July 29, 2008

நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 5

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4


ஹாஸ்பிட்டல் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிந்துக்கொள்ள தங்கள் அறைக்கு வந்த கார்த்திக், அங்கு.....


அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்!

கண்கள் கண்ட காட்சியில்
மனம் புன்னைகைத்தது!




நந்தினியின் கிறங்கடிக்கும் அழகில் தன்னை ஒரு கணம் மறந்து ரசித்துப்பார்த்தான் கார்த்திக்.

"ஹேய் ...ஜொள்ளா........என்னடா அப்படி பார்ர்கிற...பெருசா நேத்து ராத்திரி மூஞ்சி திருப்பிட்டு தூங்கின.....இப்போ...இப்படி பார்க்கிறே, திருட்டுப் பையா!!!"

தன் செவ்விதழ் சுளித்து, குறும்பு பார்வையுடன் கண் சிமிட்டினாள் நந்தினி.

கார்த்திக் தன் ரசிப்பை மறைத்துவிட்டு, அவள் முகம் பார்க்கும் தெம்பில்லாமல்,

"டைம் ஆச்சு.......வா.....ஹாஸ்பிட்டல் போலாம்" என்று கூறிவிட்டு

அவள் பதிலுக்கு காத்திராமல் காரில் போய் உட்கார்ந்துக்கொண்டான்.

காரில் இருவரும் ஹஸ்பிடல் செல்லும் வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

மருத்துவ பரிசோதனையில் கார்த்திக் பயந்த மாதிரி 'எந்தவித' பாதிப்பும் நந்தினிக்கோ, வயிற்றிலுள்ள குழந்தைக்கோ ஏற்படவில்லை. இதனை அறிந்து மனதிற்கு ஒரு வித திருப்தியாக இருந்தாலும், தான் இல்லாமல் நந்தினி எப்படி குழந்தையுடன் வாழ்வை தொடர்வாள் என்று நினைக்கையில் ' திக்' கென்று இருந்தது கார்த்திக்கிற்கு.

இவனது மன ஓட்டங்களை உணராத நந்தினி, நாளுக்கு நாள் சோர்வடைந்து வரும் கார்த்திக்கிடம்,

"என்னங்க நீங்க...எப்ப பாரு டல்லடிக்கிறீங்க, 'ஜிம்'க்கு போய் 'ஜம்'முன்னு எவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தீங்க..........இப்ப பாருங்க எப்படி இருக்கிறீங்கன்னு?....."

"....."

" நீங்க ஜிம்முக்கு போயே 1 மாசம் ஆச்சு.........எல்லா ஆம்பிள்ளைகளும் இப்படிதான்.......கல்யாணம் ஆகுற வரைக்கும் ' ஜிம்' .......'வொர்க் அவுட்' னு muscled ஆ திரியறது, அப்புறம்........கல்யாணம் ஆனதும்......'mission accomplished' அப்படினு ......exercise யே பண்ணாம 'தொப்பையும்' 'தொந்தியுமா'.......சோம்பேறி ஆகிட வேண்டியது"

"....."


"என்னங்க இது.....நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கிறேன்.........ஒரு வார்த்தை பதில் பேசுறீங்களா???........எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரியே ஒரு லுக்கு..........ஏங்க இப்படி இருக்கிறீங்க"

"இப்ப உனக்கு என்ன வேணும்..........'muscled body' ஆ ..........நானா??"

"ச்சீ.........ஏங்க இப்படி....... தப்பா அர்த்தம் பண்ணிக்கிறீங்க"

வார்த்தைகள் உடைந்தன நந்தினிக்கு.
கார்த்திக்கா இப்படி பேசுவது.......என்ற அதிர்ச்சி அவளுக்கு.

"என்னமா நந்தினி..........எதுக்கு கத்துறான் கார்த்தி".என்று கேட்டுக்கொண்டே நந்தினியின் மாமியார் அங்கு வர,

"ஒன்னு....மில்ல.....அத்தை" என்று சமாளித்தாள் நந்தினி.

கணவன் மனைவிக்குள் எந்த ஒரு மனஸ்தாபம் இருந்தாலும் சரி, கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு.
கணவனை அவரது அன்னையிடம் கூட விட்டுக்கொடுத்து பேசுவதை தவிர்ப்பாள்.

நந்தினி தன்னிடம் மறைத்தாலும், தன் மகனின் போக்கில் மாற்றத்தை உணராமலில்லை கார்த்திக்கின் அம்மா.

மகனிடம் தனிமையில் அறியுரை கூறிக்கொண்டுதானிருந்தாள். ஆனால் கார்த்திக்கின் போக்கில் எந்த ஒரு மாற்றமுமில்லை, மாறாக நாளுக்கு நாள் விட்டத்தியான பார்வையும், சோர்வான நடையுமாக கார்த்திக்கின் உடலும் மனமும் தளர்ந்துக்கொண்டே போனது.

அம்மாவின் அன்பும் அக்கறையும் கலந்த அறிவுரைகள் ஒருபுறம்.........அன்பு மனைவியின் கள்ளமில்லா குழந்தை முகம் ஒருபுறமென கார்த்திக்கை மேலும் மனபலவீனமடைய செய்தது.


சாவு நம்மை தேடி வரவேண்டும்
நானோ
சாவை தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன்
என் நாட்களை எண்ணும்
புண்ணியம் பெற்றிருக்கிறேன்..

உனக்கு செய்த
முதல் துரோகம்
என் முடிவையும்
தேடிக் கொடுத்திருக்கிறது...

உன் களங்கமில்லா அன்பு
என் கயமையையும்
மன்னிக்குமென தெரியுமடி செல்லமே!!
தெரிந்தேதான்
உன்னைவிட்டு விலகுகிறேன் - ஆனாலும்
கண்மணியே...
என் உணர்வோடு
கலந்துவிட்ட உன்னை
உயிருடன் கொன்றுவிட
மனதில்லையடி தங்கமே!!!


தன் மறைவிற்கு பின் நந்தினியும் தன் தாய் கைம்பெண்ணாக தன்னை வளர்க்க சிரமப்பட்டது போன்று பொருளாதார ரீதியில் கஷ்டபடக்கூடாது என்ற எண்ணத்துடன், அவளுக்கு தன் சேமிப்பு, சொத்து மற்றும் இன்ஷுரன்ஸ் விபரங்கள், என அனைத்தையும் விவரிக்க ஆரம்பித்தான்.
எல்லா விதத்திலும் அவளை தயார் படுத்தும் நோக்குடன் அவன் செயல்பட்டது, நந்தினிக்கு ஏன் என்று புரியவில்லை.

"இப்போ எதுக்குங்க.....எனக்கு இந்த விபரமெல்லாம்??"

"சொல்லித்தந்தா.......தெரிஞ்சுக்கோ......ஏன்? எதுக்கு?ன்னு கேட்காதே"

"இப்போ நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் என்னங்க??"

"ஒன்னும் தெரியாத மரமண்டையாவே உங்க அப்பா வளர்த்து வைச்சிருக்காரு..........இப்படி பட்டிக்காடாவே இருக்க போறியா??"

வெடுக்கென்று கார்த்திக் அப்படி கூறவும், அகல விரிந்த நந்தினியின் கண்களில் நீர் தேம்பியது.

அவளது கண்ணீருக்கு முன் கார்த்திக் என்றுமே ஒரு கோழைதான், அவளது கண்ணீரை தாங்கும் சக்தி அவனுக்கோ........அவன் காதலுக்கோ இல்லை!!!

"இப்போ எதுக்கு அழுற............எல்லாத்தையும் சேர்த்து வைச்சுக்கோ........மொத்தமா அழுதுக்க"

சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் கார்த்திக்.

கண்ணீர் திரையாக கண்களை மறைக்க........கார்த்திக் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி.

தன்னை விட்டு கார்த்திக் விலகி விலகி போவதின் அர்த்தம் உணர முடியாமல், அந்த நிராகரிப்பின் வலியை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் நந்தினி தவித்தாள்.


என்னை கொள்ளைக்
கொண்ட கள்வனே
புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...??
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொருங்கி போகிறேன்...
சில சமயங்களில்...



கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டவள்..........சிறிது நேரம் கண்களை மூடி, காதலுடன் கார்த்திக்கும் அவளும் கழித்த தித்திக்கும் தருணங்களை நினைத்துக்கொண்டாள்.

'முதல் பிரசவம் எங்கள் வீட்டில்தான்' என நந்தினியின் பெற்றோரும் உறவினரும் அவளுக்கு சிறப்பாக வளைகாப்பு செய்து ஊருக்கு அழைத்துச்சென்றனர்.
ஊருக்குச் சென்றபின்பும், தனியாக இருக்கும் தன் மாமியாருக்கும், ஃபோனில் பேசும்போதும் கடுகடுப்பாக பேசும் கார்த்திக்கிற்கும் அடிக்கடி ஃபோன் செய்தாள் நந்தினி.

"அத்தை சாப்பிட்டீங்களா??"
"அத்தை.......ஒரு ஸ்ட்ராங் காஃபி குடிக்கலாமா"
"அத்தை கோயிலுக்கு போலாமா??".......
இப்படி வார்த்தைக்கு முன்னூறு அத்தை போட்டு பாசமுடன் வலம் வந்த மருமகள் இல்லாமல், முகம் கொடுத்து கூட பேசாத மகனுடன் இருப்பது கார்த்திக்கின் அம்மாவிற்கு கஷ்டமாக இருந்தது. அதனால் சம்மந்தார் வீட்டில் 'டேரா' என்று ஊரும் உறவும் சிரித்தாலும் ப்ரவாயில்லை என்று மருமகளைக் காண சென்றுவிட்டார் காத்திக்கின் அம்மா.

அப்பா இல்லாமல் வளர்ந்த கர்த்திக், இதுவரை 1 வாரத்திற்கு மேல் தன் அம்மாவை பிரிந்திருந்ததில்லை, இந்த முறை அம்மாவின் பிரிவும்.......மனைவியின் பிரிவும் சேர்ந்து அவனை தனிமை சிறையில் தள்ளியது.

மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...



ஆனாலும்..........தன் அம்மாவிற்கும் நந்தினிக்கும் இடையிலான இந்த பாசப்பிணைப்பு மட்டுமே அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

தனிமையுணர்வில் ....தன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த கார்த்திக், ஒரு நாள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டான்.

கண்விழித்த போது, தலையில் கட்டுடன் தான் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டிருப்பதை உணர்ந்தான். கார்த்திக் கண்விழித்ததை டாக்டரிடம் நர்ஸ் தெரிவிக்க, டாக்டர் அவனது அறைக்குள் வந்தார்,

"ஹலோ மிஸ்டர் கார்த்திக்.."

"எனக்கு........என்னாச்சு.....டாக்டர்"

"பைக் கார் மேல மோதி நீங்க கீழே விழுந்ததில், தலையில் அடிப்பட்டிருந்தது.........தையல் போட்டிருக்கிறேன்.....இரண்டு நாள்ல சரியாகிடும், உங்க பர்ஸ்ல இருந்த உங்க நண்பர் ஒருவரின் விசிட்டிங் கார்ட் மூலம் அவரை மட்டும் தான் தொடர்பு கொள்ள முடிந்தது.......வேற யாருக்கும் இன்ஃபார்ம் பண்ணனுமா??"

"என்னை........எதுக்கு.......டாக்டர் காப்பாத்தினீங்க........"

"என்ன சொல்றீங்க மிஸ்டர் கார்த்திக்......உங்களை காப்பாத்த வேண்டியது எங்க டுயுட்டி......ஆர் யு ஒகே??"

கார்த்திக்கின் கண்களில் நீரைக்கண்டதும், டாக்டர் திகைப்புடன்,

"மிஸ்டர் கார்த்திக்.........உங்களுக்கு லேசாகத்தான் அடிபட்டிருக்கு, பயப்படும்படியா பெரிய காயம் எதுவுமில்லை.......ஏன் நீங்க இப்போ எமோஷனல் ஆகிறீங்க"

டாக்டரிடம் தன் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டின் விபரங்களை கார்த்திக் கூற, அவரோ......."உங்கள் இரத்தம் நாங்கள் பரிசோதித்த போது எந்தவித HIV அறிகுறியும் இல்லை' என்றும், இன்னொருமுறை வேண்டுமானால் பரிசோதனை செய்துவிடலாம் என மறுமுறை பரிசோதித்தும், HIV- நெகடிவ் என்ற ரிசல்ட் வர , கார்த்திக் குழம்பி போனான்.

அதே சமயத்தில் கார்த்திக்கை பார்ப்பதற்கு , விசிட்டிங் கார்ட் மூலம் டாக்டர் தொடர்பு கொண்டிருந்த கார்த்திக்குடன் வேலைப் பார்க்கும் ஹரி அறைக்குள் வர, கார்த்திக் தன் குழப்பத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அவனிடம் பேசினான்.

ஹரி தாழ்ந்த குரலில் , கார்த்திக்கிடம்.....

"ஸாரி கார்த்திக்.......டாக்டர் ஃபோன் பண்ணின உடனே என்னால வரமுடியல"

"ப்ரவாயில்லை ஹரி"

"ஒரே சமயத்தில்..........இரண்டு பேரைப்பற்றிய அதிர்ச்சியான செய்தி...அதுவும் இரண்டு பேரின் பெயரும் ஒரே பேர்.....அரண்டுப்போய்டேன் கார்த்திக்"

"என்ன சொல்ற.....ஹரி???"

"கார்த்திக்.......I am not sure......if it is the good time to convey this news to you......நம்ம டீம் கார்த்திக் இறந்துட்டான்"

"யா......ரு......கார்த்திக் குமாரா"

"அவனே தான்..,.....பார்ட்டி அனிமெல்"

"என்ன சொல்ற......ஹரி.....எப்படி??"

ஹரி தன் குரலை மிகவும் தாழ்த்தி......

"எய்ட்ஸ்...ரீசண்டாதான் கண்டுபிடிச்சிருக்காங்க.....அதுக்குள்ள....."

"......."

"பின்ன அவன் பண்ணின லீலைக்கெல்லாம்........சே....ஆளே போய்ட்டான்.......அவனைப் பத்தி பேசி என்ன ஆகப்போகுது"

"....."

"உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருக்குனு ஃபோன் வந்து சில நிமிஷத்துல இந்த தகவலும் வந்தது......அதான் நான் இங்க வர்ரதுக்கு லேட்......ஸாரி கார்த்திக்"

அதற்கு மேல் ஹரி பேசியது எதுவும் கார்த்திக்கின் காதில் விழவில்லை!

கார்த்திக்கின் நெற்றியில் 'பொட்'டென தட்டினார் போன்ற உணர்வு, ஹைதிராபாத்தில் இரத்தம் கொடுக்க முன் வந்தவர்களில் அவன் குழுவில் இருந்த அந்த கார்த்திக் குமாரும் ஒருவன், இப்போது விளங்கியது கார்த்திக்கிற்கு..........தன் பிளட் டெஸ்ட் ரிசல்ட்டின் ரிப்போர்ட்டின் ஆள் மாறாட்டம்.


உடனே கண்முன், தன் கடுமையான பேச்சினாலும், கசப்பான வார்த்தைகளாலும் காயப்படுத்தி, ரணப்படுத்திய நந்தினியின் அழுது சிவந்த முகம் தோன்றியது.

"ஹரி......ப்ளீஸ்......எனக்கு சென்னை-தூத்துக்குடி ஃப்ளைட்டுக்கு உடனே ஒரு டிக்கட் புக் பண்ணித்தர முடியுமா??"

"இந்த நிலைமையில்.........எப்படி.....கார்த்திக்"

நண்பன் மருத்துவர் என்று யார் தடுத்தும் கேளாமல் , தலையில் கட்டுடன்...........கார்த்திக் நந்தினையை நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்ற வேகத்தில் அவளுக்கு ஃபோன் கூட பண்ணாமல் தூத்துக்குடி ஏர்போர்ட்டில் தரையிறங்கினான்.

விபத்தில் காயப்பட்டபோது தன் செல்ஃபோன் சிதறிப்போனது அப்போது தான் நினைவிற்கும் வந்தது.

நந்தினியை உடனே பார்த்தே ஆக வேண்டும்........செய்த தப்பை சொல்லி........மன்னிப்பு கேட்டு......அவள் மடியில் முகம் புதைத்து கதற வேண்டும் என்று மட்டுமே மனசு துடித்தது!!

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து டாக்ஸியில் நந்தினியின் ஊருக்குச் சென்றான்.

நந்தினியின் வீடு இருக்கும் தெருவில் , அவர்களது வீடுதான் சற்று பெரிதான வீடு, தெருமுனையில் கார் திரும்பியது ஒரு குலுக்கலுடன் கார் நின்றது, டாக்ஸி ட்ரைவர் காரை சரி செய்ய கீழே இறங்க எத்தனிக்க.......

"பக்கத்துல தான் வீடு........நானே போய்கிறேன்.....இந்தாப்பா பணம்" என்று டாக்ஸி ட்ரைவர் காரை சரி செய்துவிடுகிறேன் வெயிட் பண்ணுங்க சார் என்று கூறியும் கேளாமல், அவன் கையில் பணத்தை தினித்துவிட்டு, நந்தினியின் வீடு நோக்கி நடந்தான்.

சற்று தொலைவிலேயே......நந்தினியின் வீட்டின் முன் கூட்டமாக ஆட்களிருப்பது தெரிந்தது.
இந்நேரத்தில்........ஏன் இத்தனை கூட்டம் அவள் வீட்டுமுன்...

வீட்டை நெருங்க நெருங்க கார்த்திக்கின் இதயம் வெளியில் வந்துவிடும் போல் வேகமாக துடித்தது.

வீட்டின் முகப்பில் நின்ற அவளது உறவுக்கார ஆண்கள், ஊர் காரர்கள் அனைவரின் முகத்திலும் ......சோகம் நிரம்பிருப்பதைக் கண்டதும்......கார்த்திக்கின் படபடப்பு அதிகரித்தது.
இவனைக் கண்டதும் அனைவரும் இவனை.....இரக்க பார்வை பார்த்தார்களே தவிர, யாரும் விபரம் எதுவும் கூறவில்லை.

நந்தினியின் சித்தப்பா கார்த்திக்கை கண்டதும், இவனது கரங்களை பதற்றத்துடன் பற்றிக்கொண்டு....

"மாப்பிள........மாப்ள......எங்கே போய்ட்டீங்க....உங்களுக்கு தகவல் சொல்ல எத்தனை தடவ.....நாங்க ஃபோன் பண்ணினோம்........"

"என்........னா.....ச்சு........." வறண்டு போன நாவிலிருந்து வார்த்தைகள் உடைந்து வெளிவந்தன கார்த்திக்கிடமிருந்து.

"மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............"

கண் இருண்டது கார்த்திக்கிற்கு....

[தொடரும்]

பகுதி- 6

189 comments:

said...

திடுக் திடுக் கென அடுத்த பாகம் ....
படித்து முடித்தேன்..
ரசனையான நடை...
சான்ஸே இல்லை..திவ்யா..!!

:)))

said...

//அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்! //

அட்ரா சக்கை.... :))
திவ்யா மின்னுது கவிதைகள்....
கலக்குமா நீ...
:)))

said...

//கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு. //

மிகவும் சரியான ஒன்று ... எப்படி திவ்யா இப்படி
ஆங்காங்கே அறிவுரைகளை அள்ளி வழங்கறே..?
simply Superb...
:))))

said...

//மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்... //

ம்ம்ம்ம்.... அப்படியா என்ன திவ்யா..?
;)))))

said...

அழகான புதிருக்கு
அருமையான முடிவு...
சொன்ன விதம்
கொள்ளையிட்டது மனதை...

எப்போ திவ்யா அடுத்த பாகம்..? சீக்கிரமா
ஒரு ப்ளைட் புடுச்சு அனுப்புமா... :))))

said...

இதோ வந்துட்டேன்...:)

said...

பதிவ படிச்சுட்டு வாங்க தமிழன்...

said...

அதானே படிச்சுட்டு வந்துதான கருத்த சொல்லணும்...;)

said...

திவ்யா எப்போவும் போல கலக்கல்..

எப்படிங்க இப்படிலாம்,,,,,

அடுத்த பகுதி எப்போ!!!!

said...

நான்தான் சொன்னேனே...
கதை கொஞ்சம் பெரிசுன்னு...:)

said...

கதைக்கு நல்ல முடிவுதான் வரும் எனக்கு தெரிஞ்சு போச்சு...

said...

கதை நல்லா போயிட்டிருக்கு! வாழ்த்துக்கள் மாஸ்டர்...

said...

\\\
மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...
///

ம்ம்ம்...

said...

மிச்சத்துக்கு அப்புறமா வாறேன்..:)

said...

நெஞ்சு கனக்கும்படி கடைசியில், இப்படியா பண்ணுவது. ஐயோ அடுத்து என்ன ஆகப்போகுதோ என்ற ஆவல் ஒவ்வொரு வரியைப்ப் படிக்கும் போதும் ஏற்படுகிறது. என்ன தான் கதையென்றாலும், ஏதோ நம் கண் முன்னே எல்லாம் நடப்பது போல் இருக்கிறது. காதலர்கள் பிரியலாம். ஓகே. ஆனால் அன்பானதொரு காதல் தம்பதியினரை பிரித்து விடாதீங்க.

அடுத்த பாகத்துல "மாப்பிள்ளை, நந்தினி ஒரு மகனை பெற்றெடுத்திருக்கிறாள்" என்று அவள் அப்பா சொல்லணும். அதை விட்டுட்டு ஏடா கூடமா ஏதாவது ஆச்சு.....

Absolutely wonderful :)

said...

நெஞ்சு கனக்கும்படி கடைசியில், இப்படியா பண்ணுவது. ஐயோ அடுத்து என்ன ஆகப்போகுதோ என்ற ஆவல் ஒவ்வொரு வரியைப்ப் படிக்கும் போதும் ஏற்படுகிறது. என்ன தான் கதையென்றாலும், ஏதோ நம் கண் முன்னே எல்லாம் நடப்பது போல் இருக்கிறது. காதலர்கள் பிரியலாம். ஓகே. ஆனால் அன்பானதொரு காதல் தம்பதியினரை பிரித்து விடாதீங்க.

அடுத்த பாகத்துல "மாப்பிள்ளை, நந்தினி ஒரு மகனை பெற்றெடுத்திருக்கிறாள்" என்று அவள் அப்பா சொல்லணும். அதை விட்டுட்டு ஏடா கூடமா ஏதாவது ஆச்சு.....

Absolutely wonderful :)

said...

Not sure, whether my comments were posted properly. So I again repeat,"ABSOLUTELY MARVELLOUS"

\\சாவு நம்மை தேடி வரவேண்டும்
நானோ
சாவை தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன்
என் நாட்களை எண்ணும்
புண்ணியம் பெற்றிருக்கிறேன்..\\

புண்ணியமா இது?

\\மகனின் போக்கில் மாற்றத்தை உணராமலில்லை கார்த்திக்கின் அம்மா.
\\
அம்மாவை டபாய்க்க முடியுமா?

said...

\\என்னை கொள்ளைக்
கொண்ட கள்வனே
புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...??
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொருங்கி போகிறேன்...
சில சமயங்களில்...\\

பயங்கர டச்சிங்க் வரிகள்

said...

Dhivya,
Super as usual.. next eppo?

said...

கதையை எப்படியும் நீ சோகமா முடிக்க மாட்டனு எனக்கு நம்பிக்கை இருக்கு :-)

said...

Hello... Ithellaam overaa illa??

avanathaan kaapaathiteengale... appuram ethukku Nandhini mela twist vaikareenga? :@@@

/விட்டத்தியான//
apdiina??

said...

திகில் திருப்பங்களோடு..


கதைய சோகமா முடிச்சிடாதீங்க..

said...

// வெட்டிப்பயல் said...
கதையை எப்படியும் நீ சோகமா முடிக்க மாட்டனு எனக்கு நம்பிக்கை இருக்கு :-)//

ரிப்பீட்டேய்.....

said...

ஒரு வழியா Hero பிரச்சனைய தீர்த்தீங்கனு நெனச்ச, பாவம் Heroine-க்கு பிரச்சனைய உண்டாக்கிடீங்களே..

:(

said...

அடுத்து பகுதி எப்போ..?????

said...

WE WANT HAPPY FINISHING..
WE WANT HAPPY FINISHING..

WE WANT HAPPY FINISHING..

WE WANT HAPPY FINISHING..


WE WANT HAPPY FINISHING..WE WANT HAPPY FINISHING..

said...

If you are in the idea of changing ur template..

http://bloggertricks.com/2008/06/blogger-templates-galore.html

just visit here. i crossed this site today..
:)

said...

\\
நவீன் ப்ரகாஷ் said...
திடுக் திடுக் கென அடுத்த பாகம் ....
படித்து முடித்தேன்..
ரசனையான நடை...
சான்ஸே இல்லை..திவ்யா..!!

:)))\\

வாங்க கவிஞரே!!

திடுக் திடுக்கென இருந்ததா??

கதையோடு மிகவும் ஒன்றிபோய்ட்டீங்க போலிருக்கு:)))

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்! //

அட்ரா சக்கை.... :))
திவ்யா மின்னுது கவிதைகள்....
கலக்குமா நீ...
:)))\\


கவிஞரின் மின்னும் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!!

said...

//அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்!
//

அடடா...அடடா...

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு. //

மிகவும் சரியான ஒன்று ... எப்படி திவ்யா இப்படி
ஆங்காங்கே அறிவுரைகளை அள்ளி வழங்கறே..?
simply Superb...
:))))
\\


அட.......சந்தடி சாக்குல கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தா , அதையும் கரெக்ட்டா குறிப்பிட்டுட்டீங்க:)))))

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்... //

ம்ம்ம்ம்.... அப்படியா என்ன திவ்யா..?
;)))))\


பிரிவின் வலி கொடுமையானது:(((

said...

//எல்லா ஆம்பிள்ளைகளும் இப்படிதான்.......கல்யாணம் ஆகுற வரைக்கும் ' ஜிம்' .......'வொர்க் அவுட்' னு muscled ஆ திரியறது, //

என்ன திவ்யா சைக்கிள் கேப்ல இப்படி போட்டு தாக்கீட்டீங்களே ??

இது சரியா ?

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
அழகான புதிருக்கு
அருமையான முடிவு...
சொன்ன விதம்
கொள்ளையிட்டது மனதை...

எப்போ திவ்யா அடுத்த பாகம்..? சீக்கிரமா
ஒரு ப்ளைட் புடுச்சு அனுப்புமா... :))))\\


மனம்திறந்த பாராட்டிற்கு நன்றி நவீன்!!

அடுத்த பாகம் ஃப்ளைட்டுல அனுப்பனுமா???
ஏர் டிக்கெட்/ஷிப்பிங் சார்ஜ் நீங்க பே பண்ணினா....கண்டிப்பா அனுப்பிடுறேன்:))

said...

\ தமிழன்... said...
இதோ வந்துட்டேன்...:)
\\


வாங்க வாங்க:))

said...

\ தமிழன்... said...
பதிவ படிச்சுட்டு வாங்க தமிழன்...\\

:))

said...

\\ தமிழன்... said...
அதானே படிச்சுட்டு வந்துதான கருத்த சொல்லணும்...;)
\\


பொறுமையா படிச்சுட்டு வாங்க....

said...

//தாய் கைம்பெண்ணாக தன்னை வளர்க்க சிரமப்பட்டது போன்று பொருளாதார ரீதியில் கஷ்டபடக்கூடாது என்ற எண்ணத்துடன், அவளுக்கு தன் சேமிப்பு, சொத்து மற்றும் இன்ஷுரன்ஸ் விபரங்கள், என அனைத்தையும் விவரிக்க ஆரம்பித்தான்.//


இது அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்ல டிப்..

முன்னாடி உங்க பதிவுல படிச்சிருக்கேன்.. :))

said...

\\ எழில்பாரதி said...
திவ்யா எப்போவும் போல கலக்கல்..

எப்படிங்க இப்படிலாம்,,,,,

அடுத்த பகுதி எப்போ!!!!\\


வாங்க கவியரசி !!

உங்கள் பாராட்டிற்கு நன்றி!!

அடுத்த பகுதி......எப்போன்னு எனக்கே தெரில :(((

said...

\\ தமிழன்... said...
நான்தான் சொன்னேனே...
கதை கொஞ்சம் பெரிசுன்னு...:)\

நீங்க எப்ப தப்பா சொல்லிருக்கிறீங்க தமிழன்?

எப்பவும் கரெக்ட்டாதான் கண்டுபிடிப்பீங்க!!

said...

\ தமிழன்... said...
கதைக்கு நல்ல முடிவுதான் வரும் எனக்கு தெரிஞ்சு போச்சு...\

அட.....அப்படியா??

பார்க்கலாம் உங்கள் யூகம் சரியா, தப்பான்னு:))

said...

\\ தமிழன்... said...
கதை நல்லா போயிட்டிருக்கு! வாழ்த்துக்கள் மாஸ்டர்...\\


வாழ்த்துக்களுக்கு நன்றி மிஸ்டர்......தமிழன்!!

said...

//..........தன் பிளட் டெஸ்ட் ரிசல்ட்டின் ரிப்போர்ட்டின் ஆள் மாறாட்டம்.
//

இத...இதத்தான் எதிர்பாத்தேன்..

பாசிட்டிவ் ட்விஸ்டிற்கு நன்றி :))

said...

\\ தமிழன்... said...
\\\
மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...
///

ம்ம்ம்...\\


:(

said...

\ தமிழன்... said...
மிச்சத்துக்கு அப்புறமா வாறேன்..:)\


வருகைக்கும், அள்ளித்தெளித்த பின்னூட்டங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி தமிழன்!!!

said...

\\ விஜய் said...
நெஞ்சு கனக்கும்படி கடைசியில், இப்படியா பண்ணுவது. ஐயோ அடுத்து என்ன ஆகப்போகுதோ என்ற ஆவல் ஒவ்வொரு வரியைப்ப் படிக்கும் போதும் ஏற்படுகிறது. என்ன தான் கதையென்றாலும், ஏதோ நம் கண் முன்னே எல்லாம் நடப்பது போல் இருக்கிறது. காதலர்கள் பிரியலாம். ஓகே. ஆனால் அன்பானதொரு காதல் தம்பதியினரை பிரித்து விடாதீங்க.

அடுத்த பாகத்துல "மாப்பிள்ளை, நந்தினி ஒரு மகனை பெற்றெடுத்திருக்கிறாள்" என்று அவள் அப்பா சொல்லணும். அதை விட்டுட்டு ஏடா கூடமா ஏதாவது ஆச்சு.....

Absolutely wonderful :)\\


வாங்க விஜய்!!

பொறுமையுடன்.....இந்த பகுதி வெளியிடும்வரை காத்திருந்ததிற்கு நன்றி!!


ஏடாகூடமா முடிவு இருக்க கூடாதா??:(

பேசாம......இந்த கதையின் அடுத்த பாகத்தை விஜய் தொடர்வார் அப்படின்னு சொல்லிடவா??
just kidding:))

வெயிட் பண்ணுங்க விஜய்.....அடுத்த பாகம் எப்படி போகுதுன்னு பார்க்கலாம்!!

said...

\\ விஜய் said...
Not sure, whether my comments were posted properly. So I again repeat,"ABSOLUTELY MARVELLOUS"

\\சாவு நம்மை தேடி வரவேண்டும்
நானோ
சாவை தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன்
என் நாட்களை எண்ணும்
புண்ணியம் பெற்றிருக்கிறேன்..\\

புண்ணியமா இது?

\\மகனின் போக்கில் மாற்றத்தை உணராமலில்லை கார்த்திக்கின் அம்மா.
\\
அம்மாவை டபாய்க்க முடியுமா?\\



அதானே அம்மா கண்ணுல தப்ப முடியுமா:)))

கருத்திற்கு நன்றி விஜய்!!

said...

\\ விஜய் said...
\\என்னை கொள்ளைக்
கொண்ட கள்வனே
புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...??
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொருங்கி போகிறேன்...
சில சமயங்களில்...\\

பயங்கர டச்சிங்க் வரிகள்\\


நன்றி..நன்றி......நன்றி விஜய்!!

said...

//"என்........னா.....ச்சு........." வறண்டு போன நாவிலிருந்து வார்த்தைகள் உடைந்து வெளிவந்தன கார்த்திக்கிடமிருந்து.

"மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............"

கண் இருண்டது கார்த்திக்கிற்கு....//



கடைசில இன்னொரு ட்விஸ்ட்டா ?


நல்ல நாவல் போல போய்ட்டிருக்குங்க. :)) வாழ்த்துக்கள்.


இது நாவல் எழுத உங்களுடைய முயற்சினு நினைக்கிறேன்.


ஓரே குறை என்னான்னா படிக்க வெய்ட் பண்ண வேண்டியிருக்கு..:((

said...

\\ சந்தோஷ் = Santhosh said...
Dhivya,
Super as usual.. next eppo?\\



வாங்க சந்தோஷ்.....வாங்க!!

நீண்ட இடைவெளிக்கு பின்.....என் வலைதளம் வந்திருக்கிறீங்க சந்தோஷ், மிக்க மகிழ்ச்சி!!

பாராட்டிற்கு நன்றி!

said...

\\ வெட்டிப்பயல் said...
கதையை எப்படியும் நீ சோகமா முடிக்க மாட்டனு எனக்கு நம்பிக்கை இருக்கு :-)\\


வாங்க அண்ணா,

அப்படி ஒரு நம்பிக்கைவேற இருக்கா என் மேல:-)

வருகைக்கு நன்றி!!

said...

\\ ஜி said...
Hello... Ithellaam overaa illa??

avanathaan kaapaathiteengale... appuram ethukku Nandhini mela twist vaikareenga? :@@@

/விட்டத்தியான//
apdiina??\\


வாங்க ஜி!!

நந்தினி மேல ரொம்பத்தான் அக்கறை காட்டூறீங்க....கதாசிரியரே:))
கதைக்கு ஒரு டிவிஸ்ட் & த்ரில் வேணாமா??



\
/விட்டத்தியான//
apdiina??\\

அப்படினா......'விரக்தியான' அப்படின்னு அர்த்தம்.

said...

\\ M.Saravana Kumar said...
திகில் திருப்பங்களோடு..


கதைய சோகமா முடிச்சிடாதீங்க..\\


வாங்க சரவணகுமார்!!

சோக கவிதைகள் எழுதும் கவிஞருக்கே......கதையின் முடிவு சோகமாக இருக்க கூடாது என்ற விருப்பமா??

said...

\\ M.Saravana Kumar said...
// வெட்டிப்பயல் said...
கதையை எப்படியும் நீ சோகமா முடிக்க மாட்டனு எனக்கு நம்பிக்கை இருக்கு :-)//

ரிப்பீட்டேய்.....\\

:)))

said...

\\ M.Saravana Kumar said...
ஒரு வழியா Hero பிரச்சனைய தீர்த்தீங்கனு நெனச்ச, பாவம் Heroine-க்கு பிரச்சனைய உண்டாக்கிடீங்களே..

:(\\


ரொம்ப கவலைப்படுறீங்க போலிருக்கு,
கதாபாத்திரங்களோடு.....ரொம்ப ஒன்றி போய்ட்டீங்களோ??

said...

\\ M.Saravana Kumar said...
அடுத்து பகுதி எப்போ..?????\\


இப்போதானேங்க இந்த பகுதியே போட்டிருக்கிறேன்....கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, சீக்கிரம் அடுத்த பகுதியும் பதிவிடுகிறேன்!!

said...

\\ M.Saravana Kumar said...
WE WANT HAPPY FINISHING..
WE WANT HAPPY FINISHING..

WE WANT HAPPY FINISHING..

WE WANT HAPPY FINISHING..


WE WANT HAPPY FINISHING..WE WANT HAPPY FINISHING..\


:)))

said...

\\ M.Saravana Kumar said...
If you are in the idea of changing ur template..

http://bloggertricks.com/2008/06/blogger-templates-galore.html

just visit here. i crossed this site today..
:)
\\


thanks for your visit, comments & sharing the link Saravanakumar!!

said...

//சோக கவிதைகள் எழுதும் கவிஞருக்கே......கதையின் முடிவு சோகமாக இருக்க கூடாது என்ற விருப்பமா??//

நம்மதான் சோகமா எழுதிட்டு இருக்கோம்.. படிக்கிற கதைகளிலாவது மகிழ்ச்சி இருக்கட்டுமே என்றுதான்..
:)

said...

ரொம்ப நல்லா கதை எழுதுகிறீர்கள்..

படிப்பவர்களின் நாடித்துடிப்பை நன்கறிந்து வைத்துஇருகிறீர்கள்...

:)

KEEP ROCKING..

said...

எங்கே கார்த்திக்கை வைத்து கதை சோகமாக முடிய போகிறதோ என்று நினைத்தேன். இந்த பதிவின் நடுவில் அப்பாடா அப்படி ஒன்றும் இல்லை என இருந்தது...ஆனால், கடைசியில் வெறும் மாதிரியாக கொண்டு வந்து விட்டீர்கள்...
tick tick tick...beating till the next part comes in!!!

Anonymous said...

என்ன திவ்யா இது? இப்படி ஒரு சஸ்பென்ஸ்... அடுத்த பாகம் எப்படிப் போகுமோ என்ற டென்ஷன் எனக்கு. முடிவு சுபமா இருந்தா நல்லா இருக்கும் :)

said...

கத இதோட முடியபோகுது நெனச்சா அடுத்து ஒரு சஸ்பென்ஸ்!!

said...

//சிறிது நேரம் கண்களை மூடி, காதலுடன் கார்த்திக்கும் அவளும் கழித்த தித்திக்கும் தருணங்களை நினைத்துக்கொண்டாள்.//

இங்க நம்ம ஏ.ஆர்.இரகுமான கூப்டு ஒரு ஸாங்க் வச்சிரலாம்

said...

//மறுமுறை பரிசோதித்தும், HIV- நெகடிவ் என்ற ரிசல்ட் வர , கார்த்திக் குழம்பி போனான்.//

இரசிகர்கள் கேட்டுகொண்டதற்கினங்க தீர்ப்பை மாற்றியதற்கு நன்றி! நன்றி!! நன்றி!!

said...

வரிகளும் கவிதைகளுமாய் கதை செல்லும் விதம் அருமை திவ்யா :)

said...

\\கணவன் மனைவிக்குள் எந்த ஒரு மனஸ்தாபம் இருந்தாலும் சரி, கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு.
\\

நல்ல பழக்கம் :))

மறுபடியும் சஸ்பென்ஸா..தாங்காதும்மா உலகம்...பாவம் உங்க ரசிகர்களை இப்படியா பண்றது.ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..வெட்டி அண்ணாவோட நம்பிக்கைய காப்பாத்துங்க திவ்யா மாஸ்டர்.....

உங்க கதைய படிக்கும் போது ஒன்னு தோணுது "பிரிக்க முடியாதது திவ்யாவின் கதையும் கவிதையும்" :)

said...

சினிமாவுல பாட்டு போடுறமாதிரி, தொடர் கதையில அருமையான கவிதைகளை அதுவும் இடத்துக்கு தகுந்த மாதிரி எழுதியிருக்கீங்க. சூழ்நிலைக்கு தகுந்த கவிதைகள். தூள் கிளப்பிட்டீங்க.

//மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்... // - உணர்வுபூர்வமான வார்த்தைகள். உண்மையும் கூட.

நந்தினிக்கு ஒன்னும் ஆயிடலையே ? ( எனக்கு மட்டும் தனிமடல்லயாவது சொல்லிடுங்க திவ்யா. )

said...

அடடா கதையில பயங்கர திருப்பங்கள் - அடுத்த பகுதிக்கு வெயிடிங் !!!!

said...

//சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொருங்கி போகிறேன்...
சில சமயங்களில்...//

கலக்கல் திவ்யா...

said...

கதை இப்டி போகும்ன்னு எதிர் பாத்தேன் :-) ஆனா கடசில, திடுக் திடுக்குன்னு பண்ணிட்டீங்க...அடுத்த பாகம் தான் கடைசியா? இல்ல இன்னும் நிறைய இருக்கா?

said...

//வீட்டை நெருங்க நெருங்க கார்த்திக்கின் இதயம் வெளியில் வந்துவிடும் போல் வேகமாக துடித்தது.//

இவ்வளவு சுவாரஸ்சியமான கதையை படிக்கும்போது, எங்களுக்கும் அதே உணர்வு தான் வருது!:)

said...

//மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...//

மனசு ரொம்ப வலித்தது! அழகான, ஆழமான வரிகள்! கவிதையும் கலக்கலா வருது. வாழ்த்துகள்!

said...

soooober...typical mega serial mathiriye poguthu kathai..adutha part sekrama postunga

said...

ஆஹா திவ்யா அற்புதம்... புது போஸ்ட் போட்டு இருக்கீங்கனு ஆர்வமாய் படிக்க வந்தேன்... என்னை மறந்து ரசிக்க ஆரம்பித்து விட்டேன்...

கதையின் நடை மிக அற்புதம்... கதையின் நாயகனின் நெஞ்சம் படபடத்த அதே வேகத்தில் படிப்பவர்களின் நெஞ்சமும் படபடக்க வெய்திருக்கிறீர்கள்...
கதைக்குள் எத்துனை அற்புதமான கருத்துக்கள்... கணவனை தாயிடமும் விட்டுக்கொடுக்காத மனைவி... மனைவியை காதலியாக காதலிக்கும் கணவன்... தாயின் கஷ்டங்களை அழகாக புரிந்துகொண்ட மகன்...

//உன் களங்கமில்லா அன்பு
என் கயமையையும்
மன்னிக்குமென தெரியுமடி செல்லமே!!
தெரிந்தேதான்
உன்னைவிட்டு விலகுகிறேன் - ஆனாலும்
கண்மணியே...
என் உணர்வோடு
கலந்துவிட்ட உன்னை
உயிருடன் கொன்றுவிட
மனதில்லையடி தங்கமே!!!//

வார்த்தைகள் மனதின் ஆழத்தில் உங்கள் எண்ணங்கள விதைகின்றது... வாழ்த்துக்கள் திவ்யா... நீங்கள் மேலும் மேலும் சிறப்பாக எழுத என் மனமார்ந்த் வாழ்த்துக்கள்...

said...

த‌மிழ் மாங்க‌னி சொன்ன‌ மாதிரி என‌க்கும் ம‌ன‌சு ரொம்ப‌ வ‌லித்த‌து. பிரிவு என்ப‌து ஒவ்வொரு நொடியும் உயிர் போகும். ரொம்ப‌ கெத்தா க‌தைய‌ எடுத்துட்டு போறீங்க‌. சுக‌மா தான் முடிப்பீங்க‌னு ந‌ம்ப‌றேன். :)

எல்லா க‌விதைக‌ளும் சூப்ப‌ர். நீங்க‌ ஏதாவ‌து க‌விதை தொகுப்பு வெளியிட‌லாமே?

said...

ஐந்தாம் பகுதி வெரி த்ரில்லிங்

said...

படிக்கும் போது ஒவ்வொரு வரிக்கும் சீட்டின் நுனிக்கே வந்துவிட வைக்கும் ட்விஸ்ட்கள் சூப்பர்

said...

எல்லோரும் கதை சோகமாக முடியக் கூடாதுன்னு கருத்து சொல்றாங்க.

கதையை சோகமாகவே முடித்து விடுங்கள் என்பது என் கருத்து.

சோகமும் ஒரு உணர்ச்சிதானே
அதையும் கொஞ்சம் அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

டைரக்டர் பாலாவின் சேது, நந்தா, பிதா மகன், டைரக்டர் அமீரின் பருத்தி வீரன் என்று எத்தனையோ சோக க்ளைமாக்ஸ் படங்களை நாம் ரசிக்கவில்லையா?

பாலா, அமீர் வரிசையில் அடுத்ததாக நமக்கு கிடைத்த ஒரு நல்ல கதாசிரியர் திவ்யா

என்ன அவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் இடையில் அதிக நாட்கள் (சில வருடங்கள்) காக்க வைப்பார்கள்.
நீங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் காக்க வைக்கிறீர்கள்.
பரவாயில்லை.


விரைவில் அடுத்து பகுதியை எதிர்பார்த்து...
புகழன்

said...

என்னங்க இப்பிடி ட்விஸ்ட் குடுத்துட்டீங்க ?
கிராமத்துல ஒரு climax பாட்டு போட்டு "முற்றும்" போடுவிங்கனு பாத்தா...

said...

இங்க பாருங்க இப்போவே சொல்லிடறேன்...

அந்த புள்ள (அதான் நம்ம நந்தினி) ஒரு தப்பும் பண்ணல...

nanda,paruthi_veeran style-la
முடிக்கிறேன் பேர்வழினு சோகமா முடிசீங்க.... அப்பறம் cleveland-la இருந்து ஒரு tanker அனுப்பிடுவேன் :-)

said...

(read: vijay tv "ad" style...)

ஆள் மாராட்டதினால் உயிர் பிழைத்த கார்த்திக்...

கார்த்திக்கை தொடர்பு கொள்ள முடியாத நந்தினியின் உறவினர்கள்...

வளைகாப்பிற்கு சென்ற நந்தினி-க்கு நேர்ந்த பயங்கரம் என்ன ?

"நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்" -- பகுதி 6

அடுத்து வருவது... உங்கள் blogil.. :-)


(seekiram adutha part potrunga master :P)

said...

ஆறாம் பகுதி ஆனந்த முடிவை நோக்கி.....

எல்லோரும் விரும்புவது போல்
"என்றும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்"
எழுத்தாளர் தொடர வேண்டும்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

கதையை நேத்தே படிச்சுட்டேன். கமெண்ட் போடத்தான் லேட்டாச்சுயிடுச்சு சாரி திவ்யா,

கார்த்திக்கை காப்பாத்திட்டு இப்ப நந்தினிக்கு சிக்கலை கொண்டு வந்திட்டங்க போல இருக்கே. ஒவ்வொரு பகுதி முடிக்கும் போதும் இப்படி பி.பி. ஏத்தறிங்களே இது நியாமா?

said...

ஒரே ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் ஆ இருக்கு...அடுத்து என்னா நடக்குமோ...

said...

//Arunkumar said...
என்னங்க இப்பிடி ட்விஸ்ட் குடுத்துட்டீங்க ?
கிராமத்துல ஒரு climax பாட்டு போட்டு "முற்றும்" போடுவிங்கனு பாத்தா...
//

அருண் நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிடீங்க...great men think alike னு இத தான் சொன்னாங்களோ(நம்மள நாமே பாராடிகலனா மத்தவங்க எப்டி பாராட்டுவாங்க )
:-)))

said...

//nanda,paruthi_veeran style-la
முடிக்கிறேன் பேர்வழினு சோகமா முடிசீங்க.... அப்பறம் cleveland-la இருந்து ஒரு tanker அனுப்பிடுவேன் :-)
//

ஆமா அப்புறம் புஷ் கிட்ட சொல்லி அமரிக்க தேர்தல தள்ளி போட சொல்லுவோம் :-)

said...

//புகழன் said...
எல்லோரும் கதை சோகமாக முடியக் கூடாதுன்னு கருத்து சொல்றாங்க.

கதையை சோகமாகவே முடித்து விடுங்கள் என்பது என் கருத்து.

சோகமும் ஒரு உணர்ச்சிதானே
அதையும் கொஞ்சம் அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
//

கல்யாணம் பண்ணிட்டீங்களா...இல்லனா பண்ணிக்குங்க...டெய்லி சோகத்த அனுபவிக்கலாம் :-)

said...

//கணவன் மனைவிக்குள் எந்த ஒரு மனஸ்தாபம் இருந்தாலும் சரி, கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு.
கணவனை அவரது அன்னையிடம் கூட விட்டுக்கொடுத்து பேசுவதை தவிர்ப்பாள்.
//

ரொம்ப நல்ல பழக்கம் :-)

//"இப்போ எதுக்கு அழுற............எல்லாத்தையும் சேர்த்து வைச்சுக்கோ........மொத்தமா அழுதுக்க"//

very touching...

//மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...
//

மிக மிக அற்புதமான வரிகள்.



சஸ்பென்ஸ் தாங்க முடியல

Anonymous said...

padikaravangaloda naadi thudippa seriya therinju vechirukeenga divya...unga kadhaya padikkum bodhu padam paakara maadhiriye kaatchigal onnunnum manasula viriyudhu...

Anonymous said...

adhulayum unga kavidhaigal migundha baadhipa manasula undaakudhu...unga ezhuthu pani thodarndhutte irukka ennoda vaazhthukkal divya...

Anonymous said...

indha dhadavayum thirupam super...mudikka poreengannu nenachaa marubadiyum oru periya twist koduthuteenga...edhir paakadha konangalla kadhai svaarasiymaa payanikkudhu...hmmm adutha pagudhila kandipaa subama mudichudunga :-)

said...

Ayyo...yean suspense mele suspense vechu enge BP ye yethure....

seekiram adutha bagam podunga..appdiye enakum mail podunga......padiche theeranum :-)

super aa eluthure..nalla improvement irukku ...appadiye VLSI la yum improve pannunga :-)

said...

super-a irukkunga kathai...

waiting for next part...

said...

// அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்! //

கலகலவென்று சிரித்தாள்....
அவள் சிரித்த சிரிப்பில் கண்ணாடி வளையல்கள் சிணுங்கின ....
இப்பிடிதாங்க நான் படிச்சிருக்கேன் ஆனா இந்த கவிதையில...

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ..... சும்மா பின்றீங்க.

said...

// "ஹேய் ...ஜொள்ளா........என்னடா அப்படி பார்ர்கிற...பெருசா நேத்து ராத்திரி மூஞ்சி திருப்பிட்டு தூங்கின.....இப்போ...இப்படி பார்க்கிறே, திருட்டுப் பையா!!!" //

இந்த வரிகள் திவ்யப்ரியா எழுதியிருந்தால் கமேண்டுரதுல ரனகளப்படுத்தியிருப்பேன்... இங்க OK.

said...

// "என்னங்க நீங்க...எப்ப பாரு டல்லடிக்கிறீங்க, 'ஜிம்'க்கு போய் 'ஜம்'முன்னு எவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தீங்க..........இப்ப பாருங்க எப்படி இருக்கிறீங்கன்னு?....." //

டிப்ஸ் திவ்யா-னு அவ்வப்போது நினைவுபடுத்துகிறீர்கள்....

said...

// சாவு நம்மை தேடி வரவேண்டும்
நானோ
சாவை தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன்
என் நாட்களை எண்ணும்
புண்ணியம் பெற்றிருக்கிறேன்.. //

ஒரே சோகம்..

said...

// தெரிந்தேதான்
உன்னைவிட்டு விலகுகிறேன் - ஆனாலும்
கண்மணியே...
என் உணர்வோடு
கலந்துவிட்ட உன்னை
உயிருடன் கொன்றுவிட
மனதில்லையடி தங்கமே!! //

இந்த வரிகள்தாங்க அருமை... அருமை...

said...

// "இப்போ எதுக்குங்க.....எனக்கு இந்த விபரமெல்லாம்??"

"சொல்லித்தந்தா.......தெரிஞ்சுக்கோ......ஏன்? எதுக்கு?ன்னு கேட்காதே"

"இப்போ நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் என்னங்க??"

"ஒன்னும் தெரியாத மரமண்டையாவே உங்க அப்பா வளர்த்து வைச்சிருக்காரு..........இப்படி பட்டிக்காடாவே இருக்க போறியா??"

வெடுக்கென்று கார்த்திக் அப்படி கூறவும், அகல விரிந்த நந்தினியின் கண்களில் நீர் தேம்பியது. //

போன பகுதில கூட நான் சொன்னேன் சூழ்நிலைகளில் ரொம்ப அருமையாகவே எழுதுகிறீர்கள்....

said...

வழக்கம்போல் கதை உங்களது எளிமையான நடை.

அதே நேரத்தில் வேகமும்கூட.

கவிதை சொல்லவே வேண்டாம் மிக அருமை....

சூழ்நிலைகளை கையாள்வதில் தேர்ச்சி...

ம்.. ம்.. அசத்துங்க...

said...

// பாலா, அமீர் வரிசையில் அடுத்ததாக நமக்கு கிடைத்த ஒரு நல்ல கதாசிரியர் திவ்யா //


மிகச் சரியாக சொல்லியிருக்கிறார்கள்...

ஆனால் மனசுக்குள் மத்தாப்பு திவ்யா சந்தோசமாகத்தான் கதையை முடிப்பார்...

said...

Good writing style Divya.
Can't wait for the next part.

said...

அடுத்த பதிவு எப்போ ?

மக்கள் எல்லாரும் waitingla இருக்கோம்ல...

சீக்கிரம் pls...

said...

அசத்தலான நடையில் கலக்கலான கவிதைகளுடன் அருமை. கலக்குங்கள்!!

said...

திவ்யா, கவிதை சோலையில் எனது கருத்தை தெரிவிக்க இயலவில்லை, அனுமதி உண்டா?

said...

///////////////////////////////////

what happened?? Hope everything is fine at ur end!

- Sathish

said...

\\ M.Saravana Kumar said...
//சோக கவிதைகள் எழுதும் கவிஞருக்கே......கதையின் முடிவு சோகமாக இருக்க கூடாது என்ற விருப்பமா??//

நம்மதான் சோகமா எழுதிட்டு இருக்கோம்.. படிக்கிற கதைகளிலாவது மகிழ்ச்சி இருக்கட்டுமே என்றுதான்..
:)\\


நாங்களும் உங்களிடமிருந்து........சந்தோஷமான கவிதைகள் எதிர்பார்கிறோம் சரவணன்!!

said...

\\ M.Saravana Kumar said...
ரொம்ப நல்லா கதை எழுதுகிறீர்கள்..

படிப்பவர்களின் நாடித்துடிப்பை நன்கறிந்து வைத்துஇருகிறீர்கள்...

:)

KEEP ROCKING..\\

நாடிஜோஷ்யம் எல்லாம் தெரியாதுங்க:(((

உங்கள் உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சரவணா.

said...

\\ Mathu said...
எங்கே கார்த்திக்கை வைத்து கதை சோகமாக முடிய போகிறதோ என்று நினைத்தேன். இந்த பதிவின் நடுவில் அப்பாடா அப்படி ஒன்றும் இல்லை என இருந்தது...ஆனால், கடைசியில் வெறும் மாதிரியாக கொண்டு வந்து விட்டீர்கள்...
tick tick tick...beating till the next part comes in!!!\\

அப்பாட......தொடர்கதை ஒருவழியா முடிந்ததுன்னு சந்தோஷப்பட்டீங்களா மது??
வெயிட்....வெயிட்....அடுத்த பகுதில முடிச்சுடலாம்!!

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மது!!

said...

அடுத்த பதிவு எப்பங்க ?

இப்ப ரொம்ப பிசியாகீட்டிங்க போல..

said...

\\ இனியவள் புனிதா said...
என்ன திவ்யா இது? இப்படி ஒரு சஸ்பென்ஸ்... அடுத்த பாகம் எப்படிப் போகுமோ என்ற டென்ஷன் எனக்கு. முடிவு சுபமா இருந்தா நல்லா இருக்கும் :)\\


வாங்க புனிதா,

அடுத்த பகுதிக்காக டென்ஷனோடு வெயிட் பண்றீங்களா??
கொஞ்சம் பொறுமையோடு வெயிட் பண்ணுங்க சீக்கிரம் அடுத்த பகுதி வெளிவிடுறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி புனிதா!!

said...

\\ sathish said...
கத இதோட முடியபோகுது நெனச்சா அடுத்து ஒரு சஸ்பென்ஸ்!!\\


வாங்க சதீஷ்,
அவ்வளவு சீக்கிரம் கதையை முடிச்சிடுவோமா......:))

said...

\\ sathish said...
//சிறிது நேரம் கண்களை மூடி, காதலுடன் கார்த்திக்கும் அவளும் கழித்த தித்திக்கும் தருணங்களை நினைத்துக்கொண்டாள்.//

இங்க நம்ம ஏ.ஆர்.இரகுமான கூப்டு ஒரு ஸாங்க் வச்சிரலாம்\\


அட .....கவிஞர் சதீஷ் சொல்ற ஐடியா சூப்பரா இருக்குதே!!

said...

\\ sathish said...
//மறுமுறை பரிசோதித்தும், HIV- நெகடிவ் என்ற ரிசல்ட் வர , கார்த்திக் குழம்பி போனான்.//

இரசிகர்கள் கேட்டுகொண்டதற்கினங்க தீர்ப்பை மாற்றியதற்கு நன்றி! நன்றி!! நன்றி!!\\


கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை சதீஷ்....இது தான் நான் முதலிலேயே வைத்திருந்த கதையின் சம்பவம்!!

said...

\\ sathish said...
வரிகளும் கவிதைகளுமாய் கதை செல்லும் விதம் அருமை திவ்யா :)\\

பாராட்டிற்கு மிக்க நன்றி சதீஷ்!!

said...

\\ Ramya Ramani said...
\\கணவன் மனைவிக்குள் எந்த ஒரு மனஸ்தாபம் இருந்தாலும் சரி, கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு.
\\

நல்ல பழக்கம் :))\\


வாங்க ரம்யா,
இந்த பழக்கம் திருமணமான எல்லா பெண்களும் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது!!



\\மறுபடியும் சஸ்பென்ஸா..தாங்காதும்மா உலகம்...பாவம் உங்க ரசிகர்களை இப்படியா பண்றது.ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..வெட்டி அண்ணாவோட நம்பிக்கைய காப்பாத்துங்க திவ்யா மாஸ்டர்.....\\


கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ரம்யா.......முடிவு அடுத்த பகுதியில் சொல்றேன்!!


\\உங்க கதைய படிக்கும் போது ஒன்னு தோணுது "பிரிக்க முடியாதது திவ்யாவின் கதையும் கவிதையும்" :)\\

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ரம்யா!!

said...

\\ ஜோசப் பால்ராஜ் said...
சினிமாவுல பாட்டு போடுறமாதிரி, தொடர் கதையில அருமையான கவிதைகளை அதுவும் இடத்துக்கு தகுந்த மாதிரி எழுதியிருக்கீங்க. சூழ்நிலைக்கு தகுந்த கவிதைகள். தூள் கிளப்பிட்டீங்க. \\


உங்கள் விரிவான விமர்சனத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஜோசஃப்!!



//மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்... // - உணர்வுபூர்வமான வார்த்தைகள். உண்மையும் கூட. \\


ஆமாம் ஜோசஃப்!



\நந்தினிக்கு ஒன்னும் ஆயிடலையே ? ( எனக்கு மட்டும் தனிமடல்லயாவது சொல்லிடுங்க திவ்யா. )\\


வெயிட்.....வெயிட்...சீக்கிரம் அடுத்த பகுதி வெளியிடுறேன், அப்போ தெரிந்துவிடும் முடிவு....ஸோ பொறுமையுடன் காத்திருங்கள்!!

said...

\\ மணிமொழியன் said...
அடடா கதையில பயங்கர திருப்பங்கள் - அடுத்த பகுதிக்கு வெயிடிங் !!!!\\


வாங்க மணிமொழியன்,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!!

said...

\ Divyapriya said...
//சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொருங்கி போகிறேன்...
சில சமயங்களில்...//

கலக்கல் திவ்யா...
\



நன்றி திவ்யப்ரியா:))

said...

\\ Divyapriya said...
கதை இப்டி போகும்ன்னு எதிர் பாத்தேன் :-) ஆனா கடசில, திடுக் திடுக்குன்னு பண்ணிட்டீங்க...அடுத்த பாகம் தான் கடைசியா? இல்ல இன்னும் நிறைய இருக்கா?\\


அடுத்த பகுதிதான் கடைசி......வருகைக்கு நன்றி திவ்யப்ரியா:)))

said...

\\ Thamizhmaangani said...
//வீட்டை நெருங்க நெருங்க கார்த்திக்கின் இதயம் வெளியில் வந்துவிடும் போல் வேகமாக துடித்தது.//

இவ்வளவு சுவாரஸ்சியமான கதையை படிக்கும்போது, எங்களுக்கும் அதே உணர்வு தான் வருது!:)\\



கதையுடன் ஒன்றிபோய்ட்டீங்களா தமிழ்மாங்கனி??

said...

\\ Thamizhmaangani said...
//மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...//

மனசு ரொம்ப வலித்தது! அழகான, ஆழமான வரிகள்! கவிதையும் கலக்கலா வருது. வாழ்த்துகள்!\\



இந்த வரிகள் எழுதும்போது எனக்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது :(
ஆனால்......பிரிவின் கொடுமை மரணத்தை விட கொடுமையானது, இல்லையா?


உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்மாங்கனி!!!

said...

\\ gils said...
soooober...typical mega serial mathiriye poguthu kathai..adutha part sekrama postunga
\\


நன்றி கில்ஸ்!!

said...

\\ priyamanaval said...
ஆஹா திவ்யா அற்புதம்... புது போஸ்ட் போட்டு இருக்கீங்கனு ஆர்வமாய் படிக்க வந்தேன்... என்னை மறந்து ரசிக்க ஆரம்பித்து விட்டேன்...\\


வாங்க ப்ரியா,
உங்கள் வருகைக்கும் , அழகான ரசிப்பிற்கும் நன்றி, நன்றி!!



\\கதையின் நடை மிக அற்புதம்... கதையின் நாயகனின் நெஞ்சம் படபடத்த அதே வேகத்தில் படிப்பவர்களின் நெஞ்சமும் படபடக்க வெய்திருக்கிறீர்கள்...
கதைக்குள் எத்துனை அற்புதமான கருத்துக்கள்... கணவனை தாயிடமும் விட்டுக்கொடுக்காத மனைவி... மனைவியை காதலியாக காதலிக்கும் கணவன்... தாயின் கஷ்டங்களை அழகாக புரிந்துகொண்ட மகன்...\\


மிக தெளிவாக நான் கதையில் வலியுறுத்த நினைத்த கருத்துக்களை பட்டியலிட்டுவிட்டீர்கள் ப்ரியா.......நன்றி, நன்றி!!




//உன் களங்கமில்லா அன்பு
என் கயமையையும்
மன்னிக்குமென தெரியுமடி செல்லமே!!
தெரிந்தேதான்
உன்னைவிட்டு விலகுகிறேன் - ஆனாலும்
கண்மணியே...
என் உணர்வோடு
கலந்துவிட்ட உன்னை
உயிருடன் கொன்றுவிட
மனதில்லையடி தங்கமே!!!//

வார்த்தைகள் மனதின் ஆழத்தில் உங்கள் எண்ணங்கள விதைகின்றது... வாழ்த்துக்கள் திவ்யா... நீங்கள் மேலும் மேலும் சிறப்பாக எழுத என் மனமார்ந்த் வாழ்த்துக்கள்...\\



உங்களது வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ப்ரியா,
தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்கிறேன்!!!

said...

\\ Murugs said...
த‌மிழ் மாங்க‌னி சொன்ன‌ மாதிரி என‌க்கும் ம‌ன‌சு ரொம்ப‌ வ‌லித்த‌து. பிரிவு என்ப‌து ஒவ்வொரு நொடியும் உயிர் போகும். ரொம்ப‌ கெத்தா க‌தைய‌ எடுத்துட்டு போறீங்க‌. சுக‌மா தான் முடிப்பீங்க‌னு ந‌ம்ப‌றேன். :)\


பிரிவின் வேதனையை வரிகளில் உணர்ந்தீர்களா murugs?
கதையின் முடிவை அடுத்த பகுதியில் பார்க்கலாம், வெயிட் ப்ளீஸ்:))

[கெத்தா கதையை எடுத்துட்டுப்போறேனா??......ஆஹா...ரொம்ப பாராட்டிட்டீங்க , ஊக்கத்திற்கு நன்றி!!]




\\எல்லா க‌விதைக‌ளும் சூப்ப‌ர். நீங்க‌ ஏதாவ‌து க‌விதை தொகுப்பு வெளியிட‌லாமே?\\

கவிதை தொகுப்பா???
ஹும்....முயற்சிக்கிறேன் murugs,
Thanks!!

said...

\\ புகழன் said...
ஐந்தாம் பகுதி வெரி த்ரில்லிங்\\


அப்படியா புகழன்?

said...

\\ புகழன் said...
படிக்கும் போது ஒவ்வொரு வரிக்கும் சீட்டின் நுனிக்கே வந்துவிட வைக்கும் ட்விஸ்ட்கள் சூப்பர்\\

twists & turns க்கு இவ்வளவு effect இருந்ததா?

பகிர்ந்துக்கொண்டதிற்கு நன்றி புகழன்!!

said...

ஆளையே காணோம்னு நெனச்சேன்..
வந்துடீங்களா திவ்யா??
ரொம்ப சந்தோசம்..

OK..
அடுத்த பகுதி எப்போ???

said...

புகழன் said...
\\எல்லோரும் கதை சோகமாக முடியக் கூடாதுன்னு கருத்து சொல்றாங்க.

கதையை சோகமாகவே முடித்து விடுங்கள் என்பது என் கருத்து.

சோகமும் ஒரு உணர்ச்சிதானே
அதையும் கொஞ்சம் அனுபவித்துப் பார்க்க வேண்டும்.\\

உங்கள் கருத்து புரிகிறது புகழன்!!




\\டைரக்டர் பாலாவின் சேது, நந்தா, பிதா மகன், டைரக்டர் அமீரின் பருத்தி வீரன் என்று எத்தனையோ சோக க்ளைமாக்ஸ் படங்களை நாம் ரசிக்கவில்லையா?\\

:))




\பாலா, அமீர் வரிசையில் அடுத்ததாக நமக்கு கிடைத்த ஒரு நல்ல கதாசிரியர் திவ்யா\\

அய்யோ புகழன்.......உங்கள் பெயருக்கு ஏற்ற மாதிரி ரொம்பவே புகழுறீங்க:))
உங்களது இந்த பாராட்டு அளித்தது உற்சாகம்......நன்றி ,நன்றி!!





\\என்ன அவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் இடையில் அதிக நாட்கள் (சில வருடங்கள்) காக்க வைப்பார்கள்.
நீங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் காக்க வைக்கிறீர்கள்.
பரவாயில்லை.\\

அச்சோ.......அவங்க கூட எல்லாம் என்னை ஒப்பிடுற அளவிற்கெல்லாம் நான் எதுவும் எழுதிவிடவில்லை......இன்னும்!!
பகுதிகளுக்கு நடுவே காக்க வைப்பதற்கு மன்னிக்கவும்,
தமிழ் தட்டச்சில்.......இன்னும் நான் ததிகினதோம் தான், அதுவே காரணம்!!





\\விரைவில் அடுத்து பகுதியை எதிர்பார்த்து...
புகழன\\

நன்றி புகழன் உங்கள் தொடர் வருகைக்கும்,கருத்துக்களுக்கும்!!

said...

\\ Arunkumar said...
என்னங்க இப்பிடி ட்விஸ்ட் குடுத்துட்டீங்க ?
கிராமத்துல ஒரு climax பாட்டு போட்டு "முற்றும்" போடுவிங்கனு பாத்தா...\\

ஒஹோ....இந்த பகுதியிலயே கதை முடிஞ்சிடும்னு எதிர்பார்த்தீங்களா??
வெயிட்.....வெயிட்...அடுத்த பகுதில கண்டிப்பா முடிச்சுடலாம்.....கதையை:))

said...

\\ Arunkumar said...
இங்க பாருங்க இப்போவே சொல்லிடறேன்...

அந்த புள்ள (அதான் நம்ம நந்தினி) ஒரு தப்பும் பண்ணல...

nanda,paruthi_veeran style-la
முடிக்கிறேன் பேர்வழினு சோகமா முடிசீங்க.... அப்பறம் cleveland-la இருந்து ஒரு tanker அனுப்பிடுவேன் :-)\\


ஆஹா.......இப்படி பயமுறுத்தினா நாங்க பயந்திடுவோமாக்கும்:))

சரி....சரி......வெயிட் கரோ....நெக்ஸ்ட் பார்ட் வெளியிடும் வரை, அப்புறம் முடிவு பண்ணுங்க 'டேன்கர்' அனுப்புறதா? வேணாமான்னு, ஒகே வா!:))

said...

\\ Arunkumar said...
(read: vijay tv "ad" style...)

ஆள் மாராட்டதினால் உயிர் பிழைத்த கார்த்திக்...

கார்த்திக்கை தொடர்பு கொள்ள முடியாத நந்தினியின் உறவினர்கள்...

வளைகாப்பிற்கு சென்ற நந்தினி-க்கு நேர்ந்த பயங்கரம் என்ன ?

"நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்" -- பகுதி 6

அடுத்து வருவது... உங்கள் blogil.. :-)


(seekiram adutha part potrunga master :P)\\


விளம்பரம் சூப்பரு அருண்:))

நன்றி நன்றி!!

said...

\\ கோவை விஜய் said...
ஆறாம் பகுதி ஆனந்த முடிவை நோக்கி.....

எல்லோரும் விரும்புவது போல்
"என்றும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்"
எழுத்தாளர் தொடர வேண்டும்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/\\



வாங்க விஜய்,
உங்கள் எதிர்பார்ப்பிற்கும் கருத்திற்கும் நன்றி!!

said...

\\ தாரணி பிரியா said...
கதையை நேத்தே படிச்சுட்டேன். கமெண்ட் போடத்தான் லேட்டாச்சுயிடுச்சு சாரி திவ்யா,

கார்த்திக்கை காப்பாத்திட்டு இப்ப நந்தினிக்கு சிக்கலை கொண்டு வந்திட்டங்க போல இருக்கே. ஒவ்வொரு பகுதி முடிக்கும் போதும் இப்படி பி.பி. ஏத்தறிங்களே இது நியாமா?\\


வாங்க தாரணி பிரியா,

பதிவை படித்திவிட்டாலும்......பின்னூட்டமிடவேண்டும் என மீண்டும்.....என் வலைதளம் வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டதிற்கு மிக்க நன்றி!!


\\இப்படி பி.பி. ஏத்தறிங்களே இது நியாமா?\\

ஒரு த்ரில் வேணாமா:))

said...

\\ Syam said...
ஒரே ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் ஆ இருக்கு...அடுத்து என்னா நடக்குமோ...
\


வாங்க நாட்டாமை,

வருகைக்கு நன்றி!!

said...

\\ Syam said...
//Arunkumar said...
என்னங்க இப்பிடி ட்விஸ்ட் குடுத்துட்டீங்க ?
கிராமத்துல ஒரு climax பாட்டு போட்டு "முற்றும்" போடுவிங்கனு பாத்தா...
//

அருண் நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிடீங்க...great men think alike னு இத தான் சொன்னாங்களோ(நம்மள நாமே பாராடிகலனா மத்தவங்க எப்டி பாராட்டுவாங்க )
:-)))\\


:-))

said...

\\ Syam said...
//nanda,paruthi_veeran style-la
முடிக்கிறேன் பேர்வழினு சோகமா முடிசீங்க.... அப்பறம் cleveland-la இருந்து ஒரு tanker அனுப்பிடுவேன் :-)
//

ஆமா அப்புறம் புஷ் கிட்ட சொல்லி அமரிக்க தேர்தல தள்ளி போட சொல்லுவோம் :-)\\


நாட்டாமை சொல்லி புஷ் கேட்காம இருப்பாரா:)))

said...

திவ்யா..

நான் முதல்ல போட்ட கமெண்ட்ஸ்ஸெல்லாம் பாக்கவேயில்லையா ?? :((

said...

\\ Syam said...
//புகழன் said...
எல்லோரும் கதை சோகமாக முடியக் கூடாதுன்னு கருத்து சொல்றாங்க.

கதையை சோகமாகவே முடித்து விடுங்கள் என்பது என் கருத்து.

சோகமும் ஒரு உணர்ச்சிதானே
அதையும் கொஞ்சம் அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
//

கல்யாணம் பண்ணிட்டீங்களா...இல்லனா பண்ணிக்குங்க...டெய்லி சோகத்த அனுபவிக்கலாம் :-)\\


:))

said...

FPRIVATE "TYPE=PICT;ALT=Blogger" முகுந்தன் said...
//கணவன் மனைவிக்குள் எந்த ஒரு மனஸ்தாபம் இருந்தாலும் சரி, கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு.
கணவனை அவரது அன்னையிடம் கூட விட்டுக்கொடுத்து பேசுவதை தவிர்ப்பாள்.
//

ரொம்ப நல்ல பழக்கம் :-)\\



ஆமாம் முகுந்தன், இது மிக மிக நல்ல பழக்கம்!


//"இப்போ எதுக்கு அழுற............எல்லாத்தையும் சேர்த்து வைச்சுக்கோ........மொத்தமா அழுதுக்க"//

very touching...\\

:((



//மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...
//

மிக மிக அற்புதமான வரிகள்.\\

நன்றி....நன்றி முகுந்தன்!!



\\சஸ்பென்ஸ் தாங்க முடியல//

வருகைக்கு நன்றி முகுந்தன்!!

said...

\\ வழிப்போக்கன் said...
திவ்யா..

நான் முதல்ல போட்ட கமெண்ட்ஸ்ஸெல்லாம் பாக்கவேயில்லையா ?? :((\\



oops......im so sorry ,
didnt notice them as they were mingled inbetween my previous comment replies:((

நல்லவேளை சொன்னீங்க வழிபோக்கன்.....இல்லீனா நான் கவனிக்காம விட்டிருப்பேன்...பதில் போடுறேன் உங்கள் பின்னூட்டத்திற்கு,
ஸோ ஸாரி:(((

said...

\\ வழிப்போக்கன் said...
//அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்!
//

அடடா...அடடா...\\


'அட' போட்ட ரசிப்பிற்கு நன்றி!!

said...

\\ வழிப்போக்கன் said...
//எல்லா ஆம்பிள்ளைகளும் இப்படிதான்.......கல்யாணம் ஆகுற வரைக்கும் ' ஜிம்' .......'வொர்க் அவுட்' னு muscled ஆ திரியறது, //

என்ன திவ்யா சைக்கிள் கேப்ல இப்படி போட்டு தாக்கீட்டீங்களே ??

இது சரியா ?\\



கிடைக்கிற சான்ஸ மிஸ் பண்ணிட முடியுமா???போட்டு தாக்கிட வேணாமா:)

நல்ல கருத்து தானே சொல்லியிருக்கிறேன் வழிபோக்கன்:))

said...

\\ வழிப்போக்கன் said...
//தாய் கைம்பெண்ணாக தன்னை வளர்க்க சிரமப்பட்டது போன்று பொருளாதார ரீதியில் கஷ்டபடக்கூடாது என்ற எண்ணத்துடன், அவளுக்கு தன் சேமிப்பு, சொத்து மற்றும் இன்ஷுரன்ஸ் விபரங்கள், என அனைத்தையும் விவரிக்க ஆரம்பித்தான்.//


இது அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்ல டிப்..

முன்னாடி உங்க பதிவுல படிச்சிருக்கேன்.. :))\\



ஆமாம் வழிபோக்கன்,
பெண்களுக்கு இம்மாதிரியான விபரங்கள் அனைத்தும் அறிந்திருப்பது மிக மிக அவசியம்.

பெண்களே தன்னார்வத்துடன் இதெல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

said...

\\ வழிப்போக்கன் said...
//..........தன் பிளட் டெஸ்ட் ரிசல்ட்டின் ரிப்போர்ட்டின் ஆள் மாறாட்டம்.
//

இத...இதத்தான் எதிர்பாத்தேன்..

பாசிட்டிவ் ட்விஸ்டிற்கு நன்றி :))\\


:))

said...

FPRIVATE "TYPE=PICT;ALT=Blogger" வழிப்போக்கன் said...
//"என்........னா.....ச்சு........." வறண்டு போன நாவிலிருந்து வார்த்தைகள் உடைந்து வெளிவந்தன கார்த்திக்கிடமிருந்து.

"மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............"

கண் இருண்டது கார்த்திக்கிற்கு....//



கடைசில இன்னொரு ட்விஸ்ட்டா ?


நல்ல நாவல் போல போய்ட்டிருக்குங்க. :)) வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுக்கு நன்றி வழிபோக்கன்!!



\\இது நாவல் எழுத உங்களுடைய முயற்சினு நினைக்கிறேன். \\

அப்படியா தோனுது உங்களுக்கு???
இன்னும் அந்த முயற்சியில் இறங்கவில்லை:)


\\ஓரே குறை என்னான்னா படிக்க வெய்ட் பண்ண வேண்டியிருக்கு..:((\\

வெயிட் பண்ண வைப்பதற்கு மன்னிக்கவும்.....:(

said...

\\ Janani said...
padikaravangaloda naadi thudippa seriya therinju vechirukeenga divya...unga kadhaya padikkum bodhu padam paakara maadhiriye kaatchigal onnunnum manasula viriyudhu...\\

வாங்க ஜனனி!

உங்கள் தொடர் வருகைகும், ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

said...

\ Janani said...
adhulayum unga kavidhaigal migundha baadhipa manasula undaakudhu...unga ezhuthu pani thodarndhutte irukka ennoda vaazhthukkal divya...\

உங்களை போன்ற நண்பர்களின் வாழ்த்துக்கள்தான் என் எழுத்திற்கு காரணம் ஜனனி!!

said...

\\ Janani said...
indha dhadavayum thirupam super...mudikka poreengannu nenachaa marubadiyum oru periya twist koduthuteenga...edhir paakadha konangalla kadhai svaarasiymaa payanikkudhu...hmmm adutha pagudhila kandipaa subama mudichudunga :-)\\


உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஜனனி!

said...

\\ வழிப்போக்கன் said...
அடுத்த பதிவு எப்பங்க ?

இப்ப ரொம்ப பிசியாகீட்டிங்க போல..\\

ஆமாம் வழிபோக்கன்.....கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்.

அடுத்த பகுதி சீக்கிரம் போட முயற்சிக்கிறேன்!

said...

//நல்லவேளை சொன்னீங்க வழிபோக்கன்.....இல்லீனா நான் கவனிக்காம விட்டிருப்பேன்...பதில் போடுறேன் உங்கள் பின்னூட்டத்திற்கு,
ஸோ ஸாரி:(((
//

மன்னிப்பெல்லாம் எதுக்குங்க..:))


நீங்க படிக்காம உங்கள விடமாட்டமில்ல..

said...

\\ வழிப்போக்கன் said...
//நல்லவேளை சொன்னீங்க வழிபோக்கன்.....இல்லீனா நான் கவனிக்காம விட்டிருப்பேன்...பதில் போடுறேன் உங்கள் பின்னூட்டத்திற்கு,
ஸோ ஸாரி:(((
//

மன்னிப்பெல்லாம் எதுக்குங்க..:))


நீங்க படிக்காம உங்கள விடமாட்டமில்ல..\\

ஆஹா...!!!

உங்க பின்னூட்டம் படிக்காம விடமாட்டீங்களா?? பதில் போடாம விட மாட்டீங்களா???

பதில் பின்னூட்டம் போட்டேனா இல்லியான்னு கூட கவனிக்கிறீங்க....good , good:))

said...

எங்க காணாம போய்ட்டீங்க???
நிறைவுப்பகுதிக்காக காத்திருக்கிறேன் !

said...

காதல் எனப்படுவது யாதெனில் என்கிற ஸ்ரீ அண்ணன் தொடங்கிய தொடருக்கு உங்களை யாரோ அழைத்திருந்தார்கள் அது எப்ப எழுதுவிங்க...

said...

Valai pakam vandhadhirku nandri
Ella baaghangalaiyum print seydhurukkiren,paditthuvittu meendum varugiren..meendum nandri
TC
CU

said...

\\அப்பாட......தொடர்கதை ஒருவழியா முடிந்ததுன்னு சந்தோஷப்பட்டீங்களா மது??//

நீங்க கதைய முடிக்கணும்'னு நினைக்கல. நீங்க முடிக்கிறீங்களோ இல்லையோ...அடுத்த பதிவை சீக்கிரமா போடுங்க! அதில நீங்க முடிச்சாலும் பரவாயில்ல, no problem with that cos கையோட அடுத்த கதை எங்களுக்காக தொடங்கித்தானே ஆகணும்! ;)

said...

மரணம் ஒரு நொடியில் உயிர் போகும், பிரிவு ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்.
அருமையான கற்பனை வளம், தேர்ந்த வரிகள்.

said...

\\ kavidhai Piriyan said...
Ayyo...yean suspense mele suspense vechu enge BP ye yethure....

seekiram adutha bagam podunga..appdiye enakum mail podunga......padiche theeranum :-)

super aa eluthure..nalla improvement irukku ...appadiye VLSI la yum improve pannunga :-)\\


ஹாய் ப்ரவீன்,
வாங்க வாங்க!

என் ப்ளாக் பக்கமெல்லாம் வந்திருக்கிறீங்க....பதிவு படிச்சுட்டு கமெண்ட் வேற.......நன்றி, நன்றி ப்ரவீன்!!

அடுத்த பகுதி போட்டதும் சொல்றேன் ப்ரவீன்.

said...

\ Sen22 said...
super-a irukkunga kathai...

waiting for next part...\


வாங்க செந்தில்,

உங்கள் பாராட்டிற்கு நன்றி!!

said...

\\ J J Reegan said...
// அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்! //

கலகலவென்று சிரித்தாள்....
அவள் சிரித்த சிரிப்பில் கண்ணாடி வளையல்கள் சிணுங்கின ....
இப்பிடிதாங்க நான் படிச்சிருக்கேன் ஆனா இந்த கவிதையில...

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ..... சும்மா பின்றீங்க.\\


வாங்க ரீகன்,

உங்கள் அழகான ரசிப்பை பகிர்ந்துக்கொண்டதிற்கு நன்றி!!

said...

\\ J J Reegan said...
// "ஹேய் ...ஜொள்ளா........என்னடா அப்படி பார்ர்கிற...பெருசா நேத்து ராத்திரி மூஞ்சி திருப்பிட்டு தூங்கின.....இப்போ...இப்படி பார்க்கிறே, திருட்டுப் பையா!!!" //

இந்த வரிகள் திவ்யப்ரியா எழுதியிருந்தால் கமேண்டுரதுல ரனகளப்படுத்தியிருப்பேன்... இங்க OK.\\


:)))
கூல் டவுன் ரீகன், இதுக்கெல்லாமா டென்ஷன் ஆவாங்க?

said...

\\ J J Reegan said...
// "என்னங்க நீங்க...எப்ப பாரு டல்லடிக்கிறீங்க, 'ஜிம்'க்கு போய் 'ஜம்'முன்னு எவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தீங்க..........இப்ப பாருங்க எப்படி இருக்கிறீங்கன்னு?....." //

டிப்ஸ் திவ்யா-னு அவ்வப்போது நினைவுபடுத்துகிறீர்கள்....\\


கிடைக்கிற சான்ஸ மிஸ்
பண்ணிடாம டிப்ஸ் :))

said...

\\ J J Reegan said...
// சாவு நம்மை தேடி வரவேண்டும்
நானோ
சாவை தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன்
என் நாட்களை எண்ணும்
புண்ணியம் பெற்றிருக்கிறேன்.. //

ஒரே சோகம்..\\

:((

said...

\\ J J Reegan said...
// தெரிந்தேதான்
உன்னைவிட்டு விலகுகிறேன் - ஆனாலும்
கண்மணியே...
என் உணர்வோடு
கலந்துவிட்ட உன்னை
உயிருடன் கொன்றுவிட
மனதில்லையடி தங்கமே!! //

இந்த வரிகள்தாங்க அருமை... அருமை...\\

நன்றி.....நன்றி.....நன்றி ரீகன்!!

said...

\\ J J Reegan said...
// "இப்போ எதுக்குங்க.....எனக்கு இந்த விபரமெல்லாம்??"

"சொல்லித்தந்தா.......தெரிஞ்சுக்கோ......ஏன்? எதுக்கு?ன்னு கேட்காதே"

"இப்போ நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் என்னங்க??"

"ஒன்னும் தெரியாத மரமண்டையாவே உங்க அப்பா வளர்த்து வைச்சிருக்காரு..........இப்படி பட்டிக்காடாவே இருக்க போறியா??"

வெடுக்கென்று கார்த்திக் அப்படி கூறவும், அகல விரிந்த நந்தினியின் கண்களில் நீர் தேம்பியது. //

போன பகுதில கூட நான் சொன்னேன் சூழ்நிலைகளில் ரொம்ப அருமையாகவே எழுதுகிறீர்கள்....\\


கதையின் ஒவ்வொரு பகுதியாக நீங்கள் விமர்சிப்பது எனக்கு புது உற்சாகத்தை தருகிறது, நன்றி!!

said...

\\ J J Reegan said...
வழக்கம்போல் கதை உங்களது எளிமையான நடை.

அதே நேரத்தில் வேகமும்கூட.

கவிதை சொல்லவே வேண்டாம் மிக அருமை....

சூழ்நிலைகளை கையாள்வதில் தேர்ச்சி...

ம்.. ம்.. அசத்துங்க...\\


உங்கள் தொடர் வருகைக்கும், மனம்திறந்த பாராட்டிற்கும் நன்றி ரீகன்!!

said...

\\ J J Reegan said...
// பாலா, அமீர் வரிசையில் அடுத்ததாக நமக்கு கிடைத்த ஒரு நல்ல கதாசிரியர் திவ்யா //


மிகச் சரியாக சொல்லியிருக்கிறார்கள்...

ஆனால் மனசுக்குள் மத்தாப்பு திவ்யா சந்தோசமாகத்தான் கதையை முடிப்பார்...\\


இந்த அளவிற்கு பாராட்டை பெறும் தகுதியை இன்னும் நான் அடையவில்லை.
எனினும் உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளித்தது.

[ரீகன்.....நீங்கள் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்ட கேள்விக்கான பதில்-> கதாநாயகி, கதாநாயகன் இருவரையுமே மையமாக கொண்டு கதை நகர்த்தும் போதே கதை 6 பாகம் வந்துவிட்டது, மற்றைய கதாபாத்திரங்களை[example:நந்தினியின் அப்பா, கார்த்திக்கின் அம்மா] இன்னும் அதிகம் கதையின் ஓட்டத்தில் கொண்டு வந்தால், கதையின் நீளம் அதிகமாகும்......அது படிப்பவர்களை சலிப்படைய செய்யும் என்பது என் கருத்து]

said...

\\ Usha said...
Good writing style Divya.
Can't wait for the next part.\\

வாங்க உஷா,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!!

said...

\\ Arunkumar said...
அடுத்த பதிவு எப்போ ?

மக்கள் எல்லாரும் waitingla இருக்கோம்ல...

சீக்கிரம் pls...
\\


ஸோ ஸாரி சீனியர்,
கொஞ்சம் லேட் ஆகிடுச்சு அடுத்த பகுதி எழுத,சீக்கிரம் போஸ்ட் பண்ணிடுறேன்......வெயிட் கரோ ப்ளீஸ்:)))

said...

\\ இசக்கிமுத்து said...
அசத்தலான நடையில் கலக்கலான கவிதைகளுடன் அருமை. கலக்குங்கள்!!\\

வாங்க இசக்கிமுத்து,

உங்கள் தொடர்வருகைக்கும்,
உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!!

said...

\\ இசக்கிமுத்து said...
திவ்யா, கவிதை சோலையில் எனது கருத்தை தெரிவிக்க இயலவில்லை, அனுமதி உண்டா?\\


நிச்சயமாக :))

பதிவுகளின் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

said...

\\ sathish said...
///////////////////////////////////

what happened?? Hope everything is fine at ur end!

- Sathish\\

Im very fine Sathish,
thanks for asking:))

said...

\\ M.Saravana Kumar said...
ஆளையே காணோம்னு நெனச்சேன்..
வந்துடீங்களா திவ்யா??
ரொம்ப சந்தோசம்..

OK..
அடுத்த பகுதி எப்போ???\\


Thanks for ur concern Saravanakumar,
Next part will be published this week......

said...

\\ Mani - மணிமொழியன் said...
எங்க காணாம போய்ட்டீங்க???
நிறைவுப்பகுதிக்காக காத்திருக்கிறேன் !\\

So sorry Mani.....was busy lately,cudnt complete the story.

will post the final part soon, wait plz:)))

said...

\\ தமிழன்... said...
காதல் எனப்படுவது யாதெனில் என்கிற ஸ்ரீ அண்ணன் தொடங்கிய தொடருக்கு உங்களை யாரோ அழைத்திருந்தார்கள் அது எப்ப எழுதுவிங்க...
\\

இந்த தொடர்கதை முடிந்ததும், tag post எழுதுவேன் தமிழன்.....ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!!

said...

\\ Compassion Unlimitted said...
Valai pakam vandhadhirku nandri
Ella baaghangalaiyum print seydhurukkiren,paditthuvittu meendum varugiren..meendum nandri
TC
CU\\


உங்கள் வருகைக்கு நன்றி!!

பதிவுகளை பிரிண்ட் செய்து படிக்கிறீங்களா?

படிச்சுட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு:))

said...

\\ Mathu said...
\\அப்பாட......தொடர்கதை ஒருவழியா முடிந்ததுன்னு சந்தோஷப்பட்டீங்களா மது??//

நீங்க கதைய முடிக்கணும்'னு நினைக்கல. நீங்க முடிக்கிறீங்களோ இல்லையோ...அடுத்த பதிவை சீக்கிரமா போடுங்க! அதில நீங்க முடிச்சாலும் பரவாயில்ல, no problem with that cos கையோட அடுத்த கதை எங்களுக்காக தொடங்கித்தானே ஆகணும்! ;)\\


வாங்க கவிதாயினி மது,

உங்கள் ரசிப்பிற்காகவாவது நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன் மது,
உங்கள் தொடர் உற்சாகத்திற்கு நன்றி!!

said...

\\ இரா.ஜெயபிரகாஷ் said...
மரணம் ஒரு நொடியில் உயிர் போகும், பிரிவு ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்.
அருமையான கற்பனை வளம், தேர்ந்த வரிகள்.
\\


வாங்க ஜெயபிரகாஷ்,

உங்கள் பாராட்டுக்கள் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது,
நன்றி, நன்றி!!

said...

திவ்யா... நீங்கள் Tag செய்ய பட்டுள்ளீர்கள்...

said...

Hi Divya,
inum adutha padhivu podalaya ?pavamnga unga rasirgal(hehe..nanum dhan ).expecting soon :-)

said...

waiting for the next part,
yeppo next part varum?

said...

அம்மா தாயே திவ்யா
ப்ளீஸ்
சீக்கிரம் அடுத்த போஸ்ட் போட்டுருங்க
லீவில் ஊருக்கு சென்று விட்டால் அடுத்து படிக்க முடியாமல் போய் விடும்

said...

\ புகழன் said...
அம்மா தாயே திவ்யா
ப்ளீஸ்
சீக்கிரம் அடுத்த போஸ்ட் போட்டுருங்க
லீவில் ஊருக்கு சென்று விட்டால் அடுத்து படிக்க முடியாமல் போய் விடும்\

இன்னிக்கு கண்டிப்பா போட்டுடறேன் புகழன்.....ரொம்ப வெயிட் பண்ண வைச்சுட்டேன், ஸாரி:(

said...

\ priyamanaval said...
திவ்யா... நீங்கள் Tag செய்ய பட்டுள்ளீர்கள்...\\

பார்த்தேன் ப்ரியா,

திவ்யப்ரியாவும் இதே தலைப்பிற்கு என்னை tag செய்திருக்காங்க,
ஸோ...உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து போஸ்ட் போட்டுடறேன், சரியா!!!

said...

\\ kavidhai Piriyan said...
Hi Divya,
inum adutha padhivu podalaya ?pavamnga unga rasirgal(hehe..nanum dhan ).expecting soon :-)\\

ஹாய் ப்ரவீன்,
டெய்லி வெயிட் பண்றீங்களா அடுத்த பகுதிக்காக.......ஸோ.....ஸாரி ரொம்ப டிலே பண்ணிட்டேன்,
இன்னிக்கு கண்டிப்பா போஸ்ட் போடுறேன்!!

said...

\ Shwetha Robert said...
waiting for the next part,
yeppo next part varum?\

வாங்க ஷ்வேதா,
நீண்ட நாட்களுக்கு பின் வந்திருக்கிறீங்க.....நன்றி!

அடுத்த பகுதி இன்றைக்கு பதிவிடுகிறேன்!

said...

Supera Irukkuthu...

said...

:)) nanru