July 07, 2008

நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்!!! - 2


மனதில் கொள்ளை ப்ரியம் நந்தினியின் மேல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்த தெரியாத கார்த்திக், தனது வழக்கமான சிடு மூஞ்சியுடன் அவளிடம்...

"நந்தினி, ஐ திங் ஐ அம் இன் லவ்......"

"அப்..படிங்...களா"

"ஆமாம்"

"வாழ்த்துக்களுங்க"

அப்பாவித்தனமாக அவள் தமிழில் ' வாழ்த்துக்கள்' என கூறியதும், உதட்டோரம் கார்த்திக்கிற்கு சிரிப்பொன்று மலர்ந்தது.

"தாங்க்ஸ்..."

"...."

" யாரை லவ் பண்றேன்னு கேட்க மாட்டியா?"

"யா........யாருங்க?"

"நீங்க.......தாங்க"

"...."

" ஐ லவ் யூ நந்தினி"

'ஐயோ.....' என முகத்தை தன் கைகளால் மூடிக்கொண்டு விசும்பலுடன் அழ ஆரம்பித்தாள் நந்தினி.

இந்த ரியாக்ஷனை கார்த்திக் சற்றும் எதிர்பார்க்காததால் கொஞ்சம் பயந்துதான் போனான்.

பையன் 'ஐ லவ் யூ' சொன்னா, பொண்ணுக்கும் ஒகே னா வெக்கப்பட்டு சிரிப்பா,
பிடிக்கலினா கோபமா முறைச்சுட்டு, திட்டிட்டு சீன் போடுவாங்கன்னு தான சினிமாவுல காட்டுவாங்க,
இந்த பொண்ணு ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுகுறா??


"நந்தினி.....இப்ப எதுக்கு இப்படி அழுற"

"நீங்க.......இப்படி கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவீங்கன்னு நினைக்கவே இல்ல"

" கெட்ட வார்த்தையா??............எது.........எது கெட்ட வார்த்தை........நான் எப்போ சொன்னேன்?"

"இப்ப..........இப்ப........கொஞ்சம் முந்தி சொன்னீங்க"

"ஐ லவ் யூ ........கெட்ட வார்த்தையா??"

அந்த வார்த்தையை கேட்டதும் மறுபடியும், 'ஓ' வென அழுதாள் நந்தினி.

'என்னடா இது வம்பா போச்சு, பொண்ணு அழகாவும் இருக்கா, நல்ல பொண்ணாவும் இருக்கான்னு காதலைச் சொன்னா.......இப்படி அசடா இருப்பான்னு நினைக்கவே இல்லையே' என யோசித்த கார்த்திக்கால் 'ஜகா' வாங்கவும் அவனுள் ஆழமாக பதிந்த காதல் இடம் கொடுக்கவில்லை.

" எங்கூர் பள்ளிகூடத்துல எல்லாம் இந்த சினிமாகாரக வார்த்தையை அப்படிதான் சொல்லுவோம்" என்றாள் அழுகையின் நடுவில்.

பள்ளி படிப்பு முடித்து நாலு வருஷம் ஆச்சு,
பட்டணத்தில் கல்லூரி படிப்பும் படிச்சாச்சு,
பெரிய கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்தாச்சு.....

இன்னுமா இந்த பொண்ணு இதை கெட்ட வார்த்தைன்னு சொல்லிட்டு இருக்கா??

இவ நடிக்கிறாளா...............இல்ல நிஜம்மாவே வெகுளியான்னு கார்த்திக்கால் புரிந்துக்கொள்ள முடியவிலலை.

எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!

"இங்க பாரு நந்தினி......எனக்கு உன்னை பிடிச்சிருக்கு..........ரொம்ப பிடிச்சிருக்கு......உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்"

சற்று அதிகார தொனியில் கார்த்திக் பேசவும் நந்தினி தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு தெளிவாக பேச முயன்றாள்,

" நீங்க இப்படி எல்லாம் பொண்ணுங்க கிட்ட சொல்ல மாட்டீங்கன்னு ஆபீஸ்ல எல்லாரும் சொல்லிக்கிட்டாங்க, நானும் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தேன் உங்க மேல.........நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல"

"ம்ம்...........இது நாள் வரை என் மனசுல ......உன்னை போல யாரும் இப்படி பதிந்ததில்ல நந்தினி. எந்த பொண்ணுகிட்டவும் வலியப்போய் நான் பேசினதுமில்ல..........ஆனா உன்னை மட்டும் ரொம்ப பிடிச்சிருக்கு , அவ்வளவு தான்"

மீண்டும் அழ தொடங்கினாள் நந்தினி.

"இப்போ எதுக்கு அழுகிற??.......நான் தான் அந்த கெட்ட வார்த்தைய மறுபடியும் சொல்லலியே"

"இந்த காதல் கீதல் ன்னு........ஏதாவது என் அப்பாவுக்கு தெரிஞ்சா........என்னை வெட்டிப்போடக் கூடத் தயங்க மாட்டார். நான் எப்போவும் அப்பா பிள்ளை............என் அப்பா சொல்லை தட்டி நடக்க மாட்டேன்.....நான் பட்டணத்துல போய் படிக்க சொந்தக்காரக எல்லாம் தடுத்தபோ கூட என் அப்பா என் மேல நம்பிக்கையோட படிக்க அனுபிச்சாங்க, கம்பியூட்டர் கம்பெனில வேலைக்கு போற பொம்பளை பிள்ளைக அங்கே பக்கத்து பக்கதுல ஆம்பிளைங்க கூட ராத்திரி பகல் னு நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் வேலை செய்யறப்போ, காதலிச்சு தானே தன் வாழ்க்கைய தீர்மாணிச்சுருமாம்ண்ணே, அதனால நம்ம நந்தினிய படிக்க வைச்சதோட நிறுத்திடுங்கண்ணே...........வேலைக்கெல்லாம் அனுப்பாதீகன்னு எங்க சித்தப்பா எவ்வளவோ சொல்லியும், இப்போ 1 வருஷம் வேலைக்கும் போமா உன் இஷ்டபடின்னு அனுமதிச்சிருக்காங்க.......லவ்வு ஜவ்வுன்னு டாவு பண்ற ஆளு இல்ல நீங்கன்னு எல்லாரும் சொன்னதால தான் உங்க கிட்ட மட்டும் பேசினேன், நீங்க ..........இப்படி சொல்லிட்டீங்களே"

மீண்டும் விசும்பல்,


பாரதிராஜா படத்தில் வரும் பட்டிகாட்டு பொண்ணு
பட்டணதில் பொட்டி தட்ட வந்தப்போ தான்
பட்டாம்பூச்சி எனக்குள் பறந்திருக்கா????
கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

சில நிமிடங்களுக்கு பிறகு கார்த்திக் பேச தொடங்கினான்,

"நந்தினி......நான் உன்னை மனசார விரும்புறேன், உனக்கா என் மேல எப்போ காதல் வருதோ அப்போ என்கிட்ட சொல்லு, அதுவரைக்கும் நான் காத்திட்டிருப்பேன்"
என்று தெளிவாக கூறினான் கார்த்திக்.

நந்தினிக்கு தன் குடும்பத்தின் மேல் தான் பயம்.........தன் மீது வெறுப்பு இல்லை என அவன் மனதில் உறுதியாக உணர்ந்தான்.

நந்தினி பதில் ஏதும் சொல்லாது சிலைத்துப் போய் நின்றாள்.........சில நிமிடங்கள் ஆகியும் நந்தினியின் மெளனம் கலையவில்லை.

அந்த மெளனத்தின் அர்த்தம்??

அந்த கணத்தில்........
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுகளாகி...
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன!!

எதுவும் பேசாமல் நந்தினி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அதன்பின் வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் அலுவலகத்தில் முடிந்தவரை கார்த்திக்கை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தாள் நந்தினி.


சிடுமூஞ்சி சொன்ன காதலில்
சின்ன பொண்ணு குழம்பி போயிருக்கு
சீக்கிரம் சரி என்று தலையாட்டுவது கஷ்டம் தான்
சிறிது சிறிதாக சரி ஆகிடுவா
என்ற நம்பிக்கையில் கார்த்திக்கும் அவளை கண்டுக்கொள்ளாமல் இருந்தான்.

சனி ஞாயிறு வார விடுமுறை முடிந்து திங்கள் கிழமை அலுவலகம் வந்த கார்த்திக்கிற்கு அதிர்ச்சி.......நந்தினி அலுவலகம் வரவில்லை..

நந்தினி ஏன் வேலைக்கு வரல........??? டீமில் விசாரித்ததில், வாரயிறுதிக்காக சொந்த ஊருக்குச் சென்ற நந்தினி இன்னும் சென்னைக்குத் திரும்பவில்லை என் தெரிந்துக்கொண்டான் கார்த்திக்.

நந்தினி இல்லாத ஒவ்வொருநாளும் ஒரு யுகமாக தெரிந்தது கார்த்திக்கிற்கு,



அன்புச் சிலையே
ஆசைக் கிளியே

என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதயம் துடிக்கவில்லை
சத்தம் மட்டும் அதிருது

அழகாய் பூத்திருந்த என்
இதயத்தில் புதியதாய் யாரோ
குடிவந்ததாய் உணர்கிறேன்

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்

செல்லம் என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதுவரை நான்
எப்படிப்பட்டவனாக
இருந்தேனோ தெரியாது

ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்!!!




நந்தினியின் வீட்டு தொலைபேசி எண் அவள் டீம்மேட் பெண்களிடம் கேட்டு அவளை தொடர்பு கொள்வது ஒன்றும் பெரிய காரியமல்ல, எனினும், அவளது குடும்ப சூழ்நிலை தெரியாமல் அவளுக்கு ஃபோன் பண்ணி அவளை சங்கடபடுத்த வேண்டாம் என ஒரு வாரம் அவளுக்காக தவிப்புடன் காத்திருந்தான் கார்த்திக்.

இனிமேலும் அவளிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்க முடியாது என உணர்ந்தவனாய், எப்படியும் அவளுக்கு ஃபோன் பண்ணியே தீர்வது என்ற முடிவுடன் தன் இருக்கைக்கு வந்தவன், மேஜையின் மீதிருந்த கவரைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்துப்போனான்.........

[தொடரும்]

பகுதி-4

பகுதி - 5

பகுதி - 6

135 comments:

said...

திவ்யா..

அட!!! போட வைக்கும் அடுத்த அழகான பகுதி.... :)))

said...

வழக்கம் போல மிகப்பொருத்தமான படங்கள்...
எங்கிருந்து பிடிக்கிறீர்கள் கதாசிரியரே...?? :))))

said...

//எங்கூர் பள்ளிகூடத்துல எல்லாம் இந்த சினிமாகாரக வார்த்தையை அப்படிதான் சொல்லுவோம்" என்றாள் அழுகையின் நடுவில் //

இப்படியும் வெகுளிப்பெண்கள் இன்னமும்
இருக்கிறீர்களா என்ன..? :)))

நந்தினியோட வெகுளிப்பேச்சை சிரத்தை எடுத்து
எழுதியிருக்கிறீர்கள் திவ்யா.. ! மிகவும் ரசித்தேன்... :))

said...

// ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்!!! //

கதையுடன் கவிதையும்
செம்புலப்பெயல்நீராய் கலந்து
கிளர்ந்தெழச்செய்கிறது உணர்வுகளை... :)))

said...

கொஞ்சம் சஸ்பென்ஸ்..
நிறையக் காதல்...
கலந்து செய்த இரண்டாம் பாகம்... :))))

அடுத்த பாகம்
விரைவில் மலர வாழ்த்துக்கள் திவ்யா..

:)))

said...

More than the story, the images that you select are too good :-)

said...

/அன்புச் சிலையே
ஆசைக் கிளியே

என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதயம் துடிக்கவில்லை
சத்தம் மட்டும் அதிருது

அழகாய் பூத்திருந்த என்
இதயத்தில் புதியதாய் யாரோ
குடிவந்ததாய் உணர்கிறேன்

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்

செல்லம் என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதுவரை நான்
எப்படிப்பட்டவனாக
இருந்தேனோ தெரியாது

ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்!!!/

நல்ல இருக்கிறது

Anonymous said...

mega serial mariye poguthunga unga kathai..ad break matum ithula vara mari vachiteengana..perfect :D nalla twist..aana ipdlamum pesara/kekara heroines inum irukangala?

said...

//அந்த கணத்தில்........
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுகளாகி...
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன!!//

அருமை திவ்யா :)

said...

மிகவும் ரசித்த இரண்டாம் பகுதி. கவிதையும் படங்களுடனும் கதை சூப்பர்...!!!

said...

//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... நாங்க எல்லாம் எப்பவும் அப்பாவி தான... :-)

said...

//aana ipdlamum pesara/kekara heroines inum irukangala?
//

same kostin enakkum thonuchu... :-)

said...

//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........
கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!
//


இது தான் டாப்பு...

said...

//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!//
இது நல்ல கண்டுபிடிப்பா இருக்கே ;-)

said...

//பாரதிராஜா படத்தில் வரும் பட்டிகாட்டு பொண்ணு
பட்டணதில் பொட்டி தட்ட வந்தப்போ தான்
பட்டாம்பூச்சி எனக்குள் பறந்திருக்கா????//

எதுகை மோனை எல்லாம் கலக்குது...

said...

//என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்//

மருமுறை படிக்கத் தூண்டும் மிக மிக அழகான வரிகள்...அற்புதமான நிஜம்...

said...

அருமையான இரண்டாம் பகுதி...

தொடர்கதைக்கு ஏற்ற விருவிருப்பு... சஸ்பென்ஸ்...
நல்லா கதை எழுதுறீங்க (விடுறீங்க) திவ்யா...


waiting for next part...

said...

// Syam said...
//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... நாங்க எல்லாம் எப்பவும் அப்பாவி தான... :-)

//

repeattaiiiii...

said...

திவ்யா அழகான பகுதி.....

கவிதைகள் மற்றும் படங்கள் அருமை...

அடுத்த பகுதி எப்போ மேடம்.....!!

said...

சூப்பர்ர்ர்ர்ர்ர் திவ்யா.. கை வந்த கலையாச்சே! கலக்குறீங்க..

இரண்டாம் பகுதி போட இவ்வளவு நாளா.. சரி சரி மூன்றாம் பகுதிய சீக்கிரம் போடுங்க... anxiously waiting here babes!:)

said...

ஐயோ சஸ்பென்ஸ் தாங்கலியே. இதுவே கடைசி பகுதியாக இருக்கும்னு நினைச்சு, முதல் பகுதியையும் சேர்த்து படித்து தொலைத்து விட்டேன். எனக்கு மட்டுமாவது அந்த மூன்றாம் பகுதியை அனுப்ப முடியுமா? உங்க கதையில் வரும் கார்த்திக்கு கவருக்குள் என்ன இருக்குமோ ஏது இருக்குமோ என்ற படபப்பு இருக்கோ இல்லையோ, எனக்கு நெஞ்சு வெடிச்சு ஹார்ட் கையில் வந்துடும் போலிருக்கு.

Anonymous said...

நல்ல இருக்கிறது

said...

//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு//

:)))

Ennada, duet songs maathiri idaiyila varra Ammaniyoda kavujaiya kanoamenu paathen... vanthidichu :)))

//ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்
//

Nice line....

Kathai superaa poguthu...

said...

Poetic expression of the Hero & the innoscent talks of the Heroine are admirable:))

waiting for next part...

said...

Very nice story. Keep up your good writing style :)

said...

படிக்க படிக்க நெஞ்சை அள்ளிய பகுதி!

சூப்பர்!

said...

மீண்டும் கேட்கிறான்!

கதைக்குள் கவிதையா?

கவிதைக்குள் கதையா?

!????????????????/

said...

//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!
//

அட!

(நவீன் மட்டும்தான் அட சொல்லுவாரா! நானும் சொல்லுவேன்)

அட!

said...

//அந்த கணத்தில்........
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுகளாகி...
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன!!//

நல்ல உவமை!

said...

//வழக்கம் போல மிகப்பொருத்தமான படங்கள்...
எங்கிருந்து பிடிக்கிறீர்கள் கதாசிரியரே...?? //

நான் சொல்லலை!

படத்தைப் பத்தி யாரு கேட்டதுன்னு இப்பவாவது புரிஞ்சிக்குங்க!

(நான் கேக்கலை! நவீன் பிரகாஷ்தான் கேக்கச் சொன்னாரு)

said...

அந்த கவருக்குள்ளே பே ஸ்லிப் இருந்ததுங்குற சஸ்பென்ஸை உடைச்சிடாதீங்க திவ்யா!

said...

//பாரதிராஜா படத்தில் வரும் பட்டிகாட்டு பொண்ணு
பட்டணதில் பொட்டி தட்ட வந்தப்போ தான்
பட்டாம்பூச்சி எனக்குள் பறந்திருக்கா????//

ஆமாம்! அதேதான்! சூப்பர்!

said...

நல்லாருக்கு திவ்யா..
இன்னொரு முறை ரசிச்சு படிச்சுட்டு அப்புறமா வாறேன்...:)

said...

oru mega seriala friday evening eppidi mudippano andha maathiri oru edathula "thodarum" potuteenga.... suspense ethana naalaiku? seekiram odachirunga !!!

said...

\\பையன் 'ஐ லவ் யூ' சொன்னா, பொண்ணுக்கும் ஒகே னா வெக்கப்பட்டு சிரிப்பா,
பிடிக்கலினா கோபமா முறைச்சுட்டு, திட்டிட்டு சீன் போடுவாங்கன்னு தான சினிமாவுல காட்டுவாங்க,
இந்த பொண்ணு ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுகுறா??

"நீங்க.......இப்படி கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவீங்கன்னு நினைக்கவே இல்ல"

\\

ippadi oru reactionahh!!! edir pakkave illa..enna dhan veguliya irundhalum idhu konjam over dhanga..ana sila per ippadi irukangalo ennamo!!

\\எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!
\\

:))))

\\அந்த கணத்தில்........
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுகளாகி...
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன!!\\

enge irundhu pidikareenga pa varthaigala ??sooper

said...

\\என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்
\\

\\ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்!!!
\\

Kavidhai varigal arumai :))

said...

//சிடுமூஞ்சி சொன்ன காதலில்
சின்ன பொண்ணு குழம்பி போயிருக்கு
சீக்கிரம் சரி என்று தலையாட்டுவது கஷ்டம் தான்
சிறிது சிறிதாக சரி ஆகிடுவா
//


"ச" - வரிசையில்
ரொம்ப யோசிச்சு எழுதியிருக்கீங்க போல..

:-))

said...

//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!
//

சூப்பர் !!!

said...

அந்த லெட்டர் லவ் லெட்டரா இல்ல Resignation லெட்டரா ???
:-))

said...

//எங்கூர் பள்ளிகூடத்துல எல்லாம் இந்த சினிமாகாரக வார்த்தையை அப்படிதான் சொல்லுவோம்" என்றாள் அழுகையின் நடுவில் //

இது ரெம்ப ரெம்ம்ம்ம்ம்ப ஓவர் :)
ஏங்க, இந்த மாதிரி பொண்ணுங்க எந்த மியூசியத்தில இருக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா :)) ??????

said...

///அப்பாவித்தனமாக அவள் தமிழில் ' வாழ்த்துக்கள்' என கூறியதும், உதட்டோரம் கார்த்திக்கிற்கு சிரிப்பொன்று மலர்ந்தது.///

நானும் கற்பனை பண்ணிப்பாத்தேன் ஆமா சிரிப்ப வரத்தான் செய்யுது...:)

said...

////பையன் 'ஐ லவ் யூ' சொன்னா, பொண்ணுக்கும் ஒகே னா வெக்கப்பட்டு சிரிப்பா,
பிடிக்கலினா கோபமா முறைச்சுட்டு, திட்டிட்டு சீன் போடுவாங்கன்னு தான சினிமாவுல காட்டுவாங்க,////
!!??????? ;)

said...

///" எங்கூர் பள்ளிகூடத்துல எல்லாம் இந்த சினிமாகாரக வார்த்தையை அப்படிதான் சொல்லுவோம்" என்றாள் அழுகையின் நடுவில்.///

அட இதுக்கு இப்படி ஒரு பெயர் இருக்கா சூப்பரு...:)

said...

///எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!///

அதான...!
என்ன இருந்தாலும் இப்படி பெருந்தன்மையோட உங்களை விமர்சிச்ச நீங்க ரொம்ப நல்லவுங்க;)

நிஜமாவே இந்த பொண்ணுங்க என்ன நினைக்கறாங்க என்னுறதை கண்டு பிடிக்க முடியறதில்லயே...

said...

/
என்ன இது
என்னை என்ன
செய்தாய்
/

/அன்பே என்னை
என்ன செய்தாய்!!!/

எனக்கு நிறையப் பிடிக்கிற கேள்வி...

said...

ரசனையான இரண்டாவது அத்தியாயம்...நன்று!

said...

அடுத்த சஸ்பென்சும் வச்சுட்டிங்க... கலக்குங்க...:)

said...

ரேணுகா மேனன் நல்லாருக்காங்க...;)

said...

///நல்லாருக்கு திவ்யா..
இன்னொரு முறை ரசிச்சு படிச்சுட்டு அப்புறமா வாறேன்///

நான்தான் சொன்னேன்
இப்ப இதுக்கொரு

ரிப்பீட்டு...:)

said...

50 அசத்துங்க...

Anonymous said...

arumaiyana irandaam baagam divya
:-)

kavidhai romba nalla irundhudhu...thodarattum ungal ezhuthu pani :-)

said...

// அழகாய் பூத்திருந்த என்
இதயத்தில் புதியதாய் யாரோ
குடிவந்ததாய் உணர்கிறேன்

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன் //

முதல் பாகம்ல இருந்தா வேகம் திருப்பங்கள் கொஞ்சம் கம்மியாதான் இருக்கு... ஆனாலும் இந்த கவிதை வந்து கண்ணை மறச்சிருச்சு.

நல்ல கவிதை வரிகள்...

Anonymous said...

//பாரதிராஜா படத்தில் வரும் பட்டிகாட்டு பொண்ணு
பட்டணதில் பொட்டி தட்ட வந்தப்போ தான்
பட்டாம்பூச்சி எனக்குள் பறந்திருக்கா????//

Really super Divi...waiting for the next part...!

said...

\\
நவீன் ப்ரகாஷ் said...
திவ்யா..

அட!!! போட வைக்கும் அடுத்த அழகான பகுதி.... :)))\\


அட.....அப்படியா??

நன்றி:))

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
வழக்கம் போல மிகப்பொருத்தமான படங்கள்...
எங்கிருந்து பிடிக்கிறீர்கள் கதாசிரியரே...?? :))))\\

படங்களின் மேலேயே அந்த படம் இருக்கும் வலைதள முகவரி எழுதியிருக்கிறது கவிஞரே:))

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//எங்கூர் பள்ளிகூடத்துல எல்லாம் இந்த சினிமாகாரக வார்த்தையை அப்படிதான் சொல்லுவோம்" என்றாள் அழுகையின் நடுவில் //

இப்படியும் வெகுளிப்பெண்கள் இன்னமும்
இருக்கிறீர்களா என்ன..? :)))

நந்தினியோட வெகுளிப்பேச்சை சிரத்தை எடுத்து
எழுதியிருக்கிறீர்கள் திவ்யா.. ! மிகவும் ரசித்தேன்... :))\\


உங்கள் ரசிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி!!

said...

\ நவீன் ப்ரகாஷ் said...
// ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்!!! //

கதையுடன் கவிதையும்
செம்புலப்பெயல்நீராய் கலந்து
கிளர்ந்தெழச்செய்கிறது உணர்வுகளை... :)))\\



செம்புலப்பெயல்நீராய் -> கவிஞரின் புலமைக்கு சான்றாக அழகான வார்த்தை:

நன்றி நவீன் ப்ரகாஷ்!

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
கொஞ்சம் சஸ்பென்ஸ்..
நிறையக் காதல்...
கலந்து செய்த இரண்டாம் பாகம்... :))))

அடுத்த பாகம்
விரைவில் மலர வாழ்த்துக்கள் திவ்யா..

:)))\


உங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி:)

said...

\\ Prakash G.R. said...
More than the story, the images that you select are too good :-)\\


வாங்க ப்ரகாஷ்,

உங்கள் முதல் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி!!

said...

@ திகழ்மிளிர்

உங்கள் பாராட்டிற்கு நன்றி திகழ்மிளிர்!!

said...

\\ Anonymous said...
mega serial mariye poguthunga unga kathai..ad break matum ithula vara mari vachiteengana..perfect :D nalla twist..aana ipdlamum pesara/kekara heroines inum irukangala?\\

வாங்க அனானி,

வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி!!

said...

\ எம்.ரிஷான் ஷெரீப் said...
//அந்த கணத்தில்........
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுகளாகி...
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன!!//

அருமை திவ்யா :)\\


உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ரிஷான்!!

said...

\\ நிமல்/NiMaL said...
மிகவும் ரசித்த இரண்டாம் பகுதி. கவிதையும் படங்களுடனும் கதை சூப்பர்...!!!\


உங்கள் தொடர் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நிமல்:)

said...

\\ Syam said...
//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... நாங்க எல்லாம் எப்பவும் அப்பாவி தான... :-)\\


:)))

said...

\\ Syam said...
//aana ipdlamum pesara/kekara heroines inum irukangala?
//

same kostin enakkum thonuchu... :-)\\


கற்பனை கதாபாத்திரங்களை ரசிக்கிறதோட நிறுத்திக்கனும்....ஆராயக்கூடாது:)

said...

\\ முகுந்தன் said...
//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........
கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!
//


இது தான் டாப்பு...\\


அப்படியா?

நன்றி முகுந்தன் உங்கள் வருகைக்கு.

said...

\\ Divyapriya said...
//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!//
இது நல்ல கண்டுபிடிப்பா இருக்கே ;-)\\


வாங்க திவ்யப்ரியா,

கண்டுபிடிப்பு நல்லாயிருக்கா?
நன்றி!

said...

\\ Divyapriya said...
//பாரதிராஜா படத்தில் வரும் பட்டிகாட்டு பொண்ணு
பட்டணதில் பொட்டி தட்ட வந்தப்போ தான்
பட்டாம்பூச்சி எனக்குள் பறந்திருக்கா????//

எதுகை மோனை எல்லாம் கலக்குது...\\


சும்மா
சின்னதா...ஒரு முயற்சி:))

குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி திவ்யப்ரியா!!

said...

\\ Divyapriya said...
//என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்//

மருமுறை படிக்கத் தூண்டும் மிக மிக அழகான வரிகள்...அற்புதமான நிஜம்...\


உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி திவ்யப்ரியா:))

said...

\\ Sen22 said...
அருமையான இரண்டாம் பகுதி...

தொடர்கதைக்கு ஏற்ற விருவிருப்பு... சஸ்பென்ஸ்...
நல்லா கதை எழுதுறீங்க (விடுறீங்க) திவ்யா...


waiting for next part...\\


விமர்சனத்திற்கு நன்றி செந்தில்;

said...

\ Sen22 said...
// Syam said...
//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... நாங்க எல்லாம் எப்பவும் அப்பாவி தான... :-)

//

repeattaiiiii...\\


:))

said...

\ எழில்பாரதி said...
திவ்யா அழகான பகுதி.....

கவிதைகள் மற்றும் படங்கள் அருமை...

அடுத்த பகுதி எப்போ மேடம்.....!!\\


வாங்க எழில் பாரதி,

பாராட்டிற்கு மிக்க நன்றி!!

அடுத்த பகுதி அடுத்த வாரம் மேடம்:))

said...

\\ Thamizhmaangani said...
சூப்பர்ர்ர்ர்ர்ர் திவ்யா.. கை வந்த கலையாச்சே! கலக்குறீங்க..

இரண்டாம் பகுதி போட இவ்வளவு நாளா.. சரி சரி மூன்றாம் பகுதிய சீக்கிரம் போடுங்க... anxiously waiting here babes!:)\\


உற்சாகமளிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தமிழ்மாங்கனி:))

மூன்றாம் பகுதி அடுத்த வாரத்தில் நிச்சயம் பதிவிட முயற்சிக்கிறேன்.

said...

\\ விஜய் said...
ஐயோ சஸ்பென்ஸ் தாங்கலியே. இதுவே கடைசி பகுதியாக இருக்கும்னு நினைச்சு, முதல் பகுதியையும் சேர்த்து படித்து தொலைத்து விட்டேன். எனக்கு மட்டுமாவது அந்த மூன்றாம் பகுதியை அனுப்ப முடியுமா? உங்க கதையில் வரும் கார்த்திக்கு கவருக்குள் என்ன இருக்குமோ ஏது இருக்குமோ என்ற படபப்பு இருக்கோ இல்லையோ, எனக்கு நெஞ்சு வெடிச்சு ஹார்ட் கையில் வந்துடும் போலிருக்கு.\\


கதையோடு ரொம்ப ஒன்றிப்போய்ட்டீங்களா விஜய்??

பொறுமை...பொறுமை....அடுத்த பகுதி விரைவில் பதிவிடுகிறேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி விஜய்!

said...

\\ ananth said...
நல்ல இருக்கிறது\\


வாங்க ஆனந்த்,

உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!!

மீண்டும் வருக!!!

said...

\\ ஜி said...
//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு//

:)))

Ennada, duet songs maathiri idaiyila varra Ammaniyoda kavujaiya kanoamenu paathen... vanthidichu :)))

//ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்
//

Nice line....

Kathai superaa poguthu...\\


வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி ஜி!!!

said...

\\ Shwetha Robert said...
Poetic expression of the Hero & the innoscent talks of the Heroine are admirable:))

waiting for next part...\\


வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஸ்வேதா:))

said...

\\ Kumiththa said...
Very nice story. Keep up your good writing style :)\\


ஊக்கமளிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி குமித்தா:))

said...

\\ நாமக்கல் சிபி said...
படிக்க படிக்க நெஞ்சை அள்ளிய பகுதி!

சூப்பர்!\\


உங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி நாமக்கல் சிபி!!

said...

\\\ நாமக்கல் சிபி said...
மீண்டும் கேட்கிறான்!

கதைக்குள் கவிதையா?

கவிதைக்குள் கதையா?

!????????????????/\\


கதைக்குள் கவிதை:))

said...

\\ நாமக்கல் சிபி said...
//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!
//

அட!

(நவீன் மட்டும்தான் அட சொல்லுவாரா! நானும் சொல்லுவேன்)

அட!\\


:)))

said...

\\ நாமக்கல் சிபி said...
//வழக்கம் போல மிகப்பொருத்தமான படங்கள்...
எங்கிருந்து பிடிக்கிறீர்கள் கதாசிரியரே...?? //

நான் சொல்லலை!

படத்தைப் பத்தி யாரு கேட்டதுன்னு இப்பவாவது புரிஞ்சிக்குங்க!

(நான் கேக்கலை! நவீன் பிரகாஷ்தான் கேக்கச் சொன்னாரு)\\


பதிலை பின்னூட்டத்தில் நவீன் ப்ரகாஷிடமே சொல்லியாச்சு சிபி:))

said...

\\ நாமக்கல் சிபி said...
அந்த கவருக்குள்ளே பே ஸ்லிப் இருந்ததுங்குற சஸ்பென்ஸை உடைச்சிடாதீங்க திவ்யா!\\



அட....இது நல்லா இருக்குதே:))

said...

\\ நாமக்கல் சிபி said...
//அந்த கணத்தில்........
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுகளாகி...
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன!!//

நல்ல உவமை!\\


நன்றி:))

said...

\\ நாமக்கல் சிபி said...
//பாரதிராஜா படத்தில் வரும் பட்டிகாட்டு பொண்ணு
பட்டணதில் பொட்டி தட்ட வந்தப்போ தான்
பட்டாம்பூச்சி எனக்குள் பறந்திருக்கா????//

ஆமாம்! அதேதான்! சூப்பர்!\\


பின்னூட்டங்களுக்கு நன்றி நாமக்கல் சிபி!!

said...

\\ தமிழன்... said...
நல்லாருக்கு திவ்யா..
இன்னொரு முறை ரசிச்சு படிச்சுட்டு அப்புறமா வாறேன்...:)\\

நன்றி தமிழன்:)

said...

\\ Arunkumar said...
oru mega seriala friday evening eppidi mudippano andha maathiri oru edathula "thodarum" potuteenga.... suspense ethana naalaiku? seekiram odachirunga !!!\\


வாங்க அருண்குமார்,

சீக்கிரம் சஸ்பென்ஸ் போட்டு உடைச்சிட்டா........த்ரில் இருக்காதே,

வருகைக்கு நன்றி அருண்!!

said...

\\ Ramya Ramani said...
\\பையன் 'ஐ லவ் யூ' சொன்னா, பொண்ணுக்கும் ஒகே னா வெக்கப்பட்டு சிரிப்பா,
பிடிக்கலினா கோபமா முறைச்சுட்டு, திட்டிட்டு சீன் போடுவாங்கன்னு தான சினிமாவுல காட்டுவாங்க,
இந்த பொண்ணு ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுகுறா??

"நீங்க.......இப்படி கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவீங்கன்னு நினைக்கவே இல்ல"

\\

ippadi oru reactionahh!!! edir pakkave illa..enna dhan veguliya irundhalum idhu konjam over dhanga..ana sila per ippadi irukangalo ennamo!!

\\எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!
\\

:))))

\\அந்த கணத்தில்........
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுகளாகி...
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன!!\\

enge irundhu pidikareenga pa varthaigala ??sooper
\\


வாங்க ரம்யா,

உங்கள் விமர்சனத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி!!

said...

\\ Ramya Ramani said...
\\என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்
\\

\\ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்!!!
\\

Kavidhai varigal arumai :))\\


மிக்க நன்றி ரம்யா:))

said...

\\ வழிப்போக்கன் said...
//சிடுமூஞ்சி சொன்ன காதலில்
சின்ன பொண்ணு குழம்பி போயிருக்கு
சீக்கிரம் சரி என்று தலையாட்டுவது கஷ்டம் தான்
சிறிது சிறிதாக சரி ஆகிடுவா
//


"ச" - வரிசையில்
ரொம்ப யோசிச்சு எழுதியிருக்கீங்க போல..

:-))\\


ஆமாங்க வழிபோக்கன்...:))

said...

\\ வழிப்போக்கன் said...
//எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!
//

சூப்பர் !!!\\


நன்றி!

said...

\ வழிப்போக்கன் said...
அந்த லெட்டர் லவ் லெட்டரா இல்ல Resignation லெட்டரா ???
:-))\\


அடுத்த பகுதியில் சொல்றேன்......வெயிட் ப்ளீஸ்:))

said...

\\ மணிமொழியன் said...
//எங்கூர் பள்ளிகூடத்துல எல்லாம் இந்த சினிமாகாரக வார்த்தையை அப்படிதான் சொல்லுவோம்" என்றாள் அழுகையின் நடுவில் //

இது ரெம்ப ரெம்ம்ம்ம்ம்ப ஓவர் :)
ஏங்க, இந்த மாதிரி பொண்ணுங்க எந்த மியூசியத்தில இருக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா :)) ??????\\


வாங்க மணிமொழியன்,

நீண்ட இடைவெளிக்குப்பின் தன் வலைதளம் வந்திருக்கிறீங்க நன்றி!!

said...

\\ தமிழன்... said...
///அப்பாவித்தனமாக அவள் தமிழில் ' வாழ்த்துக்கள்' என கூறியதும், உதட்டோரம் கார்த்திக்கிற்கு சிரிப்பொன்று மலர்ந்தது.///

நானும் கற்பனை பண்ணிப்பாத்தேன் ஆமா சிரிப்ப வரத்தான் செய்யுது...:)\\


கற்பனையெல்லாம் வேற பண்ணி பார்த்து சிரிச்சீங்களா??

:))))

said...

\ தமிழன்... said...
///எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!///

அதான...!
என்ன இருந்தாலும் இப்படி பெருந்தன்மையோட உங்களை விமர்சிச்ச நீங்க ரொம்ப நல்லவுங்க;)

நிஜமாவே இந்த பொண்ணுங்க என்ன நினைக்கறாங்க என்னுறதை கண்டு பிடிக்க முடியறதில்லயே...\\

ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா ?- அது
பொம்பள மனசுதான்யா!!!

said...

\\ தமிழன்... said...
/
என்ன இது
என்னை என்ன
செய்தாய்
/

/அன்பே என்னை
என்ன செய்தாய்!!!/

எனக்கு நிறையப் பிடிக்கிற கேள்வி...\\


அப்படியா??

said...

\ தமிழன்... said...
ரசனையான இரண்டாவது அத்தியாயம்...நன்று!\\


உங்கள் பின்னூட்ட ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றி தமிழன்!!

said...

\\ தமிழன்... said...
அடுத்த சஸ்பென்சும் வச்சுட்டிங்க... கலக்குங்க...:)\\


தொடர் கதைக்கு.....கொஞ்சமாவது சஸ்பன்ஸ் வேணுமில்ல:))

said...

\\ தமிழன்... said...
50 அசத்துங்க...
\\


நன்றி...நன்றி...நன்றி!!!

said...

\ Anonymous said...
arumaiyana irandaam baagam divya
:-)

kavidhai romba nalla irundhudhu...thodarattum ungal ezhuthu pani :-)\\


வாங்க அனானி,

உங்கள் பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி!!

said...

\\ J J Reegan said...
// அழகாய் பூத்திருந்த என்
இதயத்தில் புதியதாய் யாரோ
குடிவந்ததாய் உணர்கிறேன்

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன் //

முதல் பாகம்ல இருந்தா வேகம் திருப்பங்கள் கொஞ்சம் கம்மியாதான் இருக்கு... ஆனாலும் இந்த கவிதை வந்து கண்ணை மறச்சிருச்சு.

நல்ல கவிதை வரிகள்...\\


வாங்க ரீகன்,

உங்கள் வெளிப்படையான விமர்சனத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி ரீகன்!!!

said...

\\ இனியவள் புனிதா said...
//பாரதிராஜா படத்தில் வரும் பட்டிகாட்டு பொண்ணு
பட்டணதில் பொட்டி தட்ட வந்தப்போ தான்
பட்டாம்பூச்சி எனக்குள் பறந்திருக்கா????//

Really super Divi...waiting for the next part...!\\


ரொம்ப நன்றி புனிதா:))

said...

கதை நல்லா போகுது... அடுத்த பகுதிக்காக ஆவலுடன்...

said...

\\ வெட்டிப்பயல் said...
கதை நல்லா போகுது... அடுத்த பகுதிக்காக ஆவலுடன்...\\


குருவே வருக.....வரூக!!

ரொம்ப நாளிக்கு அப்புறம் என் பதிவில் உங்க பின்னூட்டம் பார்த்ததில் சந்தோஷம்:))

நன்றி அண்ணா:-)

said...

நல்லாயிருக்கு திவ்யா....

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

said...

hey the story is good, eppo next part? Don't tell me it is resignation/marriage invitation...appuram azhudhuduven :))

said...

முதல் பாகத்திலேயே அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரியரதால எனக்கு இரண்டாம் பாகத்தின் முடிவு அவ்வளவு சஸ்பென்ஸா இல்ல !!!

said...

கதை முடிவே முன்னாடி சொல்லி அதை பாகமா பாகமா நகர்த்திக்கிட்டு போற உத்தி நல்லாயிருக்கு... :)

தீடீரென்னு அவன் ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்ட காரணம் தெரிஞ்சுக்க ரொம்பவே ஆர்வமா இருக்கு...


கலக்குங்க..

said...

\\ தினேஷ் said...
நல்லாயிருக்கு திவ்யா....

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்\\

நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் வருகை...நன்றி தினேஷ்!!

said...

\\ Usha said...
hey the story is good, eppo next part? Don't tell me it is resignation/marriage invitation...appuram azhudhuduven :))\\


வாங்க உஷா,

உங்கள் முதல் வருகைக்கு ரொம்ப நன்றி!!

அடுத்த பகுதி விரைவில்......!!

said...

\\ இராம்/Raam said...
கதை முடிவே முன்னாடி சொல்லி அதை பாகமா பாகமா நகர்த்திக்கிட்டு போற உத்தி நல்லாயிருக்கு... :)

தீடீரென்னு அவன் ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்ட காரணம் தெரிஞ்சுக்க ரொம்பவே ஆர்வமா இருக்கு...


கலக்குங்க..\


வாங்க ராம்,

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!

said...

\\ மணிமொழியன் said...
முதல் பாகத்திலேயே அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரியரதால எனக்கு இரண்டாம் பாகத்தின் முடிவு அவ்வளவு சஸ்பென்ஸா இல்ல !!!\\


உங்கள் கருத்தினை பின்னூட்டத்தில் தெரிவித்ததிற்கு நன்றி மணிமொழியன்!!

said...

கார்த்திக்கின் பிளாஸ்பேக்கில் அடுத்து என்ன?

கல்யாண முடிவு தெரிந்தாலும்
கதையின் போக்கு படிப்பவரின் ஆர்வத்தை தூண்டுகிறது

தி.விஜய்

said...

வருகைகும் பாரட்டுக்கும் நன்றி..
விஜய்

ww.pugaippezhai.blogspot.com

said...

ஆமா நீங்க எந்த நூற்றாண்டில் நடந்த கதையை எழுதுறீங்க?

இந்தக் காலத்துலயும் லவ் என்பதை கெட்ட வார்த்தை என்று கூறும் பெண்கள் இருக்கின்றார்களா?

said...

கவிதைகள் நன்றாக இருந்தாலும்
ஏனோ அதில் ஒரு செயற்கை தெரிகிறது
இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
(அதற்காக பதிவை லேட்டாக போட்டு விடாதீர்கள்)
அடுத்த பகுதியைப் படிக்க ஆவலுடன்
புகழன்

said...

உண்மையிலேயே Superb ! நல்லா எழுதி இருக்கீங்க. அடுத்த பகுதியும் இப்பவே வாசிக்க வேண்டும் போல் தூண்டுகிறது...ஒரு கதைக்கு முக்கியம் அவ்வாறான தூண்டல்தான், அதை நீங்கள் கொடுக்க தவறவில்லை. மீண்டும் வாழ்த்துக்கள்!
Why don't you start writing stories?

said...

\\ விஜய் said...
கார்த்திக்கின் பிளாஸ்பேக்கில் அடுத்து என்ன?

கல்யாண முடிவு தெரிந்தாலும்
கதையின் போக்கு படிப்பவரின் ஆர்வத்தை தூண்டுகிறது

தி.விஜய்\\


வாங்க விஜய்,

ஆர்வத்துடன் என் பதிவினை படித்து கருத்துக்களை பின்னூட்டமிட்டதிற்கு என் மனமார்ந்த நன்றி!!

said...

\ விஜய் said...
வருகைகும் பாரட்டுக்கும் நன்றி..
விஜய்

ww.pugaippezhai.blogspot.com\

:))
you are most welcome Vijay!!

said...

\\ புகழன் said...
ஆமா நீங்க எந்த நூற்றாண்டில் நடந்த கதையை எழுதுறீங்க?

இந்தக் காலத்துலயும் லவ் என்பதை கெட்ட வார்த்தை என்று கூறும் பெண்கள் இருக்கின்றார்களா?\\

வாங்க புகழன்,

கற்பனை கதாபாத்திரத்தை நிஜத்தில் தேட முயல கூடாது:))

கருத்து பகிர்விற்கு நன்றி!!

said...

\ புகழன் said...
கவிதைகள் நன்றாக இருந்தாலும்
ஏனோ அதில் ஒரு செயற்கை தெரிகிறது
இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
(அதற்காக பதிவை லேட்டாக போட்டு விடாதீர்கள்)
அடுத்த பகுதியைப் படிக்க ஆவலுடன்
புகழன்\


வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி புகழன்!!

said...

\\ Mathu said...
உண்மையிலேயே Superb ! நல்லா எழுதி இருக்கீங்க. அடுத்த பகுதியும் இப்பவே வாசிக்க வேண்டும் போல் தூண்டுகிறது...ஒரு கதைக்கு முக்கியம் அவ்வாறான தூண்டல்தான், அதை நீங்கள் கொடுக்க தவறவில்லை. மீண்டும் வாழ்த்துக்கள்!
Why don't you start writing stories?\\


வாங்க மது,

விரிவான உங்கள் தருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!


\Why don't you start writing stories?\

?????

Anonymous said...

Kadha supera poitu irukunga divya. keep up the momentum, Expecting another gud story, Cheers

said...

\Why don't you start writing stories?\

?????

I mean in real as novels/story books etc!

said...

:)

said...

\\ ஸ்ரீ said...
Kadha supera poitu irukunga divya. keep up the momentum, Expecting another gud story, Cheers\\

மிக்க நன்றி ஸ்ரீ !!

said...

\\ Mathu said...
\Why don't you start writing stories?\

?????

I mean in real as novels/story books etc!\\

Now I cud understand ur question Mathu,
me too have such a desire in my heart, let me see if it cud be fullfilled in the future:))

Thanks for questioning & encouraging!!!

said...

\\ sathish said...
:)\

வருகைக்கு நன்றி சதீஷ்!!

said...

next part எங்கே??? இன்னிக்கு monday இல்லயா?

said...

\\ Divyapriya said...
next part எங்கே??? இன்னிக்கு monday இல்லயா?\\

Divyapriya, next part...... on Tuesday!!

said...

// Divya said...
\\ Divyapriya said...
next part எங்கே??? இன்னிக்கு monday இல்லயா?\\

Divyapriya, next part...... on Tuesday!! //


Iam waiting...

said...

\\ J J Reegan said...
// Divya said...
\\ Divyapriya said...
next part எங்கே??? இன்னிக்கு monday இல்லயா?\\

Divyapriya, next part...... on Tuesday!! //


Iam waiting...\\


Thanks for waiting Reegan...

Anonymous said...

Kadahiyil kaadhal azhaga iruku madam. Expecting a gud finish :)

said...

\\ ஸ்ரீ said...
Kadahiyil kaadhal azhaga iruku madam. Expecting a gud finish :)\\


வாங்க ஸ்ரீ,

காதல் கவிஞரின் அழகான ரசிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி!!

said...

:))...