April 29, 2009

உன்னிடத்தில்......சரணடைந்தேன்!!! - 3

பகுதி - 1

பகுதி - 2

சரஸ்வதி விஷமருந்திவிட்டாள் என்று அந்த முதியவர் கூறியதும், கண்ணீருடன் ஸ்தம்பித்து நின்ற டாக்டர் தீபா,
தன் கையிலுள்ள பிஸ்கட் பாக்கெட்டையும், தன்னையும் மாறி மாறி பார்த்து புன்னகைக்கும் சரஸ்வதியின் குழந்தையை பார்த்ததும், துக்கம் நெஞ்சை அடைக்க.............அந்த சிறுவனை தன்னிடம் அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்து, தான் வாங்கி வந்திருந்த பிஸ்கெட்டை கொடுத்தாள்.

அந்த வயதான பெண்மனி, தன் கண்களை துடைத்தபடியே உடைந்த குரலில் .......மீண்டும் பேச தொடங்கினாள்,

"அந்த புள்ள சரஸு மருந்து குடிச்சு இரண்டு நாள் ஆச்சுமா, பெரிய ஆஸ்பத்திரில தான்மா சேத்திருக்கு........உசிர காப்பாத்திட்டாக, ஆனா கொத்துயிரும் கொலையுருமா கிடைக்குதுமா ஆஸ்பத்திரில,அதான் அவ பையனை நான் பாத்துக்கிறேன்" என்றார்.

சரஸ்வதி உயிரோடு தான் இருக்கிறாள் என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சினால் தீபாவின் நெஞ்சு ஏறி இறங்கியது. சரஸ்வதியின் பையனை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவரது கைகளில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை திணித்துவிட்டு,

"பையனுக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கி கொடுங்க பாட்டி, நான் சரஸ்வதியை ஹாஸ்பிட்டல்ல போய் பார்க்கிறேன்" என்று கூறி, வேக வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள் தீபா.

அங்கு சரஸ்வதி அனுமதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பிரிவினை கண்டறிந்து,ட்யூட்டில் இருந்த டாக்டரிடம் சரஸ்வதியின் உடல் நிலையினை பற்றி கேட்டறிந்த தீபா, சரஸ்வதி இருந்த அறைக்கு சென்றாள்.

கழுத்துவரை போர்த்தப்பட்டு, தலை கலைந்து, முகம் கறுத்துப்போய்............பரிதாபமாக படுத்திருந்த சரஸ்வதியை பார்த்ததும், தான் ஒரு டாக்டர் என்பதையும் மீறி அழுகை வந்தது தீபாவிற்கு. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், சரஸ்வதியின் படுக்கையின் அருகில் அமைதியாக நின்றிருந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து கண்திறந்த சரஸு, டாக்டர் தீபாவை பார்த்ததும், விசும்பலுடன் அழ துவங்கினாள்.
தீபா படுக்கையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து, சரஸ்வதியின் கைகளை தடவியபடி ஆறுதல் கூறி,சரஸ்வதி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு சென்றதின் காரணம் கேட்டாள்.


தான் மேற்கொண்டு படிப்பதையோ, வேலைக்கு செல்வதையோ விரும்பாத தன் கணவன், தன்னை கடுமையாக தாக்கியது மட்டுமில்லாமல், காப்பியில் விஷத்தை கலந்து குடிக்க வற்புறுத்தி,

மறுத்த சரஸ்வதியிடம் அவளது மூன்று வயது மகனுக்கு அவள் கண் எதிரிலேயே மண்ணென்னைய் ஊற்றி கொளுத்த போவதாக மிரட்டியதும்,குடி போதையில் தன் கணவன் ஏடாகூடாமாக ஏதும் செய்து விட கூடாது என்று, மகனை காப்பாற்றும் எண்ணத்தில் அவனது மிரட்டலுக்கு பணிந்து போனதையும்.......அழுகையின் நடுவில் திக்கி தினறி அடிக்குரலில் சொல்லி முடித்தாள் சரஸ்வதி.

இத்தனை கொடூரகாரனா சரஸ்வதியின் கணவன்???? கோபத்தில் ரத்தம் கொதித்தது தீபாவிற்கு.

அங்கு ட்யூட்டில் இருந்த நர்ஸிடம் , சரஸ்வதியை நன்றாக கவனித்துக்கொள்ளும் படி கூறிவிட்டு, உடனடியாக கார்த்திக்கிற்கு ஃபோன் செய்தாள் தீபா. அவனை நேரில் சந்திக்க முடியுமா என்று கேட்டறிந்து விட்டு, கமீஷ்னர் அலுவலக வளாகத்திலிருந்த கார்த்திக்கின் அலுவலக அறைக்கு சென்றாள் தீபா.

வெளியில் அமர்ந்திருந்த கான்ஸ்டபளிடம் தன் வரவை தெரிவித்து, கார்த்திக்கின் அனுமதி பெற்று , அவனது அறையினுள் பட படப்புடன் நுழைந்தாள் தீபா,

"ஹாய் .....டாக்டர் மேடம் ...வாங்க வாங்க"

"கார்த்திக்............ரொம்ப அர்ஜண்ட்"

"அர்ஜண்ட்டா??.......வராண்டால நேரா போய் லெஃப்ட்ல திரும்பினா லேடீஸ் பாத்ரூம் இருக்கு தீபா"

"ச்சீ விளையாடதே கார்த்திக்...........ஐ அம் டாம்ன் சீரியஸ்"

"ஸாரி ஸாரி.........கூல் டவுன் தீபா........ஏன் இவ்வளவு டென்ஷன்.....இந்தா இந்த தண்ணி கொஞ்சம் குடி"

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தீபா, ஆஸ்பத்திரியில் சரஸ்வதி தன்னிடம் கூறியதை எல்லாம் அவனிடம் விரிவாக சொன்னாள்.

"டாமிட்.........சரியான ஆயோக்கியனா இருப்பான் போலிருக்குதே இந்த சரஸ்வதியோட புருஷன், சரஸ்வதி கொடுக்கிற வாக்குமூலத்தை வைச்சு அவனை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிடலாம்............கம் தீபா..........லெட்ஸ் ஹரி அப்"

இருவரும் விரைந்து , சரஸ்வதியை சந்திக்க ஆஸ்பத்திரி சென்றனர்.

சொட்டு சொட்டாக இறங்கி கொண்டிருந்த சலைன் பாக்கட்டை பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி, கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு திரும்பினாள்.

டாக்டர் தீபாவுடன் போலீஸ் சீருடையில் வந்திருந்த கார்த்திக்கை கண்டதும், ஏதும் புரியாமல் விழித்தாள் சரஸ்வதி.

"சரஸ்வதி......நான் சொன்னேன்ல உன் படிப்புக்காக உதவி பண்ற என்னோட நண்பன்னு......அது இவர்தான், அஸிஸ்டண்ட் கமிஷனர் கார்த்திக், ............என்கிட்ட சொன்னதையெல்லாம் இப்போ......வாக்குமூலமா இவர்கிட்ட சொல்லு, மத்ததை இவர் பார்த்துப்பார்"

"................."

"பயப்படாம......நடந்தது என்னன்னு என்கிட்ட சொல்லுங்கமா" என்று கூறிய கார்த்திக், தன்னுடன் வந்திருந்த கான்ஸ்டபளிடம் வாக்குமூலம் எழுதி கொள்ளுமாறு சைகை காட்டினான்.

மிரண்டு போயிருந்த சரஸ்வதி, தன் நாவை ஈரப்படுத்திக் கொண்டு பேச தொடங்கினாள்,

"எனக்கு..........ரொம்ப நாளாவே வயித்து வலி இருந்துச்சு, தாங்கிக்க முடியாமத்தான்........விஷத்தை குடிச்சுட்டேன்........வயித்துல இருந்த புள்ள செத்துப்போச்சு........என்னைய மட்டும் காப்பாத்திட்டாங்களே" என்று ஓ வென அழுதாள் சரஸ்வதி.

சரஸ்வதியின் இந்த பேச்சு மாற்றம்,..... அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தர, வெறுப்போடு ஒரு பார்வை சரஸ்வதியை பார்த்துவிட்டு, வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் தீபா.

வராண்டா தூணில் சாய்ந்தபடி நின்றிருந்த தீபாவிடம் வந்த கார்த்திக்,

"இது.......இது தான் நம்ம தமிழ் பொண்ணுங்களோட வீக்னெஸ் தீபா..........."

"ச்சே..........எப்படி ........எப்படி கார்த்திக்.....அப்படியே ப்ளேட்டை மாத்தி போட்டுட்டா அந்த பொண்ணு??"

"நோ டென்ஷன் ப்ளீஸ்...........போலீஸ்னதும் சரஸ்வதி பயந்துட்டா......"

"ஏன் இப்படி இருக்காங்க..........."

"பதி பக்தி..........கணவன் தன்னை கொலையே பண்ணினாலும் காட்டிக்கொடுக்காத .......பதிபக்தி"

"என்ன பக்தியோ..........பாவி அவளை இவ்ளோ கொடுமை படுத்துறான், உண்மையை சொல்லாம மறைக்கிறாளே இவ, எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு" கோபத்தில் தீபாவின் உதடுகள் துடித்தன.

"தீபா.........காம் டவுண் ..........இதை வேற மாதிரிதான் டீல் பண்ணனும்......ஸோ டோண்ட் வொர்ரி"

"வேற மாதிரின்னா.............என்ன பண்ணப்போறே கார்த்திக்?"

"பொறுத்திருந்து பாருங்க டாக்டரம்மா......."

அந்த டென்ஷனிலும், கார்த்திக்கின் கண்சிமிட்டல் தீபாவின் முகத்தில் லேசான புன்னகையை படர்வித்தது!

அவளது மெல்லிய புன்னகையை தன் அடிமனதில் படம் பிடித்து பதித்துக் கொண்டிருந்த கார்த்திக்............அவனும் தீபாவும் நின்றிருந்த வராண்டாவின் மறுமுனையில் ஒரு உருவம் தூணின் பின்புறமாக மறைந்திருந்து இவர்களை கவனிப்பதை கண்டு சுதாரித்துக்கொண்டான்,

உடனடியாக கார்த்திக்............

[தொடரும்]

பகுதி - 4

75 comments:

said...

என்ன இது ஜெட் வேகத்தில் அடுத்த பகுதி...!!! அடுத்து அடுத்து ஆச்சரியம் தான் திவ்யா..!! :)))

said...

சரஸ்வதியைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கு திவ்யா.. இப்படியும் பொண்ணுங்க இருக்காங்களா என்ன...? :(

said...

//இது தான் நம்ம தமிழ் பொண்ணுங்களோட வீக்னெஸ் தீபா//

நம்ம பொண்ணுங்க என்ன அவ்ளோ வீக் ஆனவங்களா என்ன..? அவங்க வழக்கமா மத்தவங்களை தனே வீக் ஆக்குவாங்க..? ;))))))

said...

இப்படி ஒரு கதையை களத்தை அருமையா கையாண்டிருக்கே திவ்யா.. பாராட்டுகள்..!! :))

said...

இப்படி பகுதிக்கு பகுதி ஒரு பரபரப்பை கிளப்பி தவிக்க விடுறதே உனக்கு வேலையா போச்சு..!! :))) சீக்கிரம் அடுத்த பகுதி ப்ளீஸ்...!! :)))

said...

இப்படி ஒரு கதை களத்தை அருமையா கையாண்டிருக்கே திவ்யா.. பாராட்டுகள்..!! :))

said...

வேகமாகவும் விறுவிறுப்பாகவும் சுவாராசியமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது... (!) :)

அந்த பொண்ணு ஏன் அப்படி சொல்லிச்சு எண்ணு தெரியிறதுக்குள்ள முடிச்சிட்டீங்களே இந்த பகுதிய.... ஆகவே அடுத்த பகுதியை விரைவாக போடவும்... !!

கதை மிகவும் அருமையாக உள்ளது...
வாழ்த்துகள்...!!

said...

'இப்படியும் பொண்ணுங்க இருக்காங்களா?? இப்படியும் ஆம்பளைங்க இருக்காங்களா??'னு தான் கேட்க தோணுது.

எனக்கு கார்த்திக் மேல நம்பிக்கை இருக்கு. ஏதாவது புத்திசாலித்தனமா செய்வான் பாருங்க. ஏன்னா, பேர் அப்ப்டி. ;)

நெக்ஸ்ட் பார்ட் சீக்கிரம் ப்ளீஸ்..!

said...

நல்லத் திருப்பம் திவ்யா.
நான் கூட சரஸ்வதி போலிஸ்கிட்ட உண்மைய சொல்லிருவாங்களோன்னு நினைச்சேன். ஆனா தாலி செண்டிமெட்டையும் கொண்டு வந்துட்டீங்க. கலக்கல் நடை.

கொஞ்சம் சீக்கிரம் அடுத்த பார்ட்டையும் வெளியிடுங்க அம்மணீ.

said...

நீங்கள் எழுதும் காதல் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கு
எல்லாவற்றையும் படிச்சாச்சு இது தற்சமயம் எழுதப்பட்டு வரும் தொடர் என்பதால் இங்கிருந்து பின்னூட்டம் ஆரம்பிக்கிறேன்.
நன்றி.

said...

ம்ம்ம் கலக்குங்க...கலக்குங்க!!!!
அன்புடன் அருணா

said...

ஹாலோ கார்த்திக்

//எனக்கு கார்த்திக் மேல நம்பிக்கை இருக்கு. ஏதாவது புத்திசாலித்தனமா செய்வான் பாருங்க. ஏன்னா, பேர் அப்ப்டி. ;)//

ஆஹா.. முழு பூசணிக்காய சோத்துல மறைப்பாங்க.. இவுக சேத்துல மறைக்குறாங்கப்பா! ஐயோ என்னால முடியல...

anyway divz, story is gg in an excellent speed. come on yea... publish the next part asap!

said...

கதையொட்டம் நல்லயிருக்கு
ஒரு சஸ்பென்ஸோடு முடித்திருக்கீர்கள்

தொடருங்க எதிர்ப்பார்திருக்கேன்

said...

நவீன் பிரகாஷ் சொன்னது போல் ஜெட் வேகத்தில் அடுத்த பகுதி. மென்மையான காதல் கதையாக மட்டுமில்லாமல் நல்ல கதையம்சமும் இருக்கிறது.

ஆனால் எனக்கொரு வருத்தம். இந்த பாகத்தில் கவிதை ஏதும் இல்லையே. இருந்தாலும் பரவாயில்ல. ஸ்நேஹாவின் கண்களே ஆயிரம் கவிதை வரிகள்ளுக்குச் சமானம் :-)

said...

Just now read part 2 and 3.க‌தை ப‌ய‌ங்க‌ர‌ ஸ்பீடா,பரபரப்பா போகுது.அதிக‌ திருப்ப‌ங்க‌ள்.வ‌ழக்க‌மாக‌ உள்ள காத‌ல் க‌விதைக‌ள் இல்லாத‌ க‌தை.அடுத்த பாகத்திற்காக‌ வெயிட்டிங்.

வாழ்த்துக்கள்.

said...

இந்த பகுதி ரொம்ப குட்டியாக இருக்கு போல!!!

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

said...

//அந்த சிறுவனை தன்னிடம் அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்து, தான் வாங்கி வந்திருந்த பிஸ்கெட்டை கொடுத்தாள்.//

நெகிழ்வான வரிகள்...

said...

//"அர்ஜண்ட்டா??.......வராண்டால நேரா போய் லெஃப்ட்ல திரும்பினா லேடீஸ் பாத்ரூம் இருக்கு தீபா"//

ஹா...ஹா...அதே திவ்யாவின் குறும்பு...

said...

//"பதி பக்தி..........கணவன் தன்னை கொலையே பண்ணினாலும் காட்டிக்கொடுக்காத .......பதிபக்தி"//

இப்படி பட்ட பொண்ணுங்க இன்னும் இருக்காங்க...
ஆனா, அப்படிப் பட்ட ஆண்களும் இருப்பத நெனச்சாத்தான் வருத்தாமா இருக்கு...

said...

//"என்ன பக்தியோ..........பாவி அவளை இவ்ளோ கொடுமை படுத்துறான், உண்மையை சொல்லாம மறைக்கிறாளே இவ, எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு" கோபத்தில் தீபாவின் உதடுகள் துடித்தன.//

இதப் படிக்கும் போது எங்களுக்கும் மனசு துடிக்குது...

கதையின் இந்தப் பகுதி முழுதும் உணர்வுக் குவியலா இருக்கு...

அடுத்த பகுதியையும் இத மாதிரி சீக்கிரம் பதிவிட்டா மகிழ்வோம்...வாழ்த்துக்கள் திவ்யா...

said...

Ennanga neenga long weekend munnadi suspense kuduthu mudikareenga :)

Super divya, romba nalla ezhudhareenga.

said...

Ana en vazhakamana sentiments/points vachukittu kadhaya otareenga, konjam edharthama / murpokka ezhudhalamey ?
please ?

said...

waiting for the next part :)

said...

கதை அருமையாக போய்க்கொண்டு இருக்கிறது.

கடைசியில் ஒரு சஸ்பென்ஸ் வச்சு திகில் கிளப்பி முடிக்கிறீர்களே, உங்களுக்கே இது நல்ல இருக்க?

said...

கதை களம் நன்று.

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் திவ்யா:-)

said...

Karthikukku arive illa... Thamiznaattu ponnunga ippadi pannuvaangannu theriyumla... appuram ennaathukku inspector dressla antha ponna paaka ponaan??

Ippadikku
Arivaali thanamaaga yosikkum Sangam...

said...

//எனக்கு கார்த்திக் மேல நம்பிக்கை இருக்கு. ஏதாவது புத்திசாலித்தனமா செய்வான் பாருங்க//

Itha mattum quote panni ennoda munthuna commenta thirumba podalaamnu nenachen...

//ஏன்னா, பேர் அப்ப்டி. ;)//

he he.. so ennudaiya munththuna commenta naan vaapas vaangikiren ;))

said...

pongappa ungalukku vera vellaiyea illaiya correcta suspense varappothan thodarum poduveengala.. ok ok seekirama next paguthiyaiyum konjam podunga sarrri sari varata nearam aachhu aapala papoom

said...

sikiram next part podungo... soooper ah kondu poreenga....

enna irundhaalum tamil pen thaanu kaatti teenga sarasu va...

padikkum podhu feel panra alavukku unga dialogue irukku soooper ...

well done...

said...

தமிழ்மாங்கனி மற்றும் ஜி,

நான் நல்லவன் தான். ஆனா எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன்னு சொல்ல முடியாது. அவ்வ்வ்வ் ;)

said...

nijamaave jet vegathula thaan pogudhu divya :)

//ஜி said...
Karthikukku arive illa... Thamiznaattu ponnunga ippadi pannuvaangannu theriyumla... appuram ennaathukku inspector dressla antha ponna paaka ponaan?? //

karthik acp nu sonna maadhiri thaana nyabagam ;)

said...

நல்ல சஸ்பென்ஸோட முடிச்சு இருக்கீங்க :)

said...

hmm yet another interesting episode... [:)]

Keep going Divya...

Waiting for the next part....

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

என்ன இது ஜெட் வேகத்தில் அடுத்த பகுதி...!!! அடுத்து அடுத்து ஆச்சரியம் தான் திவ்யா..!! :)))\\

ஜெட் வேகமா??
கருத்திற்கு நன்றி நவீன்!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

சரஸ்வதியைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கு திவ்யா.. இப்படியும் பொண்ணுங்க இருக்காங்களா என்ன...? :(\


சரஸ்வதி மாதிரி பொண்ணுங்க இருக்கத்தான் செய்றாங்க கவிஞரே:)

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//இது தான் நம்ம தமிழ் பொண்ணுங்களோட வீக்னெஸ் தீபா//

நம்ம பொண்ணுங்க என்ன அவ்ளோ வீக் ஆனவங்களா என்ன..? அவங்க வழக்கமா மத்தவங்களை தனே வீக் ஆக்குவாங்க..? ;))))))\\

ஒட்டுமொத்தமா பொண்ணுங்க மேல செம காண்டுல இருக்கிற மாதிரி இருக்குதே கவிஞர் சார், என்னா மேட்டரு??

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

இப்படி பகுதிக்கு பகுதி ஒரு பரபரப்பை கிளப்பி தவிக்க விடுறதே உனக்கு வேலையா போச்சு..!! :))) சீக்கிரம் அடுத்த பகுதி ப்ளீஸ்...!! :)))\\

அடுத்த பகுதி விரைவில்.....

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

இப்படி ஒரு கதை களத்தை அருமையா கையாண்டிருக்கே திவ்யா.. பாராட்டுகள்..!! :))\\

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நவீன்!

said...

\\Blogger நிமல்-NiMaL said...

வேகமாகவும் விறுவிறுப்பாகவும் சுவாராசியமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது... (!) :)

அந்த பொண்ணு ஏன் அப்படி சொல்லிச்சு எண்ணு தெரியிறதுக்குள்ள முடிச்சிட்டீங்களே இந்த பகுதிய.... ஆகவே அடுத்த பகுதியை விரைவாக போடவும்... !!

கதை மிகவும் அருமையாக உள்ளது...
வாழ்த்துகள்...!!\\


வாங்க நிமல்,

உங்கள் விரிவான விமர்சனத்திற்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி!!

மீண்டும் வருக!

said...

\\Blogger Karthik said...

'இப்படியும் பொண்ணுங்க இருக்காங்களா?? இப்படியும் ஆம்பளைங்க இருக்காங்களா??'னு தான் கேட்க தோணுது.

எனக்கு கார்த்திக் மேல நம்பிக்கை இருக்கு. ஏதாவது புத்திசாலித்தனமா செய்வான் பாருங்க. ஏன்னா, பேர் அப்ப்டி. ;)

நெக்ஸ்ட் பார்ட் சீக்கிரம் ப்ளீஸ்..!\\


சரஸ்வதியின் கணவன் மாதிரி கொடூரமான ஆண்களும் இருக்கத்தான் செய்றாங்க கார்த்திக்:)

அசிஸ்டண்ட் கமிஷ்னர் கார்த்திக் மேல ரொம்ப எதிர்பார்ப்பு வைச்சிருக்கிறீங்க போல.....அடுத்த பகுதிகளில் பார்க்கலாம் அவர் உங்க எதிர்பார்ப்பை நிறைவேத்தினாரா இல்லையான்னு:)

அடுத்த பகுதி இந்த வாரத்தில் பதிவிடுகிறேன்:)

said...

\\Blogger ஜோசப் பால்ராஜ் said...

நல்லத் திருப்பம் திவ்யா.
நான் கூட சரஸ்வதி போலிஸ்கிட்ட உண்மைய சொல்லிருவாங்களோன்னு நினைச்சேன். ஆனா தாலி செண்டிமெட்டையும் கொண்டு வந்துட்டீங்க. கலக்கல் நடை.

கொஞ்சம் சீக்கிரம் அடுத்த பார்ட்டையும் வெளியிடுங்க அம்மணீ.\\


வாங்க ஜோசஃப்,

உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

said...

\\Blogger தமிழ் said...

நீங்கள் எழுதும் காதல் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கு
எல்லாவற்றையும் படிச்சாச்சு இது தற்சமயம் எழுதப்பட்டு வரும் தொடர் என்பதால் இங்கிருந்து பின்னூட்டம் ஆரம்பிக்கிறேன்.
நன்றி.\\


வாங்க தமிழ்,

உங்கள் முதல் வருகையும், பின்னூட்ட பாராட்டுதலும் உற்சாகமளித்தது, தொடர்ந்து வருக, நன்றி!!

said...

\\Blogger அன்புடன் அருணா said...

ம்ம்ம் கலக்குங்க...கலக்குங்க!!!!
அன்புடன் அருணா\\

மிக்க நன்றிங்க அருணா:)

said...

\\Blogger Thamizhmaangani said...

ஹாலோ கார்த்திக்

//எனக்கு கார்த்திக் மேல நம்பிக்கை இருக்கு. ஏதாவது புத்திசாலித்தனமா செய்வான் பாருங்க. ஏன்னா, பேர் அப்ப்டி. ;)//

ஆஹா.. முழு பூசணிக்காய சோத்துல மறைப்பாங்க.. இவுக சேத்துல மறைக்குறாங்கப்பா! ஐயோ என்னால முடியல...

anyway divz, story is gg in an excellent speed. come on yea... publish the next part asap!\\

Thanks for your comment Gayu, will post the next part shortly...!

said...

\\Blogger அபுஅஃப்ஸர் said...

கதையொட்டம் நல்லயிருக்கு
ஒரு சஸ்பென்ஸோடு முடித்திருக்கீர்கள்

தொடருங்க எதிர்ப்பார்திருக்கேன்\\

உங்கள் தொடர் வருகைக்கும் பாராடுதலுக்கும் என் மனமார்ந்த நன்றி அபுஅஃப்ஸர்:))

மீண்டும் வருக!

said...

\\Blogger விஜய் said...

நவீன் பிரகாஷ் சொன்னது போல் ஜெட் வேகத்தில் அடுத்த பகுதி. மென்மையான காதல் கதையாக மட்டுமில்லாமல் நல்ல கதையம்சமும் இருக்கிறது.\\

கருத்திற்கு நன்றி விஜய்!



\\ ஆனால் எனக்கொரு வருத்தம். இந்த பாகத்தில் கவிதை ஏதும் இல்லையே. இருந்தாலும் பரவாயில்ல. ஸ்நேஹாவின் கண்களே ஆயிரம் கவிதை வரிகள்ளுக்குச் சமானம் :-)\\

ஹா ஹா சினேகாவின் கண்களே கவி பாடுதா?? அது சரி:)

கவிதை எழுதுவதற்கு ஏற்ற சூழ்நிலை வரும் பகுதிகளில் அமைந்தால், நிச்சயம் கவிதை போட்டுடலாம், சரியா?:))

வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி விஜய்!

said...

\\Blogger Raj said...

Just now read part 2 and 3.க‌தை ப‌ய‌ங்க‌ர‌ ஸ்பீடா,பரபரப்பா போகுது.அதிக‌ திருப்ப‌ங்க‌ள்.வ‌ழக்க‌மாக‌ உள்ள காத‌ல் க‌விதைக‌ள் இல்லாத‌ க‌தை.அடுத்த பாகத்திற்காக‌ வெயிட்டிங்.

வாழ்த்துக்கள்.\\

இரண்டு பகுதிகளை மொத்தமாக ஒரே நேரத்தில் பொறுமையுடன் படித்து, கருத்துக்களையும் பாராட்டையும் பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி ராஜ்!

அடுத்த பகுதி விரைவில் பதிவிடுகிறேன், படித்து கருத்து கூறுங்கள்:)

said...

\\Blogger கோபிநாத் said...

இந்த பகுதி ரொம்ப குட்டியாக இருக்கு போல!!!

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)\\

இந்த தொடரில் ஒவ்வொரு பகுதியும் நீண்ட பகுதிளாக எழுத வேண்டாம் என்று நினைத்திருந்தேன் கோபிநாத்.

அடுத்த பகுதி விரைவில்.......

வருகைக்கு நன்றி கோபி!

said...

முதலில் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய அழகான கதைகளும் யோசிக்க வைக்கும் டிப்ஸ்களையும் எழுதுங்கள்!

said...

உங்களுக்கு மென்மையான காதல் கதைகள் மட்டும் இல்லை! கலகலப்பான காலேஜ் கதைகள் மட்டும் இல்லை.. விறுவிறுப்பான த்ரில்லர்களும் நன்றாக எழுத வருகின்றது!

சீக்கிரம் அடுத்த பகுதியை போட்டு நூறை தாண்டவும்!

said...

//கார்த்திக்............ரொம்ப அர்ஜண்ட்"

"அர்ஜண்ட்டா??.......வராண்டால நேரா போய் லெஃப்ட்ல திரும்பினா லேடீஸ் பாத்ரூம் இருக்கு தீபா"//

த்ரில்லர்லயும் காமெடியா!

said...

And I hope this is 50!

said...

\\Blogger புதியவன் said...

//அந்த சிறுவனை தன்னிடம் அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்து, தான் வாங்கி வந்திருந்த பிஸ்கெட்டை கொடுத்தாள்.//

நெகிழ்வான வரிகள்...\\

கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி புதியவன்.

said...

\\Blogger புதியவன் said...

//"அர்ஜண்ட்டா??.......வராண்டால நேரா போய் லெஃப்ட்ல திரும்பினா லேடீஸ் பாத்ரூம் இருக்கு தீபா"//

ஹா...ஹா...அதே திவ்யாவின் குறும்பு...\\


கரெக்ட்டா நோட் பண்டுறீங்களே புதியவன்:))

said...

\\Blogger புதியவன் said...

//"பதி பக்தி..........கணவன் தன்னை கொலையே பண்ணினாலும் காட்டிக்கொடுக்காத .......பதிபக்தி"//

இப்படி பட்ட பொண்ணுங்க இன்னும் இருக்காங்க...
ஆனா, அப்படிப் பட்ட ஆண்களும் இருப்பத நெனச்சாத்தான் வருத்தாமா இருக்கு...\\

ஆமாம் புதியவன்:(

said...

\\Blogger புதியவன் said...

//"என்ன பக்தியோ..........பாவி அவளை இவ்ளோ கொடுமை படுத்துறான், உண்மையை சொல்லாம மறைக்கிறாளே இவ, எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு" கோபத்தில் தீபாவின் உதடுகள் துடித்தன.//

இதப் படிக்கும் போது எங்களுக்கும் மனசு துடிக்குது...

கதையின் இந்தப் பகுதி முழுதும் உணர்வுக் குவியலா இருக்கு...

அடுத்த பகுதியையும் இத மாதிரி சீக்கிரம் பதிவிட்டா மகிழ்வோம்...வாழ்த்துக்கள் திவ்யா...\\


உங்கள் விரிவான பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி புதியவன்:))

said...

\\Blogger Srivats said...

Ennanga neenga long weekend munnadi suspense kuduthu mudikareenga :)

Super divya, romba nalla ezhudhareenga.\\


உங்கள் தொடர் வருகைக்கும் , பின்னூட்ட ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றி ஸ்ரீவட்ஸ்!

said...

\\Blogger Srivats said...

Ana en vazhakamana sentiments/points vachukittu kadhaya otareenga, konjam edharthama / murpokka ezhudhalamey ?
please ?\\


உங்கள் ஆலோசனையை நினைவில் கொள்கிறேன்:))

said...

\\Blogger Gajani said...

waiting for the next part :)\\

பதிவினை ஆர்வத்துடன் தொடர்ந்து படித்து வருவதிற்கு நன்றி கஜனி!

said...

\\Blogger DHANS said...

கதை அருமையாக போய்க்கொண்டு இருக்கிறது.

கடைசியில் ஒரு சஸ்பென்ஸ் வச்சு திகில் கிளப்பி முடிக்கிறீர்களே, உங்களுக்கே இது நல்ல இருக்க?\\


தொடர்கதைக்கு த்ரில்லே இந்த சஸ்பன்ஸ் தானே:))

பாராட்டிற்கு நன்றி DHANS:))

said...

\\Blogger ஜி said...

Karthikukku arive illa... Thamiznaattu ponnunga ippadi pannuvaangannu theriyumla... appuram ennaathukku inspector dressla antha ponna paaka ponaan??

Ippadikku
Arivaali thanamaaga yosikkum Sangam...\\


mufti la poirukanumnu karthik IPS ku therila, paavum:(

ellarum ungala mathry arivaliya irupangla sir:))

said...

\\Blogger ஜி said...

//எனக்கு கார்த்திக் மேல நம்பிக்கை இருக்கு. ஏதாவது புத்திசாலித்தனமா செய்வான் பாருங்க//

Itha mattum quote panni ennoda munthuna commenta thirumba podalaamnu nenachen...

//ஏன்னா, பேர் அப்ப்டி. ;)//

he he.. so ennudaiya munththuna commenta naan vaapas vaangikiren ;))\\


:))

said...

\\Blogger vinu said...

pongappa ungalukku vera vellaiyea illaiya correcta suspense varappothan thodarum poduveengala.. ok ok seekirama next paguthiyaiyum konjam podunga sarrri sari varata nearam aachhu aapala papoom\\


வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வினு:)

said...

\\Blogger JSTHEONE said...

sikiram next part podungo... soooper ah kondu poreenga....

enna irundhaalum tamil pen thaanu kaatti teenga sarasu va...

padikkum podhu feel panra alavukku unga dialogue irukku soooper ...

well done...\\


மனம்திறந்த பாராட்டிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி:))

said...

\\Blogger Divyapriya said...

nijamaave jet vegathula thaan pogudhu divya :)

//ஜி said...
Karthikukku arive illa... Thamiznaattu ponnunga ippadi pannuvaangannu theriyumla... appuram ennaathukku inspector dressla antha ponna paaka ponaan?? //

karthik acp nu sonna maadhiri thaana nyabagam ;)\\

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி திவ்யப்ரியா:)

said...

\\Blogger நாகை சிவா said...

நல்ல சஸ்பென்ஸோட முடிச்சு இருக்கீங்க :)\\

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சிவா!

said...

\\Blogger Natchathraa said...

hmm yet another interesting episode... [:)]

Keep going Divya...

Waiting for the next part....\\


நீண்ட நாட்களுக்கு பின் என் வலைதளம் வந்திருக்கிறீர்கள் நட்சத்திரா, மிக்க மகிழ்ச்சி:))

said...

\\Blogger Surya said...

முதலில் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய அழகான கதைகளும் யோசிக்க வைக்கும் டிப்ஸ்களையும் எழுதுங்கள்!\\


நூறாவது பதிவினை குறிப்பிட்டு பாராட்டியதிற்கு மிக்க நன்றி சூர்யா:)

said...

\\Blogger Surya said...

உங்களுக்கு மென்மையான காதல் கதைகள் மட்டும் இல்லை! கலகலப்பான காலேஜ் கதைகள் மட்டும் இல்லை.. விறுவிறுப்பான த்ரில்லர்களும் நன்றாக எழுத வருகின்றது!

சீக்கிரம் அடுத்த பகுதியை போட்டு நூறை தாண்டவும்!\\


விரைவில் அடுத்த பகுதியினை பதிவிடுகிறேன்:)

said...

\\Blogger Surya said...

//கார்த்திக்............ரொம்ப அர்ஜண்ட்"

"அர்ஜண்ட்டா??.......வராண்டால நேரா போய் லெஃப்ட்ல திரும்பினா லேடீஸ் பாத்ரூம் இருக்கு தீபா"//

த்ரில்லர்லயும் காமெடியா!\\


:))

said...

\\Blogger Surya said...

And I hope this is 50!\\

நன்றி!

said...

Enna divya, Mega Serail madhiri nalla nerathula Thodarum poduringale..

said...

\\Blogger Pradeep said...

Enna divya, Mega Serail madhiri nalla nerathula Thodarum poduringale.. \\

தொடர் கதையிலும்......ஒரு த்ரில் வேணாமா ப்ரதீப்:))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

மீண்டும் வருக!

said...

ரொம்ப விறுவிறுப்பா இருக்கு திவ்யா... அடுத்த பகுதி சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்...

said...

பெண்களின் பதி-பக்-தி

இந்த பகுதியில் விரு விருப்பு இன்னும் சற்று அதிகமே.