May 07, 2008

எனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ??? - பகுதி 4



பகுதி -1

பகுதி - 2

பகுதி - 3

மீராவின் நாசியிலே சுவாசம் குறைந்து கொண்டே போனது, ICU விற்கு கொண்டுபோகப்பட்டாள் மீரா. செயற்கை முறையில் மீரா மூச்சுவிட ஏற்பாடு செய்வதாகவும், பிழைப்பது சிரமம் ,'keep your fingers crossed' என டாக்டர் கூறினார்.

கையில் மீராவின் குழந்தை.....பசியில் அழுதது,
நர்ஸ் என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டுச் சென்றார்.

மீராவிற்கு குழந்தை நல்லபடியாக பிறந்ததும், சுமதி கோயிலுக்கு சென்றுவிட்டு, மாற்று உடைகள் எடுத்து வருவதாக கூறி வீட்டிற்கு சென்றிருந்தார்.

ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் மீரா, பசியினால் அழும் அவள் குழந்தை, தவிப்புடன் நான்..........

திருமணம் ஆகி இன்றைய நாள் வரை, எனக்காக கடவுளிடம் எதுவுமே வேண்டிக்கொள்ளவில்லை...........கடவுள் மீது கோபம், ஏன் எனக்கு இப்படி ஒரு மணவாழ்க்கை அமைத்தாய் என்று,

ஆனால் இன்று...

'கடவுளே...என் மீராவிற்கு உயிர் பிச்சை கொடு,
அவளை என்னிடம் திருப்பி கொடு ப்ளீஸ்,
எனக்கு என் மீரா வேணும்
என்னை விட்டு அவளை பிரிச்சிடாதே!'

நான்.........நானா........நேற்று 'சீ தொடாதே' என்று அருவருத்த நானா இன்று 'என் மீரா' என சொல்கிறேன்???

மீரா உயிருக்காக போராடிய அந்த இரண்டு நாட்களில் தான் எனக்குள் மீரா பதிந்திருப்பதை உணர்ந்தேன்.

நர்ஸின் பாதுகாப்பில் மீராவின் குழந்தை, ஆறுதலாக சுமதியின் குடும்பம், எனினும்........மனதில் வெறுமை,

வீட்டிற்கு வந்தால்....மீரா அடிக்கடி முனுமுனுக்கும் பாட்டின் எதிரொலி, அவளின் ரோஜா செடி.........மேஜையின் மேலிருந்த அவளது கைக்கடிகாரம், wash basin கண்ணாடியில் ஒட்டியிருந்த அவள் நெத்தி ஸ்டிக்கர் பொட்டு, soap dish ல் அவள் உபயோகிக்கும் 'Johnsons baby soap' ......

இப்படி அத்தனையும் அவளை ஞாபகப்படுத்தின,

என்னுடன் 7 மாதம் ஒரே வீட்டில் தங்கி இருந்த நண்பனின் பிரிவு தரும் வலியா, இல்லை......நான் தாலி கட்டிய மனைவி மீராவின் உயிர் போகின்றதே என்ற வேதனையா??......எதுவென்று புரியவில்லை எனக்கு....ஒன்று மட்டும் புரிந்தது, ....எனக்கு என் மீரா வேண்டும்!!

கடவுள் புண்ணியத்தில் மீரா உயிர் பிழைத்தாள்.

மீராவின் பெற்றோர் மீராவின் பிரசவத்திற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது என்ற நினைப்பில் அமெரிக்காவிலுள்ள மூத்த பெண்ணின் வீட்டிற்கு சென்றவர்களால் உடன் இந்தியா திரும்ப முடியாத சூழ்நிலை அங்கு,
என் அம்மா அப்பாவும் போன முறை புனே வந்தபோது உடல்நிலை பாதிக்க பட்டதால் நெடுந்தூரப் பயணம் செய்ய முடியாத நிலை.
குழந்தையை பார்க்க ஆசைபட்ட அவர்களிடம்.....குறை பிரசவத்தில் பிறந்ததால் இப்போது உடனே குழந்தையுடன் பிரயாணம் செய்ய இயலாது என அவர்களை சமாளித்தோம்.
அதனால் சுமதிதான் மீராவையும் குழந்தையையும் நன்கு கவனித்துக்கொண்டாள்.

இந்நிலையில் புனே அலுவலகத்திற்கு மாறுதல் ஆகி வந்தான் என் நண்பன் ரகு, மும்பையிலிருந்த அவனது அக்காவிடம் ரகு விவரங்கள் கூற, ரகுவின் அக்கா தன் மகளுடன் எங்கள் வீட்டில் வந்து தங்கி இருந்து கவனித்துக்கொண்டார்.
சிறிது சிறிதாக மீராவின் உடல் நிலை தேறியது.




வீட்டில் நிறையபேர் இருந்ததாலும், மீரா குழந்தையை கவனிப்பதில் பிஸியாக இருந்ததாலும் நான் மீராவிடம் தனியாக பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

அன்று ரகுவும் அவனது அக்கா குடும்பமும் மும்பைக்கு புறப்பட்டதும் மீராவிடம் பேசலாம் என நினைத்துச் சென்றேன்.

மீராவின் முகத்தில் ஒரு புது தெளிவு தெரிந்தது.....அது....



தாய்மை தந்த கர்வமா?
நினைத்தபடி குழந்தையை பெற்றெடுத்த மன நிறைவா??
தனித்து வாழ எழுந்த துணிச்சலா???
வாழ்க்கையில் ஏமாற்றமும் இழப்பும் கற்றுத்தந்த முதிர்ச்சியா????


இனம் புரியா ஒரு வித தீர்க்கமான பார்வையை என்னால் உணர முடிந்தது மீராவிடம்.

குற்ற உணர்விலும், பயம் தந்த நடுக்கத்துடனும் மிரளும் விழிகளில் புதுவித வெளிச்சம் இருந்தது இப்போது!

நான் மனம்திறக்கும் முன் மீராவே பேச தொடங்கினாள்....

"அடுத்த வாரத்தில் குழந்தைக்கு இரண்டு மாதம் ஆகிடும், தடுப்பூசி போட்டுட்டு......கோயம்புத்தூர் போலாம்னு நினைக்கிறேன். என்னை கூட்டிட்டு போக முடியுமா ......ப்ளீஸ்?"

"ஹும் சரி.......அங்கே போய்ட்டு??"

"அங்க......அவங்க வாரிசை ஒப்படைக்க போறேன்"

தொண்டையில் ஏற்பட்ட அடைப்பை அடக்கிக்கொண்டாள் மீரா.

"ஹும்.."

"உங்க ஃப்ரண்ட் ரகு வோட அக்கா......அவங்களோட Bangalore ஃப்ரண்ட் கிட்ட சொல்லி எனக்கு வேலையும், பெண்கள் தங்கும் விடுதியில் இடத்திற்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க......போன வாரம் தான் வேலை கன்ஃப்ர்ம் ஆச்சு"

அட! இவ்வளவு ஏற்பாடு பண்ணியிருக்காளா மீரா???
முடிவோடதான் இருக்கிறாப்போல........

"என் parents next month தான் இந்தியா வராங்க, அவங்க கிட்ட நான் பேசி சமாளிச்சுக்கிறேன்........நீங்க........உங்க........வீட்ல......எப்படி?"

அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது போல் கையால் சைகை காட்டி விட்டு என் அறைக்குச் சென்றுவிட்டேன்.

தன் குழந்தையை பிரிந்து தனித்து வாழ துணிந்தவளிடம், குழந்தை பிறந்ததும் சட்டபடி பிரிந்து விடுகிறேன் என உறுதியிட்டவளிடம்..........இப்போ என் மனவிருப்பத்தை எப்படி சொல்வது??

'என்னை விட்டு நீயும் குழந்தையும் போக வேண்டாம்'னு சொல்ல வந்த வார்த்தைகள் ஏனோ வெளிவரவே இல்லை மீரா பேசும்போது!!

மீரா சொன்னபடி கோவைக்குச் சென்றோம்.

ஹோட்டல் 'சிட்டி டவரில்' ரூம் புக் செய்திருந்தேன். குளித்துவிட்டு காலை டிபன் ரூம் ஆர்டரில் சாப்பிட்டுவிட்டு ஸ்ரீதரின் வீட்டிற்கு புறப்பட்டோம்.

குழந்தையை மார்போடு இறுக்கி அணைத்திருந்த மீராவின் கண்களில் நீர் ததும்பி நின்றது. அவள் நிலைமையை காண பொறுக்காமல் என் மனம் கணத்தது.

குழந்தைக்கு தேவையானதை எல்லாம் தனியாக ஒரு பையில் எடுத்துக்கொண்டாள் மீரா.

ஸ்ரீதர் உயிரோடு இருப்பானா?
அவனது குடும்பம் இவளை நம்புமா??
இந்தக் குழந்தையை தங்கள் வாரிசு என ஏற்குமா???

குழப்பத்துடன் ஸ்ரீதரின் வீட்டிற்குச் சென்றோம்.

கதவை திறந்த வேலையாள் ஸ்ரீதர் வீட்டில் இல்லை, அவனது டெக்ஸ்டைல் ஷோரும்க்கு அவன் சென்றிருப்பதாக சொன்னதும், ஸ்ரீதர் உயிருடன்......நல்ல உடல் நிலையில் இருக்கிறான் என்பது உர்ஜிதம் ஆனது.

"கொஞ்ச நேரம் இங்கே வெயிட் பண்ணுங்க.........ஐயாவோட சம்சாரத்தை வர சொல்றேன்" என்று வேலையாள் கூறியதும் மீராவின் கண்களில் மிரட்சி.

சிறிது நேரத்தில், அன்று நான் ஸ்ரீதர் அம்மாவுடன் ஆஸ்பத்திரியில் பார்த்த அந்த பெண் வந்து நமஸ்காரம் செய்தாள். என்னை அன்று பார்த்தது அவளுக்கு நினைவில் இல்லை போலும்.......ஆனால் மீராவை சரியாக அடையாளம் கண்டுக்கொண்டாள்,

"நீங்க மீரா.....மீரா.....தானே.........மாமா உங்க ஃபோட்டோ காண்பிச்சார், எப்படி இருக்கிறீங்க.......??"

உபசரித்து உட்காரவைத்துவிட்டு என்னை நோக்கினாள் அப்பெண்.
'இது யார்' என்பது போல் அப்பெண் மீராவை நோக்க,

"இவர் என் ஹஸ்பெண்ட்"

முதல் முறையாக எனக்குள் ஒரு shock wave ....... மீரா என்னை தன் கணவன் என்று அறிமுகம் செய்ததின் தாக்கம்!!!

அந்த பெண் எனக்கு வணக்கம் கூறிவிட்டு, மேலும் பேசத் தொடங்கினாள்,

"மீரா, என் பேரு செல்வி........மாமா உங்களை பத்தி எல்லாம் சொன்னார், மாமாவுக்கு அடிபட்டு 4 மாதம் சுயநினைவு இல்லாம இருந்தார், கடவுள் புண்ணியத்தில் தன் நினைவுக்கு கொஞ்சம் கொஞ்சமா அவர் திரும்பினதும் உங்களைத் தான் தேடினார். நான் அவரோட மாமா பொண்ணு.......எனக்கு ஸ்ரீதர் மாமானா உசிரு, ஆனா அவர் மனசு முழுசும் நீங்க தான் இருக்கிறீங்கன்னு அவர் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டேன். உங்களை பத்தி அவரோட நண்பர்கள் கிட்ட விசாரிச்சுப் பார்த்தபோ தான்.....நீங்க கல்யாணமாகி புனேவுக்கு போய்ட்டீங்கன்னு தகவல் தெரிஞ்சு அழுதார். நான் ஆறுதல் சொல்லி அவரை பார்த்துக்கிட்டேன்.

அப்போ கூட அவர் என்னை கட்டிக்க சம்மதிக்கவேயில்லை. ஏன்னா, கார் விபத்துல அவருக்கு அடிபட்டபோ சுயநினைவை மட்டும் இல்லை..........ஒரு தகப்பனாகும் தகுதியையும் அவர் இழந்துட்டார், அதெல்லாம் உங்களுக்கு அவர் பண்ண துரோகம்னு புலம்பிட்டே இருந்தார். இதெல்லாம் தெரிஞ்சும் நான் மாமாவை பிடிவாதமா கட்டிப்பேன்னு சொன்னதாலதான் சம்மதிச்சார். போன மாதம் தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு, இப்போ......உங்களை......பார்த்தா........."

"கவலைபடாதீங்க செல்வி.......உங்க மாமா உங்களுக்குத்தான்"


"மீரா........"

"உங்க மாமா மட்டுமில்ல.........உங்க மாமாவோட வாரிசும் உங்களுக்குத்தான் செல்வி"

கையிலிருந்த குழந்தையை மீரா செல்வியிடம் நீட்ட,

செல்வி கண்களில் நீர் வடிய குழந்தையை வாங்கிக்கொண்டு மீராவின் காலில் விழ எத்தனித்ததை மிரா தடுத்தாள்.

"கொஞ்சம் இருங்க மீரா............மாமாவுக்கு ஃபோன் போட்டு உடனே வீட்டுக்கு வரச்சொல்றேன்"

"இல்ல செல்வி.........அவர் நல்லாயிருக்கார்னு தெரிஞ்சதே எனக்கு போதும், அவருக்கு ஏதும் ஆகியிருந்தா அவர் குடும்பம் அவரோட குழந்தையை ஏத்துக்குமான்னு யோசனையோடு வந்தேன், குழந்தைக்கு நீங்க ஒரு தாயா இங்க இருப்பீங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷம் செல்வி..........அப்போ நாங்க கிளம்புறோம்"

நாங்கள் புறப்பட எத்தனித்தபோது......


"மீரா......"

குரல் கேட்டு நாங்கள் மூவரும் திரும்பினோம்...அங்கு 'ஸ்ரீதர்' !!!

நானும் செல்வியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அத்தனை நேரம் தைரியமாக பேசிய மீரா....இப்போது......1 வருடம் கழித்து ஸ்ரீதரை பார்க்கும் இன்ப அதிர்ச்சியில் நிலை குலைந்தாள்.

சூழ்நிலையையும் தன் நிலையையும் சற்றென்று மீரா சுதாரித்துக்கொள்வதை நான் உணர்ந்தேன்.

இருவரும் பேசிக்கொள்ளட்டும் என நான் வெளியேறும் போது மீரா.......

"எங்க போறீங்க...நானும் வரேன்"

என்று என்னை பின் தொடர,

ஸ்ரீதர் எங்கள் இருவரையும் வழிமறித்து நின்றார்.

"ப்ளீஸ்........போகாதே மீரா......."

"....."

"மீரா........செல்வி கையில இருக்கிறது.........நம்ம......நம்ம.."

"ஹும்" என்று தலை அசைத்தள் மீரா.

"மீரா.......ப்ளீஸ் நீயும் குழந்தையும் எங்க கூடவே இருந்திடுங்க....ப்ளீஸ்"

மீரா என்னை நோக்கினாள்.

'மீரா உன் குழந்தையை அதன் அப்பாவோட நீ ஒப்படைச்சப்போ எனக்கு வலிக்கல,
ஆனா.........
நீ என் குழந்தைடா...உன்னை விட்டு தரமாட்டேன்டா
'

என் மனதிற்குள் தோன்றிய வார்த்தைகள் வெளிவராமல் தொண்டையில் சிக்கியது.

ஸ்ரீதரின் கெஞ்சும் பார்வை,
என் நிலைக்கொள்ளா தடுமாற்றம்,
செல்வியின் சொல்ல முடியா தவிப்பு...

எல்லாவற்றிற்கும் மீரா பதில் தந்தாள்.


"ஸ்ரீதர், உங்கள் காதல் தந்த சின்னத்தை உங்க கிட்ட சேர்த்திட்டேன். இதுக்குமேல நமக்குள்ள எதுவும் இல்லை...........குழந்தையின் மீது மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கு. குழந்தையை நல்லபடியா வளர்ப்பீங்கன்னு நம்புறேன்.......வரேன் ஸ்ரீதர்"

தான் சொல்ல நினைத்ததை திட்டமாக கூறிவிட்டு யார் பதிலுக்கும் காத்திராமல் வேகமாக வெளியேறினாள் மீரா.

காரில் ஹோட்டல் அறைக்கு திரும்பும் வரை மீரா என்னிடம் எதுவுமே பேசவில்லை. எங்களுக்கு நடுவில் இருந்த மெளனத்தின் நிசப்தத்தில் பல புது அர்த்தங்கள் இருப்பதாக என் மனதிற்கு பட்டது!!

சிட்டி டவர் ஹோட்டலில் வந்து இறங்கியதும், taxi யை waiting யில் இருக்கும்படியாகவும், ரெயில்வே ஸ்டேஷன் போகவேண்டும் எனவும் taxi driver யிடம் கூறினாள் மீரா.


ரூமிற்கு வந்து தன் உடமைகளை எடுத்துக்கொண்ட மீரா,

"நான் அப்போ........கிளம்புறேன்.......Bangalore ட்ரெயினுக்கு டைம் ஆச்சு"

"ஹும்"

மீராவிடம் நான் மனம் திறக்கும் முன் அவள் என்னிடம் விடைபெற்று காரில் சென்றுவிட்டிருந்தாள்.

ஹோட்டல் ரூம் பெட்டில் பொத்தென்று விழுந்து, விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆசைதானடி உன்மேல் எனக்கு!

அப்புறம் எதற்கு என்மனதில்
தயக்கம் சாக்கு போக்கு
எல்லாம்??

கற்பு தியாகம் என்று சந்ததி கடந்த
விஷ்யங்களுக்காகவா...
நம் உறவின் மீது இரங்கல் தீர்மானம்
இயற்றினாய்??

என்னை முழுவதுமாய் அறுவடைச் செய்தவளே!
அதெப்படி என்னை அம்போவென
விட்டுச் செல்ல மனமுவந்தாய்??

வாழ்க்கையை அடகு வைத்தா...
உன் காதலின் சின்னத்தை
மீட்டு வந்தாய்???

தொடங்கிய நம் பந்தத்தை
தொடர
எனக்கொரு சந்தர்ப்பம் தந்து
தலையசைப்பாயா??

முடிவுரை எழுதியபின்
முற்றுப் புள்ளி வைக்க
முடிவான முடிவு செய்தாயோ??

சேராத உன் காதலுக்காக
சேர்த்து வைத்த என் காதலை
செலவழிக்க மறுக்காதே!!

ஆசைதானடி உன்மேல் எனக்கு!!!



மீராவின் ட்ரெயின் புறப்பட இன்னும் 30 நிமிடம் இருக்கிறது...........உடனே call taxi அமர்த்தி ரெயில்வே ஸ்டேஷன் விரைந்தேன்.
அவளுக்கு டிக்கட் நான் புக் செய்து கொடுத்திருந்ததால் அவளது இருக்கையை எளிதாக கண்டுப்பிடித்தேன்.


ஜன்னல் கம்பிகளில் தலை சாய்த்தபடி கண்ணிருடன் மீரா.........
இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த அவளது கண்களில் நீரோட்டம்.

முதன்முறையாக மீராவின் கண்ணீரைக் கண்டு என்னையுமறியாமல் என் கண்களில் நீர் பூத்தது.

அன்று காதலித்தவனிடம்
தன்னையே கொடுத்து
இன்று தன் சேயையும்
அவனிடமே சேர்த்துவிட்டு

வாழ்ந்த வாடகை
மணவாழ்க்கை தந்த
அர்த்தமற்ற தாலியுடன்
ஒப்பந்தத்தை நிறைவேற்ற
பந்தத்தை முறித்து.....

தனிமை பயணத்தில் மீரா.......!!

இது ரெயில்வே ஸ்டேஷன், பொது இடம் என்று கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு நான் சுதாரித்தபோது தான் மீராவின் கையில் இருந்ததை கவனித்தேன்,

அவள் கைகளில்........என்.......என் ........ favourite key chain!!

அதை பார்த்து பார்த்து தான் தன் கண்ணீரையும் துடைத்துக்கொண்டு அழுதபடி இருந்தாள் மீரா.

என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து என் சாவி கொத்தை எடுத்துப் பார்த்தபோதுதான் கவனித்தேன்.........என் key chain அதில் இல்லை,

இந்த key chain யை என் கை விரலில் சுற்றிக்கொண்டிருப்பது என் பழக்கம், அதுவும் இந்த key chain எனக்கு மிகவும் பிடித்தமானது, பல வருடங்களாக என் கைகளில் விளையாடிக்கொண்டிருப்பது என ஒரு நாள் பேச்சு வாக்கில் மீராவிடம் கூறியது நினைவுக்கு வந்தது.

அதை......அந்த key chain யை......ஏன் மீரா.........எடுத்துக்கொள்ள வேண்டும்???

புரிந்தது!!!!.........இனிமேலும் தாமதிக்க கூடாது என என் உள் மனம் என்னை உந்த,
டக்கென்று ட்ரெயினில் ஏறி அவள் இருக்கைக்கு அருகில் சென்றேன்.

"மீரா...."

குரல் கேட்டு மீரா திரும்பினாள்,

என் வருகையை சற்றும் எதிர்பார்க்காத மீரா முகத்தில் அழுகையும் புன்னகையும் கலந்த ஒரு இன்ப அதிர்ச்சி ரியாக்க்ஷன்!!

அவளிடம் எதுவும் கூறாமல் கடகட வென அவளது உடைமைகளை எடுத்துக்கொண்டு ட்ரெயினை விட்டு கிழே இறங்கினேன்.

"ஹையோ........ஏன் bag எல்லாம் எடுக்கிறீங்க........ஏங்க........ட்ரெயின் புறப்பட போகுதுங்க......"
என்று கேட்டபடியே மீரா பதற்றதோடு என்னை பின் தொடர்ந்து ட்ரெயினை விட்டு இறங்கினாள்.

"ஏங்க......bag எல்லாம் இறக்கிட்டீங்க.......ட்ரெயின் புறப்படுற டைம் ஆச்சுங்க"

"என்னோட ........பொருள்.........ஒன்னு காணோம்....." என்றேன்.

"ஓ........என்ன.........என்னது .....??"

"இரு ......தேடி பார்க்கிறேன்"

என்று அவள் பையை திறப்பது போல் குனிந்தேன்.

"ஸாரிங்க......உங்க......key chain......அதைதான்.....ரொம்ப ஸாரி, இந்தாங்க.......உங்க key chain"

"key chain மட்டும்தான் .........என்கிட்ட இருந்து எடுத்துட்டு போறியா மீரா??"

"....."

"என்னையும்.....சேர்த்து......திருடிட்டு........"

சொல்லி முடிப்பதற்குள் 'என் மீரா' கண்ணீரோடு என் மார்பில் சாய்ந்திருந்தாள்!!



முற்றும்...!!

165 comments:

said...

கவிதையான முடிவு திவ்யா..
மிகவும் ரசித்துப் படித்தேன்...
:))) வாழ்த்துக்கள் !!

said...

//எதுவென்று புரியவில்லை எனக்கு....ஒன்று மட்டும் புரிந்தது, ....எனக்கு என் மீரா வேண்டும்!! //

சில உணர்வுகளுக்கு அர்த்தம் கிடையாது
இல்லையா... திவ்யா... படிக்கும் போது
அது நன்றாக உணரப்படுகிறது...:)))
எழுத்தாண்மை அதிகமாகிக் கொண்டே
போகி்றது திவ்யாவுக்கு... என்ன காரணம்,..? ;)))

said...

//என்னை முழுவதுமாய் அறுவடைச் செய்தவளே!
அதெப்படி என்னை அம்போவென
விட்டுச் செல்ல மனமுவந்தாய்??

வாழ்க்கையை அடகு வைத்தா...
உன் காதலின் சின்னத்தை
மீட்டு வந்தாய்??? //

:))) கவிதை அழகு.... எப்படி இப்படி கதை கவிதை என கலக்குறீங்க ..?? :))))) simply cute !!

said...

மிக அழகான தொடர்.. அழகான பொருத்தமான படங்களுடன்... திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வினைத் தருகின்றன் திவ்யா.... மேலும் மேலும் எழுத்தை ஆழ வாழ்த்துக்கள்... :))))

said...

நல்ல முடிவு! கவித்துவமான முடிவு! சில நேரங்களில் சில விஷயங்களை நாம அமைதியாக இருப்பது கூட சில அர்த்தங்கள் வெளிப்படுத்தும்! சந்தோஷமான முடிவு படிக்க நல்லா இருக்கு!

said...

ரயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸா..தமிழ் சினிமா செண்டிமெண்ட் படி படமா எடுத்தா சில்வர் ஜூப்ளிதான் :)))

மூன்றாவது பாகத்திலேயே இப்படிததான் நடக்குமென யூகிக்க முடிந்தாலும் விறுவிறுப்பான நடையில் அழகான கதை!! வாழ்த்துக்கள்!!

said...

மீரா விஷ்வாவுடன் சேர்வாள் என்று நான் ஏற்கெனவே எதிர்பார்த்த முடிவுதான்.
ஆனால் அது உங்கள் கவிதை வரிகளில் கலக்கலாக வரும் என்று எதிர்பார்க்க வில்லை.

ரெம்பவே விறுவிறுப்பான தொடர் சரியான விதத்தில் சரியான அளவில் எழுதப்பட்டு முடிக்கப்பட்டிருந்தது.

தொடர் முழுவதும் இணைத்திருந்த படங்கள் அருமை.

பாவனா படம் எங்கிருந்துதான் எடுக்கிறீர்களோ?
கொள்ளை அழகு. எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள். எனக்கு பாவனாவை ரெம்பவே பிடிக்கும்.

இன்னும் நிறைய சொல்லனும்னு தோனுது. ஆனா....
வார்த்தைகள் வரவில்லை.
கொஞ்சம் கொஞ்சமா நேரம் கிடைக்கும் போது யோசி்ச்சு யோசிச்சு சொல்லுறேன்.
இப்போதைக்கு இவ்வளவுதான்.

இப்படிக்கு
மனதோடு மனதாய்...
உங்கள் புகழன்

said...

யூகிக்க கூடிய முடிவாக இருந்தாலும் முடித்திருந்த விதம் அருமை. கலக்கலான கவிதைகள். படிப்பவர்களும் கூடவே பயணிப்பது போல் கதை சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள் மாஸ்டர்.

said...

//ஆனா.........
நீ என் குழந்தைடா...உன்னை விட்டு தரமாட்டேன்டா '//


படிக்கும்போது இன்னதென்று சொல்ல இயலாதொரு நெகிழ்ச்சி.

said...

அப்பாடா...கடைசியில அவங்கள ஒண்ணு சேர்த்துட்டீங்க..போன பதிவுல மீராவுக்கு என்ன ஆச்சோன்னு பயந்துட்டேன்...

ஆனா,ஒரு சின்ன இடறல் எனக்கு..
ஓரு தாயா எப்படிங்க அவ்வளவு லேசாக் குழந்தையைத் தூக்கிக் கொடுத்துட முடியும்?என்னதான் அது அவங்க காதலனோட குழந்தைன்னாலும்...?

உங்க எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு.நல்ல சினிமாவா எடுக்கலாம்.பொருத்தமான புகைப்படங்கள்.

வாழ்த்துக்கள்.
அடுத்த தொடர் எப்போ?

said...

திவ்யா...வாழ்த்துக்கள் ;))

நீங்கள் கதை சொல்லியவிதம் ரசிக்கும் படியாகவும், அழகாகவும் இருந்தது ;)

புகைப்படங்களும், வசனங்களும் மிக எளிமையாகவும் மனதில் பதியும் வித்த்திலும் எழுதிய இருக்கிங்க ;)

வாழ்த்துக்கள் ;)

said...

:))))

கடைசி பகுதில எக்கச்சக்க காட்சிகள் வந்த மாதிரி ஒரு ஃபீலிங்....

said...

ஹாலோ திவ்ஸ், நல்லாருக்கு, சூப்பர்ர், அருமை, wonderful இப்படி சொல்லி சொல்லி bore அடிச்சு போச்சு. இதுக்கு மேலே வேற எதாச்சு வார்த்தை இருந்தா, கண்டுபிடிச்சு சொல்லுறேன். ஆனா, இப்போதைக்கு சொல்ல வேண்டியது,

கதை ஓட்டம் சூப்ப்பர்ர்ர்ர்ர்ர்!! படங்கள் அருமை!!! மாமா பொண்ணா பாவனாவை போட்டது wonderful!! இந்த மாதிரி கதையில உண்மையில ஸ்ரீகாந்த் நடிச்சிருந்தால் ரொம்ப முன்னேறி இருப்பார்:)))

said...

கதை இப்படிதான் போகும் என்று யூகிக்க முடிந்தது. ஆனா காட்சிகளின் விறுவிறுப்பும், மீராவின் reactionகளும், வாசனங்களும் கதையை அழகுபடுத்திவிட்டன.

//என்னுடன் 7 மாதம் ஒரே வீட்டில் தங்கி இருந்த நண்பனின் பிரிவு தரும் வலியா, இல்லை......நான் தாலி கட்டிய மனைவி மீராவின் உயிர் போகின்றதே என்ற வேதனையா??......//

அழகான வரிகள். மனதில் எழும் பல கேள்விகளை அடையாளம் கண்டு கதையில் இணைத்த உங்களுக்கு பாராட்டுகள்!

//தாய்மை தந்த கர்வமா?//

சூப்பர்ர்ர்!!!

//நீ என் குழந்தைடா...உன்னை விட்டு தரமாட்டேன்டா '//

எப்படி திவ்ஸ், இப்படிலாம் யோசிக்கிறீங்க!! simply superbb.

said...

// ரெயில்வே ஸ்டேஷன் போகவேண்டும் எனவும் taxi driver யிடம் கூறினாள் மீரா.//

மௌனம் ராகம் படத்தை ஞாபகப்படுத்தியது. :)))

கிளைமெக்ஸை ரயில் stationலில் வைத்தது கொஞ்சம் குஷி படத்தையும் ஞாபகப்படுத்தியது. இருந்தாலும், 'திவ்யாவின் magical touch' ரொம்ப யதார்த்தம்! வாழ்த்துகள் திவ்ஸ்!

said...

மிகவும் அருமை திவ்யா :)

மௌனங்களின் ஆழங்களில் கதை அழகு!

//முடிவுரை எழுதியபின்
முற்றுப் புள்ளி வைக்க
முடிவான முடிவு செய்தாயோ??

சேராத உன் காதலுக்காக
சேர்த்து வைத்த என் காதலை
செலவழிக்க மறுக்காதே!!//

இரசித்தேன்!

பொருத்தமான படங்கள் போட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது!!!

keep it up!!!

said...

அருமையான தொடர்கதை...
நான்கு பாகங்களும்
திரைப்படம் பார்ப்பதைப்
போன்றே இருந்தது...

இடைஇடையே இருந்த கவிதைகளும் அருமை...

//இன்னும் நிறைய சொல்லனும்னு தோனுது. ஆனா....
வார்த்தைகள் வரவில்லை.//

Repeattaiiiii...


Senthil,
Bangalore

said...

CUTE!!!
Really loved this one!
Matured and quality narration!!

Great work!
Keep it up! B-)

said...

///மீராவின் மூச்சு.........மெது......மெதுவாக........??????

தொடரும்...///

said...

///மீராவின் நாசியிலே சுவாசம் குறைந்து கொண்டே போனது, ICU விற்கு கொண்டுபோகப்பட்டாள் மீரா. செயற்கை முறையில் மீரா மூச்சுவிட ஏற்பாடு செய்வதாகவும், பிழைப்பது சிரமம் ,'keep your fingers crossed' என டாக்டர் கூறினார்.///

said...

///ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் மீரா, பசியினால் அழும் அவள் குழந்தை, தவிப்புடன் நான்..........///

இதனைப்படிக்கும் வலையுலகம் கண்ணீரோடு...

said...

///வீட்டிற்கு வந்தால்....மீரா அடிக்கடி முனுமுனுக்கும் பாட்டின் எதிரொலி, அவளின் ரோஜா செடி.........மேஜையின் மேலிருந்த அவளது கைக்கடிகாரம், wash basin கண்ணாடியில் ஒட்டியிருந்த அவள் நெத்தி ஸ்டிக்கர் பொட்டு, soap dish ல் அவள் உபயோகிக்கும் 'Johnsons baby soap' ......////

சின்ன சின்னதாய் காதலின் அடையாளங்கள்...

(அட நம்ம சோப்பு:)

said...

///??......எதுவென்று புரியவில்லை எனக்கு....ஒன்று மட்டும் புரிந்தது, ....எனக்கு என் மீரா வேண்டும்!!///

இந்த வரிகளை இழுத முதல் சில வரிகள் எழுதியிருக்கிறீர்களே அதுதான் இந்த வரிகளுக்குரிய பலம் திவ்யா

உங்கள் திறமைக்கு சான்று...

said...

///கற்பு தியாகம் என்று சந்ததி கடந்த
விஷ்யங்களுக்காகவா...
நம் உறவின் மீது இரங்கல் தீர்மானம்
இயற்றினாய்??///

நீங்கள் இப்படிக்கூட எழுதுவிங்களா...திவ்யா...

said...

//ரயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸா..தமிழ் சினிமா செண்டிமெண்ட் படி படமா எடுத்தா சில்வர் ஜூப்ளிதான் :)))//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேடேடேய்ய்ய்ய்...
:-))

said...

விருவிருப்பா போச்சு....நல்ல முடிவு...மொத்தத்துல சூப்பர்...

said...

///சொல்லி முடிப்பதற்குள் 'என் மீரா' கண்ணீரோடு என் மார்பில் சாய்ந்திருந்தாள்!!

முற்றும்...!!///

முடிஞ்சிடுச்சா கடைசி பகுதி செம ஸ்பீடு...

said...

தமிழ் சினிமா மாதிரி ரெயில்வே ஸ்டேசன்ல கிளைமாக்ஸ வச்சுட்டிங்களே...:):)

said...

இன்னும் இன்னும் எழுத முடியும் ரோஷினி உங்களுக்கு...

said...

சரியான படத்தேர்வுகளுக்கு பாராட்டுக்கள்...ஆனா பாவனா படம்தான் போதாம போயிடுச்சு...:(

said...

இவ்வளவு சின்னதா பாவனா படம் போட்டதற்கு ஒரு குட்டு:)

said...

இதுவரை எழுதிய கதைகளில் இது தான் ரொம்ப நல்லா இருந்தது என எனக்கு ஒரு எண்ணம் இருக்கு. அடுத்த கதை இதை விட அழகா இருக்கணும்.

said...

வாழ்த்துக்கள் திவ்யா இன்னுமொரு வெற்றிகரமான தொடர் கொடுத்ததற்கு...

said...

அப்பாடியோவ். சினிமா மாதிரி ரயில்வே ஸ்டேஷன்ல முடிச்சாலும் சந்தோசமா முடிச்சிட்டீங்க. ரொம்ப நன்றி.

Anonymous said...

மிகவும் அருமை திவ்யா

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

Anonymous said...

typical tamil cinema ending..mounaragam mathiri mudichitenga :) but amazing..unga flow was so impressive especially with those pics inbetween...padam patha effect varuthu...neenga pesama screenplay writera poidlam..nalla ezuthareenga...made for movies..

Anonymous said...

Though the end cud be guessed in part 3,you hv dragged the story to its climax in your own style with realistic dialogues & poetic touch!!

Hats off Divya,

think & feel this post is THE BEST among your master piece.


Keep writing Divya:))

Wishing you all the very best to achieve more.

Praveen,
Bangalore.

said...

மிக அருமையான ஒரு தொடர். இறுதி பாகமும் சிறப்பாக இருந்தது.

//ஆசைதானடி உன்மேல் எனக்கு!!!//
கவிதையில் மிக அழகாக கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்.

எப்போதும் போலவே கதைக்கு பொருத்தமான படங்களும், அழகான வசனங்களும் கதையை இன்னும் சிறப்பாக்குகின்றன.

இன்னும் கலக்கலான கதைகளும் கவிதைகளும் எழுத வாழ்த்துக்கள்...!!!
:)

said...

Indha kadhaiya neenga mutrum pottapuram dhaan padikanumnu vechirundhen :)) 4 part readya vechittu padikkum bodhae ivlo BP erudhae. makkal ellam eppadi thaan ivlo naal porumaiya kaathirundhaangalo :)

Azhagana nadaila arumaiya solli irukkeenga :)) Kavithaigal ellamae toppu :)

Migavum rasithen :)

said...

படிச்சிட்டு ரொம்ப ஃபீல் பண்ண வைச்சுட்டிங்களே மாஸ்டர்..அட சந்தோஷமாத்தான்..:)

said...

//கடவுளே...என் மீராவிற்கு உயிர் பிச்சை கொடு,
அவளை என்னிடம் திருப்பி கொடு ப்ளீஸ்,
எனக்கு என் மீரா வேணும்
என்னை விட்டு அவளை பிரிச்சிடாதே!'

நான்.........நானா........நேற்று 'சீ தொடாதே' என்று அருவருத்த நானா இன்று 'என் மீரா' என சொல்கிறேன்???

மீரா உயிருக்காக போராடிய அந்த இரண்டு நாட்களில் தான் எனக்குள் மீரா பதிந்திருப்பதை உணர்ந்தேன்.//

அவனை அறியாமலே அவனுள் ஆக்கமித்த அவளை அவன் உணர்ந்துக்கொள்ளும் உணர்வை அருமையா சொல்லியிருக்கிங்க:)

said...

//ஏன்னா, கார் விபத்துல அவருக்கு அடிபட்டபோ சுயநினைவை மட்டும் இல்லை..........ஒரு தகப்பனாகும் தகுதியையும் அவர் இழந்துட்டார், அதெல்லாம் உங்களுக்கு அவர் பண்ண துரோகம்னு புலம்பிட்டே இருந்தார். இதெல்லாம் தெரிஞ்சும் நான் மாமாவை பிடிவாதமா கட்டிப்பேன்னு சொன்னதாலதான் சம்மதிச்சார். போன மாதம் தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு, இப்போ......உங்களை......பார்த்தா........."
//
கதையில யாருக்குமே மனவருத்தம் இல்லாம முடிச்சுட்டிங்களே.. சூப்பர்..
குழந்தைக்கும்.. அவளின் காதலனுக்கும் கூட நல்ல எதிர்காலத்தை கொடுத்த அற்புதமான கற்பனைத்திறன்:)

said...

கதையில நிறைய குழப்பங்களையும் சிக்கல்களையும் உண்டாக்குவது மட்டுமில்லை திறமை.. அதை எப்படி எந்த இழையும் அறுபடாமல் பிரிப்பது என்பதில் இருக்கு:) அந்த கலை உங்களுக்கு கைவந்திருக்கு மாஸ்டர். வாழ்த்துக்கள்.

said...

//
ஆசைதானடி உன்மேல் எனக்கு!

அப்புறம் எதற்கு என்மனதில்
தயக்கம் சாக்கு போக்கு
எல்லாம்??

கற்பு தியாகம் என்று சந்ததி கடந்த
விஷ்யங்களுக்காகவா...
நம் உறவின் மீது இரங்கல் தீர்மானம்
இயற்றினாய்??

என்னை முழுவதுமாய் அறுவடைச் செய்தவளே!
அதெப்படி என்னை அம்போவென
விட்டுச் செல்ல மனமுவந்தாய்??

வாழ்க்கையை அடகு வைத்தா...
உன் காதலின் சின்னத்தை
மீட்டு வந்தாய்???

தொடங்கிய நம் பந்தத்தை
தொடர
எனக்கொரு சந்தர்ப்பம் தந்து
தலையசைப்பாயா??

முடிவுரை எழுதியபின்
முற்றுப் புள்ளி வைக்க
முடிவான முடிவு செய்தாயோ??

சேராத உன் காதலுக்காக
சேர்த்து வைத்த என் காதலை
செலவழிக்க மறுக்காதே!!

ஆசைதானடி உன்மேல் எனக்கு!!!//

அவ்வ்வ்வ்வ்..... கவிதையிலும் பொளந்து கட்டறிங்களே:))

said...

//என்று அவள் பையை திறப்பது போல் குனிந்தேன்.

"ஸாரிங்க......உங்க......key chain......அதைதான்.....ரொம்ப ஸாரி, இந்தாங்க.......உங்க key chain"

"key chain மட்டும்தான் .........என்கிட்ட இருந்து எடுத்துட்டு போறியா மீரா??"

"....."

"என்னையும்.....சேர்த்து......திருடிட்டு........"

சொல்லி முடிப்பதற்குள் 'என் மீரா' கண்ணீரோடு என் மார்பில் சாய்ந்திருந்தாள்!!//

என்னை ரொம்ப கவந்த ரொமாட்டிக்கான கிளைமாம்ஸ்... படம் பார்த்த உணர்வு. ரொம்பவே ரசிச்சேன். வாழ்க எங்க திவ்யா மாஸ்டர்.:)

said...

romba azhagana ezhuthu nadai... super divya

said...

யம்மாடி ஊர்ஸ்... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்... கதைக்கு பொருத்தமா படம் போடறிங்களா ? இல்லை படத்துக்கு பொருத்தமா கதை எழுதறிங்களா? என்னமா பொருந்துது... கலக்கல்... வாழ்த்துக்கள் ஊர்ஸ்... ஊருக்கு வந்ததும் ஒரு பாராட்டு விழா நடத்திடலாம்.:))

said...

ரொம்ப நல்லா இருந்தது... கவிதை??? கலக்கலா இருக்கு.

said...

// SanJai said...

யம்மாடி ஊர்ஸ்... //
என்னது ஊர்ஸ்சா? ஏதோ ஊர்மிளா,ஊர்வசிய கூப்பிட மாதிரில்ல இருக்கு?:P

அதென்ன ஊர்ஸ்,சிட்டீஸ்,கிராமஸ்?
புரியல.. தயசு செய்து விளக்கவும்..:P (நன்றி:TBCD )

said...

////ரசிகன் said...
// SanJai said...

யம்மாடி ஊர்ஸ்... //
என்னது ஊர்ஸ்சா? ஏதோ ஊர்மிளா,ஊர்வசிய கூப்பிட மாதிரில்ல இருக்கு?:P

அதென்ன ஊர்ஸ்,சிட்டீஸ்,கிராமஸ்?
புரியல.. தயசு செய்து விளக்கவும்..:P (நன்றி:TBCD )////


மாம்ஸ் இதெல்லாம் கோயம்புத்தூர் குசும்பு. கண்டுக்க கூடாது.

said...

nalla kadhai, azhagana mudivu. superaa ezhudhiyum irukeenga.!
hm..padangalum kadaikkku yetha maari choose pani irukeenga.

said...

/தாய்மை தந்த கர்வமா?
நினைத்தபடி குழந்தையை பெற்றெடுத்த மன நிறைவா??
தனித்து வாழ எழுந்த துணிச்சலா???
வாழ்க்கையில் ஏமாற்றமும் இழப்பும் கற்றுத்தந்த முதிர்ச்சியா????/

நல்ல வரிகள்

said...

மீண்டும் அழகான ஒரு கவிதையான கதை..படங்கள் மெருகு சேர்ப்பது இன்னுமொரு அழகு..வாழ்த்துகள் திவ்யா..

Anonymous said...

Really nice divya... :)

said...

superb story,
excellent narration with gr8 dialogues and poems,
apt snaps...
sollite polaam... chance-ae illa.. really liked this story than others....

nalla vela railway platform-la pora vara crowd-a ellam thalli vittutu padikkatula urundu perandu trainoda ella compartmentum thedi kadesiya TTR green signal kaamichu, poga mela pora maathiri oru shot eduthuttu train cycle speed-la move panra maathiri kaati hero PT Usha maathiri odi poi train erala :)

said...

நான்கு பகுதிகளையும் படித்து முடித்து விட்டேன்.
உங்களின் முந்தைய கதைகளைப் போலவே இதுவும் அருமையாக இருந்தது.

கவித்துவமான முடிவு.

விஷ்வா, மீரா, ஸ்ரீதர், செல்வி அனைவரும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாகவே இருந்தது இன்னும் சிறப்பு.

வாழ்த்துக்கள்.

said...

சொல்ல மறந்து விட்டேன்.

கவிதையும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாரு பதிவேற்றிய புகைபடங்களும் அருமை.

said...

மிக நேர்தியான எழுதுக்கள். வாழ்த்துகள் திவ்யா.
//என்னுடன் 7 மாதம் ஒரே வீட்டில் தங்கி இருந்த நண்பனின் பிரிவு தரும் வலியா, இல்லை......நான் தாலி கட்டிய மனைவி மீராவின் உயிர் போகின்றதே என்ற வேதனையா??......எதுவென்று புரியவில்லை எனக்கு....ஒன்று மட்டும் புரிந்தது, ....எனக்கு என் மீரா வேண்டும்!!//

மீராவிர்கும் விஷ்வனாதனுக்கும் மதியில் இருக்கும் உறவை மிக அழகாக உனர்த்தி உள்ளிற்கள்.

Anonymous said...

romba azagana yazuithu...

aruumai... Divya..

Karthikeyan

said...

கதையும், படமும், கதையின் முடிவும் மிகவும் நெகிழ்ச்சியாகவும் மிகிழ்ச்சியாகவும் இருந்தது...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

said...

//"ஹும் சரி.......அங்கே போய்ட்டு??"

"அங்க......அவங்க வாரிசை ஒப்படைக்க போறேன்"

தொண்டையில் ஏற்பட்ட அடைப்பை அடக்கிக்கொண்டாள் மீரா.

"ஹும்.."
//

இந்த வரிகளுக்காக வேண்டி மட்டுமே உங்களுக் “வசனகர்த்தா” பட்டம் கொடுக்கலாம்

said...

//"இவர் என் ஹஸ்பெண்ட்"

முதல் முறையாக எனக்குள் ஒரு shock wave ....... மீரா என்னை தன் கணவன் என்று அறிமுகம் செய்ததின் தாக்கம்!!!
//
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் செட்டிமென்ம் ரெம்பவே தூக்கலாக உள்ளது இந்த வரிகளில்.

said...

//ஆசைதானடி உன்மேல் எனக்கு! //

கதைக்குள் கவிதை அய்யோ.... ரெம்ப சூப்பர்

said...

கவிதாயினி திவ்யா அவர்களே!
கவிதையிலேயே ஒரு கதை எழுதுங்களேன் எங்களுக்காக....

said...

//
இந்த key chain யை என் கை விரலில் சுற்றிக்கொண்டிருப்பது என் பழக்கம், அதுவும் இந்த key chain எனக்கு மிகவும் பிடித்தமானது, பல வருடங்களாக என் கைகளில் விளையாடிக்கொண்டிருப்பது என ஒரு நாள் பேச்சு வாக்கில் மீராவிடம் கூறியது நினைவுக்கு வந்தது.
//

இந்த வரிகளைப் படித்ததும் முதல் பாகங்களில் உள்ள புகைப்படங்களைத் திருப்பிப் பார்க்கத் தோன்றியது.
கீ செயினை கையில் வைத்திருப்பதுபோல் சேரனின் படம் இருக்குமோ என்று.

said...

புத்தகங்களுக்கும், சினிமாவுக்கும் கதை எழுதுங்கள் நிச்சயமாக பிரகாசமான வாய்ப்புகள் உண்டு.
ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளர் & வசனகர்த்தாவை திரையுலகம் கண்டுபிடிக்கத் தவறியுள்ளது.

said...

உங்கள் கதையில் வரிக்கு வரி குறிப்பிட்டு வாழ்த்துகள் தெரிவிக்கலாம்.
அவ்வளவு அருமை.
மீண்டும் ஒருமுறை முழு பாகத்தையும் முதலிலிருந்து படித்தேன்.
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அழகிய வரிகள் அவை.
குறைவாகவே எனினும்
தொடர்ந்து எழுதுங்கள்.

என்னும் உங்கள் ரசிகனாய்
புகழன்

Anonymous said...

****தாய்மை தந்த கர்வமா?
நினைத்தபடி குழந்தையை பெற்றெடுத்த மன நிறைவா??
தனித்து வாழ எழுந்த துணிச்சலா???
வாழ்க்கையில் ஏமாற்றமும் இழப்பும் கற்றுத்தந்த முதிர்ச்சியா????*****


இந்த வரிகள் மிகவும் அருமை திவ்யா,

ஏமாற்றமும், இழப்பும் தொடர்ந்து வாழ்க்கையை சந்திக்க ஒருவித முதிர்ச்சியான மனபோக்கை ஏற்படுத்தும், அதனை நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விதம் மிக மிக அருமை.

Anonymous said...

தன் மணவாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாரா நிகழ்வுகளை ஒரு ஆண் எப்படி கையாள்கிறான், அவனது மன உளைச்சல்கள், உணர்ச்சிகள்......மனப்போராட்டங்கள் அத்தனையையும் விஷ்வா கதாபாத்திரத்தில் மிக தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், உங்கள் எழுத்து திறனை கண்டு வியக்கிறேன்!!

ஒரு ஆணின் கோணத்திலிருந்து எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கும் விதம் பாராட்டத்தக்கது.

தொடர்ந்து பல படைப்புகள் படைத்திட மனதார வாழ்த்துகிறேன் திவ்யா.

Anonymous said...

'ஆசைதானடி உன்மேல் எனக்கு'......கவிதை வரிகள் அற்புதம்!!

கதாசிரியராக மாத்திரமல்ல, ஒரு கவிஞராகும் திறனும் உங்களுக்குள் இருக்கிறது, முயன்றால் இன்னும் அழகான கவிதைகள் படைக்கலாம் திவ்யா.

Anonymous said...

பொருத்தமான படதேர்வுகள் எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது திவ்யா?

கதைக்காக படங்களா?? அல்லது படங்களுக்கு தகுந்தாற்போல் கதையா?? வியப்பில் ஆழ்த்துகிறது!!

திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏறப்டுத்துகின்றன பதிவிலுள்ள படங்கள்.

சிரத்தை எடுத்து கதைக்கேறாற்போல் படங்களை தேர்ந்தெடுக்கும் உங்கள் பொறுமைக்கு என் பாராட்டுக்கள்.

said...

திவ்யா, கதையின் கரு பிடிச்சிருக்கு.அதுவும் 4ம் பகுதியின் கடைசி அருமை. பாவனா மாதிரி ஒரு படம் போட்டு டீல்ல விட்டுட்டீங்களே :(

said...

\\
நவீன் ப்ரகாஷ் said...
கவிதையான முடிவு திவ்யா..
மிகவும் ரசித்துப் படித்தேன்...
:))) வாழ்த்துக்கள் !!\\


ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நவீன்!

said...

\\\ நவீன் ப்ரகாஷ் said...
//எதுவென்று புரியவில்லை எனக்கு....ஒன்று மட்டும் புரிந்தது, ....எனக்கு என் மீரா வேண்டும்!! //

சில உணர்வுகளுக்கு அர்த்தம் கிடையாது
இல்லையா... திவ்யா... படிக்கும் போது
அது நன்றாக உணரப்படுகிறது...:)))
எழுத்தாண்மை அதிகமாகிக் கொண்டே
போகி்றது திவ்யாவுக்கு... என்ன காரணம்,..? ;)))\\

அர்த்தமற்ற உணர்வுகள் நிறைந்தது தான் வாழ்க்கை!

எழுத்தாண்மைக்கு காரணம் உங்களை போன்ற நண்பர்கள் தரும் ஊக்கமும் உற்சாகமும் தான் நவீன்.

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//என்னை முழுவதுமாய் அறுவடைச் செய்தவளே!
அதெப்படி என்னை அம்போவென
விட்டுச் செல்ல மனமுவந்தாய்??

வாழ்க்கையை அடகு வைத்தா...
உன் காதலின் சின்னத்தை
மீட்டு வந்தாய்??? //

:))) கவிதை அழகு.... எப்படி இப்படி கதை கவிதை என கலக்குறீங்க ..?? :))))) simply cute !!\

கவிதையை ஒரு கவிஞரே பாராட்டியது பெருமைபட வைத்தது, நன்றி கவிஞரே!!

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
மிக அழகான தொடர்.. அழகான பொருத்தமான படங்களுடன்... திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வினைத் தருகின்றன் திவ்யா.... மேலும் மேலும் எழுத்தை ஆழ வாழ்த்துக்கள்... :))))\\

உங்கள் கருத்துக்களும் வாழ்த்துக்களும் மனநிறைவை கொடுத்தது, நன்றி :))

said...

\\Ramya Ramani said...
நல்ல முடிவு! கவித்துவமான முடிவு! சில நேரங்களில் சில விஷயங்களை நாம அமைதியாக இருப்பது கூட சில அர்த்தங்கள் வெளிப்படுத்தும்! சந்தோஷமான முடிவு படிக்க நல்லா இருக்கு!\\

வாங்க ரம்யா,

தொடர்ந்து இந்த தொடர்கதை ஆவலுடன் படித்து உங்கள் கருத்துக்களை பரிமாறி உற்சாகமளித்தீர்கள், மிக்க நன்றி ரம்யா!!

said...

\\ கப்பி பய said...
ரயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸா..தமிழ் சினிமா செண்டிமெண்ட் படி படமா எடுத்தா சில்வர் ஜூப்ளிதான் :)))

மூன்றாவது பாகத்திலேயே இப்படிததான் நடக்குமென யூகிக்க முடிந்தாலும் விறுவிறுப்பான நடையில் அழகான கதை!! வாழ்த்துக்கள்!!\



வாங்க விமர்சக வித்தகரே!!

நான்கு பகுதிகளையும் பொறுமையுடன் ஒரே சமயத்தில் படித்து, கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் கூறியதற்க்கு நன்றிகள் பல!!!

said...

\\ புகழன் said...
மீரா விஷ்வாவுடன் சேர்வாள் என்று நான் ஏற்கெனவே எதிர்பார்த்த முடிவுதான்.
ஆனால் அது உங்கள் கவிதை வரிகளில் கலக்கலாக வரும் என்று எதிர்பார்க்க வில்லை.\\

உங்கள் எதிர்பார்பு நிறைவேறியதில் மகிழ்ச்சிதானே??




\\ரெம்பவே விறுவிறுப்பான தொடர் சரியான விதத்தில் சரியான அளவில் எழுதப்பட்டு முடிக்கப்பட்டிருந்தது.\

ஒவ்வொரு பகுதியிலும் உங்கள் கருத்துக்களை விரிவாக வெளிப்படுத்தினீர்கள் புகழன்....நன்றி!!



\\தொடர் முழுவதும் இணைத்திருந்த படங்கள் அருமை.

பாவனா படம் எங்கிருந்துதான் எடுக்கிறீர்களோ?
கொள்ளை அழகு. எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள். எனக்கு பாவனாவை ரெம்பவே பிடிக்கும்.\\


படங்களை google search ல் தான் தேடினேன் புகழன்!!

படங்களுக்கு மேலேயே அப்படங்கள் இருக்கும் வலைதளத்தின் பெயர் உள்ளது, கவனித்தீர்களா???



\\இன்னும் நிறைய சொல்லனும்னு தோனுது. ஆனா....
வார்த்தைகள் வரவில்லை.
கொஞ்சம் கொஞ்சமா நேரம் கிடைக்கும் போது யோசி்ச்சு யோசிச்சு சொல்லுறேன்.
இப்போதைக்கு இவ்வளவுதான்.

இப்படிக்கு
மனதோடு மனதாய்...
உங்கள் புகழன்\\


அவசியம் உங்களுக்கு நேரம் கிடைக்கையில் பின்னூட்டமிடுங்கள், நன்றி புகழன்!!

said...

\\ நிஜமா நல்லவன் said...
யூகிக்க கூடிய முடிவாக இருந்தாலும் முடித்திருந்த விதம் அருமை. கலக்கலான கவிதைகள். படிப்பவர்களும் கூடவே பயணிப்பது போல் கதை சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள் மாஸ்டர்.\\


வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நல்லவன்......நிஜமா நல்லவன்!!

said...

\ நிஜமா நல்லவன் said...
//ஆனா.........
நீ என் குழந்தைடா...உன்னை விட்டு தரமாட்டேன்டா '//


படிக்கும்போது இன்னதென்று சொல்ல இயலாதொரு நெகிழ்ச்சி.\\



உங்கள் நெகிழ்ச்சியான உணர்வை பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொண்டவிதம் அழகு!! நன்றி!!

said...

\\.ரிஷான் ஷெரீப் said...
அப்பாடா...கடைசியில அவங்கள ஒண்ணு சேர்த்துட்டீங்க..போன பதிவுல மீராவுக்கு என்ன ஆச்சோன்னு பயந்துட்டேன்...

ஆனா,ஒரு சின்ன இடறல் எனக்கு..
ஓரு தாயா எப்படிங்க அவ்வளவு லேசாக் குழந்தையைத் தூக்கிக் கொடுத்துட முடியும்?என்னதான் அது அவங்க காதலனோட குழந்தைன்னாலும்...?

உங்க எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு.நல்ல சினிமாவா எடுக்கலாம்.பொருத்தமான புகைப்படங்கள்.

வாழ்த்துக்கள்.
அடுத்த தொடர் எப்போ?\\


வாங்க கதாசிரியர் ரிஷான்!!

ஒரு தாயா தன் குழந்தையை அப்படி கொடுத்துவிடுவது அவ்வளவு எளிதல்லதான்.....எனினும் மீரா குழந்தையை ->அந்த குடும்பத்தின் ஒரே வாரிசை ஒப்படைக்க நினைத்தது , ஸ்ரீதர் மீண்டும் பிழைப்பானா இல்லையா என தெரியாதபோது,

அவன் பிழைத்துக்கொண்டான் என அறிந்தாலும், அவன் ஒரு தகப்பனாகும் தகுதியை இழந்து விட்டிருக்கிறான் , மேலும் அக்குழந்தைக்கு தாயாக அங்கு செல்வியை சந்தித்தபின், குழந்தையை கொடுக்கும் மனப்பக்குவத்தை அடைகிறாள்.

எனினும் இது ஒரு கற்பனை மட்டுமே, நிஜத்தில் அவ்வாறு குழந்தையை தூக்கி கொடுக்க இயலுமா என்பது கேள்விக்குறியே!!

உங்கள் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்ரி ரிஷான்!

said...

\\கோபிநாத் said...
திவ்யா...வாழ்த்துக்கள் ;))

நீங்கள் கதை சொல்லியவிதம் ரசிக்கும் படியாகவும், அழகாகவும் இருந்தது ;)

புகைப்படங்களும், வசனங்களும் மிக எளிமையாகவும் மனதில் பதியும் வித்த்திலும் எழுதிய இருக்கிங்க ;)

வாழ்த்துக்கள் ;)\\

வாங்க கோபி,

தொடர்ந்து நீங்கள் எனக்கு அளித்துவரும் உற்சாகத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல!!!

said...

\\ ஜி said...
:))))

கடைசி பகுதில எக்கச்சக்க காட்சிகள் வந்த மாதிரி ஒரு ஃபீலிங்....\\

அப்படியா ஜி,

கதாசிரியர் ஜி சொன்னா கரெக்டாதான் இருக்கும்,

உங்கள் கருத்தினை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி!!

said...

\\Thamizhmaangani said...
ஹாலோ திவ்ஸ், நல்லாருக்கு, சூப்பர்ர், அருமை, wonderful இப்படி சொல்லி சொல்லி bore அடிச்சு போச்சு. இதுக்கு மேலே வேற எதாச்சு வார்த்தை இருந்தா, கண்டுபிடிச்சு சொல்லுறேன். ஆனா, இப்போதைக்கு சொல்ல வேண்டியது,\\\

ஹாய் காயத்ரி!!

பாராட்ட வார்த்தை கண்டுப்பிடிக்கிற அளவிற்கெல்லாம் நான் எழுதிடல , சும்மா ஓட்டாதீங்க மேடம்:)))


\\\கதை ஓட்டம் சூப்ப்பர்ர்ர்ர்ர்ர்!! படங்கள் அருமை!!! மாமா பொண்ணா பாவனாவை போட்டது wonderful!! இந்த மாதிரி கதையில உண்மையில ஸ்ரீகாந்த் நடிச்சிருந்தால் ரொம்ப முன்னேறி இருப்பார்:)))\\

ஸ்ரீகாந்துக்கு ஐடியா கொடுப்பீங்க போலிருக்கு:-)

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி காயத்ரி!!

said...

\\கதை இப்படிதான் போகும் என்று யூகிக்க முடிந்தது. ஆனா காட்சிகளின் விறுவிறுப்பும், மீராவின் reactionகளும், வாசனங்களும் கதையை அழகுபடுத்திவிட்டன.

//என்னுடன் 7 மாதம் ஒரே வீட்டில் தங்கி இருந்த நண்பனின் பிரிவு தரும் வலியா, இல்லை......நான் தாலி கட்டிய மனைவி மீராவின் உயிர் போகின்றதே என்ற வேதனையா??......//

அழகான வரிகள். மனதில் எழும் பல கேள்விகளை அடையாளம் கண்டு கதையில் இணைத்த உங்களுக்கு பாராட்டுகள்!

//தாய்மை தந்த கர்வமா?//

சூப்பர்ர்ர்!!!

//நீ என் குழந்தைடா...உன்னை விட்டு தரமாட்டேன்டா '//

எப்படி திவ்ஸ், இப்படிலாம் யோசிக்கிறீங்க!! simply superbb.\\


காயத்ரி நீங்கள் ரசித்த வரிகளை குறிப்பிட்டு பாராட்டியதற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!

said...

\\Thamizhmaangani said...
// ரெயில்வே ஸ்டேஷன் போகவேண்டும் எனவும் taxi driver யிடம் கூறினாள் மீரா.//

மௌனம் ராகம் படத்தை ஞாபகப்படுத்தியது. :)))

கிளைமெக்ஸை ரயில் stationலில் வைத்தது கொஞ்சம் குஷி படத்தையும் ஞாபகப்படுத்தியது. இருந்தாலும், 'திவ்யாவின் magical touch' ரொம்ப யதார்த்தம்! வாழ்த்துகள் திவ்ஸ்!\\

அட!மெஜிக்கல் டச் ஆ?
வித்தியாசமாக பாராட்டியிருக்கிறீர்கள் ,நன்றி நன்றி!!

said...

\\sathish said...
மிகவும் அருமை திவ்யா :)

மௌனங்களின் ஆழங்களில் கதை அழகு!

//முடிவுரை எழுதியபின்
முற்றுப் புள்ளி வைக்க
முடிவான முடிவு செய்தாயோ??

சேராத உன் காதலுக்காக
சேர்த்து வைத்த என் காதலை
செலவழிக்க மறுக்காதே!!//

இரசித்தேன்!

பொருத்தமான படங்கள் போட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது!!!

keep it up!!!\\

உங்கள் ரசிப்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சதீஷ்!!

said...

\\Sen22 said...
அருமையான தொடர்கதை...
நான்கு பாகங்களும்
திரைப்படம் பார்ப்பதைப்
போன்றே இருந்தது...

இடைஇடையே இருந்த கவிதைகளும் அருமை...

//இன்னும் நிறைய சொல்லனும்னு தோனுது. ஆனா....
வார்த்தைகள் வரவில்லை.//

Repeattaiiiii...


Senthil,
Bangalore\

வாங்க செந்தில்,

உங்கள் மனம்திறந்த பாராட்டிற்கு நன்றிகள் பல!!

said...

\\CVR said...
CUTE!!!
Really loved this one!
Matured and quality narration!!

Great work!
Keep it up! B-)\\

உற்சாகமளிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சிவிஆர்!!

said...

மிக அருமை !! திவ்யா
photos are very nice and it bings a wide screen before me while reading the story . great work ..

Anonymous said...

கதைகளாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். சமூக சிந்தனையோடு ஏதாவது எழுதுங்களேன்.

said...

\\தமிழன்... said...
///ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் மீரா, பசியினால் அழும் அவள் குழந்தை, தவிப்புடன் நான்..........///

இதனைப்படிக்கும் வலையுலகம் கண்ணீரோடு...\\

:((((

said...

\\ தமிழன்... said...
///வீட்டிற்கு வந்தால்....மீரா அடிக்கடி முனுமுனுக்கும் பாட்டின் எதிரொலி, அவளின் ரோஜா செடி.........மேஜையின் மேலிருந்த அவளது கைக்கடிகாரம், wash basin கண்ணாடியில் ஒட்டியிருந்த அவள் நெத்தி ஸ்டிக்கர் பொட்டு, soap dish ல் அவள் உபயோகிக்கும் 'Johnsons baby soap' ......////

சின்ன சின்னதாய் காதலின் அடையாளங்கள்...

(அட நம்ம சோப்பு:)\\

johnson baby soap தான் உங்க soap ah?? gud gud!!!

said...

\\தமிழன்... said...
///??......எதுவென்று புரியவில்லை எனக்கு....ஒன்று மட்டும் புரிந்தது, ....எனக்கு என் மீரா வேண்டும்!!///

இந்த வரிகளை இழுத முதல் சில வரிகள் எழுதியிருக்கிறீர்களே அதுதான் இந்த வரிகளுக்குரிய பலம் திவ்யா

உங்கள் திறமைக்கு சான்று...\\

இவ்வளவு கூர்மையாக கவனித்து நீங்கள் பாராட்டியிருப்பது கண்டு வியந்தேன்......மிக்க நன்றி தமிழன்!!

said...

\\தமிழன்... said...
///கற்பு தியாகம் என்று சந்ததி கடந்த
விஷ்யங்களுக்காகவா...
நம் உறவின் மீது இரங்கல் தீர்மானம்
இயற்றினாய்??///

நீங்கள் இப்படிக்கூட எழுதுவிங்களா...திவ்யா...\\\


ஏன்....ஏதும் தவறுதலாக எழுதிவிட்டேனா?? இப்படி ஒரு கேள்வி........

said...

\ Syam said...
//ரயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸா..தமிழ் சினிமா செண்டிமெண்ட் படி படமா எடுத்தா சில்வர் ஜூப்ளிதான் :)))//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேடேடேய்ய்ய்ய்...
:-))\

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய் போட்ட நாட்டாமைக்கு ஒரு ....சல்யூட்ட்ட்ட்டேடேய்ய்ய்ய்ய்:))

said...

\ Syam said...
விருவிருப்பா போச்சு....நல்ல முடிவு...மொத்தத்துல சூப்பர்...\\


தொடர்ந்து நான்கு பகுதிகளை படித்து கருத்துக் கூறி உற்சாகப்படுத்தினீங்க ஷ்யாம், ரொம்ப நன்றி!!!

said...

\\தமிழன்... said...
///சொல்லி முடிப்பதற்குள் 'என் மீரா' கண்ணீரோடு என் மார்பில் சாய்ந்திருந்தாள்!!

முற்றும்...!!///

முடிஞ்சிடுச்சா கடைசி பகுதி செம ஸ்பீடு...\\

அப்படியா.....???

இதற்கு மேலும் கதையை நகர்த்தி எல்லாரையும் கஷ்டபடுத்த வேண்டாம்னு.....முடிச்சாச்சு!

said...

\தமிழன்... said...
தமிழ் சினிமா மாதிரி ரெயில்வே ஸ்டேசன்ல கிளைமாக்ஸ வச்சுட்டிங்களே...:):)\\

ஆமாம் தமிழன்....location வேற யோசிச்சாலும் அவ்வளவு திருப்தியா இல்ல......ஸோ சினிமாத்தனமா கிளைமாக்ஸ் லொகேஷன் வைச்சாச்சு!!

said...

\\தமிழன்... said...
இன்னும் இன்னும் எழுத முடியும் ரோஷினி உங்களுக்கு...\\

அப்படியா??

முயல்கிறேன் தமிழன்:))

said...

\தமிழன்... said...
சரியான படத்தேர்வுகளுக்கு பாராட்டுக்கள்...ஆனா பாவனா படம்தான் போதாம போயிடுச்சு...:(\\

நன்றி, நன்றி:))

said...

\\தமிழன்... said...
இவ்வளவு சின்னதா பாவனா படம் போட்டதற்கு ஒரு குட்டு:)\\

அட.....:))

said...

\ஸ்ரீ said...
இதுவரை எழுதிய கதைகளில் இது தான் ரொம்ப நல்லா இருந்தது என எனக்கு ஒரு எண்ணம் இருக்கு. அடுத்த கதை இதை விட அழகா இருக்கணும்.\

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ஸ்ரீ!!

said...

\\தமிழன்... said...
வாழ்த்துக்கள் திவ்யா இன்னுமொரு வெற்றிகரமான தொடர் கொடுத்ததற்கு...\\

வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழன்!!

said...

\\G.Ragavan said...
அப்பாடியோவ். சினிமா மாதிரி ரயில்வே ஸ்டேஷன்ல முடிச்சாலும் சந்தோசமா முடிச்சிட்டீங்க. ரொம்ப நன்றி.\\

பொறுமையாக நான்கு பகுதிகளையும் படித்து விமர்சித்த உங்களுக்கு தான் நன்றி சொல்லனும் ராகவன்:))

said...

\\KRP said...
மிகவும் அருமை திவ்யா

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/\\

வாங்க KRP,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

said...

\\Anonymous said...
typical tamil cinema ending..mounaragam mathiri mudichitenga :) but amazing..unga flow was so impressive especially with those pics inbetween...padam patha effect varuthu...neenga pesama screenplay writera poidlam..nalla ezuthareenga...made for movies..\\

வாங்க அனானி,

உங்கள் விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி!!

said...

\\Anonymous said...
Though the end cud be guessed in part 3,you hv dragged the story to its climax in your own style with realistic dialogues & poetic touch!!

Hats off Divya,

think & feel this post is THE BEST among your master piece.


Keep writing Divya:))

Wishing you all the very best to achieve more.

Praveen,
Bangalore.\\

வாங்க ப்ரவீன்,
தொடர்ந்து நீங்கள் கொடுத்து வரும் உற்சாக பின்னூட்டங்களுக்கு ரொம்ப நன்றி!!

said...

\\நிமல்/NiMaL said...
மிக அருமையான ஒரு தொடர். இறுதி பாகமும் சிறப்பாக இருந்தது.

//ஆசைதானடி உன்மேல் எனக்கு!!!//
கவிதையில் மிக அழகாக கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்.

எப்போதும் போலவே கதைக்கு பொருத்தமான படங்களும், அழகான வசனங்களும் கதையை இன்னும் சிறப்பாக்குகின்றன.

இன்னும் கலக்கலான கதைகளும் கவிதைகளும் எழுத வாழ்த்துக்கள்...!!!
:)\\

ஹாய் நிமல்,

உங்கள் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, மிக்க நன்றி!!

said...

\\G3 said...
Indha kadhaiya neenga mutrum pottapuram dhaan padikanumnu vechirundhen :)) 4 part readya vechittu padikkum bodhae ivlo BP erudhae. makkal ellam eppadi thaan ivlo naal porumaiya kaathirundhaangalo :)

Azhagana nadaila arumaiya solli irukkeenga :)) Kavithaigal ellamae toppu :)

Migavum rasithen :)\\

வாங்க G3,

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பின்னூட்டம் பெற்றதில் மட்டில்லா மகிழ்ச்சி:))

பொறுமையாக நான்கு பாகத்தையும் படித்த உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!


உங்கள் ரசனையை பகிர்ந்துக் கொண்டதிற்கு மிக்க நன்றி!!

said...

\ரசிகன் said...
படிச்சிட்டு ரொம்ப ஃபீல் பண்ண வைச்சுட்டிங்களே மாஸ்டர்..அட சந்தோஷமாத்தான்..:)\\

சந்தோஷமா ஃபீல் பண்ணினா......எனக்கும் சந்தோஷமே:))

said...

\\ரசிகன் said...
//கடவுளே...என் மீராவிற்கு உயிர் பிச்சை கொடு,
அவளை என்னிடம் திருப்பி கொடு ப்ளீஸ்,
எனக்கு என் மீரா வேணும்
என்னை விட்டு அவளை பிரிச்சிடாதே!'

நான்.........நானா........நேற்று 'சீ தொடாதே' என்று அருவருத்த நானா இன்று 'என் மீரா' என சொல்கிறேன்???

மீரா உயிருக்காக போராடிய அந்த இரண்டு நாட்களில் தான் எனக்குள் மீரா பதிந்திருப்பதை உணர்ந்தேன்.//

அவனை அறியாமலே அவனுள் ஆக்கமித்த அவளை அவன் உணர்ந்துக்கொள்ளும் உணர்வை அருமையா சொல்லியிருக்கிங்க:)\\

குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி ரசிகன்:))

said...

\\\ரசிகன் said...
//ஏன்னா, கார் விபத்துல அவருக்கு அடிபட்டபோ சுயநினைவை மட்டும் இல்லை..........ஒரு தகப்பனாகும் தகுதியையும் அவர் இழந்துட்டார், அதெல்லாம் உங்களுக்கு அவர் பண்ண துரோகம்னு புலம்பிட்டே இருந்தார். இதெல்லாம் தெரிஞ்சும் நான் மாமாவை பிடிவாதமா கட்டிப்பேன்னு சொன்னதாலதான் சம்மதிச்சார். போன மாதம் தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு, இப்போ......உங்களை......பார்த்தா........."
//
கதையில யாருக்குமே மனவருத்தம் இல்லாம முடிச்சுட்டிங்களே.. சூப்பர்..
குழந்தைக்கும்.. அவளின் காதலனுக்கும் கூட நல்ல எதிர்காலத்தை கொடுத்த அற்புதமான கற்பனைத்திறன்:)\\

நன்றி ரசிகன்!

said...

\\ரசிகன் said...
கதையில நிறைய குழப்பங்களையும் சிக்கல்களையும் உண்டாக்குவது மட்டுமில்லை திறமை.. அதை எப்படி எந்த இழையும் அறுபடாமல் பிரிப்பது என்பதில் இருக்கு:) அந்த கலை உங்களுக்கு கைவந்திருக்கு மாஸ்டர். வாழ்த்துக்கள்.\\

இவ்வளவு அழகாக விமர்சித்திருக்கும் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் பிடிபடவில்லை:))

said...

@ரசிகன்
\அவ்வ்வ்வ்வ்..... கவிதையிலும் பொளந்து கட்டறிங்களே:))\\

உங்களை விடவா???

said...

\\romba azhagana ezhuthu nadai... super divya\\

வாங்க ரேவதி,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

said...

\\SanJai said...
யம்மாடி ஊர்ஸ்... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்... கதைக்கு பொருத்தமா படம் போடறிங்களா ? இல்லை படத்துக்கு பொருத்தமா கதை எழுதறிங்களா? என்னமா பொருந்துது... கலக்கல்... வாழ்த்துக்கள் ஊர்ஸ்... ஊருக்கு வந்ததும் ஒரு பாராட்டு விழா நடத்திடலாம்.:))\\

பாராட்டு விழா நடத்த போறீங்களா??.......நம்பலாமா??

பொருத்தமான படங்கள் என படங்களையும் குறிப்பிட்டு பாராட்டியதற்கு தாங்க்ஸ்!!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஊர்ஸ்!

said...

\\Udhayakumar said...
ரொம்ப நல்லா இருந்தது... கவிதை??? கலக்கலா இருக்கு.\\

வாங்க உதய்....

ரொம்ப நாள் கழித்து பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க,

அதென்ன கவிதைக்கு அப்புறம் அத்தனி கேள்வி குறி??

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி உதய்!!

said...

திவ்யா...said...

\\தமிழன்... said...
///கற்பு தியாகம் என்று சந்ததி கடந்த
விஷ்யங்களுக்காகவா...
நம் உறவின் மீது இரங்கல் தீர்மானம்
இயற்றினாய்??///

நீங்கள் இப்படிக்கூட எழுதுவிங்களா...திவ்யா...\\\


ஏன்....ஏதும் தவறுதலாக எழுதிவிட்டேனா?? இப்படி ஒரு கேள்வி........///

இல்லை மேடம் கொஞ்சம் வித்தியாசமா திவ்யாவின் நடையிலிருந்து வேறுபட்ட மாதிரி இருந்தது அதனாலதான் கேட்டேன் இதுவே உங்க எழுத்து திறமை மெருகாகி வருவதற்கு நல்ல சான்று...

said...

வாழ்த்துக்கள் இன்னொரு வலைப்பூ தொடங்கினதுக்கு...

said...

ஆமா நேற்றே கேட்கணும்னு நினைச்சேன் சும்மா சும்மால நாங்கள்ளாம் சும்மாவாச்சும் வர முடியாதா...

said...

கதை, கவிதை, படங்கள் என்று கிட்டதட்ட ஒரு திரைக்கதை ரேஞ்சுக்கு எழுதியிருக்கீங்க. இன்னும், க்ளோஸப், மிட் க்ளோஸப், ஜூம் இதெல்லாம்தான் எழுதலை போல.

நல்லதொரு குடும்ப படம் பார்த்தது போல இருந்தது.

அது சரி... குழந்தையை அவ்வளவு சீக்கிரம் தூக்கி கொடுத்திடுவாங்களா என்ன? கொஞ்சம் 'பத்தாம் பசலி'த்தனமா இருக்கே.

said...

\\ ரசிகன் said...
// SanJai said...

யம்மாடி ஊர்ஸ்... //
என்னது ஊர்ஸ்சா? ஏதோ ஊர்மிளா,ஊர்வசிய கூப்பிட மாதிரில்ல இருக்கு?:P

அதென்ன ஊர்ஸ்,சிட்டீஸ்,கிராமஸ்?
புரியல.. தயசு செய்து விளக்கவும்..:P (நன்றி:TBCD )\\

என்ன இது சின்ன புள்ளைத்தனமா இதுக்கெல்லாம் விளக்கம் கேட்டுக்கிட்டு??

ஒரே ஊருன்றதால 'ஊர்ஸ்' ன்னு சொல்லியிருக்கார் சஞ்சய்,
விளக்கம் போதுமா ரசிகன்??

said...

\\ நிஜமா நல்லவன் said...
////ரசிகன் said...
// SanJai said...

யம்மாடி ஊர்ஸ்... //
என்னது ஊர்ஸ்சா? ஏதோ ஊர்மிளா,ஊர்வசிய கூப்பிட மாதிரில்ல இருக்கு?:P

அதென்ன ஊர்ஸ்,சிட்டீஸ்,கிராமஸ்?
புரியல.. தயசு செய்து விளக்கவும்..:P (நன்றி:TBCD )////


மாம்ஸ் இதெல்லாம் கோயம்புத்தூர் குசும்பு. கண்டுக்க கூடாது.\\

நல்லவன்.....நிஜம்மா நல்லவன்!!
உங்களுக்கு நல்லா புரியுது எங்க ஊர் குசும்பு, பாவம் ரசிகனுக்கு தான் புரியவில்லை போலிருக்கிறது:)))

said...

\\Kittu said...
nalla kadhai, azhagana mudivu. superaa ezhudhiyum irukeenga.!
hm..padangalum kadaikkku yetha maari choose pani irukeenga.\\

வாங்க கிட்டு மாமா,

உங்கள் பாராட்டிற்க்கு நன்றி....மிக்க நன்றி!!

said...

\\ திகழ்மிளிர் said...
/தாய்மை தந்த கர்வமா?
நினைத்தபடி குழந்தையை பெற்றெடுத்த மன நிறைவா??
தனித்து வாழ எழுந்த துணிச்சலா???
வாழ்க்கையில் ஏமாற்றமும் இழப்பும் கற்றுத்தந்த முதிர்ச்சியா????/

நல்ல வரிகள்\\

உங்கள் ரசிப்பிற்கு நன்றி திகழ்மிளிர்!!!

said...

\\\பாச மலர் said...
மீண்டும் அழகான ஒரு கவிதையான கதை..படங்கள் மெருகு சேர்ப்பது இன்னுமொரு அழகு..வாழ்த்துகள் திவ்யா..\

வாங்க பாசமலர்!!
உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க:))

said...

\\ இனியவள் புனிதா said...
Really nice divya... :)\\

வாங்க புனிதா,

உங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!

said...

\\Arunkumar said...
superb story,
excellent narration with gr8 dialogues and poems,
apt snaps...
sollite polaam... chance-ae illa.. really liked this story than others.... \\

வாங்க அருண் குமார்,

உங்கள் விரிவான பாராட்டுதலுக்கு நன்றி!!

\\nalla vela railway platform-la pora vara crowd-a ellam thalli vittutu padikkatula urundu perandu trainoda ella compartmentum thedi kadesiya TTR green signal kaamichu, poga mela pora maathiri oru shot eduthuttu train cycle speed-la move panra maathiri kaati hero PT Usha maathiri odi poi train erala :)\\

ROTFL:))

நிறைய தமிழ் சினிமா பார்ப்பீங்க போலிருக்கு:))

said...

\\SathyaPriyan said...
நான்கு பகுதிகளையும் படித்து முடித்து விட்டேன்.
உங்களின் முந்தைய கதைகளைப் போலவே இதுவும் அருமையாக இருந்தது.

கவித்துவமான முடிவு.

விஷ்வா, மீரா, ஸ்ரீதர், செல்வி அனைவரும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாகவே இருந்தது இன்னும் சிறப்பு.

வாழ்த்துக்கள்.\

சத்யா,
உங்கள் வருகைக்கும்,
பொறுமையுடன் நான்கு பகுதிகளையும் படித்து கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி!!

said...

\\SathyaPriyan said...
சொல்ல மறந்து விட்டேன்.

கவிதையும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாரு பதிவேற்றிய புகைபடங்களும் அருமை.\\

சத்யா,
குறிப்பிட்டு பாராட்டி பெருமைபட வைத்துவிட்டீர்கள், நன்றி நன்றி!!

said...

\\Priya Murthi said...
மிக நேர்தியான எழுதுக்கள். வாழ்த்துகள் திவ்யா.
//என்னுடன் 7 மாதம் ஒரே வீட்டில் தங்கி இருந்த நண்பனின் பிரிவு தரும் வலியா, இல்லை......நான் தாலி கட்டிய மனைவி மீராவின் உயிர் போகின்றதே என்ற வேதனையா??......எதுவென்று புரியவில்லை எனக்கு....ஒன்று மட்டும் புரிந்தது, ....எனக்கு என் மீரா வேண்டும்!!//

மீராவிர்கும் விஷ்வனாதனுக்கும் மதியில் இருக்கும் உறவை மிக அழகாக உனர்த்தி உள்ளிற்கள்.\\

வாங்க ப்ரியா மூர்த்தி,

உங்கள் வருகை பேருவகை அளித்தது,

உங்கள் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி ப்ரியா!!

said...

\\karunakarthikeyan said...
romba azagana yazuithu...

aruumai... Divya..

Karthikeyan\\

வாங்க கார்த்திக்,

உங்கள் பாராட்டிற்க்கு நன்றி....நன்றி:))

said...

\\தினேஷ் said...
கதையும், படமும், கதையின் முடிவும் மிகவும் நெகிழ்ச்சியாகவும் மிகிழ்ச்சியாகவும் இருந்தது...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\\

வாங்க தினேஷ்,

நேரம் எடுத்து இத்தொடரினை படித்து கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!!

said...

\\புகழன் said...
//"ஹும் சரி.......அங்கே போய்ட்டு??"

"அங்க......அவங்க வாரிசை ஒப்படைக்க போறேன்"

தொண்டையில் ஏற்பட்ட அடைப்பை அடக்கிக்கொண்டாள் மீரா.

"ஹும்.."
//

இந்த வரிகளுக்காக வேண்டி மட்டுமே உங்களுக் “வசனகர்த்தா” பட்டம் கொடுக்கலாம்\

வாங்க புகழன்,

பின்னூட்டமிட வேண்டி நேரம் எடுத்து விரிவான பின்னூட்டமளித்து நீங்கள் அளித்து வரும் உற்சாகத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!!

[ஆனாவசனகர்த்தா பட்டமெல்லாம் கொஞ்சம் ஒவருங்க..]

said...

\\புகழன் said...
//"இவர் என் ஹஸ்பெண்ட்"

முதல் முறையாக எனக்குள் ஒரு shock wave ....... மீரா என்னை தன் கணவன் என்று அறிமுகம் செய்ததின் தாக்கம்!!!
//
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் செட்டிமென்ம் ரெம்பவே தூக்கலாக உள்ளது இந்த வரிகளில்.\\

கரெக்ட்டா நோட் பண்ணி பின்னூட்டமிட்டிருக்கிறீங்க...சபாஷ்:))

said...

\புகழன் said...
//ஆசைதானடி உன்மேல் எனக்கு! //

கதைக்குள் கவிதை அய்யோ.... ரெம்ப சூப்பர்\\

தனியாக கவிதை எழுத தெரியாமல் தான் இப்படி கதையின் நடுவில்......முடிவில் ன்னு கவிதை[மாதிரி] எழுதிப்பார்த்தேன்:)))

என் முயற்சியை பாராட்டியதற்கு நன்றி புகழன்!

said...

\\புகழன் said...
கவிதாயினி திவ்யா அவர்களே!
கவிதையிலேயே ஒரு கதை எழுதுங்களேன் எங்களுக்காக....\\

ஆஹா......திவ்யாவுக்கு வந்த சோதனையா?
இப்படி வம்பில் மாட்டிவிடுறீங்களே புகழன்!

முயற்சிக்கிறேன் புகழன்!!

said...

\\புகழன் said...
//
இந்த key chain யை என் கை விரலில் சுற்றிக்கொண்டிருப்பது என் பழக்கம், அதுவும் இந்த key chain எனக்கு மிகவும் பிடித்தமானது, பல வருடங்களாக என் கைகளில் விளையாடிக்கொண்டிருப்பது என ஒரு நாள் பேச்சு வாக்கில் மீராவிடம் கூறியது நினைவுக்கு வந்தது.
//

இந்த வரிகளைப் படித்ததும் முதல் பாகங்களில் உள்ள புகைப்படங்களைத் திருப்பிப் பார்க்கத் தோன்றியது.
கீ செயினை கையில் வைத்திருப்பதுபோல் சேரனின் படம் இருக்குமோ என்று.\\

ஐயோ என்னங்க இது.....இதெல்லாமா படத்தில நோட் பண்றிங்க??

said...

\\புகழன் said...
புத்தகங்களுக்கும், சினிமாவுக்கும் கதை எழுதுங்கள் நிச்சயமாக பிரகாசமான வாய்ப்புகள் உண்டு.
ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளர் & வசனகர்த்தாவை திரையுலகம் கண்டுபிடிக்கத் தவறியுள்ளது.\\

ஊக்கமளிக்கும் உங்கள் எழுத்திற்கு மிக்க நன்றி புகழன்!!

said...

\\புகழன் said...
உங்கள் கதையில் வரிக்கு வரி குறிப்பிட்டு வாழ்த்துகள் தெரிவிக்கலாம்.
அவ்வளவு அருமை.
மீண்டும் ஒருமுறை முழு பாகத்தையும் முதலிலிருந்து படித்தேன்.
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அழகிய வரிகள் அவை.
குறைவாகவே எனினும்
தொடர்ந்து எழுதுங்கள்.

என்னும் உங்கள் ரசிகனாய்
புகழன்\\

புகழன்,
மீண்டும் பொறுமையுடன் நான்கு பகுதிகளையும் படித்தீர்களா??
வியந்தேன் உங்கள் ரசனை கண்டு,

ரொம்ப ரொம்ப நன்றிங்க புகழன்!!!

said...

\\கீதா said...
****தாய்மை தந்த கர்வமா?
நினைத்தபடி குழந்தையை பெற்றெடுத்த மன நிறைவா??
தனித்து வாழ எழுந்த துணிச்சலா???
வாழ்க்கையில் ஏமாற்றமும் இழப்பும் கற்றுத்தந்த முதிர்ச்சியா????*****


இந்த வரிகள் மிகவும் அருமை திவ்யா,

ஏமாற்றமும், இழப்பும் தொடர்ந்து வாழ்க்கையை சந்திக்க ஒருவித முதிர்ச்சியான மனபோக்கை ஏற்படுத்தும், அதனை நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விதம் மிக மிக அருமை.\\

வாங்க கீதா,

உங்கள் வருகைக்கு நன்றி!

ஆமாம் கீதா, இழப்பும் ஏமாற்றங்கள் ஒரு வித தைரியத்தை அளிப்பது உண்மை,

குறிப்பிட்டமைக்கு நன்றி!!

said...

\\கீதா said...
தன் மணவாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாரா நிகழ்வுகளை ஒரு ஆண் எப்படி கையாள்கிறான், அவனது மன உளைச்சல்கள், உணர்ச்சிகள்......மனப்போராட்டங்கள் அத்தனையையும் விஷ்வா கதாபாத்திரத்தில் மிக தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், உங்கள் எழுத்து திறனை கண்டு வியக்கிறேன்!!

ஒரு ஆணின் கோணத்திலிருந்து எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கும் விதம் பாராட்டத்தக்கது.

தொடர்ந்து பல படைப்புகள் படைத்திட மனதார வாழ்த்துகிறேன் திவ்யா.\\

கீதா,
உங்கள் வியப்பையும், ரசிப்பையும் பின்னூட்டத்தில் வெளிப்படுத்தி உற்சாகமளிப்பதற்கு மிக்க நன்றி!!

said...

\\கீதா said...
'ஆசைதானடி உன்மேல் எனக்கு'......கவிதை வரிகள் அற்புதம்!!

கதாசிரியராக மாத்திரமல்ல, ஒரு கவிஞராகும் திறனும் உங்களுக்குள் இருக்கிறது, முயன்றால் இன்னும் அழகான கவிதைகள் படைக்கலாம் திவ்யா.\\

என் கவிதை முயற்சியையும் பாராட்டி ஊக்கபடுத்தியுள்ளீர்கள், நன்றி!!

said...

\\கீதா said...
பொருத்தமான படதேர்வுகள் எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது திவ்யா?

கதைக்காக படங்களா?? அல்லது படங்களுக்கு தகுந்தாற்போல் கதையா?? வியப்பில் ஆழ்த்துகிறது!!

திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏறப்டுத்துகின்றன பதிவிலுள்ள படங்கள்.

சிரத்தை எடுத்து கதைக்கேறாற்போல் படங்களை தேர்ந்தெடுக்கும் உங்கள் பொறுமைக்கு என் பாராட்டுக்கள்.\\

கதைக்கேற்ப தான் படங்களை தேர்ந்தெடுக்கிறேன் கீதா!!

உங்கள் பாராட்டுக்களுக்கு மீண்டும் ஒரு முறை என் நன்றிகள் பல.....

said...

\ILA said...
திவ்யா, கதையின் கரு பிடிச்சிருக்கு.அதுவும் 4ம் பகுதியின் கடைசி அருமை. பாவனா மாதிரி ஒரு படம் போட்டு டீல்ல விட்டுட்டீங்களே :(\\

வாங்க இளா,

என் வலைதளம் வந்தமைக்கு முதலில் மிக்க நன்றி,

பாராட்டியதற்கு மற்றுமொரு நன்றி இளா!!

said...

\\Prabakar Samiyappan said...
மிக அருமை !! திவ்யா
photos are very nice and it bings a wide screen before me while reading the story . great work ..\\

தொடர்ந்து என் பதிவுகளுக்கு நீங்கள் அளித்து வரும் பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி ப்ரபாஹர்!!

said...

\\ஜெயபிரகாஷ் said...
கதைகளாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். சமூக சிந்தனையோடு ஏதாவது எழுதுங்களேன்.\\

உங்கள் ஆலோசனைக்கு நன்றி ஜெயபிரகாஷ்,
நிச்சயம் முயல்கிறேன்!!

said...

\\தமிழன்... said...
திவ்யா...said...

\\தமிழன்... said...
///கற்பு தியாகம் என்று சந்ததி கடந்த
விஷ்யங்களுக்காகவா...
நம் உறவின் மீது இரங்கல் தீர்மானம்
இயற்றினாய்??///

நீங்கள் இப்படிக்கூட எழுதுவிங்களா...திவ்யா...\\\


ஏன்....ஏதும் தவறுதலாக எழுதிவிட்டேனா?? இப்படி ஒரு கேள்வி........///

இல்லை மேடம் கொஞ்சம் வித்தியாசமா திவ்யாவின் நடையிலிருந்து வேறுபட்ட மாதிரி இருந்தது அதனாலதான் கேட்டேன் இதுவே உங்க எழுத்து திறமை மெருகாகி வருவதற்கு நல்ல சான்று...\\


ஒஹோ....இந்த அர்த்தத்தில் தான் அந்த கேள்வி கேட்டீர்களா??

கவிஞர் தமிழன் என் கவிதையில் 'பொருள் குற்றம்'
'சொல் குற்றம்'.........அப்படி ஏதும் சுட்டிக்காட்டுகிறாரோ என நினைத்தேன்!!

said...

\தமிழன்... said...
வாழ்த்துக்கள் இன்னொரு வலைப்பூ தொடங்கினதுக்கு...\\

நன்றி தமிழன்:))

said...

\\தமிழன்... said...
ஆமா நேற்றே கேட்கணும்னு நினைச்சேன் சும்மா சும்மால நாங்கள்ளாம் சும்மாவாச்சும் வர முடியாதா...\\

நுழைவு கட்டணம் எல்லாம் ஏதும் இல்லீங்க தமிழன்......இன்னும் முழுமையாக நான் அந்த வலைதளத்தை வடிவமைத்து முடிக்கவில்லை.....முடிந்ததும் அழைப்பிதழ் அனுப்புகிறேன், அவசியம் திறப்பு விழாவிற்கு வருகை தாருங்கள்:)))

said...

\\Sridhar Narayanan said...
கதை, கவிதை, படங்கள் என்று கிட்டதட்ட ஒரு திரைக்கதை ரேஞ்சுக்கு எழுதியிருக்கீங்க. இன்னும், க்ளோஸப், மிட் க்ளோஸப், ஜூம் இதெல்லாம்தான் எழுதலை போல.

நல்லதொரு குடும்ப படம் பார்த்தது போல இருந்தது.\\


வாங்க ஸ்ரீதர்,

உங்கள் வருகைக்கும் விரிவான விமர்சனத்திற்கும் நன்றி!!



\\அது சரி... குழந்தையை அவ்வளவு சீக்கிரம் தூக்கி கொடுத்திடுவாங்களா என்ன? கொஞ்சம் 'பத்தாம் பசலி'த்தனமா இருக்கே.\\


கஷ்டம் தான்.....ஆனா கதாநாயகி கொடுத்துடுறாளே:))

said...

vanakkam divya .. mikavum arumayana kavithayana kathai.unga kathaila elarumae nallavangala irukanaga. unga twist elam romba rasanaya iruku. simply superb.. ena solrathunae therla..

said...

\\சிநேகிதன்.. said...
vanakkam divya .. mikavum arumayana kavithayana kathai.unga kathaila elarumae nallavangala irukanaga. unga twist elam romba rasanaya iruku. simply superb.. ena solrathunae therla..\\

வணக்கம் சிநேகிதன்,

வெகுநாட்களுக்கு பிறகு உங்கள் பின்னூட்டம் பெற்றதில் மகிழ்ச்சி!

மனம்திறந்த பாராட்டிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!

said...

Wowwwww,

read all the 4 parts at a stretch, your flow of writing captured my heart Divya,

such an excellent story teller you are!

could visualise scene by scene,wordless to share my applause:)

Hats off:)))

said...

உறவுகளின் ஆழத்தை எடுதுரைக்கும் விதமாக கதை போக்கு இருந்தது மிகவும் நன்றாக இருந்தது!! கதை நாயகன் மற்றும் நாயகியின் கண்ணோட்டத்துடன் படிக்கும் பொழுது எழுந்த எதிர்பார்ப்பு மற்றும் உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது !!

இது போன்ற நல்ல கதைகளை தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !!

வாழ்த்துக்கள்,
விமல்

said...

\\ Shwetha Robert said...
Wowwwww,

read all the 4 parts at a stretch, your flow of writing captured my heart Divya,

such an excellent story teller you are!

could visualise scene by scene,wordless to share my applause:)

Hats off:)))\\

நன்றி ஸ்வேதா!!

said...

\ ந.மு.விமல்ராஜ் said...
உறவுகளின் ஆழத்தை எடுதுரைக்கும் விதமாக கதை போக்கு இருந்தது மிகவும் நன்றாக இருந்தது!! கதை நாயகன் மற்றும் நாயகியின் கண்ணோட்டத்துடன் படிக்கும் பொழுது எழுந்த எதிர்பார்ப்பு மற்றும் உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது !!

இது போன்ற நல்ல கதைகளை தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !!

வாழ்த்துக்கள்,
விமல்\\


வாங்க சகோதரரே,

உங்கள் விரிவான பாராட்டுதலுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!!

மீண்டும் வருக!!

Anonymous said...

Divya,

Your blogs were good. I thought my view would make sense to you. I could see your involvenment/originality in each and every word of your blog; however i do not see it in the pictures. Actor/Actress pictures decreses the quality of the blog. I understand that pictures plays a major role in your story reaching pupils heart. It would be better if you avoid using Actor/Actress pictures.

Thanks,
Gangaraj

said...

\\ Gangaraj said...
Divya,

Your blogs were good. I thought my view would make sense to you. I could see your involvenment/originality in each and every word of your blog; however i do not see it in the pictures. Actor/Actress pictures decreses the quality of the blog. I understand that pictures plays a major role in your story reaching pupils heart. It would be better if you avoid using Actor/Actress pictures.

Thanks,
Gangaraj\\

Welcome to my Blog Gangaraj!!

Thanks a lot for sharing your views & ideas regarding the pictures in my posts,will definetly keep in mind!!

said...

HI Divya,

all ur blogs are awesome, especialy "manasukull matthapu", i liked it vry much.......the way u present the story is tooo gud...i regret for nt viewing ur blogs soooo lateeee:)

ஆசைதானடி உன்மேல் எனக்கு!

அப்புறம் எதற்கு என்மனதில்
தயக்கம் சாக்கு போக்கு
எல்லாம்??

கற்பு தியாகம் என்று சந்ததி கடந்த
விஷ்யங்களுக்காகவா...
நம் உறவின் மீது இரங்கல் தீர்மானம்
இயற்றினாய்??

என்னை முழுவதுமாய் அறுவடைச் செய்தவளே!
அதெப்படி என்னை அம்போவென
விட்டுச் செல்ல மனமுவந்தாய்??

வாழ்க்கையை அடகு வைத்தா...
உன் காதலின் சின்னத்தை
மீட்டு வந்தாய்???

தொடங்கிய நம் பந்தத்தை
தொடர
எனக்கொரு சந்தர்ப்பம் தந்து
தலையசைப்பாயா??

முடிவுரை எழுதியபின்
முற்றுப் புள்ளி வைக்க
முடிவான முடிவு செய்தாயோ??

சேராத உன் காதலுக்காக
சேர்த்து வைத்த என் காதலை
செலவழிக்க மறுக்காதே!!

ஆசைதானடி உன்மேல் எனக்கு!!!

kavithai romba nallaaa irrukuu.....unga stories la irukura emotional touch ennaku romba pudichi irrukuu :))

kp posting more......wish u all the best

Cheers
Bhavani Eshu

said...

கதை அருமை தோழி. கதைக்கு ஏற்றாற்போல படங்களும் அமைந்ததில் அந்த காட்சிகளையும் பார்த்த திருப்தி. :-)

Anonymous said...

Simply superb Divya... Even though the story could be guessed... Nothing like your screenplay... The way you narrate it.. Athuvum unga kavithai irukke...Chance ilaai...

said...

நாலு பார்ட் தொடரின் இம்பாக்ட் இந்த வரிகளில்..
///
சேராத உன் காதலுக்காக
சேர்த்து வைத்த என் காதலை
செலவழிக்க மறுக்காதே!!
///

///
கற்பு தியாகம் என்று சந்ததி கடந்த
விஷ்யங்களுக்காகவா...
நம் உறவின் மீது இரங்கல் தீர்மானம்
இயற்றினாய்??
///
கவிதைதுவமான வரிகள் ரொம்பவே ரசிக்க முடிந்தது...
இன்று நான் படித்த உங்கள் தொடர்களில்(சுமார் 4/5 இல்)இது மிகவும் அருமை