February 13, 2009

காதல் 'கைதி' !!


எதிரியாக நினைத்த காதலிடமே
கைதியாகிப் போனேன் - பார்
அழகாய் என்னை
குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு
உன் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையும் கொடுத்துவிட்டது!!!








"மனதில் கொள்ளை ஆசை இருக்கையில்
நாலே வரியில்
மின்னஞ்சல் அனுப்ப
எப்படியடா முடிகிறது அழுத்தக்காரா??"...
சொல்லி முடிக்குமுன்
அழுத்தமாய் முத்தமிட்டு
அழுத்தக்காரனென்று நிரூபித்தால்
என்னடா அர்த்தம்???







உன மனசு அளவுக்கு
அழுத்தம் உன் உதட்டிற்கில்லை
என சீண்டிப்பார்த்தது
தப்பா போச்சு.......
அழுத்தத்திலும் அழுத்தம்
உன் உதடுகள் மட்டும்தான்
ஒத்துக்கிறேன்டா!!








கால் தடுக்கி
என் கன்னக்குழியில்
விழுந்தது
நீ மட்டுமா??
உன் இதழ்களும் தான்,
இப்போதைக்கு
எழுவதாயில்லை அவைகள்!









எழுந்தாலும்..
மீண்டும் விழச்சொல்லும்
என் கன்னக்குழி,
நீயும் சேர்ந்து விழ
தயாராயிரு!!









மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!









என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!








தெரியாத வெட்கம்
தெரிய வைத்ததே போதும்...…!
தெரியாத பலவற்றை
சொல்லி தர தொடங்கிவிடாதே...
தொலையாத என்னை முற்றிலும்
உன்னில் தொலைத்து விடுவேன்!!

103 comments:

said...

திவ்யா... என்ன சொல்லி பாராட்ட..?
கவிதைகள் அனைத்துமே
காதலான வரிகளில் அழகாக
தொலையவைக்கிறது.. மனதை... :)))
மிக அழகு..!!

said...

//எதிரியாக நினைத்த காதலிடமே
கைதியாகிப் போனேன் - பார்
அழகாய் என்னை
குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு
உன் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையும் கொடுத்துவிட்டது!!! //

அடடடா... இப்படி அழகான சிறையில் இருப்பது
தண்டையா என்ன..? வரம் தானே..? ;))))

அருமை...!!! :))

said...

//"மனதில் கொள்ளை ஆசை இருக்கையில்
நாலே வரியில்
மின்னஞ்சல் அனுப்ப
எப்படியடா முடிகிறது அழுத்தக்காரா??"...
சொல்லி முடிக்குமுன்
அழுத்தமாய் முத்தமிட்டு
அழுத்தக்காரனென்று நிரூபித்தால்
என்னடா அர்த்தம்???//

அட அழுத்தகாரன்னா இதுதான் அர்த்தமா திவ்யா....??
எனக்கு தெரியாம போச்சே... !!! :)))))

குறும்பு...!!! :)))

said...

//உன் மனசு அளவுக்கு
அழுத்தம் உன் உதட்டிற்கில்லை
என சீண்டிப்பார்த்தது
தப்பா போச்சு.......
அழுத்தத்திலும் அழுத்தம்
உன் உதடுகள் மட்டும்தான்
ஒத்துக்கிறேன்டா!!//

:)))) சீண்டிப்பாத்தலே தூண்டுதல் தானே காதலில்..??
அழகான உணர்வுகள்... :))))

said...

//கால் தடுக்கி
என் கன்னக்குழியில்
விழுந்தது
நீ மட்டுமா??
உன் இதழ்களும் தான்,
இப்போதைக்கு
எழுவதாயில்லை அவைகள்!//

:))))) அதுகபாட்டுக்கு மெதுவா எழுந்துகட்டுமே
பாவம்.. :))))

ரசித்தேன் மிகவும்...!! :))

said...

//எழுந்தாலும்..
மீண்டும் விழச்சொல்லும்
என் கன்னக்குழி,
நீயும் சேர்ந்து விழ
தயாராயிரு!! //

எழுந்துக்கவே மாட்டேங்குதுன்னு
complain பண்ணிட்டு இப்படியும் சொன்ன
எப்படி..? :))))

அழகு...!! :))

said...

//மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!//

அதான் குழந்தைய தூக்கிவச்சுகிட்டு
இருக்காங்களா..?? :))))

மிகவும் அழகான கற்பனை திவ்யா..!! :))

said...

//என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!//

இதென்ன அநியாயமா இருக்கு..?
ஜொள்ளு கூட விட கூடாதா..? ;)))))

ரசிக்க வைக்கும் possessiveness...!!
காதலிக்கேயுரிய அழகான கோபம்...
மிக அழகான வரிகளில்...
அழகோ அழகு...!! :)))

said...

//தெரியாத வெட்கம்
தெரிய வைத்ததே போதும்...…!
தெரியாத பலவற்றை
சொல்லி தர தொடங்கிவிடாதே...
தொலையாத என்னை முற்றிலும்
உன்னில் தொலைத்து விடுவேன்!!//

ஆஹா எப்படி எப்படி..."உன்னில்
தொலைத்துவிடுவேன்" னு பயத்தில்
சொல்லியதை "உன்னைத்
தொலைச்சுடுவேன்" னு எச்சரிக்கை
பண்ணற மாதிரி சொன்னா எப்படி..??? :)))

தொலைந்த வெட்கமும்
தொலையாத காதலும்
கலந்த வரிகள்
மனதைக் கவர்கின்றன திவ்யா..!! :))))

said...

கவிதைகளை படித்தபின்
கைதியாகிப் போனது மனசு...!! :)))

மிகவும் அழகான கவித்தொகுப்பு திவ்யா..!!!
வாழ்த்துக்கள்...!!!

:)))

said...

காதலர் தின சிறப்புக் கவிதைத் தொகுப்பா ?? அருமை அருமை..

said...

கலக்கல் கவிதைகள்!!!

எல்லா கவிதைகளும் அழகா அருமயா இருக்கு திவ்யா

வாழ்த்துகள்!!!

said...

//மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!//

நாங்களும் தான்.. உங்க கவிதை படித்து நாங்களும் கவிஞனாயிடுறோம் (ஆனா, வார்த்தை தான் வர மாட்டேங்குது)

said...

படங்கள் அட்டகாசம், அதிலும் அந்தக் காதலி தன் காதலனை மிரட்டும் படம் சூப்பரோ சூப்பர்.

said...

அழகான கவிதைகள் திவ்யா!

Fantastic Photos too!

said...

காதலர் தினத்துக்கு அருமையான அர்ப்பணிப்பு!

said...

:))

said...

நடக்கட்டும்...நடக்கட்டும்...

said...

அழகான வரிகள் சரியான நாளில் ...

வாழ்த்துக்கள் தோழி...

said...

நல்லாருங்க நல்லாருங்க..:)

said...

என்னத்த சொல்ல.
ஜூப்பரு.

said...

அழகான காதல்

said...

4வது கவிதை அருமை.... :) ரொம்பவே ரசித்தேன்.... :)

said...

படங்களும் வரிகளும் அருமை

said...

அனைத்து கவிதைகளும் அழகு
அனைத்தும் கவிதையில் அழகு

said...

காதலர் தின special ஆ? கலக்குங்க...

//என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!
//

காதலர் தினத்த terror தினம் ஆக்கிடுவீங்க போல இருக்கு ;)

said...

திவ்யா,
உண்மைய ஒத்துகிட்டதுக்கு வாழ்த்துக்கள் !!!
தலைப்பு முதல், நீங்க வைத்துள்ள புள்ளிவரை காதல் வழிகிறது...

said...

காதலின் அழுத்தம் உங்களின் அழகான வரிகளில் உள்ள அழுத்தமான முத்ததின்மூலம் தெரிகிறது

said...

//கால் தடுக்கி
என் கன்னக்குழியில்
விழுந்தது
நீ மட்டுமா??
உன் இதழ்களும் தான்,
இப்போதைக்கு
எழுவதாயில்லை அவைகள்!//

அடுத்த காதலர்தினத்தில்தான் எழுமோ

வரிகள் அருமை, வாழ்த்துக்கள் திவ்யா

said...

Hey, very nice lines Divya :) Liked them all esp this one,

என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!

So demanding but cute and sweet :)

said...

//மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!//

காதலர் தின கவிதைகள் மொத்தமும் அழகு...வாழ்த்துக்கள் திவ்யா...

said...

ம்ம்...குருவே, என்னது இப்படி அசுத்துறீங்க..

//மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!//

கலக்கல்ஸ்...

said...

//என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!//

ஆஹா....பாவங்க பையன்..!

said...

படங்களும் படைப்புகளும் அருமை

//என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்//


இது சூப்பர்

said...

ஒரே வார்த்தையில் சொல்லிடறேன் 'Amazing'

said...

எதிரியாக நினைத்த காதலிடமே
கைதியாகிப் போனேன் - பார்
அழகாய் என்னை
குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு
உன் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையும் கொடுத்துவிட்டது!!!


காதல் தண்டனைகள் இல்லாமல் காதலர் உலகில் வாழமுடியுமா என்ன!!!! அழகாக இருக்கிறது குறுங்கவிதை..


"மனதில் கொள்ளை ஆசை இருக்கையில்
நாலே வரியில்
மின்னஞ்சல் அனுப்ப
எப்படியடா முடிகிறது அழுத்தக்காரா??"...
சொல்லி முடிக்குமுன்
அழுத்தமாய் முத்தமிட்டு
அழுத்தக்காரனென்று நிரூபித்தால்
என்னடா அர்த்தம்???


அதுதானுங்க காதல்.... எதிர்பாராத முத்தங்கள், காதலின் அடையாளம்....  
இதுக்கெல்லாம் அர்த்தம் தேடாதீங்கோ!!!


உன மனசு அளவுக்கு
அழுத்தம் உன் உதட்டிற்கில்லை
என சீண்டிப்பார்த்தது
தப்பா போச்சு.......
அழுத்தத்திலும் அழுத்தம்
உன் உதடுகள் மட்டும்தான்
ஒத்துக்கிறேன்டா!!



ஹி ஹி.... நல்லா இருக்குங்க.... ரொம்ப ரசனையான கவிதை... இதுக்கு மேல சொன்னா, சென்ஸார் பண்ணீடுவாங்க....


கால் தடுக்கி
என் கன்னக்குழியில்
விழுந்தது
நீ மட்டுமா??
உன் இதழ்களும் தான்,
இப்போதைக்கு
எழுவதாயில்லை அவைகள்!


என்னங்க... முத்தக் கவிதையா,,,...  யாருக்குமே இதழ் பிரிக்க மனசு வராது...... ஏன்னா, அது உன்னதமானது..



எழுந்தாலும்..
மீண்டும் விழச்சொல்லும்
என் கன்னக்குழி,
நீயும் சேர்ந்து விழ
தயாராயிரு!!


ஓ!!!!! ஹோ!!!!


மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!

அது,,,,,, அது!!!!! காதலில் சாத்தியமாகும் எதுவும்...

என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!



அய்யய்யோ!!! இது என்னங்க இப்படியொரு கண்டிஷன்...  பாவங்க!!!  


தெரியாத வெட்கம்
தெரிய வைத்ததே போதும்...…!
தெரியாத பலவற்றை
சொல்லி தர தொடங்கிவிடாதே...
தொலையாத என்னை முற்றிலும்
உன்னில் தொலைத்து விடுவேன்!!


தொலைந்தனுள் தொலைகிறவள்... இது காதலர்கள்....
காதலில் மட்டும்தான், தொலைத்தும் யாரும் தேடுவதில்லை... அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, எங்கே தொலைவோமென்று..

அருமையான குறுங்கவிதைகள்...

பாராட்டுக்கள்
காதலர்தின சிறப்புப் பாராட்டுக்கள்

said...

ஸ்பெஷல் கவுஜு....

:)))

said...

//என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!//

இதுதான் சூப்பர்....காதல்னாலே இந்தப் பொஸஸ்ஸிவ்னெஸ் இருக்குமே....
அன்புடன் அருணா

said...

///
எதிரியாக நினைத்த காதலிடமே
கைதியாகிப் போனேன்
///

எல்லோருக்கும் அப்படித்தான்

said...

கலக்கல்ஸ்!!!

said...

seekarama matter sollunga ennanu :)) kavithailaam paatha ennamo kala kattara mathiri teriuthay :))

Anonymous said...

எல்லா வரிகளும் அருமை திவ்யா :-)

said...

திவ்யா,

கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு. அனுபவிச்சவங்களால தான் இப்படி எழுத முடியும் ...

said...

காதலர் தின ஸ்பெஷலா...

said...

//உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!//

ithu araajagam... akkramam... aniyaayam... kaathalukku poottu podalaam.. kaathalan(li)kku pooottu podalaamaa?

said...

இது என்ன காதலர் தின சிறப்பு பதிவா?
எல்லாக் கவிதையுமே மிக அருமை.

said...

செம கலக்கல் திவ்யா.. பின்னலா இருக்கு..
கலக்கறீங்க.. :)

said...

//மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!\\

அசத்திட்டீங்க திவ்யா.. எல்லா கவிதையும் கலக்கலோ கலக்கல்..

said...

போட்டோஸ் எல்லாம் நச்ன்னு இருக்கு போங்க.. கவிதைகள் நல்ல மாட்சிங் (Matching).. :D

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

திவ்யா... என்ன சொல்லி பாராட்ட..?
கவிதைகள் அனைத்துமே
காதலான வரிகளில் அழகாக
தொலையவைக்கிறது.. மனதை... :)))
மிக அழகு..!!\\


பாராட்ட கவிஞருக்கே வார்த்தைகள் கிடைக்கவில்லையா??

நன்றி!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//எதிரியாக நினைத்த காதலிடமே
கைதியாகிப் போனேன் - பார்
அழகாய் என்னை
குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு
உன் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையும் கொடுத்துவிட்டது!!! //

அடடடா... இப்படி அழகான சிறையில் இருப்பது
தண்டையா என்ன..? வரம் தானே..? ;))))

அருமை...!!! :))\\


வரம்னு நீங்க சொன்னா சரிதான் :))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//"மனதில் கொள்ளை ஆசை இருக்கையில்
நாலே வரியில்
மின்னஞ்சல் அனுப்ப
எப்படியடா முடிகிறது அழுத்தக்காரா??"...
சொல்லி முடிக்குமுன்
அழுத்தமாய் முத்தமிட்டு
அழுத்தக்காரனென்று நிரூபித்தால்
என்னடா அர்த்தம்???//

அட அழுத்தகாரன்னா இதுதான் அர்த்தமா திவ்யா....??
எனக்கு தெரியாம போச்சே... !!! :)))))

குறும்பு...!!! :)))\\


'அழுத்தக்காரன்' னா என்னன்னு இப்போ தெரிந்ததா கவிஞருக்கு? சந்தோஷம்:)))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//உன் மனசு அளவுக்கு
அழுத்தம் உன் உதட்டிற்கில்லை
என சீண்டிப்பார்த்தது
தப்பா போச்சு.......
அழுத்தத்திலும் அழுத்தம்
உன் உதடுகள் மட்டும்தான்
ஒத்துக்கிறேன்டா!!//

:)))) சீண்டிப்பாத்தலே தூண்டுதல் தானே காதலில்..??
அழகான உணர்வுகள்... :))))\\


:)))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//கால் தடுக்கி
என் கன்னக்குழியில்
விழுந்தது
நீ மட்டுமா??
உன் இதழ்களும் தான்,
இப்போதைக்கு
எழுவதாயில்லை அவைகள்!//

:))))) அதுகபாட்டுக்கு மெதுவா எழுந்துகட்டுமே
பாவம்.. :))))

ரசித்தேன் மிகவும்...!! :))\\

ரசிப்பிற்கு நன்றி நவீன்!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//எழுந்தாலும்..
மீண்டும் விழச்சொல்லும்
என் கன்னக்குழி,
நீயும் சேர்ந்து விழ
தயாராயிரு!! //

எழுந்துக்கவே மாட்டேங்குதுன்னு
complain பண்ணிட்டு இப்படியும் சொன்ன
எப்படி..? :))))

அழகு...!! :))\\


அதெல்லாம் அப்படிதான்:))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!//

அதான் குழந்தைய தூக்கிவச்சுகிட்டு
இருக்காங்களா..?? :))))

மிகவும் அழகான கற்பனை திவ்யா..!! :))\\

நன்றி நவீன்:))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!//

இதென்ன அநியாயமா இருக்கு..?
ஜொள்ளு கூட விட கூடாதா..? ;)))))\\

\\ ரசிக்க வைக்கும் possessiveness...!!
காதலிக்கேயுரிய அழகான கோபம்...
மிக அழகான வரிகளில்...
அழகோ அழகு...!! :)))\\

மனம்திறந்த பாராட்டிற்கு நன்றி!

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//தெரியாத வெட்கம்
தெரிய வைத்ததே போதும்...…!
தெரியாத பலவற்றை
சொல்லி தர தொடங்கிவிடாதே...
தொலையாத என்னை முற்றிலும்
உன்னில் தொலைத்து விடுவேன்!!//

ஆஹா எப்படி எப்படி..."உன்னில்
தொலைத்துவிடுவேன்" னு பயத்தில்
சொல்லியதை "உன்னைத்
தொலைச்சுடுவேன்" னு எச்சரிக்கை
பண்ணற மாதிரி சொன்னா எப்படி..??? :)))

தொலைந்த வெட்கமும்
தொலையாத காதலும்
கலந்த வரிகள்
மனதைக் கவர்கின்றன திவ்யா..!! :))))\\


கவிஞரின் மனதை.....வரிகள் கவர்ந்ததை எண்ணி மகிழ்ச்சி:))

said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

கவிதைகளை படித்தபின்
கைதியாகிப் போனது மனசு...!! :)))

மிகவும் அழகான கவித்தொகுப்பு திவ்யா..!!!
வாழ்த்துக்கள்...!!!

:)))\\


வாழ்த்துக்களுக்கும்........விரிவான பின்னூட்ட பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நவீன்:))

said...

\\Blogger Raghav said...

காதலர் தின சிறப்புக் கவிதைத் தொகுப்பா ?? அருமை அருமை..\\


ஆமாம் ராகவ், காதலர் தினத்திற்காக எழுதின கவிதை:))

பாராட்டிற்கு நன்றி!

said...

\\Blogger எழில்பாரதி said...

கலக்கல் கவிதைகள்!!!

எல்லா கவிதைகளும் அழகா அருமயா இருக்கு திவ்யா

வாழ்த்துகள்!!!\\


வாழ்த்துக்களுக்கு நன்றி எழில்!!

said...

\\Blogger Raghav said...

//மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!//

நாங்களும் தான்.. உங்க கவிதை படித்து நாங்களும் கவிஞனாயிடுறோம் (ஆனா, வார்த்தை தான் வர மாட்டேங்குது)\\



முயற்சி பண்ணுங்க ராகவ்......நிச்சயம் வார்த்தைகள் கிடைக்கும்:)))

said...

\\Blogger Raghav said...

படங்கள் அட்டகாசம், அதிலும் அந்தக் காதலி தன் காதலனை மிரட்டும் படம் சூப்பரோ சூப்பர்.\\


ஹா ஹா அந்த படம் நிஜம்மாவே மிரட்டுற மாதிரி இருக்குதுல??

குறிப்பிட்டு பாராட்டியதிற்கு நன்றி ராகவ்!!

said...

\\Blogger Namakkal Shibi said...

அழகான கவிதைகள் திவ்யா!

Fantastic Photos too!\\


வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சிபி!!

said...

\\Blogger Namakkal Shibi said...

காதலர் தினத்துக்கு அருமையான அர்ப்பணிப்பு!\\

நன்றி:)))

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

:))\\


:))

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

நடக்கட்டும்...நடக்கட்டும்...\\


என்ன நடக்கட்டும்??

ஆடா.......மாடா??:)))

said...

\\Blogger தமிழன்-கறுப்பி... said...

அழகான வரிகள் சரியான நாளில் ...

வாழ்த்துக்கள் தோழி...\\


வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!!

said...

\Blogger தமிழன்-கறுப்பி... said...

நல்லாருங்க நல்லாருங்க..:)\\


நன்றிங்க நன்றி!!

said...

\\Blogger தேனியார் said...

என்னத்த சொல்ல.
ஜூப்பரு.\\

வாங்க தேனியார்...
பாராட்டிற்கு ரொம்ப தாங்க்ஸ்:))

said...

\\Blogger இவன் said...

அழகான காதல்\\

நன்றி!

said...

\\Blogger இராம்/Raam said...

4வது கவிதை அருமை.... :) ரொம்பவே ரசித்தேன்.... :)\\


வருகைக்கும், ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராம்:))

said...

\Blogger நசரேயன் said...

படங்களும் வரிகளும் அருமை\\


ரொம்ப ரொம்ப நன்றி நசரேயன்!

said...

\\Blogger Muthusamy said...

அனைத்து கவிதைகளும் அழகு
அனைத்தும் கவிதையில் அழகு\\

அழகான உங்கள் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி முத்துசாமி!

said...

\\Blogger Divyapriya said...

காதலர் தின special ஆ? கலக்குங்க...

//என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!
//

காதலர் தினத்த terror தினம் ஆக்கிடுவீங்க போல இருக்கு ;)\\


ஆமாம் திவ்யப்ரியா......காதலர் தின ஸ்பெஷல் கவிதை:)))

said...

\\Blogger Ravee (இரவீ ) said...

திவ்யா,
உண்மைய ஒத்துகிட்டதுக்கு வாழ்த்துக்கள் !!!\\

என்ன உண்மை???
நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலியே இரவீ:(((


\\\
தலைப்பு முதல், நீங்க வைத்துள்ள புள்ளிவரை காதல் வழிகிறது...\\


பாராட்டிற்கு மிக்க நன்றி!

said...

\\Blogger அபுஅஃப்ஸர் said...

காதலின் அழுத்தம் உங்களின் அழகான வரிகளில் உள்ள அழுத்தமான முத்ததின்மூலம் தெரிகிறது\\


கருத்திற்கு நன்றி அபிஅஃப்ஸர்!

said...

\\Blogger அபுஅஃப்ஸர் said...

//கால் தடுக்கி
என் கன்னக்குழியில்
விழுந்தது
நீ மட்டுமா??
உன் இதழ்களும் தான்,
இப்போதைக்கு
எழுவதாயில்லை அவைகள்!//

அடுத்த காதலர்தினத்தில்தான் எழுமோ\\

ஹா ஹா! இருக்கலாம்:))



\\\ வரிகள் அருமை, வாழ்த்துக்கள் திவ்யா\\

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

said...

\\Blogger Mathu said...

Hey, very nice lines Divya :) Liked them all esp this one,

என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!

So demanding but cute and sweet :)\\


Thanks a lot Mathu!

said...

\\Blogger புதியவன் said...

//மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!//

காதலர் தின கவிதைகள் மொத்தமும் அழகு...வாழ்த்துக்கள் திவ்யா...\\

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி புதியவன்!

said...

\\Blogger Thamizhmaangani said...

ம்ம்...குருவே, என்னது இப்படி அசுத்துறீங்க..

//மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!//

கலக்கல்ஸ்...\\



நன்றி......நன்றி காயத்ரி!

said...

\\Blogger Thamizhmaangani said...

//என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!//

ஆஹா....பாவங்க பையன்..!\\


அட....அப்படியெல்லாம் பாவம் பார்க்க கூடாது அம்மனி:)))

said...

\\Blogger தாரணி பிரியா said...

படங்களும் படைப்புகளும் அருமை

//என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்//


இது சூப்பர்\\

குறிப்பிட்டு பாராட்டியதிற்கு மிக்க நன்றி தாரனிப்ரியா:))

said...

\\Blogger விஜய் said...

ஒரே வார்த்தையில் சொல்லிடறேன் 'Amazing'\\



ரொம்ப தாங்க்ஸ் விஜய்!!!

said...

\\Blogger ஆதவா said...

எதிரியாக நினைத்த காதலிடமே
கைதியாகிப் போனேன் - பார்
அழகாய் என்னை
குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு
உன் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையும் கொடுத்துவிட்டது!!!


காதல் தண்டனைகள் இல்லாமல் காதலர் உலகில் வாழமுடியுமா என்ன!!!! அழகாக இருக்கிறது குறுங்கவிதை..\\



நன்றி!!!




\\ "மனதில் கொள்ளை ஆசை இருக்கையில்
நாலே வரியில்
மின்னஞ்சல் அனுப்ப
எப்படியடா முடிகிறது அழுத்தக்காரா??"...
சொல்லி முடிக்குமுன்
அழுத்தமாய் முத்தமிட்டு
அழுத்தக்காரனென்று நிரூபித்தால்
என்னடா அர்த்தம்???

அதுதானுங்க காதல்.... எதிர்பாராத முத்தங்கள், காதலின் அடையாளம்....
இதுக்கெல்லாம் அர்த்தம் தேடாதீங்கோ!!!\\\


சரிங்க சார்.....:))


\\ உன மனசு அளவுக்கு
அழுத்தம் உன் உதட்டிற்கில்லை
என சீண்டிப்பார்த்தது
தப்பா போச்சு.......
அழுத்தத்திலும் அழுத்தம்
உன் உதடுகள் மட்டும்தான்
ஒத்துக்கிறேன்டா!!


ஹி ஹி.... நல்லா இருக்குங்க.... ரொம்ப ரசனையான கவிதை... இதுக்கு மேல சொன்னா, சென்ஸார் பண்ணீடுவாங்க....\\

எச்சரிக்கை உணர்விற்கு நன்றி!!



\\ கால் தடுக்கி
என் கன்னக்குழியில்
விழுந்தது
நீ மட்டுமா??
உன் இதழ்களும் தான்,
இப்போதைக்கு
எழுவதாயில்லை அவைகள்!


என்னங்க... முத்தக் கவிதையா,,,... யாருக்குமே இதழ் பிரிக்க மனசு வராது...... ஏன்னா, அது உன்னதமானது..



எழுந்தாலும்..
மீண்டும் விழச்சொல்லும்
என் கன்னக்குழி,
நீயும் சேர்ந்து விழ
தயாராயிரு!!


ஓ!!!!! ஹோ!!!!


மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!

அது,,,,,, அது!!!!! காதலில் சாத்தியமாகும் எதுவும்...\\\

அனுபவம் பேசிகிறது போலிருக்கிறது:))


\\ என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!



அய்யய்யோ!!! இது என்னங்க இப்படியொரு கண்டிஷன்... பாவங்க!!!


தெரியாத வெட்கம்
தெரிய வைத்ததே போதும்...…!
தெரியாத பலவற்றை
சொல்லி தர தொடங்கிவிடாதே...
தொலையாத என்னை முற்றிலும்
உன்னில் தொலைத்து விடுவேன்!!

தொலைந்தனுள் தொலைகிறவள்... இது காதலர்கள்....
காதலில் மட்டும்தான், தொலைத்தும் யாரும் தேடுவதில்லை... அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, எங்கே தொலைவோமென்று..\\\


விளக்கம் மிகவும் அருமை:))



\\ அருமையான குறுங்கவிதைகள்...

பாராட்டுக்கள்
காதலர்தின சிறப்புப் பாராட்டுக்கள்\\


உங்கள் பாராட்டுக்களுக்கும்.........விரிவான விமர்சனத்திற்கும் என் மனம்திறந்த பாராட்டுக்கள்:))

said...

\\Blogger நாகை சிவா said...

ஸ்பெஷல் கவுஜு....\\

யெஸ்ஸு...



\\ :)))\\

:))))

said...

\\Blogger அன்புடன் அருணா said...

//என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!//

இதுதான் சூப்பர்....காதல்னாலே இந்தப் பொஸஸ்ஸிவ்னெஸ் இருக்குமே....
அன்புடன் அருணா\\


குறிப்பிட்டு பாராட்டியதிற்கு ரொம்ப தாங்க்ஸ் அருணா:)))

said...

\\Blogger பிரபு said...

///
எதிரியாக நினைத்த காதலிடமே
கைதியாகிப் போனேன்
///

எல்லோருக்கும் அப்படித்தான்\\


கருத்திற்கு நன்றி பிரபு!!

said...

\\Blogger Karthik said...

கலக்கல்ஸ்!!!\\

தாங்க்ஸ் கார்த்திக்!

said...

\\Blogger gils said...

seekarama matter sollunga ennanu :)) kavithailaam paatha ennamo kala kattara mathiri teriuthay :))\\


காதலர் தின ஸெபஷல் கவிதை.... அவ்ளோதான் கில்ஸ்:)))

said...

\\Blogger இனியவள் புனிதா said...

எல்லா வரிகளும் அருமை திவ்யா :-)\\


ரொம்ப நன்றி புனிதா:))

said...

\\Blogger முகுந்தன் said...

திவ்யா,

கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு. அனுபவிச்சவங்களால தான் இப்படி எழுத முடியும் ...\\


பாராட்டிற்கும் கருத்திற்கும் நன்றி முகுந்தன்!!

said...

\\Blogger பாச மலர் said...

காதலர் தின ஸ்பெஷலா...\\


ஆமாங்க பாசமலர்!!

said...

\\Blogger ஜி said...

//உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!//

ithu araajagam... akkramam... aniyaayam... kaathalukku poottu podalaam.. kaathalan(li)kku pooottu podalaamaa?\\


அடடே....இதுவே அராஜகமா?
இந்த கட்டுபாடு கூட இல்லீனா எப்படீங்க கதாசிரியரே:))

said...

\\Blogger ஜோசப் பால்ராஜ் said...

இது என்ன காதலர் தின சிறப்பு பதிவா?
எல்லாக் கவிதையுமே மிக அருமை.\\


ஆமாங்க ஜோசஃப், காதல்ர் தின ஸ்பெஷல் கவிதை!!

பாராட்டிற்கு மிக்க நன்றி!!

said...

\\Blogger Saravana Kumar MSK said...

செம கலக்கல் திவ்யா.. பின்னலா இருக்கு..
கலக்கறீங்க.. :)\\


கவிஞரின் பாராட்டு மகிழ்ச்சி அளித்தது, நன்றி சரவணன்!

said...

\\Blogger venkatx5 said...

//மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!\\

அசத்திட்டீங்க திவ்யா.. எல்லா கவிதையும் கலக்கலோ கலக்கல்..\\


பாராட்டிற்கு மிக்க நன்றி வெங்கட்!!

said...

\\Blogger venkatx5 said...

போட்டோஸ் எல்லாம் நச்ன்னு இருக்கு போங்க.. கவிதைகள் நல்ல மாட்சிங் (Matching).. :D\\


படங்களின் தேர்வையும் குறிப்பிட்டு பாராட்டியது, மகிழ்ச்சியளித்தது, நன்றி!!

said...

Kavidhaigal romba nallairuku....
Adhai padikumbodhu inimaiya iruku

said...

I saw you in some other blogs , but just now i am came to ur blog.. its amazing..awesome.. hilarious...

ur gazal's are excellent... keep writing more... we are all wit u.. have a wonderful day...

said...

\\Blogger preethi said...

Kavidhaigal romba nallairuku....
Adhai padikumbodhu inimaiya iruku\\


வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ப்ரீத்தி:)

said...

\\Blogger மஹாராஜா said...

I saw you in some other blogs , but just now i am came to ur blog.. its amazing..awesome.. hilarious...

ur gazal's are excellent... keep writing more... we are all wit u.. have a wonderful day...\\

வருகைக்கும், மனம்திறந்த பாராட்டிற்கும் நன்றி மஹாராஜா!

said...

WOW...WOW...

DineshD