March 25, 2008

மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க!!!

காதல் எந்த நேரத்தில் வரும், எந்த வயதில் வரும், எப்படி வரும் என்றே தெரியாது........அப்படின்னு டயலாக் விடாமல், நேரா மேட்டருக்கு வரேன்.
எந்தக்காலக்கட்டத்தில் எல்லாம் காதல் அரும்புகிறது, அப்படி அரும்பும் காதல் நிலைத்து நிற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா அப்பருவத்துல் என பார்க்கலாமா.....

பள்ளிப்பருவம்:

இந்த பள்ளிபருவக் காதல் பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' மட்டும் அடிப்படையாக கொண்டு வருவதாக இருக்கும்.
பஸ்ஸடாண்ட், டியூஷன், ஸ்கூலில் உடன் படிக்கும் நட்பில் காதல்.........இப்படி பல பல அரும்பும்.
அநேகமாக சைட் அடிச்சு அடிச்சு ......பின் ஒரு காலக் கட்டத்துல தான் காதலாக மாறி, தத்தக்க பித்தக்கான்னு லவ் லெட்டர் எழுதிக்கிற நிலமை வரைக்கும் வரும்.
இந்த 16, 17 வயசுல வருகிற காதல் நிலைத்திருந்து கல்யாணத்துல போய் முடியுறது ரொம்ப கஷ்டம்.
காலப்போக்கில் படிப்பு, வேலை, ஊர் மாற்றம், ரசனை மாற்றம் இப்படி பலபல தடைகள் எல்லாம் தாண்டி தான் வரனும்.........அதுக்குள்ள தாவு தீந்திடும்!!

கல்லூரி பருவம்:
இந்தக் கல்லூரி காலத்துல காதல் வர்ரதுக்கு சான்ஸ் ஜாஸ்தி.
கல்லூரி வாழ்க்கையினாலே 'லவ்' பண்ணிடனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருப்பாங்க பல பேர்.
இதில் சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.

அத விட்டுப்புட்டு கூட ஒரே கிளாஸ்ல படிக்கிற பையனையே லவ்ஸ் பண்ணினா, இந்த பொண்ணு படிச்சு முடிச்சு 22/23 வயசுல பொண்ணுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க, இந்த பொண்ணு அந்த பையன்கிட்ட,

"எங்க வீட்ல வந்து பொண்ணு கேளுங்க"

"உங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்லிட்டீங்களா?"

"எப்போ நாம கல்யாணம் கட்டிக்கலாம்?"

அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிப்பா.

இந்த பையனுக்கு அப்போதான் வேலை கிடைச்சும் கிடைக்காமலும் வாழ்க்கையில் ஒரு நிலமைக்கு வர முயற்சி பண்ணிட்டு இருப்பான், மீசையும் அப்போதான் பாதி பேருக்கு கொஞ்சமாச்சும் ஒரு சீரா வளர ஆரம்பிச்சிருக்கும்,
வீட்டுல அப்போ போய் கல்யாண பேச்சு எடுக்கிற அளவுக்கு செட்டிலாகி இருக்க மாட்டான்......

ஸோ.....இந்த கல்லூரி காதல் 'ததிக்கின தோம்' ஆகிடும்,

கல்லூரி காதல் ,
கல்லூரி வரை!!


பணிபுரியும் இடத்தில்:

தக்கி முக்கி, படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு வந்து நாலு காசு சம்பாதிக்க அரம்பிக்கும் போது,
'நமக்கு இந்த பொண்ணு சரி வருமா?'
'அந்த பொண்ணு ஒகே வா?'.....அப்படின்னு மனசு அலை பாய ஆரம்பிக்கும்.


இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க, ஸோ......பேசி பழக நிறைய வாய்ப்பு கிடைக்கும்.
விருப்பு , வெறுப்புகள்..
எதிர்காலம் பற்றிய எண்ணங்கள்...
இப்படி பல விஷயங்களை பேசி புரிந்துக் கொள்ளலாம்.
அப்படி புரிந்துக் கொண்ட நட்பில் ஒரு காதல் உணர்வு தலை தூக்கினால் கப்புன்னு புடிச்சுக்கனும்.

ஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும் வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பிருக்கு.

'பயபுள்ளைய.....கஷ்டபட்டுபடிக்க வைச்சேன், படிச்சு தன் கால்ல நின்னு சம்பாதிக்கிற திரானி வந்ததும், ஏறின ஏணிப்படி.......என்னை மதிக்காம, கூட வேலை பார்க்கிற புள்ளைய லவ்வு பண்ணிட்டானே"
அப்படின்னு.........புலம்பல் ஒலி கேட்கும்..........

காதல்ல இதெல்லாம் சகஜமப்பா.......!!!

156 comments:

said...

வாம்மா திவ்யா
திரும்ப உங்களோட திருவிளையாடலை ஆரம்பிச்சாச்சா..??
:)))))

said...

//சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.//

ஹஹஹஹஹ அப்படீங்களா திவ்யா..??
நெசமாத்தேன் சொல்லுறீயளா..?? அப்படி பண்ணியும் ஒர்க் அவுட் ஆகாம போகுதுங்ளே அம்மணி ... அதுக்கு என்ன சொல்லுறீய...??? :))))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
வாம்மா திவ்யா
திரும்ப உங்களோட திருவிளையாடலை ஆரம்பிச்சாச்சா..??
:)))))\\

வாங்க பாண்டியண்ணே......முத ஆளா வந்துப்புட்டீக, ரொம்ப நன்றியண்ணே:))

said...

//இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,//

அட நீங்க வேற இபப்டி வெறுப்பேத்திகிட்டு... எங்கே அப்படி இருக்காகன்னு சொல்லுங்க.. ஏதாச்சும் back Gate வழியாவாச்சும் போய் உங்காற குந்திகிறேனுங்கோ....எங்க ஆபீசிலே எல்லாம் அப்படி இல்லீங்களே.... என்ன பண்ணுவேன்.......

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.//

ஹஹஹஹஹ அப்படீங்களா திவ்யா..??
நெசமாத்தேன் சொல்லுறீயளா..?? அப்படி பண்ணியும் ஒர்க் அவுட் ஆகாம போகுதுங்ளே அம்மணி ... அதுக்கு என்ன சொல்லுறீய...??? :))))\\

ஒர்க் அவுட் ஆக சான்ஸ் 'கொஞ்சம்' இருக்குன்னு சொல்லியிருக்கோம்ல.....அப்போ 'மிஸ்' ஆகவும் மீதி சான்ஸ் இருக்குதுன்னு அர்த்தமுங்க பாண்டியண்ணா:-)

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,//

அட நீங்க வேற இபப்டி வெறுப்பேத்திகிட்டு... எங்கே அப்படி இருக்காகன்னு சொல்லுங்க.. ஏதாச்சும் back Gate வழியாவாச்சும் போய் உங்காற குந்திகிறேனுங்கோ....எங்க ஆபீசிலே எல்லாம் அப்படி இல்லீங்களே.... என்ன பண்ணுவேன்.......\\

பந்திக்கு முந்திக்கனும் பாண்டியண்ணே, இது தெரியாம நீங்க என்னத்த பண்ணி கிழிச்சிய ஆபீசுல????

said...

//அப்படி புரிந்துக் கொண்ட நட்பில் ஒரு காதல் உணர்வு தலை தூக்கினால் கப்புன்னு புடிச்சுக்கனும்.//

ஏணுங்க திவ்யா...
நமக்கு ஒரு ஸ்மால் டவுட் !! கப்புன்னு புடுச்சுக்கோன்னு சொல்லறீயளே யாரைன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்கம்மணி... காதல் உணர்வையா ... இல்லை அதை மானாவாரியா அள்ளிக்கொடுத்தவுகளையா.. ?? :)))))

said...

//ஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும் வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பிருக்கு.//

ஓஹோ அப்படியா சொல்லுறீய..?? :)))) பல தடைகளை தாண்டரதுன்னா அப்போ.. இப்போ இருந்தே நீளம் ... உயரம் தாண்டரதுக்கு ரெண்டுபேருமே முதல்ல
இருந்தே ப்ராக்டீஸ் பண்ணவேண்டியதுதான்.. சரிதாணுங்களே...?? :)))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//அப்படி புரிந்துக் கொண்ட நட்பில் ஒரு காதல் உணர்வு தலை தூக்கினால் கப்புன்னு புடிச்சுக்கனும்.//

ஏணுங்க திவ்யா...
நமக்கு ஒரு ஸ்மால் டவுட் !! கப்புன்னு புடுச்சுக்கோன்னு சொல்லறீயளே யாரைன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்கம்மணி... காதல் உணர்வையா ... இல்லை அதை மானாவாரியா அள்ளிக்கொடுத்தவுகளையா.. ?? :)))))\\

இரெண்டையுந்தேன்....:))

said...

//பந்திக்கு முந்திக்கனும் பாண்டியண்ணே, இது தெரியாம நீங்க என்னத்த பண்ணி கிழிச்சிய ஆபீசுல????//

ஹலோ இது என்ன சாப்பாட்டுபந்தியா முந்திக்கறதுக்கு...?? நாங்க ஆபீஸிலே கிழிக்கிரது எல்லாம் இல்லீங்கோ... நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோம்ல... ;))) வேலை என்னானு கேட்டுப்புடாதீக.... ஹஹஹஹஹ்ஹ :))))

said...

ம்ம்ம் நல்லா ரசித்து எழுதி இருக்கீங்க...:)))
வேலைக்கு சேர்ந்த பிறகு கல்லூரியில் படிச்ச ஜூனியரை கல்யாணம் செய்து கொள்ள காதலிப்பது பற்றி அபிப்ராயம்!!!!சொல்லுங்க :))))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//பந்திக்கு முந்திக்கனும் பாண்டியண்ணே, இது தெரியாம நீங்க என்னத்த பண்ணி கிழிச்சிய ஆபீசுல????//

ஹலோ இது என்ன சாப்பாட்டுபந்தியா முந்திக்கறதுக்கு...?? நாங்க ஆபீஸிலே கிழிக்கிரது எல்லாம் இல்லீங்கோ... நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோம்ல... ;))) வேலை என்னானு கேட்டுப்புடாதீக.... ஹஹஹஹஹ்ஹ :))))\\


இப்படியே உங்க வேலையை மட்டும் பார்த்துட்டு நல்ல புள்ளைய இருங்க பாண்டி அண்ணா......


\\ஏதாச்சும் back Gate வழியாவாச்சும் போய் உங்காற குந்திகிறேனுங்கோ....எங்க ஆபீசிலே எல்லாம் அப்படி இல்லீங்களே.... என்ன பண்ணுவேன்.......\


அப்புறம் 'ஆளு' கிடைக்கல இப்படி புலம்பக்கூடாது, சரிங்களா!!

said...

\\ வினையூக்கி said...
ம்ம்ம் நல்லா ரசித்து எழுதி இருக்கீங்க...:)))
வேலைக்கு சேர்ந்த பிறகு கல்லூரியில் படிச்ச ஜூனியரை கல்யாணம் செய்து கொள்ள காதலிப்பது பற்றி அபிப்ராயம்!!!!சொல்லுங்க :))))\\

கல்லூரி ஜூனியர் பெண்ணின் மீது.....கல்லூரியில் அரும்பாத காதல், வேலை செய்யும் இடத்தில் அரும்பியது அழகே!!
நீண்ட நாள் அறிமுகமும், புரிதலும் நிச்சயம் அந்த காதலில் இருக்க வாய்பிருக்கிறது......ஸோ, ஆல் தி பெஸ்ட்!!

said...

நன்றி திவ்யா.. உங்க வாழ்த்தை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்.

கல்லூரிப்பெண், வேறு ஊர், வேறு துறை எனும்போது, வெற்றி வாய்ப்பு எப்படி?

said...

\\ வினையூக்கி said...
நன்றி திவ்யா.. உங்க வாழ்த்தை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்.

கல்லூரிப்பெண், வேறு ஊர், வேறு துறை எனும்போது, வெற்றி வாய்ப்பு எப்படி?\\

என்னங்க வினையூக்கி......ஜோஷியம் கேட்கிறாப்ல கேட்குறீங்க??

தொலைதூர காதலும் வெற்றி பெறும்!!

said...

ம்ம்ம்ம் :))) உங்க ஆருடம், தொலைதூரத்தில் இருக்கிறவங்களுக்கு கேட்டால் மகிழ்ச்சி தான்... மையில் சிறந்த மை பொறுமை...!! காத்திருத்தல் சுகம்.. நன்றி உங்க ஆருடத்தை சம்பந்தபட்டவர்களிடம் சொல்லி விடுகிறேன். :))

said...

//கல்லூரி வாழ்க்கையினாலே 'லவ்' பண்ணிடனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருப்பாங்க பல பேர்.//

திவ்யா இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... :)) எல்லாரும் அப்படி எல்லாம் கங்கனம் கட்டிகிட்டு எல்லாம் இல்லைங்கோ.. சில பேரு சைட் மட்டும் அடிச்சிடு இருப்பாக... நம்மள மாதிரி... ( இப்படி நாமளே நம்மள பத்தி பிட்டைப் போட்டாதான் உண்டு ஹும்... ) ;))))))))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//கல்லூரி வாழ்க்கையினாலே 'லவ்' பண்ணிடனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருப்பாங்க பல பேர்.//

திவ்யா இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... :)) எல்லாரும் அப்படி எல்லாம் கங்கனம் கட்டிகிட்டு எல்லாம் இல்லைங்கோ.. சில பேரு சைட் மட்டும் அடிச்சிடு இருப்பாக... நம்மள மாதிரி... ( இப்படி நாமளே நம்மள பத்தி பிட்டைப் போட்டாதான் உண்டு ஹும்... ) ;))))))))\\


உங்களை மாதிரி, சைட் மட்டும் ....அதுவும் பலரை சைட் மட்டும் அடிச்சுட்டு இருந்த ஒகேங்கண்ணா,

ஆனா, ஒரே ஆளை மட்டும் 'சைட்' அடிச்சா....அப்புறம் தொபுகடிர்னு 'காதலில்' விழ வாய்ப்பிருக்குங்கண்ணோவ்,

ஸோ 'காலேஜ் டேய்ஸ்' சைட்டிலும் கவனம் தேவை!!

said...

/
'பயபுள்ளைய.....கஷ்டபட்டுபடிக்க வைச்சேன், படிச்சு தன் கால்ல நின்னு சம்பாதிக்கிற திரானி வந்ததும், ஏறின ஏணிப்படி.......என்னை மதிக்காம, கூட வேலை பார்க்கிற புள்ளைய லவ்வு பண்ணிட்டானே"
/

'நச்'னு சொன்னம்மா

:)

said...

//நேரா மேட்டருக்கு வரேன்.
எந்தக்காலக்கட்டத்தில் எல்லாம் காதல் அரும்புகிறது, அப்படி அரும்பும் காதல் நிலைத்து நிற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா அப்பருவத்துல் என பார்க்கலாமா.....
//

ஒகே டீச்சர்... சாரி.... பார்க்கலாம் பார்க்கலாம்...:P

said...

//இந்த பள்ளிபருவக் காதல் பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' மட்டும் அடிப்படையாக கொண்டு வருவதாக இருக்கும்//

நான் Co-Ed la படிக்கலைங்க... டியூசன்'ல போய் டகால்டி காட்டலாம்'னா அங்கையும் ஒன்னும் வொர்க் அவுட் ஆகால.. சோ, நோ next stage ku போறேன்... ஹி ஹி

said...

//கல்லூரி வாழ்க்கையினாலே 'லவ்' பண்ணிடனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருப்பாங்க பல பேர்//

அப்படி லவ் பண்ணிட்டு பயபுள்ளைங்க கிட்ட எனக்கும் ஒரு ஆள் இருக்குடா'னு சொல்லிட்டு மத்தவங்க படுற stomach burning ah பார்க்கனுமே.. அட அட.. அதன் சுவையே அதன் மகிமை.. ஹி ஹி :)

said...

//தத்தக்க பித்தக்கான்னு லவ் லெட்டர் எழுதிக்கிற நிலமை வரைக்கும் வரும்.//

அதெல்லாம் ஓல்ட் பேஷன் ஆகி போச்சிங்க திவ்யா...

இப்ப எல்லாம் sms பண்ணுறேன் பிடிச்சி இருந்தா missed call கொடு . இல்லாட்டி call பண்ணி reject பண்ணிடுனு காலம் இப்போ Airbus 380 க்கும் மேல போய்கிட்டு இருக்கு ஹி ஹி

said...

//இதில் சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.//

அட சீனியாரிட்டி மட்டும் தாங்க அப்போ எல்லாம் பேசும்....

said...

//படிக்கிற பையனையே லவ்ஸ் பண்ணினா, இந்த பொண்ணு படிச்சு முடிச்சு 22/23 வயசுல பொண்ணுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க//

ஒரு சில பேருக்கு இந்த உண்மை லேட்'ah தான் தெரியுதுங்க....

said...

//வீட்டுல அப்போ போய் கல்யாண பேச்சு எடுக்கிற அளவுக்கு செட்டிலாகி இருக்க மாட்டான்......//

அப்படியே செட்டில் ஆனாலும் ஒரு சில கடமைகளுக்காக கொஞ்சம் நாட்கள் ஆக தான் செய்யும்.. இது அத்தனை வருஷம் லவ் பண்ணுன பொண்ணுக்கு நல்லா தெரிந்திருந்தும், வீட்ல pressure கொடுக்கும் போது உம்ம்ம்ம்ம்ம்'னு எந்த decision யும் எடுக்க தெரியாம கோட்டை விட்டுருவாங்க... ஹி ஹி ஹி ஹி...
ஆல் இன் தி கேம்... :P

said...

//இந்த கல்லூரி காதல் ததிக்கின தோம் ஆகிடும்,
கல்லூரி காதல் ,
கல்லூரி வரை!!///

சான்ஸே இல்லை... எல்லாத்துக்கும் அப்படி சொல்ல முடியாது....

Anonymous said...

என்னைப்பொறுத்தளவில் இந்த பள்ளிப்பருவ காதல், கல்லூரிப்பருவ காதல் மற்றும் பணிபுரியுமிடக் காதல் என மூன்றையும் பெற்று, தாண்டிவந்து அம்மா பாத்த பொண்ணை மேரேஜ் பண்றதில இருக்கிற ஜாலிதான் மெய்யான ஜாலி :-)

said...

//இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க//

ஹி ஹி ஹி ஹி அந்த ல்க் தமிழனுக்கு வெளிநாடு போன கிடைப்பதில்லை ஹி ஹி ஹி

said...

திவ்யாக்கா:)
ரொம்ப பயனுள்ள பதிவு போட்டிருக்கிறீங்க,Nice.....:))

\\நாலு காசு சம்பாதிக்க அரம்பிக்கும் போது,
'நமக்கு இந்த பொண்ணு சரி வருமா?'
'அந்த பொண்ணு ஒகே வா?'.....அப்படின்னு மனசு அலை பாய ஆரம்பிக்கும்.\


வேலை பார்க்கும் இடத்தில் இப்படி யோசிச்சா....அதுல வர்ர லவ்வு ,லவ்வில்லீங்க அக்கா, its more like matrimonial game:))


நட்போடு,
நிவிஷா.

said...

//காதல்ல இதெல்லாம் சகஜமப்பா.......!!!//

காதல்'ல எல்லாமே சகஜம்ங்க....

இக்கறைக்கு அக்கறை பச்சைங்கற மாதிரி.....:P

said...

\\ My days(Gops) said...
//இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க//

ஹி ஹி ஹி ஹி அந்த ல்க் தமிழனுக்கு வெளிநாடு போன கிடைப்பதில்லை ஹி ஹி ஹி\\

அய்யோ பாவம்,

திரை கடல் தாண்டி,
திரவியம் தான் தேட முடியும்....பொண்ணு தேட நம்மூருக்கு வந்து தான் ஆகனுமுங்க:-)

ஹி ஹி:))

நட்போடு,
நிவிஷா.

said...

\\ My days(Gops) said...
//காதல்ல இதெல்லாம் சகஜமப்பா.......!!!//

காதல்'ல எல்லாமே சகஜம்ங்க....

இக்கறைக்கு அக்கறை பச்சைங்கற மாதிரி.....:P\\

அலோ அண்ணாச்சி,
உங்க பின்னூட்டமே ஒரு பதிவு நீளத்துக்கு வந்துடும் போலிருக்கு:-)

நட்போடு,
நிவிஷா.

said...

சுயநலமான உலகத்துல இப்ப எல்லாம் காதலும் சுயநலமா ஆகிடுச்சி...

சோ, அம்மா அப்பா பார்க்கிற பொண்ணை/பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, புதுசா எதுவுமே தெரியாம ஆரம்பிக்கிற வாழ்க்கை'ல இருக்கிற திரில் இருக்கே.. அட அட அது தான் டாப்பா இருக்கும் னு எங்க தல சொல்லி இருக்காரு :)

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.//

ஹஹஹஹஹ அப்படீங்களா திவ்யா..??
நெசமாத்தேன் சொல்லுறீயளா..?? அப்படி பண்ணியும் ஒர்க் அவுட் ஆகாம போகுதுங்ளே அம்மணி ... அதுக்கு என்ன சொல்லுறீய...??? :))))\\


பொறுமையும், விடா முயற்சியும் வேணும், ஜொள்ளுபாண்டி:))

said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//ஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும் வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பிருக்கு.//

ஓஹோ அப்படியா சொல்லுறீய..?? :)))) பல தடைகளை தாண்டரதுன்னா அப்போ.. இப்போ இருந்தே நீளம் ... உயரம் தாண்டரதுக்கு ரெண்டுபேருமே முதல்ல
இருந்தே ப்ராக்டீஸ் பண்ணவேண்டியதுதான்.. சரிதாணுங்களே...?? :)))\\

கரெக்ட்டா சொல்லியிருக்கிறீங்க ஜொள்ளுபாண்ட்டி,
ரெண்டுபேரும் ப்ராக்டீஸ் பண்ணிக்கனும், இல்லீனா பிரச்சனை ஆகி போகும்:))

நட்போடு,
நிவிஷா.

said...

:)))

kazutha ellaa stageiyum thaandunathukappuramum intha paana pona kaathal varalaiye.... avingalukku ethunaa tips???

said...

நேர்த்தியான சிந்தனை.. :)

ஆனா இந்த பள்ளி பருவத்தில இந்த பொண்ணை ஒத்துப்பாங்களா மாட்டாங்களா அப்படினு எல்லாம் தெரியாம வரும் காதால் கூட அழகு தான்.. but as u said kinda impractical :)

said...

Nice post
Check this out!

"You should be angry when an eighth standard boy comes home one fine day and says “Mom there is this girl who is kinda cute, all my friends say we will make a perfect match, so I think iam in love with her”. You should be worried when a college kid returns home and says “mom I saw a girl yesterday in the college balcony, I will kill myself if I don’t get her”
“But when two intelligent adults happen to fall to love and decide to share their life and when your son comes home and says Mom I am sure this girl will make a perfect wife and I want to live with her ,
then You should be happy."

http://simplycvr.blogspot.com/2005/06/in-law-issues.html

:-)

said...

:)

(இதன் அர்த்தம் தங்களுக்கு தெரிந்ததே!)
இந்த பதிவை நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். பதிவிட்டமைக்கு நன்றி திவ்யா!

said...

//ஜொள்ளுப்பாண்டி said...
//இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,//

அட நீங்க வேற இபப்டி வெறுப்பேத்திகிட்டு... எங்கே அப்படி இருக்காகன்னு சொல்லுங்க.. ஏதாச்சும் back Gate வழியாவாச்சும் போய் உங்காற குந்திகிறேனுங்கோ....எங்க ஆபீசிலே எல்லாம் அப்படி இல்லீங்களே.... என்ன பண்ணுவேன்.......
//
repeatu....

said...

//ஜொள்ளுப்பாண்டி said...
//கல்லூரி வாழ்க்கையினாலே 'லவ்' பண்ணிடனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருப்பாங்க பல பேர்.//

திவ்யா இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... :))
//

நானும் மிகமிக வன்மையாக கண்டிக்கிறேன்!

//எல்லாரும் அப்படி எல்லாம் கங்கனம் கட்டிகிட்டு எல்லாம் இல்லைங்கோ.. சில பேரு சைட் மட்டும் அடிச்சிடு இருப்பாக... நம்மள மாதிரி...
//

வழிமொழிகிறேன் :))))

said...

//நிவிஷா..... said...
திவ்யாக்கா:)
ரொம்ப பயனுள்ள பதிவு போட்டிருக்கிறீங்க,Nice.....:))
//

பாருங்க திவ்யா! நாலு பெருக்கு நல்லது பன்றீங்க :)
நல்லவரு வல்லவரு திவ்யா வாழ்க வாழ்க!!

said...

//நிவிஷா..... said...

பொறுமையும், விடா முயற்சியும் வேணும், ஜொள்ளுபாண்டி:))
//

பாண்டியண்ணே! காதல் இளவரசி எது சொன்னாலும் அதுல ஒரு point இருக்கும் நல்லா கேட்டுகிட்டியளா??

said...

//ஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும் வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பிருக்கு.//

நன்று :)

நல்ல நட்பில் தொடங்கி புரிதலில் பூக்கும் காதல் நிச்சயம் வெற்றி பெறுமென நம்புகிறேன்!

said...

திவ்யா மாஸ்டர்....

எப்போவும் போல கலக்கலா இருக்கு பதிவு.....

said...

Ithu Kaadhal varum paruamnu title potrukalamnga..so unga kanaku padi..office goers love has a higher probability of successngareenga...but does that qualify as love?..collegelifela varathu thuni vaangi dress thechuakra mathiri..u tailor it to suit urself..but still fitting perfecta irukumaana doubt thaan...office love is readymade material...trial room vachi try panni paathu vaangara mathiri..avvvvvvvvvv...ivlo vettia yosikka gilsaala matum than mudiyum :D

said...

I feel failure rate is maximum on stage two (college). High chances of acceptance and rejection and both results lead to highly volatile situations. stage 3..hardly tilts the status quo. almost a no risk stage. as nivisha said..more materialistic..ithuku melayum peter vitta dabba dance aadidum enbathanaal..ithoda apeet aaikaren

said...

//"You should be angry when an eighth standard boy comes home one fine day and says “Mom there is this girl who is kinda cute, all my friends say we will make a perfect match, so I think iam in love with her”. You should be worried when a college kid returns home and says “mom I saw a girl yesterday in the college balcony, I will kill myself if I don’t get her”
“But when two intelligent adults happen to fall to love and decide to share their life and when your son comes home and says Mom I am sure this girl will make a perfect wife and I want to live with her ,
then You should be happy."//

avvvvvvvv CVR saar..ithey topicla moonu varusham munnaidye post potra munnaodinu provvviteengo

said...

rounda oru ambathu :D

said...

குருஜி..குருஜி...இந்த பதிவை படிச்சவுடன் உங்க profileல உள்ள குழந்தைபடம் தான் ஞாபகத்துல வந்துச்சி குருஜி ;))

எப்படி குருஜி இப்படி எல்லாம் தனி தனியாக பிரிச்சி கலக்குறிங்க ;))

said...

\\இதில் சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.\\

ஆகா..ஆகா..எல்லாம் விபரமாக தான் இருக்கிங்க..;))

said...

\\ஸோ.....இந்த கல்லூரி காதல் 'ததிக்கின தோம்' ஆகிடும்,

கல்லூரி காதல் ,
கல்லூரி வரை!!\\

இதில் 60% உண்மை தான் திவ்யா...எங்க கல்லூரி செட்டு கூட ஒரு ரெண்டு ஜோடிக்கு இப்படி தான் ஆச்சு.

said...

இது எல்லாம் எப்படி திவ்ஸ்! எங்க ரூம் போட்டு யோசிப்பீங்க??!

//பஸ்ஸடாண்ட், டியூஷன், ஸ்கூலில் உடன் படிக்கும் நட்பில் காதல்.........இப்படி பல பல அரும்பும்.//

அவ்வ்வ்... உண்மைய புட்டு தட்டுல வச்சுட்டீங்க!!

//அத விட்டுப்புட்டு கூட ஒரே கிளாஸ்ல படிக்கிற பையனையே லவ்ஸ் பண்ணினா,//

ஹாஹா... பல பேரு செய்யுற தப்பை கரக்ட்டா சொல்லிட்டீங்க!!

நல்லா இருந்துச்சு பதிவு!! சரி குருவே, காதல் பண்ணலாமா வேண்டாமா? உங்க பதிவ படிச்சுட்டு
மனசு பாடுது "வர வர காதல் கசக்குதுய்யா!!" :)))

said...
This comment has been removed by the author.
said...

// வினையூக்கி said...
ம்ம்ம்ம் :))) உங்க ஆருடம், தொலைதூரத்தில் இருக்கிறவங்களுக்கு கேட்டால் மகிழ்ச்சி தான்... மையில் சிறந்த மை பொறுமை...!! காத்திருத்தல் சுகம்..//

நானும் இப்படித்தான் காத்துட்டே இருந்தேன்.கடைசில அந்தப்பொன்னோட rediffmail IDக்கு தமிழ்ல ஒரு கவிதை? அனுப்பினேன்.பதிலே இல்ல நேருல பாக்கும்போது அதப்பத்தி ஒண்ணும் சொல்லலை.ஒரு இரண்டுனாளைக்கப்புரம் வீட்டுல மாப்ளை பாத்தாச்சுனு செய்தி.அவோளோட PW வாங்கி உள்ளபோயி பாத்த மெயில் தமிழ்ல இருந்ததால Fonts எல்லாம் ஒண்ணும் தெரியல.அது என்ன மெயில்னு கேட்டதுக்கு ஒருவளியா சமாளிச்சேன்.இதுங்க புரிஞ்சு பேசுதா புரியாம பேசுதா.ஒரு மன்னும் புரியாது.காத்துக்கிட்டு இருக்காம வெட்டு ஒன்னு துண்டு இரண்டுனு மேட்டர முடிச்சுடுங்க.இரண்டு வெஞ்சுருட்டவது மீதியாகும்.

வாழ்த்துக்கள் வினை.

said...

நல்லாத்தான் ஆராஞ்சிருக்கீங்க (ஆரஞ்சு இல்லை). நான் வேலைக்கு சேந்துட்டேன் அடுத்த ஸ்டைப் என்னது?

said...

தொடரட்டும் உங்கள் ஆராயிச்சி.
வாழ்த்துக்கள்.

said...

\\ மங்களூர் சிவா said...
/
'பயபுள்ளைய.....கஷ்டபட்டுபடிக்க வைச்சேன், படிச்சு தன் கால்ல நின்னு சம்பாதிக்கிற திரானி வந்ததும், ஏறின ஏணிப்படி.......என்னை மதிக்காம, கூட வேலை பார்க்கிற புள்ளைய லவ்வு பண்ணிட்டானே"
/

'நச்'னு சொன்னம்மா

:)\\\


வருகைக்கு மிக்க நன்றி மங்களுர் சிவா!!

said...

\\ My days(Gops) said...
//நேரா மேட்டருக்கு வரேன்.
எந்தக்காலக்கட்டத்தில் எல்லாம் காதல் அரும்புகிறது, அப்படி அரும்பும் காதல் நிலைத்து நிற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா அப்பருவத்துல் என பார்க்கலாமா.....
//

ஒகே டீச்சர்... சாரி.... பார்க்கலாம் பார்க்கலாம்...:P\\

என்னாதுதுதுது.........டீச்சரா???

said...

\\ My days(Gops) said...
//கல்லூரி வாழ்க்கையினாலே 'லவ்' பண்ணிடனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருப்பாங்க பல பேர்//

அப்படி லவ் பண்ணிட்டு பயபுள்ளைங்க கிட்ட எனக்கும் ஒரு ஆள் இருக்குடா'னு சொல்லிட்டு மத்தவங்க படுற stomach burning ah பார்க்கனுமே.. அட அட.. அதன் சுவையே அதன் மகிமை.. ஹி ஹி :)\\

மத்தவங்க stomach burning யை ரசிக்கிற உங்கள் ரசனையே ரசனை!!

said...

\ My days(Gops) said...
//தத்தக்க பித்தக்கான்னு லவ் லெட்டர் எழுதிக்கிற நிலமை வரைக்கும் வரும்.//

அதெல்லாம் ஓல்ட் பேஷன் ஆகி போச்சிங்க திவ்யா...

இப்ப எல்லாம் sms பண்ணுறேன் பிடிச்சி இருந்தா missed call கொடு . இல்லாட்டி call பண்ணி reject பண்ணிடுனு காலம் இப்போ Airbus 380 க்கும் மேல போய்கிட்டு இருக்கு ஹி ஹி\\

நான் ஸ்கூல் படிக்கிறப்போ எல்லாம் , இந்த sms, missed call எல்லாம் இல்லீங்க.......

ஒல்ட் இஸ் ஆல்வேஸ் கோல்ட் !!!

said...

\\ My days(Gops) said...
//இதில் சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.//

அட சீனியாரிட்டி மட்டும் தாங்க அப்போ எல்லாம் பேசும்....\\

சீனியராக இருந்தாலும்.......Year of birth correct ஆ கேட்டு தெரிஞ்சுக்கிட்டு களத்தில் இறங்குவது நல்லது!!
[சிலர் வயசை கூட்டிபோட்டு ஸ்கூல் சேர்ந்திருப்பாங்க]

said...

\\ My days(Gops) said...
//படிக்கிற பையனையே லவ்ஸ் பண்ணினா, இந்த பொண்ணு படிச்சு முடிச்சு 22/23 வயசுல பொண்ணுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க//

ஒரு சில பேருக்கு இந்த உண்மை லேட்'ah தான் தெரியுதுங்க....\\


எக்ஸாக்ட்லி கோப்ஸ்!!!

said...

\\ My days(Gops) said...
//வீட்டுல அப்போ போய் கல்யாண பேச்சு எடுக்கிற அளவுக்கு செட்டிலாகி இருக்க மாட்டான்......//

அப்படியே செட்டில் ஆனாலும் ஒரு சில கடமைகளுக்காக கொஞ்சம் நாட்கள் ஆக தான் செய்யும்.. இது அத்தனை வருஷம் லவ் பண்ணுன பொண்ணுக்கு நல்லா தெரிந்திருந்தும், வீட்ல pressure கொடுக்கும் போது உம்ம்ம்ம்ம்ம்'னு எந்த decision யும் எடுக்க தெரியாம கோட்டை விட்டுருவாங்க... ஹி ஹி ஹி ஹி...
ஆல் இன் தி கேம்... :P\\

கோப்ஸ், ஒவ்வொரு பின்னூட்டமும்.......சும்மா அதிருது, சூப்பரு!!

said...

\\ My days(Gops) said...
//இந்த கல்லூரி காதல் ததிக்கின தோம் ஆகிடும்,
கல்லூரி காதல் ,
கல்லூரி வரை!!///

சான்ஸே இல்லை... எல்லாத்துக்கும் அப்படி சொல்ல முடியாது....\\

சிலருக்கு 'ததிகின தோம்'
சிலருக்கு ' டும் டும் டும்'
ஆல் இன் தி கேம் !!!

said...

\\ கௌபாய்மது said...
என்னைப்பொறுத்தளவில் இந்த பள்ளிப்பருவ காதல், கல்லூரிப்பருவ காதல் மற்றும் பணிபுரியுமிடக் காதல் என மூன்றையும் பெற்று, தாண்டிவந்து அம்மா பாத்த பொண்ணை மேரேஜ் பண்றதில இருக்கிற ஜாலிதான் மெய்யான ஜாலி :-)\\

வாங்க கெளபாய்மது,
மெய்யான ஜாலி னா என்னான்னு விளக்கமா சொன்னதுக்கு , ரொம்ப தாங்க்ஸ்!!

said...

\\ My days(Gops) said...
//இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க//

ஹி ஹி ஹி ஹி அந்த ல்க் தமிழனுக்கு வெளிநாடு போன கிடைப்பதில்லை ஹி ஹி ஹி\\

அப்படியா??
நீங்க அனுபவஸ்தர் .....சொன்னா சரியாகதான் இருக்கும்.

said...

\\ நிவிஷா..... said...
திவ்யாக்கா:)
ரொம்ப பயனுள்ள பதிவு போட்டிருக்கிறீங்க,Nice.....:))\\


நன்றி நிவிஷா!!

\\நாலு காசு சம்பாதிக்க அரம்பிக்கும் போது,
'நமக்கு இந்த பொண்ணு சரி வருமா?'
'அந்த பொண்ணு ஒகே வா?'.....அப்படின்னு மனசு அலை பாய ஆரம்பிக்கும்.\


வேலை பார்க்கும் இடத்தில் இப்படி யோசிச்சா....அதுல வர்ர லவ்வு ,லவ்வில்லீங்க அக்கா, its more like matrimonial game:))


நட்போடு,
நிவிஷா.\\


As u hv said its like a matrimonial game , but ......decisions can be made in a better and wiser way at this stage, that paves the way & possiblity for success.

said...

\\ My days(Gops) said...
சுயநலமான உலகத்துல இப்ப எல்லாம் காதலும் சுயநலமா ஆகிடுச்சி...

சோ, அம்மா அப்பா பார்க்கிற பொண்ணை/பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, புதுசா எதுவுமே தெரியாம ஆரம்பிக்கிற வாழ்க்கை'ல இருக்கிற திரில் இருக்கே.. அட அட அது தான் டாப்பா இருக்கும் னு எங்க தல சொல்லி இருக்காரு :)\\

உங்க 'தல' கொள்கை நல்லாத்தான் இருக்குதுங்க கோப்ஸ்!!

said...

\\ ஜி said...
:)))

kazutha ellaa stageiyum thaandunathukappuramum intha paana pona kaathal varalaiye.... avingalukku ethunaa tips???\\

கழுதைக்கெல்லாம் காதலிக்க இங்க யாரும் டிப்ஸ் தரலீங்க.....

Just kidding:)

வீட்டுல பார்த்து கட்டி வைக்கிற பெண்ணை....காதலிக்க வேண்டியது தான்,
அது பிரச்சனையில்லாத
பத்திரமான காதல்!!

said...

\\ Dreamzz said...
நேர்த்தியான சிந்தனை.. :)

ஆனா இந்த பள்ளி பருவத்தில இந்த பொண்ணை ஒத்துப்பாங்களா மாட்டாங்களா அப்படினு எல்லாம் தெரியாம வரும் காதால் கூட அழகு தான்.. but as u said kinda impractical :)\\

நன்றி ட்ரீம்ஸ்!!!

said...

\\ CVR said...
Nice post
Check this out!

"You should be angry when an eighth standard boy comes home one fine day and says “Mom there is this girl who is kinda cute, all my friends say we will make a perfect match, so I think iam in love with her”. You should be worried when a college kid returns home and says “mom I saw a girl yesterday in the college balcony, I will kill myself if I don’t get her”
“But when two intelligent adults happen to fall to love and decide to share their life and when your son comes home and says Mom I am sure this girl will make a perfect wife and I want to live with her ,
then You should be happy."

http://simplycvr.blogspot.com/2005/06/in-law-issues.html

:-)\\

ஹாய் சிவிஆர்,
உங்கள் பதிவினை பகிர்ந்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி,

மிக அழகான பதிவு,
தெளிவாக 3 வருடங்களுக்கு முன்பே எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள் சிவிஆர்!!

said...

\\ sathish said...
:)

(இதன் அர்த்தம் தங்களுக்கு தெரிந்ததே!)
இந்த பதிவை நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். பதிவிட்டமைக்கு நன்றி திவ்யா!\\

வருகைக்கு நன்றி:)

said...

\\ sathish said...
//ஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும் வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பிருக்கு.//

நன்று :)

நல்ல நட்பில் தொடங்கி புரிதலில் பூக்கும் காதல் நிச்சயம் வெற்றி பெறுமென நம்புகிறேன்!\\

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டதில் மிக்க மகிழ்ச்சி,
நன்றி சதீஷ்!!

said...

\\ எழில்பாரதி said...
திவ்யா மாஸ்டர்....

எப்போவும் போல கலக்கலா இருக்கு பதிவு.....\

வாங்க எழில்பாரதி,
பாராட்டிற்கு மிக்க நன்றி!!

said...

\\ gils said...
Ithu Kaadhal varum paruamnu title potrukalamnga..so unga kanaku padi..office goers love has a higher probability of successngareenga...but does that qualify as love?..collegelifela varathu thuni vaangi dress thechuakra mathiri..u tailor it to suit urself..but still fitting perfecta irukumaana doubt thaan...office love is readymade material...trial room vachi try panni paathu vaangara mathiri..avvvvvvvvvv...ivlo vettia yosikka gilsaala matum than mudiyum :D\\

ரெடுமேட் ட்ரஸ்......டெய்லர்கிட்ட தைச்சு போட்டுக்கிற ட்ரஸ்.......அஹா!!!! எப்படிங்க இப்படி எல்லாம் உதாரணம் எடுத்து வுடுறீங்க, கலக்கிட்டீங்கோ போங்க!!

said...

\\ gils said...
I feel failure rate is maximum on stage two (college). High chances of acceptance and rejection and both results lead to highly volatile situations. stage 3..hardly tilts the status quo. almost a no risk stage. as nivisha said..more materialistic..ithuku melayum peter vitta dabba dance aadidum enbathanaal..ithoda apeet aaikaren\

நீங்க......பதிவு எழுதுற நினைப்புலேயே பின்னூட்டம் டைப் பண்ணிடீங்கன்னு நினைக்கிறேன்...கரெக்ட்டா??

said...

\ gils said...
rounda oru ambathu :D\\

ஐம்பதாவது பின்னூட்டம் போட்டமைக்கு ஒரு நன்றி கும்பிடு!!!

said...

\\ கோபிநாத் said...
குருஜி..குருஜி...இந்த பதிவை படிச்சவுடன் உங்க profileல உள்ள குழந்தைபடம் தான் ஞாபகத்துல வந்துச்சி குருஜி ;))

எப்படி குருஜி இப்படி எல்லாம் தனி தனியாக பிரிச்சி கலக்குறிங்க ;))\\

வாங்க சிஷியரே,

தங்கள் வரவு நல்வரவாகட்டும்,

profile picture ஞாபகம் வர்ர மாதிரி ,பதிவுல என்னா இருக்கு சிஷ்யா??

said...

\\ கோபிநாத் said...
\\இதில் சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.\\

ஆகா..ஆகா..எல்லாம் விபரமாக தான் இருக்கிங்க..;))\\


இந்த விபரம் கூட இல்லீனா....ரொம்ப கஷ்டம்:))

said...

\\ கோபிநாத் said...
\\ஸோ.....இந்த கல்லூரி காதல் 'ததிக்கின தோம்' ஆகிடும்,

கல்லூரி காதல் ,
கல்லூரி வரை!!\\

இதில் 60% உண்மை தான் திவ்யா...எங்க கல்லூரி செட்டு கூட ஒரு ரெண்டு ஜோடிக்கு இப்படி தான் ஆச்சு.\\

ரெண்டி ஜோடிக்கு இப்படி ஆகிடுச்சா....அச்சச்சோ, ஹும்...(-:

said...

\\ Thamizhmaangani said...
இது எல்லாம் எப்படி திவ்ஸ்! எங்க ரூம் போட்டு யோசிப்பீங்க??!\\

வாங்க தமிழ்மாங்கனி,

இதெல்லாமா ரூம் போட்டு யோசிப்பாங்க....அப்படியே காலார மொட்டை மாடில நடந்தாவே , தானா தோனும் :))

//பஸ்ஸடாண்ட், டியூஷன், ஸ்கூலில் உடன் படிக்கும் நட்பில் காதல்.........இப்படி பல பல அரும்பும்.//

அவ்வ்வ்... உண்மைய புட்டு தட்டுல வச்சுட்டீங்க!!\\

ஹா ஹா, இன்னும் இந்த லிஸ்ட்ல நிறைய இருக்கு.....!!!


//அத விட்டுப்புட்டு கூட ஒரே கிளாஸ்ல படிக்கிற பையனையே லவ்ஸ் பண்ணினா,//

ஹாஹா... பல பேரு செய்யுற தப்பை கரக்ட்டா சொல்லிட்டீங்க!!\\

ஒரே க்ளாசஸ்ல படிக்கிறப்போ, பாதி...ஃபரெண்ட்ஸ் சேர்த்து வைச்சு ஓட்டியே லவ் பண்ண வைச்சிருவாங்க, பட் அப்போ தெரியாது.....இதெல்லம் சரி பட்டு வருமா இல்லியான்னு:)

\\\நல்லா இருந்துச்சு பதிவு!! சரி குருவே, காதல் பண்ணலாமா வேண்டாமா? உங்க பதிவ படிச்சுட்டு
மனசு பாடுது "வர வர காதல் கசக்குதுய்யா!!" :)))\\


சிஷ்யை......உங்க மனசு பாடுற பாட்டே நல்லாதான் இருக்கு, அதுவே என் பதில்னு வைச்சுக்கோங்களேன்!!

said...

@கார்த்திக்,

வாங்க கார்த்திக்,
உங்கள் வருகைக்கு நன்றி,

உங்கள் கருத்துக்களையும், அனுபவத்தையும் விரிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!

said...

\\ ஸ்ரீ said...
நல்லாத்தான் ஆராஞ்சிருக்கீங்க (ஆரஞ்சு இல்லை). நான் வேலைக்கு சேந்துட்டேன் அடுத்த ஸ்டைப் என்னது?\\

வாங்க ஸ்ரீ,

பாராட்டிற்கு நன்றி,

'காதல்' தொடர் கவிதை எழுதும் பிரபல கவிஞர் நீங்க,
உங்களுக்கு அடுத்த ஸ்டெப் என்னன்னு சொல்ற அளவுக்கு என்கிட்ட கருத்து இல்லீங்கோ!!

said...

\\ கார்த்திக் said...
தொடரட்டும் உங்கள் ஆராயிச்சி.
வாழ்த்துக்கள்.\

வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக்!!!

said...

//நீங்க......பதிவு எழுதுற நினைப்புலேயே பின்னூட்டம் டைப் பண்ணிடீங்கன்னு நினைக்கிறேன்...கரெக்ட்டா??//

perfecto :)

said...

கலக்கல் பதிவுங்க.
என்னோட நட்பு வட்டத்தில் பள்ளிக்காதல் தாங்க சில நண்பர்களுக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கு.அதிலேயும் நிறைய ஆட்டோகிராஃப் இருக்கு.
:)

said...

விளையாட்டா சொல்லியிருந்தாலும்,ஒவ்வொன்றும் யதார்த்தம்.பல சமயங்களில் ஆச்சர்யப்பட்டிருக்கேன்.எப்டி திவ்யா மாஸ்டர் இப்டியெல்லாம் யோசிக்கறிங்க :)

சூப்பர்:)

said...

//Divya said...

\\ ஜொள்ளுப்பாண்டி said...
//சீனியர் பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ் இருக்கு.//

ஹஹஹஹஹ அப்படீங்களா திவ்யா..??
நெசமாத்தேன் சொல்லுறீயளா..?? அப்படி பண்ணியும் ஒர்க் அவுட் ஆகாம போகுதுங்ளே அம்மணி ... அதுக்கு என்ன சொல்லுறீய...??? :))))\\

ஒர்க் அவுட் ஆக சான்ஸ் 'கொஞ்சம்' இருக்குன்னு சொல்லியிருக்கோம்ல.....அப்போ 'மிஸ்' ஆகவும் மீதி சான்ஸ் இருக்குதுன்னு அர்த்தமுங்க பாண்டியண்ணா:-)//

ஹாஹ்ஹா... இப்டி மறைபொருள்லாம் இருக்கா திவ்யா பதிவுல,உஷாரா தான் புரிஞ்சுக்கனும் போல.. இல்லாட்டி இதைப் படிச்சுட்டு போய் டிரைப் பண்ணா,வம்பாகிரும்ல்ல..:)))))

said...

//\\ வினையூக்கி said...
நன்றி திவ்யா.. உங்க வாழ்த்தை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்.

கல்லூரிப்பெண், வேறு ஊர், வேறு துறை எனும்போது, வெற்றி வாய்ப்பு எப்படி?\\

என்னங்க வினையூக்கி......ஜோஷியம் கேட்கிறாப்ல கேட்குறீங்க??//

ஹாஹ்ஹா...:)))))))
திவ்யா கைவசம் ஒரு பிஸினஸ் வந்துருச்சு:P. இப்பவே பார்ட் டைமா..வாழ்வியல் ஆலோசகர்ன்னு போர்ட் போட்டுடலாம்ல்ல..:))

said...

இன்னொரு முக்கியமான விஷயங்க..
சிலருக்கு காதல் வரும், சிலருக்கு சுத்தி இருக்கிற பசங்கல்லாம் சேர்ந்து வர வைப்பாங்க..சும்மா அந்த போண்ணு திரும்பி பார்த்தாகூட, ஒன்னதான்டா பார்க்குதுன்னு உசுப்பேத்தி விட்டுருவானுங்க..

said...

Again a good research, but I won’t accept the concept of getting success in Love only when you get settled in your profession, and the probability of success in love depends only the lovers, if they are strong and they have courage they will definitely over come all those obstacles no matter where they are and what they are doing @ that time

said...

School and college I accept, that is not a ideal place and age . Then when u came out of college, u will definitely get more responsibility then before, about u r carrier , about u r family and lot . Even they love somebody kadamai avargaLai anumathikkathu ...

said...

//இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க//

inga arabla paarththave vettu than

said...

/
பாருங்க திவ்யா! நாலு பெருக்கு நல்லது பன்றீங்க :)
நல்லவரு வல்லவரு திவ்யா வாழ்க வாழ்க!!/

) ;))))))))

said...

அப்பப்பா.. பயங்கர அனுபவம் போல.. :o)

said...

அம்மணி,

இந்த மூணு இடத்திலேயும் ஒன்னை கூட தேத்தமுடியாத சில வக்கத்தவனுகளுக்கு ஏதாவது அட்வைஸ் இருக்குங்களா??? :-)

said...

//ஜொள்ளுப்பாண்டி said...

//இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,//

அட நீங்க வேற இபப்டி வெறுப்பேத்திகிட்டு... எங்கே அப்படி இருக்காகன்னு சொல்லுங்க.. ஏதாச்சும் back Gate வழியாவாச்சும் போய் உங்காற குந்திகிறேனுங்கோ....எங்க ஆபீசிலே எல்லாம் அப்படி இல்லீங்களே.... என்ன பண்ணுவேன்.......//


பாண்டியண்ணனின் சோகமும் என்னோட சோகமும் ஒன்னுதான்...... என்ன பண்ண?? :(

said...

\\ ஜி said...
:)))

kazutha ellaa stageiyum thaandunathukappuramum intha paana pona kaathal varalaiye.... avingalukku ethunaa tips???\\

கழுதைக்கெல்லாம் காதலிக்க இங்க யாரும் டிப்ஸ் தரலீங்க.....

Just kidding:)

வீட்டுல பார்த்து கட்டி வைக்கிற பெண்ணை....காதலிக்க வேண்டியது தான்,
அது பிரச்சனையில்லாத
பத்திரமான காதல்!!//


வக்கத்தவனுகளுக்கு அட்வைஸ் சொல்லியாச்சா??? :)


அப்போ சரி... வந்ததுக்கு 100 அடிச்சோமின்னு சந்தோஷமா போயிக்கிறேன்.... :)

said...

101... Pottathu Naanu

said...

ஒரு ஆம்பளைக்கு எப்ப சனி ஸ்டார்ட் ஆகும் என்பதற்கு இவ்வளவு விளக்கமா!!

ஏழரை சனிகூட ஏழரை வருடம்தான் இருக்கும் இது ஆயுள் சனி இதுக்கு போய் ஏன் பிளான் போட்டுகிட்டு, எப்பொழுதிலிருந்து உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பம் என்று ஒரு நல்ல ஜோசியரிடம் கேட்டு கொண்டு காதலை ஸ்டார்ட் செய்யுங்கப்பா!

என்ன திவ்யா மேடம் எப்படி இருக்கீங்க! நீண்ட நாள் ஆகிவிட்டாலும் நினைவில் இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

said...

hi Divya,

good judgement .....

said...

\\ gils said...
//நீங்க......பதிவு எழுதுற நினைப்புலேயே பின்னூட்டம் டைப் பண்ணிடீங்கன்னு நினைக்கிறேன்...கரெக்ட்டா??//

perfecto :)\\


:-)

said...

\\ நாடோடி இலக்கியன் said...
கலக்கல் பதிவுங்க.
என்னோட நட்பு வட்டத்தில் பள்ளிக்காதல் தாங்க சில நண்பர்களுக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கு.அதிலேயும் நிறைய ஆட்டோகிராஃப் இருக்கு.
:)\\

வாங்க நாடோடி இலக்கியன்,
உங்கள் நண்பர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

said...

\\ ரசிகன் said...
விளையாட்டா சொல்லியிருந்தாலும்,ஒவ்வொன்றும் யதார்த்தம்.பல சமயங்களில் ஆச்சர்யப்பட்டிருக்கேன்.எப்டி திவ்யா மாஸ்டர் இப்டியெல்லாம் யோசிக்கறிங்க :)

சூப்பர்:)\


வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ரசிகன்!!

said...

\\ ரசிகன் said...
//\\ வினையூக்கி said...
நன்றி திவ்யா.. உங்க வாழ்த்தை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்.

கல்லூரிப்பெண், வேறு ஊர், வேறு துறை எனும்போது, வெற்றி வாய்ப்பு எப்படி?\\

என்னங்க வினையூக்கி......ஜோஷியம் கேட்கிறாப்ல கேட்குறீங்க??//

ஹாஹ்ஹா...:)))))))
திவ்யா கைவசம் ஒரு பிஸினஸ் வந்துருச்சு:P. இப்பவே பார்ட் டைமா..வாழ்வியல் ஆலோசகர்ன்னு போர்ட் போட்டுடலாம்ல்ல..:))\\

ஹா ஹா!!
பார்ட் டைம் ஜாபாக இதை பண்ணிடலாமோ, ஐடியாவுக்கு நன்றி ரசிகன்!!

said...

\\ ரூபஸ் said...
இன்னொரு முக்கியமான விஷயங்க..
சிலருக்கு காதல் வரும், சிலருக்கு சுத்தி இருக்கிற பசங்கல்லாம் சேர்ந்து வர வைப்பாங்க..சும்மா அந்த போண்ணு திரும்பி பார்த்தாகூட, ஒன்னதான்டா பார்க்குதுன்னு உசுப்பேத்தி விட்டுருவானுங்க..\

வாங்க ரூப்ஸ்,

ரொம்ப நாள் கழிச்சு பதிவு பக்கம் வந்திருக்கிறீங்க , நன்றி!

நீங்கள் சொல்வது போல், நண்பர்களின் கிண்டலும் கேலியுமே....சில சமயங்களில் காதலில் விழ வைக்கும்!

கருத்தினை பகிர்ந்துக் கொண்டதிற்கு நன்றி!!

said...

\\ Prabakar Samiyappan said...
Again a good research, but I won’t accept the concept of getting success in Love only when you get settled in your profession, and the probability of success in love depends only the lovers, if they are strong and they have courage they will definitely over come all those obstacles no matter where they are and what they are doing @ that time\\

வாங்க ப்ரபாகர்,

நீங்க சொல்வது போல், காதல் எந்த தருணத்தில் தோன்றினாலும், அது திருமணத்தில் முடிவதற்கு முக்கிய தேவை காதலர்களின் மன உறுதிதான்!!

எந்த பருவத்தில் காதல் அரும்பினாலும், காதலுக்கென்றே உள்ள தடைகள் இருக்கத்தான் செய்யும், அதனை மேற்கொள்வது காதலர்களின் சாமர்த்தியதை பொறுத்தது!!

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி!!

said...

\\ Prabakar Samiyappan said...
School and college I accept, that is not a ideal place and age . Then when u came out of college, u will definitely get more responsibility then before, about u r carrier , about u r family and lot . Even they love somebody kadamai avargaLai anumathikkathu ...\\

ஸ்கூல் , காலேஜ் காதலிப்பதற்கு.....ஏற்ற இடமும் , சமயமும் அல்ல என்ற கருத்தினை பின்னூட்டமிட்டதற்கு நன்றி ப்ரபாஹர்!!

said...

\ Prabakar Samiyappan said...
//இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க//

inga arabla paarththave vettu than\\

அச்சச்சோ(:

said...

\\ திகழ்மிளிர் said...
/
பாருங்க திவ்யா! நாலு பெருக்கு நல்லது பன்றீங்க :)
நல்லவரு வல்லவரு திவ்யா வாழ்க வாழ்க!!/

) ;))))))))\

வாங்க திகழ்மிளிர்,

தங்களின் வருகைக்கு நன்றி!!

said...

hey div..story completed... :D

this story appala vanthu porumaiya padikkiraen..sariyaa :)

said...

அட்டகாசம் திவ்யா...

said...

//
இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,
//

அப்படீனு யாரு சொன்னது??? எல்லாம் பச்சைப் பொய்!!! குறிப்பா Semiconductor industryல பேருக்கு கூட ஒரு பெண் இல்லை!! அப்படியே இருந்தாலும் எல்லாம் 35 வயசு ஆண்ட்டி!!! அவ்வ்வ்வ்.......

said...

adada adada.... intha handbook for lovers lam edhukkaga...akka ku wedding bells satham ketka aarambichiducho???? illa adhukana aayatham aayitu irukka?

said...

hi divya
how r u doin ? it's been long time since i visited ur blog.
nalla research, kadhal pathi thesis ezhudhareengalo ? LOL .
ending line super. :)

- kittu mami

said...

\ My days(Gops) said...
//நேரா மேட்டருக்கு வரேன்.
எந்தக்காலக்கட்டத்தில் எல்லாம் காதல் அரும்புகிறது, அப்படி அரும்பும் காதல் நிலைத்து நிற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா அப்பருவத்துல் என பார்க்கலாமா.....
//

ஒகே டீச்சர்... சாரி.... பார்க்கலாம் பார்க்கலாம்...:P\\

என்னாதுதுதுது.........டீச்சரா???//

அதானே, காதல் கவிதாயினி திவ்யா அப்டின்னு சொல்லுங்கப்பா:)))

said...

///
'பயபுள்ளைய.....கஷ்டபட்டுபடிக்க வைச்சேன், படிச்சு தன் கால்ல நின்னு சம்பாதிக்கிற திரானி வந்ததும், ஏறின ஏணிப்படி.......என்னை மதிக்காம, கூட வேலை பார்க்கிற புள்ளைய லவ்வு பண்ணிட்டானே"
/

'நச்'னு சொன்னம்மா//

??????

said...

//அம்மணி,

இந்த மூணு இடத்திலேயும் ஒன்னை கூட தேத்தமுடியாத சில வக்கத்தவனுகளுக்கு ஏதாவது அட்வைஸ் இருக்குங்களா??? :-)//

அப்பால எதுக்கு அட்வைஸ்????

said...

அனுபவங்கள் கற்றுத்தருகின்றன...

(இது உங்க பதிவுக்கு)

said...

//
இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,
//

ஆமா ஆமா எங்க ஆபிஸ்-ல கூட நிறைய பெண்கள் தான்.. என்ன செய்ய எல்லோரும் வீகேன்ட் ஆனா பேரன் பேத்தி கூட பொழுது போக்க போயிடறாங்க.. வெந்த புண்-ல பெட்ரோல் ஊத்தி கொளுதததீங்க....

பதிவு சூப்பர்-ஒ சூப்பர் திவ்யா....
//கல்லூரி காதல் ,
கல்லூரி வரை!!//

என்னுடைய கல்லூரி நண்பர்களில், காதலித்த 80 சதவீத ஜோடி - திருமணத்தில் இணைந்தார்கள்... கஷ்டபடாமல் இல்லை... சமுதாய தடைகளை(state,language,religion,caste,age) தாண்டி, பெற்றவர்கள் சம்மததொடு ....

அழுவலக வாழ்கையில், வேறுவிதமாக இருந்தது... தெரிந்த ஜோடி ஒன்று.. தங்கள் பெற்றவர்களை துன்ப படுத்த கூடாது என்று பிரிந்தார்கள்... (காதலுக்கு மரியாதையாம்.... )

//'பயபுள்ளைய.....கஷ்டபட்டுபடிக்க வைச்சேன், படிச்சு தன் கால்ல நின்னு சம்பாதிக்கிற திரானி வந்ததும், ஏறின ஏணிப்படி.......என்னை மதிக்காம, கூட வேலை பார்க்கிற புள்ளைய லவ்வு பண்ணிட்டானே"
அப்படின்னு.........புலம்பல் ஒலி கேட்கும்..........///

typical நம்ம ஊரு புலம்பல்...

அசத்திடிங்க திவ்யா.... வாழ்த்துக்கள்

Anonymous said...

இந்தி படிக்க வந்து வாத்தியோட லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட நானு
இப்ப ஒரு நாப்பது வருசம் கழிச்சும் சந்தோசமாத்தான் கீறோம்.
ஆனா என்னா, அம்மா அப்பா பாத்து கல்யாணம் கட்டிக்கிட்ட நாங்கள்ளாம்
ஏதோன்னு இருக்கோம். இவங்க மட்டும் எப்படி இப்படி இருக்காகன்னு
கேக்கறது மட்டுமல்ல, ஏதோ எங்க அண்ணன் மாதிரி யா எல்லாம் இருந்துப்புடுவாங்களான்னு
நாத்தி, அண்ணி வேற கேட்காக...
லவ் பண்ணுங்க .. தப்பில்ல .. ஆனா அதுலேயும் ஒரு லக் வேணும்னு தோணுதுங்க..
என்ன ! என் பேரு என்னவா ? வெக்கமா இருக்குங்க..

மே....ம்

said...

\\Blogger Bee'morgan said...

அப்பப்பா.. பயங்கர அனுபவம் போல.. :o)\\

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி Bee'morgan.

said...

\\Blogger இராம்/Raam said...

அம்மணி,

இந்த மூணு இடத்திலேயும் ஒன்னை கூட தேத்தமுடியாத சில வக்கத்தவனுகளுக்கு ஏதாவது அட்வைஸ் இருக்குங்களா??? :-)\\

மூணு பருவத்துலயும் காதல் வலையில் சிக்கலனா.....ஒன்னும் பண்ணமுடியாதுங்க ராம்,
கட்டிய மனைவியை முழுமனதோடு காதலிக்கலாமே!!!
தித்திக்கும் காதலால் மனைவியை திணறிடிக்க வாழ்த்துக்கள் ராம்:-)

said...

\\Blogger இராம்/Raam said...

//ஜொள்ளுப்பாண்டி said...

//இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,//

அட நீங்க வேற இபப்டி வெறுப்பேத்திகிட்டு... எங்கே அப்படி இருக்காகன்னு சொல்லுங்க.. ஏதாச்சும் back Gate வழியாவாச்சும் போய் உங்காற குந்திகிறேனுங்கோ....எங்க ஆபீசிலே எல்லாம் அப்படி இல்லீங்களே.... என்ன பண்ணுவேன்.......//


பாண்டியண்ணனின் சோகமும் என்னோட சோகமும் ஒன்னுதான்...... என்ன பண்ண?? :(\\

ராம்,
side door, குறுக்கு சந்து.....இப்படி டெக்னிக் ட்ரை பண்ணிட வேண்டியதுதானா??

said...

\\Blogger இராம்/Raam said...

\\ ஜி said...
:)))

kazutha ellaa stageiyum thaandunathukappuramum intha paana pona kaathal varalaiye.... avingalukku ethunaa tips???\\

கழுதைக்கெல்லாம் காதலிக்க இங்க யாரும் டிப்ஸ் தரலீங்க.....

Just kidding:)

வீட்டுல பார்த்து கட்டி வைக்கிற பெண்ணை....காதலிக்க வேண்டியது தான்,
அது பிரச்சனையில்லாத
பத்திரமான காதல்!!//


வக்கத்தவனுகளுக்கு அட்வைஸ் சொல்லியாச்சா??? :)


அப்போ சரி... வந்ததுக்கு 100 அடிச்சோமின்னு சந்தோஷமா போயிக்கிறேன்.... :)\\

சதம் அடிச்சதுக்கு நன்றி ராம்!!!

said...

\\Blogger sathish said...

101... Pottathu Naanu\\

நன்றி சதீஷ்:-)

said...

\\Blogger பட்டுக்கோட்டை பிரேம்குமார் said...

ஒரு ஆம்பளைக்கு எப்ப சனி ஸ்டார்ட் ஆகும் என்பதற்கு இவ்வளவு விளக்கமா!!

ஏழரை சனிகூட ஏழரை வருடம்தான் இருக்கும் இது ஆயுள் சனி இதுக்கு போய் ஏன் பிளான் போட்டுகிட்டு, எப்பொழுதிலிருந்து உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பம் என்று ஒரு நல்ல ஜோசியரிடம் கேட்டு கொண்டு காதலை ஸ்டார்ட் செய்யுங்கப்பா!

என்ன திவ்யா மேடம் எப்படி இருக்கீங்க! நீண்ட நாள் ஆகிவிட்டாலும் நினைவில் இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!\\


ஹாய் ப்ரேம்,
நீண்ட நாட்களுக்கு பின் என் ப்ளாக் பக்கம் வந்திருக்கிறீங்க, நன்றி!!

எப்படி இருக்கிறீங்க ப்ரேம்?

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி!!!

said...

\\Blogger kavidhai Piriyan said...

hi Divya,

good judgement .....\\

வாங்க கவிதை ப்ரியன்,

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!!!

said...

\\Blogger rsubras said...

hey div..story completed... :D

this story appala vanthu porumaiya padikkiraen..sariyaa :)\\

தகவலுக்கு நன்றி,

BTW இது கதை பதிவு இல்லீங்க,
நான் கதை தான் எழுதுவேன்னு முடிவோட....பதிவு படிக்காமலே சொல்லிட்டீங்க!!

said...

\\Blogger பாச மலர் said...

அட்டகாசம் திவ்யா...\\

மிக்க நன்றி பாசமலர்!!!

said...

\\Blogger கருப்பன்/Karuppan said...

//
இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,
//

அப்படீனு யாரு சொன்னது??? எல்லாம் பச்சைப் பொய்!!! குறிப்பா Semiconductor industryல பேருக்கு கூட ஒரு பெண் இல்லை!! அப்படியே இருந்தாலும் எல்லாம் 35 வயசு ஆண்ட்டி!!! அவ்வ்வ்வ்.......\\

ம்ம், உங்க வேலை தளத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவா?? அச்சச்சோ!!!!

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி கருப்பன்!!

said...

\\Blogger rsubras said...

adada adada.... intha handbook for lovers lam edhukkaga...akka ku wedding bells satham ketka aarambichiducho???? illa adhukana aayatham aayitu irukka?\\

வருகைக்கு நன்றி Subras,

யாரோட அக்காவுக்கு wedding bells??

said...

\\Blogger Kittu said...

hi divya
how r u doin ? it's been long time since i visited ur blog.
nalla research, kadhal pathi thesis ezhudhareengalo ? LOL .
ending line super. :)

- kittu mami\\

வாங்க கிட்டு மாமி,

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறீங்க, சவுக்கியமா....???

பாராட்டிற்கு நன்றி!!!

said...

\\Blogger தமிழன்... said...

\ My days(Gops) said...
//நேரா மேட்டருக்கு வரேன்.
எந்தக்காலக்கட்டத்தில் எல்லாம் காதல் அரும்புகிறது, அப்படி அரும்பும் காதல் நிலைத்து நிற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா அப்பருவத்துல் என பார்க்கலாமா.....
//

ஒகே டீச்சர்... சாரி.... பார்க்கலாம் பார்க்கலாம்...:P\\

என்னாதுதுதுது.........டீச்சரா???//

அதானே, காதல் கவிதாயினி திவ்யா அப்டின்னு சொல்லுங்கப்பா:)))\\


ஏங்க இப்படி கவிதாயினி பட்டமெல்லாம் கொடுத்து கிண்டல் அடிக்கிறீங்க???

said...

\\ தமிழன்... said...

அனுபவங்கள் கற்றுத்தருகின்றன...

(இது உங்க பதிவுக்கு)\\

நன்றி தமிழன்:))

said...

\\Blogger Kesavan said...

//
இப்போ எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,
//

ஆமா ஆமா எங்க ஆபிஸ்-ல கூட நிறைய பெண்கள் தான்.. என்ன செய்ய எல்லோரும் வீகேன்ட் ஆனா பேரன் பேத்தி கூட பொழுது போக்க போயிடறாங்க.. வெந்த புண்-ல பெட்ரோல் ஊத்தி கொளுதததீங்க....

பதிவு சூப்பர்-ஒ சூப்பர் திவ்யா....
//கல்லூரி காதல் ,
கல்லூரி வரை!!//

என்னுடைய கல்லூரி நண்பர்களில், காதலித்த 80 சதவீத ஜோடி - திருமணத்தில் இணைந்தார்கள்... கஷ்டபடாமல் இல்லை... சமுதாய தடைகளை(state,language,religion,caste,age) தாண்டி, பெற்றவர்கள் சம்மததொடு ....

அழுவலக வாழ்கையில், வேறுவிதமாக இருந்தது... தெரிந்த ஜோடி ஒன்று.. தங்கள் பெற்றவர்களை துன்ப படுத்த கூடாது என்று பிரிந்தார்கள்... (காதலுக்கு மரியாதையாம்.... )

//'பயபுள்ளைய.....கஷ்டபட்டுபடிக்க வைச்சேன், படிச்சு தன் கால்ல நின்னு சம்பாதிக்கிற திரானி வந்ததும், ஏறின ஏணிப்படி.......என்னை மதிக்காம, கூட வேலை பார்க்கிற புள்ளைய லவ்வு பண்ணிட்டானே"
அப்படின்னு.........புலம்பல் ஒலி கேட்கும்..........///

typical நம்ம ஊரு புலம்பல்...

அசத்திடிங்க திவ்யா.... வாழ்த்துக்கள்\\

வாங்க கேசவன்,
நீண்ட நாட்களுக்கு பின் என் வலைதளம் வந்திருக்கிறீங்க, நன்றி!!

விரிவான பகிர்வுக்கு மற்றுமொரு நன்றி!!

said...

\\Anonymous Anonymous said...

இந்தி படிக்க வந்து வாத்தியோட லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட நானு
இப்ப ஒரு நாப்பது வருசம் கழிச்சும் சந்தோசமாத்தான் கீறோம்.
ஆனா என்னா, அம்மா அப்பா பாத்து கல்யாணம் கட்டிக்கிட்ட நாங்கள்ளாம்
ஏதோன்னு இருக்கோம். இவங்க மட்டும் எப்படி இப்படி இருக்காகன்னு
கேக்கறது மட்டுமல்ல, ஏதோ எங்க அண்ணன் மாதிரி யா எல்லாம் இருந்துப்புடுவாங்களான்னு
நாத்தி, அண்ணி வேற கேட்காக...
லவ் பண்ணுங்க .. தப்பில்ல .. ஆனா அதுலேயும் ஒரு லக் வேணும்னு தோணுதுங்க..
என்ன ! என் பேரு என்னவா ? வெக்கமா இருக்குங்க..

மே....ம்\\

பெயர் வெளியிட விரும்பாத அனானி, வருகைக்கும் , அனுபவ பகிர்விற்கும் நன்றி!!

said...

காதலுக்கு இன்றைய வரை யாராலும் இலக்கணம் வகுக்க முடியவில்லை. காதல் யாருக்கு, எப்படி, எங்கு, என்றைக்கு வருமென்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது என்பது தான் உண்மை

said...

காதலுக்கு இன்றைய வரை யாராலும் இலக்கணம் வகுக்க முடியவில்லை. காதல் யாருக்கு, எப்படி, எங்கு, என்றைக்கு வருமென்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது என்பது தான் உண்மை

said...

Wow..!! நிரம்பவும் யதார்த்தமாக சிந்தித்திருக்கிறீங்க திவ்யா.. ''காதல்ல இதெல்லாம் சகஜமப்பா.......!!!'' என்பது போல வாழ்க்கையிலும் இவையெல்லாம் சகஜமே..!

Anonymous said...

//ஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும் வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பிருக்கு.//

ROMBA SARI

ANBUDAN
KRP
http://visitmiletus.blogspot.com/

said...

வணக்கம் குட்டி பொண்ணு ...
எப்போடியோ இந்த பாராட்டுதல் மூலம் என் வலைபூ முதல்
நோக்கம் நிறைவடைகிறது ...
எப்படி இப்படி மானாவாரியா கருத்துகளை
அள்ளி தெளிக்கிறீங்க ...
அப்பறம் உங்க பதிவின் தலைப்பு
ஒவோன்றும் கவிதையா இருக்கு ..
அதிக பதிவை போடுங்கள் ...
அடிக்கடி பாராட்டி இம்சை செய்துவிட்டு போறேன் ..


அன்புடன் --லொள்ளு பொண்ணு வள்ளி ...

said...

\\aanazagan said...
காதலுக்கு இன்றைய வரை யாராலும் இலக்கணம் வகுக்க முடியவில்லை. காதல் யாருக்கு, எப்படி, எங்கு, என்றைக்கு வருமென்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது என்பது தான் உண்மை\\

கரெக்ட்டு:))

said...

\\.கோகுலன் said...
Wow..!! நிரம்பவும் யதார்த்தமாக சிந்தித்திருக்கிறீங்க திவ்யா.. ''காதல்ல இதெல்லாம் சகஜமப்பா.......!!!'' என்பது போல வாழ்க்கையிலும் இவையெல்லாம் சகஜமே..!\\

வணக்கம் கோகுலன்,

கருத்துக்களுக்கு பாராட்டிற்கும் நன்றி!

said...

\\KRP said...
//ஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும் வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பிருக்கு.//

ROMBA SARI

ANBUDAN
KRP
http://visitmiletus.blogspot.com/\\

நன்றி KRP:)))

said...

\\லொள்ளு பொண்ணு வள்ளி said...
வணக்கம் குட்டி பொண்ணு ...
எப்போடியோ இந்த பாராட்டுதல் மூலம் என் வலைபூ முதல்
நோக்கம் நிறைவடைகிறது ...
எப்படி இப்படி மானாவாரியா கருத்துகளை
அள்ளி தெளிக்கிறீங்க ...
அப்பறம் உங்க பதிவின் தலைப்பு
ஒவோன்றும் கவிதையா இருக்கு ..
அதிக பதிவை போடுங்கள் ...
அடிக்கடி பாராட்டி இம்சை செய்துவிட்டு போறேன் ..


அன்புடன் --லொள்ளு பொண்ணு வள்ளி ...\

வாங்க வள்ளி,

வணக்கம்,

உங்கள் முதல் வருகைக்கு என் மனநிறைந்த நன்றி!

உங்கள் இம்சையே எனது ஆசை....:))

said...

Very useful post Divya, nice:)

said...

how do you take time to reply each and every commment?

appreciate your patience Divya.

said...

In fact love is an addiction, you never come out, still you suffer, you need it, without that one more moment you can not live.....a worse, dangerous, also good and extreme as well, which could kill a life or a light....

uyir pokira vali enralum vazkai rasikapadum oor idam anbu/love

-Senthur

said...

In fact love is an addiction, you never come out, still you suffer, you need it, without that one more moment you can not live.....a worse, dangerous, also good and extreme as well, which could kill a life or a light....

uyir pokira vali enralum vazkai rasikapadum oor idam anbu/love

-Senthur

said...

ஆரம்பிச்சுட்டாங்கப்பா ;-)

இத வச்சே நீங்க பிஎச்டி செய்யலாமுங்கோ

said...

kalakals post:)

said...

இதுக்கும் காதல் எனப்படுவது யாதெனிலுக்கும் சம்பந்தம் இல்லைல ?

நீங்க எழுதுன படிச்சுட்டு ரொம்ப கஷ்டமா போச்சு போங்க.
பள்ளிக்கூடம், கல்லூரி எல்லாம் பசங்க மட்டும்தான் அதுனால எனக்கு இந்த காதலுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லாம போச்சுங்கோ.
சரி வேலை பார்குற எடத்துல காதலிக்கலாம்னா, இந்தியால யாரும் என்னைய கண்டுக்கல, சிங்கப்பூர்ல வந்து சீன பொண்ணையா காதலிக்க முடியும்? எல்லாம் போச்சு.

said...

//காலப்போக்கில் படிப்பு, வேலை, ஊர் மாற்றம், ரசனை மாற்றம் இப்படி பலபல தடைகள் எல்லாம் தாண்டி தான் வரனும்//
ஆமாங்க. ரெண்டு வருசத்துக்கு முன்ன எனக்கு இருந்த எதிர்பார்ப்புகளும்... போன வருஷம் எனக்கு இருந்த எதிர்பார்ப்புகளும்.... இப்ப எனக்கு இருக்குற எதிர்பார்ப்புகளும் முரண்பாடா தான் இருக்கு ...

கால மற்றம், வாழ்கை மாற்றம் ,எண்ண மாற்றம் .. எதிர்பார்ப்புகளில் மாற்றம்....
மாற்றம் மானுட தத்துவம்