'ஆறு மணிக்கு புக் ஃபேர் போகனும், சீக்கிரம் காஃபி ஷாப் வந்திடு, அங்கிருந்து இரண்டு பேரும் சேர்ந்து புக் ஃபேர் போலாம்' என்று தன் காதல் தேவதை பானுவிற்க்கு ஃபோனில் கட்டளையிட்டுவிட்டு அவளுக்காக காஃபி ஷாப்பில் காத்திருந்தான் இளா.
அவள் வர தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், பொறுமையிழந்தவனாய் தனது பற்களுக்கும் நகத்திற்கும் போர் தொடுத்தான்.
"ஹாய்" என்று கையசைத்துக் கொண்டே அவள் வர...........தூரத்தில் அவள் வருவதைப்
பார்த்த நொடியே அவனது கோபப்புயல் வலுவிழந்து கரையைக் கடந்தது.

அவனது தேவதை அவனை நெருங்கினாள்....!!!
என்ன அபாரமான அழகு! புதிதாய் பூத்த ரோஜாவைப்போல!!
தலையை பின்னுக்கு தள்ளி அவள் சிரித்தபோது..
அவனுக்குள் பூகம்பங்கள் வெடித்தன;
பெரிய கட்டான கண்கள்,
சற்றே அண்ணாந்த அழகமைப்பான நாசி,
கதகதப்பான உதடுகள்........!!
"ஸாரிங்க.......கொஞ்சம் லேட்டாயிடுச்சு........ஒரே டிராஃபிக்.........ரொம்ப ஸாரி"
"........."
"ம்ம்.........கோபமா???" கெஞ்சலுடன் அவள் அவனது முகத்தருகே குனிந்து காதில் சினுங்க,
காஃபி ஷாப் பொது இடம் என்பதையும் மறந்து, அவளது கன்னத்தில் 'இச்' சென்று முத்தம் பதித்தான்.
உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..
முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான்
உன் உதட்டில்
ஒரு மச்சம்!!எதிர்பாரா முத்தத்தில் அவளது மூக்கு நுனி, காது மடல் எல்லாம் சிவந்தது.
செல்ல சிணுங்களுடன் அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

ஆறடிக்கு குறையாத உயரமும் அதற்கேற்ற கட்டான உடலும் முகத்தில் படிப்பின் தீட்சண்யமும்.. அலை அலையாய் படர்ந்த கேசமும்.. அளவான மீசையுமாய் … .. கூரிய கண்களுடன் உதட்டில் வளைந்த சிரிப்புடன் தன்னை பார்த்தவனை ஒரு கணம் நன்றாக உற்று பார்த்தாள் பானு.
தன் அண்ணனின் நண்பன், தன் வருங்கால கணவன் இளாவின் குறும்பு பார்வையை அதற்கு மேல் சந்திக்க இயலாதவளாய் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.
அவளது வெட்கி சிவந்த முகத்தைப் பார்த்தபோது, அவனது காத்திருப்பின் அவஸ்தை காணாமலேயே போனது!!
நீ தாமதமாய் வந்தால் கூட
என்னால் கோபப்பட முடியவில்லை...
திட்டுவதைபோல நடிக்கத்தான் முடிகிறது...
அப்போது தானே என்னை விதம்
விதமாக கொஞ்சி சமாதனப்படுத்துவாய்...சிறிது நேர மெளனமான இம்சைக்குப் பின், அவளே பேச்சை ஆரம்பித்தாள். அன்றைய நாள் இருவருக்கும் எப்படி சென்றது என்று பேசி இயல்பு நிலைக்கு வந்து, காஃபி அருந்திய பின்பு , புக்ஃபேர் போகலாம் என அவசரப்படுத்தினான்.
"டைம் ஆச்சு ....ஆல்ரெடி நீ வந்தது லேட்.....வா புக்ஃபேர் போலாம்"
"கண்டிப்பா போய்தான் ஆகனுமா??.............டயர்டா இருக்குது..........இன்னொருநாள் போலாமே......ப்ளீஸ்"
"என்ன விளையாடுறியா????..........புக் ஃபேர் ஒப்பன் பண்ணின இன்னிக்கே ஏன் நான் போக ஆசைப்படுறேன்னு ஃபோன்ல சொன்னதை மறந்துட்டியா??"
"ஆங்........மறக்கல,மறக்கல...........அந்த எழுத்தாளர் மதிமாறனோட முதல் நாவல் இந்த புக்ஃபேர்ல பப்ளிஷ் ஆகுது.........அதுக்காகத்தானே?"
"தெரிதில்ல.......அப்புறம் என்ன........சரி வா போகலாம்"
என்று கூறிக்கொண்டே தன் இருக்கையிலிருந்து எழுந்திருக்க முற்பட்டான்.
"நாளைக்கு போனா அந்த நாவல் கிடைக்காதா??.......இன்னும் 3 நாள் புக் ஃபேர் இருக்குதே.......ஸோ நாளைக்கு போகலாம் ..ப்ளீஸ்"
" என்னை டென்ஷன் ஆக்காதே சொல்லிட்டேன்.........எனக்கு மதிமாறனோட எழுத்து எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும், உனக்கு எப்பவுமே அவரோட எழுத்துனா பிடிக்கிறதே இல்ல, அதான் இப்ப......வேணும்னே நாளைக்கு போலாம், அப்புறமா போலாம்னு வம்பு பண்றே"

"ஹே..........கூல் டவுண்பா.......அந்த ஆளு பெரிய எழுத்தாராம் , அவர் எழுத்து மேல இவருக்கு ஒரே கிரேஸாம்.............முதநாவல் பப்ளிஷ் பண்ணினதும் உடனே வாங்கிடனுமாம்........ரொம்பதான் குதிக்கிறாரு"
"மறுபடியும் என் கோபத்தை கிளறாதே.....இன்னொரு தடவை அவரோட எழுத்து பத்தி கிண்டலா பேசாதே, அவர் வாரபத்திரிக்கைல எழுதின தொடர்கதையை நீ படிச்சுப் பார்த்திருக்கனும், .........என்னா ஒரு த்ரில், திருப்பம்.......சான்ஸே இல்ல, பெரிய டிடக்டிவா இருக்க வேண்டியவரு அவரு தெரிஞ்சுக்கோ"
"ஆமா நானும் தான் படிச்சேன் அந்தாள் எழுதின தொடர் கதை,கொள்ளைக்கார கும்பலோட சூழ்ச்சி, தந்திரம், கொலை எல்லாம் வெளிப்படையா எழுதிருந்தார் வன்முறையோட.........அது உங்களுக்கு த்ரில்லா??? அந்த கொலைக்காரனோட சூட்சமம் எல்லாம் எப்படி அப்படியே நேர்ல பார்த்த மாதிரி எழுதுறார்........கற்பனை கதை மாதிரியே தோணல, இந்தாளே ஒரு கொள்ளைக் கூட்ட தலைவனா இருந்திருபபாராயிருக்கும்,அதான் இப்படி பரபரப்பு ஏற்படுத்துற மாதிரி தொடர்கதை எழுதுறார்"
" உனக்கு அவரோட எழுத்து பிடிக்கலைன்ன கம்முனு இரு .....இப்படி விமர்சனம் பண்ணாதே அவரோட எழுத்தை, எவ்வளவு பெரிய புத்திசாலியா இருக்கனும் அவரு இப்படி ஒரு விறுவிறுப்பான தொடரை எழுத..........நீ ஒரு மக்கு, டீவி சீரியல் பார்த்துட்டு , மூக்கு சீந்தி அழுகுற சாதாரன தமிழ் பொண்ணு, ஞானசூன்யம் நீ.........உனக்கெங்கே புரியும் இதெல்லாம்....."
"இப்ப எதுக்கு என்னை ஞானசூன்யம்னு சொல்றீங்க?? என்னை விட உங்களுக்கு அந்த மதிமாறன் பெருசா போய்ட்டாரா??"
கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.
சமாதானமானவளாக....குறும்பு பார்வை பார்த்தாள் பானு!!
விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோபப்பட
விடுவதாயில்லை
உன் விளையாட்டுத்தனம்!"நானும் சும்மாதான் சீண்டி பார்த்தேன் உங்களை.......எனக்கு மதிமாறனோட எழுத்தில் அதிக ஈடுபாடு இல்லினாலும் உங்களுக்கு பிடிக்கும்னு ...புக் ஃபேர் போய், அவரோட நாவல் வாங்கிட்டுத்தான் இங்கே வந்தேன்........அதான் நான் வர்ரதுக்கு லேட்"
என்று கிஃப்ட் ராப் செய்யப்பட்ட நாவலை அவனிடம் கண்சிமிட்டியபடியே கொடுத்தாள்.
ஆச்சரியத்தில் விழித்தான்...!!!
"தாங்க்ஸ்டா........செல்லம்" என கூவிக்கொண்டே அவளிடமிருந்து கிஃப்ட்டை வாங்கி ஆசையாக பிரிக்கப்போனான்.
" நோ.......நோ......." என்று கீச்சிட்டாள் அவள்.
அவன் பதறிப்போய் அவளை நோக்க...
"பொறுமை சார்.........இந்த கிஃப்ட்டை இப்போ பிரிக்க கூடாது நீங்க. உங்களுக்கு பிடிச்ச நாவல் மட்டும் இந்த கிஃப்ட் பேக்கில் இல்ல.........அதுகூடவே இன்னொரு கிஃப்ட்டும் நான் வைச்சிருக்கிறேன்.........ஸோ இரண்டு கிஃப்ட்டையும் நீங்க வீட்ல போய்தான் பார்க்கனும்"

" ப்ளீஸ்....ப்ளீஸ்டா கண்ணம்மா............இப்பவே..........ஓபன் பண்றேன்டா" என அவன் கெஞ்சி கூத்தாடியும் அவள் சம்மதிக்கவில்லை.
நாவலை பார்க்கும் ஆவலில் அவன் உடனே வீட்டிற்கு போகலாம் என துரிதப்படுத்தினான்.
இருவரும் அவனது காரில் சென்றனர்.
அவளது வீட்டின் முன் காரை நிறுத்தவும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டித்தது.
"என்னடா கரெண்ட் போய்டுச்சு......கீழ் போர்ஷனில் வீட்டு ஓனர்ஸும் இல்ல, உங்க அப்பா அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்கன்னு சொன்ன.......எப்படி நீ தனியா......"
"அதெல்லாம் ஒன்னும் ப்ரச்சனை இல்லை.........நாங்களெல்லாம் இருட்டை பார்த்து பயப்படுற பரம்பரையா??...போலீஸ்காரன் தங்கச்சியாக்கும் நான்"
" இருந்தாலும்..........ராத்திரி...........தனியா............ஒரு வயசுப் பொண்ணு........அதுவும் அழகான பொண்ணு.........தனியா வீட்ல.......நான் வேணா துணைக்கு...."

"அய்யே.......ஆசைய பாரு! ஒன்னும் வேணாம், அதெல்லாம் நாங்க பயப்படாம இருந்துப்போம். என் அண்ணாவும் டியூட்டி முடிஞ்சு வர்ர நேரம் தான்.......ஸோ நோ ப்ராப்ளம், நீங்க புறப்படுங்க"
"ஹும்......சரிடா.......டேக் கேர்...குட் நைட்!!!"
உன்னை நாளையும்
சந்திக்கலாம்
என்ற சந்தோஷத்தைவிட
இன்றும்
பிரிவதே கொடியதடி.....தனது மொபைல்லிருந்த டார்ச் வெளிச்சத்தில் மாடிப்படி ஏறி தன் வீட்டிற்குள் அவள் செல்வதை பார்த்தபின் , அவனும் காரில் தன் வீடு நோக்கி புறப்பட்டான்.
வீட்டினுள் வந்தவள் எமர்ஜென்ஸி லைட்டை ஆன் செய்தாள்.....அதிலும் சார்ஜ் போதுமான அளவு இல்லாததால் மெழுகுவர்த்தியும் ஏற்றினாள், முகம் கழுவி விட்டு முன் அறைக்கு வந்தாள்.

தங்கள் காதலை தன் அண்ணனிடம் சொல்லிவிட இளா எவ்வளவோ வற்புறுத்தியும், பானு விஷயத்தை அண்ணனிடம் சொல்ல அருமையான சந்தர்ப்பம் தேடி கொண்டிருந்தாள். தன் நண்பனின் தங்கையையே காதலித்துக் கொண்டு, அதனை நண்பனிடம் மறைக்க ஏனோ இளாவிற்கு விருப்பமில்லை.
இன்று இளாவிற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த மாதிரி அண்ணாவிற்கும் காதல் விஷயத்தை இன்னிக்கு சொல்லிடனும், அம்மா அப்பா ஊரில் இல்லாத இந்த நேரத்தில் அண்ணனிடம் பக்குவமா விஷ்யத்தை சொல்றது நல்லது , என்று மனதிற்குள் நினைத்தவளாய் சோஃபாவில் தலை சாய்த்தாள் பானு.
சிறிது நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டது.
'பாவி!!! சஸ்பென்ஸ் தாங்காம........பாதி வழியிலேயே காரை ஓரங்கட்டிட்டு நான் கொடுத்த கிஃப்ட் பேக்கை ஓபன் பண்ணியிருப்பாங்க.......அதான் உடனே யூ டர்ன் போட்டு வந்திருப்பாங்க,
அச்சோ, .......என் ஸ்பெஷல் கிஃப்ட் பார்த்து .என்ன கலாட்டா பண்ண போறாங்களோ?
எப்படி சமாளிக்கப் போறேனோ தெரிலீயே!!
வெட்கம் பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு,
ரத்த நாளங்கள் துடித்தன!!
அவள் கதவினருகே செல்வதற்குள் மீண்டும் கதவு படபடப்புடன் தட்டப்பட்டது.
"ஒரு வேளை அண்ணா டியூட்டி முடிஞ்சு வந்துட்டாரோ.......இருட்டிலே தன் கிட்ட இருக்கிற வீட்டு சாவி எடுத்து திறக்க சோம்பல் பட்டு கதவு தட்டுறார் போலிருக்கு, என் நினைத்துக்கொண்டே கதவை திறந்தாள்.
அங்கு இருட்டில்..........அவள் இதுவரை கண்டிராத ஒரு உருவம்!
இருட்டில் அந்த கம்பீரமான கட்டுமஸ்தான உருவத்தோற்றம் திகிலை ஏற்படுத்தியது அவளுக்கு.

"யா......யாரது" என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
பதலளிக்காமல் அவ்வுருவம் இரண்டடி எடுத்து வைத்து ,
அவளை நெருங்கியது!!
"யா........ர்.......நீங்......." என்று அவள் முடிப்பதற்குள்.......!!
[தொடரும்]
உயிரே!...உறவாக வா?? - 2உயிரே!....உறவாக வா?? - 3உயிரெ!....உறவாக வா??? - 4