதையினை நீங்கள் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை]

said...

\Syam said...
6 epdisode முடிஞ்சாச்சு இன்னும் லவ்ஸ் வரலயே...எனக்கு புரிஞ்சு போச்சு இது மெகா சீரியல்...ஆன interesting story :-)\"

என்ன ஷ்யாம் டி.வி மெகா சீரியல்ன்னு முடிவே பண்ணிடீங்களா??

[ லவ்ஸ் வந்து தான் கதையை முடிக்கனுமா என்ன???]

said...

\"Anonymous said...
First comment is mine. Whether the story is over or going to continue. Kind of interesting, keep the story moving. It remembers me, my old days for waiting for AnanthaVikatan or Kumudham.

KVB \"

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி KVB,
தொடர் இத்துடன் முடிகிறது KVB.

குமுதம், ஆனந்த விகடன் எதிர்பார்ர்கிற அளவுக்கு என்னோட தொடர் கதையின் எதிர்பார்ப்பை வெளிபடுத்தியிருக்கிறீர்கள், மிக்க நன்றி!

[ Old days ல் ஆனந்த விகடன், குமுதம் காக வெயிட் பண்ணுவீங்கன்னு சொல்லியிருக்கிறீங்க.........அப்போ இப்ப எல்லாம் நீங்க குமுதம் ஆனந்த விகடன் படிக்கிறதில்லீங்களா??]

said...

//லவ்ஸ் வந்து தான் கதையை முடிக்கனுமா என்ன???]//

விவேக் ஸ்டைல்ல சொல்லனும்னா லவ்வு லவ்வுதான் கவ்வுகவ்வு தான்...ஒன்னும் அவசரபட்டு முடிச்சுடாதீங்க நல்லா போகுது :-)

said...

\" அரை பிளேடு said...
திவ்யா அவர்களே,

கதை முடிஞ்சிருச்சா இல்ல தொடருதா..

கீழ ஒரு தொடரும் இல்லாட்டி முற்றும் போட்டா குறைஞ்சா போயிடுவீங்க... :))

நீங்க சஸ்பென்ஸ் எதுவும் வைக்காததால் இது முடிவுன்னு நினைக்கிறேன்.

இதுதான் முடிவுன்னா கைதட்டி வரவேற்கிறேன்..

இது படிக்கற காலத்துல கீற ஈர்ப்பு மட்டுமே..

படிச்சு முடிச்சதுக்கப்புறமும் இந்த ஈர்ப்பு இருந்தா, இவர்கள் இணையட்டும்..

அது வரிக்கும் நட்பு கொடி பறக்கட்டும்...

நல்ல கதை.. பாருங்க புல்லரிச்சு போயி எனக்கே செந்தமிழ்ல வார்த்தையா கொட்டுது...

பாராட்டுக்கள் ஃப்ரம்
அரைபிளேடு. \"

பிளெடு, முதல் முறையா
செந்தமிழ்ல[?] நீங்க எழுதி பார்க்கிறேன்.
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

[ முற்றும் னு போடமா விட்டது என் தப்புதாங்க, சுட்டி காட்டியதற்கு நன்றி]

Anonymous said...

//பரஸ்பர புரிதலுக்கு பின் காதல் மலருவது நல்லது, சாத்தியமும் கூட.....ஆனால் நான் இந்த தொடரை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்] //

நல்லா இருந்தது இதுவரை..இப்படியே முடிச்சுவைப்பா திவ்யா.அது தான் நல்லது..ரசிகர்களுக்காக மாத்தினா மெகா சீரியல் மாதிரி எங்க போகும்ன்னு தெரியாது.{எப்படியும் நீ சேர்த்துவைத்தாலும் கல்யாணத்துக்கப்பறம் மோதல் தான் இருக்கபோது}

said...

\" வெட்டிப்பயல் said...
நல்ல முடிவு...

நீங்க நினைக்கிற மாதிரி சண்டை போட்டா படத்துல மட்டும்தான் காதல் வரும்னு கிடையாது. எனக்கு தெரிஞ்சி நிறைய ஃபிரெண்ட்ஸ் முதல்ல சண்டை போட்ட பொண்ணுங்களை தான் காதலிச்சிருக்காங்க.

சரி இந்த கதையை பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்\"

வெட்டி உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

[ சினிமாவில் சண்டை போட்டா, அந்த மோதல் காதல்ன்னு தான் முக்காவாசி படத்துல முடியும்,
நிஜத்துல அப்படி பட்ட காதல் ரொம்ப கம்மி,
அப்படி ஒரு கட்டாயமும் நிஜ வாழ்க்கையில் தேவையில்லை என்பது என் கதையின் கருத்து]

said...

முடிவு நன்றாக இருக்கிறது திவ்யா!

படித்தவுடன் நினைவுக்கு வந்த பாடல்.

தோழா தோழா, கனவுத் தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சிக்கணும்

நட்பைப் பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சிக்கணும் ஒண்ணொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதலாகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது, நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது, நட்புக்குள் ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூலெடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லிய உண்மை
நீயும் நானும் பழகுறமே காதலாகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

தனன னன தானா னானா .... ..... ...... ......

நீயும் நானும் வெகுநேரம் மனம் விட்டுப் பேசிச் சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி?
புரிதலில் காதல் இல்லையடி பிரிதலில் காதலைச் சொல்லுமடி!
காதல் காதல்தான் நட்பு நட்புதான், நட்பின் வழியிலே காதல் வளருமே
பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட பிரிந்தபின் ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம்.....(ஆ இது கரெக்ட்)
அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பாத்துக்கலாம்

தோழா தோழா, கனவுத் தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சிக்கணும்

நட்பைப் பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சிக்கணும் ஒண்ணொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம்.....(ஆ இது கரெக்ட்)
அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பாத்துக்கலாம்

said...

//பார்க்கலாம் காதலா , நட்பா, மோதலானு...
நல்லா கொண்டு போரீங்க கதைய..
//

அடுத்த பகுதியா! முற்றும் என்று போட்டிருந்தார்களே! நான் சரியாப் பார்க்கலியோ?

said...

//பரயில்லையே இதுதான் வரப்போகுதுன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்குறப்போ ஏன் ஏமாத்தறீங்க ? :))) ஆனா நல்லாத்தேன் இருக்கு முடிவு !!
//

இந்த சோகம் கூட சுகமான சோகம்தான்
பாண்டியண்ணே!

said...

\"Syam said...
//லவ்ஸ் வந்து தான் கதையை முடிக்கனுமா என்ன???]//

விவேக் ஸ்டைல்ல சொல்லனும்னா லவ்வு லவ்வுதான் கவ்வுகவ்வு தான்...ஒன்னும் அவசரபட்டு முடிச்சுடாதீங்க நல்லா போகுது :-) \"

அவசரபட்டு முடிக்கலீங்க ஷ்யாம், கதையை இத்துடன் முடிப்பதாக தான் நான் முடிவு செய்திருந்தேன்
[ அடுத்த தொடர்..........மெகா தொடர் தோற்கிற அளவுக்கு எழுதிடுறேன், ஓகே வா ஷ்யாம்]

said...

\"லட்சுமி said...
//பரஸ்பர புரிதலுக்கு பின் காதல் மலருவது நல்லது, சாத்தியமும் கூட.....ஆனால் நான் இந்த தொடரை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்] //

நல்லா இருந்தது இதுவரை..இப்படியே முடிச்சுவைப்பா திவ்யா.அது தான் நல்லது..ரசிகர்களுக்காக மாத்தினா மெகா சீரியல் மாதிரி எங்க போகும்ன்னு தெரியாது.{எப்படியும் நீ சேர்த்துவைத்தாலும் கல்யாணத்துக்கப்பறம் மோதல் தான் இருக்கபோது} \"

லட்சுமி, உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

[ கல்யாணத்துக்கு அப்புறம் மோதல்தான் இருக்கபோகுதுன்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க??]

said...

திவ்யா!
கதை அருமை! தொடர் முழுவதும் இன்றுதான் படித்தேன்!

வாழ்த்துக்கள்!

வழக்கமான பாணியில் அல்லாமல் யதார்த்தமான முடிவு!

எல்லா மோதல்களும் காதலில் முடிவதில்லை! அழகான நட்பாகவும் பூக்கின்றன!

இதுவும் அவ்வகையில் அபூர்வ குறிஞ்சிப்பூவே!

said...

\"நட்புக்குள் பொய்கள் கிடையாது, நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது, நட்புக்குள் ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூலெடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை\"

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் சிபி.

பாட்டு lyrics போட்டு கலக்கிட்டீங்க பின்னூட்டத்தை, நன்றி சிபி.

said...

\" நாமக்கல் சிபி said...
//பார்க்கலாம் காதலா , நட்பா, மோதலானு...
நல்லா கொண்டு போரீங்க கதைய..
//

அடுத்த பகுதியா! முற்றும் என்று போட்டிருந்தார்களே! நான் சரியாப் பார்க்கலியோ? \"

நீங்க சரியாதான் பார்த்திருக்கிறீங்க சிபி,

முற்றும்னு நான் இப்பதான் போட்டேன், முதலில் போட மறந்துட்டேன், அந்த கமண்ட்ஸ் எல்லாம் முற்றும்னு நான் போடுவதற்கு முன் எழுதியது

Anonymous said...

//[ கல்யாணத்துக்கு அப்புறம் மோதல்தான் இருக்கபோகுதுன்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க??] //
காதல் கல்யாணமோ பார்த்துவைத்த கல்யாணமோ கல்யாணத்துக்கப்புறம் காதலோடு கண்டிப்பா மோதலும் தொடரும் அதுதான் நிஜமான வாழ்க்கை.
மோதல் இல்லாத வாழ்க்கை வாழறதா யாராச்சும் சொன்னா நம்புறது கஷ்டம் .

said...

\"இரா.ஜெகன் மோகன் said...
திவ்யா!
கதை அருமை! தொடர் முழுவதும் இன்றுதான் படித்தேன்!

வாழ்த்துக்கள்!

வழக்கமான பாணியில் அல்லாமல் யதார்த்தமான முடிவு!

எல்லா மோதல்களும் காதலில் முடிவதில்லை! அழகான நட்பாகவும் பூக்கின்றன!

இதுவும் அவ்வகையில் அபூர்வ குறிஞ்சிப்பூவே!
\"

ஜெகன் மோகன், உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

தொடர் முழுவதையும் ஒரே சமயத்தில் பொறுமையுடன் படித்திருக்கிறீர்கள், மிக்க நன்றி!

உங்கள் பின்னூட்டத்தில் , அழகான நட்பை அபூர்வ குறிஞ்சி பூவாக சித்தரித்திருக்கிறீர்கள், அருமை!!!

said...

\"லட்சுமி said...
//[ கல்யாணத்துக்கு அப்புறம் மோதல்தான் இருக்கபோகுதுன்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க??] //
காதல் கல்யாணமோ பார்த்துவைத்த கல்யாணமோ கல்யாணத்துக்கப்புறம் காதலோடு கண்டிப்பா மோதலும் தொடரும் அதுதான் நிஜமான வாழ்க்கை.
மோதல் இல்லாத வாழ்க்கை வாழறதா யாராச்சும் சொன்னா நம்புறது கஷ்டம் . \"

காதலோட கலந்த மோதல்னா அந்த திருமணவாழ்க்கை தித்திக்கும்.

Anonymous said...

என்னங்க திடீர்னு முடிச்சிட்டீங்க!

வித்தியாசமாகவும் இருக்குது. அதே சமயம் டக்குனு முடிஞ்ச மாதிரியும் இருக்குது. ஏதோ சம்திங் மிஸ்ஸிங்.

[இன்னிலேயிருந்து எல்லாப் பொண்ணுங்களும் என்னோட தோஸ்துபா]

said...

\"லட்சுமி said...
//[ கல்யாணத்துக்கு அப்புறம் மோதல்தான் இருக்கபோகுதுன்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க??] //
காதல் கல்யாணமோ பார்த்துவைத்த கல்யாணமோ கல்யாணத்துக்கப்புறம் காதலோடு கண்டிப்பா மோதலும் தொடரும் அதுதான் நிஜமான வாழ்க்கை.
மோதல் இல்லாத வாழ்க்கை வாழறதா யாராச்சும் சொன்னா நம்புறது கஷ்டம் . \"

லட்சுமி, நிஜவாழ்க்கையின் யதார்த்தை உணர்த்தியிருக்கிறீர்கள், உங்கள் கருத்துகளுக்கு நன்றி!

said...

\"ஜி said...
என்னங்க திடீர்னு முடிச்சிட்டீங்க!

வித்தியாசமாகவும் இருக்குது. அதே சமயம் டக்குனு முடிஞ்ச மாதிரியும் இருக்குது. ஏதோ சம்திங் மிஸ்ஸிங்.

[இன்னிலேயிருந்து எல்லாப் பொண்ணுங்களும் என்னோட தோஸ்துபா] \"

ஜி, உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

[ எல்லா பொண்ணுங்களையும் இது வரை என்னன்னு நினைச்சுட்டுயிருந்தீங்க ஜி????]

said...

good ending..
enna oru super-screen play mm..

first 2 episode deadly trios typical collge type environment and interaction..

appadi oru college song podukalam

Then story dragging characters( rather hero/heroine) punch dialogue and interaction.

Story driven environment villans like ramesh's uncle, accident

appuram oru amma/appa sentiment.

inga oru amma pattu podalam.

appuram again story dragging characters dream song onnumm swizz illa newyork nagaram maathiri..

then again deadly trio discussion to explain the other side of the coin like typical balachander movie where sub-characters ask question to main character..

appuram bhakaiyaraj movie mathirii oru sharp ending..

Ka Ka Ko Po - enna to decode this u need to watch 23rd Pulikesai :)

Anonymous said...

// நாமக்கல் சிபி said...
முடிவு நன்றாக இருக்கிறது திவ்யா!

படித்தவுடன் நினைவுக்கு வந்த பாடல்.

தோழா தோழா, கனவுத் தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சிக்கணும்//

சூப்பர் சிபி. இந்தப் பாட்டத்தான் நாங்க காலேஜ் கட்ட செவுருல உக்காந்து, ஏதாவது பையனும் பொண்ணும் நடந்து போனாங்கன்னா, பாடி கலாய்ப்போம்.

said...

\" Adiya said...
good ending..
enna oru super-screen play mm..

first 2 episode deadly trios typical collge type environment and interaction..

appadi oru college song podukalam

Then story dragging characters( rather hero/heroine) punch dialogue and interaction.

Story driven environment villans like ramesh's uncle, accident

appuram oru amma/appa sentiment.

inga oru amma pattu podalam.

appuram again story dragging characters dream song onnumm swizz illa newyork nagaram maathiri..

then again deadly trio discussion to explain the other side of the coin like typical balachander movie where sub-characters ask question to main character..

appuram bhakaiyaraj movie mathirii oru sharp ending..

Ka Ka Ko Po - enna to decode this u need to watch \"

அஹா Adiya, தொடர் கதையின் நடையை அப்படியே சினிமா பார்வையில் அழகா சொல்லியிருக்கிறீங்க, அருமை!!! நன்றி Adiya.
[ எங்க , என்ன பாட்டு போடலாம், பாட்டு எங்க படம்பிடிக்கலாம்னு கூட சொல்லிடீங்க,
பேசமா நானொரு திரைகதை எழுதி, உங்கள டைரக்டரா போட்டு, சிபி யை பாடலாசிரியரா போட்டு, வெட்டிய டயலாக் எழுத சொல்லி, நாட்டமைய தயாரிப்பாளரா ஆக்கிடலாம்]

said...

\"ஜி said...
// நாமக்கல் சிபி said...
முடிவு நன்றாக இருக்கிறது திவ்யா!

படித்தவுடன் நினைவுக்கு வந்த பாடல்.

தோழா தோழா, கனவுத் தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சிக்கணும்//

சூப்பர் சிபி. இந்தப் பாட்டத்தான் நாங்க காலேஜ் கட்ட செவுருல உக்காந்து, ஏதாவது பையனும் பொண்ணும் நடந்து போனாங்கன்னா, பாடி கலாய்ப்போம். \"

என்ன ஜி மலரும் நினைவுகளா???

said...

//இன்னிலேயிருந்து எல்லாப் பொண்ணுங்களும் என்னோட தோஸ்துபா//

இதுவரை சகோதரிகளாக நினைத்திருந்தார் நம்ம ஜி!

said...

\" நாமக்கல் சிபி said...
//இன்னிலேயிருந்து எல்லாப் பொண்ணுங்களும் என்னோட தோஸ்துபா//

இதுவரை சகோதரிகளாக நினைத்திருந்தார் நம்ம ஜி! \"

அஹா சிபி, ஜி யை இப்படி கலாய்க்கிறீங்க , சூப்பர்!!!

said...

//அஹா சிபி, ஜி யை இப்படி கலாய்க்கிறீங்க , சூப்பர்!!! //

கலாய்த்தல் நமக்கு முழு நேரத் தொழில்!

said...

\" நாமக்கல் சிபி said...
//அஹா சிபி, ஜி யை இப்படி கலாய்க்கிறீங்க , சூப்பர்!!! //

கலாய்த்தல் நமக்கு முழு நேரத் தொழில்! \"

சிபி, கலாய்ப்பதில் கைதேர்ந்தவர் நீங்கன்னு உங்கள் பின்னூட்டங்கள் பார்த்துத் தெரியும்,
ஆனா அதுவே முழு நேர தொழில்ன்னு இப்போ....இப்போ தெரிஞ்சுக்கிட்டேங்க.

said...

//ஆனா அதுவே முழு நேர தொழில்ன்னு இப்போ....இப்போ தெரிஞ்சுக்கிட்டேங்க//

இதற்காக தனி வலைப்பூவே நம்மிடம் இருக்கிறது அம்மணி!

said...

கதை முடிஞ்சு போச்சா? போங்க திவ்யா, காதல் இல்லாம என்ன முடிவு?? Just kidding.. நல்லா முடிச்சிருக்கிங்க.

கல்லூரி கலாட்டா - Part II உண்டா - காதலோட???

said...

\" Priya said...
கதை முடிஞ்சு போச்சா? போங்க திவ்யா, காதல் இல்லாம என்ன முடிவு?? Just kidding.. நல்லா முடிச்சிருக்கிங்க.

கல்லூரி கலாட்டா - Part II உண்டா - காதலோட??? \"

நன்றி ப்ரியா.

கல்லூரி கலாட்டா- part II பற்றி ஏதும் ஐடியா இதுவரைக்கும் இல்லை ப்ரியா.
[ காதல் அரும்பாத கல்லூரி வாழ்க்கையா... காதலோடு ஒரு கலாட்டா எழுதிடலாம், இல்லியா ப்ரியா???]

said...

என்னது கதை முடிஞ்சதா?
ரம்யா பேசின பேச்சுக்கும் நீங்க போட்ட படத்துக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரியே இருக்கு ;)

said...

திவ்யா,

என்ன உடனே முடித்துவீட்டீர்கள். நான் அம்மா வருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன்,, ஆனால் இன்னும் சில வாரம் தொடரும் என்று எண்ணி இருந்தேன்,,

பட் முடிந்துவிட்டது... நல்ல தொடர்...

சில கருத்துகளை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று :


1.நல்ல விதமான நடை, the way of presentation is nice

2. கதாபாத்திரங்களின் முக பாவனைகளையும் எழுத்தில் கொண்டு வந்தது நன்று

3.வித்தியாசமான முடிவு

4,சில இடங்களின் சினிமா வாடை வீசியதனை தவிர்த்து இருக்கலாம்

5. ரமேஷின் அம்மா முற்போக்கு சிந்தனை வாதி என்று கார்த்தியின் வினாவிற்கு பதிலளித்து இருந்தீர்கள்.. ஆனால்

கிழே உள்ள வரிகள் என்னவோஅக் கருத்துக்கு நெருடலாக இருந்தது:

// பையன் புடிச்சாலும் நல்ல புள்ளையாதான் புடிச்சிருக்கான்' என மனதிற்குள் பூரித்துக் கொண்டாள்.
//

said...

\"Arunkumar said...
என்னது கதை முடிஞ்சதா?
ரம்யா பேசின பேச்சுக்கும் நீங்க போட்ட படத்துக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரியே இருக்கு ;)\'

அருண், படத்தை பார்த்துட்டு கதை காதல் டிராக்ல போக போகுதுன்னு நினச்சுதான் படிச்சிறுப்பீங்கயில்ல......அதுக்காக தான் அப்படி ஒரு படம் இப்படி ஒரு முடிவிற்கு!!

வருகைக்கும், பின்னூட்டதிற்கும் நன்றி அருண்.

Anonymous said...

// நாமக்கல் சிபி said...
இதுவரை சகோதரிகளாக நினைத்திருந்தார் நம்ம ஜி! //

கரெக்ட் சிபி. நம்மளும் முன்னேறனும்ல... முன்னால சகோதரிகள், இப்ப தோஸ்து, அப்புறம்...

said...

\" மணி ப்ரகாஷ் said...
திவ்யா,

என்ன உடனே முடித்துவீட்டீர்கள். நான் அம்மா வருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன்,, ஆனால் இன்னும் சில வாரம் தொடரும் என்று எண்ணி இருந்தேன்,,

பட் முடிந்துவிட்டது... நல்ல தொடர்...\"

மணி ப்ரகாஷ் உங்கள் பாராட்டுகளுக்கும் எதிர்பார்பிற்கும் மிக்க நன்றி.

சில கருத்துகளை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று :


1.நல்ல விதமான நடை, the way of presentation is nice\"

என் கதையின் நடையினை பாராட்டியிருக்கிறீர்கள், நன்றி!

\"2. கதாபாத்திரங்களின் முக பாவனைகளையும் எழுத்தில் கொண்டு வந்தது நன்று\"

நன்றி மணி ப்ரகாஷ்

\"3.வித்தியாசமான முடிவு\"

முடிவினை பாரட்டியதற்கும் நன்றி

\"4,சில இடங்களின் சினிமா வாடை வீசியதனை தவிர்த்து இருக்கலாம்\"

உங்கள் கருத்தினை கவனத்தில் கொள்கிறேன் மணி ப்ரகாஷ்.

\"5. ரமேஷின் அம்மா முற்போக்கு சிந்தனை வாதி என்று கார்த்தியின் வினாவிற்கு பதிலளித்து இருந்தீர்கள்.. ஆனால்

கிழே உள்ள வரிகள் என்னவோஅக் கருத்துக்கு நெருடலாக இருந்தது:

// பையன் புடிச்சாலும் நல்ல புள்ளையாதான் புடிச்சிருக்கான்' என மனதிற்குள் பூரித்துக் கொண்டாள்.\"

எங்கே தன் மகன் தப்பு பண்ணியிருப்பானோ,அவனுடன் பழகிய அந்த பெண் எப்படி பட்ட பெண்ணாகயிருபாளோ என மனதில் பயந்திருந்த ரமேஷின் தாய்க்கு,
ரம்யா வின் அக்கறையான பேச்சும், மகனை ஆஸ்பத்திரியில் சேர்த்த நல்ல குணமும் பிடித்திருந்ததை வெளிபடுத்தவே அந்த வரிகள்.

Anonymous said...

என்ன திவ்யா இப்படி செல்வி சீரியல் மாதிரி டக்குனு முடிச்சிட்டீங்க. எனி கால்ஷீட் problem ;)

said...

\"Vicky said...
என்ன திவ்யா இப்படி செல்வி சீரியல் மாதிரி டக்குனு முடிச்சிட்டீங்க. எனி கால்ஷீட் problem ;)\"

வருகைக்கு நன்றி விக்கி!!

கால்ஷீட் ப்ராப்ளமெல்லாம் இல்லீங்க, தொடரை ரொம்ப இழுத்துட்டு போன போர் அடிச்சுடுமேன்னு , முடிச்சாச்சுங்க.

Anonymous said...

Ka Ka Ka Po va decode pannineeingal enna atchu..

if not wathc 23rd pulikesai illa inna i can help out. :) ha ha

said...

\" Adiya said...
Ka Ka Ka Po va decode pannineeingal enna atchu..

if not wathc 23rd pulikesai illa inna i can help out. :) ha ha \"

Adiya, நான் அந்த படம் இன்னும் பார்க்கலீங்க, So Ka Ka Ka Po va னா என்னன்னு decode பண்ணி சொல்லுங்க ப்ளீஸ்.............

said...

நட்புக்கு மரியாதை யா..

அது சரி எங்கே நயன்ஸ் போட்டோ, ஸ்யாம் கேட்டார் ல... (ஏம்பா, பக்கத்து இலைக்கு பாயசம் விடுப்பா.. )

:)

said...

\" Srikanth said...
நட்புக்கு மரியாதை யா..

அது சரி எங்கே நயன்ஸ் போட்டோ, ஸ்யாம் கேட்டார் ல... (ஏம்பா, பக்கத்து இலைக்கு பாயசம் விடுப்பா.. )

:) \"

ஷ்ரிகாந்த் , நயன் ஃபோட்டோவை ஷ்யாம் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீன்ங்க போலிருக்குது,
இந்த கதைக்கு நயன் ஃபோட்டோ பொருத்தமாயிருக்காது, ஸோ பொருத்தமான பதிவில் நயன் ஃபோட்டோ, இப்போ ஓ.கே வா??

Anonymous said...

அட, என் Guess கூட Correct ஆகிடுச்சு! :)

ரொம்ப நல்ல "கதை, நடை, முடிவு"

ஆனா டக்குன்னு முடிச்ச மாதிரி இருந்துச்சுங்க. இன்னொரு பகுதிப் போட்டு, அவங்க நட்பை (நட்பா மட்டும்) இன்னும் கொஞ்சம் சொல்லிருக்கலாமோ?? (இழுக்காம, of course)

Anyway, great going.. Keep Writing!!

-விநய்

Anonymous said...

என்ன்ன்ன்னனன........ முடிஞ்சுபோச்சாஆஆ!!!!!
அட..அட....முடிந்தாலும், மனதில் வளர ஆரம்பித்த விருச்சமான கதை!
எதிர்பார்காத முடிவு!
ஆமாங்க....டிவிய தொறந்தா காதல், சினிமாவுக்கு போனா காதல், கடற்கரை போனா காதல், ஷாப்பிங் போனா காதல், பஸ்டாப்பில் காதல்....
இப்படி எங்க போனாலும், எதில் பார்த்தாலும் காதல், அந்த வேளையில் திவ்யா பிளாக் வந்தாலும் காதல்..காதலோ என்று நினைத்திருந்த பொழுது, வச்சீங்களே ஆப்பு அதுக்கு, அட காதலுக்கு! நட்பு என்கிற ஆப்பு! நச்சுன்னு நிக்கிது! இத...இத..இதத்தான் எதிர்பார்த்தேன்!
கப்பென்று முடிந்தாலும்
நட்பென்று முடித்ததால்
குப்பென்று மனம் குளிர்ந்தது!
நன்றியோ நன்றி!
ஆனா...காதலா முடிந்திருந்தால் கூட இனிமையாத்தான் இருந்திருக்குமோ!!!
கொஞ்சம் ஓவராத்தான் போச்சோ!!
ஹ..ஹ...ஹாஅ...ஹாஆ...

said...

\"Anonymous said...
அட, என் Guess கூட Correct ஆகிடுச்சு! :)

ரொம்ப நல்ல "கதை, நடை, முடிவு"

ஆனா டக்குன்னு முடிச்ச மாதிரி இருந்துச்சுங்க. இன்னொரு பகுதிப் போட்டு, அவங்க நட்பை (நட்பா மட்டும்) இன்னும் கொஞ்சம் சொல்லிருக்கலாமோ?? (இழுக்காம, of course)

Anyway, great going.. Keep Writing!!

-விநய் \"

விநய், உங்க யூகம் கரக்ட்டாயிடுச்சு பார்த்தீங்களா?
கதையை இழுக்காமல் நட்பை இன்னும் அழுத்தமாக கூறியிருக்கலாம் என்ற உங்கள் கருத்துக்கு நன்றி விநய்!

said...

\"பிரியமுடன் பிரேம் said...
என்ன்ன்ன்னனன........ முடிஞ்சுபோச்சாஆஆ!!!!!
அட..அட....முடிந்தாலும், மனதில் வளர ஆரம்பித்த விருச்சமான கதை!
எதிர்பார்காத முடிவு!
ஆமாங்க....டிவிய தொறந்தா காதல், சினிமாவுக்கு போனா காதல், கடற்கரை போனா காதல், ஷாப்பிங் போனா காதல், பஸ்டாப்பில் காதல்....
இப்படி எங்க போனாலும், எதில் பார்த்தாலும் காதல், அந்த வேளையில் திவ்யா பிளாக் வந்தாலும் காதல்..காதலோ என்று நினைத்திருந்த பொழுது, வச்சீங்களே ஆப்பு அதுக்கு, அட காதலுக்கு! நட்பு என்கிற ஆப்பு! நச்சுன்னு நிக்கிது! இத...இத..இதத்தான் எதிர்பார்த்தேன்!
கப்பென்று முடிந்தாலும்
நட்பென்று முடித்ததால்
குப்பென்று மனம் குளிர்ந்தது!
நன்றியோ நன்றி!
ஆனா...காதலா முடிந்திருந்தால் கூட இனிமையாத்தான் இருந்திருக்குமோ!!!
கொஞ்சம் ஓவராத்தான் போச்சோ!!
ஹ..ஹ...ஹாஅ...ஹாஆ...\"

பிரேம் உங்கள் கருத்துக்களுக்கும் , பாராட்டுகளுக்கும் , வழக்கமான உங்கள் அசத்தல் பின்னூட்டதிற்கும் நன்றி!!

Anonymous said...

//கண்ணும் கண்ணும் நோக்கினால்- காதல் பிறக்கலாம்

உடல் ஸ்பரிசத்தினால்- மோகம் பிறக்கலாம்

வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????//

nalla thathuvam! kadhai super ponga!
aduthatha enna eludhareenga?

Anonymous said...

நட்பு தான் மலரபோதா/ அருமை

said...

kaariyathai kaichdhamai kavukuriingala pooingala
:)

sound it like vadivelu.

said...

\"Dreamzz said...
//கண்ணும் கண்ணும் நோக்கினால்- காதல் பிறக்கலாம்

உடல் ஸ்பரிசத்தினால்- மோகம் பிறக்கலாம்

வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????//

nalla thathuvam! kadhai super ponga!
aduthatha enna eludhareenga\"

பாராட்டுக்கு நன்றி Dreamzz,

அடுத்த பதிவு நிச்சயமா தொடர் கதை இல்லீங்க, ஒரு போஸ்ட் போட யோசிச்சுட்டுயிருக்கிறேன், போட்டதும் சொல்றேன், படிச்சுட்டு கண்டிப்பா உங்க கருத்து சொல்லுங்க, சரியா?

said...

\"தூயா said...
நட்பு தான் மலரபோதா/ அருமை \"

ஆமாம் தூயா நட்பு மலர்ந்திருக்கிறது,
வருகைக்கு நன்றி தூயா!

said...

\"Adiya said...
kaariyathai kaichdhamai kavukuriingala pooingala
:)

sound it like vadivelu. \"

Adiya , vadively சவுண்ட் எஃபெக்ட்ல சொன்னாலும், கடைசி வார்த்தை 'pooingala' என்ன வார்த்தைன்னே புரியலீங்க, கொஞ்சம் புரியற மாதிரி சொல்றீங்களா???

said...

யதார்த்தமான முடிவு திவ்யா...

இன்னும் தொடருன்னு எதிர் பார்த்தேன் அனா டக்குனு முடிஞ்சுருச்சு.

கடைசியிலா நட்புன்னு சொல்லி வித்தியாசபடுத்திட்டிங்க. அடுத்த தொடர் இன்னும் வித்தியாசமாக அமைய வாழ்த்துக்கள்.

said...

போங்கள்

said...

\"கோபிநாத் said...
யதார்த்தமான முடிவு திவ்யா...

இன்னும் தொடருன்னு எதிர் பார்த்தேன் அனா டக்குனு முடிஞ்சுருச்சு.

கடைசியிலா நட்புன்னு சொல்லி வித்தியாசபடுத்திட்டிங்க. அடுத்த தொடர் இன்னும் வித்தியாசமாக அமைய வாழ்த்துக்கள்\"

கோபிநாத், உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

அடுத்த முறை தொடர் கதை எழுதும் போது இன்னும் வித்தியாசமாக எழுத முயற்ச்சிக்கிறேன், ஊக்கமளித்தமைக்கு நன்றி கோபிநாத்.

said...

\"Adiya said...
போங்கள் \"

Adiya , இப்போ சரியா ..........நல்லாவே புரியுதுங்கோ! நன்றி Adiya!

said...

க.க.க.போ -->
கருத்தை கச்சிதமாய் கவ்விக்கொள்கிறீர்கள் போங்கள்!

said...

\" நாமக்கல் சிபி said...
க.க.க.போ -->
கருத்தை கச்சிதமாய் கவ்விக்கொள்கிறீர்கள் போங்கள்! \"

சிபி, க.க.க.போ வை decode பண்ணி விளங்க வைத்தமைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!

said...

நல்லா கலக்கலா முடிச்சிடிங்க திவ்யா. சீக்கிரமா முடிக்க வேண்டும் என்று முடித்த மாதிரி இருந்தது :))... இன்னும் ஒரு இரண்டு மூன்று பகுதிகள் எழுதி இருக்கலாம் மன்னிச்சிகோங்க நல்லா விறுவிறுப்பா போச்சி இந்த பகுதி சட்டுன்னு முடிச்ச ஒரு உணர்வு அதனால் தான் சொன்னேன் வேற எதுவும் இல்ல.

said...

\"சந்தோஷ் said...
நல்லா கலக்கலா முடிச்சிடிங்க திவ்யா. சீக்கிரமா முடிக்க வேண்டும் என்று முடித்த மாதிரி இருந்தது :))... இன்னும் ஒரு இரண்டு மூன்று பகுதிகள் எழுதி இருக்கலாம் மன்னிச்சிகோங்க நல்லா விறுவிறுப்பா போச்சி இந்த பகுதி சட்டுன்னு முடிச்ச ஒரு உணர்வு அதனால் தான் சொன்னேன் வேற எதுவும் இல்ல. \"

சந்தோஷ் நீங்க தாரளாமா உங்க கருத்துக்களை சொல்லலாம்.
கலாட்டாவை இன்னும் கலக்கியிருக்கலாம் தான், ரொம்ப இழுத்துட்டு போகவேண்டாமே என நினைத்தேன்.

கதையின் முடிவினை பாராட்டியதற்கு நன்றி சந்தோஷ்!!

said...

Hai Divya,
short aa irundhaalum sweet aa irukku.
மோதல்னாலே காதல்தான் வரனுமா? ஏன் ஒரு நல்ல நட்பு கூட வரலாம் இல்லயா... நல்ல முடிவு.

GOOD KEEP IT UP.

said...

\"sumathi said...
Hai Divya,
short aa irundhaalum sweet aa irukku.
மோதல்னாலே காதல்தான் வரனுமா? ஏன் ஒரு நல்ல நட்பு கூட வரலாம் இல்லயா... நல்ல முடிவு.

GOOD KEEP IT UP.\"

சுமதி, உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி!!

Anonymous said...

Nalla mudivu, short & sweet ;)

said...

திவ்யா,

நல்ல அழகான முடிவு... நீங்க எல்லார்மாதிரியும் செய்யமாட்டிங்கன்னு நான் ஒரளவுக்கு கதையே ஊகிச்சேன்.
அதேமாதிரி சரியா போச்சுங்க...

அடுத்து இதேமாதிரி காலேஜ் குறும்புகள் நிறைந்த கதைகள் எழுதுங்க....

ம்ஹீம் என்னையெல்லாம் அங்கேயிருந்து விரட்டிவிட்டு ஆறு வருசம் முடிஞ்சு போச்சு...

இதிலேயாவது அதே படிச்சு கொசுவர்த்தி சுருளை சுத்தி விட்டுக்கலாம். :-(

said...

//அது சரி எங்கே நயன்ஸ் போட்டோ, ஸ்யாம் கேட்டார் ல... (ஏம்பா, பக்கத்து இலைக்கு பாயசம் விடுப்பா.. //

@srikanth,
க.க.க.போ....நான் ஏற்கவனவே ஒரு தடவை கேட்டுட்டேன்...மறுபடியும் கேட்டா நல்ல இருக்காதுனு நினைச்சேன்...இதுக்கு தான் நல்ல நண்பர்கள் வேணும்னு சொல்றது :-)

said...

//இந்த கதைக்கு நயன் ஃபோட்டோ பொருத்தமாயிருக்காது, ஸோ பொருத்தமான பதிவில் நயன் ஃபோட்டோ//

கதைக்கும் போட்டோக்கும் பொருத்தம் வேணும்னு யாரு சொன்னது....நயன் போட்டோவ ஒரு ஓரமா போடுங்க...இலியானா போட்டோவ பெருசா போடுங்க... :-)

said...

\"C.M.HANIFF said...
Nalla mudivu, short & sweet ;)
\"

நன்றி ஹனிஃப்!!

said...

\" ராம் said...
திவ்யா,

நல்ல அழகான முடிவு... நீங்க எல்லார்மாதிரியும் செய்யமாட்டிங்கன்னு நான் ஒரளவுக்கு கதையே ஊகிச்சேன்.
அதேமாதிரி சரியா போச்சுங்க...

அடுத்து இதேமாதிரி காலேஜ் குறும்புகள் நிறைந்த கதைகள் எழுதுங்க....

ம்ஹீம் என்னையெல்லாம் அங்கேயிருந்து விரட்டிவிட்டு ஆறு வருசம் முடிஞ்சு போச்சு...

இதிலேயாவது அதே படிச்சு கொசுவர்த்தி சுருளை சுத்தி விட்டுக்கலாம். :-( \"

வாவ் ராம், கதையின் முடிவை கரக்ட்டா
யூகிச்சிறுக்கிறீங்க!
கல்லூரி லூட்டிகளும், குறும்புகளும் நிறைந்த கதைகள் எழுத முயற்ச்சிக்கிறேன், உங்கள் பாராட்டுக்களுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி ராம்!

said...

\"Syam said...
//இந்த கதைக்கு நயன் ஃபோட்டோ பொருத்தமாயிருக்காது, ஸோ பொருத்தமான பதிவில் நயன் ஃபோட்டோ//

கதைக்கும் போட்டோக்கும் பொருத்தம் வேணும்னு யாரு சொன்னது....நயன் போட்டோவ ஒரு ஓரமா போடுங்க...இலியானா போட்டோவ பெருசா போடுங்க... :-) \"

ஷ்யாம் , நயன்னிலிருந்து இலியானாவுக்கு மாறியாச்சா????
இந்த போஸ்ட் போய் பாருங்க இலியான படம் பார்க்க..
http://jollupet.blogspot.com/2006/12/blog-post_14.html

said...

//இந்த போஸ்ட் போய் பாருங்க இலியான படம் பார்க்க..//

அத பாத்துட்டு வந்ததுனாலதான் இலியானா படம் கேட்டேன்...அங்க என்னோட கமெண்ட் பார்கலயா நீங்க... :-)

Anonymous said...

//ஷ்யாம் , நயன்னிலிருந்து இலியானாவுக்கு மாறியாச்சா????//

ம்ஹூம்! இவரு தொல்லை தாங்காமத்தான் இன்னொருத்தரு காவி கமண்டலம்னு போயி, இப்ப ஆளை மாத்திட்டாரு!

said...

//ம்ஹூம்! இவரு தொல்லை தாங்காமத்தான் இன்னொருத்தரு காவி கமண்டலம்னு போயி, இப்ப ஆளை மாத்திட்டாரு! //

என்னாது ஆள மாத்திட்டாரா...சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்வேவேவே இல்ல்ல்ல்ல...இருங்க போய் என்னானு கேட்டுட்டு வறேன்...காவி கட்டியாச்சு இன்னும் என்ன பிகர் வேண்டி கிடக்கு :-)

said...

\"Syam said...
//இந்த போஸ்ட் போய் பாருங்க இலியான படம் பார்க்க..//

அத பாத்துட்டு வந்ததுனாலதான் இலியானா படம் கேட்டேன்...அங்க என்னோட கமெண்ட் பார்கலயா நீங்க... :-) \"

ஷ்யாம் இப்பதான் பார்த்தேன் உங்க கமெண்ட்ஸ் அங்கே, ISF[Ileana Sucidal Force] உருவாகிடுச்சு போலிருக்கு, ஜமாய்ங்க ஷ்யாம்!

[அதானே பார்த்தேன், இப்படி போஸ்ட்டுக்கு நாட்டாமையோட அட்டெண்டென்ஸ் இல்லாமலா???]

said...

\"வெறுத்துப் போனவன் said...
//ஷ்யாம் , நயன்னிலிருந்து இலியானாவுக்கு மாறியாச்சா????//

ம்ஹூம்! இவரு தொல்லை தாங்காமத்தான் இன்னொருத்தரு காவி கமண்டலம்னு போயி, இப்ப ஆளை மாத்திட்டாரு!\"

ஆஹா, இந்த கதையெல்லாம் வேற நடந்திருக்கா??

Anonymous said...

100 அடிக்கப் போறீங்களாமே! வாழ்த்துக்கள்!

Anonymous said...

//என்னாது ஆள மாத்திட்டாரா...சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்வேவேவே இல்ல்ல்ல்ல...இருங்க போய் என்னானு கேட்டுட்டு வறேன்...//

ஷியாம்! அவருக்கு ஏகப்பட்ட இன்னல்கள் கொடுத்து சாமியாராக்கி முருகவேல் னு ஒரு பட்டம் கொடுத்ததே நீர்தானய்யா!

said...

\"மோகினிகள் கழகம் said...
100 அடிக்கப் போறீங்களாமே! வாழ்த்துக்கள்\"

மோகினி,100 அடிக்க உங்க ஆதரவு தான் எனக்கு தேவை !

[ ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்திருக்கிறீங்க, வருகைக்கு நன்றி மோகினி]

Anonymous said...

//மோகினி,100 அடிக்க உங்க ஆதரவு தான் எனக்கு தேவை //

நாங்கள் தனி ஆள் அல்ல!
இது ஒரு கழகம்!

said...

\"மோகினிகள் கழகம் said...
//மோகினி,100 அடிக்க உங்க ஆதரவு தான் எனக்கு தேவை //

நாங்கள் தனி ஆள் அல்ல!
இது ஒரு கழகம்! \"

அப்போ உங்க 'கழகத்தின் ' ஆதரவு எனக்கு கிடைக்குமா , மோகினி??

said...

சரி 100க்கு நம்மால முடிஞ்சது :-)

said...

100 ஆச்சா?

said...

101 நானா? :-)

said...

\" வெட்டிப்பயல் said...
சரி 100க்கு நம்மால முடிஞ்சது :-)\"

நான் ஆவிகள் கழகத்திடம் ஆதரவு கேட்டா.......வெட்டி அவராகவே முன் வந்து ஆதரவு தரார்,
எவ்வளவு நல்ல மனசு வெட்டி உங்களுக்கு, நன்றி! நன்றி!! நன்றி!!!

said...

\" வெட்டிப்பயல் said...
100 ஆச்சா? \"

ஆச்சுங்கோ!!

said...

//ஷியாம்! அவருக்கு ஏகப்பட்ட இன்னல்கள் கொடுத்து சாமியாராக்கி முருகவேல் னு ஒரு பட்டம் கொடுத்ததே நீர்தானய்யா! //

அண்ணே போட்டினா ஆயிரம் இருக்கும்...நான் எல்லாம் பாருங்க எவ்வளவு திடாம ஒரு நம்பிக்கையோட இருந்ததுனால தான் இன்னைக்கு இலியானவ பாக்க முடியுது... :-)

said...

\"Syam said...
101 நானா? :-) \"

நீங்களேதான் ஷ்யாம்.

[ இன்னிக்கு தந்த நூறு ரூபாய் நோட்டு கள்ள நோட்டு இல்லியே??}]

said...

//இன்னிக்கு தந்த நூறு ரூபாய் நோட்டு கள்ள நோட்டு இல்லியே//

நூறு தான் வெட்டி குடுத்துட்டாரே...நான் வெறும் ஒரு ரூபாய் தான் குடுத்தேன்.. :-)

said...

\"Syam said...
//இன்னிக்கு தந்த நூறு ரூபாய் நோட்டு கள்ள நோட்டு இல்லியே//

நூறு தான் வெட்டி குடுத்துட்டாரே...நான் வெறும் ஒரு ரூபாய் தான் குடுத்தேன்.. :-) \"

ஆஹா ஷ்யாம், கோயம்புத்தூர்காரர்ன்னு நிரூபிச்சிட்டீங்க! தூள்!

[ அந்த ஒரு ரூபாய் நோட்டாவது செல்லுமா ன்னு கேட்டுட்டு வரேன்]

said...

//Divya said...

\" வெட்டிப்பயல் said...
சரி 100க்கு நம்மால முடிஞ்சது :-)\"

நான் ஆவிகள் கழகத்திடம் ஆதரவு கேட்டா.......வெட்டி அவராகவே முன் வந்து ஆதரவு தரார்,
எவ்வளவு நல்ல மனசு வெட்டி உங்களுக்கு, நன்றி! நன்றி!! நன்றி!!! //

சரிங்க ரொம்ப ஃபீல் பண்ண வேணாம்... அடுத்து எங்களுக்கு இதே மாதிரி ஒரு நல்ல பதிவா கொடுங்க :-)

said...

\" வெட்டிப்பயல் said...
//Divya said...

\" வெட்டிப்பயல் said...
சரி 100க்கு நம்மால முடிஞ்சது :-)\"

நான் ஆவிகள் கழகத்திடம் ஆதரவு கேட்டா.......வெட்டி அவராகவே முன் வந்து ஆதரவு தரார்,
எவ்வளவு நல்ல மனசு வெட்டி உங்களுக்கு, நன்றி! நன்றி!! நன்றி!!! //

சரிங்க ரொம்ப ஃபீல் பண்ண வேணாம்... அடுத்து எங்களுக்கு இதே மாதிரி ஒரு நல்ல பதிவா கொடுங்க :-\"

வெட்டி, உங்கள் ஊக்கம் இருக்கும் வரை, திவ்யாவின் ஆக்கமும் தொடரும்!!!

said...

அடுத்த கதை எப்போ?

தலைப்பு நான் சொல்லட்டுமா?

உங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்! கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்க!

said...

உங்கள் சிறுகதைகள், தொடர்களுக்கான சுட்டிகளை உங்கள் பிளாக் டெம்பிளேட்டில் தனியே தரலாமே!

பிறகு படிப்பவர்களுக்கு உங்கள் படைப்புகளைத் தேடிப்பிடித்து படிக்க வசதியாக இருக்கும்!

said...

10 ரூவா நான் கொடுத்திருக்கேன்!
ஹிஹி.. நானும் கோயமுத்தூருதான்!

said...

\" நாமக்கல் சிபி said...
அடுத்த கதை எப்போ?

தலைப்பு நான் சொல்லட்டுமா?

உங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்! கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்க! \"

சிபி, இது நல்ல ஐடியாவாயிருக்குதே, கண்டிப்பா தலைப்பு தாங்க சிபி, நான் எழுத முடியுமான்னு பார்க்கிறேன்

[ ஜொள்ளு பாண்டிக்கு கொடுத்த 'அண்டக்காக்க கொண்டை' தலைப்பு மாதிரி கொடுத்திடாதீங்க]

said...

\" நாமக்கல் சிபி said...
உங்கள் சிறுகதைகள், தொடர்களுக்கான சுட்டிகளை உங்கள் பிளாக் டெம்பிளேட்டில் தனியே தரலாமே!

பிறகு படிப்பவர்களுக்கு உங்கள் படைப்புகளைத் தேடிப்பிடித்து படிக்க வசதியாக இருக்கும்! \"

உங்கள் கருத்துகளுக்கும் , அறிவுரைகளுக்கும் நன்றி சிபி, அப்படியே டெம்பிளேட்டில் எப்படி அவ்வாறு போடுவது என கற்று தந்தால் உங்களுக்கு புண்ணியமாக போகும்.

said...

\" நாமக்கல் சிபி said...
10 ரூவா நான் கொடுத்திருக்கேன்!
ஹிஹி.. நானும் கோயமுத்தூருதான்!\

தனி தனியாக கொடுக்கும் மொய்கள் மட்டுமே கணக்கில் சேர்த்துக் கொள்ளபடும்!

[சிபி நீங்க கோயமுத்தூருன்னு உங்க குசும்பு கொப்பளிக்கும் பின்னூட்டங்களே காட்டி கொடுக்குதுங்கோ]

said...

//சிபி, இது நல்ல ஐடியாவாயிருக்குதே, கண்டிப்பா தலைப்பு தாங்க சிபி, நான் எழுத முடியுமான்னு பார்க்கிறேன்
//

முடியுமான்னு பாக்குறதாவது! எழுதுங்க! உங்களால் நிச்சயம் முடியும்!
நல்லதொரு கதையை எதிர்பார்க்கிறேன்!

தலைப்பில் இரண்டு சாய்ஸ் உண்டு!
ஏதேனும் ஒரு தலைப்பில் சிறுகதை/தொடர்கதை வரைக!


1. ரோஜாக் கூட்டம்
2. என் தேவதை சொன்னாள்..!

(இரண்டாவது தலைப்பில் ஒரு சிறப்பம்சம் உண்டு. அது பி.கே.பி எழுதிய ஒரு நாவலின் தலைப்பு)

said...

//[ ஜொள்ளு பாண்டிக்கு கொடுத்த 'அண்டக்காக்க கொண்டை' தலைப்பு மாதிரி கொடுத்திடாதீங்க]
//

:-))

கொடுத்தாலும் எழுதணும். அதுதான் நல்ல படைப்பாளிக்கு அழகு!
நீங்கள் எழுதுவீர்கள்!

said...

\" நாமக்கல் சிபி said...
//சிபி, இது நல்ல ஐடியாவாயிருக்குதே, கண்டிப்பா தலைப்பு தாங்க சிபி, நான் எழுத முடியுமான்னு பார்க்கிறேன்
//

முடியுமான்னு பாக்குறதாவது! எழுதுங்க! உங்களால் நிச்சயம் முடியும்!
நல்லதொரு கதையை எதிர்பார்க்கிறேன்!

தலைப்பில் இரண்டு சாய்ஸ் உண்டு!
ஏதேனும் ஒரு தலைப்பில் சிறுகதை/தொடர்கதை வரைக!


1. ரோஜாக் கூட்டம்
2. என் தேவதை சொன்னாள்..!

(இரண்டாவது தலைப்பில் ஒரு சிறப்பம்சம் உண்டு. அது பி.கே.பி எழுதிய ஒரு நாவலின் தலைப்பு)\"

அஹா சிபி, இரண்டு தலைப்புகளுமே அருமை!!
ஏதாவது ஒரு தலைப்பில் எழுத முயற்ச்சிக்கிறேன் சிபி!

said...

\" நாமக்கல் சிபி said...
//[ ஜொள்ளு பாண்டிக்கு கொடுத்த 'அண்டக்காக்க கொண்டை' தலைப்பு மாதிரி கொடுத்திடாதீங்க]
//

:-))

கொடுத்தாலும் எழுதணும். அதுதான் நல்ல படைப்பாளிக்கு அழகு!
நீங்கள் எழுதுவீர்கள்! \"

சிபி, என் எழுத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கையா???

said...

//சிபி, என் எழுத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கையா??? //

ஒரு பாட்டில் சரக்குக்கு ஒரு பெக்கு பதம்! ச்சே! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

இரண்டு தொடர்கள் படித்திருக்கிறேன்.

(எங்களுக்கு பொழுது போக வேணாமா?)

said...

\" நாமக்கல் சிபி said...
//சிபி, என் எழுத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கையா??? //

ஒரு பாட்டில் சரக்குக்கு ஒரு பெக்கு பதம்! ச்சே! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

இரண்டு தொடர்கள் படித்திருக்கிறேன்.

(எங்களுக்கு பொழுது போக வேணாமா?)\"

ஒரு பாட்டில் சரக்குக்கு ஒரு பெக்கு பதம்! -> இது புது தத்துவமா இருக்கிறதே !!!

said...

//நாமக்கல் சிபி said...

//சிபி, என் எழுத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கையா??? //

ஒரு பாட்டில் சரக்குக்கு ஒரு பெக்கு பதம்! ச்சே! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

இரண்டு தொடர்கள் படித்திருக்கிறேன்.

(எங்களுக்கு பொழுது போக வேணாமா?) //

தள,
நாங்களும் கொஞ்சம் தொடர் கதை எழுதியிருக்கோம் (இந்த அளவுக்கு நல்லா இருக்காது... சுமாரா இருக்கும்). அதையும் படிச்சிட்டு ஒரு தலைப்பு கொடுங்களேன். நானும் முயற்சி செய்யறேன் ;)

said...

//ஒரு பாட்டில் சரக்குக்கு ஒரு பெக்கு பதம்! -> இது புது தத்துவமா இருக்கிறதே !!! //

இது தொடர்பாக நான் சங்கத்தில் தாக்கல் செய்த ஒன்றுஇரண்டாவது எப்படி? என்னும் ஆய்வுக் கட்டுரை.

:))

said...

//அதையும் படிச்சிட்டு ஒரு தலைப்பு கொடுங்களேன். நானும் முயற்சி செய்யறேன்//

வெட்டிப் பயலாரே! உங்களுக்கு இல்லாத தலைப்பா? நிச்சயம் உங்களுக்கும் கொடுக்கிறேன்.

உங்களுக்கும் ரெண்டு சாய்ஸ்!


1. புயலொன்று பூவானது!
2. இது சிறகு விரிக்கும் நேரம்!

said...

\" நாமக்கல் சிபி said...
//ஒரு பாட்டில் சரக்குக்கு ஒரு பெக்கு பதம்! -> இது புது தத்துவமா இருக்கிறதே !!! //

இது தொடர்பாக நான் சங்கத்தில் தாக்கல் செய்த ஒன்றுஇரண்டாவது எப்படி? என்னும் ஆய்வுக் கட்டுரை\"

சிபி, உங்கள் ஆய்வு கட்டுரை படிச்சுட்டு பின்னூட்டமிடுகிறேன்!

said...

தளபதி,
சும்மா தலைப்பு கொடுத்தா நான் ஒத்துக்க மாட்டேன். கதையை படிச்சிட்டு நல்லா இருந்தா கொடுங்க :-)

நீங்க கஷ்டப்பட்டு கொடுக்கற தலைப்பை நான் கெடுத்துட போறேன். அந்த அளவுக்கு தகுதி இருக்கானு பார்த்துட்டு அப்பறம் கொடுங்க ;)

said...

\" வெட்டிப்பயல் said...
தளபதி,
சும்மா தலைப்பு கொடுத்தா நான் ஒத்துக்க மாட்டேன். கதையை படிச்சிட்டு நல்லா இருந்தா கொடுங்க :-)

நீங்க கஷ்டப்பட்டு கொடுக்கற தலைப்பை நான் கெடுத்துட போறேன். அந்த அளவுக்கு தகுதி இருக்கானு பார்த்துட்டு அப்பறம் கொடுங்க ;) \"

அந்த அளவுக்கு தகுதி இருக்கானு பார்த்துட்டு அப்பறம் கொடுங்க -> தன்னடக்கத்தின் மறுபெயர் வெட்டிபயல்.

said...

//தன்னடக்கத்தின் மறுபெயர் வெட்டிபயல்.
//

:))

வெட்டிப் பயல்! உங்கள் கதைகளை படித்திருக்கிறேன். அந்த நம்பிக்கையின் பேரில்தான் கொஞ்சம் கடினமான தலைப்புகளைக் கொடுத்துள்ளேன்!

:))

said...

//நீங்க கஷ்டப்பட்டு கொடுக்கற தலைப்பை நான் கெடுத்துட போறேன். //

என்னை வெச்சி காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே!

:-)

said...

//வெட்டிப் பயலாரே! உங்களுக்கு இல்லாத தலைப்பா? நிச்சயம் உங்களுக்கும் கொடுக்கிறேன்//

வேணும்கறத கேட்டா தளபதி குடுக்கமாட்டேன்னா சொல்ல போறாரு...

தளபதி எனக்கும் ரெண்டு கோட்டர் குடுங்க :-)

said...

//வெட்டிப் பயல்! உங்கள் கதைகளை படித்திருக்கிறேன். அந்த நம்பிக்கையின் பேரில்தான் கொஞ்சம் கடினமான தலைப்புகளைக் கொடுத்துள்ளேன்!//

தள,
உங்க பின்னூட்டம் எதையும் பார்த்ததில்லையா அதனால தான் கேட்டேன் :-)

தலைப்பு கொஞ்சம் கடினம்தான் ஆனா ஈஸியா எழுதிடலாம்னு தோணுது...

என்னுடைய சாய்ஸ்
1. புயலொன்று பூவானது!

said...

//என்னுடைய சாய்ஸ்
1. புயலொன்று பூவானது!
//

நல்ல தேர்வு! வாழ்த்துக்கள்!

said...

//வேணும்கறத கேட்டா தளபதி குடுக்கமாட்டேன்னா சொல்ல போறாரு...
//

அதானே! ஷியாம்! உங்களுக்கான சாய்ஸ்!

1. நம்பிக்கை வை!
2.வீழ்வதெல்லாம் எழுவதற்கே!

(ஒரு சின்ன திருத்தம்.உங்களுக்கு மட்டும். நீங்க எழுதப்போறது கதை அல்ல. கட்டுரை) :)

said...

\" நாமக்கல் சிபி said...
//வேணும்கறத கேட்டா தளபதி குடுக்கமாட்டேன்னா சொல்ல போறாரு...
//

அதானே! ஷியாம்! உங்களுக்கான சாய்ஸ்!

1. நம்பிக்கை வை!
2.வீழ்வதெல்லாம் எழுவதற்கே!

(ஒரு சின்ன திருத்தம்.உங்களுக்கு மட்டும். நீங்க எழுதப்போறது கதை அல்ல. கட்டுரை) :) \"

ஷ்யாம், உங்களுக்குள்ள இருக்கும் சிங்கம் சிடறிய பிலுப்பிக்கிட்டு.... ச்சே பிடறிய சிலுப்பிக்கிட்டு எந்திரிக்க வைச்சு ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுதிடுங்க!!!

said...

//1. நம்பிக்கை வை!
2.வீழ்வதெல்லாம் எழுவதற்கே!//

இப்புடி ஒரு பிராண்டு நான் கேள்வி பட்டதே இல்ல...இப்போ புதுசா டாஸ்மாக்குல விக்கறாங்களா தள :-)

said...

//
ஷ்யாம், உங்களுக்குள்ள இருக்கும் சிங்கம் சிடறிய பிலுப்பிக்கிட்டு.... ச்சே பிடறிய சிலுப்பிக்கிட்டு எந்திரிக்க வைச்சு ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுதிடுங்க!!!//

ஏதாவது ஒரு தலைப்பிலா?
எங்க சிங்கத்த பார்த்தா உங்களுக்கெல்லாம் விளையாட்டா போச்சு..

இரண்டு தலைப்பிலும் அவர் எழுதுவார்!!!

said...

சொல்ல மறந்துட்டேனே!

தலைப்பு மட்டும்தான் கொடுப்பேன்!

பரிசெல்லாம் கொடுக்க மாட்டேன்!

said...

\" வெட்டிப்பயல் said...
//
ஷ்யாம், உங்களுக்குள்ள இருக்கும் சிங்கம் சிடறிய பிலுப்பிக்கிட்டு.... ச்சே பிடறிய சிலுப்பிக்கிட்டு எந்திரிக்க வைச்சு ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுதிடுங்க!!!//

ஏதாவது ஒரு தலைப்பிலா?
எங்க சிங்கத்த பார்த்தா உங்களுக்கெல்லாம் விளையாட்டா போச்சு..

இரண்டு தலைப்பிலும் அவர் எழுதுவார்!!! \"

இரண்டு தலைப்பிலும் நாட்டாம எழுதட்டும்.......நூறு பின்னூட்டம் போட்டுடறேன்!! [ ஷ்யாம் சிங்கம் எந்திரிசுச்சா?]

said...

//1. நம்பிக்கை வை!
2.வீழ்வதெல்லாம் எழுவதற்கே!

இப்புடி ஒரு பிராண்டு நான் கேள்வி பட்டதே இல்ல...இப்போ புதுசா டாஸ்மாக்குல விக்கறாங்களா தள :-)
//

1.நல்லா சரக்கு அடிச்சி என்ஜாய் பண்ண முடியும்னு மனசுக்குள்ளே நம்பிக்கை வை! அப்புறமா கடைக்குள்ளே போ!

2. விழுந்துட்டியா கவலையே படாதே! அடுத்த நாள் காலையில (தெளிவா)எழுந்திருச்சிக்கலாம். எங்கே விழுந்து கிடந்தோம் என்பதா முக்கியம். அடுத்த நாள் எழுந்து விடுவோம் என்பதுதான் முக்கியம்.

தலைப்புகளுக்கு விளக்கம் போதுமா ஷியாம்?

:-))

said...

\" நாமக்கல் சிபி said...
சொல்ல மறந்துட்டேனே!

தலைப்பு மட்டும்தான் கொடுப்பேன்!

பரிசெல்லாம் கொடுக்க மாட்டேன்!\"

சிபி, நீங்க தலைப்பு கொடுத்ததே போதும்........பரிசெல்லாம் கேட்டு தோந்தரவு பண்ண மாட்டோம், அதான் நூறு பின்னூட்டம் தர போறீங்களே எங்கள் படைப்பிற்கு!!

said...

//சிபி, நீங்க தலைப்பு கொடுத்ததே போதும்........பரிசெல்லாம் கேட்டு தோந்தரவு பண்ண மாட்டோம்//

அது!

:))

said...

// Divya said...
\" நாமக்கல் சிபி said...
//[ ஜொள்ளு பாண்டிக்கு கொடுத்த 'அண்டக்காக்க கொண்டை' தலைப்பு மாதிரி கொடுத்திடாதீங்க]
//

:-))

கொடுத்தாலும் எழுதணும். அதுதான் நல்ல படைப்பாளிக்கு அழகு!
நீங்கள் எழுதுவீர்கள்! \"

சிபி, என் எழுத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கையா??? //

ஆஹா திவ்யா
நம்ம சிபியன்ணே சும்மா ஏத்தி வுடுராருங்கோ பார்த்து உஷாரா இருங்கோ !! ;)))

சிபி இப்படியெல்லாம் வேற ஏத்திவுட்டி வேடிக்கை பாக்குறீயளா ?? ;))))) பாவங்க இப்போதான் ஒருவழியா கதைய முடிச்சு இருக்காங்க. ஹையோ திரும்பவுமா ???
:))))))))))))))))))))))))

( திவ்யா கண்டுகுடாதீங்க என்ன சும்ம உல்லல்லாய் .. ;)))

said...

//நாமக்கல் சிபி said...

//சிபி, என் எழுத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கையா??? //

ஒரு பாட்டில் சரக்குக்கு ஒரு பெக்கு பதம்! ச்சே! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!//

:)) அடடா சிபி என்ன நேத்து
கச்சேரியா ??சொல்லவேயில்லை ?? ;))))))))))
என்னதான் மறச்சாலும் கை கொளருதே பாருங்க :))))))))))))

Anonymous said...

என்ன? இன்னும் 150 அடிக்கலியா?

said...

\"ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா திவ்யா
நம்ம சிபியன்ணே சும்மா ஏத்தி வுடுராருங்கோ பார்த்து உஷாரா இருங்கோ !! ;)))

சிபி இப்படியெல்லாம் வேற ஏத்திவுட்டி வேடிக்கை பாக்குறீயளா ?? ;))))) பாவங்க இப்போதான் ஒருவழியா கதைய முடிச்சு இருக்காங்க. ஹையோ திரும்பவுமா ???
:))))))))))))))))))))))))

( திவ்யா கண்டுகுடாதீங்க என்ன சும்ம உல்லல்லாய் .. ;))) \"


பாண்டி நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு நல்லா புரியுதுங்க, இனிமேலும் தொடர் கதையின்ற பேர்ல டி.வி சிரீயல் ரேஞ்சுக்கு இழுவையா இழுக்காதீங்க திவ்யான்னு சொல்ல வரீங்க, கரக்டா??

said...

\"குட்டிச்சாத்தான்ஸ் கிளப் said...
என்ன? இன்னும் 150 அடிக்கலியா? \"

குட்டிசாத்தான்ஸ் கிளப், உங்கள் கழகத்தின் ஆதரவு கிடைத்தால் என் பதிவிற்கு 150 பின்னூட்டம் கிடைக்கும்!!! கிடைக்குமா???

Anonymous said...

Hi Divya..
Super story. I really like this.
-siva_ndk

said...

\"Anonymous said...
Hi Divya..
Super story. I really like this.
-siva_ndk
\"

சிவா உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

said...

150 நானா ? :)

said...

\"Arunkumar said...
150 நானா ? :) \"

Arunkumar, 150 நீங்களேதான்......ரொம்ப நன்றிங்கோ!!

[உங்களுக்கு தான் எவ்வளவு நல்ல மனசு அருண், என் பின்னூட்டத்தை 150ஆ ஆக்கனும்னு தேடி வந்து பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க, ரொம்ப நன்றிங்க!! ]

said...

அப்போ எங்களுக்கு எல்லாம் நல்ல மனசு இல்லையா???

விளையாட்டு இருக்கட்டும், கதை நல்லா இருந்தது.

said...

\" Udhayakumar said...
அப்போ எங்களுக்கு எல்லாம் நல்ல மனசு இல்லையா???

விளையாட்டு இருக்கட்டும், கதை நல்லா இருந்தது.
\"

கதையினை பாராட்டியதற்கு நன்றி உதய்.

[ Very late attendence udhay, so last bench la nillunga, ungalukku 'time out']

Anonymous said...

//அப்போ எங்களுக்கு எல்லாம் நல்ல மனசு இல்லையா???
//

அதானே?

Anonymous said...

முன்னாடி ஒரு கதை எதிர்பார்த்தா மாதிரியே போச்சுன்னு சொன்னேன் இல்லையா,ஆனா இது நல்ல வித்யாசமா முடிஞ்சி இருக்கு!!
வாழ்த்துக்கள்

said...

\"நல்ல மனசுக் காரன் said...
//அப்போ எங்களுக்கு எல்லாம் நல்ல மனசு இல்லையா???
//

அதானே?\"

ஐயோ! உங்க மனசு தங்கமான மனசுங்க, !!!

said...

\"CVR said...
முன்னாடி ஒரு கதை எதிர்பார்த்தா மாதிரியே போச்சுன்னு சொன்னேன் இல்லையா,ஆனா இது நல்ல வித்யாசமா முடிஞ்சி இருக்கு!!
வாழ்த்துக்கள் \"

CVR நீங்க ரயில் சிநேகம் படிச்சுட்டு கமண்ட் போட்டபோவே நினைச்சேன் நீங்க இன்னும் கல்லூரி கலாட்டா படிக்கலீன்னு............படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தந்தமைக்கு நன்றி!!

said...

திவ்யா,
உங்களோட கல்லூரி கலாட்டாவின் 5 பாகங்களை இன்னிக்கு ஒரே மூச்சில் படிச்சி முடிச்சேன். முதல் பாகம் ஏற்கனவே படிச்சிட்டேன். நல்லா எழுதிருக்கீங்க. குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் பேசறதை ரொம்ப இயல்பா எழுதிருக்கீங்க. நல்லாருந்துச்சு.

தங்களுக்கு என் உளங்கனிந்த கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

திவ்யா!
இன்னிக்குத்தாங்க கல்லூரி கலாட்டா ஆறையும் ஒன்னா சேர்த்து படிக்க முடிஞ்சுது. நல்லா இருந்தது கதையும் நடையும். இத்தோடு முடித்தது நல்ல கதை சீக்கிரம் முடிஞ்சுப்போச்சேன்னு ஒரு சின்ன ஏமாற்றத்தை தந்தது. பரவாயில்லை.

இரக்கம் தான் உண்மையான காதலுக்கு அடிகோல் என்று ஒரு பெரியவர் சொல்ல கேட்டதுண்டு. :)

said...

aaru pathivugalaiyum padithu mudithean...arumaiyeaa irunthathu...anaivarin karuthai poola..thedirnu mudithathu poola irunthathu...anyhow..nalla viru viruppa irukunga...valthukal..

said...

//கண்ணும் கண்ணும் நோக்கினால்- காதல் பிறக்கலாம்

உடல் ஸ்பரிசத்தினால்- மோகம் பிறக்கலாம்

வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????//

ஓ பிறக்கலாமே! மோதலில் ஆரம்பித்து நட்பான தோழன் எனக்கும் இருக்கிறான். அன்பான தோழன்.. :-)

:-)

said...

HMMM...nalla story ....neriya yedhir paradha thirupanngal......melum valara valthukkal

said...

chanceless climax vaaippe illa...

nalla dialogue sentences...words ellam sooper... kalakiteenga...

expecting more...

g8 going...

said...

\\Blogger கைப்புள்ள said...

திவ்யா,
உங்களோட கல்லூரி கலாட்டாவின் 5 பாகங்களை இன்னிக்கு ஒரே மூச்சில் படிச்சி முடிச்சேன். முதல் பாகம் ஏற்கனவே படிச்சிட்டேன். நல்லா எழுதிருக்கீங்க. குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் பேசறதை ரொம்ப இயல்பா எழுதிருக்கீங்க. நல்லாருந்துச்சு.

தங்களுக்கு என் உளங்கனிந்த கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.\\


நன்றி கைப்புள்ள!

said...

\\Blogger லொடுக்கு said...

திவ்யா!
இன்னிக்குத்தாங்க கல்லூரி கலாட்டா ஆறையும் ஒன்னா சேர்த்து படிக்க முடிஞ்சுது. நல்லா இருந்தது கதையும் நடையும். இத்தோடு முடித்தது நல்ல கதை சீக்கிரம் முடிஞ்சுப்போச்சேன்னு ஒரு சின்ன ஏமாற்றத்தை தந்தது. பரவாயில்லை.

இரக்கம் தான் உண்மையான காதலுக்கு அடிகோல் என்று ஒரு பெரியவர் சொல்ல கேட்டதுண்டு. :)\\

பொறுமையாக அனைத்து பகுதிகளையும் படித்து, உங்கள் கருத்துக்களை பின்னூட்டமைக்கு நன்றி!

said...

\\Blogger Seenu said...

aaru pathivugalaiyum padithu mudithean...arumaiyeaa irunthathu...anaivarin karuthai poola..thedirnu mudithathu poola irunthathu...anyhow..nalla viru viruppa irukunga...valthukal..\\

உங்கள் கருத்திற்கும் , பாராட்டிற்கும் மிக்க நன்றி சீனு!

said...

\\Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

//கண்ணும் கண்ணும் நோக்கினால்- காதல் பிறக்கலாம்

உடல் ஸ்பரிசத்தினால்- மோகம் பிறக்கலாம்

வார்த்தைகளின் மோதலினால் - நட்பு பிறக்க கூடாதா?????//

ஓ பிறக்கலாமே! மோதலில் ஆரம்பித்து நட்பான தோழன் எனக்கும் இருக்கிறான். அன்பான தோழன்.. :-)

:-)\\


வருகைக்கும் தருகைக்கும் நன்றி!

said...

\\Blogger kavidhai Piriyan said...

HMMM...nalla story ....neriya yedhir paradha thirupanngal......melum valara valthukkal\\

நன்றி ப்ரவீன்!

said...

\\Blogger JSTHEONE said...

chanceless climax vaaippe illa...

nalla dialogue sentences...words ellam sooper... kalakiteenga...

expecting more...

g8 going...\\


பொறுமையாக அனைத்து பகுதிகளையும் படித்து, தனித் தனியே பின்னூட்டமிட்டதிற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் :))


மீண்டும் வருக!